search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோவை மாநகராட்சியில் தெருநாய்களை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை
    X

    கோவை மாநகராட்சியில் தெருநாய்களை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை

    • தெருநாய்களை கட்டுப்படுத்த அனைத்து மண்டலங்களிலும் கருத்தடை மையம் அமைக்க முடிவு
    • தொண்டு நிறுவனத்தை அனுப்பி அந்த நாய்களை பிடித்து கருத்தடை செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

    கோவை

    கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்கள் பிடிப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் தொண்டு நிறுவனம் மூலம் எங்கெல்லாம் நாய்கள் தொந்தரவு அதிகமாக உள்ளது என்பதை கண்டறிந்து, தொண்டு நிறுவனத்தை அனுப்பி அந்த நாய்களை பிடித்து கருத்தடை செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த தொண்டு நிறுவனம் மூலம் தெருநாய்கள் பிடிக்கப்படும் பகுதிகள் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி நேற்று கரும்புக்கடை, ஆசாத்நகர், சாரமேடு, திப்பு நகர், மதினாநகர், குழந்தை கவுண்டர் வீதி, கோவில்மேடு, வேலாண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் பிடிக்கப்பட்டன.

    நாளை அல்அமீன் காலனி, ரோஜா கார்டன், புல்லுக்காடு, ஹவுசிங் யூனிட் மெயின்ரோடு, பொன்விழா நகர், மணியகாரம் பாளையம், கணபதி உள்ளிட்ட பகுதிகளில் பிடிக்கப்படும்.

    ஆகஸ்டு 1-ந் தேதி அன்புநகர், அற்புதம் நகர், சவுகார் நகர், சேரன் நகர் பகுதிகளிலும் 2-ந் தேதி அண்ணா காலனி, கரும்புக்கடை, பள்ளிவாசல் வீதியிலும், 3-ந் தேதி நஞ்சுண்டாபுரம், பெருமாள் கோவில் வீதி, மாரியம்மன் கோவில், பாடசாலை வீதி, ஸ்ரீபதி நகர், நேதாஜி நகர் கார்டன் பகுதிகளிலும் பிடிக்கப்படும்.

    4-ந் தேதி சாரமேடு, காந்திநகர், கீரீன் பார்க், நாணியா நகர், ஜே.ஜே. கார்டன், சபா கார்டன், மெட்ரோ சிட்டி, போயஸ் கார்டன் உள்ளிட்ட பகுதிகளிலும் நாய்கள் பிடிக்கப்பட உள்ளன.

    மேற்கு மண்டலத்தில் சீரநாயக்கன்பாளையம் மற்றும் கிழக்கு மண்டலத்தில் ஒண்டிப்புதூர் ஆகிய பகுதிகளில் தெருநாய்கள் கருத்தடை மையமானது செயல்பட்டு வருகிறது. அதேபோல் மற்ற 3 மண்டலத்திலும் தெருநாய்கள் கருத்தடை மையமானது புதிதாக ஏற்படுத்திட மாநகராட்சி நிர்வாக விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×