என் மலர்tooltip icon

    பீகார்

    • 2 கட்டங்களில் மாநிலம் முழுவதும் 200 பேரணிகளில் உரையாற்றி தேஜஸ்வி முதலிடத்தில் உள்ளார்.
    • பிரதமர் நரேந்திர மோடி 16 தேர்தல் பேரணிகளையும், ஒரு ரோடு ஷோவும் நடத்தியுள்ளார்.

    பீகார் சட்டமன்றத் தேர்தல் 121 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 6 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதில் 65.08 என்ற சாதனை சதவீத வாக்குகள் பதிவாகின.

    நேபாளம், உத்தரபிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களை ஒட்டியுள்ள 20 மாவட்டங்களில் உள்ள 122 தொகுதிகளுக்கு நவம்பர் 11 அன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

    நவம்பர் 14 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

    இந்த தேர்தலில் ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் இடம்பெற்ற பாஜவின் என்டிஏ கூட்டணிக்கும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக கொண்ட மகபந்தன் (இந்தியா) கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரண்டாம் கட்ட தேர்தலில் நிதிஷ் அமைச்சரவையில் உள்ள 11 அமைச்சர்கள் களத்தில் உள்ளனர்.

    முதற்கட்டத்தை போல் இரண்டாம் கட்டத்திலும் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில் 2ஆம் மற்றும் கடைசி கட்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது.

    ஒட்டுமொத்தமாக 2 கட்டங்களில் மாநிலம் முழுவதும் 200 பேரணிகளில் உரையாற்றி தேஜஸ்வி முதலிடத்தில் உள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 16 பேரணிகளையும், பிரியங்கா காந்தி 13 பேரணிகளையும், மல்லிகார்ஜுன கார்கே நான்கு பேரணிகளையும் நடத்தினர்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில், பிரதமர் நரேந்திர மோடி 16 தேர்தல் பேரணிகளையும், ஒரு ரோடு ஷோவும் நடத்தியுள்ளார்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 36 பேரணிகளில் உரையாற்றி, ஒரு ரோடு ஷோவும் நடத்தினார்.

    மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் 21 பேரணிகளையும், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா 15 பேரணிகளையும் நடத்தினர். முதல்வர் நிதிஷ் குமார் 71 தேர்தல் பேரணிகளை நடத்தினார். 

    • குழந்தைகளுக்கு ஒரு மரியாதைக்கு தட்டு கூட கிடைக்கவில்லை.
    • 20 ஆண்டுகளுக்கும் மேலான பாஜக அரசால் குழந்தைகளின் தட்டுகளை கூட திருடப்பட்டுள்ளன.

    மத்திய பிரதேசத்தில் குழந்தைகளுக்கு மதிய உணவை காகிதத்தில் வைத்து வழங்கிய வீடியோவை பார்த்து இதயம் நொறுங்கி போனதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் இன்று மத்தியப் பிரதேசம் செல்கிறேன். மேலும், அங்குள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு பரிமாறப்படுகிறது என்ற செய்தியை செய்தித்தாள்களில் பார்த்ததிலிருந்து, என் இதயம் உடைந்து போயுள்ளது.

    நாட்டின் எதிர்காலம் தங்கள் கனவுகளில் தங்கியிருக்கும் அதே அப்பாவி குழந்தைகள் இவர்கள்தான், அவர்களுக்கு ஒரு மரியாதைத் தட்டு கூட கிடைக்காது.

    20 ஆண்டுகளுக்கும் மேலான பாஜக அரசால் குழந்தைகளின் தட்டுகளை கூட திருடப்பட்டுள்ளன. அவர்களின் 'வளர்ச்சி' வெறும் மாயை, ஆட்சிக்கு வருவதற்கான உண்மையான ரகசியம் 'முறைமை'.

    நாட்டின் குழந்தைகளை, இந்தியாவின் எதிர்காலத்தை, இவ்வளவு மோசமான நிலையில் வளர்க்கும் முதலமைச்சர் மற்றும் பிரதமருக்கு அவமானம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • முதற்கட்ட தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
    • பீகார் தேர்தல் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    பீகார் சட்டசபை பதவிக்காலம் 22-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக, 6-ந் தேதியும், 11-ந் தேதியும் இருகட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    பா.ஜ.க.-ஐக்கிய ஜனதாதளம் கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. முன்னாள் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, அசாதுதின் ஒவைசி எம்.பி.யின் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி ஆகியவையும் களத்தில் உள்ளன.

    பீகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அவற்றில் 18 மாவட்டங்களில் அடங்கிய 121 தொகுதிகளில் 6-ந்தேதி முதல்கட்ட தேர்தல் நடந்தது.

    பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. மொத்தம் 64.66 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி வினோத்சிங் குஞ்சியால் தெரிவித்தார்.

    பீகார் மாநிலத்தில் நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இந்நிலையில், 2ம் மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் (11ம் தேதி) நடைபெறுகிறது.

    இதனால், கட்சி தலைவர்கள் பீகாரில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும் வாக்கு சேகரித்தனர்.

    பிரதமர் மோடி, ராகுல் காந்தி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்பட பலர் பீகாரில் முற்றுகையிட்டு பிரசாரம் செய்தனர்.

    மீதிமுள்ள தொகுதிகளில் நாளை மறுநாள் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.

    வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    • மகாத்மா காந்தி போராடிய உரிமைகளில் ஒன்று வாக்குரிமை.
    • அரசியலமைப்பைப் பலவீனப்படுத்த பா.ஜ.க. அனைத்தையும் செய்கிறது.

    பாட்னா:

    பீகாரில் 121 தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்து முடிந்த நிலையில். நவம்பர் 11 அன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது. நவம்பர் 14 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    இந்நிலையில், பீகாரின் கட்டிஹார் நகரில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    பிரதமர் மோடி தனது பதவிக்கான கண்ணியத்தைப் பேணவில்லை.

    ஒருபக்கம் அவர் அகிம்சைக்கான வந்தே மாதரம் பாடலை புகழ்ந்து பேசுகிறார். மறுபக்கம் நாட்டு துப்பாக்கி பற்றிப் பேசுகிறார்.

    ஒரு காலத்தில் மகாத்மா காந்தி எதிர்கொண்ட அதே போரை இன்று காங்கிரஸ் எதிர்கொள்கிறது.

    நாங்கள் உங்கள் உரிமைகளுக்காக, உண்மைக்காக, ஒரு பேரரசுக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம். அதுதான் நரேந்திர மோடி பேரரசு.

    மக்களை அடக்குவதன் மூலம் அவர் நாட்டை வழிநடத்துகிறார். அவரது கட்சி வதந்திகளைப் பரப்புகிறது.

    மகாத்மா காந்தி போராடிய உரிமைகளில் ஒன்று வாக்குரிமை. அரசியலமைப்பைப் பலவீனப்படுத்த பா.ஜ.க. அனைத்தையும் செய்கிறது. அவர்கள் வாக்குரிமையைத் திருடத் தொடங்கிவிட்டார்கள்.

    அரசியலமைப்பையும் நாட்டையும் காட்டிக் கொடுத்தவர்களை மக்கள் மறக்க வேண்டுமா அல்லது நினைவில் கொள்ள வேண்டுமா? என தெரிவித்தார்.

    • சாலையோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் கிடந்தன.
    • வைரலான வீடியோவில், உள்ளூர்வாசிகள் VVPAT சீட்டுகளை எடுத்து சரிபார்ப்பதைக் காணலாம்.

    பீகாரின் சமஸ்திபூரில் சாலையில் பறக்கும் VVPAT சீட்டுகளின் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    வாக்காளர்கள் யாருக்கு வாக்கு செலுத்தினோம் என்பதை சரிபார்க்க கூடிய VVPAT சீட்டுகள் சாலையோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் கிடந்தன. வைரலான வீடியோவில், உள்ளூர்வாசிகள் VVPAT சீட்டுகளை எடுத்து சரிபார்ப்பதைக் காணலாம்.

    இந்த சீட்டுகள் வியாழக்கிழமை நடந்த தேர்தலின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களிலிருந்து வந்தவை என்று ஆர்ஜேடி குற்றம் சாட்டியது.

    இருப்பினும், இந்த சீட்டுகள் கடந்த வியாழக்கிழமை வாக்குப்பதிவுக்கு முன்பு நடத்தப்பட்ட சோதனை வாக்குப்பதிவிலிருந்து வந்தவை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சீட்டுகள் கிடந்த இடத்தில் ஆய்வு செய்த சமஸ்திபூர் மாவட்ட நீதிபதி ரோஷன் குஷ்வாஹா, "நாங்கள் அந்த இடத்தை ஆய்வு செய்தபோது, இந்த சீட்டுகள் மாதிரி வாக்குப்பதிவில் இருந்து வந்தவை என்பதைக் கண்டறிந்தோம்.

    அவை சரியாக அழிக்கப்படாதது தெரியவந்துள்ளது. இதற்கு பொறுப்பான வாக்குச் சாவடி ஊழியர்களை அந்த சீட்டுகளில் உள்ள EVM எண்களைப் பயன்படுத்தி அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

    இந்த சம்பவம் தொடர்பாக  கடமை தவறியதற்காக உதவி தேர்தல் அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவுத்துள்ளது.  

    • சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த எம்.பி ஷாம்பவி சவுத்ரி.
    • தவறுதலாக 2 கைகளிலும் மை வைத்துவிட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    பீகார் சட்டசபை பதவிக்காலம் 22-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக, 6-ந் தேதியும், 11-ந் தேதியும் இருகட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    பாஜக-ஐக்கிய ஜனதாதளம் கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

    பீகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அவற்றில் 18 மாவட்டங்களில் அடங்கிய 121 தொகுதிகளில் 6-ந்தேதி முதல்கட்ட தேர்தல் நடந்தது.

    இந்நிலையில் இந்த பாஜக கூட்டணியில் இடம்பெற்ற மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த எம்.பி ஷாம்பவி சவுத்ரியின் 2 கைகளிலும் வாக்களித்ததற்கான மை இருந்தது சர்ச்சையாகியது. இது ஷாம்பவி இரண்டு முறை வாக்களித்தாரா என்ற கேள்வியை எழுப்பியது.

    சமஸ்திபூர் மக்களவைத் தொகுதி எம்.பி ஷாம்பவி சவுத்ரி வாக்களித்துவிட்டு ஊடகங்களுக்கு போஸ் கொடுத்தபோது முதலில் தனது வலது கையை உயர்த்தி, மை பூசப்பட்ட விரலை வெளிப்படுத்தி, பின்னர் சிறிது நேரதில் இடது கையைக் காட்டினார். அந்த விரலிலும் மை அடையாளம் இருந்தது.

    இதன் வீடியோ வைரலான நிலையில் இதுகுறித்து அவர் விளக்கமளித்தபோது, வாக்குச்சாவடி அதிகாரி தவறுதலாக என் வலது கையில் மை பூசிவிட்டார், தலைமை அதிகாரி ஊழியர்களிடம் இடது கையில் பூசச் சொன்னார்.

    அதனால்தான் என் இரண்டு விரல்களிலும் மை அடையாளங்கள் உள்ளன. பெரிய தேர்தல்களின்போது இதுபோன்ற சிறிய நடைமுறை பிழைகள் சாதாரணம், இந்தப் பிரச்னையை அரசியல் சர்ச்சையாக மாற்ற வேண்டாம் என்று தெரிவித்தார்

    பாட்னா மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட விளக்கத்தில், "ஷாம்பவி வாக்களித்தபிறகு அவரது இரண்டு விரல்களிலும் மை அடையாளங்கள் இருப்பது தொடர்பான வீடியோ குறித்து வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    மை அடையாளம் இடும் பணியில் இருந்த வாக்கு சாவடிப் பணியாளர் தவறுதலாக முதலில் வலது கையிலுள்ள விரலில் மை அடையாளம் இட்டார். பின்னர் தலைமை அதிகாரியின் தலையீட்டின் பேரில் இடது கையிலுள்ள விரலிலும் மை அடையாளம் இடப்பட்டது" என்று தெரிவித்துள்ளது.

    காங்கிரஸ்- ஆர்ஜேடி வாக்கு மோசடி குறித்து குற்றம்சாட்டி வரும் நிலையில் இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

    முன்னதாக பாஜக தலைவர்கள் சிலர் கடந்த பிப்ரவரியில் நடந்த டெல்லி தேர்தலிலும், தற்போது நடந்த பீகார் தேர்தலிலும் வாக்கு செலுத்திய புகைப்படங்களை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி பகிர்ந்து வாக்கு மோசடி நடந்ததாக குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. 

    • எஸ்.எஸ்.சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோரின் பெயர்களையும் மறந்து விடாதீர்கள்.
    • இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்கள் "சோர்-சோர்" என்று முழக்கமிட்டனர்.

    பீகார் சட்டமன்றத் தேர்தல் 121 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்த நிலையில் நவம்பர் 11 அன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது. நவம்பர் 14 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

    இந்நிலையில் பீகாரின் ரேகா பகுதியில் இன்று நடந்த பிரசாரத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, "ஞானேஷ் குமார், தவறு செய்துவிட்டு நீங்கள் அமைதியாக ஓய்வு பெற்றுவிடலாம் என்று நினைத்தால், அது நடக்காது. ஞானேஷ் குமாரின் பெயரை ஒருபோதும் மறக்காதீர்கள் என்று பொதுமக்களிடம் நான் சொல்கிறேன்.

    அதேபோல எஸ்.எஸ்.சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோரின் பெயர்களையும் மறந்து விடாதீர்கள். அரியானாவில் வாக்காளர்கள் ஏமாற்றப்பட்டதை, மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்கள் "சோர்-சோர்" (திருடன்-திருடன்) என்று முழக்கமிட்டனர்.

    முன்னதாக 2024 அரியானா சட்டமன்றத் தேர்தலின் போது முடிவுகளைத் மாற்றுவதற்காக 25 லட்சம் போலி வாக்குகள் பயன்படுத்தப்பட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார்.

    இதில் ஞானேஷ் குமார், எஸ்.எஸ்.சந்து, விவேக் ஜோஷி ஆகிய மூன்று தேர்தல் ஆணையர்கள் குற்றவாளிகள் என அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

    • பிரதமர் மோடி மீது அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன்.
    • பா.ஜனதாவிடம் இருந்து பிரிந்து செல்ல முடியாது.

    பீகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பாஸ்வான் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

    எனது பெற்றோருக்குப் பிறகு, மரியாதை மற்றும் அன்பு நிறைந்த இடத்தில் நான் மதிக்கும் ஒரே நபர் பிரதமர் மோடி தான்.

    அவர் இருக்கும் வரை, பா.ஜ.கவில் இருந்து பிரிந்து செல்வது பற்றி நான் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

    நான் என் எதிரிகள் மீது அதிக கவனம் செலுத்துவதில்லை, என் சொந்த பலத்திலும் கடின உழைப்பிலும் கவனம் செலுத்த விரும்புகிறேன்.

    மீண்டும் ஒருமுறை நாங்கள் 100 சதவீத வெற்றி விகிதத்தை அடைவோம். என்று நான் நம்புகிறேன். 5 கட்சிகளின் இந்த கூட்டணி ஒரு வெற்றிகரமான கூட்டணி.

    ஜனதா தளம் (ஐக்கிய) வாக்காளர் தளத்திற்குள் வளர்ந்து வருகிறது. அவர்களின் ஆதரவை பெற்று உள்ளது. எதுவாக இருந்தாலும், ஒரு வலுவான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உருவாக வேண்டும் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறார்கள்.

    ராம் விலாஸ் பாஸ்வான் அரசியலில் இருக்கும்போது தனது மக்களுக்கும் அவரது பிராந்தியத்திற்கும் பாடுபட நேர்மையான முயற்சியை மேற்கொண்டார். நானும் அதையே செய்ய முயற்சிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாக்குப்பதிவில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 42.31 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
    • மாலை 5 மணி நிலவரப்படி 60.13 சதவீத வாக்குகள் பதிவாகின.

    234 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு நேற்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது.

    இந்த தேர்தலில் ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் இடம்பெற்ற பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக கொண்ட மகபந்தன் (இந்தியா) கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    நேற்று முதல்கட்ட தேர்தலில் 1,314 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தங்களது வாக்கினை செலுத்தினர்.

    121 தொகுதிகளுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 42.31 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

    மாலை 5 மணி நிலவரப்படி 60.13 சதவீத வாக்குகள் பதிவாகி வரலாற்று சாதனை படைத்துள்ளன.

    அதிகபட்சகமாக பெகுசாராய் தொகுதியில் 67.32% வாக்குகளும் குறைந்தபட்சமாக ஷேக்புரா தொகுதியில் 52.36% வாக்குகளும் பதிவாகி உள்ளன. மாலை 6 மணியுடன் முதற்கட்ட வாக்குபதிவு நிறைவு பெற்றது.

    இந்நிலையில், பீகார் முதல்கட்ட தேர்தலில் பதிவான மொத்த வாக்குபதிவு சதவீதம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில் மொத்தம் 64.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    இது, கடந்த 30 ஆண்டுகளில் முதல்முறையாக 60 சதவீதத்தை தாண்டி சாதனை படைத்துள்ளது.

    இரண்டாம் கட்ட தேர்தல் வருகிற 11-ந்தேதி நடைபெறுகிறது. இன்று மற்றும் 11-ந்தேதி பதிவாகும் வாக்குகள் வருகிற 14-ந்தேதி எண்ணப்படுகிறது. 

    • 121 தொகுதிகளுக்கு நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 42.31 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
    • இன்று மற்றும் 11-ந்தேதி பதிவாகும் வாக்குகள் வருகிற 14-ந்தேதி எண்ணப்படுகிறது.

    234 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது.

    இந்த தேர்தலில் ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் இடம்பெற்ற பாஜவின் என்டிஏ கூட்டணிக்கும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக கொண்ட மகபந்தன் (இந்தியா) கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இன்று முதல்கட்ட தேர்தலில் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தங்களது வாக்கினை செலுத்தினர்.

    121 தொகுதிகளுக்கு நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 42.31 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

    இந்நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி 60.13 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

    அதிகபட்சகமாக பெகுசாராய் தொகுதியில் 67.32% வாக்குகளும் குறைந்தபட்சமாக ஷேக்புரா தொகுதியில் 52.36% வாக்குகளும் பதிவாகி உள்ளன. மாலை 6 மணியுடன் முதற்கட்ட வாக்குபதிவு நிறைவு பெற்றது.

    இரண்டாம் கட்ட தேர்தல் வருகிற 11-ந்தேதி நடைபெறுகிறது. இன்று மற்றும் 11-ந்தேதி பதிவாகும் வாக்குகள் வருகிற 14-ந்தேதி எண்ணப்படுகிறது.  

    • பீகார் துணை முதல்வரும் பாஜக வேட்பாளருமான விஜய் குமார் சின்ஹா காரில் சென்றுகொண்டிருந்தார்.
    • விஜய் குமார் சின்ஹா காரில் இருந்தபடி அவர்களை நோக்கி கத்தினார்.

    243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டமன்றத்திற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. 121 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.

    இந்த தேர்தலில் ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் இடம்பெற்ற பாஜவின் என்டிஏ கூட்டணிக்கும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக கொண்ட மகபந்தன் (இந்தியா) கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில் பீகார் துணை முதல்வரும் லக்கிசாராய் தொகுதி பாஜக வேட்பாளருமான விஜய் குமார் சின்ஹா இன்று அந்த தொகுதியில் தனது வாக்கை செலுத்தினார்.

    இதன் பின் கோரிஹாரி கிராமத்தில் வாக்குப்பதிவை பார்வையிட விஜய் குமார் சின்ஹா காரில் சென்றுள்ளார்.

    அவரது கார் மேலும் செல்லமுடியாதபடி ஊருக்கு வெளியே வழி மறித்து நின்று ஆர்ஜேடி ஆதரவாளர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால் விஜய் குமார் சின்ஹா காரில் இருந்தபடி அவர்களை நோக்கி கத்தினார்.

    ஆர்ஜேடி ஆதரவாளர்கள் அவர் கார் மீது செருப்பு மற்றும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை அங்கிருந்து கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    உடனடியாக சிறப்பு படைகளை அங்கு அனுப்பும்படி சின்ஹா அம்மாவட்ட துணை ஆட்சியருக்கு போனில் உத்தரவிட்டுள்ளார். இதனால் அவ்விடத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. 

    • முதல்கட்ட தேர்தலில் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
    • வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.

    பீகார் சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 234 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெறும் முதல்கட்ட தேர்தலில் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இரண்டாம் கட்ட தேர்தல் வருகிற 11-ந்தேதி நடைபெறுகிறது. இன்று மற்றும் 11-ந்தேதி பதிவாகும் வாக்குகள் வருகிற 14-ந்தேதி எண்ணப்படுகிறது.

    இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், 121 தொகுதிகளுக்கு நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 42.31 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

    தொகுதி வாரியாக பதிவான வாக்கு சதவீத விவரம்:-

    முசாபூர் 45.41, வைஷாலி 42.61, சமஸ்திபூர் 43.03, பாட்னா 37.72, சஹர்சா 44.20, கோபால்கஞ்ச் 46.73, சீவான் 41.20, போஜ்பூர் 41.15 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. 

    ×