என் மலர்tooltip icon

    சென்னை

    • மதுரை மற்றும் கடலூரில் காலணி தொழில் பூங்கா அமைக்கப்படும்.
    • சென்னை மாநகராட்சியில் ரூ.486 கோடி மதிப்பீட்டில் சாலைகள் தரம் உயர்த்தப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகள் சில:-

    * ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.

    * மதுரை மற்றும் கடலூரில் காலணி தொழில் பூங்கா அமைக்கப்படும்.

    * திருச்சியில் பொறியியல் தொழில் பூங்கா அமைக்கப்படும்.

    * ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் பார்க் அமைக்கப்படும். இங்கு அறிவுசார் தொழில்நுட்ப வழித்தடமும் அமைக்கப்படும்.

    * தமிழ்நாட்டில் செமி கண்டெக்டர் இயக்கம் செயல்படுத்தப்படும்.

    * கோவை மற்றும் பல்லடத்தில் செமி கண்டக்டர் தொழிற் பூங்கா அமைக்கப்படும்.

    * நகர்ப்புற சாலை பணிகளுக்கு ரூ.3,750கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    * சென்னை மாநகராட்சியில் ரூ.486 கோடி மதிப்பீட்டில் சாலைகள் தரம் உயர்த்தப்படும்.

    * கோவை சாலைகள் ரூ.200 கோடியிலும், மதுரை சாலைகள் ரூ.130 கோடியிலும் மேம்படுத்தப்படும்.

    * 10 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 2.5 லட்சம் கோடி கடன் உதவி வழங்கப்படும்.

    * கலைஞர் கைவினை திட்டத்தில் 19,000 கைவினைக் கலைஞர்கள் பயன்பெறும் வகையில் 74 கோடி ரூபாய் மானிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 

    • சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து குருநானக் கல்லூரி வரை 3 கி.மீ தூரத்திற்கு புதிய மேம்பாலம் அமைக்கப்படும்.
    • திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை தாம்பரத்தில் நிறுவப்படும்.

    சென்னை:

    2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகள் சில:-

    * சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து குருநானக் கல்லூரி வரை 3 கி.மீ தூரத்திற்கு புதிய மேம்பாலம் அமைக்கப்படும்.

    * அடையாறு நிதி சீரமைப்பு பணியில் சைதாப்பேட்டை முதல் திரு.வி.க பாலம் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.

    * திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை தாம்பரத்தில் நிறுவப்படும்.

    * சென்னை மாநகரப்பகுதியில் முதன்மை சுற்றுக்குழாய் திட்டம் செயல்படுத்தப்படும். இதன்மூலம் ஒரு பகுதியில் உபரியாக உள்ள தண்ணீரை, மற்றொரு பகுதிக்கு கொண்டு செல்லப்படும்.

    * புதிதாக 7 மழைநீர் உறிஞ்சு பல்லுயிர் பூங்கா அமைக்கப்படும்.

    * நாட்டிலேயே அதிக நகரமயமாக்கல் சவாலை தமிழ்நாடு சந்தித்துவருகிறது

    * இதற்கேற்ற குடிநீர், சாலை, போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்கின்றன. எனினும் புதிய நகரங்கள் அமைக்கும் தேவை உள்ளது.

    * சென்னைக்கு அருகே 2000 ஏக்கரில் புதிய நகரம் அமைக்கப்படும். நவீன வசதிகள் கொண்டதாக இந்நகரம் அமையும். சென்னையை புதிய நகருடன் இணைத்திட போக்குவரத்து, மெட்ரோ வழித்தட நீட்டிப்பு ஆகியவை மேற்கொள்ளப்படும்.

    * இந்த பட்ஜெட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.26,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

    • மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.13,807 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
    • சென்னை, கோவை, மதுரையில் நவீன வசதிகளுடன் மாணவிகள் விடுதிகள் அமைக்கப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * மகளிர் உரிமைத்தொகை, மகளிர் விடியல் பயணம் திட்டங்கள் தொடரும்.

    * மகளிர் உரிமை தொகை பெறாத தகுதி பெற்ற மற்ற மகளிருக்கும் மகளிர் உரிமைத்தொகை பெற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    * மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.13,807 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    * புதுமை பெண் திட்டத்திற்காக ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    * பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் மகளிர் விடியல் பயணத்திற்கு ரூ.3600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    * மேலும் 10 இடங்களில் ரூ.800 கோடியில் பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதி அமைக்கப்படும்.

    * சென்னை, கோவை, மதுரையில் நவீன வசதிகளுடன் மாணவிகள் விடுதிகள் அமைக்கப்படும்.

    * விடுதியில் தலா 1000 மாணவியர் தங்கும் வகையில் ரூ.775 கோடியில் விடுதிகள் அமைக்கப்படும்.

    * மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.37,000 கோடி வங்கிக் கடன் வழங்கப்படும்.

    * 3-ம் பாலினத்தவருக்கும் ரூ.1000 உயர்கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

    * சென்னைக்கு அருகே உலகத்தர வசதிகளுடன் புதிய நகரம் உருவாக்கப்படும்.

    * 2000 ஏக்கரில் சென்னை அருகில் உலகத்தர வசதிகளுடன் புதிய நகரம் உருவாக்கப்படும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    • 2000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் ரூ.160 கோடியில் தரம் உயர்த்தப்படும்.
    • 880 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.56 கோடியில் தரம் உயர்த்தப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று 2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் தமிழக பள்ளிக்கல்வித்துறைக்காக ரூ.46,767 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் மத்திய அரசு நிதி தராவிடினும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதால் மாநில அரசின் நிதி செலவிடப்படுகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

    மேலும் பட்ஜெட் உரையில் கூறியிருப்பதாவது:-

    * மாணவர்கள் வருகை, ஊட்டச்சத்து, கற்றல் திறன் மேம்பட்டுள்ளது.

    * நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவு செய்யப்படும். இதற்காக ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 

    * அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள் அமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    * 2676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் ரூ.65 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும்.

    * உயர்கல்வியில் மாணவர்கள் விரும்பி எடுக்கும் பாடங்களில் கூடுதலாக 15000 இடங்கள்.

    * 2000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் ரூ.160 கோடியில் தரம் உயர்த்தப்படும்.

    * 880 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.56 கோடியில் தரம் உயர்த்தப்படும்.

    * திறன்மிகு வகுப்பறைகள் நவீன ஆய்வகங்களை உருவாக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு.

    * பழங்குடியின மாணவர்கள் பயனடையும் வகையில் மலைப்பகுதிகளில் உள்ள 14 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.

    * அண்ணா பல்கலைக்கழகம் சிறந்த கல்வி நிறுவனமாக தரவரிசையில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

    * அண்ணா பல்கலைக்கழகத்தை மேம்படுத்த ரூ.500 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்படும். 

    • தமிழகத்தில் 8 இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்படும்.
    • நாவாய் அருங்காட்சியம் 21 கோடி ரூபாயில் அமைக்கப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * அகழாய்வு, தொல்லியல் அறிவியல் ஆராய்ச்சி மேற்கொள்ள ரூ.7 கோடி நிதி ஒதுக்கப்படும்.

    * தமிழகத்தில் 8 இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்படும்.

    * பூம்புகார் முதல் நாகை வரை ஆழ்கடல் அகழாய்வு நடத்தப்படும்.

    * நொய்யல் அருங்காட்சியகம் 22 கோடி ரூபாயில் அமைக்கப்படும்.

    * நாவாய் அருங்காட்சியம் 21 கோடி ரூபாயில் அமைக்கப்படும்.

    * வரும் நிதியாண்டில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 லட்சம் கான்கிரிட் வீடுகள் கட்டப்படும்.

    * முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்திற்கு ரூ.2,200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    * ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.29,465 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    * வரும் நிதியாண்டில் கான்கிரிட் வீடுகள் கட்ட ரூ.3500 கோடி செய்யப்படும்.

    * 25 ஆயிரம் வீடுகள் கட்ட ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    • 500 தமிழ் இலக்கிய நூல்களை மொழிபெயர்க்க ரூ.10 கோடி ஒதுக்கப்படும்.
    • இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து தான் தொடங்க வேண்டும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * திருக்குறள் மேலும் 45 மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.1.33 கோடி நிதி ஒதுக்கப்படும்.

    * 500 தமிழ் இலக்கிய நூல்களை மொழிபெயர்க்க ரூ.10 கோடி ஒதுக்கப்படும்.

    * ஓலை சுவடிகளை மின்பதிப்பாக்கம் செய்ய ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    * சிங்கப்பூர், துபாய், கோலாலம்பூரில் தமிழ் புத்தக கண்காட்சி நடத்திட ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    * ஐ.நா.வின் அனைத்து அலுவல் மொழிகளிலும் மொழிப்பெயர்ப்பு பெற்ற நூல் என்ற பெருமையை திருக்குறள் பெறும்.

    * தமிழின் தொன்மை தொடர்ச்சியை அறிய மதுரையில் உலகத் தமிழ் கண்காட்சி மையம் அமைக்கப்படும்.

    * இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து தான் தொடங்க வேண்டும்.

    * தமிழ் புத்தக திருவிழா இனி மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற மற்ற நகரங்களிலும் நடத்தப்படும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    • நேற்று தங்கம் கிராமுக்கு ரூ.55-ம், சவரனுக்கு ரூ.440-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 120-க்கும், ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்து 960-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
    • வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 11-ந்தேதி ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்தை தொட்டு புதிய உச்சத்தை பதிவு செய்த நிலையில், அதன் பின்னர் விலை மளமளவென சரிந்து, மீண்டும் அதே மாதம் 19-ந்தேதி ரூ.64 ஆயிரத்தை தாண்டியது.

    இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் இறுதியில் மீண்டும் விலை குறைந்து காணப்பட்டு, கடந்த 4-ந் தேதியில் இருந்து பெருமளவில் ஏறுமுகத்திலேயே தங்கம் விலை பயணித்து வருகிறது.

    அந்த வரிசையில் தங்கம் விலை நேற்றுமுன்தினம் கிராமுக்கு ரூ.45-ம், சவரனுக்கு ரூ.360-ம் உயர்ந்திருந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் அதன் விலை அதிகரித்து இருந்தது.

    நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 65-க்கும், ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்து 520-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.55-ம், சவரனுக்கு ரூ.440-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 120-க்கும், ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்து 960-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,230-க்கும் சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.65,840-க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 112 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ரூ.1,12,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    13-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,960

    12-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,520

    11-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,160

    10-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,400

    09-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,320

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    13-03-2025- ஒரு கிராம் ரூ.110

    12-03-2025- ஒரு கிராம் ரூ.109

    11-03-2025- ஒரு கிராம் ரூ.107

    10-03-2025- ஒரு கிராம் ரூ.108

    09-03-2025- ஒரு கிராம் ரூ.108

    • 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சியை கவனத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
    • அண்ணாவின் தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் தமிழக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * இந்திய திருநாட்டில் 2-வது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக உள்ள தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும் பட்ஜெட்.

    * In equality is a choice bus we can choose different path என்பதன் அடிப்படையில் வெற்றி நடைபோடும் தமிழகம்.

    * ஏழை, எளிய நகர்ப்புற குடியிருப்புக்கு தனிவாரியம், மகளிருக்கு வாக்குரிமை, சொத்துரிமை என தமிழகம் அனைத்திலும் சிறப்பானது.

    * 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சியை கவனத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

    * இருமொழி கொள்கையால் உலகம் எல்லாம் தமிழர்கள் தடம் பதித்து வருகின்றனர்.

    * இருமொழி கொள்கை தொடர்ந்து சமரசமின்றி முன்னெடுக்கப்படும்.

    * எதிர்கால வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் பட்ஜெட் அமையும்.

    * அண்ணாவின் தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் தமிழக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

    * திருக்குறளை உலகெங்கும் பரப்புவது நமது தலையாய கடமையாகும்.

    * தமிழகத்தில் அதிவேகமாக வளர்ந்து வரும் நகரங்கள் முறைப்படுத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    • 2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
    • மதுபான முறைகேடு குறித்து சட்டசபையில் விவாதிக்கக்கோரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சட்டசபையில் இன்று கூடிய முதல் நாள் கூட்டத்தில் 2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

    அப்போது, மதுபான முறைகேடு குறித்து சட்டசபையில் விவாதிக்கக்கோரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பட்ஜெட்டை புறக்கணித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    முன்னதாக, சட்டசபை தொடங்குவதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. 

    • தமிழக பட்ஜெட் நிகழ்வை மாநிலம் முழுவதும் 936 இடங்களில் நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • எல்லார்க்கும் எல்லாம் என்ற தத்துவத்திற்கு செயல் வடிவம் தரும் வகையில் தமிழ்நாடு பட்ஜெட் இருக்கும் என்று கூறினார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சட்டசபையில் இன்று கூடிய முதல் நாள் கூட்டத்தில் 2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

    சட்டமன்றத்தில் நிகழும் தமிழக பட்ஜெட் நிகழ்வை மாநிலம் முழுவதும் 936 இடங்களில் நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக, மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, எல்லார்க்கும் எல்லாம் என்ற தத்துவத்திற்கு செயல் வடிவம் தரும் வகையில் தமிழ்நாடு பட்ஜெட் இருக்கும் என்று கூறினார். 

    • இந்த பட்ஜெட்டில் மக்களை கவருவதற்கான பல்வேறு திட்டங்கள் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளதால், மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • தமிழக பட்ஜெட் நிகழ்வை மாநிலம் முழுவதும் 936 இடங்களில் நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. சட்டசபையில் இன்று கூடும் முதல் நாள் கூட்டத்தில் காலை 9.30 மணிக்கு 2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். 2025-26-ம் நிதியாண்டில் தமிழக அரசு உத்தேசமாக மேற்கொள்ள உள்ள செலவுகள், உத்தேசமான வருவாய் வரவுகள் போன்ற தகவல்களை அவர் அவைக்கு அளிப்பார்.

    சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த பட்ஜெட்டில் மக்களை கவருவதற்கான பல்வேறு திட்டங்கள் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளதால், மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதனை தொடர்ந்து சட்டமன்றத்தில் நிகழும் தமிழக பட்ஜெட் நிகழ்வை மாநிலம் முழுவதும் 936 இடங்களில் நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



    இந்த நிலையில், தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில் மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

    • முதல்​வர் பதவி​யில் தொடர தனக்கு தார்​மீக உரிமை இருக்​கிறதா என்​றும் அவர் தன்னைத் தானே கேட்​டுக்​கொள்ள வேண்டும்.
    • டாஸ்​மாக் நிறு​வனத்​தில் நடை​பெற்​றுள்ள ரூ.1000 கோடி ஊழல், தமிழகத்​தையே உலுக்​கி​யுள்​ளது.

    டாஸ்மாக் நிறுவனங்களில் நடைபெற்றுள்ள ரூ.1000 கோடி முறைகேட்டை கண்டித்து மார்ச் 17-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது.

    இதுகுறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

    தமிழகத்தில் மதுபான விநியோக நிறுவனங்களில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனையில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சித்து வருகிறார். தற்போது கணக்கில் வராத ரூ.1000 கோடி பணம் லஞ்சமாகப் பெறப்பட்டதாக, மதுபான ஆலைகளில் இருந்து தொடர்புடைய ஆவணங்களை அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக மக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடமை முதலமைச்சருக்கு உள்ளது.

    மேலும், முதல்வர் பதவியில் தொடர தனக்கு தார்மீக உரிமை இருக்கிறதா என்றும் அவர் தன்னைத் தானே கேட்டுக்கொள்ள வேண்டும்.

    தி.மு.க.வினர் நடத்தும் சாராய ஆலைகள் பணம் சம்பாதிப்பதற்காக நடத்தப்படும் டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றுள்ள ரூ.1000 கோடி ஊழல், தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

    தி.மு.க.வின் இந்த மெகா ஊழலை கண்டித்து மார்ச் 17-ந் தேதி டாஸ்மாக் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சென்னை தாளமுத்து நடராசன் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும்.

    எல்லோரும் 17-ந்தேதி போராட்டத்தில் பங்கு பெற வேண்டும். பெரிய புரட்சியை ஏற்படுத்தி தமிழகத்தை கோரப்பிடியில் இருந்து வெளியே கொண்டு வருவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×