என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் உள்ள அறைகள் பக்தர்களால் நிரம்பியது.
    • நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெளிமா நிலையில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

    இதனால் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் நேற்று 59 ஆயிரத்து 71 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    இவர்களில் 27 ஆயிரத்து 651 பேர் முடி காணிக்கையாக செலுத்தினர். உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. அதில் ரூ.4.12 கோடி காணிக்கையாக கிடைத்ததுள்ளது. இந்த நிலையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் உள்ள அறைகள் பக்தர்களால் நிரம்பியது.

    இலவச தரிசனத்திற்கு 12 மணி நேரத்துக்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • கணவனின் கொடுமைக்கு முடிவு கட்ட நினைத்த நிர்மலா தாடே பள்ளிக்கூடேம் போலீசில் புகார் அளித்தார்.
    • பெற்றோரை இழந்த அவரது 2 மகள்கள் ஆதரவின்றி தவித்து வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் வீரபாளையத்தை சேர்ந்தவர் பாவிடு (வயது 45). இவருடைய மனைவி நிர்மலா (35) தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த பாவிடு மது குடிக்க ஆரம்பித்தார். போதையில் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டார். இதனை தடுக்க வந்த அவரது மகள்களையும் அடித்து உதைத்தார்.

    நீண்ட நாட்களாக கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது.

    கணவனின் கொடுமைக்கு முடிவு கட்ட நினைத்த நிர்மலா இதுகுறித்து அந்தப் பகுதியில் உள்ள தாடே பள்ளிக்கூடேம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் கணவன் மனைவி இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    அதற்குப் பிறகும் பாவிடு மது போதையில் மனைவியை கொடுமைப்படுத்தினார். இதனால் மீண்டும் நிர்மலா போலீஸ் நிலையத்திற்கு சென்று கணவன் மீது புகார் அளித்தார்.

    போலீசார் பாவிடுவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாவிடு ஜெயிலில் இருந்து வெளியே வந்தார்.

    அவருடைய உறவினர்கள் கணவன் மனைவி இருவரையும் சாமாதானம் செய்தனர். நேற்று முன்தினம் இரவு பாவிடு, நிர்மலா இருவரும் ஒரு அறையிலும், அவருடைய மகள்கள் மற்றொரு அறையிலும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    அதிகாலையில் பாவிடு கண் விழித்தார். ஜெயிலுக்கு அனுப்பியதால் மனைவியின் மீது அவருக்கு தீராத கோபம் ஏற்பட்டது.

    வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து தூங்கிக் கொண்டிருந்த நிர்மலாவின் கழுத்தை அறுத்து தலையை துண்டாக வெட்டி எடுத்தார்.

    அந்தத் தலையை 3 துண்டுகளாக வெட்டி வீசினார். மேலும் நிர்மலாவின் 2 கைகளை துண்டு துண்டாக வெட்டி அறையில் இருபுறமும் தூக்கி எறிந்தார்.

    சத்தம் கேட்டு கண்டுவிழித்த அவரது மகள்கள் ஓடி வந்தனர்.

    ரத்த வெள்ளத்தில் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் தாய்க்கிடந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியில் அலறி கூச்சலிட்டனர்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.அதற்குள் பாவிடு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நிர்மலாவின் உடலை மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து பாவிடுவை தேடி வந்தனர்.

    இந்நிலையில் தப்பி ஓடிய பாவிடு ஊருக்கு வெளியே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பெற்றோரை இழந்த அவரது 2 மகள்கள் ஆதரவின்றி தவித்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அழைத்து வரும் புரோக்கர்களுக்கு ரூ.1 முதல் 2 லட்சம் வரை கமிஷனாக தரப்பட்டுள்ளது.
    • சிறுநீரகம் கொடுத்ததற்காக அவரிடம் பேசியபடி தனியார் ஆஸ்பத்திரி குறிப்பிட்ட தொகையை தரவில்லை.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிரபல தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் சமீப காலமாக கிட்னி விற்பனை அதிகளவில் நடந்துள்ளது.

    புரோக்கர்கள் மூலம் ஆசைவார்த்தை கூறி ஏழைகள் தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்படுகின்றனர். இவ்வாறு அழைத்து வரும் புரோக்கர்களுக்கு ரூ.1 முதல் 2 லட்சம் வரை கமிஷனாக தரப்பட்டுள்ளது. புரோக்கர்களை நம்பி காமராஜர் என்பவர் தனது கிட்னியை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொடுத்துள்ளார். சிறுநீரகம் கொடுத்ததற்காக அவரிடம் பேசியபடி தனியார் ஆஸ்பத்திரி குறிப்பிட்ட தொகையை தரவில்லை.

    இதையடுத்து அவர் விசாகப்பட்டினம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ஆஸ் பத்திரியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அங்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய அரசு அனுமதி இல்லாமல் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த மருத்துவமனைக்கு சீல் வைத்தனர்.

    • 3 டன் மலர்களால் சுவாமிக்கும், தாயாருக்கும் புஷ்ப யாகம் நடந்தது.
    • கோதண்டராமசுவாமி, சீதா லட்சுமணருடன் மாட வீதிகளில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடைபெற்றது. அப்போது நித்யகைங்கர்யங்களில் அர்ச்சகர்கள், அதிகாரிகள், பக்தர்கள் அவர்களை அறியாமல் ஏதேனும் தவறுகள் செய்திருந்தால் அதற்கு பரிகாரமாக புஷ்ப யாகம் நடத்தப்படும்.

    அதன்படி திருப்பதி கோதண்டராமர் கோவிலில் புஷ்ப யாகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 10 மணி முதல் 11 மணி வரை, ஸ்ரீசீதாலட்சுமணருடன், கோதண்டராமசுவாமி உற்சவர்களுக்கு, திருமஞ்சனம் நடந்தது பால், தயிர், தேன், மஞ்சள், சந்தனம், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப் பட்டது. மாலை 4 மணி முதல் 6 மணி வரை கோவிலில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க புஷ்பயாகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

    துளசி, சாமந்தி, கன்னேறு, மல்லிகை, கனகாம்பரம், ரோஜா, தாமரை, அல்லி, தாழம்பூ என 11 வகையான மலர்கள், ஆறு வகையான இலைகள் என மொத்தம் 3 டன் மலர்களால் சுவாமிக்கும், தாயாருக்கும் புஷ்ப யாகம் நடந்தது.

    பின்னர் இரவு 7 மணிக்கு கோதண்டராமசுவாமி, சீதா லட்சுமணருடன் கோவில் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    நிகழ்ச்சியில் துணை நிர்வாக அதிகாரி நாகரத்னா, உதவி நிர்வாக அதிகாரி மோகன், கார்டன் இணை இயக்குனர் ஸ்ரீநிவாசலு மற்றும் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
    • ரெயில் மீது கற்களை வீசிய 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், செகந்தராபாத்தில் இருந்து திருப்பதிக்கு வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி கடந்த மாதம் தொடங்கி வைத்தார்.

    இந்த ரெயில் செகந்திராபாத்தில் இருந்து திருப்பதி இடையில் ஒரு இடத்தில் மட்டுமே நின்று செல்கிறது. இதனால் திருப்பதிக்கு வரும் ஏழுமலையான் பக்தர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று காலை செகந்திராபாத்தில் இருந்து வந்தே பாரத் ரெயில் திருப்பதி நோக்கி வந்து கொண்டிருந்தது.

    திருப்பதி அடுத்த கூடூர் ரெயில் நிலையத்தை கடந்து சென்றபோது மர்ம நபர்கள் ரெயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

    ரெயில் பெட்டியின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இதுகுறித்து ரெயில் என்ஜின் டிரைவர் திருப்பதி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    ரெயில் மீது கற்களை வீசிய 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திரா, தெலுங்கானாவில் வந்தே பாரத் ரெயில் மீது அடிக்கடி கற்கள் வீசி தாக்கும் சம்பவம் நடக்கிறது. இதனால் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

    • சிரஞ்சீவியை ஜெயிலில் அடைக்காததால் அவரது உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
    • போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், செகந்திராபாத், எஸ்.பி. நகர் பகுதியை சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவரை துக்காராம் கேட் போலீசார் திருட்டு வழக்கில் கைது செய்தனர்.

    போலீஸ் நிலையத்தில் விசாரணையின் போது சிரஞ்சீவியை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் சிரஞ்சீவி உடல்நலம் பாதிக்கப்பட்டார். அவரை காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிரஞ்சீவி பரிதாபமாக இறந்தார்.

    சிரஞ்சீவி இறந்த தகவலை போலீசார் அவரது குடும்பத்திற்கு தெரிவிக்கவில்லை. அவரது சாவை ரகசியமாக வைத்திருந்தனர். சிரஞ்சீவியை ஜெயிலில் அடைக்காததால் அவரது உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் போலீஸ் நிலையத்திற்கு வந்து சிரஞ்சீவி குறித்து விசாரித்தனர்.

    அப்போது போலீசார் உடல்நிலை குறைவு காரணமாக சிரஞ்சீவி ஆஸ்பத்திரியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைக் கேட்டதுதம் சிரஞ்சீவியின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனை தொடர்ந்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சிரஞ்சீவியை போலீசார் அடித்து கொன்று விட்டதாகவும், சாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

    சிரஞ்சீவி உடல் பிரேத பரிசோதனை செய்த பிறகு அவர் எப்படி இறந்தார் என அறிக்கை கிடைக்கும் அதன் பிறகு சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    • மே 4-ந்தேதி அங்குரார்ப்பணமும் நடக்கிறது.
    • கபிலேஸ்வரர், காமாட்சி தாயாருக்கு நவகலச திருமஞ்சனம் நடக்கிறது.

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் அடுத்த மாதம் (மே) 5-ந்தேதி பத்ர புஷ்ப யாகமும், இதற்காக மே 4-ந்தேதி மாலை அங்குரார்ப்பணமும் நடக்கிறது.

    மே 5-ந்தேதி காலை 7.30 மணியில் இருந்து காலை 9.30 மணி வரை உற்சவர்களான கபிலேஸ்வரர், காமாட்சி தாயாருக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், கரும்புச்சாறு, இளநீர், விபூதி, மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் நவ கலச திருமஞ்சனம் நடக்கிறது. காலை 10 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை உற்சவர்களுக்கு சாமந்தி, கன்னேறு, தாழம்பூ, சம்பங்கி, தாமரை, ரோஜா, மல்லி, கனகாம்பரம் மற்றும் வில்வம், துளசி, பன்னீர் இலைகளுடன் பத்ர புஷ்ப யாக மஹோற்சவம் நடத்தப்படுகிறது.

    கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், ஆன்மிக சேவையில் ஈடுபட்டு வரும் அர்ச்சகர்கள், கோவில் அதிகாரிகள் ஆகியோர்கள் ஏதேனும் தெரிந்தும், தெரியாமலும் செய்த தவறுகளால் ஏற்படுகின்ற தோஷ நிவர்த்திக்காக பத்ர புஷ்ப யாகம் செய்யப்படுகிறது, என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கோவிலில் பாராயணம் நடந்தது.
    • சாமவேத பாராயணம் மே 1-ந்தேதி தொடங்கி ஜூன் 30-ந்தேதி வரை நடக்கிறது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்து வரும் சதுர்வேத பாராயண யாகத்தின் ஒரு பகுதியாக சாமவேத பாராயணம் மே மாதம் 1-ந்தேதி தொடங்கி ஜூன் மாதம் 30-ந்தேதி வரை நடக்கிறது. வேத பண்டிதர்கள் ஒவ்வொரு குழுவிலும் 13 பேர் வீதம் 6 குழுக்களாகப் பாராயணம் செய்கிறார்கள். இந்தப் பாராயணம் தினமும் காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரை கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் நடக்கிறது.

    கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கோவிலில் பாராயணம் நடந்தது. கொரோனா தொற்று பரவலின்போது 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ந்தேதி முதல் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ந்தேதி வரை கிருஷ்ண யஜுர் வேத பாராயணம் நடந்தது. அதன் பிறகு ரிக் வேத பாராயணம் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி முதல் வருகிற 31-ந் தேதி வரை நடக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மணிகண்டன் தனது தாய்க்கு சாதகமாக பேசியதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • போலீசார், உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், கஜுவாக்கா பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் சாப்ட்வேர் என்ஜினியர். இவரது மனைவி சுவேதா (வயது 24). தம்பதிக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

    மணிகண்டனின் தாய் அப்பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். சுவேதா தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    கடந்த 15 நாட்களுக்கு முன்பு மணிகண்டன் அலுவலக வேலையாக ஐதராபாத் சென்றார்.

    இந்நிலையில் நேற்று மாலை மணிகண்டனின் தாய்க்கும் சுவேதாக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    பின்னர் மணிகண்டனின் தாய் ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு சென்றுவிட்டார். மணிகண்டனுக்கு போன் செய்த சுவேதா உன்னுடைய தாய் அடிக்கடி என்னிடம் சண்டை போட்டு வருகிறார் என கூறினார்.

    அப்போது மணிகண்டன் தனது தாய்க்கு சாதகமாக பேசியதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து வீட்டை பூட்டிய சுவேதா பக்கத்து வீட்டுக்காரரிடம் சாவியை கொடுத்துவிட்டு விசாகப்பட்டினம் கடற்கரைக்கு சென்றார். அங்குள்ள காளி கோவில் அருகே சுவேதா கடலில் குதித்தார்.

    அவரை பல இடங்களில் தேடினர். அவரது மாமியார் இது குறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்வேதாவை தேடி வந்தனர்.

    நள்ளிரவு 12 மணி அளவில் விசாகப்பட்டினம் கடற்கரையில் சுவேதா பிணமாக மிதந்தார்.

    ஸ்வேதாவின் பிணத்தை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் சுவேதாவின் அறையில் போலீசார் சோதனை செய்தனர்.

    அப்போது ஸ்மைலி பொம்மையுடன் வெள்ளை பேப்பரில் 'எல்லாவற்றிற்கும் ஒரு பெரிய நன்றி' என்று சுவேதா மணிகண்டனுக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

    அதில் 'நான் இல்லாமல் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று எனக்கு எப்போதும் தெரியும். உங்களுக்கு உண்மையான வலி இருக்காது.

    எவ்வாறாயினும் உங்கள் எதிர்காலம். புதிய வாழ்க்கைக்கு ஆல் தி பெஸ்ட். பேசுவதற்கு நிறைய இருந்தாலும்.. நான் எதுவும் பேசவில்லை.

    உனக்கு எல்லாம் தெரியும். உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்' என தெரிவித்துள்ளார்.

    ரூ.10 லட்சம் வரதட்சணை போதவில்லை எனக்கூறி மாமியார் தொல்லையால் சுவேதா உயிரை மாய்த்துக்கொண்டதாக அவரது தாய் ரமா கதறி அழுதார்.

    இதுகுறித்து போலீசார், உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • இன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை யாகம் நடைபெறும்.
    • சுவாமி, தாயாருக்கு பல்வேறு வகையான மலர்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    திருப்பதி கோதண்டராமர் கோவிலில் இன்று (புதன்கிழமை) புஷ்ப யாகம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நேற்று மாலை அங்குரார்ப்பணம், ஆச்சார்ய ருத்விக்வாரணம் நடந்தது. மாலை 6 மணிக்கு சேனாதிபதி உற்சவம், 7 மணிக்கு மேதினி பூஜை, மிருட்சம்கிரஹணம் நடைபெற்றது.

    இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு திருமஞ்சனம், மாலை 4 மணி முதல் 6 மணி வரை யாகம் நடைபெறும். இதையொட்டி சுவாமி, தாயாருக்கு பல்வேறு வகையான மலர்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. பின்னர் இரவு 7 மணிக்கு கோதண்டராமசுவாமி, சீதா லட்சுமணருடன் கோவில் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    கோதண்டரார் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த மாதம் (மார்ச்) 20-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடைபெற்றது. அப்போது நித்யகைங்கர்யங்களில் அர்ச்சகர்கள், அதிகாரிகள், பக்தர்கள் அவர்களை அறியாமல் ஏதேனும் தவறுகள் செய்திருந்தால் அதற்கு பரிகாரமாக இந்த புஷ்பயாகம் செய்யப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பலத்த பாதுகாப்பையும் மீறி திருப்பதி ஏழுமலையான் கோவில் மீது 3 ஹெலிகாப்டர்கள் பறந்தன.
    • தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலின் மேல் விமானம், ஹெலிகாப்டர்கள் பறக்கக்கூடாது என்பது ஆகம சாஸ்திர விதி. இதனால் திருப்பதி மலைக்கு மேல் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், டிரோன் கேமராக்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் பலத்த பாதுகாப்பையும் மீறி நேற்று மாலை திருப்பதி ஏழுமலையான் கோவில் மீது 3 ஹெலிகாப்டர்கள் பறந்தன. தரிகொண்டா வெங்கமாம்பா, அன்னபிரசாத கட்டிடம், பரகாமணி கட்டிடம் மற்றும் பாலாஜி நகர் உள்ளிட்ட இடங்களுக்கு மேல் பறந்தன.

    இந்த சம்பவம் தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து, திருப்பதி தேவஸ்தான அதிகாரி பாலிரெட்டி, ரேணிகுண்டாவில் உள்ள விமான நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டார்.

    அந்த ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படைக்கு சொந்தமானது என தகவல் கிடைத்தது.

    கடப்பாவில் உள்ள அதிரடிப்படை முகாமில் இருந்து சென்னை செல்லும்போது திருப்பதி மலைக்கு மேல் ஹெலிகாப்டர்கள் பறந்ததாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    ஏழுமலையான் கோவிலுக்கு மேல் ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் பறக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு திருப்பதி தேவஸ்தானம் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தது.

    விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பறக்க தடை விதிக்கப்பட்ட பகுதியாக திருப்பதி மலை அங்கீகரிக்கப்படவில்லை என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஒரு வினாடிக்கு 20 முதல் 30 டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது.
    • 1½ மணி நேரத்தில் 15.25 லட்சம் தரிசன டிக்கெட் முன்பதிவு நிறைவடைந்தது.

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்கள் நீண்ட நேரம் தரிசனத்திற்காக காத்திருக்காமல் இருப்பதற்காக தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடுகிறது.

    இந்த நிலையில் மே மற்றும் ஜூன் மாதங்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக இன்று காலை ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டது.

    மே மாதத்திற்கான 7 லட்சத்து 75 ஆயிரம் டிக்கெட்டுகளும், ஜூன் மாதத்திற்கு 7 லட்சத்து 50 ஆயிரம் டிக்கெட்டுகள் என மொத்தம் 15 லட்சத்து 25 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன.

    ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்படுவதால் விறுவிறுப்பாக தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன.

    ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் டிக்கெட் முன் பதிவு செய்ய முயன்றதால் ஆன்லைன் சேவை முடங்கியது. இதனால் பக்தர்கள் டிக்கெட் பதிவு செய்ய முடியாமல் அவதி அடைந்தனர்.

    தொடர்ந்து பக்தர்கள் முன்பதிவு செய்து கொண்டே இருந்தனர். ஒரு வினாடிக்கு 20 முதல் 30 டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது. வெளியிடப்பட்ட 1½ மணி நேரத்தில் 15.25 லட்சம் தரிசன டிக்கெட் முன்பதிவு நிறைவடைந்தது.

    ஆன்லைன் முன்பதிவு எந்த வித பிரச்சனையும் இல்லாமல் வேகமாக நடந்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தகர்.

    இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களின் வசதிக்காக பஸ் நிலையம், ரெயில் நிலையம், அலிபிரி, கோவிந்தராஜ சாமி மண்டபம் உள்ளிட்ட இடங்களில் தினமும் 25 ஆயிரம் நேர ஒதுக்கிட்டு இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது.

    இதேபோல் ஸ்ரீவாணி அறக்கட்டளை, சுப்ரபாதம், நிஜபாத சேவை, சகஸ்ர தீப அலங்காரம், கல்யாண உற்சவம் உள்ளிட்ட சேவை டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்பட்டு வருகிறது.

    திருப்பதியில் நேற்று 63, 870 பேர் தரிசனம் செய்தனர்.27,480 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.88 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    ×