என் மலர்
குஜராத்
- ஏர் இந்தியா விமானம் டேக்ஆஃப் ஆன சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது.
- இந்த கோர விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த 241 பேர் பலியானார்கள்.
குஜராத் மாநிலம் அகமதாபத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட் ஏர் இந்தியா விமானம் டேக்ஆஃப் ஆன சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் 242 பேர் பயணம் செய்தனர். விபத்தில் ஒருவரை தவிர்த்து 241 பேரும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- விமானத்தில் 242-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.
- பயணிகளின் நிலை குறித்து விபத்து நடைபெற்ற இடத்தில் தீயணைப்பு துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.17 மணிக்கு லண்டன் புறப்பட்ட தனியார் விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி உள்ளது. விமான நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.
விமானத்தில் 242-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பயணிகளின் நிலை குறித்து விபத்து நடைபெற்ற இடத்தில் தீயணைப்பு துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் மீட்பு பணிகளும் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, விமானம் புறப்பட்ட சில மணி நேரத்தில் விபத்துக்குள்ளான பதைபதைக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
- விமானம் டேக் ஆஃப் ஆனபோது விபத்து ஏற்பட்டதாக குஜராத் ஊடகங்கள் தகவல் வெளியாகி உள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில வினாடிகளிலேயே விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
மேகனி நகரில் நடந்த விமான விபத்தை தொடர்ந்து விமான நிலையம் அருகே கரும்புகை வெளியேறி வரும் நிலையில் விமானத்தில் இருந்தவர்கள் நிலை குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது.
பிற்பகல் 1.7 மணி அளவில் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
விமானம் டேக் ஆஃப் ஆனபோது விபத்து ஏற்பட்டதாக குஜராத் ஊடகங்கள் தகவல் வெளியாகி உள்ளது.
விபத்துக்குள்ளான விமானம் ஏர் இந்தியா AI 171 எனவும், இந்த விமானத்தின் மொத்த இருக்கைகள் எண்ணிக்கை 242 பேர் பயணம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அப்பகுதியில் தீயணைப்புத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து சடலங்கள் தூக்கி செல்லப்படும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி உள்ளன.
- விமான விபத்தை தொடர்ந்து விமான நிலையம் அருகே கரும்புகை வெளியேறி வருகிறது.
- விமானத்தில் இருந்தவர்கள் நிலை குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமான நிலையம் அருகே விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
மேகனி நகரில் விமானம் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமான விபத்தை தொடர்ந்து விமான நிலையம் அருகே கரும்புகை வெளியேறி வரும் நிலையில் விமானத்தில் இருந்தவர்கள் நிலை குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான விமானம் ஏர் இந்தியா AI 171 என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- நீங்கள் என்னை எவ்வளவு மோசமாக நடத்துவீர்கள் என்று எனக்குத் தெரியும். மரணம் அதைவிட சிறந்தது.
- போலீசார் அவனை கண்ணியமாக நடத்துவதாக பலமுறை உறுதியளித்தனர்.
குஜராத்தில் பல மணி நேரம் போலீசாரையே திக்குமுக்காட வைத்த ஒரு குற்றவாளியின் வீடியோ வைரலாகி வருகிறது.
துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த அபிஷேக் தோமர் என்பவன், போலீசார் தன்னை தேடி வந்ததை அறிந்ததும் ஐந்தாம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினான்.
அபிஷேக் தோமர் அகமதாபாத்தில் உள்ள சிவம் அவாஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததும், போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். வீட்டின் கதவைத் தட்டியபோது, அபிஷேக் திறக்கவில்லை.
இதற்கிடையே, அபிஷேக் ஐந்தாம் மாடியில் உள்ள சமையலறை கதவு வழியாக வெளியே வந்து, சுவற்றின் ஓரத்தில் நின்றபடி தற்கொலை மிரட்டல் விடுத்தான்.
"சரணடைவதை விட சாவது மேல்" என்று அவன் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தான். வீடியோ ஒன்றில் , "நீங்கள் என்னை எவ்வளவு மோசமாக நடத்துவீர்கள் என்று எனக்குத் தெரியும். மரணம் அதைவிட சிறந்தது" என்று அபிஷேக் கூறுவது பதிவாகியுள்ளது.
அபிஷேக் தோமர் சுவற்றின் ஓரத்தில் நின்று மிரட்டல் விடுத்ததை பார்த்ததும், ஏராளமானோர் கீழே கூடினர்.
இதற்கிடையில், இந்த ஆபத்தான சூழ்நிலையை கையாள போலீசார் திணறினர். போலீசார் அவனை கண்ணியமாக நடத்துவதாக பலமுறை உறுதியளித்தும், அபிஷேக் சமாதானமாகவில்லை.
நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர, தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர் இணைந்து சுமார் மூன்று மணி நேரம் போராடி, அபிஷேக்கை பத்திரமாக கீழே இறக்கினர். சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவத்தின் பின் அபிஷேக் இறுதியாக கைது செய்யப்பட்டான்.
- நாடு முழுவதும் உள்ள பல்வேறு மையங்களில் இன்றும், நாளையும் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- நுழைவுத் தேர்வுக்கான (NFAT 2025) தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தில் சேர இன்றும், நாளையும் நடைபெற இருந்த நுழைவுத் தேர்வுகள் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் மற்றும் எதிர்பாராத தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக, நாடு முழுவதும் உள்ள பல்வேறு மையங்களில் இன்றும், நாளையும் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நுழைவுத் தேர்வு (NFAT 2025) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தில் பல்வேறு கல்விப் படிப்புகளில் சேருவதற்கான NFAT தேர்வு 2025 எழுத திட்டமிடப்பட்டுள்ள அனைவருக்கும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஏற்பட்ட சிரமத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறோம்.
நுழைவுத் தேர்வுக்கான (NFAT 2025) தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஐ.பி.எல். இறுதிப்போட்டியைக் காண பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் அகமதாபாத் வந்தார்.
- பிரதமர் நரேந்திர மோடி மைதானத்தில் இருந்தபடி ஆர்சிபி அணிக்கு அவர் உற்சாகம் கொடுத்தார்.
அகமதாபாத்:
ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியைக் காண பிரிட்டன் நாட்டின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் அகமதாபாத் வந்துள்ளார். மைதானத்தில் இருந்தபடி ஆர்சிபி அணிக்கு அவர் உற்சாகம் கொடுத்தார்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய ரிஷி சுனக் கூறியதாவது:
லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டை இடம்பெற செய்ததில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு முக்கிய பங்கு உள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட்டை மாற்றம் காண செய்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் இதில் விளையாட வேண்டும் என விரும்புகின்றனர். மகளிரையும் இதில் ஈடுபட செய்யும் வகையில் மகளிர் பிரீமியர் லீக் தொடர் நடத்தப்படுகிறது. அது வரவேற்கத்தக்கது.
நான் விராட் கோலியின் மிகப் பெரிய ரசிகர். அவர் ஒரு ஜாம்பவான். நான் பிரிட்டன் பிரதமராக இருந்தபோது கோலி ஆட்டோகிராப் உடன் கூடிய பேட் ஒன்றை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தீபாவளி பரிசாக அளித்தார்.
இங்கிலாந்துக்கு இந்தியா கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அது சிறப்பான தொடராக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.
நான் பெங்களூருவை சேர்ந்த குடும்பத்தில் இருந்து பெண் எடுத்துள்ளேன். அதனால் ஆர்சிபி அணிக்கு தான் எனது ஆதரவு என தெரிவித்தார்.
- நேற்று நடந்த குவாலிபையர் 2 ஆட்டத்தில் பஞ்சாப் அணி மும்பையை வீழ்த்தியது.
- இதன்மூலம் பஞ்சாப் அணி ஐபிஎல் தொடரில் இரண்டாவது முறையாக இறுதிக்கு முன்னேறியது.
அகமதாபாத்:
ஐ,பி.எல். போட்டியில் பிளே ஆப் சுற்று கடந்த 29-ம் தேதி தொடங்கியது. குவாலிபையர் 1 ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை வெளியேற்றியது.
நேற்று நடந்த குவாலிபையர் 2 ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி
2வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில், அகமதாபாத்தில் நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி. அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது.
இதன்மூலம் எந்த அணி வென்றாலும் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்க்கது. இரு அணிகளும் வெற்றிபெற போராடும் என்பதால் இறுதிப்போட்டி ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையப் போவது நிச்சயம்.
- முதலில் ஆடிய மும்பை அணி 203 ரன்களைக் குவித்தது.
- அடுத்து ஆடிய பஞ்சாப் 207 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
அகமதாபாத்:
ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது.
மழை காரணமாக போட்டி 2 மணி நேரம் தாமதமானது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழக்கு 203 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 8 ரன்னில் அவுட்டானார். பேர்ஸ்டோவ் 24 பந்தில் 38 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 29 பந்தில் 44 ரன்னும், திலக் வர்மா 26 பந்தில் 44 ரன்னும் குவித்தனர். கடைசி கட்டத்தில் நமன் தீர் 18 பந்தில் 37 ரன் எடுத்து அவுட்டானார்.
இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் களமிறங்கியது. பிரப் சிம்ரன் சிங் 8 ரன்னும், பிரியான்ஷு ஆர்யா 20 ரன்னும் எடுத்தனர்.
3வது விக்கெட்டுக்கு ஜோஷ் இங்கிலிஸ், ஷ்ரேயஸ் அய்யர் ஜோடி இணைந்தது. இங்லிஸ் 21 பந்தில் 38 ரன்கள் எடுத்தார்.
அடுத்து இறங்கிய நேஹல் வதேரா ஷ்ரேயசுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 48 ரன்னில் அவுட்டானார்.
ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் ஷ்ரேயஸ் அய்யர் பொறுப்புடன் ஆடி சிக்சர், பவுண்டரிகளாக விளாசி அரை சதம் கடந்தார்.
இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவரில் 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஷ்ரேயஸ் அய்யர் 41 பந்தில் 8 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 87 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
- டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி 203 ரன்களைக் குவித்தது.
அகமதாபாத்:
ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் இன்று நடைபெறும் குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது.
மழை காரணமாக போட்டி 2 மணி நேரம் தாமதமானது.
அதன்படி, மும்பை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 8 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் அதிரடியாக ஆடினர்.
பேர்ஸ்டோவ் 24 பந்தில் 38 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 29 பந்தில் 44 ரன்னும், திலக் வர்மா 26 பந்தில் 44 ரன்னும் குவித்தனர்.
ஹர்திக் பாண்ட்யா 15 ரன்னில் வெளியேறினார்.
கடைசி கட்டத்தில் நமன் தீர் 18 பந்தில் 37 ரன் எடுத்து அவுட்டானார்.
இறுதியில், மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழக்கு 203 ரன்கள் குவித்தது.
- ஐ,பி.எல். தொடரில் பிளே ஆப் சுற்று கடந்த 29-ம் தேதி தொடங்கியது.
- குவாலிபையர்1 ஆட்டத்தில் ஆர்சிபி அணி பஞ்சாப் கிங்சை வீழ்த்தியது.
அகமதாபாத்:
ஐ,பி.எல். போட்டியில் பிளே ஆப் சுற்று கடந்த 29-ம் தேதி தொடங்கியது. குவாலிபையர்1 ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
நேற்று முன்தினம் நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 20 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை வெளியேற்றியது.
இந்நிலையில், இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி. அணியுடன் மோதப்போகும் அணி எது என்பது இன்று தெரியும்.
அகமதாபாத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் குவாலிபையர் 2 ஆட்டத்தில் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ்-ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். பெங்களூரு அணியுடன் இறுதிப்போட்டிக்கு மோதப் போவது பஞ்சாப்பா, மும்பையா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 26-ம் தேதி ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் தோற்கடித்தது. இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும். அதே நேரத்தில் பஞ்சாப் அணி குவாலிபையர் 1 போட்டியில் பெங்களூரு அணியிடம் 101 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது.
மும்பை இந்தியன்ஸ் வலுவாக இருப்பதால் அந்த அணியை வீழ்த்துவது பஞ்சாப்புக்கு சவாலானதே. 2-வது முறையாக பஞ்சாப் இறுதிப்போட்டிக்கு நுழையும் ஆர்வத்துடன் இருக்கிறது. இதற்கு முன் 2014-ல் அந்த அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது.
பஞ்சாப் அணியில் பிரப்சிம்ரன் (517 ரன்), கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் (516 ரன்), பிரியான்ஷ் ஆர்யா (431 ரன்), அர்ஷ்தீப் சிங் (18 விக்கெட்), ஜோஷ் இங்கிலீஷ், வதேரா, ஷசாங்க் சிங் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.
5 தடவை ஐ.பி.எல். கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப்புக்கு பதிலடி கொடுத்து 7-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வேட்கையில் இருக்கிறது.
அந்த அணியின் பந்து வீச்சில் பும்ரா துருப்புச்சீட்டாக இருக்கிறார். அவர் இதுவரை 18 விக்கெட் வீழ்த்தியுள்ளார். சூர்யகுமார் யாதவ் (673 ரன்), ரோகித் சர்மா (410 ரன்), கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, திலக் வர்மா, பேர்ஸ்டோவ், நமன் தீர் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், டிரென்ட் போல்ட் (21 விக்கெட்), சாண்ட்னர் போன்ற சிறந்த பவுலர்களும் அந்த அணியில் உள்ளனர்.
இரு அணிகளும் வெற்றி பெற போராடும் என்பதால் குவாலிபையர் 2 ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையப் போவது நிச்சயம்.
- ஒரு நாளில் நமக்கே தெரியாமல் நிறைய வெளிநாட்டு பொருட்களை பயன்படுத்துகிறோம்.
- ஹோலி வண்ண பொடிகள் கூட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டவை.
எவ்வளவு லாபம் கிடைத்தாலும் வெளிநாட்டு பொருட்களை விற்கக் கூடாது என்று வணிகர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
இன்று குஜராத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மோடி, "எவ்வளவு லாபம் கிடைத்தாலும் வெளிநாட்டு பொருட்களை விற்க முடியாது என வணிகர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும். துரதிஷ்டவசம் என்னவென்றால், விநாயகர் சிலைகளைக் கூட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள். அந்த சிலைகளின் கண்களும் மிகச் சிறியதாக உள்ளன, கண்கள் சரியாக திறப்பது கூட இல்லை. ஹோலி வண்ண பொடிகள் கூட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டவை."
ஒரு நாளில் நமக்கே தெரியாமல் நிறைய வெளிநாட்டு பொருட்களை பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தப்படும் ஹேர்பின், சீப்பு கூட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டவை தான். 'ஆபரேஷன் சிந்தூர்' என்பது நமது படைகள் கைகளில் மட்டும் இல்லை, 140 கோடி இந்தியர்கள் கைகளிலும் உள்ளது" என்று தெரிவித்தார்.






