என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • 2 பேரும் சம்பந்தப்பட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர்
    • 2 மாதத்திற்கு நுழைய தடை விதித்து மாவட்ட துணை கலெக்டர் ஆதர்ஷ் உத்தரவிட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திரு.பட்டினத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் ராமு. இவரது 2-வது மனைவி எழிலரசி. எழிலரசி மற்றும் விக்ரமன் ஆகிய 2 பேர் மீதும் புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் சிவக்குமார் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. 2 பேரும் சம்பந்தப்பட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர்.இந்நிலையில் இவர்கள் 2 பேரும் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பலருக்கு மிரட்டல் விடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து போலீசாருக்கு தகவல் வந்த நிலையில், 2 பேரையும் காரைக்கால் மாவட்டத்துக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என போலீஸ் சூப்பிரண்டு சுப்பிமணியம், இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி ஆகியோர் மாவட்ட துணை கலெக்டர் ஆதர்சுக்கு பரிந்துரை செய்தனர். அதன்படி 2 பேரையும் 144 சட்டத்தின் கீழ், காரைக்கால் மாவட்டத்துக்குள், நேற்றி லிருந்து 2 மாதத்திற்கு நுழைய தடை விதித்து மாவட்ட துணை கலெக்டர் ஆதர்ஷ் உத்தரவிட்டுள்ளார்.

    • மத்திய அரசின் வழிகாட்டலின் பேரில் பின்வரும் முன்னெ ச்சரிக்கை நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுகிறது.
    • இரண்டு தவணை தடுப்பூசிகள் போட பெற்றிருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகம்மது மன்சூர், அவர் கூறியிருப்பதாவது:-உலக நாடுகளில் புதிய வகை கொரோனா (கோவிட்- 19 ஓமிக்கிரான் பி.எப்7) பரவல் அதிகரித்து வரும் நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் எதிர்வரும் பண்டிகை மற்றும் புது வருட கொண்டாட்ட காலங்களில் புதிய வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசின் வழிகாட்டலின் பேரில் பின்வரும் முன்னெ ச்சரிக்கை நடவடிக்கை கள் அமல்படுத்தப்படுகிறது. இதனால், மக்கள் அனைவரும் பொது இடங்கள், கடற்கரை, சாலை, பூங்காக்கள் மற்றும் திரையரங்குகளில் கட்டா யமாக முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

    எதிர்வரும் புது வருட, 1.1.2023 அன்று 01 மணிக்கு மேல்(டிசம்பர் 31 நள்ளிரவுக்கு பிறகு) தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து உணவகங்கள், மதுபான கடைகள், பார்கள், விருந்தோம்பல் மற்றும் கேளிக்கை துறை நிறுவனங்கள் கோவிட்-19 தடுப்புக்கு உரிய நடைமுறைகளை பின்பற்றி தங்களின் வழக்கமான நேரங்களில் செயல்பட அனுமதி வழங்க படுகிறது. மேலும், தங்களின் அனைத்து ஊழியர்களும் முகக்கவசம் அணிவது மட்டுமல்லாது இரண்டு தவணை தடுப்பூசிகள் போட பெற்றிருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச்செல்லும் போது அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • 2 பேர் பெரிய கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்தினர்.
    • மோட்டார் சைக்கிள், கையில் வைத்திருந்த பெரிய கத்தியை பறிமுதல் செய்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் நகர் பகுதியான நூல்கடை வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றில், 2 பேர் பெரிய கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்தியும், ஆபாசமாக திட்டியும் செல்வதாக காரைக்கால் நகர போலீசாருக்கு தகவல் சென்றது. அதன்பேரில் சப்.இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அப்போது பெரிய கத்தியுடன், மோட்டார் சைக்களில் சுற்றிவந்த 2 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களை விசாரித்த போது மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபர் திரு.பட்டினம் பண்டக சாலையைச்சேர்ந்த முகம்மது ஆசிக்(20), பின்னால் பெரிய கத்தியை வைத்திருந்த நபர் காரைக்கால் உமர் புலவர் வீதியைச்சேர்ந்த ஹமீது சுல்தான்(19) என்பதும் தெரிவந்தது. அவர்களின் மோட்டார் சைக்கிள், கையில் வைத்திருந்த பெரிய கத்தியை பறிமுதல் செய்த போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
    • புத்தாண்டு தினத்தன்று இரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்டங்களுக்கு தடை.

    புதுச்சேரி:

    பி.எப்.7 எனப்படும் உருமாறிய கொரோனா வைரசின் பரவலை தடுப்பதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மேற்படி நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இதைப்போல பிற வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கும் விமான நிலையத்தில் பரிசோதனை நடத்தப்படுகிறது.

    இந்நிலையில், புதுச்சேரியில் பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் என புதுச்சேரி அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

    பொது இடங்கள், கடற்கரை, பூங்காக்கள் மற்றும் திரையரங்குகளில் அனைவரும் கட்டாயம் முக கவம் அணிய வேண்டும்.

    புத்தாண்டு தினத்தன்று இரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்டங்களுக்கு தடை.

    அனைத்து கல்வி நிறுவனங்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கையைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • அங்கிருந்த சிசிடிவி மற்றும் மின்சாதனங்களை இரும்பு பைப்பால் அடித்து உடைத்துவிட்டு தப்பிவிட்டார்.
    • வங்கி ஏடிஎம். இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபரை தேடி வந்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் பாரதியார் வீதியில் தனியார் (கரூர் வைஸ்யா) வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு கடந்த 25-ந் தேதி அதிகாலை அடையாளம் தெரியாத மர்ம நபர், வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை இரும்பு பைப்பால் அடித்து நொறுக்கி அதிலிருந்து பணத்தை திருட முயற்சித்தார். இயந்திரத்தை முழுமையாக உடைத்து பணம் எடுக்க முடியாததால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர், அங்கிருந்த சிசிடிவி மற்றும் மின்சாதனங்களை இரும்பு பைப்பால் அடித்து உடைத்துவிட்டு தப்பிவிட்டார். இது தொடர்பாக வங்கி மேலாளர் ஸ்ரீதர் காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வங்கி ஏடிஎம். இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபரை தேடி வந்தனர்.

    இந்நிலையில் ஏ.டி.எம். இயந்திரம் அருகே, மது போதையில் சந்தேகத்திற்கிடமாக சுற்றி வந்த ஒருவரை, இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி, சப் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். நாகை மாவட்டம் திட்டச்சேரியை சேர்ந்த விக்னேஷ் (வயது 24) என்பதும், ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்ததையும் ஒப்புக்கொண்டார். மேலும் தான் வேலையில்லாமல் சுற்றி வருவதாகவும், சகோதரி திருமணத்திற்கு பணம் இல்லாமல், மது அருந்திவிட்டு யோசித்த பொழுது, போதையில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து விட்டதாகவும் வாக்குமூலம் அளித்தார். அதன் பெயரில் போலீசார் விக்னேஷை கைது செய்து சிறையில அடைத்தனர்.

    • தனியார் ஆஸ்பத்திரியில் நர்சிங் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.
    • எலிசபெத் ராணி, தோழி ஆத்ரின் மேரியிடம் ஹேரி அருள்ராஜ் தன்னை ஏமாற்றுவதாக தெரிவித்துள்ளார்.

    காரைக்காலை அருகே கோட்டுச்சேரி கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர் செல்வம் அமல்ராஜ். இவரது மனைவி எலிசபெத் ராணி(வயது45). எலிசபெத் ராணி காரைக்காலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சிங் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். எலிசபெத் ராணிக்கு, சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரியும் ஆத்ரின் மேரி என்பவர் பழக்கம், ஆத்ரின் மேரி, கடந்த 2020-ல், அதே ஊரைச்சேர்ந்த ஹரி அருள்ராஜ்(39) என்பவரை அறிமுகப்படுத்தியுள்ளார். 

    சிறிது நாள் நல்லவர் போல் நடித்த ஹரி அருள்ராஜ், செக் குடியரசு நாட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தான் வேலை செய்வதாகவும், அங்குள்ள நர்ஸ் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறது. அந்த வேலையை தான் வாங்கித்தருவதாகவும் கூறி, கடந்த 2021ல் தனது வங்கி கணக்கிற்கு, ரூ.1 லட்சத்து ஐம்பதாயிரத்தை அனுப்பிவைக்கும்படி எலிசபத் ராணியிடம் பணத்தை பெற்றுள்ளார். 2 மாதம் ஆகியும், வேலை வாங்கித்தராததால், ஹரி அருள்ராஜிடம் வேலை தொடர்பாக கேட்ட பொழுது, விரைவில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி வந்ததாக தெரிகிறது. இது குறித்து, எலிசபெத் ராணி, தோழி ஆத்ரின் மேரியிடம் ஹேரி அருள்ராஜ் தன்னை ஏமாற்றுவதாக தெரிவித்துள்ளார். 

    தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம், எலிசபெத் ராணி ஹரி அருள் ராஜை செல்போனில் தொடர்பு கொண்டு, வெளிநாட்டில் வேலை வேண்டாம். கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்துவிடுமாறு கேட்டுள்ளார். அதற்கு, ஹரி அருள்ராஜ் பணத்தை கொடுக்க முடியாது. இதற்கு மேல் பணத்தை கேட்டு தொந்தரவு செய்தால், காரைக்கால் வந்து உன்னை கொலை செய்து புதைத்து விடுவேன் என்றும் கொலை மிரட்டல் விடுத்ததார் இதனால் அதிர்ச்சி யடைந்த எலிசபெத் ராணி, கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீ சார் வழக்குப்பதிவு செய்து, ஹரி அருள்ராஜை தேடிவருகின்றனர்.

    • மர்ம நபர், வங்கி ஏ.டி.எம் மெஷினை இரும்பு பைப்பால் அடித்து நொறுக்கி திறக்க முயற்சி செய்து உள்ளார்.
    • இந்த சம்பவத்தில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான ஏ.டி.எம் இயந்திரம் முற்றிலும் சேதம் ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    காரைக்கால் பாரதியார் வீதியில் தனியார் (கரூர் வைஸ்யா) வங்கியின் ஏ.டி.எம் மையம் உள்ளது. இந்த மை யத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர், வங்கி ஏ.டி.எம் மெஷினை இரும்பு பைப்பால் அடித்து நொறுக்கி திறக்க முயற்சி செய்து உள்ளார். ஏ.டி.எம் மெஷினை முழுமையாக உடைத்து பணம் எடுக்க முடியாததால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர், அங்கிருந்த சிசிடிவி மற்றும் மின்சாதனங்களை இரும்பு பைப்பால் அடித்து உடைத்துள்ளார்.

    தொடர்ந்து, அங்குள்ள இ-சர்வைலன்ஸ் கருவி மூலம் வங்கி மேலாளர் ஸ்ரீதருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், ஸ்ரீதர் வங்கி ஊழியர்கள் மற்றும் காரைக்கால் நகர காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ஏ.டி.எம் உடைக்கப்பட்டு இருந்த பகுதிகளை ஆய்வு செய்தனர். இந்த சம்பவத்தில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான ஏ.டி.எம் இயந்திரம் முற்றிலும் சேதம் ஏற்பட்டது. இது தொடர்பாக வங்கி மேலாளர் ஸ்ரீதர் காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வங்கி ஏடிஎம் எந்திரத்தை உடைக்க முயன்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஜிப்மருக்கு இந்த ஆண்டு ரூ.1340 கோடி நிதி ஒதுக்கீடு.
    • இடை நிலை சுகாதார சேவை மேம்பாட்டுக்காக ரூ.70 கோடி ஒதுக்கீடு.

    மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வுத்துறை இணை மந்திரி பாரதி பிரவீன் பவார் புதுச்சேரியில் நடைபெற்ற சுகாதாரத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: 


    புதுச்சேரி அரசு சுகாதாரத் துறையை சிறப்பாகச் செயல்படுகின்றது. பேறு காலத்தில் தாய்மார்கள் இறப்பு விகிதம் மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதம் வெகுவாகக் குறைத்துள்ளது. பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 29,000 நோயாளிகள் இலவசமாக உயர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

    தேசிய சுகாதார இயக்கத்தின்கீழ் புதுச்சேரிக்கு ஆரம்ப நிலை மற்றும் இடை நிலை சுகாதார சேவை மேம்பாட்டுக்காக ரூ.70 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. அதேபோல் பிரதம மந்திரி ஆயுஷ்மான் பாரத் உள்கட்டமைப்பு மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் புதுச்சேரிக்கு ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிறுவனமான ஜிப்மருக்கு இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு ரூ.1340 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 


    முன்னதாக புதுச்சேரியில் மருத்துவப் பல்கலைக்கழகம் அமைத்தல், மருந்தியல் பூங்கா உருவாக்குதல், புற்றுநோய்க்கு கதிரியக்க சிகிச்சை மையம் அமைத்தல் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சர் ரங்கசாமி மத்திய இணை மந்திரி பாரதி பிரவீன் பவாரிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் புதுச்சேரி பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், ஜிப்மர் இயக்குனர் டாக்டர் ராகேஷ் அகர்வால், புதுச்சேரி அரசின் நலவழித்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

    • மாநில அந்தஸ்து விவகாரம் பல ஆண்டு பிரச்சினை..
    • மாநில அந்தஸ்து இல்லாவிட்டாலும் மக்களுக்கு தேவையானது கிடைக்கிறது.

    புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் கிறிஸ்துமஸ் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கேக் வெட்டினார்கள். பின்னர் ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: 




    புதுச்சேரி வளர்ச்சி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு நல்ல நிர்வாகம், நல்ல ஆட்சி நடப்பதுதான் காரணம். எனவே ஒன்றும் நடக்கவில்லை என்பதெல்லாம் உண்மை அல்ல. முதலமைச்சருடன் சுகாதார மேம்பாட்டுக்காக ஆலோசனை நடத்தியுள்ளேன். கொரோனாவுக்கு மூக்கு வழியாக செலுத்தும் சொட்டு மருந்து தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் குறித்து குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. ஏழை மாணவர்களின் நிலை உயர இந்த பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டது. தமிழ் நசுக்கப்படும் என்பதெல்லாம் ஆதாரமற்ற குற்றச்சாட்டு. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திலும் தமிழ் படிக்கலாம். கடந்த 10 வருடமாக தமிழை ஏன் கட்டாய பாடமாக்கவில்லை என்று மதுரை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. 


    மாநில அந்தஸ்து விவகாரத்தில் எம்.பி.யாக இருந்தவர்கள் எல்லாம் பாராளுமன்றத்தில் இதற்காக எத்தனை முறை பேசினார்கள்? புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருந்தாலும் மக்கள் நலன் சார்ந்த அனைத்து நிகழ்ச்சிகளும் நடக்கிறது. மாநில அந்தஸ்து விவகாரம் பல ஆண்டு பிரச்சினை. அதை உடனடியாக செய்ய முடியாது.

    அதற்காக பாராளுமன்றத்தில் விவாதிக்கவேண்டும். அங்கு அனுமதிபெறவேண்டும். இது அரசியலுக்காக சொல்லப்படுகிறது. புதுவைக்கு மாநில அந்தஸ்து இல்லாவிட்டாலும் மக்களுக்கு தேவையானது கிடைக்கிறது. நாங்கள் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடுகிறோம். ஆனால் நான் சார்ந்த தமிழகத்தின் முதலமைச்சர் இந்து பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்க மறுக்கிறார் என்ற ஆதங்கம் எனக்கு உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வலுவடைந்து வருகிறது.
    • கடல் இன்று 4 -வது நாளாக சீற்றத்துடன் காணப்பட்டது.

    புதுச்சேரி:

    வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வலுவடைந்து வருவதால், கடலோர கிராமங்களில் லேசான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. கடல் இன்று 4 -வது நாளாக சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால், காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த காரைக்கால் மேடு, கிளிஞ்சல்மேடு, கோட்டுச்சேரி மேடு உள்ளிட்ட 11 மீனவ கிராமத்தைச்சேர்ந்த சுமார் 15 ஆயிரம் விசை மற்றும் பைபர் படகு மீனவர்கள் இன்று 4-வது நாளாக கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.

    இதனால், காரைக்காலில் இருந்து மீன் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்லா ததால், பெரும்பாலுமான விசை ப்படகுகள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் வரிசையாக கட்டிவைக்கப்பட்டுள்ளது. பைபர் படகுகள் காரைக்கால் அரசலாற்றின் கரையோரமும், மீனவ கிராமங்களிலும் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • புதுவை அரியாங்குப்பம், தேங்காய்திட்டு பகுதியிலிருந்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்றனர்.
    • மாநில அந்தஸ்து வேண்டும் என்றால் அரசு ரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் டெல்லியை அணுக வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை சமீபமாக பலமாக எழுந்துள்ளது.

    அரசியல் கட்சிகளிடையே இதுதொடர்பாக நாள்தோறும் விவாதமும் நடந்து வருகிறது. சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் கிடைக்கும் வகையில், மாநில அந்தஸ்து வேண்டும் என்ற குரலை உயர்த்தியுள்ளனர்.

    இந்நிலையில் புதுவை அரியாங்குப்பம், தேங்காய்திட்டு பகுதியிலிருந்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்றனர். அந்த பக்தர்கள் கோவிலின் 18-ம் படிக்கு கீழே புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டு பேனரை பிடித்துள்ளனர்.

    இந்த படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த பேனரில், புதுவை மக்கள் சுயமரியாதையை காக்க மாநில அந்தஸ்து வேண்டும். இது புதுவை மக்களின் குரல் என குறிப்பிட்டுள்ளனர்.

    மாநில அந்தஸ்து வேண்டும் என்றால் அரசு ரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் டெல்லியை அணுக வேண்டும். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பாராளுமன்றம், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும். அதை விடுத்து கோவில் முன்பு பேனர் பிடிப்பதால் மாநில அந்தஸ்து கிடைத்துவிடுமா? என்ற விவாதமும் எழுந்துள்ளது.

    • முதலமைச்சராக இருந்துவிட்டு, சட்டமன்ற தேர்தலில்கூட நிற்க திராணியற்று, பயந்து போய் ஒதுங்கியவர் நாராயணசாமி.
    • அரசு பள்ளிகளிலும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

    புதுச்சேரி:

    புதுவை அமைச்சர் லட்சுமி நாராயணன் ரகசியங்களை வெளியிடும் வகையில் தோலை உரிப்பேன் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.

    இதுகுறித்து புதுவை மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் தோலை உரிப்பேன் என பேசியது நாகரீகமற்ற செயல். அவர் தனது பேச்சை வாபஸ் பெற வேண்டும். அவர் என்ன செய்தார்? என்பதை வெளியிட ரொம்பகாலம் ஆகாது. மாநில அந்தஸ்து தொடர்பாக ஏனாம் மக்களுக்கு நாராயணசாமி கடிதமே எழுதி கொடுத்துள்ளார். என் வாழ்நாள் உள்ள வரையில் மாநில அந்தஸ்தை ஆதரிக்கமாட்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    அவரின் தோல்தான் உரிந்துபோயுள்ளது. முதலமைச்சராக இருந்துவிட்டு, சட்டமன்ற தேர்தலில்கூட நிற்க திராணியற்று, பயந்து போய் ஒதுங்கியவர் நாராயணசாமி. அவர் தோலை மக்கள்தான் உரித்து காட்டியுள்ளனர். நாங்கள் மக்களோடு மக்களாக அவர்களுக்கு தேவையான பணிகளை செய்து வருகிறோம்.

    எங்கள் மக்கள் பணி தொடர்ந்து நடக்கும். அனைத்து அரசு பள்ளிகளிலும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளோம். மத்திய அரசின் அனுமதி பெற வேண்டியுள்ளது. இதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சி.பி.எஸ்.இ.பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டாலும் தமிழ் பாடம் நிச்சயம் இருக்கும். தேவைப்படுவோர் தமிழை தேர்வு செய்து படிக்கலாம்.

    புதுவை, காரைக்காலில் உள்ளவர்கள் தமிழை தேர்வு செய்வார்கள். மாகியில் உள்ளவர்கள் மலையாளம், ஏனாமை சேர்ந்தவர்கள் தெலுங்கு பாடத்தை தேர்வு செய்யலாம். பெற்றோர்கள் சி.பி.எஸ்.இ பாடத்தில் சேர அதிகம் விரும்புகின்றனர். நீட், ஜே.இ.இ. போன்ற தேர்வுகளை எதிர்கொள்ள இந்த பாடத் திட்டத்தை அதிகளவு தேர்வு செய்கின்றனர். எனவே புதுவை மாநில மக்களின் தேவைகளை அறிந்தே இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×