என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பண்ருட்டி அருகே தி.மு.க. கொடி கம்பம் உடைப்பு
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே முத்தாண்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார்(வயது43). அதே பகுதியை சேர்ந்த செல்வம் (36).
இவர்கள் நேற்று இரவு அளவுக்கு அதிகமான குடிபோதையில் அந்த பகுதியில் இருந்த தி.மு.க. கொடி கம்பத்தை கடப்பாறையால் உடைத்து சேதப்படுத்தினர். அதோடு அங்கு பெயிண்டால் வரையப்பட்டிருந்த தி. மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் படத்தையும் சேதப்படுத்தினர்.
இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. தகவல் அறிந்த தி.மு.க. கிளை செயலாளர் கோதண்டராமன் அங்கு சென்று 2 பேரையும் இதுபற்றி தட்டிக்கேட்டார்.
ஆத்திரம் அடைந்த சிவகுமார், செல்வம் ஆகிய 2 பேரும் கடப்பாரையால் தி.மு.க. செயலாளர் கோதண்டராமனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுதொடர்பாக கோதண்டராமன் கொடுத்த புகாரின் அடிப்படையில் முத்தாண்டிகுப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிந்து சிவக்குமாரை கைது செய்தார். தப்பி ஓடிய செல்வத்தை போலீசார் தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்