என் மலர்
கடலூர்
கடலூர்:
கடலூர் அருகே திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாத சுவாமி கோவில் 108 வைணவத் தலங்களில் முதன்மை பெற்றதாகும். மேலும் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் தனியார் திருமண மண்டபங்கள் இயங்கிவருகிறது.
திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் தங்களுக்கு திருமணம் நடைபெற்றால் கோவிலில் உள்ள கூடத்தில் திருமணம் நடத்தி நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இதன் காரணமாக குறைந்த பட்சம் முகூர்த்த நாட்களில் 100 முதல் அதிகபட்சமாக 300-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்று வந்தன.
தற்போது தொற்று நோய் நாளுக்கு நாள் கடலூர் மாவட்டத்தில் அதிகரித்து வருவதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேவநாத சாமி கோவில் எதிர்புறத்தில் உள்ள மலையில் திருமண கூடத்தில் திருமணம் நடைபெறுவதற்கு அனுமதி இல்லை என ஏற்கனவே கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் கோவில் சுற்றியுள்ள தனியார் மண்டபத்தில் பதிவுசெய்யப்பட்ட திருமணங்கள் இன்று காலை வழக்கம்போல் நடைபெற்றது. இதற்கு உரிய ஆவணங்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் காண்பிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து திருமண மண்டபங்களில் அனைத்து சடங்குகளும் முடிக்கப்பட்டு மணமக்கள் ஊர்வலமாக வருகை தந்து கோவில் வெளியில் மூடப்பட்டதோடு, கோவில் வளாகத்திற்குள் வர முடியாத அளவிற்கு இரும்பு தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு கோவில் நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த நிலையிலும் கோவில் வெளிப்புறத்தில் சாலையில் நின்று திருமணம் செய்து கொண்டனர். ஒரு சிலர் கோவில் முன்பு உள்ள சாலையில் அனைத்து சடங்குகளும் செய்து திருமணம் செய்து கொண்டு சென்றதையும் காணமுடிந்தது.
இந்தநிலையில் அங்கு கூட்டம் கூடாத வகையில் போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வந்ததை காணமுடிந்தது. முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த போதும் திருவந்தபுரம் பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட திருமணங்கள் கோவில் முன்பு உள்ள சாலையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே முத்தாண்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார்(வயது43). அதே பகுதியை சேர்ந்த செல்வம் (36).
இவர்கள் நேற்று இரவு அளவுக்கு அதிகமான குடிபோதையில் அந்த பகுதியில் இருந்த தி.மு.க. கொடி கம்பத்தை கடப்பாறையால் உடைத்து சேதப்படுத்தினர். அதோடு அங்கு பெயிண்டால் வரையப்பட்டிருந்த தி. மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் படத்தையும் சேதப்படுத்தினர்.
இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. தகவல் அறிந்த தி.மு.க. கிளை செயலாளர் கோதண்டராமன் அங்கு சென்று 2 பேரையும் இதுபற்றி தட்டிக்கேட்டார்.
ஆத்திரம் அடைந்த சிவகுமார், செல்வம் ஆகிய 2 பேரும் கடப்பாரையால் தி.மு.க. செயலாளர் கோதண்டராமனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுதொடர்பாக கோதண்டராமன் கொடுத்த புகாரின் அடிப்படையில் முத்தாண்டிகுப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிந்து சிவக்குமாரை கைது செய்தார். தப்பி ஓடிய செல்வத்தை போலீசார் தேடி வருகிறார்கள்.






