என் மலர்tooltip icon

    மேற்கு வங்காளம்

    • கோர்ட்டு உத்தரவையும் மீறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • டாக்டர்கள் தேனீர் அருந்த மறுத்து கிளம்பிச் சென்றனர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் ஆர்.ஜி.கர் மருத்துவமனை பெண் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதற்கு நீதி கேட்டு பயிற்சி டாக்டர்கள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையும் மீறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பயிற்சி டாக்டர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு மேற்கு வங்காள அரசு அழைப்பு விடுத்தது. ஏற்கனவே தலைமைச் செயலகத்தில் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

    ஆனால், நேரலை ஒளிபரப்புக்கு அரசு மறுத்ததால் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளவில்லை.

    இதற்கிடையே முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போராட்டம் நடத்தும் இடத்துக்கே நேரில் சென்று மம்தாவின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.

    இதையடுத்து இரவில் போராடி வரும் டாக்டர்கள், மம்தா பானர்ஜியை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால், சந்திப்பை நேரலையாக பதிவு செய்வதை ஏற்காததால் அவர்கள் மம்தா வீட்டுக்கு வெளியே மழையில் நனைந்தபடி காத்திருந்தனர்.

    தனது வீட்டு வாசல் வரை வந்த டாக்டர்கள் பிரதிநிதிகள் உள்ளே வராமல் அங்கேயே மழையில் நனைந்தபடி நின்றதைப் பார்த்த மம்தா, தலைமைச் செயலர், காவல்துறை இயக்குநர் (டிஜிபி) மற்றும் உள்துறைச் செயலர் என அனைவரும் உங்களுக்காக காத்திருக்கிறோம்.

    நீங்கள் மழையில் நனையாமல் இருக்க குடைகளை வழங்கி உள்ளோம். நீங்கள் என்னுடன் பேச விரும்பவில்லை என்றால் தயவு செய்து உள்ளே வாருங்கள். தேநீர் அருந்துவதற்கு ஏற்பாடு செய்கிறேன்.

    நமது சந்திப்பை நிச்சயம் வீடியோ பதிவு செய்ய நான் உறுதியளிக்கிறேன், பாதுகாப்பு காரணங்ளால் நேரலை செய்ய முடியாது என்றார்.

    வீடியோ பதிவு செய்வதை ஏற்காததால் பயிற்சி டாக்டர்கள் தேனீர் அருந்த மறுத்து அங்கிருந்து கிளம்பி சென்றனர். இதைத்தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட தொடர்ந்து முட்டுக்கட்டை நிலவுகிறது.

    • கொல்கத்தா விமான நிலையத்தில் ஒரு சாதாரண தேநீர் ரூ.340க்கு விற்கப்படுகிறது.
    • சென்னை விமான நிலையத்தில் தேநீர் 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    கொல்கத்தா விமான நிலையத்தில் விற்கப்படும் தேநீரின் விலை குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவு பேசுபொருளானது.

    அவரது பதிவில், "கொல்கத்தா விமான நிலையத்தில் உள்ள The Coffee Bean and Tea Leaf உணவகத்தில் பால் சேர்க்கப்படாத ஒரு சாதாரண தேநீர் ரூ.340க்கு விற்கப்படுகிறது.

    சில வருடங்களுக்கு பிறகு சென்னை விமான நிலையத்தில் ஒரு சாதாரண தேநீர் 80 ரூபாய்க்கு விற்கப்பட்டதை குறித்து நான் பதிவிட்டுள்ளேன். தமிழ்நாட்டை விட மேற்குவங்கத்தில் பணவீக்கம் அதிகமாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

    ப. சிதம்பரத்தின் பதிவிற்கு பதிலளித்த கொல்கத்தா விமான நிலையம், "நீங்கள் குறிப்பிட்டுள்ள விலை வித்தியாசத்தை குறித்து விசாரித்து விரைவில் உங்களுக்கு தெரிவிக்கிறோம். இதை எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்ததற்கு நன்றி" என்று தெரிவித்துள்ளது.

    • நேற்று இரவு 30 மருத்துவர்கள் கொண்ட குழு காலிகாட்டில்[Kalighat] உள்ள மம்தா பானர்ஜியின் வீட்டுக்கு வந்தது.
    • அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவது நடைமுறையில் சாத்தியமில்லை என்று மம்தா கூறியுள்ளார்.

    மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஜுனியர் மருத்துவர்கள் அம்மாநில சுகாதார அமைச்சகம் முன் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராடும் மருத்துவர்களின் பிரதிநிதிகளைச் சந்திக்க மம்தா அழைப்பு விடுத்திருந்த நிலையில் சந்திப்பை நேரலை செய்தால்தான் வருவோம் என்று தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து நேற்றைய தினம் போராட்ட களத்துக்கு சென்ற மம்தா அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகக் கூறினார்.

    இதன்பின் நேற்று இரவு 30 மருத்துவர்கள் கொண்ட குழு காலிகாட்டில்[Kalighat] உள்ள மம்தா பானர்ஜியின் வீட்டுக்கு வந்தது. வீட்டுக்குள் வரமால் மழையில் நனைந்தபடி வெளியிலேயே நின்ற அவர்களை மம்தா உள்ளே அழைத்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையின்போது மருத்துவர்கள் நேரலையை மீண்டும் வலியுறுத்தினர்.

    ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு உள்ள சூழலில் நேரலைக்கு சாத்தியமில்லை. உச்சநீதிமன்ற அனுமதி பெற்று இந்த சந்திப்பை வீடியோ பதிவு செய்து, அதன் நகல் உங்களுக்கு தரப்படும் என்று மம்தா விளக்கினார். மேலும் அவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவது நடைமுறையில் சாத்தியமில்லை என்று மம்தா கூறியுள்ளார். இதனால் மருத்துவர்கள் போராட்டத்தைத் தொடர முடிவு செய்துள்ளனர். எனவே 2-வது முறையாக பேச்சுவார்த்தை முயற்சி தோல்வி அடைந்துள்ளது.

     

    மருத்துவர்கள் பொதுக்குழுக் கூட்டம் கூட்டி, பயிற்சி பெண் மருத்துவர் கொலைக் குற்றவாளிகளை அடையாளம் காண வேண்டும். அவர்களுக்கு, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமையும் வகையில் தண்டனை வழங்கப்பட வேண்டும். கொல்கத்தா காவல் ஆணையாளர், அவருடைய பதவியில் இருந்து விலக வேண்டும்,காதார துறையின் முதன்மை செயலாளர் நாராயண் ஸ்வரூப் நிகாம் மற்றும் அவருடைய 2 உதவி அலுவலர்கள் ஆகியோர் பதவி விலக வேண்டும் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பான பணிச்சூழலை ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்டவை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு போராட்டம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

    • மருத்துவமனை முன்னாள் டீன் சந்தீப் கோஷ் என்பவரை சி.பி.ஐ. கைது செய்தது.
    • மேலும் போலீஸ் அதிகாரி உள்ளிட்ட சிலரை சி.பி.ஐ. இன்று கைது செய்தது.

    கொல்கத்தா:

    மேற்குவங்கத்தின் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதுதொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

    இந்த விவகாரம் தொடர்பாக, ஆர்.ஜி.கர் மருத்துவமனை மருத்துவக் கல்லூரி டீன் சந்தீப் கோஷ் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனால் சந்தீப் கோஷ், மருத்துவக் கல்லூரி முதல்வர் சுஹிர்தா பால் உள்பட சிலர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், பெண் டாக்டர் கொலை வழக்கில் மருத்துவக் கல்லூரி டீன் சந்தீப் கோஷ், போலீஸ் அதிகாரி உள்ளிட்ட சிலரை சி.பி.ஐ. இன்று கைது செய்தது.

    இவர்கள்மீது ஆதாரங்களை அழித்தல், மோசடி ஆவணங்களை உருவாக்கியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    • வீட்டு வாசல் வரை வந்த போராடும் மருத்துவர்களின் பிரதிநிதிகள் உள்ளே வரமால் அங்கேயே மலையில் நனைந்தபடி நின்றனர்
    • என்னை சந்திக்க விருப்பமில்லாவிட்டாலும் ஒரு கப் காப்பியாவது சாப்பிட்டு விட்டு செல்லுங்கள்

    மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஜுனியர் மருத்துவர்கள் அம்மாநில சுகாதார அமைச்சகமான சுவஸ்திய பவன் [Swasthya Bhawan] பவன் முன் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    போராடும் மருத்துவர்களின் பிரதிநிதிகளைச் சந்திக்க மம்தா அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் சந்திப்பை நேரலை செய்தால் மட்டுமே தாங்கள் வருவோம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று மருத்துவர்கள் போராட்டம் நடத்தும் இடத்துக்கே நேரில் சென்ற மம்தா அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். எனவே தங்களின் பிடிவாதத்தை விட்டு தற்போது மம்தாவை இல்லத்தில் சென்று போராடும் மருத்துவர்களின் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்

    மம்தாவை அவரது இல்லத்தில் சந்திப்பதாக போராடும் மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் அதற்கு மம்தா உடனே சம்மதித்துள்ளார். அதன்படி தனது வீட்டு வாசல் வரை வந்த போராடும் மருத்துவர்களின் பிரதிநிதிகள் உள்ளே வரமால் அங்கேயே மலையில் நனைந்தபடி நின்றதைப் பார்த்து கலக்கம் அடைந்த மம்தா, நீங்கள் என்னை சந்திக்க விருப்பினீர்கள். நான் அதற்கு சம்மதித்து உங்களுக்காக காத்திருக்கின்றேன். என்னை இப்படி அவமானப்படுத்தாதீர்கள், ஏற்கவே ஒருமுறை உங்களுக்காக 2 மணிநேரம் காத்திருந்தும் நீங்கள் வரவில்லை. தயவு செய்து வீட்டுக்குள் வாருங்கள். என்னை சந்திக்க விருப்பமில்லாவிட்டாலும் ஒரு கப் காப்பியாவது சாப்பிட்டு விட்டு செல்லுங்கள்.

    எல்லோரும் உங்களுக்காக காத்திருக்கின்றோம். நமது சந்திப்பை நிச்சயம் வீடியோ பதிவு செய்ய நான் உறுதியளிக்கிறேன் என்று தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து அவர்கள் உள்ளே வந்து தங்களின் கோரிக்கைகைகளை எடுத்துரைத்தனர். எனவே அவர்களின் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. 

    • குப்பை அள்ளும் தொழிலாளி படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
    • பிளாஸ்டிக் பையில் இருந்தே வெடித்ததாக சம்பவத்தின்போது அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவின் மத்திய பகுதியில் ப்லோக்மான் தெருவில் [Blochmann Street] உள்ள எஸ்.என்பானர்ஜி சாலையில் சிறிய அளவிலான திடீர் குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. சாலையோரம் பிளாஸ்டிக் பையில் இருந்த மர்ம பொருள் வெடித்ததில் அங்கு வசித்து வந்த குப்பை அள்ளும் தொழிலாளி படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    குண்டுவெடிப்பு ஏற்பட்ட இடத்தை போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள நிலையில் வெடிகுண்டு நிபுணர்கள் அப்பகுதியில் சோதனை நடத்தி வருகின்றனர். பிளாஸ்டிக் பையில் இருந்தே குண்டுவெடிப்பு ஏற்பட்டதாக சம்பவத்தின்போது அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். பெண் டாகடர் கொலையை கண்டித்து ஜூனியர் மருத்துவர்கள் கொல்கத்தாவில் போராட்டம் நடத்தி வரும் வேளையில் இந்த குண்டுவெடிப்பு அரங்கேறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • எங்களுக்கு நீதி வேண்டும் என்று மருத்துவர்கள் மம்தாவை நோக்கி கோஷங்களை எழுப்பினர்.
    • நான் உங்களின் மூத்த சகோதரியாக [didi] இங்கு வந்துள்ளேன், முதலமைச்சராக அல்ல.

    மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஜுனியர் மருத்துவர்கள் அம்மாநில சுகாதார அமைச்சகமான சுவஸ்திய பவன் [Swasthya Bhawan] பவன் முன் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராடும் மருத்துவர்களின் பிரதிநிதிகளை இரண்டு நாட்களுக்கு முன் தலைமைச் செயலகத்தில் வைத்து சந்திப்புக்கு மம்தா அழைத்திருந்தார்.

    ஆனால் சந்திப்பை நேரலையில் ஒளிபரப்பினால் மட்டுமே தாங்கள் வருவோம் என்று மருத்துவர்கள் வர மறுத்துவிட்டனர். இதனால் 2 மணி நேரமாக மம்தா காலை இருக்கைகளுக்கு முன் காத்துக்கிடக்க நேர்ந்தது. இதற்கிடையே மருத்துவர்கள் போராட்டத்தால் சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை கிடைக்காமல் இதுவரை உயிரிழந்த 29 பேரின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார் மம்தா. உச்சநீதிமன்றம் வலியுறுத்தியும் கேட்காமல் தொடரும் மருத்துவர்கள் போராட்டம் மம்தா அரசுக்கு தலைவலியாக மாறியுள்ளது.

    இந்நிலையில்சுவஸ்திய பவன் முன் போராடும் மருத்துவர்களைச் சந்திக்க மம்தா நேரிலேயே சென்றுள்ளார். எங்களுக்கு நீதி வேண்டும் என்று மருத்துவர்கள் மம்தாவை நோக்கி கோஷங்களை எழுப்பினர். அவர்கள் முன் உரையாற்றிய மம்தா, நான் உங்களின் மூத்த சகோதரியாக [didi] இங்கு வந்துள்ளேன், முதலமைச்சராக அல்ல. எனது பதவி பெரிதல்ல. நேற்று இரவு நீங்கள் கொட்டும் மழையில் இங்கு போராடிக்கொண்டிருந்தீர்கள். இதனால் நேற்று இரவு நான் தூங்கவேயில்லை. தயவு செய்து இப்படி செய்யாதீர்கள் என்று கூறுவதற்காக நான் இங்கு வந்துள்ளேன்.

    உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என நான் வாக்களிக்கிறேன். உயிரிழந்த பயிற்சி மருத்துவருக்கு நிச்சயம் நீதி கிடைக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் மாநில அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் நல வாரியங்களை உடனடியாக தான் கலைப்பதாக மம்தா தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனையைத் தீர்க்க இதுவே தனது கடைசி முயற்சி என்று மம்தா தெரிவித்திருந்தார். மம்தா அங்கிருந்து சென்ற பின்னர் ஊடகத்திடம் பேசிய பேசிய மருத்துவர்கள், பேச்சுவார்த்தை நடத்தப்படாமல் எங்களின் கோரிக்கைகளில் நாங்கள் சமரசம் செய்துகொள்ளப்போவதில்லை என்று தெரிவித்தனர். 

     

    • ஜூனியர் மருத்துவர்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
    • நிவாரணம் வழங்குவதாக மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு.

    கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டும், ஐந்து அம்சங்கள் அடங்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஜூனியர் மருத்துவர்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    ஜூனியர் மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் 29 நோயாளிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், உயிரிழந்த 29 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்குவதாக மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

    இது தொடர்பான எக்ஸ் தள பதிவில், "ஜூனியர் மருத்துவர்களின் வேலைநிறுத்தம் காரணமாக சுகாதார சேவைகளில் ஏற்பட்ட இடையூறு காரணமாக விலைமதிப்பற்ற 29 உயிர்களை நாம் இழந்திருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், உயிரிழந்த ஒவ்வொருத்தரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ரூ. 2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • மம்தா வங்கத்தின் பெண் மாக்பெத், அவருடன் நான் இனி ஒன்றாக எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் மேடையை பகிர்ந்து கொள்ள மாட்டேன்.
    • மாக்பெத் என்பது நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியர் எழுதிய பிரபலமான நாடகம் ஆகும்.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நீதி கேட்டு மருத்துவர்கள் போராடி வருகின்றனர். கொல்கத்தாவில் அமைந்துள்ள சுகாதார அமைச்சகத்தின் முன் போராடி வரும் மருத்துவர்களை மேற்கு வங்க முதல்வர் மம்தா நேரடி பேசுவார்த்தைக்கு அழைத்தார். ஆனால் பேசுவார்த்தயை நேரலையில் ஒளிபரப்பினால் மட்டுமே தாங்கள் வருவோம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    ஆனால் இதனை ஏற்க மருத்த மம்தா, யாரும் வராததால் 2 மணி நேரம் காலி இருக்கைகளுக்கு மத்தியில் மம்தா காத்துக்கிடந்தார். மேலும், இந்த விவகாரத்தால் தான் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவும் தாயாராக உள்ளதாகத் தெரிவித்த மம்தா போராடும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்று தெரிவித்தார். ஆனால் இந்த விஷயத்தில் சிலர் நீதியை விரும்பவில்லை தனது நாற்காலியையே விரும்புகின்றனர் என்று மறைமுகமாக விமர்சித்திருந்தார்.

     

    இந்நிலையில் மம்தா குறித்து மேற்கு வங்க ஆளுநர் ஆனந்தா போஸ் விமர்சித்துள்ளார். 'மம்தா பானர்ஜி வங்கத்தின் பெண் மாக்பெத், அவருடன் நான் இனி ஒன்றாக எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் மேடையை பகிர்ந்து கொள்ள மாட்டேன். பொதுவெளியில் அவரை புறக்கணிப்பேன். மம்தா உள்துறை அமைச்சர் பொறுப்பையும் அதே சமயம் சுகாதர அமைச்சர் பொறுப்பையும் தன்வசம் வைத்துள்ளது இந்த நேரத்தில் நகை முரணாக அமைந்துள்ளது. மேற்கு வங்கத்தின் லேடி மாக்பெத், ஹூக்லி நீரை கையில் வைத்திருந்தும் தனது கரை படிந்த கரங்களை கழுவ முடியாமல் விழிக்கிறார். மாநிலத்தின் முதல்வர் பாதுகாப்பதற்குப் பதிலாகப் போராடுகிறார். நகரங்களிலும், தெருக்களிலும், மருத்துவமனைகளிலும் என அனைத்து இடங்களிலும் வன்முறை தான் மலிந்துள்ளது என்று ஆனந்தா போஸ் விமர்சித்துள்ளார்.

    மாக்பெத் என்பது நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியர் எழுதிய பிரபலமான நாடகம் ஆகும். ஸ்காட்லாந்தை சேர்ந்த மாக்பெத் என்ற படைத் தலைவன் தனது மனைவியின் பேச்சைக் கேட்டு மன்னரைக் கொலை செய்து அரியணையைக் கைப்பற்றுவான். இதனால் ஏற்பட்ட குற்ற உணர்வாலும், தனக்கு ஆபத்து வரும் என்ற அச்சத்தாலும் மேலும் பலரை கொன்று குவிப்பான். இதனால் நாட்டு மக்களிடையே கலவரம் வெடித்து உள்நாட்டு போர் உருவாகும்.

    தற்போது மாக்பெத்தின் சூழலில் மம்தா உள்ளதாக ஆளுநர் விமர்சித்துள்ளதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆளுநர் பொறுப்பில் உள்ள ஒருவர் அரசியல்வாதி போல் பேசி வருவதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ஆனந்தா போஸ் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய பெண் ஒருவர் புகார் அளித்திருந்ததது குறிப்பிடத்தக்கது.

    • மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
    • பேச்சுவார்த்தை நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் வரை பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொள்ள மாட்டோம்.

    கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி, மிக கொடூரமாக உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    இந்த விவகாரத்தில் பெண் மருத்துவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், உயிரிழந்த பெண் மருத்துவருக்கு நீதி வேண்டியும் மருத்துவமனையில் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு உச்சநீதிமன்றம் கெடு விதித்து இருந்த நிலையில், அதையும் ஏற்க மறுத்து மருத்துவர்கள் போராட்டத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மருத்துவர்களிடம் நேரில் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தி இருந்தார்.

    இந்த பேச்சுவார்த்கையில் கலந்து கொள்ள சம்மதித்த மருத்துவர்கள், முதல்வர் உடனான பேச்சுவார்த்தையை நேரலையில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். எனினும், இதற்கு அம்மாநில அரசு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துவிட்டது.

    இதைத் தொடர்ந்து ஆளும் அரசு இந்த விவகாரத்தில் மிகவும் விடாப்பிடியாக உள்ளது என குற்றம் சாட்டியுள்ளனர். இதோடு முதல்வர் மம்தா பானர்ஜியின் ராஜினாமாவை தாங்கள் ஒருபோதும் கோரவில்லை என்றும் தெரிவித்தனர்.

    பேச்சுவார்த்தை நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் வரை பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொள்ள மாட்டோம் என்று மருத்துவர்கள் உறுதியாக தெரிவித்துவிட்டனர். இன்றைய பேச்சுவார்த்தையில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ள இருந்த நிலையில், அவர் மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக காத்துக் கொண்டிருந்தார். எனினும், மருத்துவர்கள் மற்றும் முதல்வர் இடையிலான சந்திப்பு நடைபெறவே இல்லை.

    "நாங்கள் முதல்வரை ராஜினாமா செய்ய கோரிக்கை வைக்கவில்லை, அதற்கான அழுத்தம் கொடுக்கவும் நாங்கள் இங்கு வரவில்லை. ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொலை செய்யப்பட்ட மருத்துவருக்கு நீதி வேண்டி, எங்களது கோரிக்கைகளுடன் இங்கு வந்திருக்கிறோம்."

    "எங்களுக்கு இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க வேண்டும். பேச்சுவார்த்தையே நடக்கவில்லை என்பது எங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. நிர்வாகத்திடம் இருந்து எங்களுக்கு தில் கிடைக்கும் என்று இப்போதும் காத்துக் கொண்டே இருக்கிறோம்," என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.

    • முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க 30 பேருடன் செல்வதாக அறிவித்தனர்.
    • போராடும் இளநிலை டாக்டர்கள் தங்கள் முடிவில் உறுதியாக உள்ளனர்.

    மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரி, கொல்கத்தா நகரில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் பணிக்கு திரும்பவில்லை. டாக்டர்களின் போராட்டம் 34-வது நாளாக தொடரும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து சுகாதார நலன் சார்ந்த சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. டாக்டர்களை சமாதானம் செய்து பணிக்கு அனுப்பும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

    மேற்கு வங்காள தலைமைச் செயலாளர், 15 பிரதிநிதிகளை மட்டுமே பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார். ஆனால், போராடும் இளநிலை டாக்டர்கள் தங்கள் முடிவில் உறுதியாக உள்ளனர். முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க 30 பேருடன் செல்வதாக அறிவித்தனர்.

    முதல்வர் மம்தா பானர்ஜியை, மேற்கு வங்காள ஜூனியர் டாக்டர்கள் மன்ற நிர்வாகிகள் பேருந்து மூலம் தலைமைச் செயலகத்திற்கு விரைந்தனர். ஆனால், மருத்துவர்களின் நேரலை கோரிக்கையை ஏற்க மம்தா அரசு மறுத்ததால், இருதரப்பு சந்திப்பு நடைபெறாமல் போனது.

    இதைதொடர்ந்து, கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மம்தா பானர்ஜி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், "மேற்கு வங்க முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார்" என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

    மேலும், " பதவி குறித்து கவலைப்படவில்லை, எனக்கு நீதிதான் முக்கியம். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதில்லை" என குறிப்பிட்டுள்ளார்.

    • 2 இடங்களில் இன்று அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை.
    • முதல்வர் சந்தீப் கோஷ் மீது நிதி முறைகேடு வழக்கு உள்ளது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் கடந்த மாதம் இளம் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமையால் கொல்லப்பட்டார்.

    இந்த கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மீது நிதி முறைகேடு வழக்கு உள்ளது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவருக்கு சொந்தமான வீடு மற்றும் இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    இதன் தொடர்ச்சியாக ஆர்.ஜி.கர் மருத்துவமனைக்கு மருந்துகள் வினியோகம் செய்தவர் வீடு உள்ளிட்ட 2 இடங்களில் இன்று அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

    ×