search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A teenager who cut himself with a knife"

    • குமார்(36) மற்றும் சுந்தர்(36) என்பவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு அடித்துகொண்டனர். இதனை பார்த்த பாரதி, இருவரையும் விலக்கி விட்டுள்ளார்.
    • அதனை தொடர்ந்து, கையில்வைத்திருந்த கத்தியால், பாரதியின் கன்னம்,கைகளில் வெட்டியுள்ளார்

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே கோட்டுச்சேரி இராயன்பாளையம் நேதாஜிநகரைச்சேர்ந்தவர் பாரதி(வயது32). பெயிண்டர் வேலை செய்துவரும் இவர், தனது , நண்பர் வினோத் என்பவருடன், கோட்டுச்சேரி சாராயக்க டையில் குடிக்க சென்றுள்ளனர். அப்போது, வட மட்டத்தைச்சேர்ந்த குமார்(36) மற்றும் சுந்தர்(36) என்பவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு அடித்துகொண்டனர். இதனை பார்த்த பாரதி, இருவரையும் விலக்கி விட்டுள்ளார். மாலை 7 மணி சுமாருக்கு, வீட்டு வாசலில் நின்ற பாரதியை அழைத்து, நீ என்ன குமாருக்கு ஆதரவாக பேசுகிறாயா என கேட்டு சண்டை போட்டுள்ளார்.

    அதனை தொடர்ந்து, கையில்வைத்திருந்த கத்தியால், பாரதியின் கன்னம்,கைகளில் வெட்டியுள்ளார். தடுக்க வந்த பாரதியின் மனைவி சசியையும் சுந்தர் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடிவிட்டதாக கூற ப்படுகிறது. தொடர்ந்து, கணவன், மனைவி இருவரும் கோட்டுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பின்னர் பாரதி கோட்டுச்சேரி காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய சுந்தரை தேடிவருகின்றனர்.

    ×