என் மலர்tooltip icon

    சமையல்

    ஓட்ஸில் அதிக அளவு நார்சத்து நிரம்பியுள்ளது. இந்த நார்சத்து உணவை சுலபமாக செரிமானம் செய்ய உதவுவதோடு, குடலில் புண்கள் மற்றும் மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.
    தேவையான பொருட்கள் :

    ஓட்ஸ் - 2 கப்
    பாசிப்பருப்பு - 1 கப்
    இஞ்சி - 1 துண்டு
    நெய் - 2 தேக்கரண்டி
    தண்ணீர் - தேவையான அளவு
    மிளகு - சிறிதளவு
    சீரகம் - சிறிதளவு
    பச்சை மிளகாய் - 2
    பெருங்காயத்தூள் - சிறிதளவு
    கறிவேப்பிலை - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    முந்திரி பருப்பு - சிறிதளவு

    செய்முறை:

    இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் மிதமான சூட்டில் ஓட்ஸ், பாசிப் பருப்பு இரண்டையும் தனித்தனியாக வறுத்துக்கொள்ள வேண்டும்.

    அடுப்பில் குக்கரை வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஓட்ஸ், பாசிப்பருப்பு, இஞ்சி, பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து 4 விசில் போட்டு வேக வைக்க வேண்டும்.

    விசில் போனவுடன் குக்கரை திறந்து பொங்கல் கலவையை மசித்துவிட வேண்டும்.

    வாணலியில் நெய்யை ஊற்றி அது சூடானதும் முந்திரிப்பருப்பு, ப.மிளகாய், மிளகு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்து பொங்கல் மேல் ஊற்றி கிளறிவிட வேண்டும்.

    சுவையான ஓட்ஸ் பொங்கல் ரெடி.
    வாழைத்தண்டு உடல் எடையை குறைக்க உதவும். சர்க்கரை மற்றும் கொழுப்பு உடனடியாக ரத்தத்தில் கலப்பதை இதன் சாறு தடுக்கும். இதில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் மலச்சிக்கலுக்கு தீர்வாக அமையும்.
    தேவையான பொருள்கள் :

    வாழைத்தண்டு -  1 துண்டு
    கொத்தமல்லி    -   1/2 கட்டு
    மிளகுத்தூள்       -   1 ஸ்பூன்
    சீரகத்தூள்          -   1 ஸ்பூன்
    உப்பு                    -   தேவைக்கேற்ப

    செய்முறை :

    முதலில் வாழைத்தண்டையும், கொத்தமல்லியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    வாழைத்தண்டு, கொத்தமல்லி இரண்டையும் மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டவும்.

    வடிகட்டியதை அடுப்பில் வைத்து மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க விடவும்.

    கொதி வந்தவுடன் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து கலந்து இறக்கி பரிமாறவும்.

    சுவையான வாழைத்தண்டு கொத்தமல்லி சூப் ரெடி
    வெண் பொங்கல், மிளகு பொங்கல், சர்க்கரை பொங்கல் என்று பல்வேறு பொங்கல் வகைகளை சுவைத்து இருப்பீங்க. இன்று கொத்தமல்லியை வைத்து பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்...
    தேவையான பொருட்கள்:

    பச்சரிசி - 250 கிராம்
    பாசி பருப்பு - 150 கிராம்
    எண்ணெய் - 2 தேக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    மிளகு - 1 தேக்கரண்டி
    காய்ந்த மிளகாய் - 2
    மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
    பெருங்காயம் - ½ தேக்கரண்டி
    கொத்தமல்லித்தழை - 4 கைப்பிடி
    நெய் - 6 தேக்கரண்டி
    முந்திரி - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    அடி கனமான பாத்திரத்தில் 600 மில்லி தண்ணீர் ஊற்றவும். நன்றாகக் கழுவிய பச்சரிசி, பாசி பருப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம், 3 தேக்கரண்டி நெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து குழைவாக வேக வைக்கவும்.

    வேறொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் மற்றும் கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக வதக்கி ஆற வைக்கவும்.

    பின்னர் அதை மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். பொங்கலுடன் கொத்தமல்லி விழுதை சேர்த்துக் கிளறவும்.

    பின்னர் மீதமுள்ள நெய்யில் முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, நெய்யுடன் பொங்கலில் ஊற்றிக் கிளறவும். இப்பொழுது சுவையான கொத்தமல்லிப் பொங்கல் தயார்.

    இதனை சாம்பாருடன் சேர்த்துப் பரிமாறினால் சுவையாக இருக்கும்.
    அதிகளவிலான நார்ச்சத்து, புரதம் மற்றும் வைட்டமின் பி அடங்கியுள்ள கோதுமை ரவை உடல் எடை குறைப்பிற்கு மட்டுமல்லாது ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்ல தேர்வாக விளங்குகிறது.
    தேவையான பொருட்கள் :
     
    கோதுமை ரவை - 1 கப்
    பாசிப்பருப்பு - 1/4 கப்
    கறிவேப்பிலை - சிறிது
    மிளகு - 1/2 டீஸ்பூன்
    சீரகம் - 1/2 டீஸ்பூன்
    ப.மிளகாய் - 2
    இஞ்சி - சிறிய துண்டு
    முந்திரி - 2
    எண்ணெய் - 3 டீஸ்பூன்
    தண்ணீர் - 3 கப்
    உப்பு - தேவையான அளவு
     
    செய்முறை :
     
    இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
     
    குக்கரில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கோதுமை ரவையை போட்டு லேசாக வறுக்கவும்.
     
    அடுத்து பாசிப்பருப்பையும் போட்டு லேசாக வறுக்கவும்.
     
    குக்கரில் 3 கப் தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரை மூடி 4 விசில் வரும் வரை வேக விடவும். வெந்தவுடன் மூடியைத் திறந்து நன்கு கிளறவும்.
     
    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து மீதமுள்ள எண்ணெயை ஊற்றி சூடானதும் அதில் மிளகு, ப.மிளகாய், இஞ்சி, சீரகம் போட்டு தாளித்த, பின் முந்திரி, கறிவேப்பிலை போட்டு தாளித்து, பொங்கலில் சேர்த்து நன்கு கிளறி சூடாகப் பரிமாறவும்.
     
    சுவையான சத்தான கோதுமை ரவை பொங்கல் ரெடி.
    உடல் எடையை குறைக்க உதவும் ஓட்ஸில் பல்வேறு ரெசிபிகள் செய்யலாம். இன்று ஓட்ஸை வைத்து 10 நிமிடத்தில் உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    ஓட்ஸ் - 1 கப்
    வெங்காயம் - 1
    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
    சாம்பார் பொடி - 1/2 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிது
    உப்பு - தேவையான அளவு

    தாளிப்பதற்கு...

    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    கடுகு - 3/4 டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 1
    கறிவேப்பிலை - சிறிது

    செய்முறை:

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஓட்ஸை வாணலியில் போட்டு லேசாக பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் பொடி சேர்த்து, அத்துடன் ஓட்ஸையும் சேர்த்து கிளறவும்.

    அடுத்து அதில் அரை கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

    பின் 2-3 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும்.

    ஓட்ஸானது மென்மையாகும் வரை, மூடி வைத்து வேக வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    இப்போது சுவையான ஓட்ஸ் உப்புமா ரெடி.
    பூண்டை விரும்பாதவர்கள் கூட கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடும் அளவிற்கு அருமையான சுவையுடன் கூடிய பூண்டு பொடியை எப்படி சமைப்பது என்று இப்பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
    தேவையான பொருட்கள்

    பூண்டு - கால் கப்
    தேங்காய் துருவியது - கால் கப்
    உப்பு - தேவையான அளவு
    காய்ந்த மிளகாய் - காரத்துக்கு ஏற்ப
    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்.

    செய்முறை

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

    அடுத்து அதில் காய்ந்த மிளகாயை போட்டு வதக்கவும்.

    அடுப்பை அணைத்து தேங்காய் சேர்த்து கிளறி ஆறவிடவும்.

    ஆறியதும் மிளகாய் தூள், உப்பு, பூண்டு, தேங்காய் அனைத்தையும் மிக்சியில் போட்டு சிறிது கொரகொரப்பாக அரைக்கவும்.

    இப்போது சூப்பரான பூண்டு பொடி ரெடி.

    காற்று புகாமல் பாட்டிலில் போட்டு வைத்தால் ஒரு மாதம் வரை உபயோகிக்கலாம்.


    நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்க உதவும். மற்றும் இன்சுலின் சுரப்பையும் தூண்ட செய்யும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது.
    தேவையான பொருட்கள் :

    பெரிய நெல்லிக்காய் - 6,
    தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 4,
    உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க:

    கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
    எண்ணெய் - சிறிதளவு.

    செய்முறை:

    பெரிய நெல்லிக்காயை கொட்டை நீக்கி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும்.

    இதனுடன் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மிக்சியில் நன்றாக அரைக்கவும்.

    தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் தாளித்து துவையலில் சேர்த்துப் பயன்படுத்தவும்.

    உடலுக்கும் மிகவும் நல்லது இந்த நெல்லிக்காய் சட்னி.
    கல்லீரல் நச்சுத்தன்மையை போக்கி கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க புளி ஒரு சிறந்த தேர்வு. ஆல்கஹால் மற்றும் ஆல்கஹால் அல்லாத கொழுப்புகளை கல்லீரலில் இருந்து வெளியேற்றவும் இது உதவுகிறது.
    தேவையான பொருட்கள்

    வெங்காயம் - 2,
    உளுத்தம்பருப்பு - 1 கைப்பிடி,
    பெருங்காயம், உப்பு - தேவைக்கு,
    காய்ந்த மிளகாய் - 4,
    தேங்காய் - 5 பல்,
    புளி - சிறு எலுமிச்சை அளவு,
    எண்ணெய் - 1 டீஸ்பூன்.

    தாளிக்க

    கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை

    வெங்காயம், தேங்காயை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, காய்ந்தமிளகாய், பெருங்காயத்தை போட்டு வறுத்து ஆறவைக்கவும்.  

    மிக்சியில் முதலில் தேங்காய், காய்ந்த மிளகாயை போட்டு அரைக்கவும்.

    பிறகு வெங்காயம், புளி, உப்பு தண்ணீர் விட்டு நன்கு அரைக்கவும்.

    கடைசியில் உளுத்தம்பருப்பை போட்டு கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான புளி சட்னி ரெடி.
    குடைமிளகாயில் குறைந்த அளவே கலோரியும் கொழுப்பும் உள்ளது. குடைமிளகாய் செரிமானத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். இது வாய்வு தொல்லையை போக்கி மலச்சிக்கலை தடுக்கிறது.
    தேவையான பொருட்கள்

    சின்ன வெங்காயம் - 100 கிராம்,
    குடைமிளகாய் - 1,
    பச்சைமிளகாய் - 2,
    தக்காளி - 1,
    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது,
    பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு, எண்ணெய் - தாளிக்க,
    கடுகு - 1/4 டீஸ்பூன்.

    செய்முறை

    சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.

    குடைமிளகாயை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.

    அடுத்து அதில் நறுக்கிய குடைமிளகாய், தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சைமிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

    வதக்கிய பொருட்கள் ஆறியதும் உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.

    மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு தாளித்து சட்னியை போட்டு வதக்கி பரிமாறவும்.

    சூப்பரான குடைமிளகாய் சட்னி ரெடி.
    சத்துக்கள் நிறைந்த கோதுமை மாவில் சத்தான பல்வேறு ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று கோதுமை மாவில் கீரை சேர்த்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமைமாவு - அரை கப்
    பெ.வெங்காயம் - 2
    பச்சை மிளகாய் - 4
    கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி
    நறுக்கிய கீரை - 1 கப்
    சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, கீரையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

    அடுத்து அதில் வெங்காயம், ப.மிளகாய், கீரை, கொத்தமல்லி தழை, சீரகத் தூள் ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அது சூடானதும் எண்ணெய் தடவி மாவை சற்று கனமாக ஊற்றி இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

    ருசியான கோதுமை மாவு கீரை அடை தயார்.
    ரவையில் உப்புமா, தோசை, கிச்சடி மட்டுமின்றி விதவிதமான பலகாரங்களையும் தயார் செய்து ருசிக்கலாம். இன்று ரவையை கொண்டு அடை செய்வது பற்றி பார்ப்போம்.
    தேவையானவை:

    ரவை -1 கப்
    ஓட்ஸ் - அரை கப்
    பெ.வெங்காயம் - 2 (நறுக்கவும்)
    பச்சை மிளகாய் - 4 (நறுக்கவும்)
    கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி
    சோம்பு தூள் - 1 டீஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை:


    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி ரவையை லேசாக வறுத்துக்கொள்ளவும்.

    அதுபோல் ஓட்ஸையும் வறுக்கவும்.

    பின்னர் ரவை, ஓட்ஸ், வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி தழை, உப்பு, சோம்பு தூள் ஆகியவற்றை ஒன்று கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அது சூடானதும் எண்ணெய் தடவி மாவை சற்று கனமாக ஊற்றி இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

    ருசியான ரவா ஓட்ஸ் அடை தயார்.
    ஏராளமான பழங்களை சேர்த்து கொடுப்பது பழ சாலட். அதுவே, வாழைப்பழத்தை மட்டும் அதிகமாக வைத்து, ஓரிரு பழங்களை சேர்த்து கொடுப்பது ‘பனானா சாலட்’.
    தேவையான பொருட்கள்

    வாழைப்பழம் - 2
    மாதுளை முத்துக்கள் - தேவையான அளவு,
    ஆரஞ்சு சுளை - தேவையான அளவு,
    திராட்சை - தேவையான அளவு,
    ஆப்பிள் - பாதி

    செய்முறை

    ஆப்பிளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஆசிய நாடுகளில், வாழைப்பழ சாலட் மிகவும் பிரபலம். அதை செய்து பார்ப்பதும் சுலபம்.

    வாழைப்பழத்தின் தோல் பகுதியை நீக்கிவிட்டு, பெரிதாக நறுக்கி கொள்ளுங்கள்.

    அதனோடு மாதுளை, ஆரஞ்சு, திராட்சை, ஆப்பிள் சேர்த்தால், பனானா சாலட் ரெடி.
    ×