என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மருதாமேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் புஷ்பராஜ் (வயது 23) கூலி தொழிலாளி.
இவர் சம்பவத்தன்று மதுபோதையில் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியின் வீட்டுக்கு சென்றார். பின்னர் வீட்டில் தனிமையில் இருந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.
மேலும் அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் வீடு திரும்பிய தனது பெற்றோரிடம் அந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமைகளை கூறி அழுதார். இதைக் கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சிறுமியின் தாயார் சோழத்தரம் போலீஸ் நிலையத்தில் புஷ்பராஜ் மீது புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா வாலிபர் புஷ்பராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து கைது செய்தனர்.
கைதான அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமியை சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சி.கிரனூர் கிராமத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என அறிவிப்பினால், சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து, விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்மணிகளை கொண்டுவந்து குவியல் குவியலாக வைத்த வண்ணம் உள்ளனர்.
கடந்த 10 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் நெல்மணிகளை குவியல் குவியலாகக் குவித்து வரும் நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், அவ்வப்போது பெய்து வந்த கனமழையால், நெல்மணிகள் தண்ணீரில் நனைந்து விட்டதாகவும், நேற்று இரவு பெய்த கன மழையால், சுமார் 50,000 மூட்டை, கொள்முதல் செய்யும் அளவிலான நெல்மணிகள் மழையில் நனைந்து விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகளிடம், விவசாயிகள் 10 நாட்களாக முறையிட்டும், நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறப்பதற்கான, எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்றும், மூட்டை ஒன்றுக்கு 50 முதல் 55 ரூபாய் வரை அதிகாரிகள் லஞ்சமாக கேட்பதாகவும், பல கட்ட பேச்சுவார்த்தைக்கு, பின்னர் 45 ரூபாய் மூட்டைக்கு தருவதாக விவசாயிகள் சம்மதித்த பின்னரும் அதிகாரிகள் திறக்காமல் அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
கனமழை பெய்வதால், நெல்மணிகள் ஈரப்பதம் அடைவதை தவிர்ப்பதற்காக, வெயிலில் உலர்த்தும் பணியில் ஈடுபடும் ஆட்களுக்கு கூலி, நெல்லை பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படும் தார் பாயின் வாடகை கூலி, சாப்பாடு மற்றும் இதர செலவுகள் என நாள்தோறும் ஒவ்வொரு விவசாயிகளும் 3 ஆயிரம் ரூபாய் செலவு செய்வதாக வேதனையுடன் கூறுகின்றனர்.
எனவே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் தங்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு விட்டதாக கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர். அதிகாரிகள் உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்காவிட்டால் விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட போவதாக எச்சரிக்கை விடுத்தனர்.
கடலூர்:
கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணைக் கைதிகள் என 800-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். மத்திய சிறைச்சாலையில் அவ்வப்போது கைதிகளிடம் இருந்து செல்போன், சிம்கார்டு, பிளேடு, கஞ்சா, பீடி, சிகரெட் ஆகிய பொருட்களை சோதனை செய்து சிறைத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வந்தனர்.
இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இன்று காலை கடலூர் மத்திய சிறையில் போலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷ் ராஜ் தலைமையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சோதனையில் உள்ளூர் போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் என 100-க்கும் மேற்பட்டோர் அதிரடியாக சென்று கைதி அறைகள் மற்றும் கைதிகளை செய்தனர்.
இந்த திடீர் சோதனை காலை 6 மணி முதல் நடந்தது.
சோதனையில் கைதிகளிடம் இருந்து தடைசெய்யப்பட்ட செல்போன், கஞ்சா, பான்மசாலா மற்றும் ஆயுதங்கள் கிடைக்கின்றதா? என்பது சோதனை முடிவில் தெரியவரும் இதுமட்டுமன்றி அல்-உம்மா தீவிரவாதிகள் உள்ள பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதா ? அவர்களுக்கு ஏதேனும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதா? என்பதனையும் சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது மத்திய சிறைச்சாலை சூப்பிரண்டு கிருஷ்ணகுமார், சிறை அலுவலர் பாலு உடன் இருந்தனர். இந்த சம்பவத்தால் கடலூர் மத்திய சிறைச்சாலை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வள்ளலார் தெய்வநிலைய செயல் அலுவலர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசாணை மற்றும் கடலூர் மாவட்ட கலெக்டர் அறிவுரையின்படியும், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டும், பக்தர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி, 7-ந்தேதி(அதாவது நாளை) நடைபெறும், மாத பூச ஜோதி தரிசனத்தின்போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை, மாத பூச ஜோதி தரிசனத்தை இரவு 7.45 முதல் 8.45 மணிவரை வள்ளலார் தெய்வ நிலைய யூடியூப் சேனல் https://www.youtube.com/channel/UCEiJozGGHgOZFISkQAOB93A என்ற தளத்தில் நேரலையில் காணலாம் என கூறப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.
இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்தது. பாசனத்திற்காக கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நீர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கீழணையை வந்து சேர்ந்தது. அங்கிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதைத்தொடர்ந்து வீராணம் ஏரியின் நீர்மட்டம் 15.60 கன அடியாக உயர்ந்தது. இந்தநிலையில் கடந்த 1 வாரமாக கீழணைக்கு தண்ணீர் வரத்து குறைவாக இருந்ததால் வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கவில்லை. ஆனால் தற்போது கீழணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வீராணம் ஏரிக்கு 85 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
வீராணம் ஏரியின் நீர்மட்டம் தற்போது குறைவாக உள்ளதால் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. ஏரியின் நீர்மட்டம் 40 கன அடியை எட்டிய உடன் வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்பப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.






