என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    உருளைக்கிழங்கு, பன்னீர் சேர்த்து சப்ஜி செய்தால் அருமையாக இருக்கும். இந்த சப்ஜி சப்பாத்தி, நாண், புலாவ், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - 3
    இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
    பன்னீர் - 200 கிராம்
    தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
    வெங்காயம் - 2
    சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
    தக்காளி - 3
    ஏலக்காய் - 3
    சீரகம் - அரை தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
    கொத்தமல்லித்தழை - சிறிது
    கரம்மசாலாத் தூள் - அரை தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - 2
    எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    முதலில் உருளைக்கிழங்கை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.

    பன்னீரை சிறுத்துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    பச்சை மிளகாயை கீறி வைக்கவேண்டும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியாத் தூள், சீரகத்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்கி விட்டு பன்னீர், உருளைக்கிழங்கு, உப்பு, அரை கப் தண்ணீர் சேர்த்துக் கிளறி அடுப்பை சிம்மில் வைத்து வேக விடவேண்டும்.

    உருளைக்கிழங்கு வெந்ததும் கரம்மசாலா தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.

    சுவையான ஆலு பன்னீர் சப்ஜி தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் முதல் பெரியோர் வரை விரும்பி சாப்பிடும் மாங்காய் சாதம் செய்து எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    சாதம் - 1 கப்
    துருவிய தேங்காய் - 3/4 கப்
    எண்ணெய் - தேவையான அளவு
    கொத்தமல்லி இலை - 1/2 கப்
    வேர்க்கடலை - 1/2 கப்
    பச்சை மிளகாய் -  தேவையான அளவு
    மாங்காய் - 1
    கறிவேப்பிலை - சிறிதளவு
    பெருங்காயம் - சிறிதளவு
    கடுகு - 1/2 ஸ்பூன்
    கடலை பருப்பு - 1/2  ஸ்பூன்
    உளுந்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
    வெந்தயம் - 1/2 ஸ்பூன்
    மஞ்சள் - 1/2 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    * சாதம் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் வர வேண்டுமென்றால் அரிசி வேகவைக்கும்போது ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வடித்துக்கொள்ளவும்.

    * ஒரு மாங்காயை எடுத்து நன்றாக துருவிக் கொள்ளுங்கள் வெந்தயத்தை வறுத்து கரகரப்பாக பொடி செய்து கொள்ளுங்கள்.

    * ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    * பின்னர் வேர்க்கடலையை சேர்த்து வறுக்கவும்.



    * அதில் பச்சை மிளகாய், மஞ்சள் மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து சில நிமிடங்கள் நன்றாக வதங்கியதும் இறக்கிவிட்டு அதில் சாதம் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும்.

    * கொத்தமல்லி இலைகள் மற்றும் உப்பு இவற்றை மேலே தூவி நன்றாக கலக்கவும்

    * கடைசியாக வெந்தயப் பொடி சேர்த்து நன்றாக கிளறவும்.

    சுவையான மாங்காய் சாதம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.


    குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று ஹோட்டலில் கிடைக்கும் ஃபிஷ் டிக்காவை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சதுரமாக வெட்டப்பட்ட மீன் துண்டுகள் - 1/2 கிலோ,
    தயிர் - 1 கப்,
    கடுகு பவுடர் - 2 டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு,
    சீரகத்தூள் - 1 டீஸ்பூன்,
    பெருஞ்சீரக தூள் - 1/2 டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
    கடுகு - 1 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
    வினிகர் - 4 டேபிள்ஸ்பூன்,
    இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்.



    செய்முறை :

    மீனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் தயிர், கடுகு பவுடர், உப்பு, சீரகத் தூள், பெருஞ்சீரக தூள், மிளகாய்த் தூள், கடுகு, மஞ்சள் தூள், வினிகர், இஞ்சி பூண்டு விழுது எல்லாவற்றையும் நன்றாக கலந்து கொள்ளவும்.

    கலந்த இந்த மசாலாவில் மீனை சேர்த்து நன்கு கலந்து, ஒரு மணி நேரம் ஊறவிடவும்.

    பிறகு ஸ்க்யூவர் குச்சியில் ஒவ்வொரு துண்டுகளாக குத்தி வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.

    சூப்பரான ஃபிஷ் டிக்கா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பிரசவம் ஆன பெண்கள் சுறா புட்டு சாப்பிட்டால் நன்றாக தாய்ப்பால் சுரக்கும். இன்று இந்த சுறா புட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சுறா மீன் - 300 கிராம்,
    நறுக்கிய இஞ்சி - 1½ டேபிள்ஸ்பூன்,
    பச்சைமிளகாய் - 5,
    கறிவேப்பிலை - 1 கொத்து,
    நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன்,
    வெங்காயம் - 100 கிராம்,
    மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்,
    எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்,
    சோம்பு - 1 டீஸ்பூன்,
    எண்ணெய் - 50 மி.லி.,
    உப்பு - தேவைக்கு.



    செய்முறை :

    சுறா மீனை மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து தோலுரித்து உதிர்த்து கொள்ளவும்.

    ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, பச்சைமிளகாய், வெங்காயம், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் அதில் மஞ்சள் தூள், உப்பு மற்றும் சுறா மீனை சேர்த்து நன்றாக கிளறவும்.

    மீன் நன்றாக உதிர்ந்து நன்கு வதங்கியதும் இறக்கி, கொத்தமல்லித்தழையை சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.

    சூப்பரான சுறா புட்டு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலையில் செய்த இட்லி மீந்து விட்டால் மாலை அந்த இட்லியை வைத்து மஞ்சூரியன் செய்யலாம். இன்று சுவையான இட்லி மஞ்சூரியன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    இட்லி - 8
    மைதா - 2 டீஸ்பூன்
    கார்ன் ஃப்ளார்(சோளமாவு) - 1  டீஸ்பூன்   
    அரிசி மாவு - 1/2 டீஸ்பூன்
    கடலை மாவு - 1 டீஸ்பூன்
    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு - ருசிக்கு
    சமையல் சோடா - 1 சிட்டிகை
    தண்ணீர் - மாவு கலக்க
    முட்டைகோஸ் - 1 கப் (விரும்பினால்)
    கறிவேப்பிலை - 1 கொத்து
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

    சாஸ் தயாரிக்க :

    பூண்டு - 1+1/2  டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 3
    வெங்காயம் - 2 மீடியம் சைஸ்
    குடை மிளகாய் - 1 பெரியது
    ரெட் சில்லி சாஸ் -  1 டீஸ்பூன்
    லைட் சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
    டொமேட்டோ கெட்சப் -  1+1/2 டீஸ்பூன்
    சர்க்கரை - 1 சிட்டிகை
    அஜினோமோட்டோ - 1 சிட்டிகை
    உப்பு - தேவைக்கு
    வெங்காயத்தாள் - 1/4 கப்



    செய்முறை :

    இட்லியை சதுரமான துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

    பூண்டு, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், குடைமிளகாய் இரண்டையும் பெரிய சதுர துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயத் துண்டுகளை தனித்தனி இதழ்களாக பிரித்து வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் மைதா, சோளமாவு, அரிசி மாவு, கடலை மாவு, மிளகுத்தூள், உப்பு, சோடா உப்பு, ஆகியவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கலந்து வைக்கவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து எண்ணெய் சூடானதும் இட்லியை மாவில் நன்றாக பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    கடைசியாக பாத்திரத்தில் ஒட்டி கொண்டிருக்கும் மாவில் நீளமாக நறுக்கிய முட்டைகோஸை பிரட்டி எண்ணெயில் பொரித்து அதனுடன் கறிவேப்பிலையையும் சேர்த்து மொறு மொறுப்பாக பொறித்து தனியே எடுத்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து 1+1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு, மற்றும் மிளகாயை சேர்த்து வதக்கவும்.

    பூண்டு சற்று சிவந்ததும் குடைமிளகாய், வெங்காயம் சேர்த்து கிளறவும்.

    2 நிமிடம் கழித்து இஞ்சி பூண்டு விழுது, ரெட் சில்லி சாஸ் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    இப்போது சோயா சாஸ், டொமேட்டோ கெட்சப், தேவையான அளவு உப்பு, சிட்டிகை சர்க்கரை, சிட்டிகை அஜினோமோட்டோ சேர்த்து கலக்கவும்.

    உடனடியாக பொரித்த இட்லியை போட்டு பிரட்டவும்.

    கடைசியாக வெங்காயத்தாளை தூவி ஒரு பிரட்டு பிரட்டி இறக்கவும்.

    பரிமாறும் போது பொறித்து வைத்த முட்டைகோஸ், கறிவேப்பிலை சேர்த்து கொடுத்தால் சாப்பிட நன்றாக இருக்கும்.

    சூப்பரான ஸ்பைசி இட்லி மஞ்சூரியன் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தோசை, நாண், சப்பாத்தி, புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த சிக்கன் பன்னீர் கிரேவி. இன்று இந்த கிரேவி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ
    பன்னீர்  - 100 கிராம்
    வெங்காயம் - 2
    தக்காளி சாஸ்  - 1 ஸ்பூன்
    சோயா சாஸ்  - 1 ஸ்பூன்
    தனியாத்தூள்  - 1 ஸ்பூன்
    சீரகத்தூள்  - 1 ஸ்பூன்
    இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்
    மிளகாய்த்தூள்  - 1 ஸ்பூன்
    குடைமிளகாய்  - 1



    செய்முறை :

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குடைமிளகாயை வட்ட வடிவமாக வெட்டிக்கொள்ளவும்.

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    பன்னீரை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    வாணலியில் சிறு துண்டுகளாக நறுக்கிய பன்னீரை எண்ணெயில் போட்டு பொரித்து தனியாக வைக்கவும்.

    மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் சிக்கன் துண்டுகளுடன், தனியா, சீரகத்தூள், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், உப்பு போட்டு வதக்கவும்.

    பின் வட்டமாக நறுக்கிய குடைமிளகாய், வறுத்த பன்னீர் துண்டுகளை போட்டு வதக்கவும்.

    இறுதியாக தக்காளி சாஸ், சோயாசாஸ் ஊற்றி கிளறி இறக்கவும்.

    குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான டிஷ் இது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மீனை வித்தியாசமான சுவையில் சமைத்து சாப்பிட விரும்பினால், கறிவேப்பிலை மீன் வறுவலை செய்து சுவையுங்கள். இதை வறுவலை செய்வது மிகவும் சுலபம்.
    தேவையான பொருட்கள் :

    துண்டு மீன் (Pomfret Fish) - 1 பெரிய கையளவு
    தேங்காய் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    அரைப்பதற்கு...

    கறிவேப்பிலை - 1 கையளவு
    மிளகு - 1 டீஸ்பூன்
    வரமிளகாய் - 2-3
    பூண்டு - 4 பற்கள்
    பச்சை மிளகாய் - 3-4
    மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
    சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
    கரம் மசாலா - 1 டீஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 3-4 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    மீனை நன்கு சுத்தம் செய்து நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

    மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த மீனை போட்டு அதனுடன் அரைத்த மசாலாவை மீனில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அதில் மீனை போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், கறிவேப்பிலை மீன் வறுவல் ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உணவு உண்பதற்கு முன் சூப் குடித்துவிட்டு பின் உணவை உட்கொண்டால் உண்ணும் உணவின் அளவானது குறையும். இப்போது மட்டன் கீமா சூப் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் கீமா - 150 கிராம்
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    துவரம் பருப்பு - 50 கிராம்
    தக்காளி - 1
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 1
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
    நெய் - 3 டீஸ்பூன்
    புதினா - சிறிது
    கொத்தமல்லி - சிறிது
    ஏலக்காய் - 2
    பட்டை - 1 இன்ச்
    கிராம்பு - 2
    உப்பு - தேவையான அளவு
    மிளகு தூள் - 1 ஸ்பூன்



    செய்முறை :

    துவரம் பருப்பு, மட்டன் கீமாவை நன்றாக கழுவி வைக்கவும்.

    கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், ஏலக்காய், பட்டை, கிராம்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், ப.மிளகாயை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிய பின் துவரம் பருப்பு சேர்த்து சிறிது வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் மட்டன் கீமா சேர்த்து பிரட்டிய பின் தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

    கடைசியாக அதில் புதினா சேர்த்து கிளறி, மிளகாய் தூள், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 8 விசில் விட்டு இறக்கவும்.

    விசில் போனதும் குக்கர் மூடியை திறந்து கொத்தமல்லி தழை, மிளகு தூள் சேர்த்து பரிமாறவும்.

    சுவையான மட்டன் கீமா சூப் ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உருளைக்கிழங்கு என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்குடன் முட்டை சேர்த்து சூப்பரான ஆம்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    முட்டை - 4
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    பச்சை மிளகாய் - 4
    உருளைக்கிழங்கு - 2
    கறிவேப்பிலை
    வெங்காயம் - 1
    வெண்ணெய் - சிறிதளவு



    செய்முறை :

    வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை தோல் நீக்கி மெலிதாக சீவி, எண்ணெயில் போட்டு வறுத்து கொள்ளவும்.

    முட்டையை உடைத்து பாத்திரத்தில் ஊற்றி, உப்பு கலந்து நன்றாக அடித்து கொள்ளவும்.

    இதில் நறுக்கிய வெங்காயம், வறுத்த உருளைக்கிழங்கு, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்..

    நான் ஸ்டிக் பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெண்ணெய் போட்டு சூடானதும் அதில் உருளைக்கிழங்கு முட்டை கலவையை ஊற்றி சுற்றி சிறிது வெண்ணெய் போட்டு ஆம்லெட் போல் வேக விடவும்.

    இப்பொழுது ஒரு பக்கம் நன்றாக வெந்ததும் திருப்பி போட்டு வேக விட்டு எடுத்து தட்டில் வைத்து முக்கோணமாக கேக் வெட்டுவது போல் வெட்டி பரிமாறவும்.

    சூப்பரான உருளைக்கிழங்கு முட்டை ஆம்லெட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, நாண், சாதம், இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பஞ்சாபி சிக்கன் கறி. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எலும்புடன் சிக்கன் - கால் கிலோ
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    மல்லி தூள் - ஒரு தேக்கரண்டி
    ஏலக்காய் - 2
    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
    கரம் மசாலா - அரை தேக்கரண்டி
    இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
    தயிர் - கால் கப்
    மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    பட்டை - ஒரு சிறுத் துண்டு
    லவங்கம் - 3
    பிரியாணி இலை - ஒரு சிறுத் துண்டு
    கொத்தமல்லி இலை
    எண்ணெய் - 3 மேசைக்கரண்டி



    செய்முறை :

    சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளியை அரைத்து கொள்ளவும்.

    கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து சிவக்க வதக்க வேண்டும்.

    இந்த அதை நன்றாக ஆற வைத்து மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    பின் மீண்டும் அதே பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை போட்டு தாளித்த பின்னர் அதில் அரைத்த விழுது சேர்த்து வதக்கவேண்டும்.

    அடுத்து அதில் தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டவேண்டும்.

    பின் விழுதாக அரைத்த தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி பச்சை வாசம் போய் எண்ணெய் பிரியும் போது சிக்கன் துண்டுகளை சேர்த்து மூடி வேக விடவும்..

    சிக்கன் வெந்து மீண்டும் கலவை திரண்டு வரும் போது தயிர் சேர்த்து கலந்து நன்றாக கலவை கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான பஞ்சாபி சிக்கன் கறி ரெடி. 

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இட்லி, தோசை, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த மட்டன் குழம்பு. இன்று இந்த மட்டன் குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் - அரை கிலோ
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    தக்காளி - 2
    மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
    மல்லித் தூள் - ஒன்றரை மேசைக்கரண்டி
    தேங்காய் துருவல் - கால் கப்
    கசகசா - அரை மேசைக்கரண்டி
    சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
    பட்டை - அரை அங்குலத் துண்டு
    கல் உப்பு - 2 தேக்கரண்டி
    நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி



    செய்முறை :

    மட்டனைத் துண்டுகளாக்கி கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

    தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பிறகு சின்ன வெங்காயத்தை தோலுரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

    தேங்காய் துருவலுடன் கசகசா சேர்த்து மிக்ஸி நைசாக அரைத்துக் கொள்ளவும்.

    குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

    பின் வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி சற்று வதங்கியதும் சுத்தம் செய்து வைத்திருக்கும் மட்டனை சேர்த்துப் போட்டு நன்கு கிளறவும்.

    பிறகு உப்பு சேர்த்து பிரட்டவும். (உப்பு சேர்த்து பிரட்டுவதால் கறியில் நன்கு உப்பு சேர்ந்துவிடும்) மட்டன் சற்று நிறம் மாறியதும் மல்லித் தூள், சோம்பு தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

    மிதமான தீயில் வைத்து மட்டன் தூள் வகைகள் ஒன்றாக சேரும்படி நன்கு 2 நிமிடங்கள் பிரட்டவும்.

    அடுத்து மட்டனுடன் தேங்காய் விழுது ஒன்றாக சேரும்படி கிளறிவிட்டு, ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி தீயை அதிகமாக வைத்து, ஒரு முறை கிளறிவிட்டு குக்கரை மூடி 6 விசில் வரும் வரை வைத்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.

    சிறிது நேரம் கழித்து குக்கரைத் திறந்து பார்த்தால் கறியில் உள்ள கொழுப்பு மற்றும் எண்ணெய் மேலே மிதந்து வந்திருக்கும். இப்போது சுவையான மட்டன் குழம்பு ரெடி.

    சுவையான மட்டன் குழம்பு தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    டீ மற்றும் காபியுடன் சாப்பி தட்டை சூப்பராக இருக்கும். இன்று வேர்க்கடலை தட்டையை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வேர்க்கடலை - அரை கப்
    பொட்டுக்கடலை - அரை கப்
    கடலை மாவு - அரை கப்
    அரிசி மாவு - அரை கப்
    மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
    பெருங்காயத் தூள் - சிறிதளவு
    வெண்ணெய் - தேவையான அளவு
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு



    செய்முறை:

    வாணலியில் வேர்க்கடலையை போட்டு லேசாக வறுத்தெடுத்து தோல் நீக்கி கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    பொட்டுக் கடலையையும் தூளாக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பொட்டுக்கடலையை போட்டு அதனுடன் பொடித்த வேர்க்கடலை, அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், வெண்ணெய் ஆகியவற்றை கலந்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.

    பதத்துக்கு வந்ததும் தட்டைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து ருசிக்கவும்.

    சூப்பரான வேர்க்கடலை தட்டை ரெடி.

    இதனை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்து 1 வாரம் முதல் 10 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×