என் மலர்
பொது மருத்துவம்
- ஜீரண மண்டல பாக்டீரியா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- முறையாக சுத்தம் செய்யப்படாமல், வேகவைக்காமல் உண்ணும்போது பாதிப்பு ஏற்படுகிறது.
சென்னை:
மழைப் பொழிவு காரணமாக சென்னையில் கடந்த சில நாள்களாக உணவு ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களுக்கு பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளை நாடுவோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைக்கு வருவோரில் 40 சதவீதம் பேருக்கு அத்தகைய பாதிப்பு இருப்பதாக மருத்துவா்கள் கூறியுள்ளனா். அதில், பெரும்பாலானோருக்கு 'இ-கோலி' எனப்படும் தீங்கு விளைவிக்கும் ஜீரண மண்டல பாக்டீரியா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ஜீரண மண்டல சிகிச்சை நிபுணா் எம்.மணிமாறன் கூறியதாவது:-
எஸ்கெரிச்சியா கோலி எனப்படும் 'இ-கோலி' என்பது மனிதா்கள் மற்றும் பாலூட்டி விலங்குகளின் குடலில் வளரும் பாக்டீரியா. இதில் பல வகைகள் உள்ளன.
அவற்றில் பல பாக்டீரியாக்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்காது என்றாலும், சில வகை பாக்டீரியாக்கள் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும்.

அசுத்தமான இறைச்சி, காய்கறி, பழங்கள், குடிநீா், பால் உள்ளிட்டவற்றின் மூலமாக மனித உடலுக்குள் அவை செல்கின்றன. முறையாக சுத்தம் செய்யப்படாமலும், வேகவைக்காமலும் அவற்றை உண்ணும்போது பாதிப்பு ஏற்படுகிறது.
வயிற்றுப்போக்கு, வாந்தி, கடுமையான வயிற்று வலி, காய்ச்சல் போன்றவை அதன் முக்கிய அறிகுறிகள். உரிய சிகிச்சை பெறாவிடில் ஒரு கட்டத்தில் அது சிறுநீரக செயலிழப்புக்கு வழி வகுக்கும்.
அண்மைக்காலமாக மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளில் வயிற்றுப்போக்கு பாதிப்பு 40 சதவீதம் பேருக்கு உள்ளது. அவா்களுக்கு 'இ-கோலி' பாதிப்பு இல்லை என்றாலும், பெரும்பாலா னோருக்கு அதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.

'இ-கோலி' பாதிப்பை பொருத்தவரை மலப் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, சிறுநீா் பரிசோதனை மூலமாக உறுதி செய்யலாம். அதன் அடிப்படையில், நீா்ச்சத்தை தக்க வைக்கும் சிகிச்சைகளும், ஆன்ட்டிபயாடிக் சிகிச்சைகளும் வழங்கப்படும். அதனை முறையாக பின்பற்றினால் முழுமையாக குணமடையலாம் என்றாா் அவா்.
இது தொடா்பாக பொதுசுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
மழை வெள்ள காலங்களில் காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை, எலிக் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவ அதிக வாய்ப்புள்ளன. அதை கருத்தில்கொண்டு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. அதன் தொடா்ச்சியாக மருத்துவக் குழுக்கள் மூலமாக நோய் எதிா்ப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மாசுபட்ட குடிநீா், உணவுகள் மூலம் பரவும் நோய்களைத் தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்து மாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மழை பாதித்த பகுதிகளில் குடிநீரின் தரத்தை உறுதி செய்யுமாறும், குடிநீரில் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை மற்றும் நோய்த்தொற்றுகள் குறித்த விவரங்களை பொது சுகாதாரத் துறைக்கு அனுப்புமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மழைக் காலங்களில் பொதுமக்கள் காய்ச்சிய நீரை மட்டுமே பருக வேண்டும். சுகாதாரமான உணவுகளையே உட்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனா்.
- நெய்யில் கலோரிகள் அதிகம் இருப்பது உண்மை தான்.
- நெய்யில் நிறைய வைட்டமின்கள் உள்ளன.
இந்தியாவில் உணவின் சுவையை அதிகரிக்க சேர்க்கப்படும் உணவுப் பொருட்களில் ஒன்று தான் நெய். இந்த நெய்யானது வெண்ணெயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இத்தகைய நெய்யை பலர் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில் இதனை சாப்பிட்டால், உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும் என்பதால் தான்.
உணவில் நல்லெண்ணெய் அதிகம் சேப்பீங்களா? அப்ப நீங்க ஆரோக்கியசாலி தான்… ஆனால் உண்மையில் நெய் சாப்பிட்டால், கொலஸ்ட்ராலின் அளவு குறையும் என்பது தெரியுமா? இதுபோன்று நெய்யில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளன.

அதேசமயம் இதில் கலோரிகள் அதிகம் இருப்பது உண்மை தான். ஆனால் அளவாக சாப்பிட்டால், அனைத்துமே நல்லது தான். செரிமான மண்டலம் செரிமான பிரச்சனை உள்ளவர்கள் உணவில் எண்ணெய்க்கு பதிலாக நெய்யை சேர்த்தால், செரிமான பிரச்சனையில் இருந்து விடுபடலாம். நெய்யில் நிறைய வைட்டமின்கள் உள்ளன.
அதில் வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே போன்றவை குறிப்பிடத்தக்கவை. எனவே தினமும் சிறிது நெய்யை உணவில் சேர்த்து கொண்டால், உடலுக்கு வேண்டிய வைட்டமின்களைப் பெறலாம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் நெய் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
அதிலும் வளரும் குழந்தைகளுக்கு நெய்யை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அவர்கள் நோய்வாய் படாமல் இருப்பார்கள்.

இதயத்திற்கு நல்லது. நெய்யில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கொழுப்பை கரைக்கக்கூடிய வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
மற்றோரு ஆச்சரியமான நன்மை என்னவென்றால், நெய்யானது கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். எப்படியெனில் இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, அதிகப்படியான கொலஸ்ட்ராலை கரைத்து குறைத்துவிடும்.
தசைகளுக்கு நல்லது. வயதானவர்கள் உணவில் நெய்யை அளவாக சேர்த்து வந்தால், தசைகள் மற்றும் மூட்டுகளில் தேய்மானம் எதுவும் ஏற்படாமல், அவைகள் நன்கு செயல்படுவதற்கு உதவும். இதனால் வயதாவதால் ஏற்படும் மூட்டு சம்பந்தமான பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
லாக்டோஸ் சகிப்புத்தன்மையால் நிறைய மக்களுக்கு பால் பொருட்கள் என்றால் அலர்ஜி ஏற்படும். அத்தகையவர்கள் நெய்யை பயமின்றி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் பால் பொருட்களின் மூலம் கிடைக்கக்கூடிய சில நன்மைகளானது நெய்யின் மூலம் கிடைக்கும்.
பெரும்பாலானோர் நெஞ்செரிச்சலால் அவதிப்படுவார்கள். குறிப்பாக கர்ப்பிணிகள் பலருக்கு இந்த பிரச்சனை ஏற்படும். ஆகவே இப்படி நெஞ்செரிச்சல் ஏற்படும் போது, 1 டேபிள் ஸ்பூன் நெய்யை உணவில் சேர்த்து சாப்பிட்டால், நெஞ்செரிச்சல் உடனே தணியும்.
- உடலின் ஆரோக்கிய சமநிலையை பராமரிப்பது மிகவும் அவசியமான ஒன்று.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உண்ண வேண்டியது அவசியம்.
உடலின் ஆரோக்கிய சமநிலையை பராமரிப்பது மிகவும் அவசியமான ஒன்று. அதை செய்ய சில முக்கிய எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உண்ண வேண்டியது அவசியம். இதில் கவனிக்க வேண்டிய ஒன்று உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையான முறைகளில் மட்டுமே அதிகரிக்க முடியும் என்பது.

இயற்கையான முறை என்றால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இரு வழிகள் மட்டுமே உள்ளது. ஒன்று உடற்பயிற்சி மற்றொன்று இயற்கையாக உள்ள உணவுகளை உண்ணுவது.
நம் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தி உடலை பாதிக்கக்கூடிய கிருமிகளை எதிர்த்துப் போராடும் வகையில் இருந்தால் பெரும்பாலான நோய்களைத் தவிர்த்துவிடலாம். உடம்பின் நோய் எதிர்ப்பு வலுவாக இருக்கும் போது, ஹார்மோன் மற்றும் எதிர்மறை அணுக்களை கட்டுப்படுத்தும் திறன் அதிமாக இருக்கும்.
இந்த குறிப்பிட்ட உணவுகளை உண்ணுவது ஆரோக்கியமாகவும், நோய்களின்றியும் வாழ சிறந்த வழியாகும். சரி வாங்க இந்த நோயெதிர்ப்பு சக்தியைத் தரும் 15 விதமான உணவுகளைப் பார்க்கலாம்.

பூண்டு:
பூண்டு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தவும் உதவும். எதிர்ப்பு சக்தியைப் பொறுத்த விஷயத்தில் பூண்டின் பங்கு மிகவும் அருமையானது. இதில் உள்ள அல்லிசின் என்னும் பொருள் பாக்டீரியாக்களையும், தொற்றுக்களையும் கொல்லவல்லது.

இஞ்சி:
நுண்ணுயிர்களுக்கு எதிராகப் போராடும் சக்தி இஞ்சிக்கு உண்டு. இதில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் எனப்படும் உடலை காக்கும் பொருள் நிறைந்துள்ளது.

தயிர்:
தயிரில் உடலுக்கு நல்லது செய்யும் நுண்ணுயிர்கள் நிறைந்துள்ளன. இந்த நல்ல நுண்ணுயிர்கள் செரிமான உறுப்புகளை குறிப்பாக குடல்பகுதியை நல்ல நிலையில் வைக்க உதவுகின்றன. ஆரோக்கியமன செரிமான மண்டலம் ஒரு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை உறுதி செய்யும்.
பார்லி-ஓட்ஸ்:
பார்லியும் ஓட்சும் ஒரு முக்கியமான நார்ச்சத்தான பீட்டா-குளூக்கன் எனப்படும் நுண்ணுயிர் கொல்லும் மற்றும் உடலைக் காக்கும் குணங்களைக் கொண்டுள்ளன. இவை மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு:
பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்படும் இந்த கிழங்கு இணைப்புத் திசுக்களின் உற்பத்திக்கு உதவும். வைட்டமின் ஏ சத்தை அதிகம் கொண்டுள்ளது. சர்க்கரைவள்ளிக் கிழங்கு உடல் சருமத்தை தொற்று மற்றும் நுண்ணுயிர் தாக்குதலில் இருந்து காக்கிறது. உங்கள் சருமம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

காளான்கள்:
உடலில் நோய்களோடு போராடும் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமான ரத்த அணுக்கள் வளர்ச்சிக்கு காளான்கள் உதவுகின்றன. காளான்கள் துத்தநாகம் எனப்படும் ஜிங்க் சத்து மற்றும் பிற ஆரோக்கியம் தொடர்பான பல நன்மைகளையும் கொண்டுள்ளன.
முட்டை:
நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் உணவுகளில் அடுத்ததாக வருவது முட்டை. இவற்றில் பல வைட்டமின்கள், குறிப்பாக நோய்களுடன் போராடும் வைட்டமின் டி, பாலுணர்வைத் தூண்டும் மற்றும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் பண்புகள் கொண்டது.

காபி-டீ
இவற்றில் வைட்டமின் பி1, சி, ஏ மற்றும் உலோகச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், உலகிலேயே மிக ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக உள்ளது. இது மேலும் உணவுப்பாதையை இயற்கையாகவே சுத்திகரிக்க வல்லது. டீ மற்றும் காபி ஆகிய இரண்டுமே முளையை சுறுசுறுப்படையச் செய்யும் குணம் கொண்டவை. உண்மையில், காபியும் டீயும் பல கொடுமையான மனச் சூழ்நிலைகளை தடுக்க வல்லவை.

தேங்காய்:
தேங்காய் எண்ணெயும் தேங்காயும் பெருமளவு ஆரோக்கியமான பண்புகளைக் கொண்டவை. இதிலுள்ள லாரிக் அமிலம் உடலில் சென்று மோனோலாரினாக மாற்றமடைந்து விடும். நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கவில்லை என்றால், மோனோலாரின் என்ற பொருள் தாய்ப்பாலில் அதிகம் உள்ளதுடன் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையான முறையில் வலுப்படுத்த உதவுகிறது.

பெர்ரி பழங்கள்:
பெர்ரி பழங்கள் இல்லாமல் சத்தான உணவு என்பது முழுமையடையாது. புளூபெர்ரி மற்றும் ராஸ்ப்பெர்ரிப் பழங்கள், உடலைக் காக்கும் பண்புகளைக் கொண்டுள்ளதோடு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவே வலுப்பெறச்செய்கிறது. புளூபெர்ரிப் பழங்கள் மற்ற பழங்களைக் காட்டிலும் குறைந்த சர்க்கரை அளவை கொண்டுள்ளதால், இவை ஆரோக்கியமானவையாக உள்ளன. இதில் அதிகம் உள்ள குளூட்டாமின் அமினோ அமிலங்களுக்கு நன்மை பயப்பதோடு, உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளையும் கொண்டது.

எலுமிச்சை:
எலுமிச்சையில் அதிக அளவு வைட்டமின் சி சத்து காணப்படுகிறது. இதில் காணப்படும் பிற சத்துக்களும் இணைந்து நோய் எதிர்ப்பு சக்திக்கு உந்துதலை அளிக்கிறது. பச்சை நிறக் கீரைகள் மற்றும் காய்கறிகள், வைட்டமின் பி1, ஏ மற்றும் சி சத்துக்களைக் அதிகம் கொண்டவை. இவற்றில் துத்தநாகச் சத்தும் அதிகம் உள்ளது.

பச்சைக் காய்கறிகள்-கீரைகள்:
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில், இந்த பச்சைக் காய்கறி மற்றும் கீரைகள் ஒரு சிறந்த உணவாகத் திகழ்கின்றன. எனவே மேற்கூறப்பட்ட உணவுகளை தவறாமல் உங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொண்டு நோய் வந்தபின் அவதியுறுவதை விட வருமுன் காப்பவர்களாக, புத்திசாலிகளாக இருங்கள்.
- நுரையீரலின் வலிமை நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.
- திராட்சைப்பழத்தில் மினரல்ஸ் மற்றும் வைட்டமின்கள் அதிகம்.
நுரையீரலின் வலிமை நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. இப்போதுள்ள உலக சூழலில் புகைப் பழக்கத்தைவிட சுற்றுச்சூழல் மாசின் காரணமாக தான் நிறைய நுரையீரல் பிரச்சனைகள் மக்களுக்கு ஏற்படுகிறது.
நமது நாட்டில் டெல்லி, பெங்களூர், சென்னை, மும்பை போன்ற பெரும் நகரங்களில் இந்த மாசு அதிகரித்து வருகிறது. இதனால் நுரையீரல் சார்ந்த நோய்களும் அதிகரித்து வருகின்றன. இவற்றுக்கு தீர்வு காண சில உணவுகளை நீங்கள் டயட்டில் சேர்த்துக் கொண்டாலே போதுமானது.

* பூண்டில் நிறைய நச்சுக்களை போக்கும் மூலப்பொருட்கள் இருக்கின்றன. மேலும், இதிலிருக்கும் அல்லிசின் (allicin) நச்சுக்களை அழிக்கவும், எதிர்த்து போராடவும் உதவுகிறது. பூண்டு ஆஸ்துமா பிரச்சனை குறையவும், நுரையீரல் புற்றுநோய் அபாயத்தை குறைக்கவும் வலுவளிக்கிறது.
* இஞ்சியிலும் நச்சுக்கொல்லி மூலப்பொருட்கள் இருக்கின்றன. அன்றாட உணவில் சிறிதளவு இஞ்சியை சேர்த்துக் கொள்வது நல்லது. சுவாசக் குழாயில் தேங்கும் நச்சுக்களை அழிக்க இஞ்சி உதவுகிறது.
* பூண்டு, இஞ்சியை போலவே மஞ்சளிலும் நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் மூலப்பொருட்களும், நச்சுக்களை அழிக்கும் தன்மையும் நிறைய இருக்கிறது.
* ஆப்பிளில் நிறைய வகை வைட்டமின் சத்துக்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் இருக்கின்றன. இவை சுவாச மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. மேலும், நுரையீரல் நோய்கள் ஏற்படாமல் தடுக்கவும் பயனளிக்கிறது.
* பிளாக் பெர்ரி, புளூ பெர்ரி, ராஸ்பெர்ரி போன்ற பெர்ரி உணவுகளில் ஆண்டி-ஆக்ஸிசிடன்ட்ஸ் இருக்கின்றன. இவை நுரையீரல் புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது. மேலும் நுரையீரல் சார்ந்த தொற்று அல்லது நோய்கள் ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது.
* திராட்சைப்பழத்தில் மினரல்ஸ் மற்றும் வைட்டமின்கள் அதிகம். ஒருவேளை உங்கள் நுரையீரலில் புற்றுநோய் உண்டாகும் காரணிகளின் தாக்கம் ஏற்பட்டிருந்தால் அதில் இருந்து மீண்டு வர, சுத்தம் செய்ய திராட்சைப்பழம் உதவுகிறது.

* மாதுளையில் நிறைய நல்ல மூலப்பொருட்கள் இருக்கின்றன. இது நுரையீரலில் ஏற்படும் பிரச்சனைகளின் வளர்ச்சியை தடுக்கும் குணமுள்ளது.
* இந்த உணவுகளில் அதிகளவில் மெக்னீசியம் உள்ளது. ஆஸ்துமா பிரச்சனை இருக்கும் நபர்கள் இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது சிறப்பு. மேலும், இது நுரையீரலின் திறனை அதிகரிக்க செய்து, செயல்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது.
* பிஸ்தாவை அப்படியே சாப்பிடுவது நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், நுரையீரல் புற்றுநோயை தடுக்கவும், கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் கூட பிஸ்தா பயனளிக்கிறது.
* வரமிளகாய் அல்லது சிவப்பு மிளகாய் தொண்டை புண், இருமல் சரியாகவும், சுவாச பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கவும் உதவுகிறது. மேலும் மூச்சுக்குழாய் நெரிசலுக்கும் கூட இது நல்ல தீர்வளிக்கிறது.
* வைட்டமின் பி6, சி, ஃபோலிக் அமிலம் சத்துக்கள் நிறைந்த உணவு பொருள் வெங்காயம். நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும் தன்மை கொண்டது வெங்காயம். இது நுரையீரல் புற்றுநோயை எதிர்த்து போராடும் பண்புடைய உணவாகும்.
* சோடா பானம், மது அல்லது பதப்படுத்தப்பட்ட பானங்களை பருகுவதற்கு பதிலாக நீங்கள் வெறும் நீரை பருகுவது நல்லது. இது, நுரையீரல் மட்டுமின்றி, உடலில் இருக்கும் நச்சுக்களை போக்கும் திறன் கொண்டது ஆகும்'
- சுக்கு செரிமானம் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது.
- மிளகு உடலில் கபத்தை சமநிலைப்படுத்துகிறது.
வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றில் எது அதிகமானாலும், குறைந்தாலும் நோய் உண்டாகும். இவை முத்தாதுக்கள் அல்லது திரிதோடங்கள் என்று சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.

நோய்க்கு தரப்படுகின்ற சித்த மருந்துகள் வாத, பித்த, கப நிலையை சமன் செய்து உடம்பை இயல்பு நிலைக்கு திரும்பக் கொண்டு வருகிறது. முத்தோடங்கள் இயல்பு நிலையை அடைந்ததும், நோய் குணமடைகிறது.
இந்த திரிதோடத்தை சமன் செய்ய ஏலம், மஞ்சள், சீரகம், மிளகு, சுக்கு, பெருங்காயம், பூண்டு, வெந்தயம் போன்றவை உதவுகின்றன. இவை அனைத்தும் நமது சமையலறை அஞ்சறைப் பெட்டியிலும் தவறாமல் இருக்கும். இவற்றை அன்றாடம் முறையாக பயன்படுத்தும் போது முத்தோடங்களும் உடம்பில் சமச்சீராக இருக்கும்.

சுக்கு
இது கார்ப்பு சுவை உடையது. செரிமானம் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது. அஜீரணத்தை நீக்கும். உடலில் 'வாதம்' சமநிலைப்படுத்த உதவுகிறது. கிழங்கு சார்ந்த உணவுகள் சமைக்கும் போது இதை சேர்க்கவும். இஞ்சியாகவும் இதை பயன்படுத்தலாம்.

மஞ்சள்
இது கசப்பு, கார்ப்பு சுவைகளை உடையது. சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் சிறந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்ட இது, உடலில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றையும் சமநிலைப்படுத்துகிறது. இதை இனிப்பு பண்டங்களைத் தவிர மற்ற எல்லா உணவிலும் சேர்க்கலாம்.

மிளகு
காரத்தன்மை உள்ள இதன் நஞ்சு எதிர்ப்பு ஆற்றல் அலாதியானது. இது செரிமானத்திற்கும் உதவுகிறது, உடலில் கபத்தை சமநிலைப்படுத்துகிறது. மிளகாய்க்கு மாற்றாக இதைப் பயன்படுத்துவது நல்லது.

பூண்டு
வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்த இது வாதம், பித்தம், கபம் மூன்றையும்சமநிலைப்படுத்த உதவுகிறது. பருப்பு மற்றும் கிழங்கு சார்ந்த உணவுகள் சமைக்கும் போது இதை சேர்க்க வேண்டும்.

சீரகம்
சிறிது கார்ப்பு சுவையுடைய இது, உடலின் உள் உறுப்புகளை சீர்படுத்துகிறது. செரிமானத்திற்கு உதவுகிறது. உடலில் பித்தத்தை சமநிலைப்படுத்துகிறது. வயிற்று உப்புசத்தை குறைக்க சிறந்தது. காரமான உணவு வகைகள் சமைக்கும் போது இதை சேர்க்க வேண்டும்.

ஏலக்காய்
சிறிது கார்ப்பு, இனிப்பு சுவையுடையது. இது செரிமானத்திற்கு உதவும், உடல் வெப்பத்தை தணிக்கும், வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது. இனிப்புகள் மற்றும் இறைச்சி சமைக்கும் போது இதை சேர்க்க வேண்டும்.

பெருங்காயம்
கார்ப்பு, கசப்பு சுவைகளை உடையது. செரிமானத்திற்கு உதவும் இது, வாயு, வயிற்றுப் பொருமல், வயிறு எரிச்சல் ஆகியவற்றை நீக்கும். கிழங்கு, பருப்பு வகைகள் சமைக்கும் போது இதை பயன்படுத்த வேண்டும்.

வெந்தயம்
இரும்பு போன்று உடலை உறுதியாக்கும் இது, கசப்பு சுவையுடையது. உடலில் பித்தத்தை நீக்கும். வெந்தய விதைகளில் நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலை போக்கவும் உதவுகிறது. காரமான உணவுகளை சமைக்கும் போது இதை சேர்க்கவும்.
- சர்க்கரை நோயாளிகள் இதனை பயமின்றி உட்கொள்ளலாம்.
- இன்சுலின் திறம்பட செயல்பட வழிவகுத்து ,சர்க்கரை அளவை குறைக்கிறது.
பனங்கிழங்கின் கிளைசெமிக் இன்டெக்ஸ் (சர்க்கரை உயர்தல் குறியீடு) மற்றும் கிளைசெமிக் லோடு குறைவு என்பதால் சர்க்கரை நோயாளிகள் இதனை பயமின்றி உட்கொள்ளலாம்.

இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை தாமதப்படுத்தி, சாப்பிட்டவுடன் ஏற்படும் குளுக்கோஸ் ஸ்பைக்ஸ் வராமல் தடுக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் நுண்ணுட்ட சத்துக்கள் கணையத்தில் இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கச் செய்து ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது.
அதுமட்டுமல்ல, மெக்னீசியம் நீரிழிவு ரெட்டினோபதி மற்றும் நரம்பு பாதிப்பு ஆகியவற்றை தடுக்க உதவுவதாக பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இதிலுள்ள வைட்டமின் சி, இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கச் செய்து, இன்சுலின் திறம்பட செயல்பட வழிவகுத்து, சர்க்கரை அளவை குறைக்க துணை புரிகிறது. பனங்கிழங்கில் உள்ள அதிகமான இரும்புசத்து, ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து ரத்த சோகை வராமல் தடுக்க உதவுகிறது.
இதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீர்படுத்த உதவுவதோடு இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இக்கிழங்கில் இருக்கும் கால்சியம், எலும்பு மற்றும் தசைகளுக்கு வலுசேர்த்து முதுமை மூட்டழற்சி மற்றும் எலும்புப்புரை நோய் வராமல் தடுக்கிறது.

பனங்கிழங்கில் உள்ள ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகப்படுத்தியும், கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்தும் இருதயம் மற்றும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
இதில் உள்ள பிளாவனாய்ட்ஸ், சப்போனின், பெனாலிக் ஆசிட் போன்ற ஆன்டி ஆக்சிடென்ட்ஸ், நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்து, தொற்று ஏற்படாமல் தடுத்தும், செல்களில் பிரீ ரேடிக்கல்கள் போன்ற நிலையற்ற அணுக்களால் உண்டாகும் சேதத்தை குறைத்தும் பல்வேறு நோய்கள்வராமல் தடுக்கிறது. இக்கிழங்கில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்திற்கு பொலிவை ஏற்படுத்துகிறது.

பனங்கிழங்கில் உள்ள அதிகமான அளவு நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்கி, செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்க உதவுகிறது.
மேலும், வளர்சிதை மாற்றத்தை அதிகரித்தும், சாப்பிடும் ஆர்வத்தை அதிகரிக்கும் கிரெலின் ஹார்மோன் சுரப்பதை தடுத்தும், உடல் எடையை குறைக்க உதவுகிறது. இத்தகைய நன்மைகளைக் கொண்டுள்ள பனங்கிழங்கை சர்க்கரை நோயாளிகள் எந்த தயக்கமும் இல்லாமல் உட்கொள்ளலாம்.
- உடல் இயங்கத்தேவையான ஆற்றல் தண்ணீர் குடிக்கும் அளவைப் பொறுத்து அமைகிறது.
- நாளொன்றுக்குப் பொதுவாக 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கலாம்.
உடலின் உள்ளுறுப்புகள் சரியாக இயங்க தண்ணீர் மிகவும் உதவுகிறது. மனித உடல் 70 முதல் 80 சதவீதம் தண்ணீரால் உருவாகி உள்ளது. உடல் இயங்கத்தேவையான ஆற்றல் கிடைப்பது என்பது ஒருவர் தண்ணீர் குடிக்கும் அளவைப் பொறுத்து அமைகிறது என்கிறது, இயற்கை மருத்துவம்.

நமது உடலில் மூன்று முக்கிய நீர்நிலைகள் உள்ளன. அவை குடல்கள், நுரையீரல்கள், மூளை ஆகும். இந்த உறுப்புகளில் நீரின் அளவு குறையும்போதுதான் நோய்கள் பல உண்டாகின்றன.
குடல் பகுதியில் நீர் குறைந்தால் மலச்சிக்கல், மூலம், குடலிறக்கம், குடல்வால் அழற்சி போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. சிறுநீரகம் பாதிக்கப்படும்.

நுரையீரலில் நீர் வறட்சி ஏற்பட்டால் சளி, இருமல், ஈஸ்னோபிலியா, ஆஸ்துமா, காசநோய் போன்றவை உண்டாகின்றன. மூளைப் பகுதியில் நீர் வறட்சி ஏற்படும்போது தலைவலி, எரிச்சல், படபடப்பு, கோபம், கவலை உண்டாகின்றன.
இயற்கை மருத்துவத்தில் தண்ணீர் குடிப்பது குறித்து பல தகவல்கள் கூறப்படுகிறது. நாளொன்றுக்குப் பொதுவாக 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கலாம்.
குளிர், மழைக்காலத்தில் 2 லிட்டரும், கோடையில் 3 லிட்டர் தண்ணீரும் குடிக்கலாம். உணவு உண்பதற்கு குறைந்தபட்சம் 45 நிமிடங்களுக்கு முன்னர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பது செரிமானத்துக்கு கேடு செய்யும். உண்டபின், குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரத்திற்கு பின்னரே தண்ணீர் குடிக்க வேண்டும். 'மடக்' 'மடக்' என்று வேகமாக தண்ணீரை குடிப்பது கூடாது. மிகக் குளிர்ந்த தண்ணீர், அதிகச்சூடான தண்ணீர் செரிமான வேலையை தடை செய்யும் என்று கூறப்படுகிறது.
- முதுமையில் மூளையைத் தாக்கும் நோய்களில் முக்கியமானது.
- மூளையில் டோபமைன் என்ற ரசாயனத்தின் குறைவால் ஏற்படுகிறது.
முதுமையில் மூளையைத் தாக்கும் நோய்களில் முக்கியமானது - 'பார்கின்சன்' என்கிற 'மூளை நடுக்குவாதம்'.
பார்கின்சன் நோய், பார்கின்சன் சிண்ட்ரோம், பார்கின்சன் பிளஸ் சிண்ட்ரோம், பார்கின்சோனிசம் என்று உதறு வாதத்தில் பல பிரிவுகள் இருக்கின்றன. நோயாளிகளும், சில நேரங்களில் மருத்துவர்களும் கூட இதனை தனித்தனியாக பார்க்காமல் ஒரே நோயாக கருதுகின்றனர்.

இதில் பார்கின்சன் நோய் என்பது மூளையில் டோபமைன் என்ற ரசாயனத்தின் குறைவால் ஏற்படுகிறது. இது மருந்துகளின் மூலம் குணப்படுத்தக்கூடிய நோய்.
ஆனால், ரத்த குழாய் பிரச்சினைகளாலோ, சில மருந்துகளை உட்கொள்வதாலோ, நரம்பியல் பிரச்சினைகளாலோ பிற நடுக்குவாதங்கள் ஏற்படலாம். இவற்றை, எளிதில் குணப்படுத்த முடியாது. இந்த நோய்க்கான காரணங்களை கண்டுபிடித்து அதற்குரிய மருந்துகள் தரப்பட வேண்டும்.

உலக அளவில் 70 வயதைக் கடந்தவர்களில் லட்சத்துக்கு 1,700 பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதாவது ஒரு மணி நேரத்துக்கு ஒருவர் புதிதாக இதனால் பாதிக்கப்படுகிறார் என்கிறது உலக சுகாதார நிறுவனம். அதிலும் பெண்களைக் காட்டிலும் ஆண்கள் ஒன்றரை மடங்கு அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.
நம் நடுமூளையில் சற்றே அடர்ந்த கறுப்பு நிறத்தில் இருக்கும் Substantia nigra (SN) என்கிற பகுதியில் உள்ள மூளை நியூரான்கள் தேவையான அளவு சுரக்க வேண்டிய 'டோபமைன்' (Dopamine) என்கிற வேதியியல் சுரப்பு, முறையாகச் சுரக்காததால் சீரமைக்கவே முடியாத அளவுக்கு உடலில் பாதிப்புகள் ஏற்படுவதே நடுக்குவாதம்.

நடுக்குவாத அறிகுறிகள்
* அடிக்கடி கீழே விழுதல், நடையில் தடுமாற்றம், எழுதுவதில், கையெழுத் திடுவதில் தடுமாற்றம்.
* நினைவாற்றலில், சிந்தனையில், அன்றாட வேலைகளில் திறன் குறைவு, செயற்கையான கற்பனைகள் அதிகரிப்பு.
* மலச்சிக்கல், உணவை விழுங்குவதில், சிறுநீர் கழிப்பதில் சிரமம்.
* தொடக்க நிலை அறிகுறிகள் உடலின் ஒரு பக்கம் மட்டுமே தெரியும்.
உடலின் ஒரு பக்கம் மட்டுமே நடுக்கம் இருக்கும், கூடவே தோள் மூட்டு (அ) இடுப்பு மூட்டுப் பகுதியில் உள்ள தசைகளில் ஒரு பிடிப்பு ஏற்பட்டு நடக்கும்போது சிரமம், தசைகளில் வலி, கைகளை தாராளமாய் வீசி நடக்க முடியாத தன்மை போன்றவை காணப்படும். திடீரென உட்காரவோ நடக்கவோ, இல்லை நடந்துகொண்டிருக்கும் போது திடீரென நிற்கவோ முடியாது. தினசரி அடிப்படைத் தேவைகளுக்கும் உதவியாளர்கள் தேவைப்படுவார்கள்.
- மங்கலான சிவப்பு ஒளி தரும் விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும்.
- பிஸ்தாக்களில் வைட்டமின் பி6 அதிகமாக உள்ளது.
மூளையில் உள்ள ஒரு சிறிய சுரப்பி பினியல் சுரப்பி. இது மெலடோனின் என்ற ஹார்மோனை சுரக்கிறது. இந்த ஹார்மோன் உடலின் சர்க்காடியன் ரித சுழற்சியை ஒழுங்கு படுத்துகிறது.
சர்க்காடியன் ரிதம் என்பது நமது மூளையில் உள்ள 24 மணிநேர உடல் இயக்க கடிகாரமாகும். நமது உறக்கம்-விழிப்பு சுழற்சியை இது தீர்மானிக்கிறது. 'தூக்க ஹார்மோன்' என்று குறிப்பிடப்படும் மெலடோனின் இரவில் அதிக அளவிலும், பகலில் குறைந்த அளவிலும் சுரக்கிறது.

பினியல் சுரப்பி கண்களில் உள்ள விழித்திரையிலிருந்து ஒளி-இருட்டு (பகல்-இரவு) சுழற்சியைப் பற்றிய தகவலைப் பெறுவதால், அதற்கேற்ப மெலடோனினை வெளியிடுகிறது. ஒளியைக் கண்டறிய முடியாத பார்வைத் திறன் அற்றவர்களுக்கு பொதுவாக பழக்கத்தின் வாயிலாக சர்க்காடியன் ரிதம் ஒழுங்குபடுத்தப்படுகிறது.
மெலடோனின் அளவை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
1) இரவில் நீல ஒளியை தவிர்த்து மங்கலான சிவப்பு ஒளி தரும் விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும்.
2) படுக்கைக்கு போவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பு டி.வி., கம்ப்யூட்டர், செல்போன் பார்ப்பதைத் தவிர்க்கவும்.
3) இரவு ஷிப்டில் பணிபுரிந்தால் அல்லது இரவில் நிறைய எலக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்தினால், நீல நிற ஒளியைத்தடுக்கும் கண்ணாடிகளை அணியவும், அல்லது இரவில் நீலம், பச்சை அலை நீளத்தை வடிகட்டக்கூடிய பாதுகாப்பு பட்டையை பயன்படுத்த வேண்டும்.

மெலடோனின் ஹார்மோனை அதிகரிக்கும் உணவுகள்:
1) டுனா மற்றும் எண்ணெய் சத்துள்ள மீன்கள், செர்ரி பழங்கள், வாழைப்பழம், முட்டை, பால், காளான் உணவுகள் போன்றவை மெலடோனின் சுரப்பை அதிகரிக்கும்.
2) பிஸ்தாவில் உள்ள பிஸ்டாசிஸ் இயல்பாக மெலடோனின் அளவை அதிகரிக்கிறது, இதை இரவில் தூக்கத்திற்கு முன்பு சாப்பிட வேண்டும். மற்றும் பிஸ்தாக்களில் வைட்டமின் பி6 அதிகமாக உள்ளது. இது டிரிப்டோபனை மெலடோனினாக மாற்ற உதவுகிறது. ஆனால் வறுத்து சாப்பிடக்கூடாது.
3) லாவெண்டரின் இனிமையான நறுமணம், சங்குபுஷ்ப மலர்கள் தூக்கத்தை மேம்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
- சைனஸ் குழியில் உள்ள திசுக்களில் ஏற்படும் அழற்சியாகும்.
- சர்க்கரை நோயாளிகளுக்கு சைனசில் எளிதாக தொற்று ஏற்படுகிறது.
சைனஸ் என்பது கன்னம், மூக்கின் பின்புறம் மற்றும் நெற்றியில் இருக்கும் எலும்புகளில் உள்ள காற்று நிரப்பப்பட்ட சிறிய துவாரங்களாகும். பிரான்டல், மேக்சிலரி, ஸ்பீனாய்ட், எத்மாய்ட் எனப்படும் நான்கு ஜோடி சைனஸ்கள் தலையில் உள்ளன.
இதில் உள்ள மீயூகஸ் (சளி) மூக்கின் உட்புறத்தை ஈரமாகவும், சுத்தமாகவும் பராமரித்து, பாக்டீரியா மற்றும் இதர தொற்றுகள் வராமல் தடுக்கிறது. சைனசைட்டிஸ் அல்லது புரை அழற்சி என்பது சைனஸ் குழியில் உள்ள திசுக்களில் ஏற்படும் அழற்சியாகும்.

பொதுவாக பாக்டீரியா, வைரஸ் அல்லது பூஞ்சை தொற்றுக்களாலும் ஒவ்வாமையாலும் திசுக்களில் அழற்சி உண்டாகிறது. இது சைனஸ்சில் சளியை அதிகரிக்கச் செய்து அடைப்புக்கு வழி வகுத்து வலியை ஏற்படுத்துகிறது.
அக்யூட் சைனசைட்டிஸ், சப்பகியூட் சைனசைட்டிஸ், நாள்பட்ட சைனசைட்டிஸ், மீள்வரும் சைனசைட்டிஸ் என்று சைனசைட்டிஸ் நான்கு வகைப்படும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் குறைவாக உள்ளதால் சைனசில் எளிதாக தொற்று ஏற்படுகிறது.

மேலும் புகைப்பிடித்தல், மூக்கு தண்டு விலகல், குளிர்கால நிலை, ஈரப்பதம் மாற்றம், காற்று மாசடைதல், மூக்கின் உட்பகுதியில் ஏற்படும் சதை வளர்ச்சி ஆகியவை சைனசைட்டிஸ் ஏற்பட காரணிகள் ஆகும்.
சர்க்கரை நோயாளிகளில் கிட்டத்தட்ட 54 சதவீதம் பேருக்கு இந்த பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஈஸ்ட் மற்றும் பூஞ்சை தொற்றுக்களால் சர்க்கரை நோயாளிகளுக்கு எளிதில் சைனஸ் பாதிப்பு ஏற்படுகிறது.
இதனை குணப்படுத்த மூக்கடைப்பு நீக்கி, நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், ஒவ்வாமை மருந்துகள் மற்றும் ஸ்டீராய்டு நாசி ஸ்ப்ரேக்கள் பரிந்துரைக்கப்படுகிறது. இவை பலன் தராவிட்டால் எண்டோஸ்கோபி சைனஸ் அறுவை சிகிச்சையின் மூலம் பாதிப்படைந்த திசுக்களை நீக்குவது பலனளிக்கும்.
- வயிற்றுப் புண், இதய செயலிழப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் அபாயங்கள் உள்ளன
- உயர் இரத்த அழுத்தம் 7% அதிகரிக்கும் என்று ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
இந்தியாவில் காய்ச்சல் தலைவலிக்கு பெரும்பாலனோர் பாராசிட்டமால் வலி நிவாரணி மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் பாராசிட்டமால் மாத்திரைகள் பல்வேறு ஆய்வுகளில் உட்கொள்ள தகுதி அற்றவையாக வரையறுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி பயன்படுத்தும் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு இரைப்பை குடல், இருதயம் மற்றும் சிறுநீரகம் தொடர்பான கோளாறுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 180,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளின் உடல்நலன் குறித்த தரவுகள் ஆராயப்பட்டது.
பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி பயன்படுத்துபவர்களிடையே வயிற்றுப் புண், இதய செயலிழப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் ஆகியவற்றின் அபாயங்கள் அதிகரித்துள்ளன என்ற முடிவை இந்த ஆய்வு முன்வைக்கிறது.
அதன்படி, வயதானவர்கள் நீண்ட காலமாக பாராசிட்டமால் பயன்படுத்தினால் நாள்பட்ட சிறுநீரக நோய்க்கான ஆபத்து 19%, இதய செயலிழப்பு சம்பவங்களில் 9% அதிகரிப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் 7% அதிகரிக்கும் என்று ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
- கலோரி உடலுக்கு சக்தி தருவதால் உடல் சூடாகிறது.
- சுற்றுப்புற வெப்பநிலையில் மாற்றம் இருந்தாலும் உடலில் பாதிப்பு ஏற்படும்.
குளிர் தாங்கமுடியாமை என்பது உடலிலுள்ள ஏதோ ஒரு நோயின் அறிகுறியாகும். இது உடலிலும் ஏற்படும் வளர்சிதை மாற்றம் சார்ந்த பிரச்சனையே ஆகும்.
உதாரணத்திற்கு வயதான, மிகவும் ஒல்லியான பெண்களால் சாதாரண குளிரைக்கூட தாங்கிக் கொள்ள முடியாது. ஏனென்றால் அவர்களுக்கு உடலில் மிகமிகக் குறைவான அளவிலேயே கொழுப்பு இருக்கிறது.

நமது உடலிலுள்ள ரத்தத்தில் கலந்திருக்கும் கொழுப்பு வேறு. நமது உடலில் பரவி இருக்கும் கொழுப்பு வேறு. குளிர் தாங்க முடியாமைக்கு மேலும் சில காரணங்கள் உள்ளன. அவை:
ரத்த சோகை, பசியின்மை, அதிக குளிரினால் ரத்தக்குழாய்கள் இறுகிப்போதல், ஹைப்போதலாமஸ் சுரப்பியில் பிரச்சனை, தசை நார் வலி, ஹைப்போதைராய்டு குறைபாடு, நாள்பட்ட நோய், உடலில் கொழுப்பு குறைவாக இருப்பது.
பொதுவாக மனித உடலின் வெப்பநிலை பல அமைப்பு முறைகளினால் கட்டுப்படுத்தப்படுகிறது. மூளைக்கு அடிப்பகுதியிலுள்ள ஹைப்போதலாமஸ் உறுப்பு முன் கழுத்துப் பகுதியிலுள்ள தைராய்டு சுரப்பிக்கு செய்தியை அனுப்புகிறது.
உடனே தைராய்டு சுரப்பி உடலில் நடக்கும் வளர்சிதை மாற்றத்தை கண்காணித்து அதிக கலோரி சக்தியை சேமித்து வைக்குமாறு உடலுக்கு உத்தரவிடுகிறது. இவ்வாறு சேமிக்கப்படும் கலோரி உடலுக்கு சக்தி தருவதால் உடல் சூடாகிறது.
உடலில் ஓடிக்கொண்டிருக்கும் ரத்தம் இந்த உடல் சூட்டை உடல் முழுக்க எடுத்துக்கொண்டு போகிறது. இதுபோக உடலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கொழுப்பு உடல் சூட்டை அப்படியே பாதுகாத்து வைத்துக் கொள்கிறது.

இதில் எந்த அமைப்பு சரியாக வேலை செய்யாவிட்டாலும் உடல் சூடு ஒரே நிலையில் இருக்காது. உடல் வெப்பநிலையில், சுற்றுப்புற வெப்பநிலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் உடலில் பாதிப்பு ஏற்படும்.
அதிக குளிரில் விரைத்துப்போய் உடல் நடுக்கம் வந்தால், உங்கள் உடல் வெப்பத்தை இழந்து கொண்டிருக்கிறது என்பதற்கு அறிகுறியாகும். உடனே, பல அடுக்கு வெப்ப உடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.
உள்ளங்கை பாதம் இரண்டையும் சூடேற்றுமாறு தொடர்ந்து நன்றாகத் தேய்க்க வேண்டும். குழந்தைகளாகவோ வயதானவர்களாகவோ இருந்தால் உடலோடு உடல் உரசிக் கொண்டு இருக்கிறமாதிரி அரவணைத்துக் கொண்டு சில நிமிடங்கள் இருந்தால் குளிர் குறைந்து உடல் சூடாகும்.

எல்லாம் சரியாக இருந்தும் மற்றவர்களால் தாங்கிக் கொள்ளக்கூடிய குளிரை உங்களால் தாங்க முடியவில்லை என்றால் உங்கள் குடும்ப டாக்டரின் ஆலோசனைப்படி சில ரத்த பரிசோதனைகளைச் செய்து என்ன காரணத்தினால் குளிரைத் தாங்க முடியவில்லை என்பதைக் கண்டுபிடித்து அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
குளிரை எல்லோராலும் தாங்கிக் கொள்ள முடிந்தால் மழைக் காலமும் பனிக்காலமும் சுகமானவை தான்.






