என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    காலையில் சீக்கிரமா சமைக்கணும். சுலபமாவும் இருக்கணும் என்று நினைப்பவர்களுக்கான ரெசிபி இது. இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பிரெட் - 6 துண்டுகள்
    புளிக்காத கெட்டித் தயிர் - ஒரு கப்
    பெரிய வெங்காயம் - 1
    குடைமிளகாய் - பாதி
    கேரட்  - சிறியது 1
    தக்காளி - 1
    பச்சைமிளகாய் - 2
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லி, குடைமிளகாய், கேரட், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    பிரெட் துண்டுகளின் ஓரங்களை எல்லாம் கட் செய்து நீக்கிவிடவும்.

    ஒரு மெல்லிய துணியில் தயிரை போட்டு தண்ணீர் இல்லாமல் வடிகட்டி கொள்ளவும்.

    வடிகட்டிய தயிரை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், கேரட், தக்காளி, கொத்தமல்லி, பச்சைமிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

    இக்கலவையை சிறிதளவு எடுத்து ஒரு பிரெட் துண்டின் மேல் பரப்பிவிட்டு மற்றொரு பிரெட் துண்டை அதன் மேல் வைக்கவும்.

    பின்னர் முக்கோணம், சதுரம் என விருப்பப்பட்ட வடிவில் இரண்டு பிரெட் துண்டுகளையும் சேர்த்து வைத்து கட் செய்து கொள்ளவும்.

     குறிப்பு:

    * விருப்பப்பட்டால் பிரெட் துண்டுகளை டோஸ்ட் செய்தும் உபயோகிக்கலாம்.

    * தயாரித்து நீண்ட நேரம் கழித்து சாப்பிட்டால் தயிர் பிரெட்டுடன் நன்கு ஊறிவிடும் என்பதால், பரிமாறுவதற்கு சற்று நேரம் முன்பாக தயிர் சாண்ட்விச்சைத் தயாரிக்கவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, நாண், சூடான சாதத்துடன் சாப்பிட முள்ளங்கி பருப்புப் பச்சடி அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முள்ளங்கி - 2
    துவரம்பருப்பு - 100 கிராம்
    தக்காளி, பச்சை மிளகாய் - தலா ஒன்று
    சீரகம் - ஒரு டீஸ்பூன்
    சாம்பார் பொடி - தேவையான அளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
    மஞ்சள்தூள் - சிறிதளவு
    எண்ணெய் - 3 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    முள்ளங்கியை தோல் நீக்கி பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் துவரம்பருப்புடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி, இரண்டு விசில்விட்டு இறக்கவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, சீரகம் தாளிக்கவும்.

    அதனுடன் முள்ளங்கி, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கவும்.

    பிறகு வேகவைத்த பருப்பு, சாம்பார் பொடி, மஞ்சள்தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு வேகவிட்டு இறக்கவும்.

    சூப்பரான முள்ளங்கி பருப்புப் பச்சடி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தயிர் சாதம், சாம்பார் சாதம், தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் கோழி வெப்புடு. இன்று அதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாத சிக்கன் - கால் கிலோ
    தட்டிய பூண்டு - 30 கிராம்
    வெங்காயம் - 50 கிராம்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    மஞ்சள்தூள் - 2 சிட்டிகை
    காய்ந்த மிளகாய் - 3
    மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    சீரகம் - அரை டீஸ்பூன்
    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை:

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிகொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும காய்ந்த மிளகாய், சீரகம், பூண்டு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் சிக்கன் துண்டுகள், மஞ்சள்தூள் சேர்த்து, தேவையான அளவு உப்பு, சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவிடவும்.

    சிக்கன் வெந்து தண்ணீர் எல்லாம் வற்றியதும் மிளகுத்தூள் தூவிக் கிளறவும்.

    கடைசியாக மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

    ஆந்திரா ஸ்டைல் கோழி வெப்புடு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பிரியாணி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று சீரக சம்பா அரிசி சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - அரை கிலோ
    சீரக சம்பா அரிசி - அரை கிலோ
    பச்சை மிளகாய் - 10
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    புதினா - ஒரு கட்டு
    கொத்தமல்லித்தழை - ஒரு கட்டு
    பால் - கால் லிட்டர்
    தயிர் - 100 மில்லி
    எண்ணெய் - 50 மில்லி
    நெய் - 2 டீஸ்பூன்
    பட்டை, கிராம்பு, ஏலக்காய்  - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை:

    சிக்கனை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    புதினா, கொத்தமல்லி, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    பாலை நன்றாக காய்ச்சி ஆறவைத்து கொள்ளவும்.

    அரிசியை அரை மணி நேரம் ஊறவிடவும்.

    பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி - பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதனுடன் கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கவும்.

    தக்காளி சேர்த்து குழைய வேக விடவும்.

    தக்காளி நன்றாக குழைய வெந்ததும் சிக்கன், தயிர், உப்பு, பால், அரை லிட்டர் தண்ணீர், சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

    தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அரிசியைச் சேர்த்து வேகவிடவும்.

    அரிசி பாதியளவு வெந்த பிறகு தம் போட்டு இறக்கவும்.

    கொத்தமல்லித்தழை, புதினா, நெய் சேர்த்து 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

    பிறகு ராய்த்தாவுடன் பரிமாறவும்.

    சூப்பரான ஆந்திரா ஸ்டைல் சிக்கன் பிரியாணி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு லட்டு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று கேரட், கோவா சேர்த்து வீட்டிலேயே சூப்பரான லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேரட் - 200 கிராம்,
    தேங்காய்த்துருவல் - 1 கப்,
    பொடித்த கோவா - 1/2 கப்,
    சர்க்கரை - 1/2 கப் அல்லது தேவைக்கு,
    மெல்லியதாக சீவிய பாதாம், பிஸ்தா - தேவைக்கு,
    உடைத்த முந்திரி, காய்ந்த திராட்சை - தேவைக்கு,
    நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
    ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
    அலங்கரிக்க விருப்பமான நட்ஸ் - தேவைக்கு.



    செய்முறை :

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    நான்ஸ்டிக் கடாயை அடுப்பில் வைத்து நெய் 1 டேபிள்ஸ்பூன் ஊற்றி சூடானதும் முந்திரி, காய்ந்த திராட்சையை வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.

    அதே கடாயில் மீதியுள்ள நெய்யை ஊற்றி கேரட்டை போட்டு வதக்கவும். ‘

    கேரட் சிறிது வதங்கியதும் தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் பொடித்த கோவாவை சேர்த்து மிதமான தீயில் கைவிடாமல் 10 நிமிடம் வதக்கவும்.

    அடுத்து அதில் சர்க்கரை சேர்த்து வதக்கவும்.

    சர்க்கரை கரைந்து அனைத்தும் சுருண்டு கடாயில் ஒட்டாமல் வரும்பொழுது வறுத்த முந்திரி, காய்ந்த திராட்சை கலந்து இறக்கவும்.

    ஆறியதும் லட்டுகளாக பிடித்து பிஸ்தா, பாதாம் சீவலால் அலங்கரித்து பரிமாறவும்.

    சூப்பரான கேரட் கோவா லட்டு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தினமும் ஏதாவது ஒரு கீரையை சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று மணத்தக்காளிக்கீரை மண்டி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மணத்தக்காளிக் கீரை - ஒரு கட்டு,
    சின்ன வெங்காயம் - 10,
    அரிசி களைந்த கெட்டித் தண்ணீர் - 2 கப்,
    தேங்காய் பால் - 1 கப்,
    எண்ணெய் - 2 டீஸ்பூன்,
    உளுந்து - 1 டீஸ்பூன்,
    சீரகம் - 1/2 டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 2,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கீரையை நன்றாக சுத்தம் செய்து கழுவி, ஆய்ந்து, கொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்து போட்டு சிவந்ததும், சீரகம் போட்டுப் பொரிந்ததும், காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் கீரையைச் சேர்த்து வதக்கவும்.

    2 நிமிடம் கீரையை வதக்கியதும், அரிசி களைந்த கெட்டித் தண்ணீரை ஊற்றவும்.

    கொதித்து வரும்போது சிம்மில் 5 நிமிடம் வைக்கவும்.

    கீரையும் வெந்த பிறகு உப்பு, தேங்காய்ப்பால் சேர்த்து கொதி வரும் முன் இறக்கவும்.

    சூப்பரான மணத்தக்காளிக்கீரை மண்டி

    குறிப்பு - இதற்கு எந்த கீரையை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    இறாலில் கோலா உருண்டை செய்தால் அருமையாக இருக்கும். சாதம், தோசை, சப்பாத்திக்கு அருமையான இறால் கோலா உருண்டை குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் - முக்கால்  கிலோ,
    கடலை மாவு - அரை கப்,
    சின்ன வெங்காயம் - 150 கிராம்,
    பெரிய வெங்காயம் - 3,
    தக்காளி - 4,
    மீன் வறுவல் மசாலா - 50 கிராம்,
    மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்,
    மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - சிறிதளவு,
    சோம்பு, சீரகம், கசகசா - தலா ஒரு டீஸ்பூன்,
    இஞ்சி - பூண்டு விழுது - 3 டீஸ்பூன்,
    தேங்காய் - அரை மூடி,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    இறாலை நன்றாக சுத்தம் செய்து வெதுவெதுப்பான நீரில் முக்கி எடுத்து தனியே வைக்கவும்.

    கொத்தமல்லி, சின்னவெங்காயம், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சின்ன வெங்காயம், சோம்பு, சீரகம், கசகசா ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும்.

    தேங்காயை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவை போட்டு அதனுடன் மீன் வறுவல் மசாலா, மிளகுத்தூள், இஞ்சி - பூண்டு விழுது ஒரு டீஸ்பூன், அரைத்து வைத்த வெங்காய விழுது, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு திக்கான மாவு பதத்தில் வைத்துக் கொள்ளவும்.

    பின்னர் ஒவ்வொரு இறாலாக தனியாக எடுத்து மாவுடன் உருட்டி, சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் மீதமுள்ள இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி - பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து குழைய வேக விடவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கிய பின்னர், சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.

    அரைத்த தேங்காய் விழுதை அதனுடன் கலந்து, திக்கான பதம் வந்ததும் பொரித்த இறால் உருண்டைகளை சேர்த்து, அடுப்பை 'சிம்’மில் வைத்து வேகவிடவும்.

    பிறகு, கொத்தமல்லி தூவி இறக்கினால்... சுவையான இறால் கோலா உருண்டை குழம்பு ரெடி!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தோசை, நாண், சப்பாத்தி, சாம்பார் சாதத்திற்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும் இந்த வரமிளகாய் கோழி வறுவல். இன்று இந்த வறுவலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் -  250 கிராம்,
    வரமிளகாய் - 10,
    சாம்பார் வெங்காயம் - 100 கிராம்,
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
    கரம் மசாலா - அரை டீஸ்பூன்,
    எண்ணெய் - 100 மி.லி.கிராம்,
    உப்பு - தேவைக்கு.
    கொத்தமல்லி - சிறிதளவு,
    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
    தனியா - 5 கிராம்.



    செய்முறை :

    கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்

    கடாயில் வரமிளகாய், தனியாவை சேர்த்து வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.

    பிறகு இதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

    இதனுடன் சிக்கன் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.

    சிக்கன் வேக சற்று தண்ணீர் தெளித்து மூடி போட்டு மிதமாக தீயில் வேக விடவும்.

    அடுத்து அதில் பொடித்த மசாலாவை போட்டு நன்றாக கிளறி விடவும்.

    சிக்கன் நன்றாக வெந்து மசாலாவுடன் இணைந்து வரும் போது கொத்தமல்லி தழையை தூவி அலங்கரிக்கவும்.

    சூப்பரான வரமிளகாய் கோழி வறுவல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    செட்டிநாட்டு அவியலை சாத உணவு வகைகளுக்கு மட்டுமல்ல... டிபனுக்கும் சேர்த்து சாப்பிடலாம். இன்று இந்த அவியலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கத்திரிக்காய் - 100 கிராம்
    உருளைக்கிழங்கு - 100 கிராம்
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    பட்டை - சிறிதளவு

    அரைக்க...

    தேங்காய் துருவல் - கால் கப்
    பச்சை மிளகாய் - 5
    பூண்டு - 3 பல்
    சோம்பு - 1 ஸ்பூன்
    பொட்டுக்கடலை - ஒரு ஸ்பூன்



    செய்முறை

    கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தேங்காய் துருவல், பச்சை மிளகாய், பூண்டு, பெருஞ்சீரகம், பொட்டுக்கடலை ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு பட்டையை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் கத்திரிக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி, தேவையான அளவு நீர் சேர்த்து வேகவிடவும்.

    காய்கள் வெந்ததும் அரைத்த தேங்காய் மசாலா கலவை, உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

    அவ்வளவுதான்... செட்டிநாட்டு சுவையான அவியல் தயார்...

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று குதிரைவாலியில் தேங்காய் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    குதிரைவாலி அரிசி - 1 கப்
    தண்ணீர் - 2 1/4 குவளை
    நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
    கிராம்பு - 2 எண்ணிக்கை
    கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
    பெரிய வெங்காயம் - 1
    மிளகு - 8 எண்ணிக்கை
    கறிவேப்பிலை - 2 ஈர்க்கு
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    தேங்காய் துருவல் - கப்
    உப்பு - சுவைக்கேற்ப



    செய்முறை :


    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சமைப்பதற்கு முன்னர் குதிரைவாலி அரிசியை 30 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும். குக்கரில் அரிசியை போட்டு நீர் ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும் சில துளிகள் எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும். முதல் விசில் வந்த பிறகு, தீயை குறைத்து 8 நிமிடங்கள் கழித்து, அடுப்பை அணைக்கவும். குக்கர் ஆவி போன பிறகு, 10 நிமிடங்கள் கழித்து திறக்கவும். சாதத்தை ஒரு அகலமான தட்டில் பரப்பி சில நிமிடங்கள் ஆற விடவும்.

    மற்றொரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, அது சூடானதும் கிராம்பு, கடலைப் பருப்பை போட்டு, அது பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கிய பின் மிளகைப் பொடித்து வாணலியில் போடவும்.

    வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு அடுப்பை அணைக்கவும்.

    இப்பொழுது தேங்காய் துருவல் மற்றும் கொத்தமல்லி தழையை சேர்த்து கிளறவும்.

    பின்னர் வேகவைத்த சாதத்தை இந்தக் கலவையில் சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கிளறி விடவும். சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    சூப்பரான குதிரைவாலி தேங்காய் சாதம் ரெடி.

    குறிப்பு:

    இதே செய்முறையில் குதிரைவாலிக்கு பதிலாக, வரகு, திணை மற்றும் சாமை போன்ற சிறுதானியங்களையும் பயன்படுத்தலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தோசை, இட்லி, சூடான சாத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் வாழைப்பூ குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வாழைப்பூ (பொடியாக நறுக்கியது) - 1 கப்
    வெங்காயம் - 2
    தக்காளி - 1
    மிளகாய் வற்றல் - 4
    சோம்பு - 1 டீஸ்பூன்
    பொட்டுக்கடலை - 4 டீஸ்பூன்
    பச்சைப் பட்டாணி - 1 கப்
    மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
    தனியா - 1 டீஸ்பூன்
    தேங்காய்த் துருவல் - 4 டீஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    கடுகு - 1 டீஸ்பூன்
    முந்திரி - 4
    கரம் மசாலா - 1 டீஸ்பூன்



    செய்முறை :

    பட்டாணியையும் வாழைப்பூவையும் வேகவைத்து எடுங்கள்.

    கொத்தமல்லி, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிளகாய் வற்றல், சோம்பு, பொட்டுக்கடலை, தனியா, முந்திரி ஆகியவற்றை ஊறவைத்து அவற்றுடன் தேங்காய் சேர்த்து மையாக அரைத்துக்கொள்ளுங்கள்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்குங்கள்.

    தக்காளி குழைய வெந்ததும் வேகவைத்த வாழைப்பூவையும் பட்டாணியையும் சேர்த்துக் கிளறுங்கள்.

    அடுத்து அதில் அரைத்த விழுதை ஊற்றி, கரம் மசாலா துள், மஞ்சள் தூள் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள்.

    குழம்பு திக்கான பதம் வந்ததும் கடுகு தாளித்துக் கொட்டி, கொத்தமல்லி தூவி இறக்குங்கள்.

    சூப்பரான வாழைப்பூ குருமா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சப்பாத்தி, நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இது இரண்டையும் சேர்த்து சப்பாத்தி நூடுல்ஸ் ரோல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - ஒரு கப்,
    நூடுல்ஸ் - ஒரு கப்,
    பொடியாக நறுக்கிய குடமிளகாய் - கால் கப்,
    பால் - 2 டீஸ்பூன்,
    சீரகத்தூள் - கால் டீஸ்பூன்,
    கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்,
    தக்காளி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    கோதுமை மாவில் பால், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணிநேரம் ஊறவைக்கவும்.

    நூடுல்ஸை வேக வைத்து, குளிர்ந்த நீரில் நன்றாக அலசி வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, குடமிளகாயை சேர்த்து வதக்கவும்.

    பிறகு நூடுல்ஸ், தக்காளி சாஸ் சேர்த்து நன்றாக கிளறி வைக்கவும்.

    பிசைந்த கோதுமை மாவை சப்பாத்தியாக செய்யவும்.

    தவாவை அடுப்பில் வைத்து, காய்ந்ததும் சப்பாத்தியை ஒரு நிமிஷம் போட்டு எடுத்து நடுவில் நூடுல்ஸ் வைத்து சுருட்டி, தவாவில் எண்ணெய் விட்டு, சுருட்டிய சப்பாத்தியை போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

    சூப்பரான சப்பாத்தி  நூடுல்ஸ் ரோல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×