என் மலர்
குழந்தை பராமரிப்பு
படிப்பு தொடர்பான திறன்களை மட்டும் குழந்தைகளிடம் பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுபல நேரங்களில் பெற்றோருக்கு குழந்தைகள் மீது நம்பகமற்ற மனநிலையை உருவாக்கி விடுகிறது.
குழந்தைகள் இயல்பாகவே சுதந்திரமான மனநிலையும், சிறந்த செயல்பாடுகளையும் உடையவர்கள். ஆனால் அந்த உணர்வுகள் அடிக்கடி தடுத்தலுக்கும், கட்டுப்படுத்துதலுக்கும் உட்படுகிறது. எது சரி, எது தவறு என்ற வரையறைகளை மிகச் சரியாக கடைப்பிடிப்பது போல் பெரியவர்கள், குழந்தைகள் மீது திணிக்கிறார்கள்.
அது குழந்தைகளிடம் எதிர்விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடும். யாரும் இல்லாத இடத்தில் குழந்தைகள் தனியாகவே விளையாடுவார்கள். அப்போது தானாகவே விதிகளை உருவாக்கி கொண்டு தனியாக பேசிக்கொண்டு உற்சாகமாக விளையாடுவார்கள். அந்த விளையாட்டில் ஒரு அதீத தன்மை இருக்கும். அதுவே குழந்தைகள் தன்னை மறந்த உயர்நிலை செயல்பாடாக இருக்கும். அதில் குழந்தைகளின் ஆற்றல், திறன், கற்பனை, மனநிலை ஆகியவற்றை காணமுடியும்.
இதுமட்டுமின்றி குழந்தைகள், பிற குழந்தைகளுடன் விளையாடும்போது தங்களின் உண்மையான இயல்புகளை, ஆற்றல்களை வெளிப்படுத்துவார்கள். அதை கண்டுகொள்ள பெற்றோர்கள் நேரம் ஒதுக்க வேண்டும். குழந்தைகளின் திறனை மேம்படுத்த வேண்டும். தனித்திறமைகள் தான் ஒருவனை உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்கிறது. ஆனால் அதை மழுங்கடிக்கும் வேலைகள் குழந்தைகளிடம் நடந்து விடக்கூடாது.
படிப்பு தொடர்பான திறன்களை மட்டும் குழந்தைகளிடம் பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுபல நேரங்களில் பெற்றோருக்கு குழந்தைகள் மீது நம்பகமற்ற மனநிலையை உருவாக்கி விடுகிறது. கல்வியில் ஆர்வம் காட்டாத குழந்தைகளை கண்டிக்கிறோம் என்று அவர்களின் திறன்களை முடக்கியோ, ஊனப்படுத்தியோ விடக்கூடாது. மேலும் அவர்களுக்கு இயல்பாக வழங்கும் சலுகைகளைகூட தடுத்து விடக்கூடாது.
குழந்தைகள் எப்போதுமே மனரீதியாக உற்சாகமாக இருக்க வேண்டியவர்கள். சுமையோ, பாரமோ, மனஉளைச்சலோ அவர்களின் இயல்பை பாதிக்கச்செய்து விடும். புதிய எண்ணங்களையோ, செயல்களையோ குழந்தைகள் வெளிப்படுத்துவது அடிக்கடி நடக்கும். அதை ஊக்குவிக்க வேண்டும். வாய்ப்பு கிடைக்கும்போது குழந்தைகளுடன் நாம் விளையாட வேண்டும். குழந்தைகளை போட்டியில் வெற்றி பெற செய்ய வேண்டும். அவர்களுக்கு பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்த வேண்டும். தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும். பெரியவர்களை மதிக்கவும், சிறியவர்களோடு இணங்கியும் செயல்பட வேண்டியதன் நுட்பத்தை சொல்லி கொடுக்க வேண்டும். நண்பர்களை தேர்வு செய்வதில் குழந்தைகளின் மனநிலை சுவாரசியமானது. அதில் தடையோ, மறுப்போ தெரிவிக்கக்கூடாது. பேதமற்ற மனநிலை ஏற்படுத்த வேண்டும்.
குழந்தைகளுக்கு உரிய வழிகாட்டுதலையும், கண்காணிப்பையும் எந்த காலத்திலும் விட்டுவிடக் கூடாது. அந்த உரிமை என்பது குழந்தைகளின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் ஒத்த திசையில் பயணிப்பதாக இருக்க வேண்டும். எதிர்மறையாக இருந்து விடக்கூடாது என்பது மிக முக்கியம்.
நெருக்கடி, சவால்களை தனியாக எதிர்கொள்ள குழந்தைகள் தயாராக வேண்டும். நிச்சயம் வெற்றி பெற்று வருவார்கள் என்று தைரியம் கொடுங்கள். தன்னம்பிக்கையோடு இருக்க பயிற்சி அளியுங்கள். தோல்வி என்பதை வெற்றியாக மாற்ற சில அடி தூரம் பயணிக்க வேண்டும். அதற்கான உறுதியை மட்டும் கைவிடாது இருந்தால், குழந்தைகள் எதிலும் வெற்றி வாகை சூட தகுதி வாய்ந்தவர்களாக மாறுவார்கள்.
அது குழந்தைகளிடம் எதிர்விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடும். யாரும் இல்லாத இடத்தில் குழந்தைகள் தனியாகவே விளையாடுவார்கள். அப்போது தானாகவே விதிகளை உருவாக்கி கொண்டு தனியாக பேசிக்கொண்டு உற்சாகமாக விளையாடுவார்கள். அந்த விளையாட்டில் ஒரு அதீத தன்மை இருக்கும். அதுவே குழந்தைகள் தன்னை மறந்த உயர்நிலை செயல்பாடாக இருக்கும். அதில் குழந்தைகளின் ஆற்றல், திறன், கற்பனை, மனநிலை ஆகியவற்றை காணமுடியும்.
இதுமட்டுமின்றி குழந்தைகள், பிற குழந்தைகளுடன் விளையாடும்போது தங்களின் உண்மையான இயல்புகளை, ஆற்றல்களை வெளிப்படுத்துவார்கள். அதை கண்டுகொள்ள பெற்றோர்கள் நேரம் ஒதுக்க வேண்டும். குழந்தைகளின் திறனை மேம்படுத்த வேண்டும். தனித்திறமைகள் தான் ஒருவனை உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்கிறது. ஆனால் அதை மழுங்கடிக்கும் வேலைகள் குழந்தைகளிடம் நடந்து விடக்கூடாது.
படிப்பு தொடர்பான திறன்களை மட்டும் குழந்தைகளிடம் பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுபல நேரங்களில் பெற்றோருக்கு குழந்தைகள் மீது நம்பகமற்ற மனநிலையை உருவாக்கி விடுகிறது. கல்வியில் ஆர்வம் காட்டாத குழந்தைகளை கண்டிக்கிறோம் என்று அவர்களின் திறன்களை முடக்கியோ, ஊனப்படுத்தியோ விடக்கூடாது. மேலும் அவர்களுக்கு இயல்பாக வழங்கும் சலுகைகளைகூட தடுத்து விடக்கூடாது.
குழந்தைகள் எப்போதுமே மனரீதியாக உற்சாகமாக இருக்க வேண்டியவர்கள். சுமையோ, பாரமோ, மனஉளைச்சலோ அவர்களின் இயல்பை பாதிக்கச்செய்து விடும். புதிய எண்ணங்களையோ, செயல்களையோ குழந்தைகள் வெளிப்படுத்துவது அடிக்கடி நடக்கும். அதை ஊக்குவிக்க வேண்டும். வாய்ப்பு கிடைக்கும்போது குழந்தைகளுடன் நாம் விளையாட வேண்டும். குழந்தைகளை போட்டியில் வெற்றி பெற செய்ய வேண்டும். அவர்களுக்கு பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்த வேண்டும். தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும். பெரியவர்களை மதிக்கவும், சிறியவர்களோடு இணங்கியும் செயல்பட வேண்டியதன் நுட்பத்தை சொல்லி கொடுக்க வேண்டும். நண்பர்களை தேர்வு செய்வதில் குழந்தைகளின் மனநிலை சுவாரசியமானது. அதில் தடையோ, மறுப்போ தெரிவிக்கக்கூடாது. பேதமற்ற மனநிலை ஏற்படுத்த வேண்டும்.
குழந்தைகளுக்கு உரிய வழிகாட்டுதலையும், கண்காணிப்பையும் எந்த காலத்திலும் விட்டுவிடக் கூடாது. அந்த உரிமை என்பது குழந்தைகளின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் ஒத்த திசையில் பயணிப்பதாக இருக்க வேண்டும். எதிர்மறையாக இருந்து விடக்கூடாது என்பது மிக முக்கியம்.
நெருக்கடி, சவால்களை தனியாக எதிர்கொள்ள குழந்தைகள் தயாராக வேண்டும். நிச்சயம் வெற்றி பெற்று வருவார்கள் என்று தைரியம் கொடுங்கள். தன்னம்பிக்கையோடு இருக்க பயிற்சி அளியுங்கள். தோல்வி என்பதை வெற்றியாக மாற்ற சில அடி தூரம் பயணிக்க வேண்டும். அதற்கான உறுதியை மட்டும் கைவிடாது இருந்தால், குழந்தைகள் எதிலும் வெற்றி வாகை சூட தகுதி வாய்ந்தவர்களாக மாறுவார்கள்.
இந்த ஆண்டிலிருந்து தேர்வு எழுதும் நேரமும், கூடுதலாக 20 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3 மணிநேரம் 20 நிமிடங்கள் நடக்கும் நீட் தேர்வை, தமிழ் வழியிலும் எழுதலாம்.
‘நீட் விலக்கு மசோதா’ விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் இதே வேளையில்தான், ‘நீட்’ தேர்விற்கான அறிவிப்புகளும் வெளியாகி இருக்கிறது. இந்த தேர்விற்காக தனியார் பள்ளி மாணவர்கள் சிறப்பாக தயாராகி வரும் நிலையில், தஞ்சாவூரை சேர்ந்த ஸ்ரீராம், அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சிகளை வழங்கி வருகிறார். குறிப்பாக, தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தின் கீழ் இயங்கும் 6 அரசுப்பள்ளிகளில் நீட் தேர்விற்கு தயாராகும் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார். இவர், நீட் தேர்வு பற்றியும், அதில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் பற்றியும், நீட் தேர்விற்கு தயாராகும் விதம் குறித்தும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
* அரசு பள்ளி மாணவர்களிடம் நீட் தேர்வு குறித்த புரிதல் எப்படி இருக்கிறது?
நீட் தேர்வை கடினமான தேர்வாக கருதுகிறார்கள். ‘தேர்வு எழுத வேண்டும்’ என்ற முடிவிற்கு வரும் முன்பே ‘இதில் வெற்றி பெறுவது கடினம்’ என்ற முடிவிற்கு வந்து விடுகிறார்கள். உண்மையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு ரொம்ப சுலபமானதுதான்.
* எல்லோருக்கும் பொதுவான நீட் தேர்வு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் எப்படி சுலபமானதாக மாறும்?
பாடத்திட்டம் எல்லோருக்கும் பொதுவானதுதான். ஆனால் தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான உள் இட ஒதுக்கீடு 7.5 சதவீதமாக இருக்கிறது. இந்த ஒதுக்கீட்டின் மூலம் பெறப்படும் 537 சீட்டுகளும், முழுக்க முழுக்க அரசுப்பள்ளி மாணவர்களுக்கானது. அதில் அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டுமே சேர முடியும்.
குறிப்பாக 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப்பள்ளியிலேயே படித்து முடித்த மாணவர்களே இந்த இட ஒதுக்கீட்டிற்கு தகுதியானவர்கள் என்ற அடிப்படையில், போட்டி வட்டம் சுருங்கி விடுகிறது. தன்னம்பிக்கை கூடிவிடுகிறது.
* நீட் தேர்விற்கு அரசுப்பள்ளி மாணவர்கள் எப்படி தயாராக வேண்டும்?
மனப்பாடம் என்பதை தவிர்த்துவிட்டு, 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பாடங்களை புரிந்து படித்தாலே போதும், சிறப்பாக தயாராகி விடலாம். இந்த பார்முலா உங்களது பிளஸ்-2 பொது தேர்வு மதிப்பெண்ணையும் அதிகரிக்கும். நீட் தேர்வில் வெற்றிப்பெறுவதற்கும் வழிகாட்டும்.
* குறிப்பாக எந்தெந்த பாடத்திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும்?
11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பின் இயற்பியல், வேதியியல், உயிரியல் இந்த மூன்று பாடத்திட்டங்களில் இருந்துதான், ‘கொள்குறி’ முறையில் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். இதில் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பின் உயிரியல் பாடத்தில் இருந்து, 360 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம் பெறும். அதனால் உயிரியல் பாடத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மேலும் 12-ம் வகுப்பின் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்திட்டத்தில் இருந்து 150 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். இதில் கவனம் செலுத்தினாலே, 500 மதிப்பெண்களை எடுத்துவிடலாம்.
* கடந்த வருட நீட் தேர்வில், அரசுப்பள்ளி மாணவர்கள் பெற்ற முதல் மதிப்பெண் எவ்வளவு?
பொது பிரிவு தேர்வர்களின் முதல் மதிப்பெண் 710. ஆனால் அரசுப்பள்ளி ஒதுக்கீட்டில் தேர்வு எழுதிய அரசுப்பள்ளி மாணவர்களின் முதல் மதிப்பெண் 514 மட்டுமே. அதனால் அரசுப்பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுத தயக்கம் காட்டக்கூடாது. ஏனெனில் அரசுப்பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டி போடுவதில்லை. அரசுப்பள்ளி மாணவர்களின் நீட் தேர்வு போட்டி மற்ற அரசுப்பள்ளி மாணவர்களுடன் மட்டுமே என்பதை தெளிவாக உணர வேண்டும்.
* அரசுப்பள்ளி மாணவர்களுக்கு என சிறப்பு நீட் பயிற்சி வழங்கப்படுகிறதா?
கடந்த இரண்டு ஆண்டுகள் வழங்கப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே இருக்கின்றன. ஏனெனில் தேர்வு பணி, விடை தாள் திருத்தம் என ஆசிரியர்களின் பணி அட்டவணை பிசியாக இருக்கும் வேளையில், நீட் தேர்விற்கான சிறப்பு பயிற்சிகள் நடத்தப்பட குறைந்த வாய்ப்புகளே இருக்கின்றன.
* நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் கடினமானதா?
பொது பார்வையில் சுலபமானதுதான். ஆனால் அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பின்தங்கிய குடும்ப சூழலை கருத்தில் கொள்கையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கொஞ்சம் குழப்பமானதாக தெரியலாம். மேலும் விண்ணப்பத்தை ஆங்கிலத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். அதனால் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. ஒருசில அரசுப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே, இந்த பணியை ஆர்வமுடன் முன்னெடுக்கிறார்கள். மருத்துவம் பயில ஆசைப்படும் மாணவ-மாணவிகளுக்கு நீட் தேர்வின் மூலம் வழிகாட்டுகிறார்கள்.
* அரசுப்பள்ளி மாணவர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்கும்போது எந்தெந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்?
இன்டர்நெட் மையங்களில் விண்ணப்பிக்கும்போது, பெரும்பாலான அரசுப்பள்ளி மாணவர்களை பொது பிரிவில் சேர்த்து விடுகிறார்கள். இதனால் தமிழக அரசின் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடு சலுகையை தவற விடுகிறார்கள். அதனால் ‘அரசுப்பள்ளி கோட்டா’ விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல ஓ.பி.சி.-என்.சி.எல். வகைப்பாட்டில் (பி.சி., எம்.பி.சி., டி.என்.சி., பி.சி.எம்.) வரும் அரசுப்பள்ளி மாணவர்கள் ‘ஆல் இந்தியா கோட்டா’ சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதை பெறுவதற்கு, வருமான சான்றிதழ் அவசியம்.
* எவ்வளவு செலவாகும்?
பொது பிரிவினருக்கு ரூ.1600, ஓ.பி.சி. மற்றும் ஈ.டபிள்யூ.எஸ். பிரிவினருக்கு ரூ.1500, எஸ்.சி./எஸ்.டி. மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.900-ம் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ‘நீட்’ குறித்து நீங்கள் கூறும் அறிவுரை என்ன?
மருத்துவம் பயிலும் ஆசை, அரசுப்பள்ளி மாணவர் களுக்கு அதிகமாக இருக்க வேண்டும். ஏனெனில் அரசுப்பள்ளி மாணவர்களுக்குத்தான், இந்த வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. நீட் தேர்விற்கு பிறகு மருத்துவம் பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருந்து இரட்டை இலக்கமாக உயர்ந்திருக்கிறது. படிப்பு செலவையும் அரசே ஏற்கும் என்பதால் மருத்துவர் கனவை நனவாக்கலாம். குடும்ப பொருளாதாரத்தை உயர்த்தலாம்.
இந்த ஆண்டிலிருந்து தேர்வு எழுதும் நேரமும், கூடுதலாக 20 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3 மணிநேரம் 20 நிமிடங்கள் நடக்கும் நீட் தேர்வை, தமிழ் வழியிலும் எழுதலாம்.
* நீட் தேர்வு எப்போது? விண்ணப்பிக்க கடைசி தேதி?
ஜூலை 17-தேதி நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க, மே 6-ந் தேதி கடைசி நாள். பிளஸ்-2 பொது தேர்வுகள் மே 23-ந் தேதியோடு முடிவடைகிறது என்பதால், பொது தேர்விற்கு பிறகு நீட் தேர்வுக்கு தயாராக 54 நாட்கள் இருக்கின்றன. இதை அரசுப்பள்ளி மாணவர்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதேச மயம், முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும்.
* அரசு பள்ளி மாணவர்களிடம் நீட் தேர்வு குறித்த புரிதல் எப்படி இருக்கிறது?
நீட் தேர்வை கடினமான தேர்வாக கருதுகிறார்கள். ‘தேர்வு எழுத வேண்டும்’ என்ற முடிவிற்கு வரும் முன்பே ‘இதில் வெற்றி பெறுவது கடினம்’ என்ற முடிவிற்கு வந்து விடுகிறார்கள். உண்மையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு ரொம்ப சுலபமானதுதான்.
* எல்லோருக்கும் பொதுவான நீட் தேர்வு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் எப்படி சுலபமானதாக மாறும்?
பாடத்திட்டம் எல்லோருக்கும் பொதுவானதுதான். ஆனால் தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான உள் இட ஒதுக்கீடு 7.5 சதவீதமாக இருக்கிறது. இந்த ஒதுக்கீட்டின் மூலம் பெறப்படும் 537 சீட்டுகளும், முழுக்க முழுக்க அரசுப்பள்ளி மாணவர்களுக்கானது. அதில் அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டுமே சேர முடியும்.
குறிப்பாக 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப்பள்ளியிலேயே படித்து முடித்த மாணவர்களே இந்த இட ஒதுக்கீட்டிற்கு தகுதியானவர்கள் என்ற அடிப்படையில், போட்டி வட்டம் சுருங்கி விடுகிறது. தன்னம்பிக்கை கூடிவிடுகிறது.
* நீட் தேர்விற்கு அரசுப்பள்ளி மாணவர்கள் எப்படி தயாராக வேண்டும்?
மனப்பாடம் என்பதை தவிர்த்துவிட்டு, 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பாடங்களை புரிந்து படித்தாலே போதும், சிறப்பாக தயாராகி விடலாம். இந்த பார்முலா உங்களது பிளஸ்-2 பொது தேர்வு மதிப்பெண்ணையும் அதிகரிக்கும். நீட் தேர்வில் வெற்றிப்பெறுவதற்கும் வழிகாட்டும்.
* குறிப்பாக எந்தெந்த பாடத்திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும்?
11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பின் இயற்பியல், வேதியியல், உயிரியல் இந்த மூன்று பாடத்திட்டங்களில் இருந்துதான், ‘கொள்குறி’ முறையில் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். இதில் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பின் உயிரியல் பாடத்தில் இருந்து, 360 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம் பெறும். அதனால் உயிரியல் பாடத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மேலும் 12-ம் வகுப்பின் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்திட்டத்தில் இருந்து 150 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். இதில் கவனம் செலுத்தினாலே, 500 மதிப்பெண்களை எடுத்துவிடலாம்.
* கடந்த வருட நீட் தேர்வில், அரசுப்பள்ளி மாணவர்கள் பெற்ற முதல் மதிப்பெண் எவ்வளவு?
பொது பிரிவு தேர்வர்களின் முதல் மதிப்பெண் 710. ஆனால் அரசுப்பள்ளி ஒதுக்கீட்டில் தேர்வு எழுதிய அரசுப்பள்ளி மாணவர்களின் முதல் மதிப்பெண் 514 மட்டுமே. அதனால் அரசுப்பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுத தயக்கம் காட்டக்கூடாது. ஏனெனில் அரசுப்பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டி போடுவதில்லை. அரசுப்பள்ளி மாணவர்களின் நீட் தேர்வு போட்டி மற்ற அரசுப்பள்ளி மாணவர்களுடன் மட்டுமே என்பதை தெளிவாக உணர வேண்டும்.
* அரசுப்பள்ளி மாணவர்களுக்கு என சிறப்பு நீட் பயிற்சி வழங்கப்படுகிறதா?
கடந்த இரண்டு ஆண்டுகள் வழங்கப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே இருக்கின்றன. ஏனெனில் தேர்வு பணி, விடை தாள் திருத்தம் என ஆசிரியர்களின் பணி அட்டவணை பிசியாக இருக்கும் வேளையில், நீட் தேர்விற்கான சிறப்பு பயிற்சிகள் நடத்தப்பட குறைந்த வாய்ப்புகளே இருக்கின்றன.
* நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் கடினமானதா?
பொது பார்வையில் சுலபமானதுதான். ஆனால் அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பின்தங்கிய குடும்ப சூழலை கருத்தில் கொள்கையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கொஞ்சம் குழப்பமானதாக தெரியலாம். மேலும் விண்ணப்பத்தை ஆங்கிலத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். அதனால் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. ஒருசில அரசுப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே, இந்த பணியை ஆர்வமுடன் முன்னெடுக்கிறார்கள். மருத்துவம் பயில ஆசைப்படும் மாணவ-மாணவிகளுக்கு நீட் தேர்வின் மூலம் வழிகாட்டுகிறார்கள்.
* அரசுப்பள்ளி மாணவர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்கும்போது எந்தெந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்?
இன்டர்நெட் மையங்களில் விண்ணப்பிக்கும்போது, பெரும்பாலான அரசுப்பள்ளி மாணவர்களை பொது பிரிவில் சேர்த்து விடுகிறார்கள். இதனால் தமிழக அரசின் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடு சலுகையை தவற விடுகிறார்கள். அதனால் ‘அரசுப்பள்ளி கோட்டா’ விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல ஓ.பி.சி.-என்.சி.எல். வகைப்பாட்டில் (பி.சி., எம்.பி.சி., டி.என்.சி., பி.சி.எம்.) வரும் அரசுப்பள்ளி மாணவர்கள் ‘ஆல் இந்தியா கோட்டா’ சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதை பெறுவதற்கு, வருமான சான்றிதழ் அவசியம்.
* எவ்வளவு செலவாகும்?
பொது பிரிவினருக்கு ரூ.1600, ஓ.பி.சி. மற்றும் ஈ.டபிள்யூ.எஸ். பிரிவினருக்கு ரூ.1500, எஸ்.சி./எஸ்.டி. மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.900-ம் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ‘நீட்’ குறித்து நீங்கள் கூறும் அறிவுரை என்ன?
மருத்துவம் பயிலும் ஆசை, அரசுப்பள்ளி மாணவர் களுக்கு அதிகமாக இருக்க வேண்டும். ஏனெனில் அரசுப்பள்ளி மாணவர்களுக்குத்தான், இந்த வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. நீட் தேர்விற்கு பிறகு மருத்துவம் பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருந்து இரட்டை இலக்கமாக உயர்ந்திருக்கிறது. படிப்பு செலவையும் அரசே ஏற்கும் என்பதால் மருத்துவர் கனவை நனவாக்கலாம். குடும்ப பொருளாதாரத்தை உயர்த்தலாம்.
இந்த ஆண்டிலிருந்து தேர்வு எழுதும் நேரமும், கூடுதலாக 20 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3 மணிநேரம் 20 நிமிடங்கள் நடக்கும் நீட் தேர்வை, தமிழ் வழியிலும் எழுதலாம்.
* நீட் தேர்வு எப்போது? விண்ணப்பிக்க கடைசி தேதி?
ஜூலை 17-தேதி நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க, மே 6-ந் தேதி கடைசி நாள். பிளஸ்-2 பொது தேர்வுகள் மே 23-ந் தேதியோடு முடிவடைகிறது என்பதால், பொது தேர்விற்கு பிறகு நீட் தேர்வுக்கு தயாராக 54 நாட்கள் இருக்கின்றன. இதை அரசுப்பள்ளி மாணவர்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதேச மயம், முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த பழக்க வழக்கங்களை பின்பற்றினால், முடிந்த வரையில் படித்தவற்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியும்.
1. பாடத்திட்டமும் சரியான திட்டமிடலும்
முதலில் நாம் என்ன படிக்க வேண்டும் என்பதை திட்டமிடுதல் அவசியம். தேர்வுக்கான பாடத்திட்டத்தை முதலில் பார்த்து புரிந்து கொள்ள வேண்டும். அவற்றை ஒரு முறைக்கு இரு முறை முழுமையாக வாசிக்கவும், அதே போல், மதிப்பெண் பங்கீடு முறையும் பார்க்க வேண்டும்.
பாடத்திட்டம் மற்றும் மதிப்பெண் முறை, எளிமையான பாடம், கடினமான பாடம் என நீங்களே உங்களுக்கான படிக்கும் வசதியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இயல்பாக ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட பாடங்களில் அதீத ஆர்வம், அறிவு இருக்கும். அவற்றை பார்க்க வேண்டும்.
2. மனப்பாடம்
மனப்பாடம் செய்வது என்பது ஒரளவுக்கு, தற்காலிக பலனாக மட்டுமே அமையும். பொதுவாக மனப்பாடம் செய்து படித்தால், அது எக்காலத்துக்கும் பயன்படாது. சில பாடங்கள், பகுதிகள் மட்டும் நேர மேலாண்மையை கருத்தில் கொண்டு மனப்பாடம் செய்யலாம். உதாரணமாக கணித சூத்திரங்கள், வரலாறு காலக்கோடு போன்ற பகுதிகள் மனப்பாடம் செய்யலாம். உண்மையில் இவைகளை புரிந்து படித்தால் மென்மேலும் சிறப்பாக இருக்கும். ஆனால், தேர்வு நெருங்கும் நேரத்தில் கணித சூத்திரங்கள் எப்படி வந்தது, அதன் வரலாறு என்ன என்று பார்த்துக் கொண்டே போனால், நமக்கு நேர விரயம் தான் ஏற்படும். எனவே, நேரத்துக்கு தகுந்தாற்போல் படிக்க வேண்டும்.
3. படிக்கும் காலம்
காலையில் படிக்கலாமா, பகலில், இரவில் படிக்கலாமா என்ற சந்தேகம் பலருக்கு ஏற்படும். இதற்கான பதில் அவர்களிடத்திலேயே தான் உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரத்தில் படித்தால் மட்டுமே நினைவில் இருக்கும். சிலருக்கு இரவுக்கு மேல் படிப்பது உகந்த நேரமாக இருக்கும், இன்னும் சிலருக்கு அதிகாலை நேரத்தில் படிப்பது பிடிக்கும். பொதுவாக அதிகாலை நேரம், அதாவது காலை 4.30 மணிக்கு எழுந்து படித்தால், அப்போது என்ன படித்தோமோ அது நீண்ட காலத்துக்கு நினைவில் நிற்கும் என்பது பொதுவான கருத்து.
4. சரியான திட்டமிடல்
பாடத்திட்டத்தின்படி நமக்கு எந்த பாடத்தில் ஆர்வம் உள்ளது, எந்த பாடம் கடினமாக உள்ளது என்பதை முடிவு செய்ய வேண்டும். சிலர் ஆர்வ கோளாறு காரணமாக, பிடித்த பாடத்தையே திரும்ப திரும்ப படிப்பர். பிடித்த பாடத்தோடு நின்று விடாமல், கடினமான பாடத்தையும் படிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். படிப்பது பிடித்து படிக்க வேண்டும். ஆர்வத்தோடு படிக்க வேண்டும். பாடங்கள் புரியவில்லை என்றால், அந்த பாடம் நன்கு தெரிந்த ஒருவரிடமோ, நண்பர்களிடத்திலோ தயங்காமல் கேட்கலாம்.
5. யோகா, தியானம்:
யோகா, தியானம் செய்வது நூறு சதவீதம் நினைவுத் திறனை அதிகரிக்கும். எனவே, அடிப்படை யோகா மற்றும் தியானத்தை கற்றுக்கொண்டு, நாள்தோறும் காலை, மாலை இருவேளையிலும் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது தியானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் படிப்பதற்கு முன்பாக 5 நிமிடங்கள் தியானம், பிராணயாமம், மூச்சுப்பயிற்சியில் செய்து விட்டு படிக்க வேண்டும். இது உண்மையில் நல்ல பலன்களை கொடுக்கும்.
யோகா, தியானம் செய்ய அதிக காசு கொடுத்து பயிற்சி மையங்களில் சேர வேண்டும் என்ற அவசியம் இல்லை. அடிப்படை யோகா மட்டும் கற்றுக்கொண்டாலே போதுமானது.
6. உணவு முறை
உணவு முறையானது நினைவுத் திறனை அதிகரிக்கச் செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது. தேர்வு நேரத்தில் சாப்பிடக்கூடாத உணவு பொருள்கள் என்று பெரிய பட்டியலே உண்டு. எனவே, உணவு பழக்கவழக்கத்தில் கடும் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும்.
நல்ல டேஸ்டாக உள்ளது என்று விரும்பி கேடு விளைவுக்கும் உணவுகளை, திண்பண்டங்களை தவிர்க்க வேண்டும். குறைந்த பட்சம், தேர்வு முடியும் வரையிலாவது அத்தகைய உணவுகளை தவிர்த்து விட்டு, ஆரோக்கியமான உணவு பழக்கத்துக்கு மாறலாம்.
முதலில் நாம் என்ன படிக்க வேண்டும் என்பதை திட்டமிடுதல் அவசியம். தேர்வுக்கான பாடத்திட்டத்தை முதலில் பார்த்து புரிந்து கொள்ள வேண்டும். அவற்றை ஒரு முறைக்கு இரு முறை முழுமையாக வாசிக்கவும், அதே போல், மதிப்பெண் பங்கீடு முறையும் பார்க்க வேண்டும்.
பாடத்திட்டம் மற்றும் மதிப்பெண் முறை, எளிமையான பாடம், கடினமான பாடம் என நீங்களே உங்களுக்கான படிக்கும் வசதியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இயல்பாக ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட பாடங்களில் அதீத ஆர்வம், அறிவு இருக்கும். அவற்றை பார்க்க வேண்டும்.
2. மனப்பாடம்
மனப்பாடம் செய்வது என்பது ஒரளவுக்கு, தற்காலிக பலனாக மட்டுமே அமையும். பொதுவாக மனப்பாடம் செய்து படித்தால், அது எக்காலத்துக்கும் பயன்படாது. சில பாடங்கள், பகுதிகள் மட்டும் நேர மேலாண்மையை கருத்தில் கொண்டு மனப்பாடம் செய்யலாம். உதாரணமாக கணித சூத்திரங்கள், வரலாறு காலக்கோடு போன்ற பகுதிகள் மனப்பாடம் செய்யலாம். உண்மையில் இவைகளை புரிந்து படித்தால் மென்மேலும் சிறப்பாக இருக்கும். ஆனால், தேர்வு நெருங்கும் நேரத்தில் கணித சூத்திரங்கள் எப்படி வந்தது, அதன் வரலாறு என்ன என்று பார்த்துக் கொண்டே போனால், நமக்கு நேர விரயம் தான் ஏற்படும். எனவே, நேரத்துக்கு தகுந்தாற்போல் படிக்க வேண்டும்.
3. படிக்கும் காலம்
காலையில் படிக்கலாமா, பகலில், இரவில் படிக்கலாமா என்ற சந்தேகம் பலருக்கு ஏற்படும். இதற்கான பதில் அவர்களிடத்திலேயே தான் உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரத்தில் படித்தால் மட்டுமே நினைவில் இருக்கும். சிலருக்கு இரவுக்கு மேல் படிப்பது உகந்த நேரமாக இருக்கும், இன்னும் சிலருக்கு அதிகாலை நேரத்தில் படிப்பது பிடிக்கும். பொதுவாக அதிகாலை நேரம், அதாவது காலை 4.30 மணிக்கு எழுந்து படித்தால், அப்போது என்ன படித்தோமோ அது நீண்ட காலத்துக்கு நினைவில் நிற்கும் என்பது பொதுவான கருத்து.
4. சரியான திட்டமிடல்
பாடத்திட்டத்தின்படி நமக்கு எந்த பாடத்தில் ஆர்வம் உள்ளது, எந்த பாடம் கடினமாக உள்ளது என்பதை முடிவு செய்ய வேண்டும். சிலர் ஆர்வ கோளாறு காரணமாக, பிடித்த பாடத்தையே திரும்ப திரும்ப படிப்பர். பிடித்த பாடத்தோடு நின்று விடாமல், கடினமான பாடத்தையும் படிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். படிப்பது பிடித்து படிக்க வேண்டும். ஆர்வத்தோடு படிக்க வேண்டும். பாடங்கள் புரியவில்லை என்றால், அந்த பாடம் நன்கு தெரிந்த ஒருவரிடமோ, நண்பர்களிடத்திலோ தயங்காமல் கேட்கலாம்.
5. யோகா, தியானம்:
யோகா, தியானம் செய்வது நூறு சதவீதம் நினைவுத் திறனை அதிகரிக்கும். எனவே, அடிப்படை யோகா மற்றும் தியானத்தை கற்றுக்கொண்டு, நாள்தோறும் காலை, மாலை இருவேளையிலும் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது தியானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் படிப்பதற்கு முன்பாக 5 நிமிடங்கள் தியானம், பிராணயாமம், மூச்சுப்பயிற்சியில் செய்து விட்டு படிக்க வேண்டும். இது உண்மையில் நல்ல பலன்களை கொடுக்கும்.
யோகா, தியானம் செய்ய அதிக காசு கொடுத்து பயிற்சி மையங்களில் சேர வேண்டும் என்ற அவசியம் இல்லை. அடிப்படை யோகா மட்டும் கற்றுக்கொண்டாலே போதுமானது.
6. உணவு முறை
உணவு முறையானது நினைவுத் திறனை அதிகரிக்கச் செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது. தேர்வு நேரத்தில் சாப்பிடக்கூடாத உணவு பொருள்கள் என்று பெரிய பட்டியலே உண்டு. எனவே, உணவு பழக்கவழக்கத்தில் கடும் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும்.
நல்ல டேஸ்டாக உள்ளது என்று விரும்பி கேடு விளைவுக்கும் உணவுகளை, திண்பண்டங்களை தவிர்க்க வேண்டும். குறைந்த பட்சம், தேர்வு முடியும் வரையிலாவது அத்தகைய உணவுகளை தவிர்த்து விட்டு, ஆரோக்கியமான உணவு பழக்கத்துக்கு மாறலாம்.
உலகெங்கிலும் அனைத்து பெற்றோர்களின் தன்னலமற்ற அா்ப்பணிப்பு மற்றும் குழந்தைகளுக்காக தியாகம் செய்தல் ஆகியவற்றிற்காக உலகின் அனைத்து பெற்றோர்களையும் பாராட்ட ஜூன் மாதம் 1-ந் தேதி உலக பெற்றோர் தினமாக கொண்டாடப்படுகிறது.
நாம் எவ்வளவு பெரிய சிகரத்தை அடைந்தாலும் அந்த வெற்றிக்கு முழு காரணமானவா்கள் நம் பெற்றோர்களாக தான் இருக்க முடியும். ஒரு சிற்பி எவ்வாறு தன் சிலையை நுட்பமாக செதுக்குகிறானோ அதேபோல நம் பெற்றோர் நம்மை கவனமாக செதுக்குகிறார்கள். அதாவது பிறந்ததில் இருந்து 3 வயது வரை அந்த குழந்தைக்கு பேசக் கற்றுக் கொடுக்கின்றனா்.
அதன்பிறகு பள்ளிக்கூடத்தில் சோ்ந்து கல்வி அறிவையும் சமுதாயத்தை பற்றியும் அறிய வைத்து அறிவே ஆற்றல் என உணா்த்துகின்றனா். பிள்ளைகளின் விருப்பத்திற்காக தங்கள் சக்திக்கு மீறி மேற்படிப்பையும் தருகின்றனர். ஒழுக்கம் விழுப்பம் தரும் என்று பெற்றோர்கள் உயிரினும் மேலான ஒழுக்கத்தை போதிக்கின்றனா். நம்மை ஓய்யாரமாய் வாழ வைத்து நம் வாழ்வில் ஓடமாய் அமைகின்றனா். ஆனால் இன்றைய தலைமுறையினா் சிலர் வாழ்வில் நல்ல நிலையை எய்தியவுடன் ஏற்றிவிட்ட ஏணியை எட்டி மிதிக்கின்றனா். நாளை தன் குழந்தைகளால் தனக்கும் இந்தநிலை ஏற்படும் என்பதை உணராமல் மூடத்தனமாக இருக்கின்றனா்.
இந்த உலகில் வேறு எவராலும் நம் பெற்றோர்களுக்கு இணையாக நேசிக்க முடியாது நம்மை. தன் குழந்தைகளிடம் இருந்து பெற்றோர்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை.
இன்றைய சமூகத்தினர் பெற்றோர்கள் செய்த எல்லாவற்றையும் மறந்து விட்டு அவா்களை அனாதையாக விட்டு விடுகின்றனர். சிலா் அனாதை இல்லங்களில் சோ்த்து விடுகின்றனா். தமக்கு இந்த குழந்தை வேண்டாம் என்று ஒவ்வொரு பெற்றோர்களும் நினைத்திருந்தால் இன்று நாம் இத்தகைய அழகான உலகினை பார்த்திருக்க இயலாது வாழ்ந்து கொண்டிருக்க முடியாது.
தன் பிள்ளைகளுக்காக முழு வாழ்வையே அா்ப்பணிக்கிறார்கள் பெற்றோர்கள். தன் குழந்தைகளே தங்களின் வாழ்க்கை என நினைத்து வாழ்கிறார்கள். இதெல்லாம் அவா்களின் கடமை என்று கூறிவிடுகிறார்கள். இன்றைய தலைமுறையினா் கூறுவதுபோல் பெற்றோர்களின் கடமை என்று எடுத்தால் கூட இன்றைய தலைமுறையினா் தங்கள் கடமையை செய்ய வேண்டாமா?
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் நம்மை பெற்றவா்களுக்கு நாம் திருப்பி செலுத்தும் நன்றிக்கடன் உள்ளது. கடமை உள்ளது. இறைவனிடம் தன் குறையை முறையிடும் அனாதை குழந்தையின் நிலையை உணா்ந்தால் நம் பெற்றோர் நமக்கு பேரின்பமாய் தெரிவார்கள்.
பெற்றோர்கள் நமது வாழ்க்கையின் வழிகாட்டிகள். அவா்கள் நம்மைப் பெறவில்லையென்றால் நாம் இந்த மண்ணில் பிறந்திருக்க முடியாது ஒரு நல்ல நிலையை அடைந்திருக்க முடியாது. தெய்வத்தை காண்பித்த தெய்வம் பெற்றோர்கள். இவ்வுலகில் பல கேள்விகளுக்கு விடை இல்லை. அதுபோல் தான் பெற்றோர்கள் ஏன் தங்கள் குழந்தைகள் மேல் அளவு கடந்த பாசம் வைக்கிறார்கள். அவா்களின் பாசத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. எழுதுவதற்கு எழுத்துகளும் இல்லை. இந்த கேள்விக்கான விடை பெற்றோர்களுக்கு மட்டும் தான் தெரியுமா என்பது கூட கேள்வியாக இருக்கிறது. பேசக் கற்றுக் கொடுத்தவா்களிடம், உங்கள் பேச்சுத் திறமையை காண்பிக்காதீா்கள்...
அதன்பிறகு பள்ளிக்கூடத்தில் சோ்ந்து கல்வி அறிவையும் சமுதாயத்தை பற்றியும் அறிய வைத்து அறிவே ஆற்றல் என உணா்த்துகின்றனா். பிள்ளைகளின் விருப்பத்திற்காக தங்கள் சக்திக்கு மீறி மேற்படிப்பையும் தருகின்றனர். ஒழுக்கம் விழுப்பம் தரும் என்று பெற்றோர்கள் உயிரினும் மேலான ஒழுக்கத்தை போதிக்கின்றனா். நம்மை ஓய்யாரமாய் வாழ வைத்து நம் வாழ்வில் ஓடமாய் அமைகின்றனா். ஆனால் இன்றைய தலைமுறையினா் சிலர் வாழ்வில் நல்ல நிலையை எய்தியவுடன் ஏற்றிவிட்ட ஏணியை எட்டி மிதிக்கின்றனா். நாளை தன் குழந்தைகளால் தனக்கும் இந்தநிலை ஏற்படும் என்பதை உணராமல் மூடத்தனமாக இருக்கின்றனா்.
இந்த உலகில் வேறு எவராலும் நம் பெற்றோர்களுக்கு இணையாக நேசிக்க முடியாது நம்மை. தன் குழந்தைகளிடம் இருந்து பெற்றோர்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை.
இன்றைய சமூகத்தினர் பெற்றோர்கள் செய்த எல்லாவற்றையும் மறந்து விட்டு அவா்களை அனாதையாக விட்டு விடுகின்றனர். சிலா் அனாதை இல்லங்களில் சோ்த்து விடுகின்றனா். தமக்கு இந்த குழந்தை வேண்டாம் என்று ஒவ்வொரு பெற்றோர்களும் நினைத்திருந்தால் இன்று நாம் இத்தகைய அழகான உலகினை பார்த்திருக்க இயலாது வாழ்ந்து கொண்டிருக்க முடியாது.
தன் பிள்ளைகளுக்காக முழு வாழ்வையே அா்ப்பணிக்கிறார்கள் பெற்றோர்கள். தன் குழந்தைகளே தங்களின் வாழ்க்கை என நினைத்து வாழ்கிறார்கள். இதெல்லாம் அவா்களின் கடமை என்று கூறிவிடுகிறார்கள். இன்றைய தலைமுறையினா் கூறுவதுபோல் பெற்றோர்களின் கடமை என்று எடுத்தால் கூட இன்றைய தலைமுறையினா் தங்கள் கடமையை செய்ய வேண்டாமா?
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் நம்மை பெற்றவா்களுக்கு நாம் திருப்பி செலுத்தும் நன்றிக்கடன் உள்ளது. கடமை உள்ளது. இறைவனிடம் தன் குறையை முறையிடும் அனாதை குழந்தையின் நிலையை உணா்ந்தால் நம் பெற்றோர் நமக்கு பேரின்பமாய் தெரிவார்கள்.
பெற்றோர்கள் நமது வாழ்க்கையின் வழிகாட்டிகள். அவா்கள் நம்மைப் பெறவில்லையென்றால் நாம் இந்த மண்ணில் பிறந்திருக்க முடியாது ஒரு நல்ல நிலையை அடைந்திருக்க முடியாது. தெய்வத்தை காண்பித்த தெய்வம் பெற்றோர்கள். இவ்வுலகில் பல கேள்விகளுக்கு விடை இல்லை. அதுபோல் தான் பெற்றோர்கள் ஏன் தங்கள் குழந்தைகள் மேல் அளவு கடந்த பாசம் வைக்கிறார்கள். அவா்களின் பாசத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. எழுதுவதற்கு எழுத்துகளும் இல்லை. இந்த கேள்விக்கான விடை பெற்றோர்களுக்கு மட்டும் தான் தெரியுமா என்பது கூட கேள்வியாக இருக்கிறது. பேசக் கற்றுக் கொடுத்தவா்களிடம், உங்கள் பேச்சுத் திறமையை காண்பிக்காதீா்கள்...
குழந்தைகளுக்கு எழுத்துத்திறன் இல்லாமல் போனால் அவர்கள், படித்ததையும், தெரிந்ததையும் எழுதமுடியாமல் தடுமாறி கல்வியில் பின்தங்கிவிடுவார்கள்.
நவீன காலத்து குழந்தைகளை ‘டச் போன்’கள் மகிழ்வித்துக்கொண்டிருக்கின்றன. பெரும்பாலான நேரத்தை அவர்கள் அதனோடுதான் செலவிடுகிறார்கள். அதன் பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதை பெற்றோர் உணர்ந்துகொள்ள வேண்டும். பெரும்பாலான பெற்றோர்கள் வேலைபார்த்துவிட்டு களைத்துப் போய் வீடு திரும்புகிறார்கள். குழந்தைகளிடம் பேசக்கூட நேரமில்லாத நிலையில், கையில் இருக்கும் போனை அதனிடம் கொடுத்துவிட்டு, ‘இதை பார்த்துக்கொண்டு அம்மாவை தொந்தரவு செய்யாமல் இரு’ என்கிறார்கள். அவர்களும் சந்தோஷமாக அதை வைத்துக்கொண்டு விளையாடுகிறார்கள். அம்மா-அப்பாவைவிட போன் தான் அதிக மகிழ்ச்சியை தரும் விஷயம் என்ற நிலைக்கு ஆளாகிறார்கள்.
சின்ன குழந்தைகள் கூட விரல்களால் அழகாக டச் ஸ்கிரீனை தள்ளி தங்களுக்கு வேண்டிய விவரங்களை தேடிக் கொள்ள தெரிந்துவைத்திருக்கிறார்கள். இது அவர் களுக்கு பழகிவிட்டது. இதனால் பென்சில் பிடித்து எழுதும் வழக்கம் படிப்படியாக குறைந்துவருகிறது. வளரும் குழந்தைகள் எழுதிப் பழக வேண்டும். அப்போதுதான் அந்த விஷயம் ஆழமாக மனதில் பதியும். என்றும் மறக்காமலிருக்கும். இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு எழுதும் பழக்கமே இல்லாமல் போய்விட்டது. எல்லாவிஷயங்களையும் செல்போனில் ‘டைப்’ செய்து மெசேஜ்களாக அனுப்பிவிடுகிறார்கள். அதனால் கையால் எழுதுவது காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.
இன்றைய குழந்தைகள் எதிர்கால மாணவர்கள். அவர்கள் வருங்காலத்தில் எல்லா தேர்வுகளையும் எழுதித்தான் தேர்ச்சி பெற வேண்டும். அந்த நிலையில் வேகமாக எழுத முடியாமல் திண்டாட வேண்டியிருக்கும். அப்போது வருத்தப்பட்டு பலனில்லை. எழுதும் வழக்கம் குறையக் குறைய மூளைக்கும் நரம்பு மண்டலத்திற்கும் உள்ள தொடர்பு குறைந்துபோகும். நாளடைவில் எழுதுவது அவர் களுக்கு ஒரு சுமையான வேலையாகிவிடும். எழுதினாலும் கிறுக்கல்போல் தோன்றும். இந்த நிலை ஏற்பட்டபின் மாற்றுவது கடினம்.
இன்று கஷ்டப்பட்டு தேடுவது என்பது குழந்தைகளிடம் இல்லை. செல்போன் மூலம் எதையும் அவர்களால் எளிதாக தேடிவிட முடிகிறது. தேடும் விஷயம் எளிமையாக கிடைத்து விடும்போது ஏன் கஷ்டப்பட வேண்டும்? என்று நினைத்து, கஷ்டப்படாமலே அவர்கள் வாழ விரும்புகிறார்கள். அப்படி ஒரு கஷ்ட நிலை வரும்போது அதை தாங்கிக்கொள்ள முடியாமல் தடுமாறிவிடுவார்கள். அப்போதும் தங்களுக்கு எளிதாக வழிகாட்டுவது யார் என்று தேடிக்கொண்டிருப்பார்கள். அது மட்டுமல்ல, இந்த ‘டச் ஸ்கிரீன்’ அவர்களுடைய விரல்களை செல்போன் பயன்பாட்டிற்குதக்கபடி மாற்றிவிடும். வேறு எந்த வேலைக்கும் பிரயோஜனமில்லாமல் செய்துவிடும். வரைவது, பெயிண்டிங் செய்வது எல்லாமே அவர்களுக்கு கஷ்டமாகிவிடும். விரல்களோடு மூளை ஒத்துழைக்காது. விரல்கள் சோம்பேறியாகிவிடவும் செய்யும்.
குழந்தைகள் விரல்களை பயன்படுத்தி எழுதினாலோ, படம் வரைந்தாலோ மூளை சுறுசுறுப்பாகும். அந்த வேலையை சிறப்பாக செய்துமுடிக்கவைக்கும். நாளடைவில் அந்த வேலையும் எளிமையாகிவிடும். எழுதும் போதும், ஓவியம் வரையும்போதும் மனம் அதிலே லயித்து ஒருநிலைப்படும். அதன் மூலம் மனஅழுத்தம் நீங்கும். மனதுக்கு அமைதி கிடைக்கும். உடலுக்கும்- மனதுக்கும் ஒருங்கிணைப்பும் கிடைக்கும். இவை அனைத்துமே டச்போன் செயல்பாடுகளால் கிடைக்காது. குழந்தைகளுக்கு எழுத்துத்திறன் இல்லாமல் போனால் அவர்கள், படித்ததையும், தெரிந்ததையும் எழுதமுடியாமல் தடுமாறி கல்வியில் பின்தங்கிவிடுவார்கள்.
படிப்பது, எழுதுவது இரண்டும், இரு கண்கள் போன்றவை. படிக்க படிக்க எழுதியும் பழகவேண்டும். முதன் முதலில் சிலேட்டில் எழுதிப் பழகுவார்கள். அதில் எழுதும்போது எழுத்து களுக்கு ஒரு அழுத்தம் கிடைக்கும். கைகள் தடுமாறாமல் இருக்கும். எழுத்துகள் தாறுமாறாக போகாது. அப்படி எழுதி பழகியதும், அடுத்தகட்டமாக நோட்டில் எழுதப் பழக்குவார்கள். எழுத ஓரளவு பழகும் வரைதான் சிலேட்டில் எழுத வேண்டும். குழந்தை முதன் முதலில் எழுத ஆரம்பிப்பதை ஒரு விழாவாகவே கொண்டாடுவார்கள். எழுத்து என்பது அவ்வளவு முக்கியமானது. கல்வியின் ஆரம்பம், நம் மூளைக்கும்- கல்விக்கும் தொடர்பை ஏற்படுத்தும் எழுத்துதான்.
இது பற்றி நரம்பியல் நிபுணர் டாக்டர் தீபாலி தேஷ்முக் சொல்கிறார்.. "இன்றைய தலைமுறை எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சினை இது. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் கலை அறிமுகத்தை விரல்கள்தான் ஏற்படுத்துகின்றன. எழுதும் பழக்கம் மறந்து போனால் எதிர்காலத்தில் பேனா, பென்சில் பிடித்து எதுவுமே செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடும். கலையும் துளிர்விடாது. இது மூளையை பாதிக்கும் விஷயமாகி விடும். அதனால் சிறுவயதிலேயே ‘டச் ஸ்கிரீன்’ கலாசாரத்தை முறைப்படுத்தி அதற்கு முற்றுப்புள்ளிவைக்க முன்வாருங்கள்” என்கிறார்.
சின்ன குழந்தைகள் கூட விரல்களால் அழகாக டச் ஸ்கிரீனை தள்ளி தங்களுக்கு வேண்டிய விவரங்களை தேடிக் கொள்ள தெரிந்துவைத்திருக்கிறார்கள். இது அவர் களுக்கு பழகிவிட்டது. இதனால் பென்சில் பிடித்து எழுதும் வழக்கம் படிப்படியாக குறைந்துவருகிறது. வளரும் குழந்தைகள் எழுதிப் பழக வேண்டும். அப்போதுதான் அந்த விஷயம் ஆழமாக மனதில் பதியும். என்றும் மறக்காமலிருக்கும். இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு எழுதும் பழக்கமே இல்லாமல் போய்விட்டது. எல்லாவிஷயங்களையும் செல்போனில் ‘டைப்’ செய்து மெசேஜ்களாக அனுப்பிவிடுகிறார்கள். அதனால் கையால் எழுதுவது காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.
இன்றைய குழந்தைகள் எதிர்கால மாணவர்கள். அவர்கள் வருங்காலத்தில் எல்லா தேர்வுகளையும் எழுதித்தான் தேர்ச்சி பெற வேண்டும். அந்த நிலையில் வேகமாக எழுத முடியாமல் திண்டாட வேண்டியிருக்கும். அப்போது வருத்தப்பட்டு பலனில்லை. எழுதும் வழக்கம் குறையக் குறைய மூளைக்கும் நரம்பு மண்டலத்திற்கும் உள்ள தொடர்பு குறைந்துபோகும். நாளடைவில் எழுதுவது அவர் களுக்கு ஒரு சுமையான வேலையாகிவிடும். எழுதினாலும் கிறுக்கல்போல் தோன்றும். இந்த நிலை ஏற்பட்டபின் மாற்றுவது கடினம்.
இன்று கஷ்டப்பட்டு தேடுவது என்பது குழந்தைகளிடம் இல்லை. செல்போன் மூலம் எதையும் அவர்களால் எளிதாக தேடிவிட முடிகிறது. தேடும் விஷயம் எளிமையாக கிடைத்து விடும்போது ஏன் கஷ்டப்பட வேண்டும்? என்று நினைத்து, கஷ்டப்படாமலே அவர்கள் வாழ விரும்புகிறார்கள். அப்படி ஒரு கஷ்ட நிலை வரும்போது அதை தாங்கிக்கொள்ள முடியாமல் தடுமாறிவிடுவார்கள். அப்போதும் தங்களுக்கு எளிதாக வழிகாட்டுவது யார் என்று தேடிக்கொண்டிருப்பார்கள். அது மட்டுமல்ல, இந்த ‘டச் ஸ்கிரீன்’ அவர்களுடைய விரல்களை செல்போன் பயன்பாட்டிற்குதக்கபடி மாற்றிவிடும். வேறு எந்த வேலைக்கும் பிரயோஜனமில்லாமல் செய்துவிடும். வரைவது, பெயிண்டிங் செய்வது எல்லாமே அவர்களுக்கு கஷ்டமாகிவிடும். விரல்களோடு மூளை ஒத்துழைக்காது. விரல்கள் சோம்பேறியாகிவிடவும் செய்யும்.
குழந்தைகள் விரல்களை பயன்படுத்தி எழுதினாலோ, படம் வரைந்தாலோ மூளை சுறுசுறுப்பாகும். அந்த வேலையை சிறப்பாக செய்துமுடிக்கவைக்கும். நாளடைவில் அந்த வேலையும் எளிமையாகிவிடும். எழுதும் போதும், ஓவியம் வரையும்போதும் மனம் அதிலே லயித்து ஒருநிலைப்படும். அதன் மூலம் மனஅழுத்தம் நீங்கும். மனதுக்கு அமைதி கிடைக்கும். உடலுக்கும்- மனதுக்கும் ஒருங்கிணைப்பும் கிடைக்கும். இவை அனைத்துமே டச்போன் செயல்பாடுகளால் கிடைக்காது. குழந்தைகளுக்கு எழுத்துத்திறன் இல்லாமல் போனால் அவர்கள், படித்ததையும், தெரிந்ததையும் எழுதமுடியாமல் தடுமாறி கல்வியில் பின்தங்கிவிடுவார்கள்.
படிப்பது, எழுதுவது இரண்டும், இரு கண்கள் போன்றவை. படிக்க படிக்க எழுதியும் பழகவேண்டும். முதன் முதலில் சிலேட்டில் எழுதிப் பழகுவார்கள். அதில் எழுதும்போது எழுத்து களுக்கு ஒரு அழுத்தம் கிடைக்கும். கைகள் தடுமாறாமல் இருக்கும். எழுத்துகள் தாறுமாறாக போகாது. அப்படி எழுதி பழகியதும், அடுத்தகட்டமாக நோட்டில் எழுதப் பழக்குவார்கள். எழுத ஓரளவு பழகும் வரைதான் சிலேட்டில் எழுத வேண்டும். குழந்தை முதன் முதலில் எழுத ஆரம்பிப்பதை ஒரு விழாவாகவே கொண்டாடுவார்கள். எழுத்து என்பது அவ்வளவு முக்கியமானது. கல்வியின் ஆரம்பம், நம் மூளைக்கும்- கல்விக்கும் தொடர்பை ஏற்படுத்தும் எழுத்துதான்.
இது பற்றி நரம்பியல் நிபுணர் டாக்டர் தீபாலி தேஷ்முக் சொல்கிறார்.. "இன்றைய தலைமுறை எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சினை இது. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் கலை அறிமுகத்தை விரல்கள்தான் ஏற்படுத்துகின்றன. எழுதும் பழக்கம் மறந்து போனால் எதிர்காலத்தில் பேனா, பென்சில் பிடித்து எதுவுமே செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடும். கலையும் துளிர்விடாது. இது மூளையை பாதிக்கும் விஷயமாகி விடும். அதனால் சிறுவயதிலேயே ‘டச் ஸ்கிரீன்’ கலாசாரத்தை முறைப்படுத்தி அதற்கு முற்றுப்புள்ளிவைக்க முன்வாருங்கள்” என்கிறார்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக பொம்மைகள் வாங்கும் பொழுது சில பாதுகாப்பான விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும். அதில் சிலவற்றை இங்கே காணலாம்:
குழந்தைப் பருவத்தில் நாம் அனைவரும் கடந்து வந்தவை பொம்மைகள். சரியான பொம்மைகள் குழந்தைகளின் கற்பனை மற்றும் ஒருங்கிணைப்பை வளர்க்க உதவும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக பொம்மைகள் வாங்கும் பொழுது சில பாதுகாப்பான விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும். அதில் சிலவற்றை இங்கே காணலாம்:
1) அனைத்து பொம்மைகளிலும், ‘லேபிள்கள்’ ஒட்டப்பட்டிருக்கும். அதனைத் தெளிவாக படித்த பின்னரே பொம்மைகள் வாங்க வேண்டும். அதில் எவ்வாறு பொம்மையை பயன்படுத்தலாம், எவ்வாறு பயன்படுத்தக் கூடாது போன்ற தகவல்கள் இருக்கும். அதனை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
2) பொம்மைகள் வாங்கும் போது எந்த வயது வரை அந்த பொம்மையை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். இதைப் பார்த்து குழந்தைகளின் வயதிற்கு ஏற்றார் போல தகுந்த பொம்மையை வாங்கித் தர வேண்டும்.
3) சிறிய பாகங்கள் கொண்ட பொம்மைகள், எளிதாக குழந்தைகளின் தொண்டையில் மாட்டிக் கொள்ளும் அபாயம் கொண்டவை. அதனால், குழந்தைகளின் வாயை விட, குறைந்தது 3 சென்டிமீட்டர் விட்டம் மற்றும் 6 சென்டிமீட்டர் நீளம் இருப்பது போன்ற பாகங்கள் கொண்ட பொம்மைகளையே வாங்க வேண்டும்.
4) பொம்மைகளின் பாகங்கள் அனைத்தும் உறுதியாக மற்றும் வலுவாக இருக்கிறதா? என்று சோதனை செய்ய வேண்டும். இல்லையென்றால் அந்த பாகங்கள் எளிதில் உடைந்து குழந்தைகளுக்கு காயம் ஏற்படுத்தலாம்.
5) சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பொம்மைகளை வாங்கித் தர வேண்டும். பிளாஸ்டிக்கைத் தவிர்த்து மறுசுழற்சி செய்யப்பட்ட அல்லது சுற்றுச்சூழலை பாதிக்காதப் பொருளால் செய்யப்பட்ட பொம்மைகளை வாங்கித் தரலாம்.
6) சிறிய வயதில் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகமாக இருக்கும் என்பதால், கற்றல் திறனை வளர்க்கும் விளையாட்டு பொம்மைகளை வாங்கித் தரலாம். அது அவர்களின் கற்பனைத் திறன் மற்றும் படைப்பாற்றலை அதிகரிக்கும்.
7) சிறிய பேட்டரி மற்றும் காந்தம் போன்ற பாகங்கள் கொண்ட பொம்மைகளை வைத்து விளையாடும் போது, அந்த பேட்டரிகள் கையில் கிடைத்தால், குழந்தைகள் வாயில் போட்டுவிடுவார்கள். அதனால் பேட்டரிகள் மற்றும் மேக்னட்கள் உறுதியாக மற்றும் வலுவாக பொருத்தப்பட்டு இருக்கிறதா? என்பதை பரிசோதிக்க வேண்டும்.
பொம்மைகள் வாங்கும் போது தவிர்க்க வேண்டியவை:
1) பொம்மைகளில் தீட்டப்பட்ட வண்ணங்கள், குழந்தைகள் வாயில் எளிதாக கரையக்கூடும். அத்தகைய பொம்மைகளைத் தவிர்க்க வேண்டும்.
2) மெல்லிய பிளாஸ்டிக் பொம்மைகள் வாங்கினால் அது எளிதில் உடைந்து, கூர்மையான பகுதிகளாக மாறி குழந்தைகளுக்கு காயம் ஏற்படுத்தும். பெரும்பாலும் பிளாஸ்டிக் பொம்மைகளைத் தவிர்ப்பது நல்லது.
3) அதீத சத்தம் வெளிப்படுத்தும் பொம்மைகள் குழந்தைகளுக்கு பய உணர்வை தரும். எனவே அவற்றை தவிர்க்க வேண்டும்.
4) மின்சாரத்தால் இயங்கும் பொம்மைகளைத் தவிர்க்கவும்.
1) அனைத்து பொம்மைகளிலும், ‘லேபிள்கள்’ ஒட்டப்பட்டிருக்கும். அதனைத் தெளிவாக படித்த பின்னரே பொம்மைகள் வாங்க வேண்டும். அதில் எவ்வாறு பொம்மையை பயன்படுத்தலாம், எவ்வாறு பயன்படுத்தக் கூடாது போன்ற தகவல்கள் இருக்கும். அதனை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
2) பொம்மைகள் வாங்கும் போது எந்த வயது வரை அந்த பொம்மையை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். இதைப் பார்த்து குழந்தைகளின் வயதிற்கு ஏற்றார் போல தகுந்த பொம்மையை வாங்கித் தர வேண்டும்.
3) சிறிய பாகங்கள் கொண்ட பொம்மைகள், எளிதாக குழந்தைகளின் தொண்டையில் மாட்டிக் கொள்ளும் அபாயம் கொண்டவை. அதனால், குழந்தைகளின் வாயை விட, குறைந்தது 3 சென்டிமீட்டர் விட்டம் மற்றும் 6 சென்டிமீட்டர் நீளம் இருப்பது போன்ற பாகங்கள் கொண்ட பொம்மைகளையே வாங்க வேண்டும்.
4) பொம்மைகளின் பாகங்கள் அனைத்தும் உறுதியாக மற்றும் வலுவாக இருக்கிறதா? என்று சோதனை செய்ய வேண்டும். இல்லையென்றால் அந்த பாகங்கள் எளிதில் உடைந்து குழந்தைகளுக்கு காயம் ஏற்படுத்தலாம்.
5) சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பொம்மைகளை வாங்கித் தர வேண்டும். பிளாஸ்டிக்கைத் தவிர்த்து மறுசுழற்சி செய்யப்பட்ட அல்லது சுற்றுச்சூழலை பாதிக்காதப் பொருளால் செய்யப்பட்ட பொம்மைகளை வாங்கித் தரலாம்.
6) சிறிய வயதில் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகமாக இருக்கும் என்பதால், கற்றல் திறனை வளர்க்கும் விளையாட்டு பொம்மைகளை வாங்கித் தரலாம். அது அவர்களின் கற்பனைத் திறன் மற்றும் படைப்பாற்றலை அதிகரிக்கும்.
7) சிறிய பேட்டரி மற்றும் காந்தம் போன்ற பாகங்கள் கொண்ட பொம்மைகளை வைத்து விளையாடும் போது, அந்த பேட்டரிகள் கையில் கிடைத்தால், குழந்தைகள் வாயில் போட்டுவிடுவார்கள். அதனால் பேட்டரிகள் மற்றும் மேக்னட்கள் உறுதியாக மற்றும் வலுவாக பொருத்தப்பட்டு இருக்கிறதா? என்பதை பரிசோதிக்க வேண்டும்.
பொம்மைகள் வாங்கும் போது தவிர்க்க வேண்டியவை:
1) பொம்மைகளில் தீட்டப்பட்ட வண்ணங்கள், குழந்தைகள் வாயில் எளிதாக கரையக்கூடும். அத்தகைய பொம்மைகளைத் தவிர்க்க வேண்டும்.
2) மெல்லிய பிளாஸ்டிக் பொம்மைகள் வாங்கினால் அது எளிதில் உடைந்து, கூர்மையான பகுதிகளாக மாறி குழந்தைகளுக்கு காயம் ஏற்படுத்தும். பெரும்பாலும் பிளாஸ்டிக் பொம்மைகளைத் தவிர்ப்பது நல்லது.
3) அதீத சத்தம் வெளிப்படுத்தும் பொம்மைகள் குழந்தைகளுக்கு பய உணர்வை தரும். எனவே அவற்றை தவிர்க்க வேண்டும்.
4) மின்சாரத்தால் இயங்கும் பொம்மைகளைத் தவிர்க்கவும்.
குழந்தையின் மண்டை ஓட்டுத்தோலில் உள்ள தொற்றுகள், பூஞ்சை பாதிப்புகள் ஆகியவை மொட்டை அடிப்பதன் மூலம் நீங்குகின்றன. இதனால் குழந்தையின் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த ஒவ்வொரு விஷயத்திலும் அறிவியல் ரீதியான நன்மை தரும் காரணம் இருக்கிறது. இதை அடிப்படையாகக்கொண்டே பாரம்பரியமான சடங்கு முறைகள் பின்பற்றப்பட்டன. அதில் ஒன்று தான் மொட்டை அடிப்பது. அதற்கான காரணத்தை தெரிந்துகொள்வோம்.
பிறந்த பச்சிளம் குழந்தைக்கு ஒரு வருடத்திற்குள் மொட்டை அடிக்கவில்லை என்றால் ‘சாமி குத்தம்' ஆகிவிடும் என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டதுண்டு. பெரும்பாலானோர் இதை குலதெய்வத்திற்காகச் செய்யப்படும் நேர்த்திக்கடன் என்றும், குடும்ப வழக்கம் என்றும் நினைத்து செய்கிறார்கள்.
பிறந்த குழந்தைகளுக்கு ஒரு வயதிற்கு முன் மொட்டை அடிப்பதை இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் திருவிழாவாகக் கொண்டாடுகின்றனர். குழந்தை பிறந்த ஒரு வருடத்தில் குழந்தையின் தாய்மாமன் அல்லது தாயின் தந்தையின் மடியில் வைத்து மொட்டை அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் இதற்கு பின்னால் உள்ள அறிவியல் காரணம் இதோ...
தாயின் கருப்பையில் உள்ள பனிக்குடத்தில் ஒன்பது மாதங்கள் குழந்தை வளரும். அந்த நீர் ரத்தம், மலம், சலம் மற்றும் தண்ணீரால் நிறைந்தது.
அந்த நீரில் ஊறிப்போய் இருக்கும் குழந்தையை வெளியே வந்ததும் துணியால் துடைத்து சுத்தம் செய்து விடுகிறோம். ஆனால் தலையில் உள்ள கழிவுகள் அப்படியே தான் இருக்கும். அதை நாம் மொட்டை அடித்துத்தான் போக்க முடியும்.
மொட்டை அடிப்பதன் மூலம் அந்த திரவமானது மயிர்க்கால்களின் ஊடாக தலையிலிருந்து எளிதில் வெளியேறிவிடும். இதன் மூலம் கிருமிகளால் தொற்று, ஒவ்வாமை போன்ற பிரச்சினைகள் வருவது குறையும். ஒற்றைத் தலைவலி மற்றும் தலை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வராது.
குழந்தையின் மண்டை ஓட்டுத்தோலில் உள்ள தொற்றுகள், பூஞ்சை பாதிப்புகள் ஆகியவை மொட்டை அடிப்பதன் மூலம் நீங்குகின்றன. இதனால் குழந்தையின் முடி வளர்ச்சி அதிகரிக்கும். குழந்தையின் உடலையும், தலையையும் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.
உடலுக்கு ‘வைட்டமின் டி’ சத்து எளிதில் கிடைக்கும். இதனால் எலும்பு, பல் வளர்ச்சி சீராக இருக்கும். பிறந்த குழந்தையின் முடி அடர்த்தி இல்லாமல் மெலிதாக இருக்கும். மொட்டை அடித்த பின்பு சீராக வளர ஆரம்பிக்கும்.
சிலர் குழந்தைகள் பிறந்த ஒரு மாதத்தில் மொட்டை அடிப்பார்கள். சிலர் குழந்தைகளுக்கு முடி வளர வளர மூன்று முறை மொட்டை அடிப்பார்கள். முதலில் சில கழிவுகள் வெளியேறாமல் இருந்தால், அடுத்தடுத்து அடிக்கும் மொட்டைகளில் கழிவுகள் வெளியேறிவிடும் என்பதுதான் அதற்கான காரணம்.
பிறந்த பச்சிளம் குழந்தைக்கு ஒரு வருடத்திற்குள் மொட்டை அடிக்கவில்லை என்றால் ‘சாமி குத்தம்' ஆகிவிடும் என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டதுண்டு. பெரும்பாலானோர் இதை குலதெய்வத்திற்காகச் செய்யப்படும் நேர்த்திக்கடன் என்றும், குடும்ப வழக்கம் என்றும் நினைத்து செய்கிறார்கள்.
பிறந்த குழந்தைகளுக்கு ஒரு வயதிற்கு முன் மொட்டை அடிப்பதை இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் திருவிழாவாகக் கொண்டாடுகின்றனர். குழந்தை பிறந்த ஒரு வருடத்தில் குழந்தையின் தாய்மாமன் அல்லது தாயின் தந்தையின் மடியில் வைத்து மொட்டை அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் இதற்கு பின்னால் உள்ள அறிவியல் காரணம் இதோ...
தாயின் கருப்பையில் உள்ள பனிக்குடத்தில் ஒன்பது மாதங்கள் குழந்தை வளரும். அந்த நீர் ரத்தம், மலம், சலம் மற்றும் தண்ணீரால் நிறைந்தது.
அந்த நீரில் ஊறிப்போய் இருக்கும் குழந்தையை வெளியே வந்ததும் துணியால் துடைத்து சுத்தம் செய்து விடுகிறோம். ஆனால் தலையில் உள்ள கழிவுகள் அப்படியே தான் இருக்கும். அதை நாம் மொட்டை அடித்துத்தான் போக்க முடியும்.
மொட்டை அடிப்பதன் மூலம் அந்த திரவமானது மயிர்க்கால்களின் ஊடாக தலையிலிருந்து எளிதில் வெளியேறிவிடும். இதன் மூலம் கிருமிகளால் தொற்று, ஒவ்வாமை போன்ற பிரச்சினைகள் வருவது குறையும். ஒற்றைத் தலைவலி மற்றும் தலை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வராது.
குழந்தையின் மண்டை ஓட்டுத்தோலில் உள்ள தொற்றுகள், பூஞ்சை பாதிப்புகள் ஆகியவை மொட்டை அடிப்பதன் மூலம் நீங்குகின்றன. இதனால் குழந்தையின் முடி வளர்ச்சி அதிகரிக்கும். குழந்தையின் உடலையும், தலையையும் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.
உடலுக்கு ‘வைட்டமின் டி’ சத்து எளிதில் கிடைக்கும். இதனால் எலும்பு, பல் வளர்ச்சி சீராக இருக்கும். பிறந்த குழந்தையின் முடி அடர்த்தி இல்லாமல் மெலிதாக இருக்கும். மொட்டை அடித்த பின்பு சீராக வளர ஆரம்பிக்கும்.
சிலர் குழந்தைகள் பிறந்த ஒரு மாதத்தில் மொட்டை அடிப்பார்கள். சிலர் குழந்தைகளுக்கு முடி வளர வளர மூன்று முறை மொட்டை அடிப்பார்கள். முதலில் சில கழிவுகள் வெளியேறாமல் இருந்தால், அடுத்தடுத்து அடிக்கும் மொட்டைகளில் கழிவுகள் வெளியேறிவிடும் என்பதுதான் அதற்கான காரணம்.
உலக அளவில் 68-க்கு ஒரு குழந்தை ஆட்டிசத்தின் பிடியில் உள்ளது. இந்தியாவில் மட்டும் 1 கோடிக்கும் மேற்பட்டோர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
ஆஸ்திரியாவில் பிறந்த லியோ கன்னர் என்பவர்தான் முதன் முதலாக ஆட்டிசம் என்பதை தெரியப்படுத்தியவர். இவர் 1943-ம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையில், ஆட்டிசம் பாதிப்பு கொண்ட குழந்தைகளின் பிரச்சினைகளை பற்றி கூறியிருந்தார். கருவுற்று இருக்கும் காலத்தில் பெண்களிடம் மன அழுத்தம் அதிகமாக இருந்தால், அது ஆட்டிச குறைபாடு கொண்ட குழந்தைகள் உருவாவதற்கு வித்திடும் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் தைராய்டு பிரச்சினை உள்ள பெண்கள், வலிப்பு நோய்க்கு மாத்திரை எடுத்து கொள்ளும் பெண்கள், போலிக் அமிலம் குறைவாக இருக்கும் பெண்களுக்கும், ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்க வாய்ப்பிருப்பதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
இது ஒரு நோய் கிடையாது. குறைபாடு மட்டுமே. சாதாரண குழந்தைகளுக்கு ஒரு முறை சொல்லிக்கொடுப்பதை, கூடுதலாக இரண்டு மூன்று முறை சொல்லிக்கொடுக்கும்போது, ஆட்டிசம் பாதித்த குழந்தைகளும் அதைக் கற்றுக்கொள்வார்கள். இதனை முற்றிலும் குணப்படுத்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலக அளவில் 68-க்கு ஒரு குழந்தை ஆட்டிசத்தின் பிடியில் உள்ளது. இந்தியாவில் மட்டும் 1 கோடிக்கும் மேற்பட்டோர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
டாக்டர்களான பெர்னார்ட் ரிம்லாண்ட், ரூத் சல்லிவன் ஆகியோர் கடந்த 1965-ம் ஆண்டு ஆட்டிசம் குறைபாடு பற்றிய ஆய்வுகளுக்காக ‘ஆட்டிசம் சொசைட்டி’ என்ற அமைப்பை தொடங்கினார்கள்.
கடந்த 2008-ம் ஆண்டில்தான் ஐ.நா சபையால், ஏப்ரல் மாதம் 2-ந் தேதி ‘உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்’ என்று அறிவிக்கப்பட்டது. இந்த பாதிப்பு குறித்து முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
இது ஒரு நோய் கிடையாது. குறைபாடு மட்டுமே. சாதாரண குழந்தைகளுக்கு ஒரு முறை சொல்லிக்கொடுப்பதை, கூடுதலாக இரண்டு மூன்று முறை சொல்லிக்கொடுக்கும்போது, ஆட்டிசம் பாதித்த குழந்தைகளும் அதைக் கற்றுக்கொள்வார்கள். இதனை முற்றிலும் குணப்படுத்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலக அளவில் 68-க்கு ஒரு குழந்தை ஆட்டிசத்தின் பிடியில் உள்ளது. இந்தியாவில் மட்டும் 1 கோடிக்கும் மேற்பட்டோர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
டாக்டர்களான பெர்னார்ட் ரிம்லாண்ட், ரூத் சல்லிவன் ஆகியோர் கடந்த 1965-ம் ஆண்டு ஆட்டிசம் குறைபாடு பற்றிய ஆய்வுகளுக்காக ‘ஆட்டிசம் சொசைட்டி’ என்ற அமைப்பை தொடங்கினார்கள்.
கடந்த 2008-ம் ஆண்டில்தான் ஐ.நா சபையால், ஏப்ரல் மாதம் 2-ந் தேதி ‘உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்’ என்று அறிவிக்கப்பட்டது. இந்த பாதிப்பு குறித்து முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
குழந்தைகள் மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி அளிப்பதற்கு உடற்பயிற்சியில் ஈடுபடுவது முக்கியமானது. இதற்கு ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபடுவது சிறந்த வழியாகும்.
ஸ்கேட்டிங் வேடிக்கையான, பொழுதுபோக்கு நிறைந்த விளையாட்டு ஆகும். ஸ்கேட்டிங் செய்பவர்கள் சக்கரங்கள் கொண்ட காலணிகள் அல்லது பூட்ஸை அணிந்து நடைபாதைகள் மற்றும் பிற பகுதிகளில் சறுக்கியபடி செல்வார்கள். குழந்தைகள் இந்த விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்.
மற்ற விளையாட்டுகளைப் போலவே, ஸ்கேட்டிங் விளையாடுவதன் மூலமும் குழந்தைகளுக்கு ஏராளமான நன்மைகள் உண்டாகின்றன. மூளையின் ஆற்றலை அதிகரிப்பது முதல் சமூக திறன்களை மேம்படுத்துவது வரை குழந்தையின் வளர்ச்சிக்கு ஸ்கேட்டிங் உதவுகிறது.
மூளையின் செயல்பாடு
குழந்தைகள் சறுக்கி விளையாடும்போது வேகமாகவும், கட்டுப்பாடோடும் செயல்படுவார்கள். இது உடலுக்கு மட்டுமில்லாமல், மூளையின் செயல்பாட்டுக்கும் பயிற்சியாக அமையும். இதன் மூலம் வகுப்புகளில் சிறப்பாக செயல்படுவார்கள்.
மன அழுத்தம் குறைதல்
மாறிவரும் வாழ்க்கை முறையால் பெரியவர்கள் மட்டுமில்லாமல், குழந்தைகளும் மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். அவர்களின் மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி அளிப்பதற்கு உடற்பயிற்சியில் ஈடுபடுவது முக்கியமானது. இதற்கு ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபடுவது சிறந்த வழியாகும்.
சமூக திறன்களை மேம்படுத்துதல்
ஸ்கேட்டிங் வளையத்துக்குள் சறுக்கி விளையாடும்போது மற்ற பிள்ளைகளுடன் ஒன்றுபட்டு செயல்படுவார்கள். இதன் மூலம் சமூகத்தில் தயக்கமின்றி பழகும் குணத்தை பெற முடியும். மற்றவர்களை எளிதாக நண்பர்களாக மாற்றிக்கொள்ள முடியும்.
தன்னம்பிக்கை அதிகரித்தல்
சில விளையாட்டுக்களைக் கற்றுத் தேர்வதற்கு கால தாமதம் ஆகக்கூடும். ஸ்கேட்டிங் விளையாட்டை சில மணி நேரங்களில் எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் குழந்தைகளுக்கு எதையும் எளிதாக கற்கலாம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
மற்ற விளையாட்டுகளைப் போலவே, ஸ்கேட்டிங் விளையாடுவதன் மூலமும் குழந்தைகளுக்கு ஏராளமான நன்மைகள் உண்டாகின்றன. மூளையின் ஆற்றலை அதிகரிப்பது முதல் சமூக திறன்களை மேம்படுத்துவது வரை குழந்தையின் வளர்ச்சிக்கு ஸ்கேட்டிங் உதவுகிறது.
மூளையின் செயல்பாடு
குழந்தைகள் சறுக்கி விளையாடும்போது வேகமாகவும், கட்டுப்பாடோடும் செயல்படுவார்கள். இது உடலுக்கு மட்டுமில்லாமல், மூளையின் செயல்பாட்டுக்கும் பயிற்சியாக அமையும். இதன் மூலம் வகுப்புகளில் சிறப்பாக செயல்படுவார்கள்.
மன அழுத்தம் குறைதல்
மாறிவரும் வாழ்க்கை முறையால் பெரியவர்கள் மட்டுமில்லாமல், குழந்தைகளும் மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். அவர்களின் மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி அளிப்பதற்கு உடற்பயிற்சியில் ஈடுபடுவது முக்கியமானது. இதற்கு ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபடுவது சிறந்த வழியாகும்.
சமூக திறன்களை மேம்படுத்துதல்
ஸ்கேட்டிங் வளையத்துக்குள் சறுக்கி விளையாடும்போது மற்ற பிள்ளைகளுடன் ஒன்றுபட்டு செயல்படுவார்கள். இதன் மூலம் சமூகத்தில் தயக்கமின்றி பழகும் குணத்தை பெற முடியும். மற்றவர்களை எளிதாக நண்பர்களாக மாற்றிக்கொள்ள முடியும்.
தன்னம்பிக்கை அதிகரித்தல்
சில விளையாட்டுக்களைக் கற்றுத் தேர்வதற்கு கால தாமதம் ஆகக்கூடும். ஸ்கேட்டிங் விளையாட்டை சில மணி நேரங்களில் எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் குழந்தைகளுக்கு எதையும் எளிதாக கற்கலாம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
உங்கள் குழந்தைக்கு கோபம் வருவதற்கான காரணத்தை முதலில் கண்டறிய முற்படுங்கள். சில நேரம் உங்கள் கவனத்தை ஈர்க்க அவர்கள் தங்களின் கோபத்தை வெளிக்காட்டலாம்.
எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளும் குழந்தையை கையாள்வது ஒன்றும் இலகுவான காரியம் அல்ல. அவர்களை மாற்றுவதற்கு நீண்ட காலம் எடுக்கும். அதற்கு முக்கியமாக தேவைப்படுவது பொறுமையும் நீடித்து நிலைக்கும் திறன் தான். குழந்தைகள் அமைதியாக அழுதல் அல்லது மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளுதல் என எப்படி வேண்டுமானாலும் அவர்கள் அவர்களின் கோபத்தை வெளிக்காட்டுவார்கள். இது போக உங்களை அடிக்கலாம், கூச்சலிடலாம், அழலாம் அல்லது கடிக்க கூட செய்யலாம். இவைகளில் எதையாவது அவர்கள் அடிக்கடி தொடர்ச்சியாக செய்தால், அதிக கோபம் கொள்ளும் உங்கள் குழந்தையை கையாள நேரம் வந்து விட்டது என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.
குழந்தைகள் அடம் பிடித்து சண்டித்தனம் செய்யும் போது பெற்றோர்களுக்கு மன அழுத்தமும் எரிச்சலும் ஏற்படும். இதனை நடத்தை பிரச்சனையின் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ளலாம். நிலையான அக்கறையும் மன ஒருமித்தலும் இருந்தால் போதும், உங்கள் குழந்தையின் இந்த குணத்தை மாற்றி விடலாம். அவர்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தி அமைதியான பிறகு அவர்களுடன் பேசுங்கள். இது ஒரு தீய பழக்கம் என்று புரிய வையுங்கள். இவ்வகை சூழ்நிலைகளை சமாளிக்க சில தகவல்களை நீங்கள் அறிந்திருந்தால் இந்த வேலையை சுலபமாக செய்து முடிக்கலாம்.
உங்கள் குழந்தைக்கு கோபம் வருவதற்கான காரணத்தை முதலில் கண்டறிய முற்படுங்கள். சில நேரம் உங்கள் கவனத்தை ஈர்க்க அவர்கள் தங்களின் கோபத்தை வெளிக்காட்டலாம். அல்லது அவர்கள் தேவைகள் நிராகரிக்கப்படும் போதும் அவர்கள் தங்களின் கோபத்தை வெளிக்காட்டலாம். உங்கள் குழந்தைக்கு கோபத்தை உண்டாக்கும் சூழ்நிலைகள் திரும்ப ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். செயல்பாட்டில் இறங்குவதற்கு முன்பு சரியாக திட்டமிடுவது மிகவும் முக்கியம். அதனால் களத்தில் இறங்கும் முன் முதலில் சில விதிமுறைகளை போடுங்கள். குழந்தையின் சில தேவையை நீங்கள் நிராகரிப்பதற்கான சரியான காரணத்தை அவர்களுக்கு புரிய வையுங்கள். அதே நேரம் அவர்களின் அனைத்து தேவைகளையும் நீங்கள் நிராகரிக்காதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் குழந்தைக்கு அதிக அளவில் கோபம் வருவதை நீங்கள் கண்டறிந்தால், அதற்குரிய நடவடிக்கைகளில் உடனே இறங்குங்கள். இதனால் அதிக கோபம் கொள்ளும் உங்கள் குழந்தையை சுலபமாகவும் வேகமாகவும் சரி செய்து விடலாம். ஓய்வில்லாமல் இருக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் குணத்தை மேம்படுத்த போதிய நேரம் ஒதுக்குவதில்லை. குழந்தைகள் எதற்கெடுத்தாலும் கோபப்படுவதற்கு இதுவும் கூட ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது. அதனால் உங்கள் குழந்தைகளுடன் போதிய நேரம் செலவழித்து எது சரி எது தப்பு என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள்.
சில நேரங்களில் உங்கள் குழந்தையின் முன் கோபத்தை கையாள அவர்களின் கோபத்தை புறக்கணிப்பதே சிறந்த வழியாக விளங்கும். அவர்களின் தேவை எல்லாம் அவர்களின் பிடிவாதத்தால் நிறைவேறும் என்று அவர்கள் தெரிந்து கொண்டால், தொடர்ந்து பிடிவாதம் பிடித்துக் கொண்டே தான் இருப்பார்கள். நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளால் உடனடி பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். அதற்கு சிறிது காலம் எடுக்கும். நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ச்சியான பொறுமையை நீங்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். உங்கள் குழந்தையின் முன் கோபத்தை கையாள இதுவும் உங்களுக்கு உதவி புரியும்.
உங்கள் குழந்தை கோபத்தை எப்படி வெளிப்படுத்தினாலும் சரி, அவர்களை பார்த்து கத்தாதீர்கள். உங்களின் கவனத்தை ஈர்க்கவே அவர்கள் இப்படி நடந்து கொள்ளும் போது, நீங்கள் அவர்களை பார்த்து கத்துவது அவர்களுக்கு கூடுதல் சுவாரசியத்தை உண்டாக்கி விடும். அவர்களை அடிக்கும் பொழுது அதுவே அவர்களுக்கு பழகிவிடும். பயம் என்பதே இல்லாமல் போய் விடும்.
குழந்தைகள் அடம் பிடித்து சண்டித்தனம் செய்யும் போது பெற்றோர்களுக்கு மன அழுத்தமும் எரிச்சலும் ஏற்படும். இதனை நடத்தை பிரச்சனையின் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ளலாம். நிலையான அக்கறையும் மன ஒருமித்தலும் இருந்தால் போதும், உங்கள் குழந்தையின் இந்த குணத்தை மாற்றி விடலாம். அவர்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தி அமைதியான பிறகு அவர்களுடன் பேசுங்கள். இது ஒரு தீய பழக்கம் என்று புரிய வையுங்கள். இவ்வகை சூழ்நிலைகளை சமாளிக்க சில தகவல்களை நீங்கள் அறிந்திருந்தால் இந்த வேலையை சுலபமாக செய்து முடிக்கலாம்.
உங்கள் குழந்தைக்கு கோபம் வருவதற்கான காரணத்தை முதலில் கண்டறிய முற்படுங்கள். சில நேரம் உங்கள் கவனத்தை ஈர்க்க அவர்கள் தங்களின் கோபத்தை வெளிக்காட்டலாம். அல்லது அவர்கள் தேவைகள் நிராகரிக்கப்படும் போதும் அவர்கள் தங்களின் கோபத்தை வெளிக்காட்டலாம். உங்கள் குழந்தைக்கு கோபத்தை உண்டாக்கும் சூழ்நிலைகள் திரும்ப ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். செயல்பாட்டில் இறங்குவதற்கு முன்பு சரியாக திட்டமிடுவது மிகவும் முக்கியம். அதனால் களத்தில் இறங்கும் முன் முதலில் சில விதிமுறைகளை போடுங்கள். குழந்தையின் சில தேவையை நீங்கள் நிராகரிப்பதற்கான சரியான காரணத்தை அவர்களுக்கு புரிய வையுங்கள். அதே நேரம் அவர்களின் அனைத்து தேவைகளையும் நீங்கள் நிராகரிக்காதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் குழந்தைக்கு அதிக அளவில் கோபம் வருவதை நீங்கள் கண்டறிந்தால், அதற்குரிய நடவடிக்கைகளில் உடனே இறங்குங்கள். இதனால் அதிக கோபம் கொள்ளும் உங்கள் குழந்தையை சுலபமாகவும் வேகமாகவும் சரி செய்து விடலாம். ஓய்வில்லாமல் இருக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் குணத்தை மேம்படுத்த போதிய நேரம் ஒதுக்குவதில்லை. குழந்தைகள் எதற்கெடுத்தாலும் கோபப்படுவதற்கு இதுவும் கூட ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது. அதனால் உங்கள் குழந்தைகளுடன் போதிய நேரம் செலவழித்து எது சரி எது தப்பு என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள்.
சில நேரங்களில் உங்கள் குழந்தையின் முன் கோபத்தை கையாள அவர்களின் கோபத்தை புறக்கணிப்பதே சிறந்த வழியாக விளங்கும். அவர்களின் தேவை எல்லாம் அவர்களின் பிடிவாதத்தால் நிறைவேறும் என்று அவர்கள் தெரிந்து கொண்டால், தொடர்ந்து பிடிவாதம் பிடித்துக் கொண்டே தான் இருப்பார்கள். நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளால் உடனடி பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். அதற்கு சிறிது காலம் எடுக்கும். நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ச்சியான பொறுமையை நீங்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். உங்கள் குழந்தையின் முன் கோபத்தை கையாள இதுவும் உங்களுக்கு உதவி புரியும்.
உங்கள் குழந்தை கோபத்தை எப்படி வெளிப்படுத்தினாலும் சரி, அவர்களை பார்த்து கத்தாதீர்கள். உங்களின் கவனத்தை ஈர்க்கவே அவர்கள் இப்படி நடந்து கொள்ளும் போது, நீங்கள் அவர்களை பார்த்து கத்துவது அவர்களுக்கு கூடுதல் சுவாரசியத்தை உண்டாக்கி விடும். அவர்களை அடிக்கும் பொழுது அதுவே அவர்களுக்கு பழகிவிடும். பயம் என்பதே இல்லாமல் போய் விடும்.
சாதாரண குழந்தைகளிடம் செலுத்தும் அன்பைவிட, இந்தக் குழந்தைகளுக்கு கூடுதல் அன்பு தேவைப்படும். அவர்களின் நடவடிக்கைகளை நன்றாக கவனியுங்கள்.
ஆட்டிசம் என்பது மூளை மற்றும் நரம்பியல் சார்ந்த குறைபாடாகும். இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மற்றவர்களுடன் பேசும் மற்றும் பழகும் திறனில் வேறுபாடு இருக்கும். ஒரே மாதிரியான செயலைத் திரும்பத் திரும்பச் செய்வார்கள். காரணமின்றி அழுவது, சிரிப்பது, கைகளைத் தட்டுவது, குதிப்பது, விரல்கள், கைகள் மற்றும் உடலை இயல்புக்கு மாறாக அசைப்பது, கண்களைப் பார்த்து பேச முடியாதது போன்றவை ஆட்டிசத்துக்கான அறிகுறிகள்.
ஆட்டிசம் நோய் வருவதற்கான காரணம் என்ன?
ஆட்டிசம் நோய் வருவதற்கு குறிப்பிட்ட காரணங்கள் கிடையாது. மரபு ரீதியாக வரலாம். மதுப்பழக்கம், கருவில் குழந்தையை சுமக்கும்போது ஆரோக்கியமான உணவுகள் சாப்பிடாமல் இருப்பது போன்றவற்றாலும் ஆட்டிசம் குறைபாடு ஏற்படலாம்.
ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பெற்றோர் எப்படி கையாள வேண்டும்?
குழந்தை பிறந்து பத்து மாதங்களுக்குப் பிறகே ‘ஆட்டிசம் குறைபாடு இருக்கிறதா?’ என அடையாளம் காண முடியும். இந்த நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது என்பதால், ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர் அதிக நேரத்தையும், கவனத்தையும் செலவிட வேண்டும்.
சாதாரண குழந்தைகளிடம் செலுத்தும் அன்பைவிட, இந்தக் குழந்தைகளுக்கு கூடுதல் அன்பு தேவைப்படும். அவர்களின் நடவடிக்கைகளை நன்றாக கவனியுங்கள். பிறந்த மூன்று மாதங்களில் இருந்தே, குழந்தையின் கண்களைப் பார்த்து அடிக்கடி பெயர் சொல்லிக் கூப்பிடுங்கள்.
ஒன்பதாம் மாதத்தில் இருந்து புதிர் விளையாட்டுகள், படம் வரைதல், கட்டுமான தொகுதிகள் விளையாட்டு போன்றவற்றில் ஈடுபடுத்துங்கள். குழந்தைகள் சின்னச் சின்ன நல்ல விஷயங்களைச் செய்யும்போது பாராட்டுங்கள். பாராட்டு அவர்களை ஊக்குவிக்கும்.
தினமும் சிறு சிறு பயிற்சிகள் கொடுங்கள். அப்போதுதான் அவர்களின் கற்றுக்கொள்ளும் திறன் அதிகரிக்கும். ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தூங்குவதில் சிரமம் இருக்கும்.
இயல்பாக உள்ள குழந்தை, பெற்றோர் உறங்கச் செல்லும்போதே தானும் உறங்கும். ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைக்கு அது தெரியாது என்பதால், தூங்குவதற்கான சூழ்நிலையை பெற்றோர் உருவாக்க வேண்டும். குழந்தையின் வாய்மொழி அல்லாத தொடர்பை நன்றாக கவனியுங்கள். குழந்தை ஏன் கத்துகிறது? எதைப் பார்த்து சிரிக்கிறது? பசி வந்தால் என்ன செய்கிறது? என்பதை கவனித்து புரிந்து கொள்ள முயற்சியுங்கள்.
ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் சில திறமைகள் இருக்கும். அதைக் கண்காணித்து ஊக்குவிக்க வேண்டும். ‘இவர்கள் தான் என்னுடைய அம்மா-அப்பா’ என்ற புரிதல் இந்தக் குழந்தைகளுக்கு இருக்காது. அதனால் வருத்தம் கொள்ளாதீர்கள். முறையான சிகிச்சையை மேற்கொள்ளும்போது, நல்ல முன்னேற்றங்களைக் காண முடியும்.
ஆட்டிசம் நோய் வருவதற்கான காரணம் என்ன?
ஆட்டிசம் நோய் வருவதற்கு குறிப்பிட்ட காரணங்கள் கிடையாது. மரபு ரீதியாக வரலாம். மதுப்பழக்கம், கருவில் குழந்தையை சுமக்கும்போது ஆரோக்கியமான உணவுகள் சாப்பிடாமல் இருப்பது போன்றவற்றாலும் ஆட்டிசம் குறைபாடு ஏற்படலாம்.
ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பெற்றோர் எப்படி கையாள வேண்டும்?
குழந்தை பிறந்து பத்து மாதங்களுக்குப் பிறகே ‘ஆட்டிசம் குறைபாடு இருக்கிறதா?’ என அடையாளம் காண முடியும். இந்த நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது என்பதால், ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர் அதிக நேரத்தையும், கவனத்தையும் செலவிட வேண்டும்.
சாதாரண குழந்தைகளிடம் செலுத்தும் அன்பைவிட, இந்தக் குழந்தைகளுக்கு கூடுதல் அன்பு தேவைப்படும். அவர்களின் நடவடிக்கைகளை நன்றாக கவனியுங்கள். பிறந்த மூன்று மாதங்களில் இருந்தே, குழந்தையின் கண்களைப் பார்த்து அடிக்கடி பெயர் சொல்லிக் கூப்பிடுங்கள்.
ஒன்பதாம் மாதத்தில் இருந்து புதிர் விளையாட்டுகள், படம் வரைதல், கட்டுமான தொகுதிகள் விளையாட்டு போன்றவற்றில் ஈடுபடுத்துங்கள். குழந்தைகள் சின்னச் சின்ன நல்ல விஷயங்களைச் செய்யும்போது பாராட்டுங்கள். பாராட்டு அவர்களை ஊக்குவிக்கும்.
தினமும் சிறு சிறு பயிற்சிகள் கொடுங்கள். அப்போதுதான் அவர்களின் கற்றுக்கொள்ளும் திறன் அதிகரிக்கும். ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தூங்குவதில் சிரமம் இருக்கும்.
இயல்பாக உள்ள குழந்தை, பெற்றோர் உறங்கச் செல்லும்போதே தானும் உறங்கும். ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைக்கு அது தெரியாது என்பதால், தூங்குவதற்கான சூழ்நிலையை பெற்றோர் உருவாக்க வேண்டும். குழந்தையின் வாய்மொழி அல்லாத தொடர்பை நன்றாக கவனியுங்கள். குழந்தை ஏன் கத்துகிறது? எதைப் பார்த்து சிரிக்கிறது? பசி வந்தால் என்ன செய்கிறது? என்பதை கவனித்து புரிந்து கொள்ள முயற்சியுங்கள்.
ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் சில திறமைகள் இருக்கும். அதைக் கண்காணித்து ஊக்குவிக்க வேண்டும். ‘இவர்கள் தான் என்னுடைய அம்மா-அப்பா’ என்ற புரிதல் இந்தக் குழந்தைகளுக்கு இருக்காது. அதனால் வருத்தம் கொள்ளாதீர்கள். முறையான சிகிச்சையை மேற்கொள்ளும்போது, நல்ல முன்னேற்றங்களைக் காண முடியும்.
கல்லூரியில் ஒழுக்க கேடாக நடந்து கொண்டாலோ கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தினாலோ, கல்லூரியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டாலோ கல்விக்கடன் நிறுத்தப்படும்.
இப்பொழுது மாநில அரசு கல்விக்கு அதிக நிதியை ஒதுக்கி செலவு செய்து வருகிறது. எனவே பள்ளிப்படிப்பு என்பது அனைவருக்கும் எளிதாக கிடைத்து வருகிறது. இதே போல் புதுச்சேரியில் என்ஜினீயரிங், மருத்துவம் போன்ற படிப்புகளில் சென்டாக் மூலம் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு உயர்கல்வி வரை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே செலுத்துகிறது. அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காத ஏழை-எளிய மாணவர்கள் உயர்கல்வி பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே உயர்கல்வி படிப்பவர்களுக்கு வங்கிகள் மூலம் கல்விக்கடன் வழங்கப்படுகிறது.
கல்விக்கடன் வாங்கி படிக்கும் மாணவர்கள் தங்கள் படிப்பில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டியது மிக மிக அவசியம். கல்லூரியில் ஒழுக்க கேடாக நடந்து கொண்டாலோ கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தினாலோ, கல்லூரியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டாலோ கல்விக்கடன் நிறுத்தப்படும். அப்படி நிறுத்தப்பட்டால் அதுவரை வாங்கிய கல்விக்கடனை உடனடியாக வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என்பதை மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கல்விக்கடன் வாங்கி படிக்கும் மாணவர்கள் தங்கள் படிப்பில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டியது மிக மிக அவசியம். கல்லூரியில் ஒழுக்க கேடாக நடந்து கொண்டாலோ கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தினாலோ, கல்லூரியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டாலோ கல்விக்கடன் நிறுத்தப்படும். அப்படி நிறுத்தப்பட்டால் அதுவரை வாங்கிய கல்விக்கடனை உடனடியாக வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என்பதை மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.






