என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே தென்பெண்ணையாறு கரையில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே தென்பெண்ணையாறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே கும்தாமேடு தடுப்பணை உள்ளது. சமீபத்தில் பெய்த கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது தடுப்பணையை தாண்டி தண்ணீர் பாய்ந்து சென்றது. கரையோரம் இருந்த பயணிகள் நிழற்குடை அரிப்பு ஏற்பட்டு சாய்ந்தது. இதை அதிகாரிகள் ஆற்றில் இடித்து தள்ளினர்.

    தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தால் சாலையிலும் அரிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. மாற்றுப்பாதை வழியாக பஸ்கள் இயக்கப்பட்டன. இதற்கிடையில் சேதமடைந்த சாலை மற்றும் தென்பெண்ணையாறு கரையை நெடுஞ்சாலைத்துறையினர் தற்காலிகமாக சீரமைக்க முடிவு செய்தனர். அதன்படி கரையோரம் சவுக்கு கட்டைகள் வைத்து, மண் கொட்டியும், மணல் மூட்டைகள் அடுக்கியும் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அதையடுத்து அந்த வழியாக வாகன போக்குவரத்து தொடங்கியது.

    இந்த நிலையில் நேற்று காலையில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் மணல் மூட்டைகள் அடுக்கி வைத்திருந்த ஒரு பகுதி சரிந்து ஆற்றில் விழுந்தது. இதை பார்த்து நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து மண் அரிப்பு ஏற்படாதவாறு, சரிந்து விழுந்த இடத்தில் கூடுதலாக மணல் மூட்டைகளை அடுக்கி வைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த கரையையும், சாலையையும் தரமான முறையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பண்ருட்டி அருகே பெற்ற மகளையே கள்ளக்காதலனுக்கு தாய் விருந்தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள பத்திரக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவரது தந்தை இறந்த நிலையில் தாய் அம்சவள்ளி (வயது 40) என்பவருடன் வசித்து வருகிறார். அம்சவள்ளிக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் சென்னையில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி வேலை செய்து வருகின்றனர். அம்சவள்ளி கூலிவேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில், பண்ருட்டி அருகே புது பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த கார் டிரைவரான கார்த்திகேயன் (30) என்பவருடன் அம்சவள்ளிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

    இந்த கள்ளக்காதலானது சுமார் 2 வருடமாக இருந்து வந்துள்ளது. இதனால், அம்சவள்ளியும், கார்த்திகேயனும் அடிக்கடி வெளியில் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

    நாளடைவில் கார்த்திகேயன் அம்சவள்ளி வீட்டிற்கு வந்துசென்றுள்ளார். அம்சவள்ளியின் மகள் ஆரம்பத்தில் கார்த்திகேயன், தனது தாயின் நட்பை சந்தேகம் கொள்ளவில்லை. அம்சவள்ளி வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற கார்த்திகேயனுக்கு அவரது மகள் மீது மோகம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவரிடம் சென்று பேசியுள்ளார். ஆனால், அவர் பேசாமல் இருந்து வந்துள்ளார்.

    இவ்வாறு பேசுவதை கள்ளக்காதலன் நிறுத்தியதால் அவரது திட்டத்துக்கு சம்மதித்தார்.

    அதன்படி கடந்த சில நாட்களுக்கு அம்சவள்ளி தனது வீட்டில் மகளை பூட்டினார். சிறிது நேரத்தில் வந்த கள்ளக்காதலன் கார்த்திக்கேயனையும் வீட்டில் பூட்டி விட்டு வெளியே சென்றார்.

    அப்போது வீட்டுக்குள் புகுந்த கார்த்திக்கேயன் மாணவியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அதனை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். மேலும், என்னை திருமணம் செய்து கொள். இதுகுறித்து யாரிடமும் கூறினால், வீடியோவை சமூக வலைத்தளத்தில் போட்டு விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுமி உடனே சென்னையில் உள்ள தனது சகோதரர்களுக்கு தெரிவித்து உள்ளார். பதறிப்போன அவர்கள் உடனே சொந்த ஊர் திரும்பினர். பின்னர் நடந்த சம்பவம் குறித்து தனது தங்கையிடம் கேட்டறிந்தனர்.

    இதையடுத்து, அவரது அறிவுறுத்தலின் பேரில், சிறுமி இதுகுறித்து, பண்ருட்டி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்கு பதிந்து கார்த்திகேயன், அம்சவள்ளி ஆகிய 2பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்தார். மேலும், பாதிக்கப்பட்ட மாணவியை காப்பகத்தில்ஒப்படைத்தார்.
    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கல்லூரி மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள விஜயமாநகரம் புதுவெண்ணைகுழி கிராமத்தை சேர்ந்தவர் வேலு. அவரது மகள் கண்ணகி (வயது 20). இவர் விருத்தாசலம் பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்துவந்தார்.

    கடந்த 18-ந் தேதி வீட்டைவிட்டு சென்ற கண்ணகி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கண்ணகியை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடிபார்த்தனர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து மங்கலம்பேட்டை போலீசில் கண்ணகியின் தாய் ராஜலட்சுமி புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கண்ணகியை தேடி வந்தனர். இதற்கிடையில் ரூபநாராயணநல்லூர் பகுதியில் உள்ள ஏரியில் இளம்பெண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று இளம் பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் மாயமான கல்லூரி மாணவி கண்ணகி என தெரியவந்தது. அவரது உடலில் பல இடங்களில் காயம் இருந்தது.

    எனவே அந்த மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவரது உடல் முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிவில் அவர் எப்படி இறந்தார் என்ற விபரம் தெரியவரும்.
    சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடந்த ஆருத்ரா தரிசன விழாவில் நடன பந்தலில் அசைந்தாடியபடி சிவகாமசுந்தரி அம்பாளுடன் நடராஜர் காட்சி அளித்தார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷத்துடன் வழிபட்டனர்.
    உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில், சிவபெருமானின் பஞ்ச சபையில் பொற்சபையாகவும், பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாகவும் போற்றப்படுகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சனமும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் விமரிசையாக நடைபெறும். ஏனெனில் அன்றைய தினங்களில் மூலவரான நடராஜரே வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழாவில் சிவபெருமானின் ஜென்ம நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திர நாளில் மூலவர் நடராஜர், சிவகாம சுந்தரி அம்பாள் ஆகியோர் திருநடனம் புரிந்தபடி பக்தர்களுக்கு காட்சி அளிப்பது இக்கோவிலின் சிறப்பாகும்.

    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சாமி வீதிஉலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஆருத்ரா தரிசனம் தருவதற்காக மூலவர் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் தனித்தனி தேரில் எழுந்தருளி, 4 வீதியில் வலம் வந்து காட்சி தந்தனர்.

    தேரோட்டம் முடிந்ததும் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் ராஜசபை என்று அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு 10.45 மணி அளவில் எழுந்தருளினார்கள். பின்னர் இரவு 11 மணி முதல் லட்சார்ச்சனை நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் நேற்று அதிகாலை 2 மணிக்கு தொடங்கியது. அப்போது ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் திருவாபரண அலங்கார காட்சி நடைபெற்றது. காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை நடந்தது. தொடர்ந்து மதியம் 4 மணி அளவில் பஞ்ச மூர்த்திகள் கோவிலில் இருந்து 4 ரதவீதிகளிலும் வீதி உலாவாக வந்து 5 மணி அளவில் கோவிலின் ஆயிரங்கால் முகப்பு மண்டபம் முன்பு காட்சி கொடுத்தனர்.

    இதையடுத்து மேள, தாளங்கள் முழங்க திருவெம்பாவை, தேவாரம் பாடியபடி சிவனடியார்கள் நடன பந்தலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் மாலை 6.15 மணி அளவில் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து மூலவர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் தனித்தனி பல்லக்கில் எழுந்தருளி சித்சபைக்கு புறப்பட்டனர். அப்போது சிவகாமசுந்தரி அம்பாளுடன் ஆடல் அரசன் நடராஜர், நடன பந்தலில் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு தரிசனம் அளித்த கண்கொள்ளா காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

    அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடல் வல்லானே...! நடராஜ பெருமானே...!, சிவ, சிவ... ஓம் நமச்சிவாய என்று விண்ணை முட்டும் வகையில் பக்தி கோஷங்களை எழுப்பியும், இரு கைகளை தட்டியும் நடராஜரை தரிசித்தனர். இதையடுத்து மாலை 5.30 மணி அளவில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் கோவில் உட்பிரகாரத்துக்கு வந்தனர். அங்கு கருவறையில் வைத்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    விழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதிஉலா காட்சியும், நாளை (புதன்கிழமை) ஞானபிரகாசம் குளக்கரையில் தெப்ப உற்சவமும் நடக்கிறது. அத்துடன் இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன விழா நிறைவு பெறுகிறது.
    அ.தி.மு.க. நடத்திய உள்கட்சி தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட மோதலில் கார் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. இரண்டாம் கட்ட அமைப்பு தேர்தல் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுகிறது.

    இந்நிலையில், உள்கட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் கடலூர் பாதிரிக்குப்பத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.

    கூட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சேவல்குமார், கட்சி நிர்வாகிகளுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்ப படிவத்தை வழங்கியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த நகர துணை செயலாளர் கந்தனுக்கும், சேவல்குமாருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

    தகவலறிந்த முன்னாள் அமைச்சரும், கடலூர் வடக்கு மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத் இருவரையும் சமாதானப்படுத்தினார். 
    கூட்டம் முடிந்தும் அங்கிருந்து புறப்பட்ட சேவல்குமார் காரை கந்தன் ஆதரவாளர்கள் வழிமறித்தனர். அதன்பின் அந்த காரை அடித்து நொறுக்கியதில் கார் கண்ணாடி உடைந்தது. இதனால் சேவல்குமாரின் ஆதரவாளர்கள் ஓடிவந்து தகராறில் ஈடுபட்டனர்.

    இருவரது ஆதரவாளர்களும் கட்சி அலுவலகம் முன்பு உள்ள கடலூர்-திருவந்திபுரம் சாலையில் மோதிக்கொண்டனர். ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில் இருதரப்பை சேர்ந்த 4 பேர் காயம் அடைந்தனர்.

    தகவலறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அங்கு வந்து இருதரப்பினரை சமாதானப்படுத்தி அனுப்பினர். அ.தி.மு.க. கட்சி அலுவலகம் முன் பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    பண்ருட்டி அருகே மகள் பலாத்காரத்துக்கு உடந்தையாக இருந்த தாய் மற்றும் கள்ளக்காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பத்திரக்கோட்டை கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவரது தந்தை இறந்த நிலையில் தாய் அம்சவள்ளியுடன் வசித்து வருகிறார்.

    இவருக்கு 2 சகோதரர்கள் உள்ளனர். இவர்கள் சென்னையிலுள்ள இவரது பாட்டி வீட்டிற்கு சென்றவிட்டனர்.

    இதற்கிடையில் பண்ருட்டி புது பிள்ளையார்குப்பம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 30) கூலித்தொழிலாளிக்கும், அம்சவள்ளிக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தால் கார்த்திகேயன் அடிக்கடி அம்சவள்ளியின் வீட்டிற்கு சென்று வருவார்.

    நேற்று முன்தினம் வழக்கம்போல் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அம்சவள்ளியன் மகள் இருப்பதை கண்டு அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோ எடுத்து அவரது சகோதரர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

    இதுகுறித்து மாணவி பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த தாய் அம்சவள்ளி பாலியல் பலாத்காரம் செய்த கார்த்திகேயன் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
    ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நடராஜர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கோவிலில் உள்ள 4 ரத வீதிகளிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் திருமஞ்சனமும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு கோவில் வளாகத்துக்குள் தேர் மற்றும் தரிசன விழா நடத்தப்பட்டது. இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா தேரோட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என்றாலும் திருவிழா நடத்த அனுமதிகோரி பக்தர்கள் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தினர்.

    அதன்படி கடந்த 11-ந்தேதி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் சுவாமிகள் வீதிஉலா நடத்தப்பட்டது. தற்போது ஒமைக்ரான் பரவி வருவதால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தேர் மற்றும் தரிசன விழாவுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை.

    இதனையறிந்த சிவனடியார்கள், பக்தர்கள், இந்து முன்னணி அமைப்பினர், பா.ஜ.க.வினர் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தேர்த்திருவிழா, ஆருத்ரா தரிசன விழாவுக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் அனுமதி வழங்கினார்.

    அதன் பின்னர் நேற்று காலை பக்தர்கள் புடைசூழ நடராஜர் கோவில் தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோ‌ஷங்களை எழுப்பியவாறு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். 4 ரதவீதிகளில் வலம் வந்த தேர் மாலையில் கீழரத வீதியில் நிலையை அடைந்தது.

    நேற்று இரவு முழுவதும் சிறப்பு தீபாராதனை நடந்தது. இன்று (20-ந் தேதி) அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்தது.

    காலை 6 மணி முதல் 10 மணி வரை திருவாபரண அலங்காரம், சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகளின் வீதிஉலா காட்சி நடந்தது.

    இன்று மாலை 3 மணியளவில் ஆருத்ரா தரிசன விழா நடக்கிறது. இதையொட்டி சிவகாமசுந்தரி சமேத நடராஜர் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு முன்முகப்பு மண்டபத்தில் உள்ள நடன பந்தலில் முன்னும் பின்னுமாக 3 முறை சுற்றி வந்து நடனமாடி பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசன காட்சி அளிப்பார்கள்.

    இதனையடுத்து நடன பந்தல் வழியாக சுவாமிகள் கோவிலின் உள்ளே கொண்டு செல்லப்பட்டு சித்சபை ரகசிய பிரவேசம் நடைபெறும். பின்னர் சிறப்பு தீபாராதனை நடத்தப்படுகிறது. ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நடராஜர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கோவிலில் உள்ள 4 ரத வீதிகளிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

    நாளை (21-ந் தேதி) முத்துப்பல்லக்கு நிகழ்ச்சியுடன் விழா முடிவடைகிறது.
    கடலூர் அருகே இன்று காலை மரத்தில் கார் மோதிய விபத்தில் பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு அருகே உள்ள நீர்முளை பகுதியை சேர்ந்தவர் ராமு (வயது 68). இவரது மனைவி லலிதா (58).

    இவர்கள் நேற்று நள்ளிரவு சென்னையில் உள்ள தனது மகள் வீட்டுக்கு காரில் சென்றனர். காரை சென்னை ஆவடியை சேர்ந்த டிரைவர் கோதண்டம் (50) என்பவர் ஓட்டினார்.

    இந்த கார் இன்று அதிகாலை 5 மணி அளவில் கடலூர் அருகே பச்சையாங்குப்பம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராமல் சாலையோரத்தில் இருந்த பனைமரத்தில் பயங்கர சத்தத்துடன் மோதி நின்றது. இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே லலிதா, கார் டிரைவர் கோதண்டம் ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தனர். ராமு பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

    இதனை பார்த்த பொதுமக்கள் கடலூர் துறைமுகம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தனர்.

    இதனைத்தொடர்ந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராமுவும் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மாவட்ட கலெக்டர் அனுமதி அளித்ததை தொடர்ந்து இன்று நடராஜர் கோவிலில் தோரோட்டம் நடைபெற்றது.
    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆனி திருமஞ்சன விழா, ஆருத்ர தரிசன விழா மிக சிறப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான ஆருத்ர தரிசன விழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆனால், இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தேரோட்ட விழாவுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை.

    எனவே இன்று (19-ந்தேதி) தேர்த்திருவிழா நடைபெறுமா? என்று பக்தர்களிடையே கேள்வி எழும்பியது. என்றாலும் பக்தர்கள், இந்து முன்னணி அமைப்பினர், பா.ஜ.க. வினர் தேர்நிலையான கீழ ரதவீதியில் நேற்று மாலை திரண்டனர். தேர்த்திருவிழா நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அங்கு சாலை மறியல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் அங்கு விரைந்தார். சிதம்பரம் போலீஸ் டி.எஸ்.பி. ரமேஷ்ராஜ் மற்றும் உயர் அதிகாரிகள் பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பக்தர்கள் தேரோட்டம் நடத்துவதற்கு அனுமதி அளித்தால்தான் இங்கிருந்து செல்வோம் என்று கோ‌ஷங்களை எழுப்பினர்.

    இந்த தகவல் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிர மணியத்துக்கு தெரிவிக்கப் பட்டது. அவர் இதுபற்றி ஆலோசித்து இரவு 7.30 மணியளவில் தேரோட்டம் நடத்த அனுமதி வழங்கினார். இதனால் அங்கு திரண்டிருந்த பக்தர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மாவட்ட நிர்வாகம் அறிவித்தபடி தேரோட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி இன்று அதிகாலை நடராஜர், சிவகாமசுந்தரி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் சித்சபையில் இருந்து புறப்பட்டு தேர்நிலையான கீழரத வீதிக்கு வந்தனர்.

    அங்கு தனித்தனி தேர்களில் சுவாமிகள் வைக்கப்பட்டனர். அதன் பின்னர் தீபாராதனை நடந்தது. இதனை தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் மகிழ்ச்சி பெருக்குடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

    தேர்களுக்கு முன்னால் திருவாசக குழுவினர் தேவாரம், திருவாசகம் பாடியபடி சென்றனர். அதோடு நடனமாடி பக்தர்களை உற்சாகப்படுத்தினர். தேர்களில் சுவாமிகள் ரதவீதிகளில் வந்ததால் அந்த பகுதி முழுவதும் கோலங்கள் போடப்பட்டிருந்தது. கைலாய வாத்தியங்கள் முழங்கின.

    அதன் பின்னர் தேர்கள் தெற்கு ரதவீதி, மேற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி வழியாக தேர் நிலையை இன்று மாலை வந்தடைகிறது.

    அதன் பின்னர் சிறப்பு தீபாராதனை நடைபெறும். இரவு 9 மணியளவில் தேர்நிலையான கீழரத வீதியில் இருந்து சிவகாம சுந்தரி சமேத நடராஜர் சுவாமிகள் தேர்நிலையில் இருந்து புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்துக்கு செல்வார்கள்.

    அங்கு இரவு முழுவதும் சிறப்பு தீபாராதனை நடக்கிறது. நாளை (20-ந்தேதி) அதிகாலை 3 மணியளவில் சிறப்பு அபிஷேகத்துடன் திருஆபரண அலங்கார காட்சியும், புறப்பாடும் நடைபெறும்.

    தேரோட்டம்

    மதியம் 2 மணிக்கு பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரிக்கு பின்னர் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் ஆயிரங் கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு முன்முகப்பு மண்டபத்தில் உள்ள நடன பந்தலில் முன்னும் பின்னுமாக 3 முறை சுற்றி வந்து நடனமாடி பக்தர்களுக்கு ஆருத்ர தரிசன காட்சி அளிப்பார்கள்.

    இதனையடுத்து நடன பந்தல் வழியாக சுவாமிகள் கோவிலின் உள்ளே கொண்டு செல்லப்பட்டு சித்சபை ரகசிய பிரவேசம் நடைபெறும். பின்னர் சிறப்பு தீபாராதனை நடத்தப்படுகிறது.

    21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முத்துப்பல்லக்கு நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

    தேரோட்ட விழாவையொட்டி நகராட்சி சார்பில் குடிநீர் வசதி, சுகாதார வசதி செய்யப்பட்டு இருந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    விழாவையொட்டி சிதம்பரம் நகரின் பல்வேறு பகுதிகளில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


    சிதம்பரத்தில் தேரோட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி பா.ஜ.க. உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்தின.
    கடலூர்:

    சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டமும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பாக நடைபெற உள்ளது.

    இந்த திருவிழா குறித்து ஏற்கனவே நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கொடியேற்றம், ஆருத்ரா தரிசன விழா உள்ளிட்டவற்றில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டது. மேலும் தேரோட்டத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. 

    இதற்கிடையே, சிதம்பரத்தில் தேரோட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின.

    இந்நிலையில், ஆருத்ரா தரிசனத்தின் ஒரு பகுதியாக கடலூரில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

    கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி குறைந்த அளவிலான பக்தர்களுடன் தேரோட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    கொரோனோ கட்டுப்பாடுகள் இருக்கும் போது ஸ்டாலின் விழாவில் பொதுமக்கள் கூடலாம். ஆனால் கோவில் விழாக்களில் தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. இது என்ன நியாயம் என எச் ராஜா கூறியுள்ளார்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு இன்று பா.ஜ. க. தேசிய செயலாளர் ராஜா சாமி தரிசனம் செய்ய வந்தார். அவர் நடராஜர் கோவிலில் சாமி தரிசனத்தை முடித்து விட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது‌.இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆனித் திருமஞ்சன விழா, ஆருத்ரா தரிசன விழா ஆகிய திருவிழாக்கள் விமர்சையாக நடைபெறும்.

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நாளை 19-ந் தேதி ,20ந் தேதியன்று தேர் திருவிழா நடைபெற இருந்தது. தமிழக கோவில்களில் நடைபெறும் தேர் திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது கண்டிக்கத்தக்கது.

    சிதம்பரம் கோவிலில் தேர் ஓட வில்லை என்றால் அது அரசருக்கு தான் ஆபத்து. தற்போது அரசர் யார் என்று உங்களுக்கு தெரியும்.

    கோவில் நகைகளை உருக்குவதற்கு தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் அமைச்சர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மற்றும் வருவாய் துறையினர் கோவில் நிலங்களை கையகப்படுத்தி வருகின்றனர். அவர்கள் ஏன் தேவாலயங்கள் மற்றும் மசூதி ஆக்கிரமிப்பு நிலங்களை கையகப்படுத்தவில்லை.

    சிதம்பரம் நடராஜர் கோவில்

    சேலத்திற்கு முதல்அமைச்சர் சென்ற போது பொதுமக்கள் அதிக அளவில் கூடினர். கொரோனோ கட்டுப்பாடுகள் இருக்கும் போது முதல் அமைச்சர் விழாவில் பொதுமக்கள் கூடலாம். ஆனால் கோவில் விழாக்களில் தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. இது என்ன நியாயம்.

    சிதம்பரம் நடராஜர் கோவில் தேர் திருவிழாவிற்கு அனுமதி வழங்க வேண்டும். அவ்வாறு அனுமதி வழங்கவில்லை என்றால் பக்தர்கள், இந்து அமைப்பினரை ஒன்று திரட்டி கோவிலின் முக்கிய வீதிகளில் முன்பு திரண்டு சிதம்பரம் நகரை ஸ்தம்பிக்க வைப்போம் இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்...பெண்ணின் திருமண வயது உயர்வு - முஸ்லிம் லீக், சமாஜ்வாடி எதிர்ப்பு

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டமும், நாளை மறுநாள்(திங்கட்கிழமை) ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பாக நடைபெற உள்ளது.
    சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டமும், நாளை மறுநாள்(திங்கட்கிழமை) ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பாக நடைபெற உள்ளது.

    இந்த திருவிழா குறித்து ஏற்கனவே நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கொடியேற்றம், ஆருத்ரா தரிசன விழா உள்ளிட்டவற்றில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டது. மேலும் தேரோட்டத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. ஆனால் கடந்த 11-ம் தேதி நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்றனர். மேலும் தினந்தோறும் சாமி வீதி உலாவும், 5-ம் நாள் உற்சவமான தெருவடைச்சான் உற்சவமும் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதிலும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இந்தநிலையில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடராஜர் கோவில் தேரோட்டம் மற்றும் ஆருத்ரா தரிசன விழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கோட்டாட்சியர் ரவி தலைமை தாங்கினார்.

    இதில் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், தாசில்தார்ஆனந்த், ஆணையாளர் அஜிதா பர்வீன் மற்றும் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் நடராஜர் கோவிலில் தேர்திருவிழா ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும் ஆயிரக்கால் மண்டபத்தில் நடராஜ பெருமானும், சிவகாமசுந்தரி அம்மனும் வைக்கப்பட்டு, அன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கலாம்.

    அதே போல் ஆருத்ரா தரிசனத்தில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது. ஆனால் தரிசனம் முடிந்த பிறகு மாலை 4 மணியிலிருந்து இரவு 10 மணி வரை பக்தர்கள் நடராஜரை தரிசனம் செய்ய கீழ சன்னதி வழியாக, அனுமதிக்கப்படுவார்கள் என முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இதற்கான உத்தரவை கோட்டாட்சியர் ரவி பிறப்பித்தார்.

    ×