என் மலர்
இந்தியா

நகர மேம்பாட்டு பணிகளுக்காக தந்தையின் நினைவிடத்தை அகற்ற உத்தரவிட்ட நவீன் பட்நாயக்
- நவீன் பட்நாயக்கின் தந்தை பிஜூ பட்நாயக் கடந்த 1997-ம் ஆண்டு மறைந்தார்.
- ஸ்வர்கத்வார் மயானத்தை அழகுபடுத்த மாநில அரசு 2019-ம் ஆண்டு நடவடிக்கை எடுத்தது.
புவனேஸ்வர் :
ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்கின் தந்தையும், முன்னாள் முதல்-மந்திரியுமான பிஜூ பட்நாயக் கடந்த 1997-ம் ஆண்டு மறைந்தார். அவரது உடல் புரி நகரில் உள்ள மயானத்தில் (ஸ்வர்கத்வார்) தகனம் செய்யப்பட்டு அங்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. புரி நகரை மேம்படுத்தவும், இந்த மயானத்தை அழகுபடுத்தவும் மாநில அரசு கடந்த 2019-ம் ஆண்டு நடவடிக்கை எடுத்தது. இதற்கான திட்டத்தை செயல்படுத்த இந்த நினைவிடம் தடையாக இருந்தது.
இதை அறிந்த நவீன் பட்நாயக், தனது தந்தையின் நினைவிடத்தை அகற்றுமாறு உத்தரவிட்டு உள்ளார். இதை அவரது தனிச்செயலாளரும், 13 ஆண்டுகளாக அவருடன் நெருக்கமாக இருந்து வருபவருமான பாண்டியன், துபாயில் நேற்று முன்தினம் ஒடிசா மக்கள் மத்தியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது கூறியுள்ளார். தனது தந்தை மக்களின் இதயங்களில் வசிப்பதாகவும், கல்லில் அல்ல என்றும் நவீன் பட்நாயக் கூறியதாக பாண்டின் மேலும் குறிப்பிட்டார். தற்போது அந்த பகுதியில் நினைவிடத்துக்கு பதிலாக வெறும் பெயர் பலகை மட்டுமே இருப்பதாக அவர் தெரிவித்தார்.






