search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஊராட்சி மன்ற தலைவர் சந்தோஷம் ஆறுமுகத்திடம் பரிசு வழங்கிய போது எடுத்த படம்.
    X
    கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஊராட்சி மன்ற தலைவர் சந்தோஷம் ஆறுமுகத்திடம் பரிசு வழங்கிய போது எடுத்த படம்.

    100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய ஊராட்சிகளுக்கு பரிசு - கலெக்டர் வழங்கினார்

    கொரோனா விழிப்புணர்வு வாரத்தையொட்டி 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய ஊராட்சிகளுக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் பரிசு வழங்கினார்.
    கடலூர்:

    தமிழகத்தில் ஆகஸ்டு 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை கொரோனா விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்க அரசு அறிவுறுத்தியது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் பல்வேறு துறைகளின் மூலம் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணிகள், துண்டு பிரசுரம் வழங்குதல், சைக்கிள் பேரணி, கலை நிகழ்ச்சிகள், சோப்பினால் கைகளை சுத்தம் செய்யும் முறை, உறுதிமொழி மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மேலும் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கோலம் வரைதல், ஓவியம் வரைதல், சொற்றொடர் உருவாக்குதல், விழிப்புணர்வு மொழி வடிவம் உருவாக்குதல், வீடியோ குறும்படம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

    அந்த வகையில் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று கோலம் வரைதல், ஓவியம் வரைதல், சொற்றொடர் உருவாக்குதல், விழிப்புணர்வு மொழி வடிவம் உருவாக்குதல், வீடியோ குறும்படம் உள்ளிட்ட போட்டிகள் பல்வேறு துறைகளின் மூலம் நடத்தப்பட்டது. இதையடுத்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, கொரோனா விழிப்புணர்வு வாரத்தையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

    மேலும் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திய கடலூர், நடுவீரப்பட்டு, பரங்கிப்பேட்டை வட்டம் டி.எஸ்.பேட்டை, காட்டுமன்னார்கோவில் வட்டம் வீரனந்தபுரம் ஆகிய ஊராட்சிகளை பாராட்டி, பரிசு வழங்கினார். பின்னர் கலெக்டர் தலைமையில், அனைத்துத்துறை அலுவலர்களும் கொரோனா குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    இதில் வளர்ச்சி திட்ட இயக்குனர் பவன்குமார் கிரியப்பனவா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார், மகளிர் திட்ட அலுவலர் செந்தில்வடிவு மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×