search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Street Dogs"

    • வேலூர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
    • நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ரோஜா. தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    இன்று காலை இவரது 2 வயது மகன் ஹர்ஷன் வீட்டின் முன்பு விளை யாடிக் கொண்டிருந்தான். ரோஜா வீட்டில் உள்ள அறையில் அமர்ந்து அவரது கைக்குழந்தையை கவனித்துக் கொண்டி ருந்தார்.

    தெருவில் ஓடி வந்த 4 தெரு நாய்கள் சிறுவன் ஹர்ஷன் மீது பாய்ந்தன. சிறுவனை கடித்து குதறின. மேலும் 4 நாய்களும் சேர்ந்து சிறுவனை இழுத்துச் சென்றன.

    இதனால் வலி தாங்க முடியாமல் சிறுவன் அழுது துடித்தான். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் நாய்களிடமிருந்து சிறுவனை மீட்டனர்.

    உடனடியாக சிறுவனை மீட்டு பேரணாம்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அங்கிருந்து மேல்சி கிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி சேர்க்கப்பட்டான். தற்போது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். வீட்டில் முன்பு விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அந்த பகுதியில் கட்டுக்கடங்காமல் சுற்றி தெரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தினர்
    • பழைய ஓய்வு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும்்

    போளூர்:

    தமிழக ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நேரத்தில் நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அதன் தொடர்ச்சியாக போளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தினர் பேராட்டத்தில் சார்பில் ஈடுபட்டனர்.

    பழைய ஓய்வு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும் காலி பணியிடங்களை நிரப்ப கொரோனா காலத்தில் இருந்து சரண்டர் விடுப்பை நிறுத்தி வைத்துள்ளனர். அதனை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

    கம்ப்யூட்டர் ஆபரேட்டர்க ளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    • நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
    • இனப்பெருக்கம் செய்யாத அளவிற்கு கருத்தடை செய்ய வேண்டும்

    வந்தவாசி:

    வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட காந்தி சாலை,பஜார் சாலை,அச்சரப்பாக்கம் சாலை, சன்னதி தெரு, தெற்கு போலீஸ் நிலையம், தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூட்டம் கூட்டமாக 30-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றி திரிந்து வருகிறது.

    இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள், மாணவ, மாணவிகள் நடந்து செல்லும் போது அவர்களை துரத்துகின்றது. மேலும் இரவு நேரத்தில் பணிகள் முடிந்து வீட்டுக்கு திரும்பும் அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்கள் நாய்களை அச்சத்துடனே செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

    எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கூட்டம் கூட்டமாக சுற்றி திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும். மேலும் நாய்கள் இனப்பெருக்கம் செய்யாத அளவிற்கு கருத்தடை செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • தெரு நாய்கள் சாலையின் குறுக்கே திடீரென வருவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றன. மேலும் தெருக்களில் விளையாடும் குழந்தைகளையும் விரட்டுகின்றன.
    • சாலைகளில் சுற்றிதிரியும் நாய்களை பிடித்து கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகராட்சி யாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இருந்தபோதும் சாலையில் கால்நடைகள், நாய்கள் சுற்றித்திரிவதை கட்டு ப்படுத்த முடியவில்லை. குறிப்பாக கூட்டம், கூட்டமாக சுற்றித்திரியும் தெருநாய்கள் பொது மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

    சாலையின் குறுக்கே திடீரென வருவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றன. மேலும் தெருக்களில் விளையாடும் குழந்தைகளையும் விரட்டுகின்றன. குறிப்பாக அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் சாலையில் நடந்து செல்பவர்களை விரட்டி கடிக்கின்றன.

    இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். தெருநாய்களை பிடித்து மாநகராட்சி ஊழியர்கள் கருத்தடை செய்தனர். இதனால் சற்று குறைந்திருந்த நாய்கள் தொல்லை தற்போது மீண்டும் அதிகரி த்துள்ளது. நாகல்நகர், பஸ் நிலையம், ஆர்.எம்.காலனி, ரெயில் நிலையம், பாரதிபுரம், சந்தைபேட்டை, பழனிசாலை உள்பட நகரின் முக்கிய வீதிகளில் சுற்றி திரிகின்றன.

    இதனால்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். சில ெதருநாய்கள் காயங்களுடன் சுற்றி திரிவதால் பொது மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு ள்ளது. எனவே சாலைகளில் சுற்றிதிரியும் நாய்களை பிடித்து கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என வார்டு கவுன்சிலர் முதல் பொதுமக்கள் வரை புகார் அளித்து வந்தனர்.
    • கடந்த 3 தினங்களில் சுமார் 60க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்து சென்றுள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக தெரு நாய்கள் இருந்து வருகிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தெரு நாய்களால் விரட்டி விரட்டி கடிக்கும் சம்பவம் திருப்பூர் மாநகர் பகுதியில் அடிக்கடி அரங்கேறி வருகிறது. இதனால் திருப்பூர் மாவட்ட மருத்துவமனையில் தினமும் ஏராளமானோர் நாய் கடிக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    இந்தநிலையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என வார்டு கவுன்சிலர் முதல் பொதுமக்கள் வரை மாநகராட்சிக்கு புகார் அளித்து வந்தனர். பொதுமக்களின் இந்த புகாரை அடுத்து திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உத்தரவின் பேரில் தனியார் நிறுவனம் மூலம் தெரு நாய்களை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    திருப்பூர் மாநகராட்சி 1-வது மண்டலத்துக்கு உட்பட்ட 13, 24, 22 வார்டுகளில் உள்ள பிச்சம்பாளையம் பிரிவு சிங்காரவேலன் நகர் , அங்கேரிபாளையம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 தினங்களாக மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையில் ஊழியர்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவன ஊழியர்கள் தெரு நாய்களை பிடித்து வருகின்றனர்.

    அதன்படி கடந்த 3 தினங்களில் சுமார் 60க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்து சென்றுள்ளனர். இது பொதுமக்கள் இடையே சற்று ஆறுதல் பெற்றுள்ளது. தொடர்ந்து மாநகர் முழுவதும் இது போன்ற தெருநாய்களை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாக அலைகின்றன.
    • இரவு நேரங்களில் வேலைக்கு சென்று திரும்பி வருபவர்கள் நாய்க் கும்பலிடம் சிக்கி கடிபட நேர்கிறது.

    திருப்பூர்

    திருப்பூர்- நொய்யல் ஆற்றங்கரை பாலம் பகுதி முதல் சக்தி தியேட்டர், யூனியன் மில் ரோடு, வாலிப்பாளையம், ஊத்துக்குளி ரோடு, வாலிப்பாளையம் முருகன், சாய்பாபா கோவில் பகுதிகளில் பகல் நேரங்களில் கும்பலாக நின்று நாய்கள் சண்டையிட்டு கொள்கின்றன. சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாக அலைகின்றன. இதனால் இரு சக்கர வாகனம் ஓட்டிச் செல்பவர்கள் விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:- தனியாக நடந்து செல்பவர்களை விரட்டி வந்து கடித்து விடுகிறது.

    இரவு நேரங்களில் வேலைக்கு சென்று திரும்பி வருபவர்கள் நாய்க் கும்பலிடம் சிக்கி கடிபட நேர்கிறது. கும்பலாக ஒன்று சேர்ந்து கடிக்க வருவதால் என்ன செய்வது யாரை உதவிக்கு அழைப்பது என்று தெரியாமல் அச்சம் அடைகின்றனர். இது வரை கடந்த 2 மாதங்களில் 10க்கும் மேற்பட்டவர்களை கடித்து உள்ளது. இதில் வேதனை என்னவென்றால் காலை நேரங்களில் நடைப்பயிற்சிக்கு செல்பவர்கள் நாய்களுக்கு பயந்து பொழுது விடிந்த பிறகு தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அடிக்கடி வயதானவர்கள் தான் நாய்கடிக்கு ஆளாகிறார்கள். ஆகவே இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தெரு நாய்கள் திடீரென மர்மமான முறையில் இறந்து போய் உள்ளன.
    • ஆட்டு இறைச்சி குடலில் விஷம் வைத்து அப்பகுதி முழுவதும் தூவி நாய்களைக் கொன்றுள்ளார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி லட்சுமி நகர், வ.உ.சி நகர், கரைப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக அங்கு சுற்றித் தெரியும் தெரு நாய்கள், திடீரென மர்மமான முறையில் இறந்து போய் உள்ளன. மர்மமான முறையில் தெரு நாய்கள் இறந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், அக்கம் - பக்கம் வீதிகளில் விசாரித்த போது அந்தப் பகுதிகளிலும் இதே போல சுமார் 30க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் மர்மமான முறையில் இறந்தது தெரிய வந்தது.

    இந்த நிலையில் நாய்களுக்கு விஷம் வைத்து கொன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோபிநாத் என்பவர் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசாரின் தீவிர விசாரணையில், லட்சுமி நகரில் உணவகம் நடத்திவரும் பாலு என்பவர் நாய்களுக்கு ஆட்டு இறைச்சி குடலில் விஷம் வைத்து அப்பகுதி முழுவதும் தூவி நாய்களைக் கொன்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • சென்னையில் தெரு நாய்களை பிடித்து கொல்வது தடை செய்யப்பட்டதால் யாருமே நாய்களை பிடித்துச் செல்வதில்லை.

    சென்னை:

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் பழமை வாய்ந்த முக்கிய ரெயில் நிலையங்களில் ஒன்றாகும். இங்கு இருந்து வடமாநிலங்கள் உள்ளிட்ட பல முக்கிய மாநகரங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு தினமும் பல லட்சம் பயணிகள் வந்து செல்கிறார்கள். சென்ட்ரல் ரெயில் நிலையம் இரவு , பகல் எப்போதும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் சென்ட்ரல் ரெயில் நிலைய பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அச்சப்படுகிறார்கள்.

    தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். சென்னையில் தெரு நாய்களை பிடித்து கொல்வது தடை செய்யப்பட்டதால் யாருமே நாய்களை பிடித்துச் செல்வதில்லை. இதன் காரணமாக நாய்கள் பெருகி விட்டன. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து பயணிகள் பல்வேறு புகார்கள் தெரிவித்து வருகின்றனர். ரெயில் நிலையத்துக்கு வரும் பொதுமக்களுக்கு உடனடியாக நாய் தொல்லையில் இருந்து விடுபட ரெயில்வே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து நாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 6 மாத குழந்தையான ஜெயாவுக்கு தடுப்பூசி மற்றும் பிற சோதனைகளை முடிப்பதற்கான செயல்முறைகள் நடந்து வருகிறது.
    • மோதி என்ற பெயரிடப்பட்ட 7 மாத நாய்க்கும் பாஸ்போர்ட் தயாராகி விட்டதாகவும், இன்னும் 3 மாதங்களில் அந்த நாய் இத்தாலிக்கு பறந்து செல்லும் என தெரிவித்துள்ளனர்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு இத்தாலி மற்றும் நெதர்லாந்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் கடந்த டிசம்பர் மாதம் சுற்றுலா வந்தனர்.

    அப்போது அங்குள்ள அஸ்ஸி காட் என்ற தெரு ஒன்றில் நடந்து சென்ற போது தெரு நாய்கள் சில ஒன்று சேர்ந்து பெண் நாய் ஒன்றை விரட்டி துன்புறுத்தியதை இத்தாலியை சேர்ந்த சுற்றுலா பயணி வேரா லாசரெட்டி பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தெரு நாய்களை விரட்டி அதன் பிடியில் சிக்கிய பெண் நாயை மீட்டார்.

    இதே போல வாரணாசியில் உள்ள முன்சிகாட் பகுதியில் நெதர்லாந்தை சேர்ந்த மெரல் பொன்டெல்பால் என்ற பயணி சென்ற போது அங்கும் ஒரு பெண் நாயை தெரு நாய்கள் கடித்து தாக்கியதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் தெரு நாய்களை விரட்டி, பெண் நாயை மீட்டுள்ளார். பின்னர் வாரணாசி தளமாக கொண்டு இயங்கும் அனிமோடெல் கேர் டிரஸ்ட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நாடியுள்ளனர். இந்த நிறுவனம் நோய் வாய்ப்பட்ட, காயமடைந்த மற்றும் உடல் ஊனமுற்ற தெரு நாய்களை மீட்பு மற்றும் மறுவாழ்வுக்காக இயங்கும் நிறுவனமாகும். இந்நிறுவனத்தினர் ஐரோப்பிய சுற்றுலா பயணிகளால் மீட்கப்பட்ட 2 பெண் நாய்களுக்கும் மோதி, ஜெயா என பெயரிட்டு வளர்த்தனர். மேலும் அந்த 2 நாய்களுக்கும் தேவையான சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டது.

    இதன் பயனாக பூரண குணமடைந்த மோடி என பெயரிடப்பட்ட நாயை இத்தாலியை சேர்ந்த வேரா லாசரெட்டி தத்தெடுத்தார். இதேபோல ஜெயா என பெயரிடப்பட்ட நாயை நெதர்லாந்தை சேர்ந்த மெரல் பொன்டேல்பால் தத்தெடுத்தார்.

    இதைத்தொடர்ந்து இந்த 2 நாய்களையும் அவற்றை தத்தெடுத்தவர்களுடன் அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை அனிமோடெல் கேர் டிரஸ்ட் மேற்கொண்டது. அதன்படி 2 நாய்களுக்கும் பாஸ்போர்ட் மற்றும் தடுப்பூசி சான்றிதழ் ஆகியவை பெறப்பட்டது. அவற்றை இத்தாலி மற்றும் போர்ச்சுகல்லுக்கு அனுப்பி உள்ளனர்.

    6 மாத குழந்தையான ஜெயாவுக்கு தடுப்பூசி மற்றும் பிற சோதனைகளை முடிப்பதற்கான செயல்முறைகள் நடந்து வருகிறது.

    இதேபோல மோதி என்ற பெயரிடப்பட்ட 7 மாத நாய்க்கும் பாஸ்போர்ட் தயாராகி விட்டதாகவும், இன்னும் 3 மாதங்களில் அந்த நாய் இத்தாலிக்கு பறந்து செல்ல உள்ளதாகவும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி சுண்டிலிப் சென்குப்தா தெரிவித்துள்ளார்.

    • நாய்கள் தெருவில் சுற்றி திரியும் பகுதியை சிறுவர் முதல் முதியோர் வரை ஒரு வகையான அச்சத்துடனே கடக்க வேண்டி உள்ளது.
    • நாய்கள் தெருவில் சுற்றி திரியும் பகுதியை சிறுவர் முதல் முதியோர் வரை ஒரு வகையான அச்சத்துடனே கடக்க வேண்டி உள்ளது.

     வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் ரோட்டில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் அவ்வப்போது சிறு சிறு விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. நாய்கள் தெருவில் சுற்றி திரியும் பகுதியை சிறுவர் முதல் முதியோர் வரை ஒரு வகையான அச்சத்துடனே கடக்க வேண்டி உள்ளது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாச்சிபாளையம், சொரியங்கிணத்து பாளையம், காடையூரான் வலசு, சேனாபதிபாளையம் ஆகிய ஊர்களில் தெரு நாய்கள் 100க்கும் மேற்பட்ட பட்டியில் அடைத்து வைத்திருந்த ஆடுகளை கடித்து கொன்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டனர்.தற்போது தெரு நாய் தொல்லை அதிகமாக இருப்பதால் இது குறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாறு பொதுமக்கள் மற்றும் தன்னார்வு அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சமீப காலமாக பணியாளர் பற்றாக்குறை காரணமாக நாய்கள் பிடிக்கப்படாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
    • சாலைகளில் நடந்து செல்வோரை துரத்தி சென்று நாய்கள் அச்சம் ஏற்படுத்தி வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட 55 வார்டுகளில் சுற்றி திரியும் நாய்களை கடந்த காலங்களில் பிடித்து சென்று கருத்தடை சிகிச்சை கொடுத்து மாற்று இடங் களில் விட்டுவிடும் பணி வழக்கமாக நடந்து வந்தது.

    ஆனால் சமீப காலமாக பணியாளர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரண ங்களுக்காக சாலைகளில் சுற்றி திரியும் நாய்கள் பிடிக்கப்படாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதன் காரணமாக மாநகரின் ஒவ்வொரு பகுதிகளிலும் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து அவற்றின் தொந்தரவும் கூடி வருகிறது.

    இந்த நிலையில் நெல்லை மாநகராட்சியின் மையப் பகுதியில் அமைந்துள்ள சந்திப்பு சிந்துபூந்துறை பகுதியில் நாள்தோறும் சாலைகளில் சுற்றி தெரியும் நாய்களால் பொதுமக்கள் பலர் அவதிக்குள்ளா கின்றனர். சாலைகளில் நடந்து செல்வோர், இருசக்கர வாகனத்தில் செல்வோரை துரத்தி சென்று நாய்கள் அச்சம் ஏற்படுத்தி வருகிறது.

    மேலும் சாலைகளில் செல்வோரை வெறிநாய்கள் கடிக்கும் அவல நிலையும் நாள்தோறும் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. சமீபத்தில் நெல்லை வண்ணார்பேட்டை பகுதியை சேர்ந்த ஒருவர் நெல்லை சிந்துபூந்துறை பகுதியில் உள்ள உணவ கத்தில் உணவு வாங்கிக் கொண்டு வெளியே வந்த போது நாய்கள் அவரை துரத்திச் சென்று காலில் கடித்துவிட்டது.

    இதனால் காயமடைந்த அவரை மீட்டு அப்பகுதி மக்களால் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார். இதே போல் பலரையும் சாலை களில் சுற்றித் திரியும் வெறி நாய்கள் கடித்து வருவ தாகவும், எனவே நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாநகராட்சிக்குட்பட்ட 60வார்டுகளிலும் சுழற்சிமுறைகளில் மாநகராட்சி பணியாளர்கள் தெரு நாய்களை பிடித்துவருகின்றனர்.
    • தெரு நாய்கள் துரத்தி துரத்தி கடிப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகரபகுதிகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். மாநகராட்சிபகுதியில் தெரு நாய்கள் தொல்லை மிகவும் அதிகமாக இருந்து வருகிறது. தனியாக நடந்து செல்பவர்களையும் பள்ளி குழந்தைகளையும் தெரு நாய்கள் துரத்தி துரத்தி கடிப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இதனை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்கள் என பலதரப்பினரும் மாநகராட்சிக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து மாநகராட்சி சார்பில்தெரு நாய்களை பிடிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மாநகராட்சிக்குட்பட்ட 60வார்டுகளிலும் சுழற்சிமுறைகளில் மாநகராட்சி பணியாளர்கள்தெரு நாய்களை பிடித்துவருகின்றனர்.அதன்படி திருப்பூர் தாராபுரம் ரோடு பகுதியில் சுற்றித்திரிந்த 10க்கும் மேற்பட்ட தெரு நாய்களை பிடித்து அகற்றினர்.

    ×