என் மலர்
பொது மருத்துவம்
- ஒட்டுமொத்த கொழுப்பின் அளவை குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது.
- ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கும் உதவுகிறது.
இதய ஆரோக்கியத்தை பொறுத்த வரை ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். அது மட்டுமல்லாமல், உணவுப் பொருள்களைத் தயார் செய்யத் தேவைப்படும் எண்ணெயும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். எவ்வாறு இதய ஆரோக்கியத்திற்கு கடுகு எண்ணெய் நன்மை பயக்கும் என்பது குறித்து காணலாம்.
உடல் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள், காய்கறிகள், பழங்கள், நட்ஸ், விதைகள் போன்றவை அடங்கும். இதுதவிர, நம் அன்றாட உணவில் தேர்ந்தெடுக்கும் எண்ணெய் வகைகளும் உடல் ஆரோக்கியத்திற்குப் பாதுகாப்பைத் தரக்கூடியதாக அமைகிறது.

குறிப்பாக, இதய ஆரோக்கியத்திற்கு உகந்த எண்ணெய்களை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியமாகும். அந்த வகையில் உணவுப்பொருட்களில் ஒன்றான கடுகு இல்லாமல் சில உணவு வகைகள் முழுமையடையாது. ஆனால், இது ஏன் பரிந்துரைக்கப்படுகிறது மற்றும் அதன் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து யோசித்ததுண்டா?
ஆம். சிறிய அளவிலான கடுகு உடல் ஆரோக்கியத்திற்கு பலதரப்பட்ட நன்மைகளைத் தருகிறது. கடுகு கொண்டு தயாரிக்கப்படும் கடுகு எண்ணெய் உண்மையில் உடலுக்கு மிகுந்த நன்மையை தருகின்றன.
கடுகானது ஆக்சிஜனேற்றிகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளது. கடுகு எண்ணெய்யில் சைனசிடிஸ், சளி, தடுக்கப்பட்ட மூக்கு, தோல் மற்றும் முடிக்கு போன்றவற்றிற்கு நன்மை தருகிறது.
கடுகு எண்ணெய் நன்மைகள்:
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்
கடுகு எண்ணெயில் ஒமேகா-3 கொழுப்பு அமிலத்தின் ஒரு வகையான ஆல்பா-லினோலெனிக் அமிலம் நிறைந்துள்ளது. இது உடலின் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதால், இது இதய நோயாளிகளுக்கு பெரிதும் பரிந்துரைக்கப்படுகிறது.
இந்த கொழுப்பு அமிலங்கள் வழக்கமான கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம், பிளேட்லெட்டுகளின் ஒட்டும் தன்மையைக் குறைக்கிறது. மேலும், இது பக்கவாதம், அரித்மியா மற்றும் மாரடைப்பு அபாயங்களைக் குறைக்க உதவுகிறது.
ஆரோக்கியமான கொழுப்புகள்
கடுகு எண்ணெயில் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்து காணப்படுகிறது. இதில் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது.
இந்த இரண்டு அமிலங்களுமே HDL கொழுப்பை அதிகரிப்பதற்கும், எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைப்பதற்கும் உதவுகிறது. இவை இரண்டுமே இதய ஆரோக்கியத்திற்கு உதவும் கொழுப்புகள் என அழைக்கப்படுகிறது.

ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்த
கடுகு எண்ணெயில் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் பண்புகள் உள்ளது. இதில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் பிற கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கும் உதவுகிறது. இதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் போன்ற நோய்களைத் தடுக்கலாம்.
ஆக்சிஜனேற்றிகள்
இந்த எண்ணெயில் அதிகளவிலான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மேலும், இது ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றி, செல்களை இளமையாக வைத்திருக்க உதவுகிறது.
மேலும், இது இரத்த நாளங்கள் மற்றும் இதய திசுக்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்கிறது. கூடுதலாக, இதில் அதிகளவிலான வைட்டமின் ஈ உள்ளது.

ரத்த ஓட்டத்தை மேம்படுத்த
கடுகு எண்ணெயை உட்கொள்வது இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. எனவே, இது இதயம், செல்கள் மற்றும் திசுக்கள் போதுமான அளவு ஆக்சிஜனைப் பெறுவதையும், ஆக்சிஜனை மாற்றுவதற்கான முழு செயல்முறையும் சரியாகச் செயல்படுவதையும் உறுதி செய்கிறது. இல்லையெனில் இது மோசமான ரத்த ஓட்டம் அடைப்புகள் மற்றும் இதய பாதிப்புகளை விளைவிக்கலாம்.

கொலஸ்ட்ரால் அளவை ஒழுங்குபடுத்த
ஆய்வுகளில் கடுகு எண்ணெய் ஒட்டுமொத்த கொழுப்பின் அளவை குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, எல்டிஎல் கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளைக் குறைக்கவும், அதே சமயத்தில் எச்டிஎல் கொழுப்பின் ஆரோக்கியமான அளவை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
மேலும், இது தமனிகளில் பிளேக் கட்டமைப்பதைக் குறைத்து, சீரான ரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பதன் மூலம் மேம்பட்ட இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.
- குறைந்த உடல் இயக்கம் ஒரு தேக்கமான சூழலை உருவாக்குகிறது.
- நியூரோட்ரான்ஸ்மிட்டர் உற்பத்தி மூலம் மூளையின் செயல்பாட்டில் தாக்கம் ஏற்படுத்துவது வரை குடல் ஆரோக்கியம் முக்கிய காரணியாகும்.
பெருகி வரும் வேலை வாழ்க்கையும் அருகி வரும் தனிப்பட்ட வாழ்க்கையும் இன்றைய கார்ப்பரேட் கலாச்சாரத்தின் வெளிப்பாடு.
ஆரோக்கியத்தை முற்றிலுமாக சீர்குலைக்கும் அபாயங்களை தன்னகத்தே கொண்டுள்ள இந்த வாழ்க்கை முறை இளமையையும் உடல்நலனையும் உறிஞ்சிவதாக உள்ளது.
இளைஞர்கள் உட்பட அனைவரின் வேலையும் நாள் முழுவதும் நாற்காலிகளுடன் பிணைக்கப்பட்டு உள்ளது. இது மனம் மற்றும் உடல் ரீதியான சுரண்டலுக்கு வழிவகுக்கிறது. அதில் ஒன்றுதான் வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகள்.
நாள் முழுவதும் சேரில் உட்கார்ந்தே இருப்பது, வயிற்று உறுப்புகளை அழுத்துகிறது. இதனால் வீக்கம், வாயு, மலச்சிக்கல் மற்றும் தாமதமான குடல் இயக்கங்கள் ஏற்படுகின்றன.

உட்கார்ந்திருக்கும் தொடர் பழக்கம் குடலுக்கு இரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது மற்றும் செரிமான உறுப்புகளில் அழுத்தத்தை அதிகரிக்கிறது.
சீரில்லாத உட்காரும் முறை, உறுப்பு சீரமைப்பை சீர்குலைக்கிறது. செரிமானத்தை மெதுவாக்குகிறது மற்றும் வாயு குவிவதற்கு வழிவகுக்கிறது.
கூடுதலாக, கட்டுப்படுத்தப்பட்ட உதரவிதான [diaphragm] இயக்கம் செரிமானத்தை எதிர்மறையாக பாதிக்கும். இந்த வாழ்க்கை முறை மலச்சிக்கல் மற்றும் அழற்சி குடல் நோய் போன்ற பிரச்சினைகளுடன் நெருக்கமாக தொடர்புடையது.
நீடித்த அசைவற்ற தன்மை குடல் பாக்டீரியா சமநிலையையும் பாதிக்கிறது. இது செரிமான செயலிழப்புக்கு வழிவகுக்கிறது. குறைந்த உடல் இயக்கம் ஒரு தேக்கமான சூழலை உருவாக்குகிறது. இது நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் செயல்திறனைக் மட்டுப்படுத்துகிறது. இது உணவில் இருந்து ஊட்டச்சத்து பெறுதல் மற்றும் குடல் செயல்திறனைத் தடுக்கிறது.
குடல் பாக்டீரியா சமநிலையற்றதாக இருக்கும்போது, செரிமானம் மெதுவாகிறது, கழிவுகளை அகற்றுவது கடினமாகிறது. இரத்த ஓட்டம் குறைவதோடு வயிற்றில் அழுத்தம் அதிகரிப்பதால் மலச்சிக்கல் மோசமடைகிறது. சர்க்கரை உணவுகள், மன அழுத்தம், நீரிழப்பு மற்றும் உடற்பயிற்சியின்மை போன்ற பிற காரணிகள் குடல் ஆரோக்கியத்தை மேலும் பாதிக்கின்றன.
குடல் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பது அவசியம், ஏனெனில் இது நோய் எதிர்ப்பு சக்தி, ஹார்மோன்கள், மன நல்வாழ்வு மற்றும் எடை ஒழுங்கை பாதிக்கிறது. ஊட்டச்சத்துக்களை ஒருங்கிணைப்பது, வீக்கத்தைக் குறைப்பது, மற்றும் நியூரோட்ரான்ஸ்மிட்டர் உற்பத்தி மூலம் மூளையின் செயல்பாட்டில் தாக்கம் ஏற்படுத்துவது வரை குடல் ஆரோக்கியம் முக்கிய காரணியாகும்.
குடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க, சீரான உட்காரும் முறையை பயிற்சி செய்யுங்கள், நீரேற்றமாக இருங்கள், மேலும் வெளியின்போது இடைவேளை எடுத்து எடுத்து நடக்க வேண்டும். உங்கள் உணவில் நார்ச்சத்து, புரோபயாடிக்குகள் மற்றும் புளித்த உணவுகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள், அதே நேரத்தில் சரியான தூக்கம், வழக்கமான, மிதமான உடற்பயிற்சியும் இதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
- அளவோடு பருகினால் காபியும் ஒரு அரு மருந்துதான் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.
- காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காபி குடிப்பதைவிட சாப்பிட்ட பிறகு சிறிது இடைவெளியில் காபி குடிப்பதே நல்லது என்றும் கூறுகிறார்கள்.
காபி...
அடடா பேஷ்... பேஷ்...
காலையில் எழுந்தவுடன் சூடா... ஒரு காபியை குடித்தால்தான் அன்றைய பொழுதே சுறுசுறுப்பாக இருக்கும் என்பர் பலர். அந்த அளவுக்கு காபி குடிக்கும் பழக்கம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையுமே ஆட்கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல.
காலையில் எழுந்து பல் துலக்கிவிட்டு காபியை ருசிப்பவர்கள் ஒரு ரகம். காபி கோப்பையை கையில் பிடித்தபடியே பேப்பர் படிக்கும் பழக்கத்துக்கு பலர் அடிமையாகி இருப்பார்கள்.
இன்னும் சிலரோ, காபி கிளாசுடன் ஹாயாக சேரில் அமர்ந்து தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டே ருசிப்பவர்களும் உண்டு. மேலும் சிலரோ, வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டு காபி குடிக்க விரும்புவார்கள்.
இப்படி காபியை ரசித்து... ருசித்து குடிப்பவர்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
காபி குடிப்பதால் நன்மையா? தீமையா? என்கிற விவாதம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அதில் நல்லதும் இருக்கு... கெட்டதும் இருக்கு என்கிறார்கள் டாக்டர்கள்.

100 மில்லி கிராம் அளவிலான காபியை ஒரு நாளைக்கு 2 அல்லது 4 முறை குடிக்கலாம் என்கிறார்கள் டாக்டர்கள். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அது எந்த பானத்துக்கு பொருந்துகிறதோ இல்லையோ காபிக்கு நிச்சயம் பொருந்தும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
காபிக்கு அடிமையானவர்களே அதிக அளவில் காபியை பருகுவதாக கூறும் டாக்டர்கள், ஒருவர் ஒரு நாளைக்கு 4 முறைக்கு மேல் காபி குடிக்கிறார் என்றால் அவர் காபிக்கு அடிமையானவராகவே இருப்பார்.
அப்படி அதிக அளவில் காபியை குடிப்பவர்கள் அஜீரண கோளாறு, வயிற்றுப்போக்கு, இரைப்பை பாதிப்பு உள்ளிட்டவைகளால் அவதிப்பட நேரிடும் என்று அறிவுரை கூறும் டாக்டர்கள், காபியை அளவோடு பருகினால் கிடைக்கும் நன்மைகளையும் பட்டியலிடுகிறார்கள்.
மன அழுத்தம், மனச்சோர்வு, நடுக்குவாத நோய் உள்ளிட்டவை வராமல் தடுக்கும் தன்மை காபிக்கு உள்ளது. கல்லீரல், புற்றுநோய் மற்றும் இதர புற்று நோய்களை தடுக்கும் திறனும் காபிக்கு உள்ளது.
இதனால் அளவோடு பருகினால் காபியும் ஒரு அரு மருந்துதான் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காபி குடிப்பதைவிட சாப்பிட்ட பிறகு சிறிது இடைவெளியில் காபி குடிப்பதே நல்லது என்றும் கூறுகிறார்கள்.
இரவில் காபி குடிப்பதன் மூலம் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும் என்று கூறும் டாக்டர்கள் காபிக்கு அடிமையாகாமல் இருக்கும் வரை பிரச்சனை இல்லை என்றும் தெரிவிக்கிறார்கள்.
இந்த நிலையில், உயிரிழப்பு அபாயத்தை குறைக்க காபி எப்போதெல்லாம் குடிக்கலாம் என்று தற்போது நடைபெற்ற ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள துலேன் பல்கலைக்கழக நிபுணர்கள் தலைமையிலான ஆராய்ச்சி குழு, முடிவுகளை வெளியிடுவதற்கு முன்பு கிட்டத்தட்ட 10 ஆண்டு காலமாக ஆய்வில் உள்ளவர்களைக் கண்காணித்தது. மேலும், இறப்பு அபாயத்தைக் குறைக்க எப்போது காபி குடிக்க வேண்டும் என்பதை ஆய்வு வெளிப்படுத்துகிறது.

பல ஆண்டுகளாக, மிதமான அளவில் காபி குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை பல ஆய்வுகள் பட்டியலிட்டுள்ளன. ஆனால் முதல் முறையாக, காபியை எப்போது உட்கொள்வது சிறந்த பலன்களை அளிக்கும் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
ஆய்வில் பங்கேற்ற 40,725 பேர்களில், இரண்டு தனித்துவமான காபி குடிக்கும் முறைகள் காணப்பட்டன. காலை காபி குடிக்கும் பழக்கம் கொண்ட பங்கேற்பாளர்கள், பெரும்பாலும் அதிகாலை 4 மணி முதல் 11.59 மணி வரை காபியை பருக எடுத்துக் கொள்கின்றனர்.
இதற்கிடையில், நாள் முழுவதும் காபி குடிப்பவர்கள், காலை, மதியம் (மதியம் 12 மணி முதல் மாலை 4:59 மணி வரை) மற்றும் மாலை (மாலை 5 மணி முதல் அதிகாலை 3:59 மணி வரை) என நாள் முழுவதும் காபி குடிப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

காலையில் காபி குடிப்பவர்கள் காபி குடிக்காதவர்களுடன் ஒப்பிடும்போது இறப்பதற்கான வாய்ப்பு 16 சதவீதம் குறைவாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். மேலும், அவர்கள் இதய நோயால் இறப்பதற்கான வாய்ப்பு 31 சதவீதம் குறைவாக இருந்தது. நாள் முழுவதும் காபி குடிப்பவர்களுக்கு காபி குடிக்காதவர்களுடன் ஒப்பிடும்போது எந்த ஆபத்தும் குறையவில்லை.
காபி குடிப்பதால் இருதய நோய் அபாயம் அதிகரிப்பதில்லை என்றும், டைப் 2 நீரிழிவு போன்ற சில நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைப்பதாகவும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
- சுகாதார பழக்கவழக்கங்களை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.
- அதிக பாதிப்பு ஏற்பட்டால், இருமல் போன்ற நீடித்த அறிகுறிகள் நீங்குவதற்கு அதிக நாட்கள் ஆகலாம்.
எச்.எம்.பி.வி. தொற்று மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து மருத்துவத்துறை நிபுணர்கள் கூறியதாவது:-
எச்.எம்.பி.வி. தொற்று எல்லா வயதினருக்கும் சுவாச நோய்த் தொற்றை ஏற்படுத்தும். இது புதிய வைரஸ் அல்ல. கடந்த 2001-ம் ஆண்டிலேயே இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இது 'பாராமிக்சோவிரிடே' குடும்பத்தைச் சேர்ந்தது. சுவாச ஒத்திசைவு வைரசுடன் நெருங்கிய தொடர்புடையது.
இருமல் அல்லது தும்மலில் இருந்து வெளிப்படும் நீர்த்துளிகள் மூலமாகவும், அசுத்தமான பரப்புகளைத் தொடுவதாலும், பாதிக்கப்பட்ட நபர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதன் மூலமாகவும் பரவும் தன்மை கொண்டது. இந்த வைரஸ் லேசான சுவாசக் கோளாறு முதல் கடுமையான சுவாசப்பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இது உலகளவில் பரவலாக உள்ளது மற்றும் மிதமான பகுதிகளில் குளிர்காலத்தின் பிற்பகுதியிலும், வசந்த காலத்தின் தொடக்கத்திலும் உச்சமாக இருக்கும், சில பகுதிகளில் இது ஆண்டு முழுவதும் பரவுகிறது.
எச்.எம்.பி.வி. தொற்றின் அறிகுறிகளாக மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி, சளி இருமல் மற்றும் காய்ச்சல் ஆகியவை கூறப்படுகின்றன. இந்த அறிகுறிகள் தனிநபரின் வயது, பொது ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். மிதமான அறிகுறிகளில் நிலையான இருமல், மூச்சுத்திணறல் மற்றும் சோர்வு ஆகியவை அடங்கும்.
கைக்குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டால், மூச்சுக்குழாய் அழற்சி அல்லது நிமோனியா போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
இன்புளூயன்சா போன்ற பிற சுவாச வைரஸ்களைப் போலவே எச்.எம்.பி.வி.யும் பரவுகிறது. தொற்று பரவலை தடுக்க, சோப்பு மற்றும் தண்ணீரில் அடிக்கடி கைகளை கழுவுதல் உள்ளிட்ட சுகாதார பழக்கவழக்கங்களை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.

தும்மும்போது அல்லது இருமும்போது வாய் மற்றும் மூக்கை மூடுவது. முகக்கவசம் அணிவது போன்றவற்றின் மூலம் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தலாம். இந்த வைரஸ் தொற்று சாதாரண பாதிப்பு பொதுவாக சில தினங்கள் முதல் ஒரு வாரம் வரை நீடிக்கும். அதிக பாதிப்பு ஏற்பட்டால், இருமல் போன்ற நீடித்த அறிகுறிகள் நீங்குவதற்கு அதிக நாட்கள் ஆகலாம்.
எவ்வாறு கண்டறியப்படுகிறது?
இது இன்புளூயன்சா போன்ற பிற சுவாச நோய்த்தொற்றுகளைப் பிரதிபலிப்பதால், எச்.எம்.பி.வி. தொற்றை அறிகுறிகளின் அடிப்படையில் கண்டறிவது சவாலானது. ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை மூலமும், ஆன்டிஜென் கண்டறிதல் மதிப்பீடுகள் மூலமும் தொற்று பாதிப்பை கண்டறிய முடியும்.
தற்போது, இதற்குரிய சிகிச்சையோ, வைரஸ் தடுப்பு மருந்து அல்லது தடுப்பூசி எதுவும் இல்லை. சிகிச்சை என்பது நோய்த்தொற்றின் தீவிரத்தை சார்ந்துள்ளது. லேசான பாதிப்புகளுக்கு ஓய்வு, அதிம் தண்ணீர் குடிப்பது, காய்ச்சல் மற்றும் மூக்கடைப்பு ஆகியவற்றுக்கான மருந்துகளை எடுத்துக் கொள்வது போதுமானது. அதுவும் டாக்டர்களின் ஆலோசனையின்படியே எடுத்துக்கொள்ள வேண்டும். பாதிப்பு அதிகம் ஏற்பட்டு நிமோனியா அல்லது மூச்சுக்குழாய் அழற்சி, சுவாச பாதிப்பு ஏற்படும்போது ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட வேண்டும். சிலருக்கு செயற்கை சுவாசம் தேவைப்படலாம். இப்போதைய சூழ்நிலையில் இதற்குரிய முறையான சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகளை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது.
இவ்வாறு மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
- HMPV முதன்மையாக இருமல் மற்றும் தும்மலின் போது வெளியேற்றப்படும் சுவாசத் துளிகள் மூலம் பரவுகிறது.
- மூச்சுக்குழாய் அழற்சி, நிமோனியா, ஆஸ்துமா ஏற்படும்
தொற்று பரவல்
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது.
எச்.எம்.பி.வி என அழைக்கப்படும் இந்த வைரசால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலருக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.
இதற்கிடையில் இந்தியாவிலும் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் 8 மாத குழந்தை மற்றும் 3 மாத குழந்தைக்கு மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 2 மாத குழந்தைக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

HMPV
HMPV வைரஸ் 2001 இல் அடையாளம் காணப்பட்டது. இந்த வைரஸ் பொதுவாக மேல் மற்றும் கீழ் சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகிறது.
இந்த தொற்று அறிகுறிகள் சளி அல்லது காய்ச்சலின் அறிகுறிகளை ஒத்திருக்கும். எச்எம்பிவி யாரையும் பாதிக்கலாம் என்றாலும், இது சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. குறைந்தது 60 ஆண்டுகளாக பரவி வரும் இந்த வைரஸ் உலகளவில் சுவாச தொற்றுநோயாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

HMPV க்கும் COVID-19 க்கும் இடையில் சில ஒற்றுமைகளும் சில வேறுபாடுகளும் உள்ளன.
HMPV முதன்மையாக இருமல் மற்றும் தும்மலின் போது வெளியேற்றப்படும் சுவாசத் துளிகள் மூலம் பரவுகிறது. பாதிக்கப்பட்ட நபர்களுடனான நெருங்கிய தொடர்பு அல்லது அசுத்தமான சூழலை வெளிப்படுத்துவதன் மூலமும் பரவுதல் ஏற்படலாம்.
COVID-19 தொற்றுக்கும் இது பொருந்தும். HMPV இன் தொற்று காலம் மூன்று முதல் ஐந்து நாட்கள் என்று சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு இணையதளம் கூறுகிறது. HMPV ஆண்டு முழுவதும் கண்டறியப்பட்டாலும், குளிர்காலம் மற்றும் வசந்த மாதங்களில் இது மிகவும் பொதுவானது.
COVID-19 ஐப் போலவே, HMPV நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பொதுவான அறிகுறிகளாக இருமல், காய்ச்சல், மூக்கு ஒழுகுதல் அல்லது அடைத்தல், தொண்டை வலி, மூச்சுத்திணறல், மூச்சுத் திணறல் வகை (டிஸ்ப்னியா) ஆகியவை அடங்கும். HMPV சில சந்தர்ப்பங்களில் மூச்சுக்குழாய் அழற்சி, நிமோனியா, ஆஸ்துமா மற்றும் காது தொற்று போன்ற சிரமங்களை ஏற்படுத்தலாம்.
இருப்பினும், ICMR இன் முன்னாள் விஞ்ஞானி டாக்டர் ராமன் கங்காகேத்கர், HMPV வைரசால் பரவக்கூடிய தொற்றுநோயைத் தூண்ட முடியாது. ஏனெனில் பெரும்பாலான மக்கள் அதற்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொண்டுள்ளனர். இது பெரும்பாலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிவிக்கிறார்.

சுவாசத் துளி :
ஒரு சுவாச துளி என்பது சுவாசத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஒரு சிறிய நீர்த்துளி ஆகும், இதில் உமிழ்நீர் அல்லது சளி மற்றும் சுவாசக்குழாய் மேற்பரப்பில் இருந்து பெறப்பட்ட பிற பொருட்கள் உள்ளன. சுவாச துளிகள் சுவாசம், பேசுதல், தும்மல், இருமல் அல்லது வாந்தியின் விளைவாக இயற்கையாகவே உற்பத்தி செய்யப்படுகின்றன, எனவே அவை எப்போதும் நம் சுவாசத்தில் இருக்கும்.
- பிளாக் காஃபியில் குளோரோஜெனிக் அமிலம் நிறைந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது.
- காஃபி மற்றும் டீ இரண்டும் உடல் எடையை குறைக்க உதவுகின்றன.
பிளாக் காஃபி மற்றும் தேநீர் இரண்டும் உலகெங்கிலும் மிகவும் பிரபலமான பானங்களில் ஒன்றாக இருந்தாலும், பிளாக் காஃபி மிகவும் ஆற்றல் வாய்ந்த, சுவையான மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் பானமாக பார்க்கப்படுகிறது.
பிளாக் காஃபியில் அதிக காஃபின் உள்ளது, கலோரிகள் இல்லை. மேலும் பல்வேறு ஆரோக்கிய நலன்களுடன் கூடிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது.
தேநீரை விட பிளாக் காஃபி எப்படி சிறந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
தேநீர் மற்றும் காஃபி உலகின் மிகவும் பிரபலமான பானங்களில் ஒன்றாகும். மேலும் கோடிக்கணக்கானோர் காலையில் இதை குடிக்கும் வழக்கம் கொண்டிருக்கிறார்கள். இரண்டும் ஒரே மாதிரியான ஆரோக்கிய நன்மைகளை வழங்கினாலும், அவற்றுக்கு நிறைய வேறுபாடுகள் உள்ளன.
நிபுணர்களின் கூற்றுப்படி, காலை வேளையில் சூடான திரவத்தை பருக விரும்புபவர்களு பிளாக் காஃபி சிறந்த தேர்வாக இருக்கும்.
காய்ச்சும் நேரம் மற்றும் செயலாக்க முறைகளை பொறுத்து காஃபின் உள்ளடக்கம் மாறுபடும் என்றாலும், ஒரு கப் பிளாக் காஃபியில் 95 மில்லிகிராம் காஃபின் உள்ளது. மேலும் ஒரு கப் பிளாக் டீயில் 26-48 மில்லிகிராம் மட்டுமே இருக்கும்.
குறிப்பாக காலை நேரத்திலோ அல்லது அதிக நேரம் வேலை செய்யும் நேரத்திலோ விழிப்புணர்வையும், செறிவையும் மேம்படுத்த விரும்புவோருக்கு காஃபி சிறந்த பானங்களில் ஒன்றாக இருப்பதற்கு இதுதான் காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பிளாக் காஃபி கலோரிகள் இல்லாதது மற்றும் நீங்கள் சர்க்கரை அல்லது பால் சேர்க்கவில்லை என்றால், உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். தேநீரில் கலோரிகள் குறைவாக இருந்தாலும், பல தேநீர் குடிப்பவர்கள் சர்க்கரை, பால் அல்லது தேனைக் கூட சேர்க்கிறார்கள். இது விரைவாக கலோரி நிறைந்த பானமாக மாறும்.
பிளாக் காஃபியில் குளோரோஜெனிக் அமிலம் நிறைந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இது வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் டைப் 2 நீரிழிவு மற்றும் இதய பிரச்சனைகள் போன்ற நாள்பட்ட நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.
நிபுணர்களின் கூற்றுப்படி, தேநீரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக இருந்தாலும், காஃபியில் உள்ள பாலிபினால்கள் பலதரப்பட்டவை. இதனால் பொது நலனுக்கு அதிக விரிவான பாதுகாப்பை வழங்குகிறது.
காஃபியில் உள்ள காஃபின் ஆரோக்கியமான எடையைக் குறைக்க உதவுகிறது. இது கொழுப்பு உயிரணுக்களில் கொழுப்பின் முறிவைத் தூண்டுகிறது. உடலின் வெப்ப உற்பத்தியை அதிகரிக்கிறது. சராசரி எடை, அதிக எடை மற்றும் பருமனான உடல்வாகு கொண்டவர்களில் கொழுப்பு ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்கிறது. டீயில் காஃபின் இருந்தாலும், காஃபியில் உள்ள அளவு தினசரி கலோரி செலவை மிதமாக அதிகரிக்கிறது.
பிளாக் காஃபியில் உள்ள உயர்வான சுவை பெரும்பாலான மக்களால் விரும்பி சுவைக்கப்படுகிறது. உலகெங்கிலும் காஃபியில் பல்வேறு கலவைகள் மற்றும் சுவைகள் உள்ளன. தேநீருக்கு அதன் சொந்த வசீகரம் இருந்தாலும், காஃபி பிரியர்கள் விரும்பும் தீவிர சுவையம்சம் இதில் இல்லை.
காஃபி மற்றும் டீ இரண்டும் உடல் எடையை குறைக்க உதவுகின்றன. பல்வேறு வளர்சிதை மாற்ற செயல்முறைகள் மூலம் நாட்பட்ட நோய்களுக்கு எதிராக பாதுகாக்கின்றன. காஃபியின் அதிக காஃபின் உள்ளடக்கம் சிறந்த ஆற்றலை அளிக்கிறது. அதேசமயம் தேநீரில் உள்ள காஃபின் மற்றும் எல்-தியானின் கலவை படிப்படியாக ஆற்றலை அதிகரிக்கிறது.
இரண்டு பானங்களும் ஆரோக்கியமானவை மற்றும் மிதமான அளவில் பாதுகாப்பானவை.
- ஞாயிறு மதியம், செவ்வாய் காலை என திட்டமிட்டு வேலையை முன்பே பிரித்து வைத்துவிடுங்கள்.
- செய்யும் பணியில் நிறைவை உணரவில்லை என்றால் உங்களுக்கான பணியைத் தேடிக் கண்டுபிடியுங்கள்.
திங்கள் கிழமை வந்துவிட்டாலே பலருக்கும் பதற்றமாகிவிடுகிறது. சொல்லப்போனால் திங்கள் வருகிறதே என்ற கவலை சிலருக்கு ஞாயிறு மாலையே உருவாகிவிடுகிறது. இதனை ஆங்கிலத்தில் மண்டே மார்னிங் புளூ (Monday Morning Blue) என்கிறார்கள். இதனை வெல்வது எப்படி?
1. சீக்கிரமாக உறங்குங்கள்
ஞாயிற்றுக்கிழமை சீக்கிரமாக படுக்கைக்குச் செல்வது அவசியம். இதனால், நல்ல உறக்கம் கிடைக்கும். உடலில் உற்சாகம் பிறக்கும். மனமும் புத்துணர்ச்சியாக இருக்கும்.
2. அதிக வேலைப் பளுவைத் தவிர்த்திடுங்கள்
திங்கள் கிழமைகள் மனச்சோர்வை அளிப்பவையாக இருந்தால், எல்லா வேலையையும் அன்றே செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள். ஞாயிறு மதியம், செவ்வாய் காலை என திட்டமிட்டு வேலையை முன்பே பிரித்து வைத்துவிடுங்கள்.

3. உடற்பயிற்சி அவசியம்!
ஏதேனும் ஓர் உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். நடைப்பயிற்சி, சைக்கிளிங், நீச்சல், ஜாகிங் போன்ற கார்டியோ பயிற்சிகள், யோகா போன்றவை உடலையும் மனதையும் உற்சாகமாக வைத்திருக்க உதவும்.
4. பொழுதுபோக்கு தேவை
உங்களுக்கு என ஏதேனும் ஒரு ஆரோக்கியமான பொழுது போக்கை வைத்திருங்கள். புத்தகம் வாசிப்பது, இசை கேட்பது, இசைக் கருவிகள் இசைப்பது போன்றவை உங்களை மன அழுத்தத்திலிருந்து விடுபடச் செய்யும்.
5. பணியை நேசியுங்கள்
உங்கள் வேலையை நேசியுங்கள். உங்கள் பணியின் இயல்பை புரிந்துகொள்ளுங்கள். எப்போதும் மகிழ்ச்சி என்பது நமது தேர்வுதான். அது நமக்கு இன்னொருவர் தருவதல்ல. மனதைக் கரைத்து பணியாற்றும்போது உங்களுக்கு சுமை தெரியாது. செய்யும் பணியில் நிறைவை உணரவில்லை என்றால் உங்களுக்கான பணியைத் தேடிக் கண்டுபிடியுங்கள்.
- சுகாதாரமற்ற உணவை சாப்பிடுவதால் அதிக அளவில் ஃபுட் பாய்சன் ஏற்படுகிறது.
- ஃபுட் பாய்சனின் முதல் நிலை வயிற்றுவலி, வயிறு மந்தம் ஆகியவை.
உணவை உணவாக சாப்பிட்டாலும் சரி, மருந்தாக பயன்படுத்தினாலும் சரி, முதலில் நாம் கவனிக்க வேண்டிய்து அளவு. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது பழமொழி.
தினசரி நாம் சாப்பிடும் சாதாரண உணவுகளை நாம் அளவோடு தான் சாப்பிட வேண்டும். சரி... அளவு என்பதை யார் நிர்ணயிப்பது?
ஒவ்வொரு நாளும் ஒரு சராசரி உடலுக்கு என்னென்ன சத்துக்கள் தேவைப்படுகின்றன என்பதையும், அந்த சத்துக்கள் எந்த அளவு தேவை என்பதையும் சராசரி கணக்கு மூலம் அறிவிக்கிறது.

உதாரணமாக இன்று காலை நாம் சாப்பிட்ட அளவும், மதியம் சாப்பிடுகிற அளவும் ஒன்றாக இருக்குமா, அதாவது இன்று காலை இரண்டு இட்லி சாப்பிட்டால், மறுநாள் காலையும் அதே அளவு தான் சாப்பிட வேண்டும்.
சரி சாப்பாடு போதும் என்பதை எப்படி தெரிந்துகொள்வது? புரிந்துகொள்ள பல வழிகள் இருக்கின்றன. ஒன்று பசி அடங்கிவிடுவது, இன்னொன்று சாப்பிடும் போது ருசியும் மறைந்து போகும். இந்த அடையாளங்கள் தோன்றினால் வயிறு நிறைந்துவிட்டது என்று அர்த்தம்.
நம் உடல் தன்னுடைய தேவையையும், செரிக்கும் தன்மையையும் பொறுத்துதான் நம்முடைய பசியையும், அதன் அளவையும் தீர்மானிக்கிறது. அந்த அளவைப் பின்பற்றினால் வயிறு கனமான உணர்வு ஏற்படாது. சாப்பிட்டபின் களைப்பு ஏற்படாது. முன்னிலும் சுறுசுறுப்பாக நம் வேலைகளைத் தொடர முடியும்.

ஃபுட் பாய்சன் ஏற்பட காரணம்:
நவீனயுகத்தில் எதையும் அவசரம் அவசரமாக விழுங்கிவிட்டு ஓடுவது, நேரமின்மையைக் காரணம் காட்டி, அன்று சமைத்ததை ஆறு நாட்களுக்குக்கூட பதப்படுத்தி வைத்து சாப்பிடுவது, இவை எல்லாமும் தான் ஃபுட் பாய்சன் ஏற்படக் காரணங்கள். ஃபுட் பாய்சனை நாம் சாதாரணமாக விட்டால் அது உயிருக்கே ஆபத்தாகிவிடும்.
சமைக்கும் காய்கறிகள் சரியாகக் கழுவப்படாமல் இருத்தல், சமைத்த உணவை முறையாகப் பதப்படுத்தாமல் இருத்தல், சாப்பிடும் தட்டை சரியாக கழுவாமல் இருத்தல் போன்ற காரணங்களால் ஃபுட் பாய்சன் ஏற்படும். குறிப்பாக, வெளியிடங்களில் சுகாதாரமற்ற உணவைச் சாப்பிடுவதால் அதிக அளவில் ஃபுட் பாய்சன் ஏற்படுகிறது.

அறிகுறிகள்:
ஃபுட் பாய்சனின் முதல் நிலை வயிற்றுவலி, வயிறு மந்தம் ஆகியவை. அடுத்த நிலை, குமட்டல். அத்துடன், தலைவலி, ஜுரம் வருவது போல இருக்கும். கடைசி நிலை தீவிரமான வயிற்றுப்போக்கு, வாந்தி. வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும் உடனே நிறுத்தக்கூடாது.
படிப்படியாகத்தான் நிறுத்த வேண்டும். வாந்தி, வயிற்றுப்போக்கால், நமது உடலில் தேவையில்லாத உணவுப் பொருட்கள் வெளியேற்றப்படுகிறது; அது நல்ல விஷயம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நமது உடலில் இன்ஃபெக்ஷன் ஏற்பட்டு அதனை வெளியேற்றத்தான் இப்படி நடக்கிறது.

ஃபுட்பாய்சனை தடுக்கும் வழிமுறைகள்:
* சமைப்பவர், சாப்பிடுபவர் கை சுத்தமாக இருக்க வேண்டும். சமையலறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
* சமைக்கப் பயன்படுத்தும், கத்தி, பலகை ஆகியவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பழங்கள், கீரைகள், காய்கறிகள் உபயோகிக்கும் முன் நன்கு கழுவிவிட்டுப் பயன்படுத்துங்கள்.
* ஃபிரிட்ஜில் வைத்த உணவை எடுத்துப் பயன்படுத்தும் போது, அதன் ஜில்லென்ற தன்மை முற்றிலும் தீரும்வரை வெளியில் வைக்க வேண்டும்.
* இரண்டு மூன்று நாட்களுக்குப் பயன்படுத்த விரும்புபவர்கள், தனித்தனி பாத்திரங்களில் உணவு பொருளை ஃபிரிட்ஜில் வைப்பது நல்லது.

* உணவில் துர்நாற்றம் அடித்தாலோ பூஞ்சை இருப்பது தெரிந்தாலோ அதை எந்தக் காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது.
* செல்லப் பிராணிகளிடம் இருந்து உணவுப் பொருட்களை தள்ளியே வைத்திருங்கள்.
- வாக்கிங் நிமோனியா என்பது நுரையீரல் தொற்று ஆகும்.
- மற்றொருவருக்கு தும்மல், இருமல் மூலம் வேகமாக பரவும்.
'வாக்கிங் நிமோனியா' என்பது தற்போது பரவலாக மனிதர்களை பாதிக்கிறது. வழக்கமாக நுரையீரலை பாதிக்கும் நிமோனியா தொற்றின் தீவிர அறிகுறிகள் இல்லாத இலகுவான வடிவமே இந்த 'வாக்கிங் நிமோனியா' ஆகும். இது நுரையீரல் தொற்று ஆகும்.
இது பொதுவாக 5 முதல் 15 வயதுடைய குழந்தைகள் மற்றும் 40 வயதுக்கு உட்பட்ட பெரியவர்களை தாக்குகிறது. இதன் அறிகுறிகள் பொதுவாக மிதமான அளவில்தான் இருக்கும். எக்ஸ்ரே ஆய்வில் நுரையீரலில் திட்டுக்கள் போன்று காண்பிக்கும்.

இது மைக்கோப்ளாஸ்மா நிமோனியா எனப்படும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள இடங்களில் இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தும்மல், இருமல் மூலம் வேகமாக பரவும்.
பொதுவாக, நாள்பட்ட நுரையீரல் பாதிப்பு, பலவீனமான நோய் எதிர்ப்பு, புகைப்பழக்கம் உள்ளவர்களை இது அதிக அளவில் பாதிக்கிறது. நிமோனியா 10 நாட்கள் வரை தொற்று நோயாக இருக்கலாம்.

இந்த பாக்டீரியா உடலில் நுழைந்து மைக்கோபிளாஸ்மாவை வெளிப்படுத்திய 15-25 நாட்களுக்குப் பிறகு தொற்று பாதிப்பு அறிகுறிகள் வெளிப்படும். வாக்கிங் நிமோனியா பாதிப்பு ஒருவருக்கு இருந்தால் ஆழ்ந்த மூச்சு எடுக்கும்போது நெஞ்சு வலி, இருமல், காய்ச்சல் மற்றும் குளிர் போன்ற அறிகுறிகள், தொண்டை வலி, தலைவலி, சோர்வு, சிலருக்கு காது தொற்று, ரத்த சோகை அல்லது தோல் வெடிப்பு போன்றவையும் இருக்கலாம்.

குழந்தைகளை வாக்கிங் நிமோனியா பாதித்தால் உடல் சோர்வு, தலைவலி, காய்ச்சல், உலர் இருமல் காணப்படும். இதற்கு உரிய சிகிச்சை பெற வேண்டும் என்கிறார்கள், மருத்துவர்கள்.
- மூளைக்கு வலி என்ற உணர்வு கிடையாது.
- உடலின் மற்ற பகுதிகள் தூங்கினாலும் மூளை மட்டும் தூங்காது.
* சில மணி நேரங்கள் வேலை செய்தாலே நமது உடல் களைத்து விடும். ஓய்வு தேவைப்படும். ஆனால் உடலின் மற்ற பகுதிகள் தூங்கினாலும் மூளை மட்டும் தூங்காது. தூங்கும்போதும் ஒருசில செயல்பாடுகள், மூளையில் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.
* புதிய நினைவுகளை சேமிக்க, பழைய நினைவுகளை மூளை தானாகவே அழித்துக்கொள்ளும். இதற்காக நாம் அதிகம் நினைக்காத, நமக்கு மேற்கொண்டு தேவைப்படாத தகவல்களை மூளையே தேர்ந்தெடுக்கும்.

* மூளைக்கு வலி என்ற உணர்வு கிடையாது. உடலின் பிற பகுதிகளில் வலி ஏற்பட்டால் எப்படி செயலாற்ற வேண்டும் என்பதுதான் மூளைக்குத் தெரியும். இதைச் சுற்றியுள்ள ரத்தக்குழாய்கள், நரம்புகள், திசுக்களில் ஏற்படும் வலி மூளையில் ஏற்படும் வலி அல்ல.
* மொத்த உடல் எடையில் மூளையின் அளவு 2 சதவீதம்தான். ஆனால் உடல் சேமித்து வைத்திருக்கும் ஆற்றலில் 20 சதவீதத்தை மூளைதான் பயன்படுத்தும். உடல் பாகங்களில் மிக அதிக ஆற்றலைப் பயன்படுத்துவது இதுதான். இதன் செல்கள் சிறப்பாகச் செயல்பட மூளை மிகவும் முக்கியமானது. அதேபோல் இதன் எடையில் சராசரியாக 75 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது.
* நாம் விழித்திருக்கும்போது மூளையில் உற்பத்தியாகும் மின்சாரத்தைக் கொண்டு குறைந்த வாட் விளக்கு எரிய வைக்க முடியும்.
* நமது உடல் உறுப்புகளை வலுவாக்க பயிற்சிகள் செய்வதுபோல் மூளையை வலுவாக்கவும் சில பயிற்சிகள் உண்டு. இதற்காக சிறப்பாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. பிடித்த பாட்டுக்கு நடனமாடுதல், நன்றாக உறங்குதல், சரிவிகித உணவு உண்ணுதல், புதிய இடங்களுக்குச் செல்லுதல், பிடித்த விளையாட்டுகளை விளையாடுதல் ஆகியவையே மூளைக்கான பயிற்சிகளாகும். இது மூளையைப் புத்துணர்வாக்கும்.
* 90 நிமிடங்களுக்கு உடல் வியர்த்தால் மூளை தற்காலிகமாகச் சுருங்கி விடும். காய்ச்சல் வந்தால் நமது உடல் அதிகமாக வியர்க்கும். அப்போது இது தற்காலிகமாக சுருங்குவதால்தான் தலைவலி ஏற்படுகிறது.
* ஒரு நொடியில் மூளையில் நடக்கும் வேதிமாற்றங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கு மேல். அதேபோல் எல்லா மூளை செல்களும் ஒரே மாதிரியானவை அல்ல. பத்தாயிரம் வகையான நியூரான்கள் இதில் உள்ளன.
* ஒரு நாளைக்கு நமது மூளையில் தோன்றும் எண்ணங்களின் எண்ணிக்கை 50 ஆயிரம். ஆனால் இவற்றில் 70 சதவீதம் எதிர்மறையான சிந்தனைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

* நமது மூளையின் மொத்த எடையில் 60 சதவீதம் கொழுப்பால் ஆனது.
* மூளைக்கு வலி தெரியாது. ஏனென்றால் வலியை உணரும் வலி வாங்கிகள் இல்லை. நமது மண்டை ஓட்டுக்குள் மூளை நகரும்போதும், உந்தும்போதும் வலியை உணராது.
* நாம் விழித்திருக்கும்போதே நமது மூளையில்அறுவைச் சிகிச்சை செய்ய முடியும். வலி வாங்கிகள் இல்லாததால் இது சாத்தியமாகிறது. மயக்கநிலையில் மூளை அறுவைச் சிகிச்சை செய்ய டாக்டர்கள் விரும்ப மாட்டார்கள். ஏனென்றால், நமது மூளையின் செயல்பாடுகளை உணர்வுடன் இருக்கும்போதுதான் டாக்டர்களால் அறியமுடியும்.
* 25 வாட்ஸ் அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன்கொண்டது மூளை. அதாவது ஒரு மின்விளக்கை எரியவைக்கும் அளவுக்கான மின்சாரத்தை நமது மூளையே தரமுடியும்.
* எந்த ஒரு விஷயத்தையும் சரியாக பார்க்க மூளை உதவுகிறது. நமது கண்கள் நிஜத்தில் ஒரு பொருளை தலைகீழாகத்தான் பதிவுசெய்கின்றன. ஆனால், மூளைதான் அதை சீராக்கி நமக்கு உதவுகிறது.
* மூளை பெரிதாக இருந்தால் அறிவும் அதிகமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அது உண்மையில்லை. மூளையின் அளவுக்கும் அறிவுத்திறனுக்கும் சம்பந்தம் இருப்பதாக எந்த ஆய்வும் நிரூபிக்கவில்லை.

* மூளையில் உள்ள நரம்பு இழைகளின் நீளம் ஒரு லட்சத்து 61 ஆயிரம் கிலோமீட்டர் என்கிறார்கள். இந்த நரம்பு இழைகள் உந்துவிசைகளை நமது உடலின் அனைத்து பாகங்களிலும் உள்ள அணுக்களுக்கு அனுப்ப உதவுகின்றன.
* 20 வயதுகளை அடையும்போது உடலின் பெரும்பகுதியான உறுப்புகள் வளர்ச்சியை நிறுத்தி விடுகின்றன. ஆனால் மூளை வித்தியாசமானது. நமது 40 வயதாகும்வரை மூளையின் வளர்ச்சி நிற்காது. புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள விரும்பினால் நமது மூளை அதை எப்போதும் ஏற்றுக் கொள்ளும்.
* வெண்ணெய் போன்ற கொழகொழப்பான தன்மையுடையதுதான் நமது மூளை என்கிறார்கள்.
* நாம் எந்நேரமும் சிந்தித்துக் கொண்டே இருக்கிறோம். ஒரு நாளில் 70 ஆயிரத்துக்கும் அதிகமான விஷயங்களை சிந்திக்கிறோம்.

* நீங்கள் வேகமாக சிந்திப்பதாக எப்போதேனும் உணர்ந்திருக்கிறீர்களா? ஒரே நேரத்தில் நீங்கள் இரண்டு விஷயங்களை சிந்திக்க முடியும். ஒரு தகவல் நமது மூளைக்குள் மணிக்கு 418 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
* நமது மூளை எப்போதும் ஒய்வெடுக்காது. நாம் விழித்திருக்கும்போது செயல்படுவதைக் காட்டிலும் உறங்கும்போது கூடுதலாக செயல்படும்.
* மூளையின் அடர்த்திக்கும் அது உட்கொள்ளும் சக்தியின் அளவுக்கும் தொடர்பே இருக்காது. நமது உடலின் மொத்த எடையில் மூளை 2 சதவீதம்தான் இருக்கும். ஆனால், நமது மொத்த சக்தியில் 25 சதவீதத்தை அது பயன்படுத்துகிறது.
* மூளை தனித்தன்மை வாய்ந்தது. அது நமக்குள் தந்திர விளையாட்டுகளை விளையாடுகிறது. மேலே உள்ள படத்தில் உள்ள ஏ மற்றும் பி கட்டங்கள் வெவ்வேறு வண்ணங்கள் என்று நினைப்பீர்கள். உண்மையில் அவை இரண்டும் ஒரே வண்ணம்தான்.
* நமது மூளையின் பாதி அளவு இருந்தால் நாம் உயிர்வாழப் போதுமானது. நமது மூளையின் ஒரு பகுதி சேதம் அடைந்தாலும், செயல்படும் பகுதியே, சேதமடைந்த பகுதி என்ன செய்ததோ அதை கற்றுக்கொண்டு செயல்பட தொடங்கிவிடும்.
* மூளையின் செயல்பாடு வினாடிக்கு 1 லட்சம் ரசாயன மாற்றங்களை நிகழ்த்துகிறது. அதாவது, பொருட்களைப் பற்றி சிந்தித்துக்கொண்டு, பொருட்களை நினைவுபடுத்திக்கொண்டு, கம்ப்யூட்டரில் டைப்பிங்கும் செய்ய முடியும்.
* நீங்கள் நம்பினால் நம்புங்கள்… நமது மூளையின் அணுக்களின் எண்ணிக்கை இரண்டு வயதில் எத்தனை இருந்ததோ அதே அளவுதான் கடைசிவரை இருக்கும். ஒருவேளை குறையலாம் அல்லது அதே அளவுக்கு தொடரலாம்.
* கர்ப்பகாலத்தில் பெண்ணின் மூளை வித்தியாசமாக இருக்கும். அந்த பெண்ணின் மூளை அவள் குழந்தையை பிரசவித்து ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் இயல்பான அளவுக்கு திரும்பும்.
* நமது வாழ்நாளில் நமது மூளை சேமிக்கும் தகவல்கள் எவ்வளவு தெரியுமா? ஆயிரம் லட்சம் கோடி துணுக்குகள் என்கிறார்கள். ஆங்கிலத்தில் குவாட்ரில்லியன் என்றால் ஒன்றுக்கு பின்னால் 15 ஜீரோக்கள்தானே. போட்டுப் பாருங்கள். இதுவும் மூளையின் விளையாட்டுதானே…
* நமது மூளையின் உருவம் வளராது. நாம் பிறக்கும்போது என்ன அளவில் இருந்ததோ அதே அளவில்தான் எப்போதும் இருக்கும். குழந்தை பிறக்கும்போது பார்த்தால் அதன் உடலைக் காட்டிலும் தலை பெரிதாக இருப்பதை காண முடியும்.
- ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
- அறுவை மற்றும் ஸ்டெம் செல் சிகிச்சை மிகுந்த பலன் அளிக்கும்.
நுரையீரல் உயர் ரத்த அழுத்தம் என்பது நுரையீரலில் உள்ள ரத்தக் குழாய்களில் ரத்த அழுத்தம் இயல்பை விட அதிகமாக இருக்கும் ஒரு நிலையாகும்.
நுரையீரலில் உள்ள ரத்தக்குழாய்கள் தடிமனாகி, அடைப்பு ஏற்பட்டு, அதன் பாதை குறுகுவதால் ரத்த அழுத்தம் அதிகமாகிறது. இது ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
நுரையீரலில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு கீழ்க்கண்டவை முக்கிய காரணங்களாகும்:-

இதய வால்வுகளின் (தடுக்கிதழ்) குறைபாடுகள், இடது பக்க ஏட்ரியம் மற்றும் வெண்ட்டிரிக்கிள் சார்ந்த இதய நோய்கள், காரணம் அறியப்படாமல் ஏற்படும் தான்தோன்றி நோய்கள் (முதல் நிலை நுரையீரல் ரத்த அழுத்தம்), மரபணு காரணங்கள், இதய செயலிழப்பு, பிறவி இதய குறைபாடுகள், நாள்பட்ட திரோம்போஎம்போலிக் நுரையீரல் உயர் ரத்த அழுத்தம், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (சி.ஓ.பி.டி),
தொற்று பாதிப்புகள் (ஹெச்.ஐ.வி), மருந்துகளின் பக்க விளைவுகள் (பசியை குறைக்க பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் ஆம்பெடமைன்கள்), நுரையீரலில் ரத்த கட்டிகள் ஏற்பட்டு குருதியோட்டத்தை தடுக்கும் தக்கையடைப்பு நோய், கல்லீரலில் ஏற்படும் சிரோசிஸ் போன்ற பிரச்சனைகள், ஆட்டோ இம்யூன் நோய்கள் (தன்னுடல் தாக்குநோய்), உடல் பருமன், புகைப்பிடித்தல் பழக்கம், சர்க்கரை நோய்.

ஆரம்ப நிலையிலேயே நுரையீரல் உயர் ரத்த அழுத்தத்தை கண்டறிந்து மருத்துவரை கலந்தாலோசித்து மருந்துகளை உட்கொள்தல் அவசியம். இது பலன் தராவிட்டால், ஏட்ரியல் செப்டோஸ்டமி, நுரையீரல் மாற்று அறுவை மற்றும் ஸ்டெம் செல் சிகிச்சை மிகுந்த பலன் அளிக்கும்.
நுரையீரல் ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்க ஆரோக்கியமான உணவை உட்கொள்தல், தினமும் உடற்பயிற்சி செய்தல், உயரமான இடங்களைத் தவிர்த்தல், ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்தல், புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டொழித்தல் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களை பின்பற்ற வேண்டும்.
- மது ஒரு வெப்பமயமாதல் விளைவை கொண்டிருக்கிறது.
- குளிர்காலத்தில் மது அருந்துவது உங்களை அதிக ஆபத்தில் ஆழ்த்தலாம்.
மார்கழி மாதம் என்பதால் குளிர் வாட்டி வதைக்கிறது. மது பிரியர்கள் தினமும் இரவு நேரங்களில் ஒரு கையில் ரம் அல்லது விஸ்கி மற்றும் சிக்கன் வகைகளை ருசிக்கின்றனர்.
ஒரு பெக் ரம் உடலை சூடேற்றி குளிர்ச்சியை தடுக்கிறது என்பது குடிமகன்களின் நீண்டகால நம்பிக்கையாக உள்ளது. மதுவால் உண்மையில் உடலை வெப்பமாக்க முடியுமா? குடிப்பதற்கு காரணம் தேடி இது போன்ற கட்டுக்கதைகளை கூறப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
இந்த குளிர்கால கேள்விக்கு ஆராய்ச்சியாளர்கள் பதில் கூறியுள்ளனர்.

மது ஒரு வெப்பமயமாதல் விளைவை கொண்டிருக்கிறது. ஆனால் உடலில் முற்றிலும் மதுவால் சூடேற்ற முடியாது. மது குடிப்பதால் உங்கள் தோலுக்கு அருகில் உள்ள ரத்த நாளங்கள் திறக்கப்படுகின்றன. அவற்றில் அதிக ரத்தம் பாய்கிறது.
மற்றும் தோலில் சூடான உணர்வை உருவாக்குகிறது. இந்த சூடான உணர்வு என்பது உடலை வெப்பப்படுத்தியது என்பதற்கான அர்த்தம் அல்ல. முக்கிய உறுப்புகளில் இருந்து ரத்தம் திசை திருப்பப்படுவதால் உடலில் மைய வெப்பநிலை குறையலாம்.
இதனை சரிபார்க்கா விட்டால் தாழ்வான வெப்ப நிலைக்கு சென்று விடும். கடுமையான குளிர்காலங்களில் இது ஆபத்து. மது குளிர்ந்த காற்றின் வெப்பநிலையை பற்றிய உணர்வை உடலில் குறைக்கிறது.

குளிர்காலத்தில் மது அருந்துவது உங்களை அதிக ஆபத்தில் ஆழ்த்தலாம். மதுபானம் உங்கள் முடிவெடுக்கும் திறனை குறைப்பதாக ஏற்கனவே அறியப்பட்டிருக்கிறது.
மது குடித்துவிட்டு குளிர்கால ஆடைகளை அணியா விட்டால் உடல் வெப்ப நிலையில் வியத்தகு வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.






