என் மலர்tooltip icon

    ஒடிசா

    • செங்கோலை புதிய பாராளுமன்றத்தில் வைப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்
    • ஆட்சி அதிகாரத்தின் மாற்றத்துக்கு அடையாளமாக கருதப்படுகிறது செங்கோல்

    புதுடெல்லி:

    டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்றத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். புதிய பாராளுமன்றத்தின் மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே, தமிழகத்தை சேர்ந்த திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோல் நிறுவப்பட உள்ளது.

    அந்த செங்கோல் ஆங்கிலேயர்களிடம் இருந்து ஆட்சி அதிகாரம் இந்தியர்களுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டதன் அடையாளமாக முதல் பிரதமர் நேருவுக்கு வழங்கப்பட்டதாகும். அந்த செங்கோல் புனித நீரால் சுத்தம் செய்யப்பட்டு ஆங்கிலேயர்களிடம் வழங்கப்பட்டு, பிறகு ஆதீனம் மூலம் நேருவின் கைக்கு வந்தது. அப்போது கோளறு பதிகம் பாடப்பட்டது. இத்தகைய சிறப்புடைய அந்த செங்கோல் அலகாபாத்தில் உள்ள நேரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. ஆட்சி அதிகாரத்தின் மாற்றத்துக்கு அடையாளமாக கருதப்படும் அந்த செங்கோலை புதிய பாராளுமன்றத்தில் வைப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று பிரதமர் மோடி முடிவு செய்து உத்தரவிட்டார். அதன்படி இன்று அந்த செங்கோல் சபாநாயகர் இருக்கை அருகே நிறுவப்படுகிறது.

    புதிய பாராளுமன்றம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தும் என்று பிரதமர் மோடி கூறினார். அத்துடன், புதிய பாராளுமன்றம் தொடர்பான ஒரு வீடியோவை பகிர்ந்த அவர், மக்கள் தங்களின் எண்ணங்களையும். கருத்துகளையும் தங்கள் குரலில் பதிவிட்டு, எனது பாராளுமன்றம் எனது பெருமை என்ற ஹேஷ்டேக்குடன் பகிரவேண்டும் என கேட்டுக்கொண்டார். அதன்படி அந்த வீடியோவை ஏராளமானோர் பகிர்ந்துவருகின்றனர்.

    இந்நிலையில் ஒடிசாவைச் சேர்ந்த மணற்சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து புதிய பாராளுமன்றத் திறப்பு விழாவிற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது டுவிட்டரில் ''எனது பாராளுமன்றம் எனது பெருமை'' என்ற ஹேஷ்டேக்குடன் பகிர்ந்துள்ளார்.

    புதிய பாராளுமன்ற கட்டிடம், புதிய இந்தியாவின் சின்னம். பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, தேசத்திற்கான உங்கள் அர்ப்பணிப்புக்காக உங்களுக்கு பாராட்டுக்கள். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்தமாக பாராளுமன்றம் கட்டப்பட்டதை நினைத்து எங்கள் இதயம் பெருமிதத்தால் நிறைந்துள்ளது, எனவும் சுதர்சன் பட்நாயக் குறிப்பிட்டுள்ளார்.

    • அவருக்கு கடன்கள் ஏதும் இல்லை.
    • ரூ.6,434 மதிப்பிலான 1980 மாடல் கார் வைத்துள்ளார்.

    புவனேசுவரம் :

    ஒடிசா மாநிலத்தில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதாதளம் கட்சியின் ஆட்சி நடக்கிறது.

    இந்த மாநிலத்தில் முதல்-மந்திரியும், மந்திரிகளும் தங்களது சொத்துப்பட்டியலை அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குக்கு ரூ.65 கோடியே 40 லட்சம் சொத்துக்கள் உள்ளன. இது கடந்த ஆண்டு டிசம்பர் மாத நிலவரம் ஆகும். அவருக்கு கடன்கள் ஏதும் இல்லை.

    2020-21 நிதி ஆண்டில் அவரது சொத்துகள் மதிப்பு ரூ.64 கோடியே 97 லட்சம் ஆகும். சொத்துகள் விவரம் வருமாறு:-

    * முதல்-மந்திரி அலுவலக இணையதளத்தின்படி, முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் அசையும் சொத்துகள் மதிப்பு 2021-22 ஆண்டில் அதிகரித்துள்ளது. அசையாச்சொத்துகள் மதிப்பில் மாற்றம் இல்லை.

    * அசையும் சொத்துகள் மதிப்பு ரூ.12 கோடியே 52 லட்சம் ஆகும். இதில் டெல்லி, புவனேசுவரம், ஹிஞ்சிலிகட். பர்கார் ஆகிய இடங்களில் உள்ள வங்கிக்கணக்கு இருப்புகள், நகைகள், கார் அடங்கும்.

    * அசையாச்சொத்துகளில் புவனேசுவரம் விமான நிலையம் அருகே உள்ள அவரது நவீன் நிவாஸ் பங்களாவின் மதிப்பு ரூ.9 கோடியே 52 லட்சத்து 46 ஆயிரத்து 190 ஆகும். டெல்லியில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சாலையில் அமைந்துள்ள ரூ.43 கோடியே 36 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பிலான சொத்தில் பாதி, நவீன் பட்நாயக்கிற்கு இருக்கிறது.

    * ரூ.1 கோடி அளவுக்கு வங்கியில் டெபாசிட்டுகள் உள்ளன. ரூ.9 கோடி மதிப்பில் ரிசர்வ் வங்கி பத்திரங்கள் வைத்துள்ளார். அஞ்சலக சேமிப்பு ரூ.1½ கோடி உள்ளது. டெல்லி ஜன்பத்தில் உள்ள வங்கியில் ரூ.70 லட்சம், புவனேசுவரத்தில் உள்ள பாரத ஸ் டேட் வங்கியில் ரூ.21 லட்சம் சேமிப்பு உள்ளது.

    * ரூ.3½ லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளும், ரூ.6,434 மதிப்பிலான 1980 மாடல் காரும் வைத்துள்ளார்.

    * ஒடிசாவில் 5 முறை முதல்-மந்திரி பதவி வகித்துள்ள நவீன் பட்நாயக்கின் அசையா சொத்துகள் மதிப்பு ரூ.52 கோடியே 88 லட்சம் ஆகும். இவை அவரது பெற்றோர் பிஜூ பட்நாயக், கியான் பட்நாயக் வழி வந்தவை ஆகும்.

    நவீன் பட்நாயக் மந்திரிசபையில் மந்திரிகள் அசோக் சந்திர பாண்டா, பிரித்தி ரஞ்சன் கடாய், ரானேந்திர பிரதாப் ஸ்வைன், பிரமிளா மாலிக், நிரஞ்சன் பூஜாரி, உஷா தேவி, அடானு சப்யசாகி நாயக், ராஜேந்திர தோயில்கியா, டுகானி சாகு, பிரதீப் குமார் அமத், பி.கே. தேப், பசந்தி ஹேம்ப்ராம், ரோகித் பூஜாரி, அஷ்விணி பத்ரா ஆகிய 14 பேர் கோடீசுவரர்கள் ஆவார்கள்.

    ஒடிசாவின் உருக்கு, சுரங்கத்துறை மந்திரி பிரபுல்லா மாலிக்கிற்கு ரூ.42 லட்சம் மதிப்பிலான சொத்துகள் உள்ளன. இவர்தான் வசதி குறைந்த மந்திரி ஆவார். இவர்கள் அத்தனை பேரின் சொத்து விவரங்களும் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

    இது அபூர்வமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒடிசாவின் முதல் வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
    • இந்த ரெயில் ஒடிசாவின் பூரியில் இருந்து மேற்கு வங்காளத்தின் ஹவுரா வரை செல்லும்.

    புவனேஷ்வர்:

    ஒடிசாவின் முதல் வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரெயில் ஒடிசா மாநிலத்தின் பூரியில் இருந்து மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா வரை செல்லும்

    மேலும், 8,200 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு ரெயில்வே திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    அப்போது பேசிய பிரதமர் மோடி, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஹவுரா மற்றும் பூரி இடையே மத, கலாச்சார மற்றும் ஆன்மீக இணைப்பை மேலும் வலுப்படுத்தும். தற்போது நாட்டில் 15 வந்தே பாரத் ரெயில்கள் செயல்பட்டு வருகின்றன. அவை இணைப்பு மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டையும் மேம்படுத்துகின்றன என தெரிவித்தார்.

    • நவீன் பட்நாயக்கின் தந்தை பிஜூ பட்நாயக் கடந்த 1997-ம் ஆண்டு மறைந்தார்.
    • ஸ்வர்கத்வார் மயானத்தை அழகுபடுத்த மாநில அரசு 2019-ம் ஆண்டு நடவடிக்கை எடுத்தது.

    புவனேஸ்வர் :

    ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்கின் தந்தையும், முன்னாள் முதல்-மந்திரியுமான பிஜூ பட்நாயக் கடந்த 1997-ம் ஆண்டு மறைந்தார். அவரது உடல் புரி நகரில் உள்ள மயானத்தில் (ஸ்வர்கத்வார்) தகனம் செய்யப்பட்டு அங்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. புரி நகரை மேம்படுத்தவும், இந்த மயானத்தை அழகுபடுத்தவும் மாநில அரசு கடந்த 2019-ம் ஆண்டு நடவடிக்கை எடுத்தது. இதற்கான திட்டத்தை செயல்படுத்த இந்த நினைவிடம் தடையாக இருந்தது.

    இதை அறிந்த நவீன் பட்நாயக், தனது தந்தையின் நினைவிடத்தை அகற்றுமாறு உத்தரவிட்டு உள்ளார். இதை அவரது தனிச்செயலாளரும், 13 ஆண்டுகளாக அவருடன் நெருக்கமாக இருந்து வருபவருமான பாண்டியன், துபாயில் நேற்று முன்தினம் ஒடிசா மக்கள் மத்தியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது கூறியுள்ளார். தனது தந்தை மக்களின் இதயங்களில் வசிப்பதாகவும், கல்லில் அல்ல என்றும் நவீன் பட்நாயக் கூறியதாக பாண்டின் மேலும் குறிப்பிட்டார். தற்போது அந்த பகுதியில் நினைவிடத்துக்கு பதிலாக வெறும் பெயர் பலகை மட்டுமே இருப்பதாக அவர் தெரிவித்தார்.

    • ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.
    • அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், என்னை பொருத்தவரை மூன்றாம் அணிக்கு வாய்ப்பில்லை என்றார்.

    புவனேஸ்வர்:

    ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும், புவனேஸ்வரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை புரிக்கு மாற்றுவது தொடர்பாக பேசியதாகவும் தெரிவித்தார்.

    மேலும், என்னை பொருத்தவரை மூன்றாம் அணிக்கு வாய்ப்பில்லை. வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் எந்த எதிர்க்கட்சி தலைவர்களுடனும் பிஜூ ஜனதா தளம் கூட்டணி வைக்காது, தனித்து போட்டியிடும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், ஒடிசா சட்டசபை சபாநாயகராக இருந்துவரும் பைக்ரன் கேசரிஆருக்கா மற்றும் ஸ்ரீகாந்தா சாகு, சமீர் ரஞ்சன் தாஸ் ஆகிய இரு மந்திரிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதையடுத்து முதல் மந்திரி நவீன் பட்நாயக் புதிய அமைச்சர்கள் யார் யார் என்பது குறித்து விரைவில் அறிவிக்க உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒடிசாவில் கலஹண்டி மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் உள்ளது.
    • காட்டில் மாவோயிட்டுகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    ஒடிசாவில் கலஹண்டி மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் உள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள காட்டில் மாவோயிட்டுகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒரு போலீஸ்காரர் காயம் அடைந்தார்.

    • ஜனாதிபதி பதவி ஏற்ற 10 மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக அவர் சொந்த ஊருக்கு சென்றார்.
    • சரணாலயம் 2 ஆயிரத்து 750 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. அங்கு ராயல் பெங்கால் புலிகளும், ஆசிய யானைகளும் உள்ளன.

    புவனேஸ்வர்:

    ஒடிசாவில் உள்ள வனவிலங்குகள் சரணாலயத்தை ஜனாதிபதி சுற்றி பார்த்தார். ஜனாதிபதி பதவி ஏற்று 10 மாதங்களுக்கு பிறகு அவர் சொந்த ஊருக்கு சென்றார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு, 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் ஒடிசா மாநிலத்துக்கு சென்றார். மயூர்பஞ்ச் மாவட்டத்தில், தனது சொந்த ஊரான ரைரங்பூருக்கு சென்றார்.

    ஜனாதிபதி பதவி ஏற்ற 10 மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக அவர் சொந்த ஊருக்கு சென்றார். இரவில், அங்குள்ள தனது வீட்டில் தங்கினார்.

    இந்நிலையில், நேற்று 2-வது நாள் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். ஜனாதிபதி, சந்தால் பழங்குடியின பிரிவை சேர்ந்தவர். சந்தாலி மொழியின் கையெழுத்து வடிவத்தை உருவாக்கிய பண்டிட் ரகுநாத் முர்முவின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.

    அதையொட்டி, தண்டபோஷ் கிராமத்தில் உள்ள அவரது சிலைக்கு திரவுபதி முர்மு மரியாதை செலுத்தினார். பஹத்பூர் கிராமத்தில், தன்னுடைய கணவர் சியாம்சரண் முர்மு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர், சிமிலிபால் வனவிலங்குகள் சரணாலயத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சென்றார். இதற்கு முன்பு எந்த ஜனாதிபதியும் அங்கு சென்றது இல்லை.

    அவரது வருகையையொட்டி, சரணாலய நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தது. நேற்று முன்தினமும், நேற்றும் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.

    அந்த சரணாலயம் 2 ஆயிரத்து 750 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. அங்கு ராயல் பெங்கால் புலிகளும், ஆசிய யானைகளும் உள்ளன. வாகனம் மூலம் ஜனாதிபதிக்கு சரணாலயம் சுற்றி காண்பிக்கப்பட்டது. புலி, மான், யானை உள்ளிட்ட விலங்குகளை அவர் ரசித்து பார்த்தார்.

    பரேய்பானி, ஜோரண்டா ஆகிய இடங்களில் உள்ள நீர்வீழ்ச்சிகளையும் ஜனாதிபதி பார்வையிட்டார். பரேய்பானி நீர்வீழ்ச்சி, 399 மீட்டர் உயரத்தில் இருந்து விழுகிறது. இந்தியாவின் மிக உயரமான 2-வது நீர்வீழ்ச்சி இதுவே ஆகும்.

    பின்னர், சிமிலிபாலில் இருந்து பாரிபடாவுக்கு ஜனாதிபதி சென்றார். அங்கு இரவு தங்கினார். இன்று அவர் ஒரு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு விட்டு, டெல்லி திரும்புகிறார்.

    • குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று முதல் 6ம் தேதி வரை அரசுமுறைப் பயணமாக ஒடிசா செல்கிறார்.
    • பரிபாடாவில் உள்ள மகாராஜா ஸ்ரீராம் சந்திர பஞ்சா டியோ பல்கலைக்கழகத்தின் 12வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார்.

    குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று முதல் 3 நாள் அரசுமுறைப் பயணமாக ஒடிசா செல்கிறார். அங்கு, ஒடிசா மாநிலத்தின் ராய்ரங்பூர், பஹத்பூர் மற்றும் பரிபடா மாவட்டங்களுக்கு செல்லும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

    இதுதொடர்பாக ஜனாதிபதி அலுவலகத் தகவல்படி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று (மே 4 ஆம் தேதி) பஹாத்பூரில் திறன் பயிற்சி மையம் மற்றும் சமூக மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    அதைத் தொடர்ந்து, ஹட்பத்ராவில் உள்ள பிரம்மா குமாரிகள் மையத்திற்குச் செல்லும் அவர், அங்கு பிரம்மா குமாரிகளின் மையத்தில் 'போதையில்லா ஒடிசா' பிரச்சாரத்தைத் தொடங்கி வைக்கிறார்.

    இன்று மாலை, ரைரங்பூர் ஸ்டேடியத்தில் ரைரங்பூர் நகராட்சியால் அவருக்கு மரியாதை அளிக்கப்படும் குடிமக்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார்.

    மே 5ம் தேதி அன்று (நாளை) குடியரசுத் தலைவர் முர்மு பண்டிட் ரகுநாத் முர்முவின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறார். பின்னர், அவர் சிமிலிபால் சரணாலயத்திற்கு செல்கிறார்.

    மே 6ம் தேதி, பரிபாடாவில் உள்ள மகாராஜா ஸ்ரீராம் சந்திர பஞ்சா டியோ பல்கலைக்கழகத்தின் 12வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார்.

    • பூஞ்ச் தாக்குதலுக்கு ஜெய்ஷ் தீவிரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளது.
    • வீரரின் குடும்பத்தினருக்கு முதல்வர் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

    காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் ராணுவ வாகனம் மீது துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்த தாக்குதலில் ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இதில் 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக இறந்தனர்.

    தேசிய ரைபிள்ஸ் படையை சேர்ந்த வீரர்கள் பலர் படுகாயம் அடைந்தனர்.

    காஷ்மீரில் நடந்த தாக்குதல் குறித்து தெரியவந்தும் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினர்.

    இதற்கிடையே பூஞ்ச் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாத அமைப்பினர் குறித்து ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த பூஞ்ச் தாக்குதலுக்கு ஜெய்ஷ் தீவிரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளது.

    இந்நிலையில், உயிரிழந்த ராணுவ வீரர்களில் ஒருவரான ஒடிசாவை சேர்ந்த லான்ஸ் நாயக் தேபாஷிஷ் பஸ்வாலின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்குவதாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

    மேலும், லான்ஸ் நாயக் தேபாஷிஷ் பஸ்வாலை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு முதல்வர் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

    • சம்பித்பத்ரா, கிராம மக்கள் மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்க விரும்புகிறேன்.
    • யாத்திரையின் போது நெருப்பின் மீது நடந்து தாயின் ஆசிர்வாதத்தை பெறுவதன் மூலம் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

    ஒடிசா மாநிலத்தின் பூரி மாவட்டத்தில் உள்ள சமங் பஞ்சாயத்திற்குட்பட்ட ரெபதி ராமன் கிராமத்தில் நடந்த யாத்திரைக்கு அம்மாநிலத்தின் பா.ஜனதா கட்சியை சேர்ந்த மூத்த தலைவரும், தேசிய செய்தி தொடர்பாளருமான சம்பித்பத்ரா சென்றுள்ளார். அப்போது அங்கு ஜமுசாத்ரா எனப்படும் அக்னி குண்ட நிகழ்ச்சி நடந்துள்ளது. இதில் சம்பித்பத்ரா எரியும் நெருப்பில் 10 மீட்டர் தூரம் நடந்து சென்ற வீடியோக்கள் டுவிட்டரில் பகிரப்பட்டுள்ளது.

    அதனுடன் சம்பித்பத்ரா,கிராம மக்கள் மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்க விரும்புகிறேன். எனவே தான் யாத்திரையின் போது நெருப்பின் மீது நடந்து தாயின் (துலாம் தெய்வம்) ஆசிர்வாதத்தை பெறுவதன் மூலம் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் மக்கள் நலனுக்காகவும், அப்பகுதியில் அமைதிக்காகவும் தான் அக்னி குண்டத்தில் இறங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஒடிசா மாநிலம் பரிபாடாவில் அதிகபட்ச வெப்பநிலை 41.6 டிகிரி செல்சியஸ் ஆக பதிவு.
    • பள்ளிகளை ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 16 வரை மூடுமாறு நிர்வாகத்திற்கு அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவு.

    இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் வெயில் காலம் தொடங்கி வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியால் அம்மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இதில் குறிப்பாக, ஒடிசா மாநிலம் பரிபாடாவில் அதிகபட்ச வெப்பநிலை 41.6 டிகிரி செல்சியஸ் ஆகவும், மாநில தலைநகர் புவனேஸ்வரில் அதிகபட்ச வெப்பநிலை 40.7 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில், ஒடிசா மாநிலம் முழுவதும் அதிகரித்து வரும் வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு, அனைத்து அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளை ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 16 வரை மூடுமாறு நிர்வாகத்திற்கு அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் சீரான குடிநீர் விநியோகம் மற்றும் மின்சாரம் சீராக வழங்கிட அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். தீவிரமான வெப்ப அலை நிலையைக் கருத்தில் கொண்டு, அங்கன்வாடிகள் மற்றும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், 12 ஆம் வகுப்பு வரை, நாளை முதல் ஏப்ரல் 16 வரை மூடப்படும் என்று முதல்வர் நவீன் பட்நாயக் அதிகாரப்பூர்வ உத்தரவில் தெரிவித்துள்ளார்.

    • ரெயில் ஓட்டுனர் விபத்து குறித்து ஜரபாதா நிலைய அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
    • விபத்தால் ஒரு சில ரெயில்கள் சிறிது நேரம் தாமதமாக புறப்பட்டன.

    ஒடிசா மாநிலம், அங்குல் மாவட்டம், ஜார்பாடா வனப்பகுதியில் வாராந்திர சம்பல்பூர்-ஷாலிமார் மஹிமா கோசைன் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் யானை உயிரிழந்தது.

    கடந்த ஏப்ரல் 6ம் தேதி அன்று இரவு போயிண்டா மற்றும் ஜரபதா நிலையங்களுக்கு இடையே வாராந்திர ரெயில் இயங்கியது. அப்போது, யானை தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயிலில் அடிப்பட்டு உயிரிழந்ததாக கிழக்கு கடற்கரை ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இந்த சம்பவத்திற்குப் பிறகு, ரெயில் ஓட்டுனர் விபத்து குறித்து ஜரபாதா நிலைய அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

    பின்னர், வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்று யானையின் சடலத்தை மீட்டனர். இந்த சம்பவத்தால் ஒரு சில ரெயில்கள் சிறிது நேரம் தாமதமாக புறப்பட்டன.

    யானை இறந்த சம்பவத்தை ரெயில்வே துறை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளதாகவும் மற்றும் நிர்வாகத்தின் உயர் மட்டத்தில் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தது.

    ×