என் மலர்
ஆந்திர பிரதேசம்
- குஜராத் ஆய்வகத்தில் சோதனை நடத்தப்பட்டது. 5 கட்டங்களாக சோதனை நடந்தது.
- திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்படும் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு சேர்ந்து இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
குறிப்பாக மாட்டு கொழுப்பு, பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் ஆகியவை லட்டுகளில் கலந்து இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவே இந்த தகவலை வெளியிட்டு இருப்பதால் நாடு முழுவதும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தரமற்ற நெய்யில் விலங்குகளின் கொழுப்பை கலந்து திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத்தன்மையை முந்தைய ஆட்சியாளர்களான ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி சீரழித்து விட்டதாக சந்திரபாபு நாயுடு முக்கிய குற்றச்சாட்டை வெளியிட்டு இருந்தார்.
அதோடு திருப்பதி ஆலயத்தில் தயாரிக்கப்படும் லட்டுகளில் உள்ள கலவைகளை ஆய்வு செய்யவும் உத்தரவிட்டார். அதன்படி குஜராத் ஆய்வகத்தில் சோதனை நடத்தப்பட்டது. 5 கட்டங்களாக சோதனை நடந்தது.
அப்போது திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது ஆந்திர அரசியலில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது.
இந்நிலையில், இந்த விவகாரத்தை தொடர்ந்து, ஏழுமலையான் கோவிலுக்கு தோஷத்தை போக்க சம்ரோஷணம் செய்ய நிர்வாகம் ரீதியாக ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விலங்கு கொழுப்பு கலந்த நெய்யில் லட்டு தயாரித்ததால் கோவிலுக்கு மிகப்பெரிய பாவமும், தோஷமும் ஏற்பட்டதாக அர்ச்சகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சம்ரோஷணம் என்றால் குடமுழுக்கு செய்து கோயிலை தூய்மைப்படுத்தும் நிகழ்வு என கூறப்பட்டுள்ளது. இதனால், திருப்பதி ஏழுமலையான் கோவிலுகு்கு விரைவில் குடமுழுக்கு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- திருப்பதி லட்டுகளின் தெய்வீகத்தன்மையும் தூய்மையும் இப்போது கறைபடாமல் உள்ளது.
- லட்டு தயாரிக்க கலப்படம் செய்யப்பட்ட நெய்யை வழங்கிய ஒப்பந்ததாரரை தடுப்புப்பட்டியலில் வைக்கும் பணியில் தேவஸ்தானம் ஈடுபட்டுள்ளது.
திருப்பதி லட்டு பிரசாதம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து ஆந்திர அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது. இதனிடையே நெய்யில் மாட்டுக் கொழுப்பு இருந்தது உண்மைதான் என்று தேவஸ்தானம் ஒப்புதல் அளித்துள்ளதால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்நிலையில் திருப்பதி லட்டுகள் புனிதம் மீட்டெடுக்கப்பட்டு விட்டதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல் வருமாறு:-
திருப்பதி லட்டுகளின் தெய்வீகத்தன்மையும் தூய்மையும் இப்போது கறைபடாமல் உள்ளது. திருப்பதி லட்டுகளின் புனிதம் மீட்டெடுக்கப்பட்டு, தற்போது களங்கமின்றி உள்ளது. அனைத்து பக்தர்களின் திருப்திக்காக லட்டு பிரசாதத்தின் புனிதத்தை பாதுகாக்க தேவஸ்தானம் உறுதிபூண்டுள்ளது
இவ்வாறு அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.
மேலும் தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஷியாமளா ராவ் கூறும்போது, லட்டு தயாரிக்க கலப்படம் செய்யப்பட்ட நெய்யை வழங்கிய ஒப்பந்ததாரரை தடுப்புப்பட்டியலில் வைக்கும் பணியில் தேவஸ்தானம் ஈடுபட்டுள்ளது என்றார்.
- திருப்பதி லட்டு தொடர்பாக விரிவான விளக்கம் தர ஆந்திர அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருக்கிறது.
- எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆட்சியில் நடந்த டெண்டர் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.
அமராவதி:
திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதமான லட்டு உலகப்புகழ் பெற்றதாகும்.
300 ஆண்டுகள் பாரம்பரிய சிறப்பு வாய்ந்த திருப்பதி லட்டுகள் ஆலயத்தின் அருகில் உள்ள பிரத்யேகமான மடப்பள்ளியில் சுத்தமான நெய் மற்றும் பொருட்களால் தயாரித்து வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 13 முதல் 15 கோடி லட்டுகள் வரை திருப்பதி ஆலயம் சார்பில் பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பதி ஆலயத்தில் தயாரிக்கப்படும் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு சேர்ந்து இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. குறிப்பாக மாட்டு கொழுப்பு, பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் ஆகியவை லட்டுகளில் கலந்து இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவே இந்த தகவலை வெளியிட்டு இருப்பதால் நாடு முழுவதும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தரமற்ற நெய்யில் விலங்குகளின் கொழுப்பை கலந்து திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத்தன்மையை முந்தைய ஆட்சியாளர்களான ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி சீரழித்து விட்டதாக சந்திரபாபு நாயுடு முக்கிய குற்றச்சாட்டை வெளியிட்டு இருந்தார்.
அதோடு திருப்பதி ஆலயத்தில் தயாரிக்கப்படும் லட்டுகளில் உள்ள கலவைகளை ஆய்வு செய்யவும் உத்தரவிட்டார். அதன்படி குஜராத் ஆய்வகத்தில் சோதனை நடத்தப்பட்டது. 5 கட்டங்களாக சோதனை நடந்தது.
அப்போது திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது ஆந்திர அரசியலில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. இதையடுத்து இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலை யிட்டுள்ளது.
திருப்பதி லட்டு தொடர்பாக விரிவான விளக்கம் தர ஆந்திர அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருக்கிறது.
அதன் அடிப்படையில் ஆந்திர மாநில அரசு திருப்பதி லட்டுகள் தொடர்பாக விரிவான அறிக்கை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையில் இன்று (சனிக்கிழமை) காலை அமராவதியில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் ஆந்திர மாநில மந்திரிகள், அனைத்து துறை அதிகாரிகள் ஆகம வைதீக அமைப்பு நிர்வாகிகள் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நெய் கொள்முதல் செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்த தெலுங்கு தேசம் ஜனசேனா பா.ஜ.க. கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் தனி குழு ஏற்படுத்தப்படுகிறது.
இந்த எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆட்சியில் நடந்த டெண்டர் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். இந்த குழுவினர் தலைமையில் அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய அரசிடம் வழங்கப்படும். இந்த ஆலோசனைக்கு பிறகு திருப்பதி லட்டு சர்ச்சை குறித்த அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவிப்பார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே சந்திரபாபு நாயுடு இந்த விவகாரத்தில் அடுத்தடுத்த அதிரடிகளை மேற்கொள்ள தொடங்கி இருக்கிறார். திருப்பதி ஆலய அர்ச்சகர்களிடம் தொடர்பு கொண்டு பேசினார். திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடமும் நேற்றும் இன்றும் ஆலோசனை நடத்தினார்.
லட்டுகள் தயாரிக்க வாங்கப்படும் நெய் கொள்முதல் தொடர்பாக முழுமையான விளக்கமும், அறிக்கையும் தருமாறு அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். இதனால் திருப்பதி தேவஸ்தானத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் எவ்வளவு டெண்டர் கோரப்பட்டு நெய் வாங்கப்பட்டது. எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டன. லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் மற்ற மூலப்பொருட்கள் எங்கிருந்து வாங்கப்பட்டது என்பது குறித்த முழு தகவல்களை புள்ளி விவரத்துடன் தெரிவிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
ஏழுமலையான் கோவிலின் புனிதத்தை காக்கும் விஷயத்தில் ஆகம வைதிக தார்மீக அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றும் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
- தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் நடைபாதையாகவும், பஸ், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் அதிக அளவில் குவிந்தனர்.
- பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான அதிகாரிகள் திணறினர்.
திருப்பதி:
புரட்டாசி மாதம் ஏழுமலையானுக்கு உகந்த மாதம் என்பதால் நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்து வருகின்றனர்.
குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் நடைபாதையாகவும், பஸ், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் அதிக அளவில் குவிந்தனர்.
இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் அறைகள் அனைத்தும் பக்தர்கள் நிரம்பி வழிந்தது. தரிசன வரிசையில் இருந்து நீண்ட தூரத்திற்கு பக்தர்கள் தரிசனத்திற்காக காத்து இருந்தனர். நேற்று நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
இன்று காலை முதல் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான அதிகாரிகள் திணறினர்.
அவர்களுக்கு தேவையான உணவு குடிநீர் பால் உள்ளிட்டவைகளை தேவஸ்தான தன்னார்வலர்கள் வழங்கி வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 73,104 பேர் தரிசனம் செய்தனர். 28, 330 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.25 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- நெய் போன்று தோற்றம் அளிக்கும் ஆனால் அது உண்மையான நெய் இல்லை.
- நெய்யின் தரத்தை பரிசோதிக்க நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பதி:
திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சியாமளா ராவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் பயன்படுத்திய உண்மை தெரிய வந்துள்ளதாக தெரிவித்தார். திருப்பதி தேவஸ்தானத்தில் பிரசாதம் தயாரிக்க 5 நிறுவனங்களிடமிருந்து டெண்டர் மூலம் நெய் கொள்முதல் செய்யப்பட்டது.
லட்டு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் நெய்யின் தரம் சரியில்லை. நெய் போன்று தோற்றம் அளிக்கும் ஆனால் அது உண்மையான நெய் இல்லை.
அதில் விலங்குகளின் கொழுப்பு மற்றும் பல்வேறு பொருட்கள் கலந்து உள்ளன என தெரிவித்தனர்.
இதையடுத்து கடந்த ஜூலை 6-ந்தேதி முதல் 12-ந் தேதி வரை கொள்முதல் செய்யப்பட்ட நெய்யை குஜராத்தில் உள்ள தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்திற்கு அனுப்பி வைத்தோம்.
ஒரு வாரம் கழித்து அதன் பரிசோதனை முடிவுகள் வந்தன. பரிசோதனை முடிவில் தமிழகத்தில் இருந்து சப்ளை செய்யப்பட்ட தனியார் நிறுவனத்தின் நெயில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.
அதில் பன்றி இறைச்சி கொழுப்பு, மாட்டு இறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய், சோயா பீன்ஸ் எண்ணெய், ஆலிவ் ஆயில் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவை கலப்படம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.
திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கப்படும் நெய்யின் தரத்தை பரிசோதிக்க வெளிநாட்டிலிருந்து ரூ.75 லட்சம் மதிப்பில் உபகரணங்களை வாங்கி சொந்தமாக புதிய ஆய்வகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் நெய்யின் தரத்தை பரிசோதிக்க நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இனி திருப்பதி தேவஸ்தானத்தில் தயாரிக்கப்படும் பிரசாதங்கள் அனைத்தும் தரமான நெய் மற்றும் பொருட்கள் கொண்டு தயார் செய்து பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
- இந்தியா டி அணி முதல் இன்னிங்சில் 306 ரன்கள் எடுத்தது.
- இந்தியா பி அணி 6 விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்துள்ளது.
அனந்தபூர்:
ஆந்திராவின் அனந்தபூரில், துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் இந்தியா பி, இந்தியா டி அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற இந்தியா பி அணி பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய இந்தியா டி அணியின் தேவ்தத் படிக்கல், ஸ்ரீகர் பாரத், ரிக்கி புய் ஆகியோர் அரை சதம் அடித்தனர். முதல் நாள் முடிவில் இந்தியா டி அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 306 ரன் எடுத்திருந்தது. சாம்சன் 89 ரன்னும், சரண்ஷ் ஜெயின் 26 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்நிலையில், நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து பேட் செய்த இந்திய டி அணி மேற்கொண்டு 43 ரன்களுக்குள் எஞ்சிய விக்கெட்டை இழந்து 349 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 101 பந்தில் 106 ரன் குவித்தார்.
இந்தியா பி தரப்பில் நவ்தீப் சைனி 5 விக்கெட்டும், ராகுல் சஹார் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா பி அணி 2-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் அடித்துள்ளது. அபிமன்யு ஈஸ்வரன் சதம் அடித்தார்.
இந்தியா டி சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட் வீழ்த்தினார்.
மற்றொரு லீக் போட்டியில் இந்தியா ஏ, இந்தியா சி அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா சி அணி பவுலிங்'தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் இந்தியா ஏ அணி களமிறங்கியது. அந்த அணியின் ஷஷ்வத் ராவத் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார்.
ஷாம்ஸ் முலானி 44 ரன்கள் எடுத்தார்.
முதல் நாள் முடிவில் இந்தியா ஏ அணி 7 விக்கெட்டுக்கு 224 ரன்கள் எடுத்திருந்தது. ஷஷ்வத் ராவத்122 ரன்னும், ஆவேஷ் கான் 16 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.
இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 297 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷஷ்வாத் 124 ரன்னில் அவுட்டானார். ஆவேஷ் கான் அரை சதம் கடந்தார்.
இந்தியா சி சார்பில் விஜயகுமார் 4 விக்கெட்டும், அன்ஷுல் கம்போஜ் 3 விக்கெட்டும், விஜயகுமார் விஷாக் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இந்தியா சி அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அபிஷேக் பரோல் அரை சதம் கடந்து 82 ரன் எடுத்தார். புல்கிட் நாரங் 35 ரன்னும், பாபா இந்திரஜித் 34 ரன்னும் எடுத்தனர்.
இரண்டாம் நாள் முடிவில் இந்தியா சி அணி 7 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்துள்ளது.
- சனாதன தர்ம பாதுகாப்பு[ரக்ஷனா] வாரியம்' என்ற அமைப்பை நிறுவும் நேரம் வந்துவிட்டது
- நாட்டில் ஏற்கவே போதுமான அளவு வன்முறைகளும் பதற்றமும் மலிந்துள்ளது
திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் வழங்கப்படும் லட்டுக்கள் தயாரிப்பில் ஜகன்மோகன் ஆட்சியின் போது மாட்டிறைச்சி கொழுப்பு கலந்த நெய்யைப் பயன்படுத்தியதாக எழுந்துள்ள சர்ச்சை அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் , நாடு முழுவதும் உள்ள இந்து கோவில்களில் இதுபோன்ற பிரச்சனைகளை ஆராய தேசிய அளவில் 'சனாதன தர்ம பாதுகாப்பு[ரக்ஷனா] வாரியம்' என்ற அமைப்பை நிறுவும் நேரம் வந்துவிட்டது என்று தனது எக்ஸ் பக்கத்தில் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் பவன் கல்யாணின் இந்த கருத்துக்கு நடிகரும் அரசியல் வாதியுமான பிரகாஷ்ராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்த விவகாரம் நீங்கள் துணை முதல்வராக உள்ள மாநிலத்தில் நடந்துள்ளது. உரிய முறையில் விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டனை வழங்கும் வழியைப் பாருங்கள்.
அதைவிட்டுவிட்டு ஏன் இந்த பிரச்சனையை தேசிய அளவில் ஊதி பெரிதாக்கி அச்சத்தைப் பரப்புகிறீர்கள். நாட்டில் ஏற்கவே போதுமான அளவு வன்முறைகளும் பதற்றமும் மலிந்துள்ளது [அதற்கு மத்தியில் ஆட்சி புரியும் உங்களின் நண்பர்களுக்கு நன்றி] #justasking என்று பதிவிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலுடன் ஆந்திராவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசமும், பவன் கல்யாணின் ஜன சேனாவும், மத்தியில் ஆளும் பாஜகவும் கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
- தவறான முடிவுகள் வரவும் வாய்ப்பு இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- தரமான தூய நெய்யின் சந்தை விலை ஒரு கிலோவுக்கு ரூ.900 ஆக இருக்கிறது.
திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கிய நெய்யில் மாட்டிறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய் ஆகியவை உள்ளது என்ற குற்றச்சாட்டில் சிக்கி இருக்கும் ஏ.ஆர். டைரி ஃபுட் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் கலப்படம் பற்றிய குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
தமிழ்நாட்டின் திண்டுக்கல்லைச் சேர்ந்த இந்நிறுவனம், திருமலை திருப்பது தேவஸ்தானத்திற்கு நெய் விநியோகம் செய்யும் பல நிறுவனங்களில் ஒன்று ஆகும். "முதலில், NDDB ஆய்வக சோதனை அறிக்கை, நெய் மாதிரி ஏ.ஆர். டைரி நிறுவனத்தில் இருந்து வந்தது என்று கூறவில்லை. தவறான முடிவுகள் வரவும் வாய்ப்பு இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது."
"இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நாங்கள் வழங்கிய நெய் டேங்கர்களை சோதனை அறிக்கைகள் திருப்திப்படுத்திய பிறகே திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்றுக்கொண்டது. திருப்பதி தேவஸ்தானம் விற்பனையாளர்களை மாற்றியதால் ஜூலைக்குப் பிறகு நாங்கள் நெய் விநியோகம் செய்வதை நிறுத்திவிட்டோம். மாட்டுத் தீவனம் உட்பட நெய்யில் வெளிநாட்டுக் கொழுப்பின் தடயங்கள் காணப்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன," என்று ஏஆர் டைரி ஃபுட் நிறுவனத்தின் தரக் கட்டுப்பாட்டுத் துறைத் தலைவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
தெலுங்கு தேசம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆனம் வெங்கட ரமண செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், முந்தைய ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் திருப்பதி தேவஸ்தானம் நெய் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை ஒரு கிலோ ரூ. 320-க்கு வழங்குவதாக கூறிய நிறுவனத்திற்கு வழங்கியுதாக தெரிவித்தார்.
"நல்ல தரமான தூய நெய்யின் சந்தை விலை ஒரு கிலோவுக்கு ரூ.900 ஆக இருக்கும் போது, அந்த விகிதத்தில் சுத்தமான மற்றும் கலப்படமற்ற நெய்யை வழங்க முடியாது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான அரசு இவ்வளவு குறைந்த விலையில் ஏலத்தை தேர்வு செய்து நெய்யின் தரத்தில் சமரசம் செய்தது," என்று வெங்கட ரமண கூறினார்.
- திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஷ்யாமளா ராவ் விளக்கமளித்துள்ளார்.
- குஜராத்திற்கு ஆய்விற்காக அனுப்பப்பட்ட நெய்யில் 20 சதவீதம் மட்டுமே தரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான இந்துக்கள் வருகை தரும் திருப்பதி வேகடாச்சலபதி கோவிலில் லட்டுக்கள் பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஆந்திராவில் கடந்த ஜகன்மோகன் ஆட்சியின் போது திருப்பதி லட்டு தயாரிப்பில் மாட்டிறைச்சி கொழுப்பு கலந்த நெய்யைப் பயன்படுத்தியதாகச் சர்ச்சை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் லட்டுவில் மீன் எண்ணெய், மாட்டு கொழுப்பு, சோயா பீன், சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட கொழுப்புகளும் இருந்ததாகத் தெரியவந்தது.இந்து மதத்தின் மாடு புனிதமான விலங்காகக் கருதப்படும் நிலையில் கடந்த காலங்களில் மாட்டிறைச்சி கொழுப்பை பிரசாதமாக தாங்கள் சாப்பிட்டுள்ளோம் என்பது பக்தர்களை அசவுகரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அரசியல் ரீதியாகவும் இந்த விவகாரம் புயலைக் கிளப்பியுள்ள நிலையில் இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஷ்யாமளா ராவ் விளக்கமளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டுவின் தரம் குறைந்துவிட்டது. ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் இருந்து ஜூன், ஜூலை மாதம் 4 டேங்கரில் வந்த நெய்யில் தயாரிக்கப்பட்ட லட்டின் தரம் குறைந்ததாக புகார்கள் வந்தது. இது குறித்து ஆந்திர அரசிடம் தெரிவித்தோம். நெய் மாதிரிகளை தேவஸ்தான ஆய்வகத்தை தவிர்த்து வேறு ஆய்வகத்திற்கு அனுப்பினோம். குஜராத்திற்கு ஆய்விற்காக அனுப்பப்பட்ட நெய்யில் 20 சதவீதம் மட்டுமே தரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
சோயா பீன்ஸில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய்யில் கலப்படம் நடந்துள்ளது. இது தொடர்பாக நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. நிபுணர்களின் ஆலோசனைப்படி வேறு நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். தரமற்ற நெய் விநியோகம் செய்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரம் தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. எதிர்காலத்தில் இதுபோன்று நடக்கக்கூடாது என்பதே எங்களது விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.
- விநியோகஸ்தர்கள் NABL சான்றிதழ் மற்றும் தயாரிப்பு தர சான்றிதழை வழங்க வேண்டும்.
- எங்கள் ஆட்சியில் 18 முறை பொருட்களை நிராகரித்துள்ளோம்.
உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான இந்துக்கள் வருகை தரும் இடமாக திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. இங்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் மிகவும் பிரபலம்.
திருப்பதி கோவிலில் வழங்கும் லட்டு பிரசாதம் தயாரிப்பில் ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஜகன்மோகன் ரெட்டி ஆட்சியின் போது மாட்டிறைச்சி கொழுப்பு கலந்த நெய்யைப் பயப்படுத்தியதாகச் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்து மத நம்பிக்கைகளின் படி, மாடு புனிதமான விலங்காகக் கருதப்படும் நிலையில் கடந்த காலங்களில் மாட்டிறைச்சி கொழுப்பை பிரசாதமாகச் தாங்கள் சாப்பிட்டுள்ளோம் என்ற எண்ணம் இந்து மத பக்தர்களை அசவுகரியத்தில் ஆழ்த்தியது.
இந்த நிலையில், திருப்பதி கோவில் லட்டு பிரசாதத்தில் மாட்டிறைச்சி கொழுப்பு கலக்கட்டதாக கூறப்படும் புகார்களை ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி முழுமையாக மறுத்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "டெண்டர் செயல்முறை ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நிகழ்கிறது. ஆனால், தகுதி அளவுகோல் பல தசாப்தங்களாக மாறவே இல்லை. விநியோகஸ்தர்கள் NABL சான்றிதழ் மற்றும் தயாரிப்பு தர சான்றிதழை வழங்க வேண்டும்."
"TTD நெய்யிலிருந்து மாதிரிகளை சேகரிக்கிறது, மேலும் சான்றிதழைப் பெற்ற தயாரிப்புகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. தெலுங்கு தேசம் மத விஷயங்களில் அரசியல் செய்கிறது. எங்கள் ஆட்சியில் 18 முறை பொருட்களை நிராகரித்துள்ளோம்," என தெரிவித்தார்.
- மாட்டிறைச்சி கொழுப்பை பிரசாதமாகச் தாங்கள் சாப்பிட்டுள்ளோம் என்பது பக்தர்களை அசவுகரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
- ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இதுபோன்ற குளறுபடிகள் நடக்காமல் இருக்க உபாயம் ஒன்றைச் சொல்லியுள்ளார்.
உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான இந்துக்கள் வருகை தரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டுக்கள் தயாரிப்பில் ஜகன்மோகன் ஆட்சியின் போது மாட்டிறைச்சி கொழுப்பு கலந்த நெய்யைப் பயப்படுத்தியுள்ளதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. இந்து மதத்தின் மாடு புனிதமான விலங்காகக் கருதப்படும் நிலையில் கடந்த காலங்களில் மாட்டிறைச்சி கொழுப்பை பிரசாதமாகச் தாங்கள் சாப்பிட்டுள்ளோம் என்ற எண்ணம் பக்தர்களை அசவுகரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நடவைடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். இந்நிலையில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இதுபோன்ற குளறுபடிகள் நடக்காமல் இருக்க உபாயம் ஒன்றைச் சொல்லியுள்ளார்.
அதாவது, நாடு முழுவதும் உள்ள இந்து கோவில்களில் இதுபோன்ற பிரச்சனைகளை ஆராய தேசிய அளவில் 'சனாதன தர்ம பாதுகாப்பு[ரக்ஷனா] வாரியம்' என்ற அமைப்பை நிறுவும் நேரம் வந்துவிட்டது என்று தனது எக்ஸ் பக்கத்தில் கூட்டணியில் உள்ள மத்திய பாஜக அரசுக்கு யோசனை வழங்கியுள்ளார்.
- உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஏழுமலையானின் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.
- பேராசைக்கு ஏழுமலையான் சாமியும் விதிவிலக்கல்ல என தெரிய வந்துள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் திருப்பதி கோவில் லட்டு தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தியதாக முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கூறினார்.
அதற்கான வாய்ப்பே கிடையாது என முன்னாள் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த ஆட்சி காலத்தில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாமிச கொழுப்பு, மீன் எண்ணெய், பாமாயில் ஆகியவை கலந்திருந்தது உண்மைதான் என்பதற்கான ஆய்வக ஆதாரத்தை தெலுங்கு தேசம் கட்சி நேற்று மாலை வெளியிட்டது.
இதனால் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஏழுமலையானின் பக்தர்கள் வேதனை அடைந்தனர். ஏழுமலையான் கோவிலின் புனிதத் தன்மையை கெடுத்து விட்டதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் விஜயவாடாவில் உள்ள தலைமைச் செயலகம் அருகே அண்ணா கேண்டினை முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார்.
ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆட்சியில் பிரசாதம் தயாரிப்பில் தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த செயல் திருப்பதி ஏழுமலையான் கோவிலின் புனிதத் தன்மைக்கு கேடு விளைவிப்பதாகும். கடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது வரம்பு மீறிய தவறுகளை செய்துள்ளனர்.
அவர்களின் பேராசைக்கு ஏழுமலையான் சாமியும் விதிவிலக்கல்ல என தெரிய வந்துள்ளது. திருப்பதி கோவிலின் புனித தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






