என் மலர்tooltip icon

    கடலூர்

    சோலைமலை முருகன் கோவிலில் உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்களுடன் சிறப்பு பூஜைகள், சர விளக்கு தீபாராதனைகள் நடந்தது.
    அழகர்கோவில் மலை உச்சியில் முருகப் பெருமானின் ஆறாவது படைவீடு எனும் சோலைமலை முருகன் கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையையொட்டி நேற்று முதல் சோமவார பூஜைகள் நடந்தது. இதில் சஷ்டி மண்டபத்தில் உள்ள உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்களுடன் சிறப்பு பூஜைகள், சர விளக்கு தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சி தந்து அருள்பாலித்தார்.

    பின்னர் சஷ்டி மண்டபத்திலிருந்து மேள தாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் கோவில் உள் பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. முன்னதாக மூலவர் சுவாமி, வித்தக விநாயகர், மற்றும் வேல்சன்னதியிலும் பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் அரசு வழிகாட்டுதல்படி கலந்துகொண்டு நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.
    கடலூர் மாவட்டத்தில் 64 ஆயிரத்து 340 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 64 ஆயிரத்து 340 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 871 பேர் பலியான நிலையில், 63 ஆயிரத்து 338 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 5 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. மேலும் 17 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். இதற்கிடையே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 62 வயது முதியவர், தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 872 ஆக உயர்ந்துள்ளது.
    நடிகர், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது.
    தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. 4 சீசனை தொடர்ந்து 5வது சீசனையும் கமல் தொகுத்து வழங்கி வருகிறார்.

    இந்நிலையில், நடிகர் கமலுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால், வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் கலந்துக் கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சில வாரங்கள் கமல் விலகுவதாக கூறப்படுகிறது.

    கமல்

    இதையடுத்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 
    தென்பெண்ணை ஆற்றில் தற்போது விநாடிக்கு 75 ஆயிரம் கன அடி நீரும், கெடிலம் ஆற்றில் 45 ஆயிரம் கனஅடி நீரும் செல்வதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
    கடலூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பல்வேறு மாவட்டங்களில பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 18-ந் தேதி கடலூர்-விழுப்புரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டியது.

    இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை, கெடிலம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இரு கரைகளையும் தொட்டபடி மழை வெள்ளம் சென்றது. கடந்த 19-ந் தேதி தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 1.25 லட்சம் கனஅடி நீர் சென்றது.

    மாவட்ட எல்லையான அரசூர் முதல் வடிநில பகுதியான தாழங்குடா வரை ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள குடியிருப்புகள் மற்றும் வயல்வெளியில் வெள்ளம் புகுந்தது.

    இதேபோல் கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி, நெல்லிக்குப்பம், அண்ணாகிராமம், குண்டுஉப்பளவாடி, தாழங்குடா, பெரியகங்கனாங்குப்பம், உச்சிமேடு உள்பட 60-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது.

    கடலூர் பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட நகரங்களையும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளிலும் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களை மீட்பு குழுவினர் மீட்டு அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர்.

    இந்த நிலையில் கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீர் வடிய தொடங்கியது. இந்த நிலையில் நேற்று இரவு திடீரென கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் மழைநீர் வடிந்து செல்லாமல் மீண்டும் குடியிருப்புகளை சூழ்ந்தது.

    அதன் பின்னர் மழை இல்லாததால் தாழ்வான பகுதிகளில் தேங்கிநின்ற மழை வெள்ளம் தற்போது வடிய தொடங்கி உள்ளது. இதையடுத்து முகாம்களில் தங்கியிருந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்ப தொடங்கி உள்ளனர்.

    கடலூர் மாவட்டத்தில் மழை குறைந்துள்ளதால் ஆறுகளில் செல்லும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. தற்போது தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 75 ஆயிரம் கன அடி நீரும், கெடிலம் ஆற்றில் 45 ஆயிரம் கனஅடி நீரும் செல்வதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

    ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைய தொடங்கியதாலும், கடலூர் பகுதியில் தற்போது மழை பெய்யாததாலும், குடியிருப்புகளில் தேங்கியுள்ள மழைநீர் வடிய தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
    கோவிலுக்கு வந்த கார் விபத்தில் சிக்கி 2 பேர் பலியான சம்பவம் மானாமதுரை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள தெற்கு சந்தனூரை அடுத்த நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 45).

    இவர் கோவை அருகே உள்ள சேரன்மாநகரில் ஓட்டல் நடத்தி வருகிறார். இதனால் குடும்பத்துடன் கோவையில் வசித்து வருகிறார்.

    மானாமதுரை அருகே உள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் செல்ல அய்யப்பன் திட்டமிட்டார். அவருடன் உறவினர்கள் சிலரும் வருவதாக கூறினர்.

    இதனை தொடர்ந்து அய்யப்பன், அவரது மனைவி தேவி (37), மகள்கள் கிரிஜா (18), ஆர்த்தி (17), மகன் திருமலை (16) மற்றும் உறவினர்கள் காரில் நேற்று இரவு கோவையில் இருந்து புறப்பட்டனர். காரை உறவினரான குமார் ஓட்டினார்.

    இன்று காலை மானாமதுரை வந்த அவர்கள் வழிபாட்டுக்கு தேவையான பூ மற்றும் பூஜை பொருட்களை வாங்கினர். பின்னர் காரில் புறப்பட்ட அவர்கள் காலை 6.30 மணி அளவில் மானாமதுரை-தாயமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

    மாங்குளம் விலக்கு அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சாலையோர பள்ளத்தில் இறங்கியது. வேகமாக சென்ற கார் அங்குள்ள தரைபாலத்தில் மோதி நின்றது.

    கார் தாறுமாறாக ஓடிய போது அதில் பயணித்தவர்கள் கூச்சலிட்டனர். இதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.

    இந்த விபத்தில் காரில் வந்த பாண்டி, அய்யப்பன் மகள் ஆர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அவர்களது உடலை பார்த்து உறவினர்கள் கதறினர்.

    பலத்த காயம் அடைந்த அய்யப்பன், அவரது மனைவி தேவி, மகள் கிரிஜா, மகன் திருமலை, மதியழகன், அவரது மகன் குமார் (27), திருஞானம் (24), வேல்முருகன் (20), கார்த்திகா (29) ஆகியோர் சிகிச்சைக்காக மானாமதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    கோவிலுக்கு வந்த கார் விபத்தில் சிக்கி 2 பேர் பலியான சம்பவம் மானாமதுரை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    விபத்து குறித்து மானாமதுரை சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை வாய்க்காலில் வீசி சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புவனகிரி:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள புவனகிரியை அடுத்த பூதவராயன்பேட்டை பகுதியில் காளியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு இன்று காலை பக்தர்கள் சென்றனர். அப்போது கோவிலின் பின்புறம் உள்ள சின்ன வாய்க்காலில் பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று தொப்புள் கொடிகூட அறுக்கப்படாத நிலையில் பிணமாக மிதந்தது.

    இதை பார்த்து பக்தர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் இது குறித்து புவனகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு வாய்க்காலில் பிணமாக மிதந்த பச்சிளம் ஆண் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை வாய்க்காலில் வீசி சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் யார்? என்பது குறித்தும், மேலும் அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிகளில் தற்போது பிறந்த குழந்தைகளின் தகவல்களை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    மரத்தில் டிராக்டர் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குருபரப்பள்ளி:

    கிருஷ்ணகிரி தாலுகா கோடிப்பள்ளி பக்கமுள்ள சீலேப்பள்ளியை சேர்ந்தவர் நாகேஷ் (வயது 50). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர் டிராக்டரில் அமர்ந்து வந்து கொண்டிருந்தார். டிராக்டரை அதே ஊரை சேர்ந்த முனிராஜ் (30) என்பவர் ஓட்டி வந்தார். சீலேப்பள்ளி பக்கமாக வந்த போது திடீரென்று டிராக்டர் சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் நாகேஷ் கீழே தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூர் ஒன்றியத்துக்குட்பட்ட அழகியநத்தம் முதல் தாழங்குடா வரையில் உள்ள 4 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியது.
    கடலூர்:

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதுதவிர வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானதால் கடலூர் மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில் மழை பெய்தது.

    இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கடலூர் நகராட்சிக்குட்பட்ட ஆல்பேட்டை அருகே தென்பெண்ணையாறு கடலில் கலக்குகிறது.

    இந்த ஆறுக்கு கர்நாடக மாநிலத்தில் திறக்கப்படும் உபரிநீர், கிருஷ்ணகிரி அணைக்கு வந்து சாத்தனூர் அணையில் சேருகிறது. அங்கிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரால் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.

    தற்போது கனமழை பெய்ததால் தென்பெண்ணை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாத்தனூர் அணையில் இருந்து 50 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

    இது தவிர கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையாலும், காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் மூலம் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    முதல்கட்டமாக தென்பெண்ணை ஆற்றில் 75 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. பின்பு அது படிப்படியாக நேற்று காலை 1.25 லட்சம் கனஅடியாக அதிகரித்தது. இந்த தண்ணீர் வரத்து நெல்லிக்குப்பம் அருகே உள்ள சொர்ணாவூர் தடுப்பணை, விசுவநாதபுரத்தில் உள்ள தடுப்பணை ஆகியவற்றின் மூலம் கணக்கெடுக்கப்படுவதாக கடலூர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதன்காரணமாக தென்பெண்ணை ஆற்றின் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. ஆற்றின் கீழ்மட்டத்தில் இருந்து 25 அடி உயரத்துக்கு தண்ணீர் செல்கிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து 75 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    இந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூர் புதிய கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சுங்கச்சாவடி சாலை, மேல்பட்டாம்பாக்கம் சாலை, அழகியநத்தம் சாலை தண்ணீரில் மூழ்கியது.

    இன்று காலையும் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்தது. இதையடுத்து கடலூர் மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதியில் உள்ள குண்டுசாலை, பெரியகங்கணாங்குப்பம், செம்மண்டலம், குண்டு உப்பலவாடி, கண்டக்காடு, தாழங்குடா, நாணல்மேடு, சுனாமி நகர், எஸ்.என்.சாவடி உள்ளிட்ட 50 இடங்களில் ஆற்று வெள்ள நீர் புகுந்தது.

    இந்த தண்ணீர் சுமார் 10 ஆயிரம் வீடுகளை சூழ்ந்துள்ளது. இதனால் அந்த பகுதி தீவுபோல காணப்பட்டது. அங்குள்ள வீடுகளில் முதல் தளம் வரை தண்ணீர் தேங்கி உள்ளது. எனவே அங்குள்ளவர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.

    தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூர் ஒன்றியத்துக்குட்பட்ட அழகியநத்தம் முதல் தாழங்குடா வரையில் உள்ள 4 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    படகுகள் மூலம் மக்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

    இதனை தொடர்ந்து மீட்பு படையினர் விரைந்து சென்றனர். சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்குரிய ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

    கடலூர் அருகே பெரிய கங்கணாங்குப்பம் பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.



    ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தவாறு உள்ளது. இன்று காலை, அணைக்கு வினாடிக்கு 2,563 கன அடி நீர் வந்தது.
    ஓசூர்:

    கர்நாடக மாநிலத்தின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் நாள்தோறும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

    இதனையடுத்து ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தவாறு உள்ளது. இன்று காலை, அணைக்கு வினாடிக்கு 2,563 கன அடி நீர் வந்தது. அணையின் முழு கொள்ளளவு 44.28 அடி ஆகும். அணையில் 41.33 அடி நீர் இருப்பு இருந்த நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 3,060 கனஅடி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது. அணையில் அதிகளவு நீர் வரத்து அதிகரித்து ஆற்றில் அதிகளவில் நீர் வெளியேற்றப்படுவதாலும், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் அணையில் ரசாயன கழிவுகள் கலந்து மலை போல் நுரை குவிந்ததால், தரைப்பாலம் வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர்.

    தரைப்பாலத்தில் குவிந்த நுரையை, தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி படித்து சுத்தம் செய்தனர். இதனிடையே, நுரை பொங்கி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்ததால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், நுரை பொங்கி காணப்படுவதை ஆர்வத்துடன் செல்போனில் போட்டோ எடுத்தனர்.
    கர்நாடக அணையில் உபரிநீர் திறப்பு காரணமாக தென்பெண்ணை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    கடலூர்:

    கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் வெளுத்துகட்டிய மழை மற்றும் சாத்தனூர் அணை தண்ணீர் திறப்பு, கர்நாடக அணையில் உபரிநீர் திறப்பு காரணமாக தென்பெண்ணை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுமார் 1.75 லட்சம் கனஅடி நீர் வருகிறது. 50 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

    கடந்த 1972-ம் ஆண்டு இதேபோல் வெள்ளம் ஏற்பட்டதாக கடலூர் நகர மக்கள் தெரிவித்தனர்.

    மகாராஷ்டிராவில் உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காளதேசத்தினர் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி வெளிநாட்டினர் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து தானே குற்றப்பிரிவு போலீசார் மாவட்டத்தின் பல்வேறு நேற்று அதிரடி சோதனை நடத்தினர். 

    அம்மாவட்டத்தின் பிவாண்டி தாலுகாவுக்கு உட்பட்ட சாரவல்லி என்ற கிராமத்தில் நடத்திய சோதனையில் வெளிநாட்டினர் 9 பேர் தங்கி இருந்ததை கண்டுபிடித்தனர்.

    அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 9 பேரும் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும் அவர்கள் இந்தியாவில் தங்க எந்த வித ஆவணங்களும் இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 9 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


    கடலூரில் தென்பெண்ணையாறு வழியாக வினாடிக்கு 1¼ லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கரையில் உடைப்பு ஏற்பட்டு 6 ஆயிரம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் அடைமழை கொட்டித்தீர்த்தது. இந்த மழை நேற்று நள்ளிரவு வரை நீடித்தது.

    இதனால் கெடிலம், தென்பெண்ணையாறு, பரவனாறு, மணிமுக்தா, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 51 ஆயிரம் கனஅடி நீர் தென்பெண்ணையாற்றில் திறந்து விடப்பட்டது. கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நீர்வரத்து வாய்க்கால்கள், ஓடைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைவெள்ளமும், தென்பெண்ணையாற்றில் கலந்தது. இதனால் நேற்று தென்பெண்ணையாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காலை 1 லட்சம் கனஅடி நீர் சென்ற நிலையில், மாலை நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி தண்ணீா் செல்கிறது. இதனால் பல இடங்களில் தென்பெண்ணையாற்றங்கரை நிரம்பி குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

    கடலூர் குண்டுசாலை, குண்டு உப்பளவாடி பகுதிகளில் தென்பெண்ணையாற்றங்கரையில் நேற்று காலை உடைப்பு ஏற்பட்டது. இதில் அந்த பகுதிகளில் உள்ள சுமார் 6 ஆயிரம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் செய்வதறியாது திகைத்த பொதுமக்கள், உடனே தங்கள் வீடுகளில் உள்ள அத்தியாவசிய பொருட்களை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள முகாம்களுக்கும், உறவினர் வீடுகளுக்கும் சென்றனர். சிலர் வீட்டு மாடிகளில் தஞ்சமடைந்தனர்.

    கடலூர் பெரிய கங்கணாங்குப்பத்தில் உள்ள தனியார் விடுதியையும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் விடுதியை விட்டு வெளியேற முடியாமல் 32 மாணவிகள், 4 பெண் ஊழியர்கள் தவித்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் படகுடன் விரைந்து சென்று, விடுதியில் சிக்கிய 32 மாணவிகள் மற்றும் 4 பெண் ஊழியர்களை படகு மூலம் பத்திரமாக மீட்டு வந்தனர்.

    மேலும் குமரப்பன் நகர், வெளிசெம்மண்டலம் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், அப்பகுதியில் வசித்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். இவர்களையும் தீயணைப்பு மற்றும் மீட்புபடையினர் 5 படகுகளுடன் சென்று மீட்டனர்.

    இவ்வாறாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 10 ஆயிரம் பேர் கே.என்.பேட்டை, பெரிய கங்கணாங்குப்பம், வன்னியர்பாளையத்தில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
    ×