என் மலர்tooltip icon

    ராஜஸ்தான்

    • வாக்காளர்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று உற்சாகமாக வாக்களித்து வருகிறார்கள்.
    • ஸ்ரீகங்கா நகர் கரன்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மரணம் அடைந்ததால், இந்த ஒரு தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறவில்லை.

    ராஜஸ்தான் மாநிலத்தில் 200 தொதிகளை கொண்ட சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். காங்கிரஸ்- பா.ஜனதா இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

    ஸ்ரீகங்கா நகர் கரன்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மரணம் அடைந்ததால், இந்த ஒரு தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. அந்த தொகுதியில் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    வாக்காளர்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று உற்சாகமாக வாக்களித்து வருகிறார்கள். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ந்தேதி நடைபெற இருக்கிறது.

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் 1 மணி நிலவரப்படி, 40.27 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது.

    வாக்குப்பதிவின் முதல் இரண்டு மணி நேரத்தில் கிட்டத்தட்ட 10 சதவீத வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்திருந்தனர். காலை 11 மணிக்குள் அந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 25 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    • காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும்.
    • பா.ஜனதா தலைவர்கள் மாநிலத்திற்கு வெளியில் இருந்து பிரசாரத்திற்காக வந்தவர்கள்.

    ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. முதல்வர் அசோக் கெலாட் சர்தார்புரா தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி சென்று வாக்களித்தார்.

    பின்னர் அசோக் கெலாட் கூறியதாவது:-

    ராஜஸ்தானில் ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்ப்பு அலை இல்லை. காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும். பா.ஜனதா தலைவர்கள் மாநிலத்திற்கு வெளியில் இருந்து பிரசாரத்திற்காக வந்தவர்கள். அடுத்த ஐந்தாண்டுக்கு அவர்களை இங்கு பார்க்க முடியாது. இது மோடிக்கான தேர்தல் இல்லை. இது மாநில சட்டசபை தேர்தல். அவர்களை மீண்டும் ஐந்தாண்டு இங்கே பார்க்க முடியாது. நாங்கள் இங்கேதான் இருப்போம். அதோடு மக்களோடு இருப்போம்" என்றார்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அவரது ஆட்சியின் 5 ஆண்டு பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் 14-ந்தேதி நிறைவு பெறுகிறது. இதையடுத்து ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு தேர்தல் நடத்தும் அறிவிப்பை கடந்த அக்டோபர் மாதம் 30-ந்தேதி தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 200 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் அட்டவணைப்படி அங்கு 200 சட்டசபை தொகுதிகளிலும் கடந்த மாதம் 30-ந்தேதி வேட்பு மனு தாக்கல் ஆரம்பித்தது.

    கடந்த 6-ந்தேதி மனுதாக்கல் முடிந்தது. மறுநாள் 7-ந்தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதி இல்லாத மனுக்கள் நிராகரிக்கப்பட்ட பிறகு 200 தொகுதிகளிலும் 1875 பேர் களத்தில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த வேட்பாளர்களில் 183 பேர் பெண் வேட்பாளர்கள்.

    இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு 200 தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரசாரம் தொடங்கியது. ராஜஸ்தான் மாநிலத்தில் சுமார் 5 கோடியே 25 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களை குறி வைத்து அனைத்து கட்சிகளும் வாக்குறுதிகளை அள்ளி வீசின.

    ராஜஸ்தான் மாநில தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட பல கட்சிகள் களத்தில் நின்றாலும் உண்மையான போட்டி பாரதீய ஜனதாவுக்கும் காங்கிரசுக்கும் இடையேதான் நிலவுகிறது. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள காங்கிரசும், ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதாவும் மிக, மிக தீவிரமாக பிரசாரம் செய்தன.

    ராஜஸ்தான் மாநில மக்களை கவரும் வகையில் 7 முக்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை, ரூ.500 விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர், பழைய ஓய்வூதிய திட்டம் ஆகியவை காங்கிரஸ் அறிவித்த முக்கிய வாக்குறுதிகளாகும்.

    மேலும் விவசாயிகள் கடன் தள்ளுபடி, அரசு பஸ்சில் பெண்களுக்கு இலவச பயணம், மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி திட்டங்களையும் ராஜஸ்தான் காங்கிரஸ் அறிவித்து அதிரடி காட்டியது. பாரதிய ஜனதாவும் சில அறிவிப்புகளை வெளியிட்டது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு மிக, மிக வலுவான தலைவர் இல்லா விட்டாலும் மிக வலுவான அடி மட்டம் வரையிலான பூத் கமிட்டி அமைப்புள்ளது. அடுத்தப்படியாக பிரதமர் மோடியை மட்டுமே அந்த கட்சி நம்பி இருப்பது இந்த தேர்தலில் தெரிகிறது. அதை பூர்த்தி செய்யும் வகையில் பிரதமர் மோடி ராஜஸ்தானில் பல சுற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    பா.ஜ.க. பிரசாரங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராகுல், பிரியங்கா இருவரும் ராஜஸ்தான் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து தீவிரமாக ஆதரவு திரட்டினார்கள். இந்த வார தொடக்கத்தில் உச்சக்கட்ட பிரசாரம் நடந்தது. நேற்று முன்தினம் மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றது.

    இதையடுத்து ஓட்டுப் பதிவுக்கு நேற்று அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. கரன்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் குர்மித்சிங் சமீபத்தில் மரணம் அடைந்ததால் 199 தொகுதிகளில் மட்டும் இன்று தேர்தல் நடத்தப்படுகிறது. ஓட்டுப் பதிவுக்காக மாநிலம் முழுவதும் 51 ஆயிரத்து 756 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன.

    இந்த வாக்குச்சாவடிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கியது. ஆண்களும், பெண்களும் அதிகாலை முதலே வாக்குச் சாவடிகளுக்கு ஆர்வமுடன் திரண்டு வந்தனர். இதனால் ராஜஸ்தானில் பெரும்பாலான தொகுதிகளில் தொடக்கம் முதலே நல்ல விறுவிறுப்பு இருந்ததை காண முடிந்தது.

    காலை 9 மணி வரை முதல் 2 மணி நேரத்தில் சுமார் 10 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.

    ஓட்டுப்பதிவை சுமூகமாக நடத்தி முடிக்க துணை நிலை ராணுவ வீரர்கள் மற்றும் உள்ளூர் போலீசார் ஓட்டுச்சாவடிகளில் 2 அடுக்கு பாதுகாப்பை வழங்கினார்கள். பதற்றம் ஏற்படலாம் என்று கருதப்படும் வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 1 லட்சத்து 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். அதன் பிறகு மின்னணு எந்திரங்கள் அனைத்தும் 'சீல்' வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.

    கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது 74.72 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்த தடவை அதைவிட சற்று அதிகம் வாக்குகள் பதிவாக வாய்ப்பு உள்ளது.

    இதன் காரணமாக ராஜஸ்தானில் ஆட்சியை கைப்பற்றப் போவது காங்கிரசா? அல்லது பாரதீய ஜனதாவா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானில் ஒரு கட்சி தனித்து ஆட்சி அமைக்க 101 இடங்கள் தேவை. கடந்த 2018-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 100 இடங்களிலும், பாரதிய ஜனதா 73 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன.

    இந்த ஆண்டு இந்த எண்ணிக்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று கருத்து கணிப்புகள் கூறுகின்றன. சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் காங்கிரஸ், பாரதீய ஜனதா இரு கட்சிகளுக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி ஏற்படலாம் என்று கூறப்பட்டு இருந்தது.

    என்றாலும் காங்கிரசை விட பாரதீய ஜனதா அதிக இடங்களை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் கடந்த 30 ஆண்டுக்கு தேர்தல் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருப்பது தெரியும்.

    ஒரு தடவை ஆட்சி அமைத்த கட்சி அடுத்த தேர்தலில் ஆட்சி அமைப்பதில்லை. எனவே இந்த தடவை தங்களுக்கே வெற்றி கிடைக்கும் என்று பா.ஜ.க. தலைவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். அவர்களது நம்பிக்கையும் ஆசையும் பலிக்குமா? என்பது டிசம்பர் 3-ந்தேதி ஓட்டு எண்ணிக்கையின் போது தெரிந்துவிடும்.

    • காங்கிரஸ் வேட்பாளர் மரணம் காரணமாக ஒரு தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை.
    • காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் 200 தொதிகளை கொண்ட சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

    ஸ்ரீகங்கா நகர் கரன்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மரணம் அடைந்ததால், இந்த ஒரு தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. அந்த தொகுதியில் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

    வாக்காளர்கள் காலை முதல் நீண்ட வரிசையில் இன்று உற்சாகமாக வாக்களித்து வருகிறார்கள். 5,25,38,105 வாக்காளர்கள் உள்ளனர். 1,862 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 199 தொகுதிகளிலும் 51,507 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    1.7 லட்சத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் 70 ஆயிரம் ராஜஸ்தான் போலீசார், 18 அயிரம் ராஜஸ்தான் ஹோம் கார்ட்ஸ், 2 ஆயிரம் ராஜஸ்தான் பார்டர் ஹோம் கார்ட்ஸ், மற்ற மாநிலங்களில் இருந்து 15 ஆயிரம் ஹோம் கார்ட்ஸ் அடங்குவர். மேலும், 120 ஆர்ஏசி கம்பெனிகள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    காங்கிரஸ்- பா.ஜனதா இடையே நேரடி போட்டி நிலவுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ந்தேதி நடைபெற இருக்கிறது.

    • ராஜஸ்தானில் பலத்த பாதுகாப்புடன் நாளை சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
    • ஆளும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ராஜஸ்தானில் நாளை சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மொத்தமுள்ள 200 தொகுதிகளில் கரண்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் குர்மித் சிங் கூனார் உயிரிழந்ததை அடுத்து, மீதமுள்ள 199 தொகுதிகளுக்கு மட்டும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இங்கு ஆளும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது. மாநிலம் முழுதும் பல்வேறு இடங்களில் இறுதிக்கட்டமாக நடந்த பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.

    இந்த சட்டசபை தேர்தலில் 183 பெண்கள் உட்பட 1,875 பேர் போட்டியிடுகின்றனர். 5.25 கோடி பேர் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற உள்ளனர்.

    வாக்குப்பதிவு காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடக்கிறது. இதையொட்டி, மாநிலம் முழுதும் உள்ள 51,756 வாக்குச்சாவடிகளில் உள்ளூர் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்பட உள்ளது.

    • காங்கிரஸ் ஆட்சியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது எந்தவித தாக்குதலும் நடத்தப்படவில்லை.
    • குர்ஜார் சமூக மக்களுக்கு காங்கிரஸ் அரசு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியுள்ளது.

    ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் இன்று காங்கிரஸ் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ராஜஸ்தான், சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல்களில் வெற்றிபெற பா.ஜனதா சதி செய்கிறது. மஹாதேவ் சூதாட்ட செயலியும், சிவப்பு டைரி விவகாரமும் பா.ஜனதாவால் உருவாக்கப்பட்டது. இந்த இரண்டு விவகாரங்களும் ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியால் விசாரிக்கப்பட வேண்டும்.

    ராஜேஷ் பைலட் குறித்து பேசுவதன் மூலம் குர்ஜார் சமூக மக்களை பிரதமர் மோடி தூண்டிவிட முயற்சிக்கிறார். பா.ஜனதா ஆட்சியில் இட ஒதுக்கீடு கேட்டு போராடிய குர்ஜார் சமூகத்தை சேர்ந்த 72 பேர் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் மரணம் அடைந்தனர். இன்று அந்த சமூக மக்களுக்கு ஆதரவாக இருப்பது போல் பா.ஜனதாவினர் பேசி வருகின்றனர்.

    ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது எந்தவித தாக்குதலும் நடத்தப்படவில்லை. குர்ஜார் சமூக மக்களுக்கு காங்கிரஸ் அரசு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியுள்ளது.

    சதி கோட்பாடுகளை உருவாக்கி மக்களை தவறாக வழி நடத்துவதன் மூலம் தேர்தலில் வெற்றிபெற பா.ஜனதா நினைக்கிறது.

    இவ்வாறு அசோக் கெலாட் கூறியுள்ளார்.

    • பா.ஜனதா ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மாநிலங்களில் ஆட்சி அமைக்கப் போகிறது.
    • ஐந்து வருடத்திற்கு முன், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது, அவர்கள் எங்களுடைய திட்டங்களை நிறுத்திவிட்டார்கள்.

    ராஜஸ்தானில் நாளைமறுதினம் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. பிரதமர் மோடி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    தியோர்கார் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜனதா ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மாநிலங்களில் ஆட்சி அமைக்கப் போகிறது. பா.ஜனதாவுக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தினால், ராஜஸ்தானை சுற்றுலா, முதலீடு, தொழில், கல்வி ஆகிய துறைகளில் நம்பர் ஒன் மாநிலமாக உருவாக்குவோம்.

    காங்கிரஸ் வன்முறைகள், குற்றச் செயல்கள், ஊழல், ஐந்து ஆண்டு ஆட்சியில் தேர்வுத்தாள்கள் வெளியானது ஆகியவற்றில் ராஜஸ்தானை நம்பர் ஒன் மாநிலமாக உயர்த்தியுள்ளது.

    ஐந்து வருடத்திற்கு முன் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது, அவர்கள் எங்களுடைய திட்டங்களை நிறுத்திவிட்டார்கள். நாங்கள் டிசம்பர் 3-ந்தேதிக்குப் பிறகு ஆட்சி வந்த பிறகு, அந்த திட்டங்களை முன்னெடுத்து வந்து, மாநில மக்களுக்கு பயன்பெறச் செய்வோம்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    மேலும், குர்ஜார் மகன் (சச்சின் பைலட்) அரசியலில் தன்னுடைய இடத்திற்காக போராடி வருகிறார். கட்சிக்காக அவருடைய வாழ்க்கையை கொடுத்துள்ளார். ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு, பாலாடை போன்று ராயல் பேமிலி அவரை நீக்கிவிடும்.

    அவரது தந்தை ராஜேஷ் பைலட்டிற்கு இவ்வாறுதான் செய்தார்கள். தற்போது அவரது மகனுக்கு செய்து கொண்டிருக்கிறார்கள். குர்ஜார்கை முந்தைய காலத்திலும், தற்போதுதும் காங்கிரஸ் அவமதித்துள்ளது.

    பெண்களுக்கு எதிரான அரசை இதற்கு முன்னெப்போதும் ராஜஸ்தான் பார்த்ததில்லை" என்றார்.

    • ராஜஸ்தானில் காங்கிரஸ் ஒவ்வொரு பகுதியிலும் தோல்வியை சந்திக்கும்.
    • அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்தது உள்ளிட்டவற்றால் பா.ஜனதா சாதனை படைத்து உள்ளது.

    ஜெய்ப்பூர்:

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ராஜஸ்தானில் இன்று இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். ஜெய்ப்பூரில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ராஜஸ்தானில் காங்கிரஸ் ஒவ்வொரு பகுதியிலும் தோல்வியை சந்திக்கும். பா.ஜனதா தான் அடுத்த ஆட்சியை அமைக்கும்.

    காங்கிரஸ் அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். வாக்கு வங்கி அரசியலால் கலவரக்காரர் கள் மீது ராஜஸ்தான் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அசோக் கெலாட்டுக்கு சொந்தமாக எந்த உத்தரவாதமும் இல்லை. அவர் என்ன உத்தரவாதம் அளிக்கிறார்?

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்தது உள்ளிட்டவற்றால் பா.ஜனதா சாதனை படைத்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராஜஸ்தான் மாநிலத்தில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடக்கிறது.
    • இதற்கான அனல் பறந்த பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வுபெறுகிறது.

    போபால்:

    200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்துக்கு நாளை மறுநாள் (25-ம் தேதி) வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான அனல் பறந்த பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வுபெறுகிறது.

    ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கட்சி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் ஆர்வத்தில் உள்ளது. பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றும் வேட்கையில் இருக்கிறது. இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில், ராமர் கோவிலை விட பெரிய பிரச்சனை என்ன இருக்கிறது என அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா கேள்வி

    எழுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக, ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராமர் கோவிலை தவிர நாட்டின் மிகப்பெரிய பிரச்சனை என்ன? பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமர் கோயிலை உருவாக்கினோம். ஜனவரி 22-ம் தேதி ராமர் கோவில் பிரதிஷ்டை நடைபெற உள்ளது. இது வெறும் தேர்தல் பிரச்சனை அல்ல, நாடு முழுவதும் உள்ள பிரச்சனை என தெரிவித்தார்.

    • காங்கிரஸ், பா.ஜனதா தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இறுதிகட்ட ஓட்டு வேட்டை நடத்தினர்.
    • காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தியும் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார்.

    ஜெய்ப்பூர்:

    5 மாநில சட்டசபை தேர்தல்களில் மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் வாக்குப்பதிவு முடிந்து விட்டது.

    40 தொகுதிகளை கொண்ட மிசோரமில் கடந்த 7-ந்தேதியும், 230 இடங்களை கொண்ட மத்திய பிரதேசத்துக்கு கடந்த 17-ந்தேதியும் ஓட்டுப்பதிவு நடந்தது. 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கரில் 7 மற்றும் 17-ந்தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

    200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்துக்கு நாளை மறுநாள் (25-ந்தேதி) ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்கான அனல் பறந்த பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வுபெறுகிறது.

    ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கட்சி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் ஆர்வத்தில் உள்ளது. பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றும் வேட்கையில் இருக்கிறது. இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இதையொட்டி காங்கிரஸ், பா.ஜனதா தலைவர்கள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இறுதிகட்ட ஓட்டு வேட்டை நடத்தினர்.

    பிரதமர் நரேந்திர மோடி பில்வாரா, துர்காபூரில் தேர்தல் பிரசாரம் செய்து பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார்.

    காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தியும் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார். தோல்பூர், பரக்பூர் மாவட்டங்களில் அவர் பிரசாரம் செய்தார். காங்கிரஸ், பா.ஜனதா தலைவர்கள் இன்று அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.

    • உலகக் கோப்பை இறுதிப் போட்டியை பார்க்க ஒரு அபசகுனம் பிடித்த நபர் வந்தார்.
    • ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தல்.

    மத்திய பிரதசேம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த நவம்பர் மாதம் 7ம் தேதி தொடங்கிய தேர்தல் வரும் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் முடிந்த நிலையில், வரும் 25ம் தேதி ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்க பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பிரசாரங்கள் மூலம் தீவிரம் காட்டி வருகின்றனர். 

    அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் பலோத்ராவில் காங்கிரஸ் சார்பில் சமீபத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ராகுல் காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், மோடி ஒரு அதிர்ஷ்டமில்லாதவர். இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லாததற்கு பிரதமர் மோடி நேரில் சென்றதே காரணம் என்று சூசகமாக கூறினார்.

    பிரசாரத்தின்போது ராகுல் காந்தி கூறுகையில்,"உலகக் கோப்பை இறுதிப் போட்டியை பார்க்க ஒரு அபசகுனம் பிடித்த நபர் வந்தார். அவர் வருவதற்கு முன்பு வரை இந்தியா வெற்றி பெறும் நிலையில்தான் இருந்தது.

    அவர் எப்போதாவது தொலைக்காட்சியில் தோன்றி இந்து முஸ்லிம் என பேசிக் கொண்டிருப்பார். திடீரென கிரிக்கெட் பார்க்க நேரில் செல்வார். ஆனால், நிச்சயம் இந்திய அணி தோற்றுவிடும். அவர் அப்படிப்பட்ட அபசகுனம் பிடித்தவர்" என்று குறிப்பிட்டிருந்தார். ராகுல் காந்தியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும், ராகுல் காந்தியின் இந்த சர்ச்சை பேச்சுக்கு பாகஜ கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பாஜக தலைவர் ரவிங்கர் பிரசாத் கூறுகையில்," ராகுல் காந்தி உங்களுக்கு என்ன ஆயிற்று? தோல்வியின் விரக்தியின் காரணமாக நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டு நாட்டின் பிரதமருக்கு எதிராக அசிங்கமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறீர்கள்.

    நமது வீரர்கள் சிறப்பாக விளையாடினர். விளையாட்டில் தோல்வியும் வெற்றியும் இருக்க தான் செய்யும். ராகுல் காந்தி பேசியது கண்டனத்திற்குரியது. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று கூறினார்.

    • காங்கிரஸ் மீதான நம்பிக்கை முடியும் இடத்தில் இருந்து, அங்கே மோடியின் உத்தரவாதம் தொடங்குகிறது.
    • மோசமான காங்கிரஸ் அரசை மாற்றும் வாய்ப்பை ஜனநாயகம் உங்களுக்கு வழங்கியுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25-ந்தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. நாளையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைய இருக்கும், பிரதமர் மோடி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இன்று துங்கர்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ராஜஸ்தானில் பா.ஜனதா ஆட்சியமைத்ததும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்து மறுஆய்வு செய்யப்பட்டு, மக்கள் நலனுக்கான முடிவு எடுக்கப்படும். ராஜஸ்தானில் காங்கிரஸ், அரசு ஊழியர்களை மோசடி செய்துள்ளது. பல மாதங்களாக அரசு அதிகாரிகளின் பணங்கள் தேங்கி கிடக்கிறது. அதற்கான விசாரணை ஏதும் இல்லை.

    மோசமான காங்கிரஸ் அரசை மாற்றும் வாய்ப்பை ஜனநாயகம் உங்களுக்கு வழங்கியுள்ளது. சிலநேரங்களில் சிறிய தவறு கூட, ஐந்து ஆண்டுகளுக்கு உங்களை பாதிக்க வைக்கச் செய்யும். ராஜஸ்தானில் மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்ற, காங்கிரசை ஆட்சியில் இருந்து வெளியேற்றுவது முக்கியமானது.

    காங்கிரஸ் மீதான நம்பிக்கை முடியும் இடத்தில் இருந்து, அங்கே மோடியின் உத்தரவாதம் தொடங்குகிறது. நம் நாட்டின் கோடிக்கணக்கான பழங்குடியின மக்களுக்கு (Adivasis) காங்கிரஸ் ஒருபோதும் உதவி செய்தது இல்லை. பா.ஜனதா அவர்களுக்கு என தனி அமைச்சகம் உருவாக்கியுள்ளது. அவர்கள் நலத்திற்கான பட்ஜெட்டை உயர்த்தி உள்ளது.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிகப்பெரிய அளவில் குறைந்த போதிலும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த மே மாத்தில் இருந்து விலை ஏற்றம், இறக்கம் இல்லாமல் அப்படியே நீடிக்கிறது. மாதத்தின் முதல்நாள், எண்ணெய் நிறுவனங்கள் அதன் விலையை நிர்ணயிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    மத்திய அரசு சமீபத்தில் சமையல் சிலிண்டர் விலையில் 200 ரூபாய் குறைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது ஐந்து மாநில தேர்தல், பாராளுமன்ற தேர்தல் ஆகியற்றை கருத்தில் கொண்டு விலையை குறைத்தது என எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவு ஓரங்கட்டப்பட்டதாக தகவல் வெளிவந்த வண்ணம் இருந்தது.
    • பா.ஜனதா வெற்றி பெற்றால், முதல்வர் வேட்பாளர்களில் ஒருவராக கருதப்பட வாய்ப்புள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25-ந்தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. நாளையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடையும் நிலையில் பா.ஜனதாவின் தேசிய தலைவர்கள் நேற்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர்.

    பரான் மாவட்டத்தில் உள்ள அன்ட்டா-வில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடியுடன் வசுந்தர ராஜே சிந்தியா கலந்து கொண்டார். இது பா.ஜனதா உயர் தலைவர்களுக்கும், அவருக்கும் இடையில் பிரச்சினைகள் ஏதும் இல்லை. அனைத்தும் நன்றாகவே செல்கிறது என்ற தகவலை கொடுப்பதாக கருதப்படுகிறது.

    ராஜஸ்தான் தேர்தல் தேதி அறிவித்த பிறகு, பிரதமர் மோடி வசுந்தர ராஜே சிந்தியாவுடன் ஒரே மேடையில் பிரசாரம் செய்வது இதுதான் முதன்முறை. வசுந்தரா ராஜேவை பா.ஜனதா உயர் தலைவர்கள் புறக்கணிப்பதாகவும், முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்பு இல்லை எனவும் கருதப்பட்டது. இந்த நிலையில்தான் மோடியுடன் பிரசாரம் மேற்கொண்ட நிலையில் வசுந்தர ராஜே சிந்தியாவும் முதல்வர் வேட்பாளர் போட்டியில் இருப்பதாக கருதப்படுகிறது.

    பிரசாத்தின்போது வசுந்தர ராஜே சிந்தியா, "2024 மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் மோடி ஹாட்ரிக் வெற்றி பெறுவார் என நாட்டு மக்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். மோடியின் பலத்தை ஒட்டுமொத்த நாடும் அங்கீகரித்துள்ளது. தற்போது ஒட்டுமொத்த உலகமும் அவரது தலைமையை ஏற்றுக் கொண்டிருக்கிறது" என்றார்.

    ×