என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.
இந்த ஏரியால் சுமார் 44,856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு கடந்த மாதம் முதல் வாரத்தில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆரம்பத்தில் குறைவான தண்ணீரே வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருந்தது.
தற்போது மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. எனவே கீழணைக்கு கூடுதலாக தண்ணீர் வரதொடங்கியது. இதன் மூலம் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. நேற்று 1,623 கனஅடி நீர் ஏரிக்கு வந்தது.
இன்று வீராணம் ஏரிக்கு வரும் நீர்வரத்து சற்று அதிகரித்து 1,844 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 45.87 அடியாக இருந்தது. இன்று சற்று அதிகரித்து 46.46 அடியாக உயர்ந்துள்ளது. வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு 32 கனஅடி நீர் ராட்சத குழாய் மூலம் அனுப்பிவைக்கப்படுகிறது.
வீராணம் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து வருவதையடுத்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து வருகிற 24-ந் தேதி விவசாயிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர். இதையடுத்து வீராணம் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.
இந்த ஏரியால் சுமார் 44,856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு கடந்த மாதம் முதல் வாரத்தில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆரம்பத்தில் குறைவான தண்ணீரே வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருந்தது.
தற்போது மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. எனவே கீழணைக்கு கூடுதலாக தண்ணீர் வரத்தொடங்கியது. இதன் மூலம் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. நேற்று 1,574 கனஅடி நீர் ஏரிக்கு வந்தது.
இன்று வீராணம் ஏரிக்கு வரும் நீர்வரத்து சற்று குறைந்து 1,623 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 45.28 அடியாக இருந்தது. இன்று சற்று அதிகரித்து 45.87 அடியாக உயர்ந்துள்ளது. வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு 32 கனஅடி நீர் ராட்சத குழாய் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
வீராணம் ஏரிக்கு இதேபோல் தண்ணீர் வந்து கொண்டிருந்தால் நாளைக்குள் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டிவிடும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளவு 47.50 அடி ஆகும்.
இந்த ஏரியால் சுமார் 44,856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.
வீராணம் ஏரியில் கடந்த 6 மாதமாக பராமரிப்பு பணி நடந்தது. எனவே சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது. கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கொள்ளிடம் ஆற்று வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது.
கீழ்அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு கடந்த மாதம் முதல் வாரத்தில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆரம்பத்தில் குறைவான தண்ணீரே வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருந்தது.
தற்போது மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறந்தவிடப்பட்டுள்ளது. எனவே கீழணைக்கு கூடுதலாக தண்ணீர் வரதொடங்கியது. இதன் மூலம் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. நேற்று 1,773 கனஅடி நீர் ஏரிக்கு வந்தது.
இன்று வீராணம் ஏரிக்கு வரும் நீர்வரத்து சற்று குறைந்து 1,364 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 44.07 அடியாக இருந்தது. இன்று ஏரியின் நீர்மட்டம் சற்று அதிகரித்து 44.66 அடியாக உள்ளது. வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு நேற்று 30 கனஅடி நீர் ராட்சத குழாய் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது. இன்று 32 கன அடி நீர் அனுப்பப்படுகிறது.
ஏரியின் நீர்மட்டம் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு அனுப்பப்படும் குடிநீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளவு 47.50 அடி ஆகும்.
இந்த ஏரியால் சுமார் 44,856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஏரிக்கு பருவமழை காலங்களிலும், மேட்டூர் அணை மூலமும் தண்ணீர் வரத்து இருக்கும்.
வீராணம் ஏரியில் கடந்த 6 மாதமாக பராமரிப்பு பணி நடந்தது. எனவே சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது. கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் கொள்ளிடம் ஆற்று வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது.
கீழ்அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு கடந்த மாதம் முதல் வாரத்தில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆரம்ப கட்டத்தில் 600 கனஅடி நீர் மட்டும் வடவாறு வழியாக வந்தது. இதனால் நீர்மட்டம் 16 அடியிலிருந்து படிப்படியாக உயரத்தொடங்கியது. ஆனால் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் குறைக்கப்பட்டது. இதன் விளைவாக வீராணம் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்தது.
தற்போது மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறந்தவிடப்பட்டுள்ளது. எனவே கீழணைக்கு கூடுதலாக தண்ணீர் வரதொடங்கியது. இதன் மூலம் வீராணம் ஏரிக்கு இன்று 1,227 கனஅடி நீர் வடவாறு வழியாக வருகிறது. இதனால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. நேற்று 1,080 கனஅடி நீர் வந்தது.
இன்றைய நிலவரப்படி வீராணம் ஏரி நீர்மட்டம் 44.46 அடி தண்ணீர் உள்ளது. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக சென்னை மாநகர் குடிநீருக்காக கூடுதலாக 27 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது. நேற்று 18 கன அடியாக நீர் மட்டுமே அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று நீர் வரத்து இருந்தால் வீராணம் ஏரி விரைவில் நிரம்பிவிடும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
புவனகிரி:
கடலூர் மாவட்டம் புவனகிரியை அடுத்த ஆனைவாரி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 40). இவர் சிதம்பரம் அரசு போக்குவரத்து பணிமனையில் அரசு பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். வெங்கடேசனுக்கு திருமணமாகி ஜெயஸ்ரீ (30) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
வெங்கடேசனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு செல்வார் இதை அவரது மனைவி கண்டித்ததால் கணவன்- மனைவி 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஜெயஸ்ரீ அவரது கணவரிடம் கோபித்து கொண்டு சாவடி நத்தம் பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் வெங்கடேசன் அவரது மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதற்கு அவர் மறுத்து விட்டார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த வெங்கடேசன் மாமியார் வீட்டின் முன்பு நின்று அவர் வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்தார்.
சிறிது நேரத்தில் அவர் மயங்கி கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் வெங்கடேசனை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வெங்கடேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து புவனகிரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






