என் மலர்
அரியலூர்
இந்த தகவலை அரியலூர் மாவட்ட ஆள்சேர்ப்பு பணி நிலைய தலைவரும், மண்டல இணைப்பதிவாளருமான செல்வகுமரன் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள பிச்சனூர் 6-வது வார்டு மாரியம்மன் கோவில் அருகே தெருவின் இருபுறமும் வடிகால் வாய்க்கால்கள் இல்லாததால் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. அந்த வழியாக நடந்து செல்ல முடியாமலும், வாகனங்களை இயக்க முடியாமலும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
தொடர்ந்து மழை பெய்தால் வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்து நாசம் ஆகும் சூழ்நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு இருபுறமும் வடிகால் வாய்க்கால்களை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை விரிவு படுத்தும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. ஆங்காங்கே சிறுபாலமும் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக தற்காலிக மாற்று பாதை அமைக்கப்பட்டுள்ளது. கட்சி பெருமாள் கிராமத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் வரை சர்வீஸ் சாலையில் கிராவல் மண், ஜல்லி கற்க்களை கொட்டி உயரப்படுத்தும் பணியும் நடக்கிறது. இந்த பணி ஆமைவேகத்தில் நடைபெற்று வருகிறது.
தற்போது மழைபெய்து வருவதால், இந்த சாலையில் மண் சூழ்ந்து சேறும், சகதியுமாக மாறி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். மேலும் கனரக வாகனங்களில் உதிரிபாகங்கள் கழன்று விழுந்து, வாகனங்கள் பழுது அடைந்துநிற்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கட்சி பெருமாள் கிராமத்தை கடந்து செல்வது பெரும் சவாலாக உள்ளது.
இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் கீழே விழுந்து காயம் ஏற்பட்டு செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே ஆமை வேகத்தில் நடை பெறும் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இலைக்கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் உலக சாமிதுரை. இவர் பா.ம.க. பெரம்பலூர் மாவட்ட செயலாளராக உள்ளார். அதே ஊரைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அரியலூர் மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.
இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று தீபாவளியை முன்னிட்டு பா.ம.க.வினர் சாமிதுரை வீடு அருகே ஒரு பகுதியிலும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சாமிநாதன் வீட்டிற்கு முன்பும் வெடி வெடித்து கொண்டு இருந்தனர். அப்பகுதியில் ரோந்து சென்ற செந்துறை போலீஸ் இன்ஸ் பெக்டர் ராஜ்குமார் பா.ம.க. தரப்பினரை கலைந்து போகுமாறு கூறினார்.
அதனைத் தொடர்ந்து பா.ம.க.வினர் இலைக் கடம்பூரில் இருந்து செந்துறை நோக்கி வந்து கொண்டு இருந்தனர். அப்போது சாமிநாதன் வீட்டிற்கு முன்பு அவர்கள் பட்டாசு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கண்டித்தனர். இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அவர்கள் உருட்டு கட்டைகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது அதனை தடுக்க முயன்ற தனிப்பிரிவு காவலர் துரைமுருகன் மண்டை உடைந்தது. அவரை போலீசார் உடனடியாக செந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், துணைப் போலீஸ் சூப்பிரண்டு மதன் உள்ளிட்ட போலீசார் திடீரென பெரம்பலூர் மாவட்ட பா.ம.க. செயலாளர் உலக சாமிதுரை, நமங்குணம் ஊராட்சி மன்ற தலைவர் காட்டுராஜா, பா.ம.க. ஒன்றிய செயலாளர் ராஜா ஆகியோரை கைது செய்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த பா.ம.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் திருமாவளவன் தலைமையில் பா.ம.க.வினர் நூற்றுக்கணக்கில் திரண்டு வந்து செந்துறை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என்றும் உடனடியாக பா.ம.க. மாவட்ட செயலாளரை விடுதலை செய்ய வேண்டும் என்று கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு பதட்டம் ஏற்பட்டதால் திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் பா.ம.க. மாவட்ட செயலாளர் உலக சாமிதுரை நேரடி மோதலில் ஈடுபட வில்லை என்று தெரியவந்தது. பின்னர் பேச்சுவார்த்தையை தொடர்ந்து கைது செய்யப்பட்ட உலக சாமிதுரை உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர். மேலும் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பா.ம.க.வினரும் அமைதியாக கலைந்து சென்றனர்.
இதற்கிடையே பா.ம.க. மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த 2 தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் செந்துறை போலீசார் வழக்குபதிவு செய்து 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பா.ம.க. மாவட்ட செயலாளர் திடீர் கைது காரணமாக செந்துறை பகுதியில் நள்ளிரவில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.






