என் மலர்tooltip icon

    குஜராத்

    • குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான விபத்தில் 270 பேர் உயிரிழந்தனர்.
    • 135 உடல்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், 101 உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 242 பேருடன் மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

    விமானம் விழுந்ததில் விடுதி மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள சிலரும் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 270 ஆக உயர்ந்துள்ளது.

    அகமதாபாத் விமான விபத்தில் 57 வயதான போகிலால் மற்றும் அவரது மனைவி 55 வயதான ஹன்சா ஆகியோர் உயிரிழந்தனர்.

    தனது தம்பி போகிலால் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாத அவரது அக்கா (65) கோமதி மாரடைப்பால் உயிரிழந்தார். .

    இதில் துக்கம் என்னவென்றால் போகிலால் உடல் இன்னும் அடையாளமா காணப்படாததால் அவருக்கு இன்னும் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட நிலையில், கோமதியின் இறுதிச் சடங்குகள் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.

    • குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான விபத்தில் 270 பேர் உயிரிழந்தனர்.
    • 135 உடல்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், 101 உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 242 பேருடன் மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

    விமானம் விழுந்ததில் விடுதி மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள சிலரும் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 270 ஆக உயர்ந்துள்ளது.

    உடல்கள் அனைத்தும் எரிந்ததால் அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டது. டி.என்.ஏ. பரிசோதனைகள் மேற்கொண்டு உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. இதுவரை 135 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதில் 101 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 101 பேரில் 5 பேர் விமானத்தில் பயணம் செய்யாதவர்கள் ஆவார்கள்.

    விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1.25 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என டாடா குழுமம் அறிவித்துள்ளது.

    • அகமதாபாத்தில் கடந்த 12-ம் தேதி நடந்த விமான விபத்தில் 279 பேர் உயிரிழந்தனர்.
    • இந்த விமான விபத்து இந்தியா மட்டுமின்றி உலக அளவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 12-ம் தேதி நடந்த விமான விபத்தில் 279 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    விமானத்தில் பயணம் செய்த 241 பேர் மற்றும் அகமதாபாத்தில் விமானம் விழுந்த பயிற்சி டாக்டர்கள் விடுதியில் தங்கியிருந்த மாணவர்களும் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், விமானம் விழுந்த நேரத்தில் விடுதியில் தங்கியிருந்த மாணவர்களில் சிலர் அங்கிருந்து தப்பிச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

    சில மாணவர்கள் இரண்டாவது மாடியில் இருந்து பெட்ஷீட் மூலம் கீழே குதித்து தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    • விமானத்தில் பயணம் செய்த விஸ்வாஸ்குமார் என்ற பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
    • விபத்தில் காயம் அடைந்தவர்களை சேலைகள் மற்றும் படுக்கை விரிப்புகள் பயன்படுத்தி மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து கடந்த 12-ந்தேதி லண்டனுக்கு புறப்பட்ட விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் அருகில் இருந்த பி.ஜே. மருத்துவக்கல்லூரி விடுதி கட்டிடத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    இதில் விமானம் வெடித்து சிதறியதில் அதில் பயணம் செய்த 241 பேர், மருத்துவ கல்லூரி விடுதியில் இருந்த 5 மாணவர்கள், பொதுமக்கள் 24 பேர் என மொத்தம் 270 பேர் பலியாகினர்.

    விமானத்தில் பயணம் செய்த விஸ்வாஸ்குமார் என்ற பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இந்நிலையில் விமான விபத்து நடந்த சில நிமிடங்களில் அப்பகுதியை சேர்ந்த கட்டுமான தொழிலதிபர் ராஜூபடேல் என்பவர் தனது குழுவினருடன் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.

    விபத்தில் காயம் அடைந்தவர்களை சேலைகள் மற்றும் படுக்கை விரிப்புகள் பயன்படுத்தி மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் கட்டிடம் இடிந்து சிதறி கிடந்த இடிபாடுகளில் இருந்து மொத்தம் 800 கிராம் (சுமார் 100 பவுன்) தங்க நகைகள் மற்றும் ரூ.80 ஆயிரம் ரொக்கப்பணம், பாஸ்போர்ட்டுகள், பகவத் கீதை ஆகியவற்றையும் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இந்த நகைகள் ஆவணபடுத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என உள்துறை இணை மந்திரி ஹர்ஸ் சங்கவி தெரிவித்தார்.

    • இதுவரை 76 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
    • 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

    அகமதாபாத்தில் கடந்த ஜூன் 12 அன்று நடந்த ஏர் இந்தியா 171 விமானம் அருகில் உள்ள மாணவர் விடுதி மீது விழுந்ததில், விமானத்தில் பயணம் செய்த 241 பேரும், விடுதி பகுதியில் இருந்த 29 பேரும் உயிரிழந்தனர். விமானத்தில் இருந்த ஒரு பயணி மட்டுமே காயங்களுடன் உயிர் தப்பினார்.

    உடல்களை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட சிரமங்களால், உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இதுவரை 76 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

    உயிரிழந்த விமான பயணிகளில் முன்னாள் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியும் ஒருவர். அவரின் உடல், டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு, நேற்று முன்தினம் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று, விஜய் ரூபானியின் உடல், மூவர்ணக் கொடியால் போர்த்தப்பட்டு, ராஜ்கோட்டில் உள்ள அவரது சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

    • தந்தையுடன் விடுமுறையை கழிக்க வந்தவனுக்கு, ஏர் இந்தியா விமானம் மிகப்பெரிய துயரத்தை ஏற்படுத்தி விட்டது.
    • ஆர்யனிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

    அகமதாபாத்தில் கடந்த 12-ந்தேதி நடந்த விமான விபத்து உலகையே உலுக்கி உள்ளது. இதில் விமானத்தில் இருந்தவர்கள் மற்றும் அது விழுந்த மருத்துவக்கல்லூரி விடுதியில் இருந்தவர்கள் என சுமார் 270 பேர் உயிரிழந்து உள்ளனர்.

    இந்திய வரலாற்றில் கடந்த 30 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான பதிவான இந்த விபத்து பலரையும் மனதளவில் பாதித்து இருக்கிறது. இதில் குஜராத்தின் ஆரவல்லி மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆர்யன் அசரியின் நிலைமை சற்று வித்தியாசமானது.

    11-ம் வகுப்பு முடித்து விடுமுறையில் இருந்த ஆர்யன், அகமதாபாத்தில் தங்கியிருக்கும் தனது தந்தையை பார்க்கவும், 12-ம் வகுப்புக்கான பாடப்புத்தகங்கள் வாங்குவதற்குமாக கடந்த 12-ந்தேதி முதல் முறையாக அகமதாபாத் வந்திருந்தான்.

    முன்னாள் ராணுவ வீரரான அவனது தந்தைக்கு சமீபத்தில்தான் அகமதாபாத் மெட்ரோ ரெயில் நிலையத்தில் காவலாளியாக பணி கிடைத்தது. எனவே அகமதாபாத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார். அகமதாபாத் விமான நிலையத்துக்கும், விமானம் விழுந்த பி.ஜே. மருத்துவக்கல்லூரிக்கும் இடையே உள்ள ஒரு 2 மாடி வீட்டில் அவர் வசித்து வருகிறார்.

    தந்தையுடன் விடுமுறையை கழிக்க வந்தவனுக்கு, ஏர் இந்தியா விமானம் மிகப்பெரிய துயரத்தை ஏற்படுத்தி விட்டது. விமானம் துயரமான முடிவை எட்டவிருப்பதை அறியாமலேயே படம் பிடித்ததுடன், அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவும் முடியாமல் தவித்து வருகிறான்.

    இது குறித்து செய்தியாளர்களிடம் சிறுவன் கூறியதாவது:-

    நான் 11-ம் வகுப்பை கடந்த மாதம்தான் முடித்தேன். அத்துடன் 12-ம் வகுப்பிலும் சேர்ந்து விட்டேன். எனவே 12-ம் வகுப்பு புத்தகங்களை வாங்குவதற்காக தந்தையின் வாடகை வீட்டுக்கு 12-ந்தேதி நண்பகல் சுமார் 12.30 மணியளவில் வந்தேன்.

    தந்தையின் வீட்டை அடைந்த சில நிமிடங்களில் விமானம் ஒன்று வீட்டுக்கு மேலே வந்து கொண்டிருப்பதை பார்த்தேன். உடனே அதை அருகில் இருந்து பார்க்கும் ஆசையில் மொட்டை மாடிக்கு வேகமாக சென்றேன். ஏனெனில் அதுவரை விமானத்தை நான் அருகில் இருந்து பார்த்தது இல்லை.

    எனவே மாடியில் சென்று விமானம் தலைக்கு மேலே பறப்பதை ஆசையாக பார்த்ததுடன், அதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தேன். அப்போது விமானம் கீழ்நோக்கி சென்று கொண்டிருந்தது. எனவே விமான நிலையத்தின் மறுபுறம் அதை தரையிறக்கக்கூடும் என நினைத்தேன்.

    ஆனால் திடீரென அந்த விமானம் விழுந்து வெடித்து சிதறியது. என் கண்களுக்கு முன்பே அந்த துயரம் நடந்தது. அது பயங்கரமாக இருந்தது.

    இவ்வாறு ஒருவித பயத்துடனேயே அன்றைய நிகழ்வுகளை விவரித்தான்.

    தான் பதிவு செய்த வீடியோவை தனது தந்தைக்கு ஆர்யன் அனுப்பி இருந்தான். பின்னர் அது வைரலானது.

    விமான விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளுக்கு இந்த வீடியோ முக்கிய ஆதாரமாக பயன்படுகிறது. அதன் அடிப்படையில் விசாரித்து வரும் அவர்கள், ஆர்யனிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

    அவர்களிடம் நடந்த சம்பவங்களை விவரித்த அவன், அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. எனினும் தனது படிப்பை தொடர்வதற்காக சொந்த ஊர் திரும்பி உள்ளான். இவ்வாறு அகமதாபாத் விமான விபத்து நேரடியாகவும், மறைமுகமாகவும் பலரை பாதித்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    • விஜய் ரூபானி குடும்பத்தினரை பிரதமர் மோடி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
    • கோர விமான விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த 241 பேர் பலியானார்கள்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து நேற்று மதியம் லண்டன் புறப்பட்ட AI-171 விமானம், சில நிமிடங்களில் அங்குள்ள மருத்துவக் கல்லூரி விடுதிக்கட்டிடத்தின் மீது மோதி வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த 241 பேர் பலியானார்கள்.

    மருத்துவக்கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதியதால், அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் 7 மருத்துவ மாணவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த விபத்தில் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி சிக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மேலும், விஜய் ரூபானி குடும்பத்தினரை பிரதமர் மோடி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

    இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண அவர்களின் உறவினர்களுக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்யப்பட்டது.

    இந்நிலையில், இதில், விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டது. விபத்தில் மீட்கப்பட்ட விஜய் ரூபானியின் உடல் டி.என்.ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    • பல இடங்களில் கடன் வாங்கி மகளின் கனவை நிறைவேற்றி உள்ளார்.
    • பயல் காதிக் படித்து முடித்ததும் நல்ல வேலைக்கு சென்றால் குடும்பம் வறுமையில் இருந்து மீளும் எனவும், கடனை திருப்பி செலுத்தி விடலாம் எனவும் தந்தை நினைத்துள்ளார்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா போயிங் 787 விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்தனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமான நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விஷ்வாஸ் குமார் என்பவரை தவிர விமானத்தில் பயணித்த 241 பேரும், மருத்துவக் கல்லூரி மீது விமானம் மோதியதில் 10 மாணவர்கள், பொதுமக்கள் 33 பேர் என மொத்த 274 பேர் உயிரிழந்துள்ளனர்

    நாட்டையே உலுக்கிய இச்சம்பவம் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான விமான விபத்தாக பதிவாகி உள்ளது. இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களை கண்டறிவதற்காக டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டு உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

    இதனிடையே, விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து வெளியாகும் தகவல்கள் பலரையும் ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்துகிறது.

    முதல்முறையாக விமான பயணம் செய்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் மரணம்:

    குஜராத் மாநிலம் ஹிமாத்நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகளான பயல் காதிக் விபத்துக்குள்ளான விமானத்தில் தான் வெளிநாட்டுக்கு முதல்முறையாக பயணம் செய்துள்ளார். உதய்பூரில் பிடெக் முடித்துள்ள காதிக், இதையடுத்து எம்டெக் படிப்பதற்காக லண்டன் செல்ல முடிவு செய்தார். இதற்காக அவரது தந்தையான ஆட்டோ ஓட்டுநர் பல இடங்களில் கடன் வாங்கி மகளின் கனவை நிறைவேற்றி உள்ளார். இவர் குடும்பத்தில் இருந்து மேற்படிப்புக்காக வெளிநாட்டிற்கு விமானத்தில் சென்ற முதல் நபர் ஆவார்.



    படிப்பு நேரம் போக மாணவர்களுக்கு டியூசன் சொல்லிக் கொடுத்து வந்த வருமானத்தில் குடும்பத்திற்கு பெரும் உதவியாக அவர் இருந்துள்ளார். பயல் காதிக் படித்து முடித்ததும் நல்ல வேலைக்கு சென்றால் குடும்பம் வறுமையில் இருந்து மீளும் எனவும், கடனை திருப்பி செலுத்தி விடலாம் எனவும் தந்தை நினைத்துள்ளார். லண்டன் செல்வதற்காக தயாரான பயல் காதிக் சம்பவத்தன்று காலை 10 மணிக்கே விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அவருடன் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வந்து அவரை வழியனுப்பி வைத்தனர். ஆனால் விதியோ... பயல் காதிக் விமான விபத்தில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். இவரது இழப்பு அவரது குடும்பத்தினரை மீளா துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.

    விமான நிலையத்திற்கு வெளியே குடும்பத்தினருடன் பயல் காதிக் எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

    • எல்லைகளையும் விசாக்களையும் பற்றி மக்கள் பேசுகிறார்கள்.
    • AI-171 விமான விபத்தில் 274 பேர் உயிரிழந்தனர்.

    நாட்டையே உலகிய அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த பயணிகளின் கதைகள் நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது.

    உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண உறவினர்கள் அகமதாபாத் சிவில் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.

    இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்காக 20 மர சவப்பெட்டிகளுடன் ஒருவர் நேற்று மருத்துவமனை வந்தார். அவரை ஊடங்கங்கள் பேட்டி கண்டன.

    47 வயதான நிமேஷ் வகேலா அவ்வூரை சேர்ந்த சவப்பெட்டி தயாரிக்கும் தொழிலாளி ஆவார். 15 ஆண்டுகளாக இத்தொழிலில் நிமேஷ் ஈடுபட்டு வருகிறார்.

    சராசரியாக ஒரு நாளைக்கு 7 சவப்பெட்டிகள் தயாரிக்கும் நிமேஷ், AI-171 விமான விபத்தில் 274 பேர் உயிரிழந்த நிலையில், 100 சவப்பெட்டிகளுக்கான அவசர ஆர்டரைப் பெற்றார். 

    "எல்லைகளையும் விசாக்களையும் பற்றி மக்கள் பேசுகிறார்கள். ஆனால் சவப்பெட்டிகளுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை. மரணத்தில் எல்லாம் ஒரே மாதிரியாகத் தெரிகிறது" என்கிறார் நிமேஷ்.

    உயிரிழந்தவர்களின் உடல்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப வழக்கமாக உதவுவதாகவும் கூறிய அவர், "ஆனால் இது வித்தியாசமாக உணர்வு" என்றும் கூறினார்.

    அதிக தேவை இருந்தபோதிலும், விலையை உயர்த்தவோ அல்லது முன்கூட்டிய பணம் வாங்கவோ அவர் மறுத்துவிட்டார்.

    "இது லாபத்திற்கான நேரம் அல்ல" என்று கூறிவிட்டு மேலும் சவப்பெட்டிகளைத் தயாரிக்க தனது பட்டறையை நோக்கி அவர் புறப்பட்டார். 

    • விமான விபத்தில், விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர்.
    • விடுதியில் இருந்த பயிற்சி மருத்துவர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்ததாக தகவல்.

    அகமதாபாத் விமான விபத்தில், விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். விமானம் பி.ஜே. மருத்துவ கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதியதால், விடுதி மற்றும் விடுதி அருகில் இருந்தவர்களும் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

    விடுதியில் இருந்த பயிற்சி மருத்துவர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த விமான விபத்தில் சிக்கியவர்கள் ஒவ்வொரு நபரும் ஏதோ ஒரு காரணத்திற்காக பயணம் மேற்கொண்டனர். இதில், உயிரிழந்த ஒவ்வொரு உயிருக்கும் உருக்கமான கதைகளும் இருந்திருக்கிறது.

    அந்த வகையில், பிரிட்டனில் உயிரிழந்த மனைவியின் அஸ்தியுடன் குஜராத் வந்த அர்ஜூன் மறுபாய் என்பவர் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்துள்ளார்.

    தனது மனைவியின் ஆசைப்படி அஸ்தியை நர்மதா ஆற்றில் கரைத்துவிட்டு விமானத்தில் ஏறியவர் விபத்தில் உயிரிழந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • விடுதி அருகில் உள்ள டீக்கடை எரிந்து சாம்பலாகியுள்ளது.
    • டீக்கடை நடத்தி வந்தவரின் மகன் உயிரிழந்த நிலையில், தாய் படுகாயத்துடன் உயிர் பிழைத்துள்ளார்.

    அகமதாபாத் விமான விபத்தில், விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். விமானம் பி.ஜே. மருத்துவ கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதியதால், விடுதி மற்றும் விடுதி அருகில் இருந்தவர்களும் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

    விடுதியில் இருந்த பயிற்சி மருத்துவர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் விடுதி அருகே டீக்கடை நடத்தி வந்த பெண் ஒருவர், படுகாயம் அடைந்த நிலையில், மரத்தடியில் தூங்கிக்கொண்டிருந்த அவரது 14 வயது மகன் தீயில் கருகி உயிரிழந்துள்ளான். அவரை அடையாளம் காண முடியாததால் டிஎன்ஏ பரிசோதனைக்காக காத்திருக்கிறார்கள்.

    சீதாபான் என்ற அந்த பெண் டீக்கடையில் இருந்துள்ளார். அவரது மகன் ஆகாஷ் படானி (வயது 14) டீக்கடை அருகில் உள்ள மரத்தடியில் தூங்கிக் கொண்டிருந்துள்ளான். விமானம் மோதி தீப்பிடித்ததில் டீக்கடையும் எரிந்துள்ளது. இதில் சீதாபென் படுகாயம் அடைந்துள்ளார்.

    அப்போது விமானத்தின் உடைந்த பாகம் ஒன்று ஆகாஷ் படானியின் தலையை பலமாக தாக்கியுள்ளது. அதேவேளையில் சீதாபானுவுக்கு தீக்காயம் ஏற்பட்டதால் மகனை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகாஷ் தலையை தாக்கிய பாகம் எரியத் தொடங்கியுள்ளது. இதில் ஆகாஷ் கரிக்கட்டையாகியுள்ளார். தன் கண்முன்னே மகன் கருகிய நிலையில் காப்பாற்ற முடியவில்லையே என சிகிச்சை பெற்று வரும் சீதாபென் கதறியது பார்ப்போரை கண்கலங்கச் செய்துள்ளது.

    திருமணம் ஆன 2 நாளிலேயே விமானத்தில் பயணம் செய்த நபர் பலியான சோகம்

    பவிக் மகேஷ்வாரி (26) என்பவர் லண்டனில பணிபுரிந்து வந்துள்ளார். இவர் விடுமுறைக்கான வதோதராவிற்கு கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னதாக வந்துள்ளார். விடுமுறைக்கு வந்த பவிக் மகேஷ்வாரிக்கு குடும்பத்தினர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.

    அவசரமாக பெண் பார்த்துள்ளனர். தற்போது எளிமையாக திருமணம் செய்து கொள்ளலாம். பின்னர் வரும்போது பெரிய அளவில் வரவேற்பு விழா எடுத்துக் கொள்ளலாம் என முடிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில்தான் திருமணம் முடிந்து 2 நாள் கழித்து லண்டனுக்கு சென்றபோது, விமான விபத்தில் உயிரிழந்துள்ளார். விமான நிலையத்திற்கு அவருடைய மனைவி வழி அனுப்ப வந்துள்ளார். வழி அனுப்பிவிட்டு வீடு திரும்புவதற்குள் இப்படி ஒரு துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.

    பவிக் மகேஷ்வாரி லண்டனில் படித்து அங்கேயே வேலை பார்த்து வந்துள்ளார். வருடத்தில் இரண்டு வாரம் குடும்பத்தினரை சந்திக்க வதோதரா வந்து செல்வாராம். அப்படி இந்த வருடம் வரும்போது கட்டாயம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என குடும்பத்தினர் வற்புறுத்தியதால் திருமணம் செய்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஜூன் 10ஆம் தேதி திருமணம் முடிந்து வீடே மகிழ்ச்சியில் திகைத்தது. தற்போது துக்க வீடாக மாறியுள்ளதாக பவிக் மகேஷ்வர் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    • விமானம் மருத்துவ விடுதியில் பயங்கரமாக மோதியது.
    • விடுதியில் இருந்து பலர் உயிரிழந்துள்ளனர்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மருத்துவமனை கட்டிட வளாகத்தில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டுமே அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

    விமானம் மோதிய கட்டிடத்தில் பி.ஜே. மருத்துவ கல்லூரியின் மருத்துவ விடுதி உள்ளது. மதிய நேரம் என்பதால் பயிற்சி மருத்துவர்கள் ஏராளமானோர் (சுமார் 60 பேர்) மெஸ்சில் உணவு அருந்தி கொண்டிருந்தனர். விமான விபத்தில் இந்த மெஸ் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் விபத்து ஏற்பட்டபோது மெஸ்சில் சமையல் வேலை செய்யும் பெண்மணி, தனது இரண்டு வயது பேத்தியுடன் இருந்தது தெரியவந்துள்ளது. அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களது உடலை தேடும் நிலை, அந்த பெண்மணியின் மகனுக்கு ஏற்பட்டுள்ளது.

    விடுதி மெஸ்சில் சமையல் ஊழியராக ஷர்லாபென் தாகூர் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் வழக்கம்போல் சப்பாத்தி, கறி சமைத்துள்ளார். ஷர்லாபென் தாகூர், தனது மகனின் 2 வயது மகளையும் (பேத்தி) அன்றைய தினம் அழைத்துச் சென்றுள்ளார்.

    வழக்கமாக சமைக்கும் உணவை ஷர்லாபென் தாகூர் மகன், மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று ஸ்டாஃப்கள் மற்றும் மருத்துவர்களுக்கு வழங்குவார். அதேபோல் விபத்து நடைபெற்ற நேற்றைய தினம் உணவு வழங்க சென்றபோதுதான் விபத்து ஏற்பட்டுள்ளது.

    விமானம் மோதி பலத்த சேதம் அடைந்தது, வழக்கமாக அவரது தாயார் இருக்கும் இடம். இதனால் தனது மகளுடன் தாய் இறந்திருக்கலாம் என அஞ்சுகிறார். இன்னும் கட்டிட இடிபாடுகள் முற்றிலுமாக அகற்றப்படவில்லை. முற்றிலுமாக அகற்றப்பட்டால்தான் விடுதியில் இருந்தவர்கள் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது தெரியவரும்.

    இதனால் தனது தாய் மற்றும் இரண்டரை வயது மகளை கவலையுடன் தேடிவருகிறார்.

    ×