என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பண்ருட்டி அருகே காதலிக்க மறுத்த பிளஸ்-1 மாணவிக்கு முத்தம் கொடுத்த வாலிபர் கைது
Byமாலை மலர்23 April 2021 5:58 PM GMT (Updated: 23 April 2021 5:58 PM GMT)
பண்ருட்டி அருகே வீட்டின் தோட்டத்தில் இருந்த பிளஸ்-1 மாணவிக்கு முத்தம் கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பண்ருட்டி:
பண்ருட்டி அடுத்த சின்னபேட்டையை சேர்ந்தவர் பாண்டியன் மகன் ஆகாஷ்(வயது 19). இவர் அதே ஊரை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் மாணவியிடம் தன்னை காதலிக்கும் படி வற்புறுத்தி வந்ததாக தொிகிறது. இதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவி தனது வீட்டின் தோட்டத்தில் இருந்தார். அப்போது அங்கு சென்ற ஆகாஷ் திடீரென அந்த மாணவியை கட்டிப்பிடித்து முத்தமிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, சத்தம் போட்டோா். உடனே ஆகாஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் இதுகுறித்து மாணவி, தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் இதுகுறித்து கேட்பதற்காக ஆகாஷ் வீட்டிற்கு சென்றனர். அப்போது ஆத்திரமடைந்த ஆகாஷ் மாணவியின் பெற்றோரை ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். பின்னர் இதுபற்றி அந்த மாணவி பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதிகா வழக்குப்பதிந்து ஆகாசை கைது செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X