என் மலர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் அபிநயா (வயது 20) இவர் நேற்று முன்தினம் வீட்டில் தூங்கினார். பின்னர் காலையில் பார்த்த போது அவரை காணவில்லை.
இதை தொடர்ந்து முருகேசன் தனது மகளை அவரது தோழிகள் மற்றும் உறவினர் வீட்டில் தேடிப்பார்த்தார். எங்கு தேடியும் அபிநயா கிடைக்கவில்லை. இதுகுறித்து முருகேசன் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மாயமான பெண்ணை தேடி வருகிறார்கள்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 1½ ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் முழுமையாக திறக்கப்படாமல் இருந்தது. முதல் அலையின் தாக்கம் குறைந்தபோது ஒரு சில நாட்கள் மட்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன.
ஆங்காங்கே தொற்று பரவல் அபாயத்தால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன. இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமாக இருந்ததால் நடப்பு கல்வி ஆண்டும் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லாத நிலை இருந்தது. இருந்தபோதிலும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் தொடர்ந்து கல்வி போதிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வரதராஜன்பேட்டை தென்னூர் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் உடனடியாக ஜெயங்கொண்டம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் உள்ள மற்றொரு தனியார் பள்ளியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மாணவிகளின் பெற்றோர்கள், பாடம் கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள், சக மாணவிகள் ஆகியோருக்கும் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உதயநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். பாஸ்கர் மணல் மாட்டு வண்டி ஓட்டி அன்றாடம் வருமானம் பெற்று குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் மாட்டுவண்டி மணல் குவாரிகள் மூடப்பட்டதால் தொழில் இல்லாமல் பாஸ்கர் மிகவும் வறுமையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சட்டவிரோதமாக மணல் எடுத்த வழக்கில் அவரது மாட்டுவண்டியை தா.பழூர் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டியை மீட்க முடியாதது குறித்து பாஸ்கர் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் புலம்பிக் கொண்டு சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இளைஞர்கள் அதிக அளவில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்த வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லாவுக்கு தகவல்கள் வந்தன.
இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலை கதிரவன் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையிலான போலீசார் ஜெயங்கொண்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பஸ் நிலையம் அருகே 2 பேர் ஏரிக்கரையில் கஞ்சா புகைத்து கொண்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கு கஞ்சாவை புகைத்துக் கொண்டிருந்த 2 பேரையும் போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர்கள் ஜெயங்கொண்டம் கீழத் தெருவை சேர்ந்த இளங்கோவன் மகன் வல்லரசு (22) மற்றும் கீழக்குடியிருப்பு அடிப்பள்ளத் தெருவைச் சேர்ந்த இதயத்துல்லா மகன் உவைஸ் அகமத் (18) என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து சுமார் 20 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் அரசு பாங்க் அருகில் டீக்கடை நடத்தி வருபவர் கண்ணன் (வயது 45). இவரது மனைவி சிவகாமி சுந்தரி. இவர் ஜெயங்கொண்டத்தில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவரது சொந்த வீடு ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோடாலிகருப்பூர் கிராமத்தில் உள்ளது.
இந்நிலையில் கண்ணன் உட்கோட்டை கிராமத்தில் அவருடைய உறவினர் வீட்டிற்கு நிகழ்ச்சிக்கு குடும்பதோடு போனதாகவும் அங்கே இரவு தங்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை கோடாலிகருப்பூர் கிராமத்தில் உள்ள கண்ணன் வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதாக தகவல் கிடைத்தது. இது குறித்து கண்ணன் மீன்சுருட்டி போலீசில் புகார் செய்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். விசாரணையில் வீட்டு பூட்டை உடைத்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.70 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இது குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.






