search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பண்ருட்டி அருகே தி.மு.க. கொடி கம்பம் உடைப்பு

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திமுக கொடி கம்பம் உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே முத்தாண்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார்(வயது43). அதே பகுதியை சேர்ந்த செல்வம் (36).

    இவர்கள் நேற்று இரவு அளவுக்கு அதிகமான குடிபோதையில் அந்த பகுதியில் இருந்த தி.மு.க. கொடி கம்பத்தை கடப்பாறையால் உடைத்து சேதப்படுத்தினர். அதோடு அங்கு பெயிண்டால் வரையப்பட்டிருந்த தி. மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் படத்தையும் சேதப்படுத்தினர்.

    இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. தகவல் அறிந்த தி.மு.க. கிளை செயலாளர் கோதண்டராமன் அங்கு சென்று 2 பேரையும் இதுபற்றி தட்டிக்கேட்டார்.

    ஆத்திரம் அடைந்த சிவகுமார், செல்வம் ஆகிய 2 பேரும் கடப்பாரையால் தி.மு.க. செயலாளர் கோதண்டராமனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதுதொடர்பாக கோதண்டராமன் கொடுத்த புகாரின் அடிப்படையில் முத்தாண்டிகுப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிந்து சிவக்குமாரை கைது செய்தார். தப்பி ஓடிய செல்வத்தை போலீசார் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×