search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திராவில் கல்யாண விருந்து சாப்பிட்ட 450 பேருக்கு வாந்தி மயக்கம்
    X

    விருந்து சாப்பிட்டு மயக்கமடைந்த சிறுவனை தூக்கி சென்ற காட்சி


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஆந்திராவில் கல்யாண விருந்து சாப்பிட்ட 450 பேருக்கு வாந்தி மயக்கம்

    • சித்தூர் அருகே உள்ள மணமகன் இல்லத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
    • உணவில் ஏதாவது கலக்கபட்டதா என்று போலீசார் விசாரணை.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பத்மாபுரத்தை சேர்ந்தவர் ஹிமன். இவருக்கும் கங்காதரநல்லூர் முத்தூர் பகுதியை சேர்ந்த வேலு என்பவருக்கும் சித்தூரில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று காலை திருமணம் நடந்தது.

    மாலையில் சித்தூர் அருகே உள்ள மணமகன் இல்லத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. உறவினர்கள், நண்பர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு இரவு விருந்து பரிமாறப்பட்டது.

    விருந்து சாப்பிட்ட சிறிது நேரத்தில் சுமார் 450 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால் திருமண வீட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

    மயங்கி விழுந்தவர்களை பள்ளி பஸ், டிராக்டர், 108 ஆம்புலன்ஸ் மூலம் சித்தூர், திருப்பதி, நகரி, சீல பள்ளி, பள்ளிப்பட்டு ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த சித்தூர் கலெக்டர் ஹரி நாராயணா, சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஸ்ரீ ஹரி, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

    மேலும் சிகிச்சை பெறுபவர்களுக்கு விரைவான சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களுக்கு அறிவுறுத்தினர்.

    சிகிச்சை பெற்று வருபவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    உணவில் ஏதாவது கலக்கபட்டதா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விருந்து சாப்பிட்ட 450 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×