என் மலர்
உள்ளூர் செய்திகள்

அணைப்பட்டி பேரணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட காட்சி.
திருமங்கலம் பகுதி விவசாயத்திற்கு 40 நாட்கள் தண்ணீர் திறக்க கோரிக்கை
- திருமங்கலம் கால்வாயில் தண்ணீர் திறக்க காலதாமதம் செய்வது மக்களை வேதனை அடையச் செய்துள்ளது.
- ஆனால் தற்போது 10 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர்திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது ஏமாற்றத்தை அளிக்கிறது.
நிலக்கோட்டை:
மதுரை மாவட்டம் திருமங்கலம், உசிலம்பட்டி தாலுகா விவசாயிகள் கடந்த சில மாதங்களாக விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தினர். அதனை தொடர்ந்து இன்று திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி பேரணையில் திருமங்கலம் கால்வாய் பகுதிக்கு முதல்-அமைச்சர் மு. க.ஸ்டாலின் உத்தரவுப்படி திருமங்கலம் நீரினை பயன்படுத்துவோர் விவசாய சங்க தலைவர் ராமன் தலைமையிலும், உதவி செயற்பொறியாளர் அன்பரசன் முன்னிலை யிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதில் திருமங்கலம் பாசன நீரினை பயன்படுத்து வோர் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் பகவான், தியாகராஜன், தங்கராசு, அப்துல் கலாம், அறிவியல் விவசாய சங்க தலைவர் அபேல் மூர்த்தி, மதுரை மாவட்ட கவுன்சிலர் ரெட் காசி, செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் மணிகண்டன், உதவி பொறியாளர் செல்லையா, சேகரன், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் சந்தனத்துரை, ஜெயக்குமார், விக்கிரமங்கல பகுதி விவசாய சங்க தலைவர் மூக்கன் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது திருமங்கலம் பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் ராமன் கூறியதாவது:- ஒரு தலை பட்சமாக கள்ளந்திரி கால்வாய்க்கு அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. திருமங்கலம் கால்வாயில் தண்ணீர் திறக்க காலதாமதம் செய்வது மக்களை வேதனை அடையச் செய்துள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் போராடினர். ஆனால் தற்போது 10 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர்திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது ஏமாற்றத்தை அளிக்கிறது.
எனவே அதிகாரிகள் குறைந்தது 40 நாட்களு க்காவது தண்ணீர் திறக்க வேண்டும் என்றார்.






