search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ரம்ஜான் ஸ்பெஷல்: சிக்கன் குருமா
    X

    ரம்ஜான் ஸ்பெஷல்: சிக்கன் குருமா

    தோசை, நாண், சாதம், புலாவ், தோசைக்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும் சிக்கன் குருமா. நாளை ரம்ஜான் ஸ்பெஷல் சிக்கன் குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சிக்கன் - 1 கிலோ
    இஞ்சி - 2 துண்டு
    பூண்டு - 15 பல்
    பெ.வெங்காயம் - 5  
    பச்சை மிளகாய் - 6
    தயிர் - 3 டேபிள்ஸ்பூன்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    கடுகு - 1 டீஸ்பூன்
    பட்டை - 1 துண்டு
    சீரகம் - 3 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லித் தழை - 1 கட்டு



    செய்முறை :

    கொத்தமல்லி, சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இறைச்சியை சிறு துண்டுகளாக நறுக்கி நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    இஞ்சியையும், பூண்டையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

    அரைத்த இஞ்சியையும், பூண்டு விழுதுடன் தயிர் கலந்து இறைச்சி துண்டுகள் மீது தடவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    கொத்தமல்லிதழை, மிளகாய், சீரகம், வெங்காயம் போன்றவற்றை நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, பட்டை, மஞ்சள் தூள், அரைத்த பொருட்களை கொட்டி வதக்கவும்.

    அனைத்த பச்சை வாசனை போனவுடன் இறைச்சி துண்டுகளை போட்டு கிளறி விடவும்.

    நன்றாக வதங்கியதும் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

    இறைச்சி துண்டுகள் நன்றாக வெந்து குழம்பு பதத்துக்கு வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறலாம்.

    சூப்பரான சிக்கன் குருமா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×