என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    எலுமிச்சை சாதத்தில் காய்கறிகள் சேர்த்து செய்தால் அருமையாக இருக்கும். இன்று காய்கறி சேர்த்து எலுமிச்சை சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - 1 கப்,
    எலுமிச்சம் பழம் - 2,
    கேரட் - 1,
    பீன்ஸ் - 15,
    பட்டாணி - அரை கப்,
    இஞ்சி - 1 துண்டு,
    பச்சை மிளகாய் - 3,
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
    பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    கடுகு - அரை டீஸ்பூன்,
    உளுந்து - 1 டீஸ்பூன்,
    கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்,
    முந்திரி - 10,
    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு.



    செய்முறை :

    அரிசியை சிறிதளவு உப்பு சேர்த்து உதிராக வேக வைத்து கொள்ளவும்.

    எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து தனியாக வைக்கவும்.

    காய்கள், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, முந்திரி ஆகியவற்றைத் தாளித்த பின்னர் காய்கறிகள், இஞ்சி, மிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, சிறிதளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள்.

    காய்கறிகள் வெந்ததும், எலுமிச்சம் பழச் சாறு சேர்த்து இறக்குங்கள்.

    இந்தக் கலவையை சாதத்தில் கொட்டி, உப்பு சேர்த்துக் கிளறுங்கள்.

    சூப்பரான காய்கறி எலுமிச்சை சாதம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு முட்டை பஜ்ஜி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த பஜ்ஜியை செயவ்து எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 6
    கடலை மாவு - 100 கிராம்
    மிளகாய்தூள் - 2 டீஸ்பூன்
    சமையல் சோடா - சிறிதளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை:

    முட்டைகளை வேகவைத்துகொள்ளவும். பிறகு உடைத்து, அதனை இரண்டு துண்டு களாக வெட்டிக்கொள்ளவும்.

    அகன்ற பாத்திரத்தில் கடலை மாவை கொட்டி அதனுடன் சமையல் சோடா, மிளகாய்தூள், உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவு கலவையில் முட்டை துண்டுகளை முக்கி எடுத்து சூடான எண்ணெயில் பொரிக்கவும். பொன்னிறமாக மாறியதும் எடுத்து சுவைக்கலாம்.

    சூப்பரான முட்டை பஜ்ஜி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வீட்டில் சுவையான இனிப்பு செய்ய விரும்பினால் ஷீர் குர்மா செய்யலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பால் - 1 லிட்டர்,
    சேமியா - 1 கப்,
    நெய் - 2 ஸ்பூன்,
    முந்திரி, பாதாம், பிஸ்தா, பேரிச்சை - தேவையான அளவு,
    ஏலக்காய் பொடி - ஒரு சீட்டிகை,
    சர்க்கரை - 1/2 கப்,
    ரோஸ் வாட்டர் - 1 ஸ்பூன்,
    குங்குமப் பூ - 1/4 ஸ்பூன்



    செய்முறை :

    நெய்யை நன்கு காய வைத்து நட்ஸை போட்டு வறுத்து தனியாக வைத்து கொள்ளவும்.

    சேமியாவையும் நன்கு உடைத்து நெய்யில் பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்றாக காய்ச்சவும். பால் நன்குக் காய்ந்ததும் வறுத்த சேமியாவை போட்டு கிளறவும்.

    அடுத்து அதில் சர்க்கரை சேர்க்கவும்.

    சேமியா வெந்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.

    பின் அதில் வறுத்து வைத்துள்ள நட்ஸ், ரோஸ் வாட்டர், ஏலக்காய் பொடி மற்றும் குங்குமப்பூ சேர்த்துக் கலக்கவும்.

    சுவையான ஷீர் குர்மா தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மட்டன் சேர்த்து செய்யும் கஞ்சி அருமையாக இருக்கும். இன்று இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி - 2 கப்
    வறுத்த சிறு பருப்பு - 1 கப்
    மட்டன் - அரை கிலோ
    பெ.வெங்காயம் - 3 
    கேரட் - 4
    உருளைக்கிழங்கு - 2
    பட்டாணி - சிறிதளவு
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    மசாலா தூள் - தேவைக்கு
    மிளகாய் தூள் - தேவையான அளவு
    தக்காளி - 4
    பட்டை, ஏலக்காய் - சிறிதளவு
    இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு



    செய்முறை:

    பெரிய வெங்காயம், கேரட், உருளைக்கிழங்கு, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மட்டனை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசியை சிறிதுநேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.

    குக்கரில் இறைச்சி, மிளகாய்தூள், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது, உருளைக்கிழங்கு, பட்டாணி, தக்காளி, கேரட், உப்பு, போதுமான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

    நன்கு வெந்ததும் குக்கரை திறந்து அரிசி, பருப்பு சேர்த்து போதுமான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

    நன்கு வெந்ததும் ஆற வைத்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.

    வாணலியில் நெய் ஊற்றி அது சூடானதும் ஏலக்காய், கருவா பட்டை, வெங்காயம், மசாலா தூள் சேர்த்து வதக்கி அரைத்துவைத்த கலவையில் சேர்க்கவும்.

    பின்னர் அதனை அடுப்பில் வைத்து தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விடலாம்.

    சுவையான மட்டன் கஞ்சி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தோசை, நாண், சாதம், புலாவ், தோசைக்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும் சிக்கன் குருமா. நாளை ரம்ஜான் ஸ்பெஷல் சிக்கன் குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சிக்கன் - 1 கிலோ
    இஞ்சி - 2 துண்டு
    பூண்டு - 15 பல்
    பெ.வெங்காயம் - 5  
    பச்சை மிளகாய் - 6
    தயிர் - 3 டேபிள்ஸ்பூன்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    கடுகு - 1 டீஸ்பூன்
    பட்டை - 1 துண்டு
    சீரகம் - 3 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லித் தழை - 1 கட்டு



    செய்முறை :

    கொத்தமல்லி, சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இறைச்சியை சிறு துண்டுகளாக நறுக்கி நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    இஞ்சியையும், பூண்டையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

    அரைத்த இஞ்சியையும், பூண்டு விழுதுடன் தயிர் கலந்து இறைச்சி துண்டுகள் மீது தடவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    கொத்தமல்லிதழை, மிளகாய், சீரகம், வெங்காயம் போன்றவற்றை நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, பட்டை, மஞ்சள் தூள், அரைத்த பொருட்களை கொட்டி வதக்கவும்.

    அனைத்த பச்சை வாசனை போனவுடன் இறைச்சி துண்டுகளை போட்டு கிளறி விடவும்.

    நன்றாக வதங்கியதும் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

    இறைச்சி துண்டுகள் நன்றாக வெந்து குழம்பு பதத்துக்கு வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறலாம்.

    சூப்பரான சிக்கன் குருமா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு மீன் வறுவல் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மீன், தேங்காய் சேர்த்து சூப்பரான பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வஞ்சிர மீன் - 500 கிராம்
    சோளமாவு - 4 ஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 3 ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 3
    கொத்தமல்லி - சிறிதளவு
    பூண்டு விழுது - அரை ஸ்பூன்
    எலுமிச்சை பழம் - 1
    மிளகு பொடி - 1 ஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
    இஞ்சி - சிறிய துண்டு
    தேங்காய் துருவல் - தேவையான அளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு



    செய்முறை:

    இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த விழுதோடு மிளகாய்த்தூள், எலுமிச்சை சாறு, மிளகு தூள், பூண்டு விழுது, சோளமாவை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    இந்த மசாலாவை மீனுடன் சேர்த்து பிரட்டி 4 மணி நேரம் பிரிட்ஜ் பீரீசரில் வைக்கவும்.

    அடுத்து ஊற வைத்த மீனை பிரிடஜில் இருந்தது எடுத்து தேங்காய் துருவலில் போட்டு பிரட்டவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மீனை போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.

    மாறுபட்ட சுவையில் தேங்காய் பிஷ் பிரை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு போளி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சுவையான போல் போளியை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மைதா - 1/2 கப்
    ரவை - 1/2 டீஸ்பூன்
    நெய் - 1/2 டீஸ்பூன்
    உப்பு - ஒரு சிட்டிகை
    தண்ணீர் - தேவைக்கு ஏற்ப
    எண்ணெய் - பொறிப்பதற்கு ஏற்ப

    பால் செய்வதற்கு

    பால் - 1/2 லிட்டர்
    சர்க்கரை - 1/4 கப்
    ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
    கற்பூரம் - ஒரு சிட்டிகை
    பாதாம், முந்திரி - கை அளவு
    குங்குமப் பூ - கொஞ்சம் (இருந்தால்)



    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் மைதா, ரவை, நெய், உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பின் அதை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.

    பின் ஏலக்காய் பொடி, கற்பூரம் சேர்த்துக் கொள்ளவும்.

    அந்த பால் நன்கு கெட்டிப் பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

    ஊற வைத்த மாவை குறைந்த மாவு எடுத்து சிறிது சிறிதாக திரட்டி கொள்ளவும். பூரி செய்ய திரட்டுவது போல் திரட்டுங்கள்.

    அதை எண்ணெயில் போட்டு பூரி போல் சூட்டு கொள்ளவும்.

    இந்த பூரியை காய்ச்சி வைத்திருக்கும் பாலில் போட்டு விடவும்.

    இறுதியாக பாதாம், முந்திரிகளை நெய்யில் வறுத்தி அதில் போடவும். பிறகு குங்குமப்பூவும் சேர்த்துக் கொள்ளவும்.

    சுவையான பால் போளி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வாழைப்பழம் சேர்த்து செய்யும் பாயாசம் சூப்பராக இருக்கும். இன்று இந்த பாயாசத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வாழைப்பழத் துண்டுகள் - 1 கப்
    பாசிப்பருப்பு - 1 கப்
    பால் - 1/2 கப்
    தேங்காய் பால் - 2 கப்
    வெல்லம் - முக்கால் கப்
    ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
    முந்திரி, திராட்சை - தேவையான அளவு
    நெய் - ஒரு ஸ்பூன்



    செய்முறை :

    பாசிப் பருப்பை நன்றாக குழைய வேக வைத்து மசித்த கொள்ளவும்.

    முந்திரியை நெய்யில் வறுத்து கொள்ளவும்.

    வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி கொள்ளவும்

    வேக வைத்து மசித்த பாசிப்பருப்பில் வடிகட்டிய வெல்லத்தை சேர்த்து கொதிக்க வைக்கவும்.

    வாழைப்பழத் துண்டுகளை நெய்யில் நன்றாக வதக்கி வைத்துக் கொள்ளவும்.

    பிறகு வேக வைத்த பாசிப்பருப்புடன் வதக்கிய வாழைப்பழம், தேங்காய் பால் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.

    பிறகு ஏலக்காய், திராட்சை, வறுத்த முந்திரி சேர்த்து பரிமாறவும்.

    சூப்பரான வாழைப்பழ பருப்பு பாயாசம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அவலில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று அவல், காய்கறிகள் சேர்த்து புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நறுக்கிய பீன்ஸ், கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு - அரை கப்,
    வெங்காயம் - 1,
    கெட்டி அவல் - 2 கப்,
    தக்காளி - 2,
    தேங்காய் பால் - அரை கப்,
    கரம்மலாசா தூள் - அரை டீஸ்பூன்,
    சீரகம் - அரை டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை,
    மஞ்சள்தூள் - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    காய்கறிகள், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளியை அரைத்து கொள்ளவும்.

    தக்காளி சாறுடன், தேங்காய் பால் கலந்து அதில் அவலைப் போட்டு அரை மணி நேரம் ஊறவிடவும் (அவல் மூழ்கும் அளவுக்கு தக்காளி சாறு, தேங்காய் பால் கலவையை விட்டால் போதும்).

    கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் காய்கறித் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

    காய்கறிக் கலவை வதங்கியதும், ஊறிய அவலை சேர்த்து உப்பு, மஞ்சள்தூள், மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து 2 நிமிடம் கிளறி கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.

    வித்தியாசமான சுவையில் வெரைட்டியான புலாவ் ரெடி!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் வெரைட்டி ரைஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று காராமணி சேர்த்து வெரைட்டி சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி - ஒன்றரை கப்,
    காராமணி - அரை கப்,
    வெங்காயம் - 1 ,
    தக்காளி - 1,
    சாம்பார் பொடி - அரை டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 2,
    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
    கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்,
    எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்,
    எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    காராமணியை ஊறவைத்து குக்கரில் வேக விட்டு, வடிக்கட்டி ஆறவிடவும்.

    சாதத்தை உதிரியாக வேக வைத்து ஆற வைத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்த பின்னர் அதில், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையுடன் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி சற்று வதங்கியதும் சாம்பார் பொடி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், வேகவைத்த காராமணி, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கவும்.

    அடுத்து வடித்து வைத்துள்ள சாதத்தைப் போட்டு மசாலா நன்கு பரவும்படி கிளறிக் கொள்ளவும். பிறகு மூடி 2 நிமிடம் மிதமான தீயில் சமைக்கவும்.

    கடைசியாக கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சாக்லேட், நட்ஸ் சேர்த்து சத்தான சுவையான பால்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    டார்க் சாக்லெட் - 100 கிராம் (ப்ளெயின்)    
    பேரீச்சம்பழம் - 5    
    வால்நட் - 5    
    பாதாம்பருப்பு - 3    
    முந்திரி - 3    
    அத்திப்பழம் - 5 (உலர்ந்தது)
    பூசணி விதை - 2 மேஜைக்கரண்டி.



    செய்முறை

    பேரீச்சம் பழத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    அதனுடன் பொடியாக நறுக்கிய பூசணி விதை, வால்நட், பாதாம் பருப்பு, முந்திரியை சேர்த்து கலக்கவும்.

    இதில் டார்க் சாக்லெட்டைத் துருவிக் சேர்க்கவும்.

    எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். சாக்லெட் கெட்டியாகிவிடும்.

    சுவையான சாக்லேட் நட்ஸ் பால்ஸ் தயார்.

    குறிப்பு : பொதுவாகவே ப்ளெயின் சாக்லெட் ஃபுட் எஸன்ஸ் விற்கும் கடைகளில் கிடைக்கும். பூசணி விதையில் ஆன்டிஆக்சிடென்ட் நிறைந்துள்ளது. கூடவே zinc, magnesium மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஹோட்டலில் சிலோன் பரோட்டா சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் சிலோன் பரோட்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - ஒரு கப்,
    மைதா மாவு - ஒரு கப்,
    நெய் - 1 டேபிள்ஸ்பூன்,
    ஆப்பசோடா - ஒரு சிட்டிகை,
    உப்பு - அரை டீஸ்பூன்,
    எண்ணெய் - தேவையான அளவு.

    பூரணத்துக்கு:

    காய்கறி கலவை - கால் கப்,
    பன்னீர் - 200 கிராம்,
    பெரிய வெங்காயம் - 2,
    பச்சை மிளகாய் - 4,
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
    மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
    பூண்டு - 6 பல்,
    மிளகாய்தூள் - அரை டீஸ்பூன்,
    பட்டை, லவங்கம், ஏலக்காய்தூள் பொடித்தது - அரை டீஸ்பூன்,
    எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்.



    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மைதா மாவு, நெய், ஆப்பசோடா, உப்பு சேர்த்து நன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணிநேரம் ஊறவைக்கவும்.

    பன்னீரை துருவிக்கொள்ளுங்கள்.

    வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், மிளகாய், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் பன்னீர், கொத்தமல்லித்தழை, மஞ்சள்தூள், மிளகாய்தூள், பொடித்த மசாலாதூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.

    பிசைந்து வைத்த மாவில் இருந்து சிறிது மாவெடுத்து கிண்ணம் போல் செய்து அதனுள் நிறைய பூரணத்தை நிரப்புங்கள்.

    பின்னர் மாவு தொட்டு முக்கோண வடிவத்தில் திரட்டி வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த பரோட்டாவை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு  வேக வைத்து எடுக்கவும்.

    சுவையான சத்தான சிலோன் பரோட்டா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×