search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    சிதம்பரத்தில் நீச்சல் குளத்தில் தலை மோதி மாணவர் பலி

    சிதம்பரத்தில் தனியார் நீச்சல் குளத்தில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த மாணவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
    சிதம்பரம்:

    பெரம்பலூர் மாவட்டம் புதுப்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் சின்னதுரை மகன் ஆனந்தராஜ் (வயது 22). இவர் சிதம்பரத்தில் தங்கி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடல் பொறியியல் துறையில் இறுதியாண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று ஆனந்தராஜ் தனது நண்பர்களுடன் சிதம்பரம் காந்தி சிலை அருகே உள்ள தனியார் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தார், அப்போது அவர் நீச்சல் குளத்தில் குதித்தபோது, அவரது தலை நீச்சல்குளத்தின் சுவரில் மோதியது. 

    இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் ஆனந்தராஜ் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

    இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×