என் மலர்
கோயம்புத்தூர்
- இந்த பஸ் நிலையம் கடந்த 1984 -ம் ஆண்டு கட்டப்பட்டது.
- பஸ் நிலையத்தை புனரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் கடந்த 1984 -ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கிருந்து கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பஸ்கள் வந்து செல்கின்றன.
அதேபோல் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், திருச்சி, கரூர், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ் நிலையத்தில் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கடைகளும் இயங்கி வருகின்றன. நாள்தோறும் மேட்டுப்பாளையம் பஸ்நிலையத்தை பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது அன்றாட பணிக்காகவும், வேலைக்கு செல்வோரும்,பள்ளி, மாணவ,மாணவிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட உள்நாடுகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையம் வந்தடைந்த பின்னர் மலைகளின் அரசி ஊட்டிக்கு சென்று வருகின்றனர். இந்தநிலையில் பஸ் நிலையம் கட்டப்பட்டு சுமார் 39 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் கட்டிடத்தின் பல பகுதிகள் விரிசல் அடைந்தும், சிதில மடைந்தும்,மேல் பூச்சுகள் இல்லாமல் பொலிவு இழந்தும் காணப்பட்டு வருகிறது.
மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தை புனரமைக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுநல அமைப்புகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதனையடுத்து தமிழக அரசு மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தை புனரமைக்க உத்தரவிட்டது. முதற்கட்டமாக மண் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதனையொட்டி நேற்று திருப்பூர், கோவை பேருந்துகள் நிற்கும் இடங்களில் மண் பரிசோதனை ஆலோசகர்களால் மேற்கொள்ளப்பட்டது. மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் சுமார் 39 வருடங்களுக்கு இடித்து மீண்டும் புனரமைக்கப்பட உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் வினோத் கூறுகையில் பஸ் நிலையத்தை புனரமைக்கும் வகையில் முதற்கட்டமாக மண் பரிசோதனை ஆலோசகர்களால் பஸ் நிலைய பகுதிகளில் மண் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் ஆலோசகர்களால் அறிவிக்கப்பட்ட பின்னர் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அந்த அறிக்கையினை ஆய்வு செய்த பின்னர் பஸ் நிலையத்தை புனரமைக்கும் பணி தொடங்கும் என தெரிவித்தார்.
- இந்த திட்டம் கடந்த 1-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்ததாரர்கள் தேர்வு ஏப்ரல் 18 -ந் தேதி நடைபெறுகிறது.
கோவை,
ஐகோர்ட்டு அறிவுறுத்தல்படி கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் கடந்த 1-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு கூடுதலாக ரூ.10 பெற்றுக்கொண்டு விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலி பாட்டில்களை மீண்டும் கடையில் ஒப்ப டைத்து விட்டு கூடுதலாக வழங்கிய ரூ.10 -ஐ பெற்றுகொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தால் கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கோவை மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஜான் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் 10-க்கு 10 என்ற அளவிலே உள்ளது. இதில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மதுபாட்டில் பெட்டிகளால் ஏற்கெனவே பணியாளர்களுக்கு போதிய இடவசதியில்லாமல் நெருக்கடி காணப்படுகிறது. தற்போது, காலி மது பாட்டில்கள் வைப்பதற்கு இடமில்லாமல் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். காலி பாட்டில்களை திருடுவதற்கு வாய்ப்புள்ளதால் வெளியிலும் வைக்க முடியாத நிலை உள்ளது.
திட்டம் செயல்பாட்டிற்கு வந்து 10 நாள்களுக்கு மேலாகியும் ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்படாததால் அனைத்து கடைகளிலும் காலி பாட்டில்கள் வைக்க இடமில்லாமல் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதேபோல் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் பணியாளர்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது. இதனால் ஏற்கெனவே பணிச்சுமையுடன் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது காலி பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டத்தால் ஊழியர்களுக்கு மேலும் பணிச்சுமை அதிகரித்துள்ளது. விற்பனை நேரத்தில் காலி பாட்டில்களை பெறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காலிப்பாட் டில்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தினால் ஊழியர்கள் பணியாற்ற எளிதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். இது தொடர்பாக கோவை வடக்கு மண்டல டாஸ்மாக் மேலாளர் செல்வன் கூறியதாவது: காலி மதுபாட்டில்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்ததாரர்கள் தேர்வு ஏப்ரல் 18 -ந் தேதி நடைபெறுகிறது. ஒப்பந்ததா ரர்கள் நியமி க்கப்பட்டவுடன் காலி பாட்டில்கள் தேங்கும் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தின் மூலம் பொது இடங்களில் காலி பாட்டில்களை வீசிச் செல்லும் நிலை குறைந் துள்ளது என்றார்.
கோவை, தெற்கு மண்டலத்தில் உள்ள 139 கடைகளில் கடந்த 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை 19 லட்சத்து 24 ஆயிரத்து 708 மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 14 லட்சத்து 4 ஆயிரத்து 565 பாட்டில்கள் மட்டுேம திரும்ப பெறப்பட்டுள்ளன. 5.20 லட்சம் பாட்டில்கள் திரும்ப வழங்கப்படாமல் உள்ளது.
வடக்கு மண்டலத்தில் உள்ள 166 கடைகள் மூலம் கடந்த 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை 17 லட்சத்து 56 ஆயிரத்து 997 மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 12 லட்சத்து 91 ஆயிரத்து 506 காலி பாட்டில்கள் மட்டுமே திரும்ப பெறப்பட்டுள்ளன. 4.65 லட்சம் காலி பாட்டில் கள் வழங்கப்படாமல் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- வாலிபர் மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்தார்.
- மாணவியின் பெற்றோர் தொண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்தனர்.
கோவை,
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள வேலையாபாளைத்தை சேர்ந்தவர் பிரதீப் (வயது 23).
இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயதான 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்தார். கடந்த 6 மாதத்துக்கு முன்பு பிரதீப் அந்த மாணவியை தனியாக சந்தித்து தனது காதலை ஏற்குமாறு கூறி உள்ளார். ஆனால் மாணவி ஏற்க மறுத்து விட்டார்.
இது குறித்து அவர் தனது பெற்றோரிடம் கூறினார். அவர்கள் தொண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் பிரதீப்பை அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
சம்பவத்தன்று சிறுமியும், அவரது தாயும் அரசு ஆஸ்பத்திரி வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த வாலிபர் சிறுமியின் தாயிடம் உன்னால் தான் அவள் என்னுடன் பேச மறுக்கிறாள் என கூறி தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டினார்.
இதில் அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். அப்போது பிரதீப் அங்கு இருந்து தப்பி ஓட முயன்றார். அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் பிரதீப்பை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- அவரிடமிருந்து ரூ.1500 பணம் மற்றும் செல்போனை எடுத்து தப்பிச் சென்றனர்.
- சரவணம்பட்டி போலீசார் 4 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.
கோவை,
கோவை கணபதி அருகே நேதாஜி நகரை சேர்ந்தவர் விமல் (வயது30). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து, கம்பெனி வளாகத்தில் தங்கி உள்ளார்.
இந்நிலையில் இவர் சின்னவேடம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்துவது வழக்கம்.
இதையடுத்து அவர் சின்னவேடம்பட்டி டாஸ்மாக் கடை அருகில் மது அருந்திவிட்டு அமர்ந்து இருந்தார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தனர். அப்போது அவரிடம் மது அருந்த பணம் தருமாறு கேட்டுள்ளனர். இந்நிலையில் விமல் என்னிடம் பணம் இல்லை என்று கூறி மறுத்துள்ளார். இதயைடுத்து அந்த கும்பல் அவரது சட்டைப் பையில் இருந்து செல்போன் மற்றும் பேன்ட் பாக்கெட்டில் இருந்து பர்ஸ் ஆகியவற்றை எடுத்தனர்.
இதனை விமல் தடுக்க முயன்ற போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் தாங்கள் வைத்து இருந்த பீர் பாட்டிலை எடுத்து அவரை சரமாரியாக தாக்கி தரையில் தள்ளி விட்டனர். இதில் அவருக்கு தலை மற்றும் உதடுகளில் பலத்தகாயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டார்.
அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்து அந்த கும்பல் அவரிடம் இருந்து, ரூ.1500 பணம் மற்றும் செல்போனை எடுத்து தப்பிச் சென்றனர்.
பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சத்தி வீதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து விமல் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.
- 10 நாட்களுக்கு முன் வாலிபர் குணமடைந்து பழைய நினைவுகள் திரும்பியது.
- ஜிதேந்தரின் அண்ணன் தேவேந்திர நிஷாந்த், சத்தீஸ்கர் மாநில காவல் துறையில் பணியாற்றி வருவது தெரியவந்தது.
குனியமுத்தூர்:
கோவை பொள்ளாட்சி சாலை மயிலேரிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் உதவும் கரங்கள் என்ற தன்னார்வ அமைப்பு மனநலம் பாதிக்கப்பட்டு சாலைகளில் சுற்றித்திரியும் ஆதரவற்ற நபர்களை மீட்டுசிகிச்சையளித்து வருகிறது.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தனக்கு தானே பேசியவாறு சாலையில் சுற்றித்திரிந்த வட மாநில வாலிபர் ஒருவரை இந்த அமைப்பினர் மீட்டு மையத்திற்கு அழைத்து சென்று அவருக்கு உணவு, உடை வழங்கி மருத்துவ குழுவினர் சிகிச்சையளித்து வந்தனர்.
10 நாட்களுக்கு முன் அந்த வாலிபர் குணமடைந்து பழைய நினைவுகள் திரும்பியது. விசாரித்ததில் அவர் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், அவர் கோபால் நிஷாத் என்பவரது மகன் ஜிதேந்தர் (34). என்பதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து இந்த தன்னார்வ அமைப்பினர் இணையதளம் மூலம் ஜிதேந்தர் கூறிய அடையாளங்களை வைத்து சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் பகுதியில் உள்ள வணிக வளாகத்திற்கு அழைத்து பேசியபோது, ஜிதேந்தரின் அண்ணன் தேவேந்திர நிஷாந்த், சத்தீஸ்கர் மாநில காவல் துறையில் பணியாற்றி வருவது தெரியவந்தது.
தேவேந்திர நிஷாந்தை தொடர்பு கொண்டு பேசிய போது ஜிதேந்தர் அவரது சகோதரர் என்பதும், கடந்த 2015-ல் வீட்டில் இருந்த ஜிதேந்தர் திடீரென மாயமானதும், இது குறித்து உள்ளூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டு தேடி வந்ததாகவும் கூறினார். தேவேந்திர நிஷாந்த் நேற்று தனது தம்பியை அழைத்து செல்ல கோவை மயிலேரிபாளையத்தில் செயல்பட்டு வரும் மையத்திற்கு வந்தார். அங்கு ஜிதேந்தரை கண்டதும் கட்டிப்பிடித்து அழுதார். அண்ணன் அழுவதை பார்த்து ஜிதேந்திரனும் அழுதார். இதனால் அங்கு சிறிது நேரம் பாச போராட்டம் நடந்தது. பின்னர் அங்கிருந்தவர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி கூறிவிட்டு சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு தனது அண்ணனுடன் ஜித்தேந்தர் சொந்த ஊரான சத்தீஸ்கர் மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றார்.
- காரமடை பகுதியில் சிலர் டாக்டருக்கு படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக கலெக்டர் அலுவலகத்துக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
- முதல்கட்ட விசாரணையில் 2 பேர் போலி டாக்டர்கள் எனவும், ஒருவர் அவர்களுக்கு உதவி செய்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் காரமடை பகுதியில் சிலர் டாக்டருக்கு படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக கலெக்டர் அலுவலகத்துக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதுதொடர்பாக தகவல் காரமடை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் உஷார்படுத்தப்பட்டனர்.
அதன்படி போலீசார் காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது கணுவாய்பாளையம் பிரிவு, வெள்ளியங்காடு, தாயனூர் ஆகிய 3 இடங்களில் செயல்பட்டு வந்த தனியார் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் போலி மருத்துவ சான்றிதழ்களுடன் கிளினிக் நடத்தி வந்த 2 போலி டாக்டர்கள் உள்பட 3 பேர் சிக்கி உள்ளனர்.
முதல்கட்ட விசாரணையில் அவர்களில் 2 பேர் போலி டாக்டர்கள் எனவும், ஒருவர் அவர்களுக்கு உதவி செய்தவர் எனவும் தெரியவந்துள்ளது. மேலும் ஒருவர் தலைமறைவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். விசாரணை நடப்பதால் பெயர் விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
போலீசாரிடம் சிக்கிய போலி டாக்டர்கள் ஏற்கனவே கொரோனா பேரிடர் பொதுமுடக்க நேரத்தில் மேல்பாவி, வெள்ளியங்காடு, தோலம்பாளையம் ஆகிய பகுதிகளில் மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தபோது பழங்குடியின மக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு தோல் நோய்கள் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக காரமடை வட்டார சுகாதார அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மருத்துவமனையை பூட்டிச் சென்றனர். இந்நிலையில் தற்போது மீண்டும் போலி மருத்துவ கும்பல் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருவது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- முருகையன் அதியமான் கோட்டை அருகே உள்ள தடங்கம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார்.
- முருகையன் நேற்றிரவு இரவு அளவுக்கு அதிகமாக மதுபோதையில் பலாப்பழத்தை சேர்த்து சாப்பிட்டார்.
தருமபுரி:
கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் முருகையன். இவர் தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை அருகே உள்ள தடங்கம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு நீண்ட நாட்களாக மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.
நேற்றிரவு இரவு அளவுக்கு அதிகமாக மதுபோதையில் பலாப்பழத்தையும் சேர்த்து சாப்பிட்டார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்து அதியமான் கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்க ல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கடந்த 3 மாதங்களுக்கு பின் பொதுமக்களால் பாகுபலி என அழைக்கப்பட்டு வரும் யானை காட்டில் இருந்து வெளியேறி நெல்லிமலை, சமயபுரம் பகுதியில் சுற்றி திரிகிறது.
- கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து உணவு, தண்ணீர் தேடி யானை பகலிலேயே நுழைவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் அருகே சமயபுரம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் சுமார் 100-க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இக்கிராமம் மேட்டுப்பாளையம்-வனப்பத்திரகாளியம்மன் கோயில் செல்லும் சாலையில் உள்ளது.
இந்தநிலையில் அருகிலுள்ள நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து தினமும் உணவு, குடிநீர் தேடி காட்டுயானை, காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் குடியிருப்பு விளைநிலங்களுக்குள் நுழைந்து பொதுமக்களையும், விவசாயிகளையும் அவ்வப்போது அச்சுறுத்தி வருகின்றன.
கடந்த 3 மாதங்களுக்கு பின் பொதுமக்களால் பாகுபலி என அழைக்கப்பட்டு வரும் யானை காட்டில் இருந்து வெளியேறி நெல்லிமலை, சமயபுரம் பகுதியில் சுற்றி திரிகிறது. கடந்த சில நாட்களாக இரவில் மட்டுமே வந்த அந்த யானை ஊருக்குள் வந்து சென்றனர்.
நேற்று பகல் நேரத்திலேயே யானை கிராமத்துக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். யானை செல்லும் வழியில் உள்ள விளைநிலங்களை சேதப்படுத்துவதுடன் வீட்டில் இருக்கும் பொருட்களையும் அடித்து நொறுக்கி விட்டுச் செல்கிறது.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து உணவு, தண்ணீர் தேடி யானை பகலிலேயே நுழைவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். எனவே பகல் நேரத்தில் காட்டுயானைகள் குடியிருப்பு பகுதியில் நடமாடுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 50 வருடங்களுக்கு மேலாக சுங்கம் ஸ்ரீ சூலக்கல் மாரியம்மன் கோவில் உள்ளது.
- சுங்கம் பைபாஸ் ரோட்டின் பக்கவாட்டில் சர்வீஸ் சாலை அமைக்க உள்ளதாக தெரிகிறது.
கோவை:
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமை தாங்கி மனுக்களை பெற்றார். தியாகி சிவராம் நகர் பகுதி பொதுமக்கள் சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இதையடுத்து எங்கள் பகுதியில் 50 வருடங்களுக்கு மேலாக சுங்கம் ஸ்ரீ சூலக்கல் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த நிலையில் சுங்கம் பைபாஸ் ரோட்டின் பக்கவாட்டில் சர்வீஸ் சாலை அமைக்க உள்ளதாக தெரிகிறது.
இந்த சர்வீஸ் சாலை அமைக்கும் பொழுது கோவிலுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும் வகையில் சாலைப் பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.
ஸ்ரீ கிருஷ்ண சேனா மக்கள் இயக்கம் சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- தடாகம் சாலையில் கடந்த ஓராண்டு காலமாக சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளும், 20 தொழிற்சாலைகளும் இயங்கி வருகிறது. இதில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும், தொழிற்சாலை செல்லும் தொழிலாளர்களுக்கும் இந்த சாலையில் சென்று வருவது பெரிய சவாலாகவே உள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு அவ்வப்போது விபத்துகள் நடக்கிறது. மேலும் கோவில்மேடு பகுதியில் டாஸ்மாக் கடை 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. இது பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே இந்த சாலை பணியை பள்ளி விடுமுறை காலம் முடிந்து தொடங்குவதற்கு முன் உடனடியாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.
- கோவை மாவட்டத்தில் போதிய ஆக்சிஜன் இருப்பு உள்ளதாக கலெக்டர் கிராந்திகுமார்பாடி தெரிவித்துள்ளார்.
- அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு உடல் வெப்பநிலை சரிபார்ப்பு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கோவை:
கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளில் இன்றும், நாளையும் கொரோனா தடுப்பு குறித்து ஒத்திகை மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக இன்று கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வந்தால் அணுக தேவையான மாதிரி புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கை, சிகிச்சைக்கு பின் நோயாளிகளை கண்காணி ப்பில் வைக்கும் சாதாரண வார்டு உள்ளி ட்டவை தற்காலிகமாக அமைக்க ப்பட்டது.
திடீரென தொற்று பாதிக்கப்பட்டு ஒருவர் அனுமதியானால், அவரை அணுக வேண்டிய நடைமுறை, சிகிச்சை குறித்தும், வழிகாட்டுதல் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு உடல் வெப்பநிலை சரிபார்ப்பு, ஆக்ஸிஜன் அளவு அதன் பின்னர் கொரோனா பரிசோதனை மேற்கொ ள்ளப்பட்டது.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் நடந்த ஒத்திகையை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி பார்வையிட்டார். இதில், மாவட்ட சுகாதாரத்து றை துணை இயக்குநர் அருணா, ஆஸ்பத்திரி டீன் நிர்மலா, டாக்டர்கள், நர்சுகள் ஊழியர்கள் என பலர் பங்கேற்றனர்.
இந்த ஒத்திகை கோவை அரசு மருத்துவமனை மட்டுமின்றி, இ.எஸ்.ஐ மருத்துவமனை மற்றும் 89 அரசு ஆரம்ப சுகாதார நிலையம், 92 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 183 மருத்துவ மனைகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் கலெக்டர் கிராந்திகு மார்பாடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா தொற்று சிகிச்சை தொடர்பாக மருத்துவர்கள், செவிலி யர்கள், பணியாளர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது குறித்த ஒத்திகை பயிற்சி அரசு ஆஸ்பத்திரியில் நடந்தது. இதை பார்வையிட்டு நான் ஆய்வு செய்தேன்.
கோவை மாவட்டத்தில் தற்போது வரை 113 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவையில் தேவை யான மருத்துவ உள்கட்ட மைப்பு வசதிகள் தயார் நிலையில் உள்ளது. இங்கு பெரியளவில் கொரோனா பாதிப்புகள் இல்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். மருத்து வமனைக்கு செல்வோர் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.
2 டோஸ் தடுப்பூசி செலுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும். இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள் முககவசம் அணிந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.
பொதுமக்கள் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை சோப்பு போட்டு கழுவுவது போன்ற வழிகாட்டு முறைகளை கடைபிடிக்க வேண்டும்.
மாவட்டத்தில் கொரோனா அறிகுறிக ளுடன் வரும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தினமும் 300 முதல் 400 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகிறோம். ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதிகள் தேவைக்கு ஏற்ப உள்ளது.
இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி யில் சி.எஸ்.ஆர் நிதி மூலம் 16 ஆக்சிஜன் பிளான்ட்கள் அமைக்கப்பட்டுள்ளதால் ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு வாய்ப்பில்லை. கோவையை பொறுத்தவரை மருத்துவ கட்டமைப்புகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- குடிநீர் தொட்டியில் பாம்பு ஒன்று சுற்றி திரிந்தது.
- பிடிபட்ட பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை ரேயான்நகரை சேர்ந்தவர் ராஜ்குமார்(48). விவசாயி.சம்பவத்தன்று இவரது வீட்டிற்கு அருகே உள்ள குடிநீர் தொட்டியில் கொடிய விஷமுடைய பாம்பு ஒன்று சுற்றி திரிந்தது.இதுகுறித்து பழத்தோட்டம் பகுதியை சேர்ந்த பாம்பு பிடி வீரரான காஜாமைதீனுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து குடிநீர் தொட்டியில் இருந்த 5 அடி நீளமுள்ள அரிய வகை நாகத்தினை லாவகமாக பிடித்தார். பின்னர் அந்தப்பாம்பினை சிறுமுகை வனத்துறையினர் அறிவுறுத்தலின்படி வனப்பகுதியில் விட்டார். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில் பாம்பு பிடி வீரரால் பிடிபட்ட நாகம், அரியவகை பொறி நாகம். இது மிகவும் கொடிய விஷத்தன்மை கொண்டது என்றனர்.
- மணிகண்டன் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
- மணிகண்டனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
குனியமுத்தூர்:
கோவை குனியமுத்தூர் வீரமாத்தி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தனலட்சுமி (60). இவரது மகன் மணிகண்டன் (34) கூலி தொழிலாளி. இந்த நிலையில் இவர் வேலைக்கு சரியாக செல்லாமல் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்தார்.
இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் சம்பவத்தன்று மணிகண்டன் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது தனது தாயிடம் குடிப்பதற்கு பணம் கேட்டார். ஆனால் அவர் பணம் இல்லை என்று மறுத்து விட்டார்.
இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் அவரது தாயை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கினார். இதனை தடுக்க வந்த அவரது சகோதரியையும் அவர் தாக்கினார். பின்னர் இதுகுறித்து தனலட்சுமி குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






