search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பண்ருட்டி அருகே காதலிக்க மறுத்த பிளஸ்-1 மாணவிக்கு முத்தம் கொடுத்த வாலிபர் கைது

    பண்ருட்டி அருகே வீட்டின் தோட்டத்தில் இருந்த பிளஸ்-1 மாணவிக்கு முத்தம் கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அடுத்த சின்னபேட்டையை சேர்ந்தவர் பாண்டியன் மகன் ஆகாஷ்(வயது 19). இவர் அதே ஊரை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் மாணவியிடம் தன்னை காதலிக்கும் படி வற்புறுத்தி வந்ததாக தொிகிறது. இதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

    இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவி தனது வீட்டின் தோட்டத்தில் இருந்தார். அப்போது அங்கு சென்ற ஆகாஷ் திடீரென அந்த மாணவியை கட்டிப்பிடித்து முத்தமிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, சத்தம் போட்டோா். உடனே ஆகாஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் இதுகுறித்து மாணவி, தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து மாணவியின் பெற்றோர் இதுகுறித்து கேட்பதற்காக ஆகாஷ் வீட்டிற்கு சென்றனர். அப்போது ஆத்திரமடைந்த ஆகாஷ் மாணவியின் பெற்றோரை ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். பின்னர் இதுபற்றி அந்த மாணவி பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதிகா வழக்குப்பதிந்து ஆகாசை கைது செய்தார்.
    Next Story
    ×