என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூரில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக் கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை கேட்பு முகாம் நடந்தது. இதையொட்டி கடலூர் மாவட்டம் முழுவதும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மக்கள் குறைதீர்க்கும் முகாமில் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள மனு வழங்கி வருகின்றனர்.

    இன்று காலை மேல்பட்டாம்பாக்கம் பகுதியை சேர்ந்த பாரதி தலைமையில் 6 திருநங்கைகள் கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு வந்தனர்‌. பின்னர் திடீரென்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் கூறுகையில், நாங்கள் திருநங்கைகளாக இருந்து வருவதால் எங்களது பெற்றோர்கள் அவர்களுடன் இருக்க விடாமல் தள்ளி வைத்துள்ளனர். இதன் காரணமாக நாங்கள் தங்குவதற்கு எந்தவித வசதி இல்லாமல் தவித்து வருகிறோம். மேலும் பலர் தங்களை மரியாதை குறைவாக நடத்தி வருவதால் எங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்றனர்.

    இதனை தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில், திருநங்கைகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதோடு, பரபரப்பாக காணப்பட்டது.
    பண்ருட்டி அருகே குடும்ப தகராறில் கணவன் மனைவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம் புலியூர் மேற்கு தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 44), இவரது மனைவி அலமேலு. ரவிச்சந்திரனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் சரியாக வேலை எதற்கும் செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்வார்.

    ரவிச்சந்திரனை திருத்த எவ்வளவோ முயற்சி செய்தும் அலமேலுவால் முடியவில்லை. இதில் மனமுடைந்த அலமேலு வி‌ஷம் குடித்துவிட்டு வாந்தி எடுத்த நிலையில் மயங்கி கிடந்துள்ளார். போதையில் வீட்டுக்கு வந்த ரவிச்சந்திரன் மனைவி தற்கொலை செய்துகொண்டுவிட்டார் என்று பயந்துவிட்டார். இதையடுத்து அவரும் வி‌ஷத்தை குடித்துவிட்டார். 2 பேரும் மயங்கி கிடந்தனர்.

    இதனை கண்ட அக்கம்பக்கம் உள்ளவர்கள் இருவரையும் மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கு கணவன்- மனைவி இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    திட்டக்குடி அருகே பஸ்சில் பயணம் செய்த வாலிபர் திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திட்டக்குடி:

    விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு காஞ்சிசு நகரைச் சேர்ந்தவர் இளையராஜா. இவர் நேற்று திருச்சியிலிருந்து விழுப்புரம் நோக்கி அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது இளையராஜாவுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் இளையராஜா மயக்க மடைந்து விழுந்தார். உடனே அவரை மீட்ட பயணிகள் இளையராஜாவை சிகிச்சைக்காக தொழுதூர் ஆரம்பம் சுகாதார நிலையத்திற்க்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இளையராஜா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து ராமநத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி அருகே சிறுமியை கிண்டல் செய்த வாலிபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவதிகை குட்டைதெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது 15 வயது மகள் அதே பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    வீட்டில் தனியாக இருந்த அந்த சிறுமி திடீரென வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் சிறுமியை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். எதற்காக சிறுமி வி‌ஷம் குடித்தார் என்பது தெரியாத நிலையில் பண்ருட்டி போலீசில் சிறுமியின் தந்தை நடராஜன் புகார் செய்தார்.

    போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் சிறுமி பள்ளிக்கு செல்லும்போதும், திரும்பி வரும்போதும் கேலி, கிண்டல் செய்து வந்தது தெரியவந்தது.

    இதில் மனமுடைந்த அந்த சிறுமி வி‌ஷம் குடித்ததாக போலீசில் தெரிவித்தார். அதன்பேரில் சிறுமியை கிண்டல் செய்த வாலிபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கடந்த 21-ந்தேதி முதல் காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது மருத்துவமனை வளாகத்தில் முழங்காலிட்டு கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் அண்ணாமலை நகர் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மற்றும் பல் மருத்துவக்கல்லூரியில் 45 அரசாணை படி தற்போது பயிலும் மாணவர்களுக்கு அரசு கல்வி கட்டணத்தை வசூலிக்க வேண்டும், தமிழக முதல்வர் வாக்குறுதியை நிறைவேற்ற கோரியும் கடந்த 11 நாட்களாக பல்கலைக்கழக வளாகத்தில் பல்வேறு போராட்டங்களை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் நடத்தி வருகின்றனர்.

    கடந்த 21-ந்தேதி முதல் காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது மருத்துவமனை வளாகத்தில் முழங்காலிட்டு கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாலை மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் செய்தனர்.
    திட்டக்குடி அருகே சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரியின் பின் பக்கம் மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கொடிக்களம் புது நத்தம் காலனியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). இவர் தனது மோட்டார் சைக்கிளில் அதே பகுதியை சேர்ந்த முருகானந்தம் (23), மணிகண்டன் (21) ஆகியோருடன் வேலை நிமித்தமாக ஆவினங்குடிக்கு சென்று கொண்டிருந்தார். 

    வழியில் எதிர்பாராத விதமாக சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரியின் பின் பக்கம் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் மணிகண்டன் (32) பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து பலத்த காயமடைந்த 2 பேரும் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர்அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேப்பூர் அருகே பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேப்பூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள களரம்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 48). இவரது மனைவி சுஜாதா (32). இவர்களுக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர். கணவன் - மனைவிக் கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும்.

    இந்தநிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு வேப்பூர் அருகே பில்லூர் பகுளத்தில் விவசாய நிலம் ஒன்றை வெங்கடேசன் குத்தகைக்கு எடுத்தார். எனவே குடும்பத்துடன் இங்கு வந்து தங்கி குத்தகைக்கு எடுத்த நிலத்தில் விவசாயம் செய்துவந்தார்.

    இங்கு வந்தும் தொடர்ந்து அவர்களுக்கிடையே குடும்ப தகராறு இருந்துவந்தது. இந்தநிலையில் நேற்று அந்த குத்தகை நிலத்தில் உள்ள கிணற்றில் சுஜாதா பிணமாக மிதந்தார். இதுபற்றிய தகவல் அறிந்த சுஜாதாவின் தாயார் வளர்மதி வேப்பூர் போலீசில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு மற்றும் போலீசார் விரைந்து வந்து சுஜாதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வளர்மதி கொடுத்த புகாரின் பேரில் வெங்கடேசனிடம் விசாரணை நடத்தினர். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்து சுஜாதா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதையடுத்து சுஜாதாவை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குபதிவு செய்து வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர்.

    கடந்த சில நாட்களாக வீராணம் ஏரி பகுதியில் வெயில் வறுத்தெடுத்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயில் கொளுத்தி வருவதால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
    காட்டுமன்னார் கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

    இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் ராட்சத குழாய் மூலம் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.

    இந்த ஏரிக்கு பருவகாலங்களில் பெய்யும் மழை மற்றும் மேட்டூர் அணை மூலம் தண்ணீர் வரத்து இருக்கும். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் வீராணம் ஏரி 3 முறை நிரம்பி வழிந்தது. இதனால் வீராணம் ஏரி பாசன பகுதியில் நெல் அறுவடை முடிந்துள்ளது. எனவே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. என்றாலும், சென்னை மாநாகர் குடிநீருக்காக தினசரி தண்ணீர் ராட்சத குழாய் மூலம் அனுப்பப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக வீராணம் ஏரி பகுதியில் வெயில் வறுத்தெடுத்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயில் கொளுத்தி வருவதால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. நேற்று 42.50 அடியாக நீர்மட்டம் இருந்தது. அது இன்று 42.45 அடியாக குறைந்தது. ஏரிக்கு நேற்று 241 கனஅடி நீர் வந்தது. அது இன்று 181 கன அடியாக குறைந்தது.

    சென்னை மாநகர் குடிநீருக்காக வீராணம் ஏரியிலிருந்து 61 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
    பண்ருட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் திடீர் மழை பெய்தது. இதனால் மண்ணும் குளிர்ந்து மக்களின் மனமும் குளிர்ந்து. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

    பண்ருட்டி:

    பண்ருட்டியில் கடந்த சில நாட்களாக கோடைவெயில் வெளுத்து வாங்கியது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் அவதிப்பட்டனர்.

    அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயில் வறுத்து எடுப்பதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. எனவே எப்போது மழை பெய்யும் என்று மக்கள் எதிர்ப்பார்த்து இருந்தனர்.

    இந்த நிலையில் வங்க கடலில் மேலடுக்கு சுழற்றி மற்றும் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    அதன்படி நேற்று காலை பண்ருட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் திடீர் மழை பெய்தது. இதனால் மண்ணும் குளிர்ந்து மக்களின் மனமும் குளிர்ந்து. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

    விருத்தாசலம் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அருகே உள்ள செம்பளக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர்(வயது 55). இவர் சம்பவத்தன்று பாஸ்கர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை விருத்தாசலம் ஜங்‌ஷன் சாலையில் நிறுத்தி விட்டு அங்குள்ள கடைக்குச் சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது குறித்த பாஸ்கர் விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே குடும்ப தகராறு காரணமாக எலி மருந்தை சாப்பிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே உள்ள செம்மேடு பகுதியை சேர்ந்தவர் செல்வம், விவசாயி. இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 32). இவர்களுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது. 2 மகள்கள் உள்ளனர்.

    குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த ராஜேஸ்வரி கடந்த 14-ந் தேதி எலி மருந்தை சாப்பிட்டார். பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    தமிழக இளைஞர்களுக்கு வேலை கேட்டு மாநிலத்தின் நான்கு முனைகளிலிருந்து புறப்பட்ட சைக்கிள் பயணம் புதுச்சேரியிலிருந்து கடலூர், நெல்லிக்குப்பம், பட்டாம்பாக்கம் வழியாக பண்ருட்டி நகரத்திற்க்கு வந்தது.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தமிழக இளைஞர்களுக்கு வேலை கேட்டு மாநிலத்தின் நான்கு முனைகளிலிருந்து புறப்பட்ட சைக்கிள் பயணம் புதுச்சேரியிலிருந்து கடலூர், நெல்லிக்குப்பம், பட்டாம்பாக்கம் வழியாக பண்ருட்டி நகரத்திற்க்கு வந்தது. பயண குழுவிற்க்கு சங்கத்தின் நகர செயலாளர் சங்கர் தலைமையில் பஸ் நிலையம் எதிரே வரவேற்பு அளிக்கப்பட்டது. 

    சைக்கிள் பயனத்தை வரவேற்றுபி.எஸ்.என்.எல். ஒய்வூதியர் சங்க செயலாளர் பாண்டுரங்கன் பேசினர். பயன குழுவில் வருகை தந்த மாநில, மாவட்ட நிர்வாகளுக்கு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் உதயகுமார், வாலிபர் சங்க முன்னாள் நகர செயலாளர் தினேஷ், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசியர் கூட்டனி முன்னாள் மாநில பொருளாளர் ஜீவானந்தம், ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க செயலாளர் ஜெயஸ்ரீ, மின்சார வாரிய ஊழியர் சங்க செயலாளர் பன்னீர், சுமைப்பணி நகர செயலாளர் நாகராஜ் பித்தளை பாத்திர சங்க செயலாளர் பரமானந்தம், மாற்றுத்திறனாளி சங்க நகர செயலாளர் ஜீவா, ஆட்டோ சங்க செயலாளர் முகமது நிஜார் அஹமது ஆகியோர் சால்வை அணிவித்தனர்

    மற்றும் அனைத்து சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×