என் மலர்
செய்திகள்

கடலூர் மத்திய சிறையில் 100 போலீசார் திடீர் சோதனை
கடலூர்:
கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணைக் கைதிகள் என 800-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். மத்திய சிறைச்சாலையில் அவ்வப்போது கைதிகளிடம் இருந்து செல்போன், சிம்கார்டு, பிளேடு, கஞ்சா, பீடி, சிகரெட் ஆகிய பொருட்களை சோதனை செய்து சிறைத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வந்தனர்.
இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இன்று காலை கடலூர் மத்திய சிறையில் போலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷ் ராஜ் தலைமையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சோதனையில் உள்ளூர் போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் என 100-க்கும் மேற்பட்டோர் அதிரடியாக சென்று கைதி அறைகள் மற்றும் கைதிகளை செய்தனர்.
இந்த திடீர் சோதனை காலை 6 மணி முதல் நடந்தது.
சோதனையில் கைதிகளிடம் இருந்து தடைசெய்யப்பட்ட செல்போன், கஞ்சா, பான்மசாலா மற்றும் ஆயுதங்கள் கிடைக்கின்றதா? என்பது சோதனை முடிவில் தெரியவரும் இதுமட்டுமன்றி அல்-உம்மா தீவிரவாதிகள் உள்ள பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதா ? அவர்களுக்கு ஏதேனும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதா? என்பதனையும் சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது மத்திய சிறைச்சாலை சூப்பிரண்டு கிருஷ்ணகுமார், சிறை அலுவலர் பாலு உடன் இருந்தனர். இந்த சம்பவத்தால் கடலூர் மத்திய சிறைச்சாலை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






