என் மலர்
செய்திகள்

தற்கொலை
பரங்கிப்பேட்டை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பரங்கிப்பேட்டை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரங்கிப்பேட்டை:
பரங்கிப்பேட்டை அருகே ஆணையங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவருடைய மனைவி லட்சுமி (வயது 24).இவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின்பேரில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 5 வருடத்தில் லட்சுமி இறந்ததால், வரதட்சணை கொடுமை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா என சிதம்பரம் சப்-கலெக்டர் மதுபாலன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






