என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    பண்ருட்டி அருகே மகளையே கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய தாய் போக்சோவில் கைது

    பண்ருட்டி அருகே பெற்ற மகளையே கள்ளக்காதலனுக்கு தாய் விருந்தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள பத்திரக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவரது தந்தை இறந்த நிலையில் தாய் அம்சவள்ளி (வயது 40) என்பவருடன் வசித்து வருகிறார். அம்சவள்ளிக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் சென்னையில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி வேலை செய்து வருகின்றனர். அம்சவள்ளி கூலிவேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில், பண்ருட்டி அருகே புது பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த கார் டிரைவரான கார்த்திகேயன் (30) என்பவருடன் அம்சவள்ளிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

    இந்த கள்ளக்காதலானது சுமார் 2 வருடமாக இருந்து வந்துள்ளது. இதனால், அம்சவள்ளியும், கார்த்திகேயனும் அடிக்கடி வெளியில் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

    நாளடைவில் கார்த்திகேயன் அம்சவள்ளி வீட்டிற்கு வந்துசென்றுள்ளார். அம்சவள்ளியின் மகள் ஆரம்பத்தில் கார்த்திகேயன், தனது தாயின் நட்பை சந்தேகம் கொள்ளவில்லை. அம்சவள்ளி வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற கார்த்திகேயனுக்கு அவரது மகள் மீது மோகம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவரிடம் சென்று பேசியுள்ளார். ஆனால், அவர் பேசாமல் இருந்து வந்துள்ளார்.

    இவ்வாறு பேசுவதை கள்ளக்காதலன் நிறுத்தியதால் அவரது திட்டத்துக்கு சம்மதித்தார்.

    அதன்படி கடந்த சில நாட்களுக்கு அம்சவள்ளி தனது வீட்டில் மகளை பூட்டினார். சிறிது நேரத்தில் வந்த கள்ளக்காதலன் கார்த்திக்கேயனையும் வீட்டில் பூட்டி விட்டு வெளியே சென்றார்.

    அப்போது வீட்டுக்குள் புகுந்த கார்த்திக்கேயன் மாணவியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அதனை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். மேலும், என்னை திருமணம் செய்து கொள். இதுகுறித்து யாரிடமும் கூறினால், வீடியோவை சமூக வலைத்தளத்தில் போட்டு விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுமி உடனே சென்னையில் உள்ள தனது சகோதரர்களுக்கு தெரிவித்து உள்ளார். பதறிப்போன அவர்கள் உடனே சொந்த ஊர் திரும்பினர். பின்னர் நடந்த சம்பவம் குறித்து தனது தங்கையிடம் கேட்டறிந்தனர்.

    இதையடுத்து, அவரது அறிவுறுத்தலின் பேரில், சிறுமி இதுகுறித்து, பண்ருட்டி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்கு பதிந்து கார்த்திகேயன், அம்சவள்ளி ஆகிய 2பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்தார். மேலும், பாதிக்கப்பட்ட மாணவியை காப்பகத்தில்ஒப்படைத்தார்.
    Next Story
    ×