என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • சிறுமியின் தந்தை வைத்திருந்த பணத்தை காணாததால் அதிர்ச்சி அடைந்த அவர் சிறுமியிடம் இது பற்றி கேட்டார்.
    • அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த நானாஜி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பணத்தை ஏமாற்றி வாங்கிக் கொண்டதாக தெரிவித்தார்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் நானாஜி (வயது 22). சிறுமியின் தாயார் இறந்துவிட்டதால் தந்தை வியாபாரத்திற்கு வெளியூர் செல்லும்போது சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்து வருவார்.

    அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த நானாஜி சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நட்பாக பழகினார்.

    சிறிது நாட்கள் கழித்து சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். 2 ஆண்டுகளாக சிறுமியை பலாத்காரம் செய்து வந்தார்.

    மேலும் சிறுமியின் தந்தை வீட்டில் ரூ.12 லட்சம் வைத்திருந்தார். அதில் ரூ.11 லட்சத்தை சிறுமியை ஏமாற்றி வாங்கி தனது குடும்பத்தாருக்கு கொடுத்தார்.

    சிறுமியின் தந்தை வைத்திருந்த பணத்தை காணாததால் அதிர்ச்சி அடைந்த அவர் சிறுமியிடம் இது பற்றி கேட்டார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த நானாஜி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பணத்தை ஏமாற்றி வாங்கிக் கொண்டதாக தெரிவித்தார்.

    இதையடுத்து நானாஜி வீட்டுக்கு சென்ற சிறுமியின் தந்தை 18 வயது நிரம்பியவுடன் தனது மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தினார்.

    அதற்கு அவர்கள் பல்வேறு காரணங்களை கூறி சிறுமியை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்தனர். இதனால் விரக்தி அடைந்த சிறுமியின் தந்தை அனகாபள்ளி போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை பலாத்காரம் செய்து அவரிடமிருந்து பணத்தை பறித்ததாக வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள நானாஜி மற்றும் அவரது குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.

    • கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.9 ஆயிரம் கொடுத்து சினைபசுமாடு ஒன்றை வாங்கி வந்தனர்.
    • இவர்கள் வாங்கி வந்த பசு சில நாட்களில் கன்று ஈன்றது. அன்று முதல் இன்று வரை 11 ஆண்டுகளாக பசு காலை, மாலை என இரு வேளையும் தினமும் 6 லிட்டர் பால் கொடுத்து வருகிறது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மண்டலத்தை சேர்ந்தவர் வெங்கடசாமி. விவசாயி. இவரது மனைவி லட்சுமி தேவி.

    இவர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.9 ஆயிரம் கொடுத்து சினைபசுமாடு ஒன்றை வாங்கி வந்தனர். இவர்கள் வாங்கி வந்த பசு சில நாட்களில் கன்று ஈன்றது. அன்று முதல் இன்று வரை 11 ஆண்டுகளாக பசு காலை, மாலை என இரு வேளையும் தினமும் 6 லிட்டர் பால் கொடுத்து வருகிறது.

    பொதுவாக கன்று ஈனும் பசுக்கள் 1 முதல் 1½ ஆண்டுகள் மட்டுமே பால் கொடுப்பது வழக்கம். 11 ஆண்டுகளாக பால் கொடுக்கும் பசுவை வெங்கடசாமி லட்சுமிதேவி தம்பதியினர் தங்களது வீட்டிற்கு வந்த மகாலட்சுமியாக நினைத்து கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகின்றனர்.

    இந்த பசுவை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் அதிசயத்துடன் பார்த்து செல்கின்றனர்.

    • 20 கிலோ எடையுள்ள தங்கத்தால் 5 விமான கோபுரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.
    • ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    திருப்பதி

    திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி, பேரூர் மலையில் ஏழுமலையான் தாயார் வகுல அம்மனுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் புதியதாக கோவில் கட்டப்பட்டுள்ளது.

    20 கிலோ எடையுள்ள தங்கத்தால் 5 விமான கோபுரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் செலவில் மலைமீது இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது.

    இன்று கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கடந்த 17ந் தேதி அங்குரார்ப்பணம் மற்றும் யாக சாலைகள் அமைத்து வேத பண்டிதர்களை கொண்டு புண்ணிய கால பூஜைகள் நடந்தது. இன்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், கோ பூஜை உள்ளிட்ட பூஜையும்.விக்கிரகம் பிரதிஷ்டை நடந்தது.

    இதையடுத்து யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த ஓம குண்டங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு விமான கோபுரத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    கும்பாபிஷேக விழாவில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஜா, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெத்தி ரெட்டி ராமச்சந்திரா ரெட்டி மற்றும் அமைச்சர்கள், தேவஸ்தான நிர்வாக அலுவலர்கள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • விவசாய நிலத்தை போத்தமாவுக்கு பிரித்து தராமல் அவரது சித்தப்பா விவசாயம் செய்து வந்தார்.
    • போத்தம்மா மீது அவரது சித்தப்பா ஆத்திரத்தில் இருந்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் பல்நாடு சத்தேமா பள்ளியை சேர்ந்தவர் போத்தம்மா (வயது 39). இவருக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வந்தார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.போத்தம்மாவின் பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்டனர். இவருடைய சித்தப்பா போத்தைய்யா. போத்தம்மா குடும்பத்திற்கும், அவரது சித்தப்பா குடும்பத்திற்கும் சேர்த்து 30 சென்ட் பூர்விக விவசாய நிலம் உள்ளது.

    விவசாய நிலத்தை போத்தமாவுக்கு பிரித்து தராமல் அவரது சித்தப்பா விவசாயம் செய்து வந்தார். விவசாய நிலத்தை பங்கு பிரித்து தரும்படி தனது சித்தப்பாவிடம் போத்தம்மா அடிக்கடி வலியுறுத்தி வந்தார். இதனால் போத்தம்மா மீது அவரது சித்தப்பா ஆத்திரத்தில் இருந்தார்.

    இந்த நிலையில் போத்தம்மா தனது பிறந்த ஊரில் இன்று நடைபெறும் உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார்.

    திருமண மண்டபம் அருகே சாலையை ஒட்டிய இடத்தில் நிலம் பிரிப்பது சம்பந்தமாக இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த போத்தைய்யா தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து போத்தம்மாவை நடுரோட்டில் சரமாரியாக வெட்டினார். அவர் ஓட முயன்றார். அப்போது கால் இடறி கீழே விழுந்தார். ஆத்திரம் தீராத போத்தையா போத்தம்மாவை பயங்கரமாக வெட்டினார். அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் இந்த பதைபதைக்கும் காட்சியை கண்டு அதிர்ச்சியடைந்து போத்தம்மாவை மீட்க முயன்றனர். அவர்களை போத்தைய்யா வெட்டி விடுவதாக மிரட்டி விட்டு மீண்டும் போத்தமாவை வெட்டினார்.

    அதற்குள் போத்தம்மா ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போத்தம்மாவை மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    போத்தமாவை போத்தையா சரமாரியாக வெட்டும் வீடியோ காட்சிகள் செல்போனில் பரவி வருகிறது.

    இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பாப்பிரெட்டி, கரிபள்ளி, முடியம்வாரி பள்ளி சாலை சந்திப்புகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • போலீசார் 12 செம்மரங்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார், 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அன்னமைய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷவர்தன் ராஜு உத்தரவின்பேரில் வால்மீகி புரம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் பாப்பிரெட்டி, கரிபள்ளி, முடியம்வாரி பள்ளி சாலை சந்திப்புகளில் போலீசார் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது 2 பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தீ கண்டு பள்ளி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்துவதற்கு தயார் நிலையில் உள்ளதாகவும் போலீசார் நடமாட்டம் உள்ளதா என்பதை கண்காணிக்க பைக்குகளில் வந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு செம்மரம் ஏற்றப்பட்ட வாகனங்களில் இருந்த தமிழகத்தை சேர்ந்த திருமூர்த்தி, மதியழகன், பாஸ்கர், ஏழுமலை, மகேந்திரன், ஜெயச்சந்திரன், மஞ்சுநாத், சூர்யா ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

    மேலும் 12 செம்மரங்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார், 2 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரங்களின் மதிப்பு ரூ.19 லட்சம் மற்றும் வாகனங்களில் மதிப்பு 40 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.

    • இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இந்த உற்சவங்களை தேவஸ்தானம் நடத்தி வருகிறது.
    • தேவஸ்தானம் அமெரிக்காவில் 5 நகரங்களில் சீனிவாச கல்யாணத்தை நடத்த திட்டமிட்டது.

    திருப்பதி:

    அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகரில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சீனிவாச கல்யாணம் நடைபெற்றது.

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் சீனிவாச கல்யாண திட்டத்தின் கீழ் ஏழுமலையான் திருக்கல்யாண உற்சவத்தை நடத்தி வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இந்த உற்சவங்களை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    கொரோனா தொற்று கால கட்டத்தில் இதுபோன்ற கல்யாண உற்சவத்தை காணாமல் பக்தர்கள் பலர் ஏமாற்றமடைந்தனர்.

    இந்நிலையில் கொரோனா தற்போது கட்டுக்குள் உள்ளதால் தேவஸ்தானம் அமெரிக்காவில் 5 நகரங்களில் சீனிவாச கல்யாணத்தை நடத்த திட்டமிட்டது.

    அதன்படி அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகரில் சீனிவாச கல்யாணம் நடைபெற்றது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    இதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஜூலை 5-ஆம் தேதி வரை சீனிவாச கல்யாணம் நடைபெறுகின்றது.

    இதில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைவரும் இலவசமாக கலந்து கொள்ளலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    • ஏலூர் மாவட்டம் நூஜ் வேடு பகுதியை சேர்ந்தவர் கொல்லப்பள்ளி சீனிவாசராவ்.
    • சீனிவாசராவ், ரங்காவிடம் கொடுத்த கடனை திருப்பி கேட்டு வந்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஏலூர் மாவட்டம் நூஜ் வேடு பகுதியை சேர்ந்தவர் கொல்லப்பள்ளி சீனிவாசராவ் (வயது 45). டிராக்டர் டிரைவராக வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் ரங்கா (30). சீனிவாசராவிடம் ரங்கா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1000 கடனாக பெற்றுள்ளார்.

    சீனிவாசராவ், ரங்காவிடம் கொடுத்த கடனை திருப்பி கேட்டு வந்தார். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று மாலை ரங்கா வீட்டிற்கு சென்ற சீனிவாசராவ் கொடுத்த கடனைக் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

    இதில் ஆத்திரம் அடைந்த ரங்கா அருகிலிருந்த கட்டையை எடுத்து சீனிவாசராவை சரமாரியாக தாக்கினார். இதில் சீனிவாசராவ் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார். அருகில் இருந்தவர்கள் சீனிவாசராவை மீட்டு சிகிச்சைக்காக ஏலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் சீனிவாசராவ், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.கொலை செய்யப்பட்ட சீனிவாசராவிற்கு மனைவி, 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

    • நிலநடுக்கத்தை உணர்ந்த பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
    • இதையடுத்து பாபட்லா மாவட்டத்தில் சந்த நாவலூர், பரிடாலவாரி பள்ளம், பூகட்ல பள்ளி ஆகிய ஊர்களில் மதியம் 2.38 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் பிரகாசம், பாபட்லா, பல்நாடு ஆகிய 3 மாவட்டங்களில் நேற்று மதியம் 2.15 மணி அளவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது.

    முதலில் பிரகாசம் மாவட்டத்தில் பொதிலிபட்டிணம், மாதவாரிப் பளையம், கணிகிரி பட்டணம், அனுமந்து பாடு, மர்ரிவாடி மண்டலம், துக்கி ரெட்டிபாளையம், கோண்டா சமுத்திரம் உள்ளிட்ட இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது வீடுகளின் அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள் உருண்டு கீழே விழுந்தது. சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. கட்டில், பீரோ, நாற்காலி, பிரிட்ஜ் உள்ளிட்டவைகள் அதிர்ந்தன. நிலநடுக்கத்தை உணர்ந்த பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து பாபட்லா மாவட்டத்தில் சந்த நாவலூர், பரிடாலவாரி பள்ளம், பூகட்ல பள்ளி ஆகிய ஊர்களில் மதியம் 2.38 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

    அதன் பின்னர் பல் நாடு மாவட்டத்தில் சாவல்ல புரம், பிச்சிகுலுபாளையம் ஆகிய இடங்களில் 2.40 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. சில வினாடிகள் மட்டுமே நீடித்த நிலநடுக்கத்தில் வீட்டு சுவர்கள், மேற்கூரைகளில் விரிசல் விழுந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பீதியில் உறைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்குச் சென்று பொதுமக்களிடம் நிலநடுக்கத்தால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படாது. நிலநடுக்கம் சில வினாடிகள் மட்டுமே நீடித்தது. எவ்வளவு ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது என ஐதராபாத்தில் உள்ள பூகம்ப அறிவியல் ஆராய்ச்சி மைய அதிகாரிகள் இன்னும் தெரிவிக்கவில்லை. நிலநடுக்கம் குறித்து பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என தெரிவித்தனர்.

    ஆந்திராவில் ஏற்கனவே சித்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் தற்போது 3 மாவட்டங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மரணமடைந்த முன்னோர்களை அடுத்து வரும் வாரிசுகள் மறந்துவிடக்கூடாது.
    • சமாதிகள் நிறைந்த அந்த கிராமத்தை கடந்து செல்லும் வெளியூர் மக்கள் ஒருவித அச்சத்துடன் செல்கின்றனர்.

    திருப்பதி:

    சமாதி இருக்கும் இடத்திற்கு செல்வது பயத்தையும் தயக்கத்தையும் ஏற்படுத்தும்‌.ஆனால் ஒரு கிராமத்தில் இறந்த முன்னோர்களை வீட்டு முன்பு அடக்கம் செய்து சமாதி கட்டி வழிபட்டு வருகின்றனர்.

    ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் எமிகனூர் மண்டலத்திலுள்ள அய்யகொண்டா கிராமத்தில் சுமார் 100 வீடுகள் உள்ளன. ஒவ்வொரு வீட்டின் முன்பும் சமாதிகள் உள்ளன. மரணம் அடைந்தவர்களை வீட்டு முன்பு அடக்கம் செய்து சமாதி கட்டி வருகின்றனர். இதனால் ஒவ்வொரு வீடுகள் முன்பும் சமாதிகளாக காட்சியளிக்கின்றன.

    அந்த கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் தினமும் சமைத்த பின் தங்கள் உணவுகளை வீட்டின் முன் இருக்கும் முன்னோர் சமாதிக்கு எடுத்துச்சென்று படைத்த பிறகு சாப்பிடுகின்றனர்.

    இது தவிர கிராமத்தில் இருக்கும் கோவிலுக்கு நைவேத்தியம் சமர்ப்பிக்கும் போது சமாதிகளுக்கும் நைவேத்திய சமர்ப்பணம் நடைபெறுகிறது.

    தங்கள் குடும்பத்தில் யாருக்காவது திருமணம் நிச்சயிக்கப்பட்டால் மணமக்களுக்கு உரிய புத்தாடைகளை முன்னோர்களின் சமாதியில் வைத்து பூஜைகள் நடத்தி வருகின்றனர். இந்த சமாதிகளில் சிறுவர்கள் சகஜமாக விளையாடுகின்றனர்.

    மரணமடைந்த முன்னோர்களை அடுத்து வரும் வாரிசுகள் மறந்துவிடக்கூடாது. அவர்களுடைய ஆசிர்வாதம் இல்லாமல் எந்த ஒரு வேலையையும் செய்ய கூடாது என்பதற்காக கடந்த பல ஆண்டுகளாக இந்த நடைமுறை வழக்கத்தில் இருந்து வருவதாக கிராம மக்கள் கூறியுள்ளனர்.

    கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டின் முன்பும் குறைந்தபட்சம் 4-க்கும் மேற்பட்ட சமாதிகள் என 400 சமாதிகள் உள்ளன.

    சமாதிகள் நிறைந்த அந்த கிராமத்தை கடந்து செல்லும் வெளியூர் மக்கள் ஒருவித அச்சத்துடன் செல்கின்றனர்.

    வெளியூர்களை சேர்ந்தவர்கள் உச்சி வெயில் நேரம், இரவ நேரங்களில் அந்த கிராமத்திற்கு செல்வதையும், அந்த கிராமம் வழியாக மற்ற ஊர்களுக்கு செல்வதையும் தவிர்த்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆக்ஸிஸ் கார்டில் பக்தர்களுக்கு தரிசன நேரம் ஒதுக்கப்படுகிறது.
    • வைகுண்டம் காம்ப்ளக்சில் தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்கள் வெளியே சென்றால் மீண்டும் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படாது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். பக்தர்கள் தரிசனத்திற்காக நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்க்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என தேவஸ்தானத்திற்கு பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது.

    பக்தர்களின் கோரிக்கையை ஏற்று இலவச தரிசனத்திற்கு வைகுண்டம் காம்ப்ளக்சில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் ஆக்சிஸ் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு வருகிறது.

    ஆக்ஸிஸ் கார்டில் பக்தர்களுக்கு தரிசன நேரம் ஒதுக்கப்படுகிறது. ஸ்மார்ட் கார்டு பெற்ற பக்தர்கள் வைகுண்டம் காம்ப்ளக்சில் காத்திருக்காமல் வெளியே சென்று விட்டு தரிசனத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக வரவேண்டும். பிறகு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    இதற்கு முன்பு வைகுண்டம் காம்ப்ளக்சில் தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்கள் வெளியே சென்றால் மீண்டும் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படாது.

    தற்போது நேரம் ஒதுக்கீடு முறையில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு சிரமத்தை போக்கி உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    திருப்பதியில் நேற்று 76,407 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 39,938 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.28 கோடி உண்டியலில் காணிக்கையாக வசூலானது.

    • திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் ஜூலை 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.
    • இன்றும், நாளையும் காலை முதல் மதியம் வரை சுகிர்த ஹோமம் நடைபெறுகிறது.

    திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் அடுத்த மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையடுத்து பக்தர்கள் திரட்டிய நிதியில் ரூ.15 லட்சம் செலவில் வெள்ளி கமலவாகனம் மற்றும் அனந்த வாகனம் செய்யப்பட்டது.

    இதற்கான பணிகள் நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள சிற்ப ரத்னா கலைக்கூடத்தில் கடந்த 6 மாதங்களாக நடந்து வந்தது. இந்த பணிகள் முழுவதும் நேற்று முடிவடைந்தது. இதையடுத்து நேற்று காலையில் இந்த வாகனங்கள் சிற்பி செல்வராஜா தலைமையில் சிறப்பு பூஜைக்கு பின்னர் மினி லாரியில் ஏற்றப்பட்டு திருவட்டார் தளியல் கருடாள்வார் சன்னதிக்கு கொண்டு வரப்பட்டது.

    அங்கு மாலையில் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. பின்பு மேள தாளம் முழங்க பக்தர்கள் புடை சூழ ஊர்வலமாக திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு கோவிலை வலம் வந்த பின்னர் உதமார்த்தாண்ட மண்டபம் முன்புள்ள மண்டபத்தில் 2 வாகனங்களும் கோவில் மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கோவிலில் பல்வேறு பரிகார பூஜைகள் நடந்து வரும் நிலையில் இன்றும்(சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் மதியம் வரை சுகிர்த ஹோமம் நடைபெறுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சித்தூர் அருகே உள்ள மணமகன் இல்லத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
    • உணவில் ஏதாவது கலக்கபட்டதா என்று போலீசார் விசாரணை.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பத்மாபுரத்தை சேர்ந்தவர் ஹிமன். இவருக்கும் கங்காதரநல்லூர் முத்தூர் பகுதியை சேர்ந்த வேலு என்பவருக்கும் சித்தூரில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று காலை திருமணம் நடந்தது.

    மாலையில் சித்தூர் அருகே உள்ள மணமகன் இல்லத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. உறவினர்கள், நண்பர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு இரவு விருந்து பரிமாறப்பட்டது.

    விருந்து சாப்பிட்ட சிறிது நேரத்தில் சுமார் 450 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால் திருமண வீட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

    மயங்கி விழுந்தவர்களை பள்ளி பஸ், டிராக்டர், 108 ஆம்புலன்ஸ் மூலம் சித்தூர், திருப்பதி, நகரி, சீல பள்ளி, பள்ளிப்பட்டு ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த சித்தூர் கலெக்டர் ஹரி நாராயணா, சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஸ்ரீ ஹரி, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

    மேலும் சிகிச்சை பெறுபவர்களுக்கு விரைவான சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களுக்கு அறிவுறுத்தினர்.

    சிகிச்சை பெற்று வருபவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    உணவில் ஏதாவது கலக்கபட்டதா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விருந்து சாப்பிட்ட 450 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×