என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மீன்சுருட்டி பகுதியில் மது விற்ற பெண்கள் உள்பட 9 பேர் கைது

    மீன்சுருட்டி பகுதியில் மது விற்ற பெண்கள் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வளையாபதி, கோவிந்தராஜ், சுபா, ரமேஷ், ராஜதுரை மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மீன்சுருட்டி அருகே உள்ள இளையபெருமாள் நல்லூர் காலனி தெருவை சேர்ந்த சங்கர் (வயது 50) என்பவர், வீட்டின் பின்புறம் மது விற்றது தெரியவந்தது. இதையெடுத்து சங்கரை, போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 3 குவார்ட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் மது விற்ற காடுவெட்டி மெயின் ரோடு தெருவை சேர்ந்த தமிழ்செல்வனிடம்(61) 3 குவார்ட்டர் மதுபாட்டில்கள், தாமரைக்கனியிடம்(31) இருந்து 4 குவாட்டர் பாட்டில்கள், மீன்சுருட்டி செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குணசேகரன் (48) என்பவரிடம் இருந்து 4 குவார்ட்டர் பாட்டில்கள், இறவாங்குடி கீழத்தெருவை சேர்ந்த மாரிமுத்து (69) என்பவரிடம் இருந்து 3 குவார்ட்டர் பாட்டில்கள், மெய்காவல்புத்தூரை சேர்ந்த கோவிந்தராஜ் (70) என்பவரிடம் இருந்து 3 குவார்ட்டர் பாட்டில்கள், குருவாலப்பர்கோவில் பள்ளர் தெருவை சேர்ந்த சாந்தி (65) என்பவரிடம் இருந்து 3 குவார்ட்டர் பாட்டில்கள், வெத்தியார்வெட்டு இந்திரா காலனி தெருவை சேர்ந்த தனகோபால்(41) என்பவரிடம் இருந்து 4 குவார்ட்டர் பாட்டில்கள் மற்றும் வீரசோழபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கமலி (50) என்பவரிடம் இருந்து 4 குவார்ட்டர் பாட்டில்கள் என மொத்தம் 31 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×