என் மலர்
குழந்தை பராமரிப்பு
விளையாட்டு சூழலில் வளரும் குழந்தைகள் தான் எந்த இக்கட்டான நிலையையும் எதிர்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெறக் கூடியவர்களாக இருப்பார்கள்.
எந்தவித கவலையும் இன்றி ஓடியாடி, வியர்க்க வியர்க்க விளையாட ஏற்ற பருவமாக குழந்தை பருவம் உள்ளது. குழந்தைகள் மைதானத்தில் விளையாடும் போது தான் நல்ல உடல்வளர்ச்சி, மன வளர்ச்சி ஏற்படும். அது அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அடுத்தவர்களுடன் நல்லுறவை ஏற்படுத்தவும், வெற்றி, தோல்விகளை சமமாக பாவிக்கும் மனநிலையையும் ஏற்படும்.
அப்படியான விளையாட்டு சூழலில் வளரும் குழந்தைகள் தான் எந்த இக்கட்டான நிலையையும் எதிர்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெறக் கூடியவர்களாக இருப்பார்கள். நவீனயுகத்தில் தொழில்நுட்ப சாதனங்கள் உலகை சுருக்கி விட்டன. அது ஏற்படுத்தும் வசதிகள் இருந்த இடத்தில் இருந்தே அனைத்து வேலைகளையும் செய்து முடித்து விடக் கூடியதாக மாற்றி வருகிறது.
இதன் பயனை பலரும் அனுபவிக்க தொடங்கி இருக்கிறார்கள். அரசும் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்த அறிவுறுத்தி வருகிறது. இதனால் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் செல்போன், கணினி போன்ற சாதனங்கள் வீட்டில் வாங்கி வைக்க வேண்டிய நிலைக்கு நாம் வந்து விட்டோம். ஆனால் அதை பயன்படுத்துவதும் முறையில் தான் தற்போது பெரிய அளவில் சிக்கல் எழுந்து உள்ளது.
தற்போது குழந்தைகள் மிகுந்த புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்கள் செல்போன்கள், கணினி போன்ற தகவல் தொழில்நுட்பங்களை மிக எளிதாகவும், வேகமாகவும் கையாளுகிறார்கள். இது பெற்றோருக்கு மிகுந்த மகிழ்ச்சி யையும், பெருமையையும் அளிக்கிறது. எனவே அவற்றை எந்த நேரமும் பயன்படுத்த குழந்தைகளை பெற்றோர் அனுமதிக்கிறார்கள்.

ஆனால் அதில் குழந்தைகளை கவரும் வகையில் வித விதமாக விளையாட்டுகள் வடிவமைக்கப்பட்டு இணைய தளங்களில் பதிவிடப்பட்டு உள்ளன. இதன் காரணமாக குழந்தைகள் விளையாட்டுகளம் மாறி இருக்கிறது. குழந் தைகள் வீட்டின் படியை தாண்டாமல் தனி அறைக்குள்ளேயே விளையாடும் அபாயம் வளர்ந்து வருகிறது. அது தான் செல்போன்களில் வரும் இணையதள விளையாட்டு. இது பொழுதுபோக்கு, மகிழ்ச்சிக்காக என்ற நிலையில் இருந்து உயிரை பறிக்கும் ஆபத்தான விளையாட்டாக மாறி வருகிறது.
குறும்பு செய்யாமல் ஓரத்தில் அமர்ந்து குழந்தை விளையாடுகிறது. தன்னை தொந்தரவு செய்யாமல் இருக்கிறது என்று பெற்றோர் கண்டுகொள்ளாமல் இருப்பது பெரிய ஆபத்தில் முடியும் அபாயம் உள்ளது. இணையதளத்தில் குழந்தைகளை கவரும் வகையில் விதவிதமாக விளையாட்டுகள் பதிவிடப்படுகின்றன. அதை விளையாடி பழகும் குழந்தைகள் நாட்கள் செல்கிற போது அதற்கு அடிமையாகி விடுகின்றன.
இதன் மூலம் குழந்தைகளின் சிந்தனை, செயல்திறன் பாதிக்கிறது. குழந்தைகளில் இயல்பாக இருக்கும் வேறு திறன்கள் முழுவதுமாக அழிக்கப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகள் இணையதள விளையாட்டின் பிடியில் இருந்து மீண்டும் வர முடியாமல் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். மேலும் அவர்கள் தங்களின் சுயநிலையில் இருந்து சிந்தித்து தன்னை திருத்திக் கொள்ள நினைத்தாலும், தேவையில்லாத மன உளைச்சலுக்கு ஆளாகி விடுகின்றனர். இது குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு பெரிய தடையாக மாறுகிறது.
எனவே குழந்தைகளுக்காக இணையதளத்தில் பிரத்யேக மாக வடிவமைக்கப்பட்ட செல்போன் விளையாட்டுகளில் குழந்தைகள் மூழ்கிவிடாமல் இருக்க பெற்றோர்தான் எச்சரிக் கையாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அதனால் ஏற் படக்கூடிய பாதிப்பால் கஷ்டத்தை அனுபவிக்கக் கூடியவர் களாக அவர்கள் இருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. மாணவ-மாணவிகள் எந்த நிலையில் நண்பர்களுடன், தோழர் களுடன் கூடி ஓடியாடி விளையாடுவதில் ஆர்வம் காட்ட வேண்டும். அதுதான் குழந்தைகளுக்கு உண்மையான மகிழ்ச்சியையும், ஆரோக்கியமான மனநிலையையும் வழங்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
அப்படியான விளையாட்டு சூழலில் வளரும் குழந்தைகள் தான் எந்த இக்கட்டான நிலையையும் எதிர்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெறக் கூடியவர்களாக இருப்பார்கள். நவீனயுகத்தில் தொழில்நுட்ப சாதனங்கள் உலகை சுருக்கி விட்டன. அது ஏற்படுத்தும் வசதிகள் இருந்த இடத்தில் இருந்தே அனைத்து வேலைகளையும் செய்து முடித்து விடக் கூடியதாக மாற்றி வருகிறது.
இதன் பயனை பலரும் அனுபவிக்க தொடங்கி இருக்கிறார்கள். அரசும் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்த அறிவுறுத்தி வருகிறது. இதனால் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் செல்போன், கணினி போன்ற சாதனங்கள் வீட்டில் வாங்கி வைக்க வேண்டிய நிலைக்கு நாம் வந்து விட்டோம். ஆனால் அதை பயன்படுத்துவதும் முறையில் தான் தற்போது பெரிய அளவில் சிக்கல் எழுந்து உள்ளது.
தற்போது குழந்தைகள் மிகுந்த புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்கள் செல்போன்கள், கணினி போன்ற தகவல் தொழில்நுட்பங்களை மிக எளிதாகவும், வேகமாகவும் கையாளுகிறார்கள். இது பெற்றோருக்கு மிகுந்த மகிழ்ச்சி யையும், பெருமையையும் அளிக்கிறது. எனவே அவற்றை எந்த நேரமும் பயன்படுத்த குழந்தைகளை பெற்றோர் அனுமதிக்கிறார்கள்.

ஆனால் அதில் குழந்தைகளை கவரும் வகையில் வித விதமாக விளையாட்டுகள் வடிவமைக்கப்பட்டு இணைய தளங்களில் பதிவிடப்பட்டு உள்ளன. இதன் காரணமாக குழந்தைகள் விளையாட்டுகளம் மாறி இருக்கிறது. குழந் தைகள் வீட்டின் படியை தாண்டாமல் தனி அறைக்குள்ளேயே விளையாடும் அபாயம் வளர்ந்து வருகிறது. அது தான் செல்போன்களில் வரும் இணையதள விளையாட்டு. இது பொழுதுபோக்கு, மகிழ்ச்சிக்காக என்ற நிலையில் இருந்து உயிரை பறிக்கும் ஆபத்தான விளையாட்டாக மாறி வருகிறது.
குறும்பு செய்யாமல் ஓரத்தில் அமர்ந்து குழந்தை விளையாடுகிறது. தன்னை தொந்தரவு செய்யாமல் இருக்கிறது என்று பெற்றோர் கண்டுகொள்ளாமல் இருப்பது பெரிய ஆபத்தில் முடியும் அபாயம் உள்ளது. இணையதளத்தில் குழந்தைகளை கவரும் வகையில் விதவிதமாக விளையாட்டுகள் பதிவிடப்படுகின்றன. அதை விளையாடி பழகும் குழந்தைகள் நாட்கள் செல்கிற போது அதற்கு அடிமையாகி விடுகின்றன.
இதன் மூலம் குழந்தைகளின் சிந்தனை, செயல்திறன் பாதிக்கிறது. குழந்தைகளில் இயல்பாக இருக்கும் வேறு திறன்கள் முழுவதுமாக அழிக்கப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகள் இணையதள விளையாட்டின் பிடியில் இருந்து மீண்டும் வர முடியாமல் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். மேலும் அவர்கள் தங்களின் சுயநிலையில் இருந்து சிந்தித்து தன்னை திருத்திக் கொள்ள நினைத்தாலும், தேவையில்லாத மன உளைச்சலுக்கு ஆளாகி விடுகின்றனர். இது குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு பெரிய தடையாக மாறுகிறது.
எனவே குழந்தைகளுக்காக இணையதளத்தில் பிரத்யேக மாக வடிவமைக்கப்பட்ட செல்போன் விளையாட்டுகளில் குழந்தைகள் மூழ்கிவிடாமல் இருக்க பெற்றோர்தான் எச்சரிக் கையாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அதனால் ஏற் படக்கூடிய பாதிப்பால் கஷ்டத்தை அனுபவிக்கக் கூடியவர் களாக அவர்கள் இருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. மாணவ-மாணவிகள் எந்த நிலையில் நண்பர்களுடன், தோழர் களுடன் கூடி ஓடியாடி விளையாடுவதில் ஆர்வம் காட்ட வேண்டும். அதுதான் குழந்தைகளுக்கு உண்மையான மகிழ்ச்சியையும், ஆரோக்கியமான மனநிலையையும் வழங்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
குழந்தைகளை தலைக்கு மேல் தூக்கிப்போட்டு விளையாடாதீர்கள். அது விபரீதமானது. குழந்தைக்கு பேராபத்தை உண்டாக்கும்.
மனிதனுக்கு சிரசே பிரதானம் என்பார்கள். அதனால்தான் சில சமயம் தலையில் ஏற்படும் சிறு காயம் கூட மனித உயிரைப் பறித்து விடுகிறது. இதற்கு மூளை பாதிக்கப்படுவதே காரணம். ஆனால், இப்படி காயம் எதுவும் இல்லாமல் மூளை பாதிக்கும் பருவங்கள் இரண்டு முறை மனித வாழ்நாளிலே வருவதுண்டு. ஒன்று முதுமைப் பருவம். மற்றொன்று குழந்தைப் பருவம்.
சாதாரணமாக தலையின் மண்டை ஓட்டுக்குள் சிறிதுகூட அங்கும் இங்கும் அசையாதபடி மூளை, கச்சிதமாக பொருந்தியிருக்கும். ஆனால், வயது ஆக ஆக முதுமையின் காரணமாக மூளையின் அளவு கொஞ்சமாக சுருங்கக்கூடும். இந்த நிலையில் கபாலத்துக்குள் மூளை உரசும் சூழ்நிலை ஏற்படுகிறது. இப்படி உரசும்போது மூளையின் ரத்தக்குழாயில் கீறல் விழுந்துவிடும்.
அதன்வழியாக கசியும் ரத்தம் உறைந்து சில மாதங்களுக்குள்ளாகவோ, சில நாட்களிலோ, ஏன் சில மணி நேரத்திலோ அல்லது உடனடியாகவோ உயிரைப் பறித்துவிடும். இதைத்தான் மருத்துவர்கள் ‘ஸப்டியூரல் ஹெமடோமா‘ என்று அழைக்கிறார்கள்.

நன்றாக பேசிக்கொண்டிருக்கும் முதியவர்கள் திடீரென்று மரணத்தை சந்திப்பது இப்படித்தான். சரி, இப்போது குழந்தைகளுக்கு வருவோம். குழந்தைகள் இதில் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்? வயதானவர்களுக்கு மூளை சுருங்குவதால் இந்த பாதிப்பு என்றால் குழந்தைகளுக்கு மூளை முழு வளர்ச்சி அடையாத நிலையில் அதன் மூளை மண்டை ஓட்டுக்குள் உரசும் நிலையிலேயே இருக்கும்.
குழந்தைகளை ஆசையோடு தலைக்கு மேலே தூக்கிப்போட்டு விளையாடும்போது குழந்தை சந்தோஷமாக சிரிக்கும். அதே வேளையில் சில குழந்தைகளுக்கு முதியவர்களுக்கு ஏற்படுவதுபோல் மூளை உரசல் ஏற்பட்டு பாதிக்கப்படும். இதை ‘ஷேக்கிங் ஹெட் இன்ஜுரி‘ என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். அதாவது ‘தலை குலுக்கு காயம்‘ என்று பெயர்.
குழந்தைகளுக்கு இப்படியும் ஓர் ஆபத்து இருப்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. குழந்தையை தலைக்கு மேலே தூக்கிப்போட்டு பிடிக்கும்போது குழந்தையின் தலைக்குள் மூளை கடுமையாக பாதிக்கப்படுகிறது. இது உடனடியாக வெளியில் தெரிவதில்லை.
சிறிது நேரம் கழித்து குழந்தை அழும். பின்பு தூங்கும். அவ்வளவுதான், அதன்பின் திரும்ப விழிக்காது. அதனால் குழந்தைகளை தலைக்கு மேல் தூக்கிப்போட்டு விளையாடாதீர்கள். அது விபரீதமானது. குழந்தைக்கு பேராபத்தை உண்டாக்கும்.
சாதாரணமாக தலையின் மண்டை ஓட்டுக்குள் சிறிதுகூட அங்கும் இங்கும் அசையாதபடி மூளை, கச்சிதமாக பொருந்தியிருக்கும். ஆனால், வயது ஆக ஆக முதுமையின் காரணமாக மூளையின் அளவு கொஞ்சமாக சுருங்கக்கூடும். இந்த நிலையில் கபாலத்துக்குள் மூளை உரசும் சூழ்நிலை ஏற்படுகிறது. இப்படி உரசும்போது மூளையின் ரத்தக்குழாயில் கீறல் விழுந்துவிடும்.
அதன்வழியாக கசியும் ரத்தம் உறைந்து சில மாதங்களுக்குள்ளாகவோ, சில நாட்களிலோ, ஏன் சில மணி நேரத்திலோ அல்லது உடனடியாகவோ உயிரைப் பறித்துவிடும். இதைத்தான் மருத்துவர்கள் ‘ஸப்டியூரல் ஹெமடோமா‘ என்று அழைக்கிறார்கள்.

நன்றாக பேசிக்கொண்டிருக்கும் முதியவர்கள் திடீரென்று மரணத்தை சந்திப்பது இப்படித்தான். சரி, இப்போது குழந்தைகளுக்கு வருவோம். குழந்தைகள் இதில் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்? வயதானவர்களுக்கு மூளை சுருங்குவதால் இந்த பாதிப்பு என்றால் குழந்தைகளுக்கு மூளை முழு வளர்ச்சி அடையாத நிலையில் அதன் மூளை மண்டை ஓட்டுக்குள் உரசும் நிலையிலேயே இருக்கும்.
குழந்தைகளை ஆசையோடு தலைக்கு மேலே தூக்கிப்போட்டு விளையாடும்போது குழந்தை சந்தோஷமாக சிரிக்கும். அதே வேளையில் சில குழந்தைகளுக்கு முதியவர்களுக்கு ஏற்படுவதுபோல் மூளை உரசல் ஏற்பட்டு பாதிக்கப்படும். இதை ‘ஷேக்கிங் ஹெட் இன்ஜுரி‘ என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். அதாவது ‘தலை குலுக்கு காயம்‘ என்று பெயர்.
குழந்தைகளுக்கு இப்படியும் ஓர் ஆபத்து இருப்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. குழந்தையை தலைக்கு மேலே தூக்கிப்போட்டு பிடிக்கும்போது குழந்தையின் தலைக்குள் மூளை கடுமையாக பாதிக்கப்படுகிறது. இது உடனடியாக வெளியில் தெரிவதில்லை.
சிறிது நேரம் கழித்து குழந்தை அழும். பின்பு தூங்கும். அவ்வளவுதான், அதன்பின் திரும்ப விழிக்காது. அதனால் குழந்தைகளை தலைக்கு மேல் தூக்கிப்போட்டு விளையாடாதீர்கள். அது விபரீதமானது. குழந்தைக்கு பேராபத்தை உண்டாக்கும்.
குழந்தைகளின் கவனிப்பில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோருக்கு, குழந்தையின் பாதுகாப்பு நலன் மிகவும் முக்கியமானது.
பெரும்பாலான பெற்றோர், தங்கள் குழந்தைகளின் திறமையை, மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு சொல்வார்கள். உங்கள் குழந்தைகளுக்கிடையே உள்ள திறன்களை, மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசுவதன் மூலம் அவர்களுக்குள் விரோதத்தை வளர்க்கும். ஆகவே அதைத் தவிர்க்க வேண்டும். மேலும் இவ்வாறு செய்வதால், உடன்பிறப்புகளுக்கிடையே பிளவு உருவாக்கலாம்.
குழந்தைகளுக்கு இடையிலான மதிப்பிடுதலை தவிர்த்தால், குழந்தைகளுக்கு, உங்கள் மீது ஏற்படும் வெறுப்புணர்வுகளை தவிர்க்கலாம். உங்கள் குழந்தைக்கு இருக்கும் திறமை, மற்றவர்களின் குழந்தைக்கு இல்லாமல் இருக்கும். அதை முதலில் கண்டறிய வேண்டும். குழந்தைகளின் செயல், சில நேரங்களில் எரிச்சலூட்டும் வகையில் இருக்க வேண்டும்.
அப்போது, நீங்கள் குழந்தையாக இருக்கும் போது செய்த தவறுகள், அப்பொழுது, உங்கள் பெற்றோருக்கு உண்டான தொந்தரவுகளை நினைவுப்படுத்தி பார்க்க வேண்டும். படி, படி என்று, குழந்தைகளை எப்போதும் தொந்தரவு செய்யக் கூடாது.
படிக்கும் போது, எல்லோருமே தவறு செய்வது இயல்பு. தவறை, மென்மையாக திருத்த வேண்டியது முக்கிய கடமை. ஒரு பெற்றோர் என்ற முறையில் குழந்தைகளுக்கு வழிக்காட்டியாக இருக்க வேண்டுமே தவிர, உங்களின் கருத்துக்களை ஏற்க, ஒரு போதும் கட்டாயப்படுத்தக் கூடாது.

அப்பொழுது குழந்தைகள் இதுபோன்ற சூழல்களை புரிந்துக் கொள்ளும் ஆற்றல் இல்லாமல் இருப்பார்கள். இந்த நேரத்தில் பொறுமையிழந்து, அவசரப்பட்டு, அவர்களை திட்டக்கூடாது. இது, குழந்தைகளிடையே தேவையற்ற மன அழுத்தத்தையே உண்டாக்கும். இதுபோன்ற சமயத்தில், பொறுமையாக இருந்து, கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்.
குழந்தைக்கு, நல்லது மற்றும் கெட்டது என, இரண்டுக்கும் இடையேயான வித்தியாசத்தை புரிய வைக்க, சிறந்த மற்றும் பொறுமையான வழிகள் பல உள்ளன.
குழந்தைகள் முன், பெற்றோர், வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும். அவர்கள் முன் வாக்குவாதம் செய்யும் போது, மன உளைச்சல் மற்றும் ஒருவித பயத்துக்கு ஆளாக நேரிடும். எக்காரணம் கொண்டும், விரோதத்தை, குழந்தைகள் மீது செலுத்தினால், உங்கள் மீதான மரியாதையை, நீங்களே கெடுத்துக் கொள்வீர்கள். குழந்தைகளின் மகிழ்ச்சியை பறிக்கும் எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம்.
நேரம் கிடைக்கும் போது, சுற்றுலா அழைத்து செல்வதும், இயல்பாக விளையாட விடுவதும், அவர்களுக்கு பிடித்துப் போகும். குழந்தைகளை, அவர்களின் சொந்த எண்ணத்தின் படி வாழ விடுவது நல்லது;
தவறான வழியில் செல்லாமல் இருக்க, கொஞ்சம் கடிவாளமும் இருக்க வேண்டும். அவசரப்பட்டு சொல்லுகின்ற ஒரு வார்த்தை, மனம் நோகச் செய்யும். வார்த்தைகளை எப்போதும் சரியாக கையாள வேண்டும். நல்ல நண்பர்களை எப்படி தேர்வு செய்வது என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும். முக்கியமாக, குழந்தைகளிடம் கூடுதல் நேரம் செலவழித்தால், தங்கள் மனதில் உள்ளதை மறைக்காமல் சொல்லி விடுவர். இது, எதிர்கால வாழ்க்கைக்கும் பயனுள்ளதாக இருக்கும்
குழந்தைகளுக்கு இடையிலான மதிப்பிடுதலை தவிர்த்தால், குழந்தைகளுக்கு, உங்கள் மீது ஏற்படும் வெறுப்புணர்வுகளை தவிர்க்கலாம். உங்கள் குழந்தைக்கு இருக்கும் திறமை, மற்றவர்களின் குழந்தைக்கு இல்லாமல் இருக்கும். அதை முதலில் கண்டறிய வேண்டும். குழந்தைகளின் செயல், சில நேரங்களில் எரிச்சலூட்டும் வகையில் இருக்க வேண்டும்.
அப்போது, நீங்கள் குழந்தையாக இருக்கும் போது செய்த தவறுகள், அப்பொழுது, உங்கள் பெற்றோருக்கு உண்டான தொந்தரவுகளை நினைவுப்படுத்தி பார்க்க வேண்டும். படி, படி என்று, குழந்தைகளை எப்போதும் தொந்தரவு செய்யக் கூடாது.
படிக்கும் போது, எல்லோருமே தவறு செய்வது இயல்பு. தவறை, மென்மையாக திருத்த வேண்டியது முக்கிய கடமை. ஒரு பெற்றோர் என்ற முறையில் குழந்தைகளுக்கு வழிக்காட்டியாக இருக்க வேண்டுமே தவிர, உங்களின் கருத்துக்களை ஏற்க, ஒரு போதும் கட்டாயப்படுத்தக் கூடாது.

அப்பொழுது குழந்தைகள் இதுபோன்ற சூழல்களை புரிந்துக் கொள்ளும் ஆற்றல் இல்லாமல் இருப்பார்கள். இந்த நேரத்தில் பொறுமையிழந்து, அவசரப்பட்டு, அவர்களை திட்டக்கூடாது. இது, குழந்தைகளிடையே தேவையற்ற மன அழுத்தத்தையே உண்டாக்கும். இதுபோன்ற சமயத்தில், பொறுமையாக இருந்து, கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்.
குழந்தைக்கு, நல்லது மற்றும் கெட்டது என, இரண்டுக்கும் இடையேயான வித்தியாசத்தை புரிய வைக்க, சிறந்த மற்றும் பொறுமையான வழிகள் பல உள்ளன.
குழந்தைகள் முன், பெற்றோர், வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும். அவர்கள் முன் வாக்குவாதம் செய்யும் போது, மன உளைச்சல் மற்றும் ஒருவித பயத்துக்கு ஆளாக நேரிடும். எக்காரணம் கொண்டும், விரோதத்தை, குழந்தைகள் மீது செலுத்தினால், உங்கள் மீதான மரியாதையை, நீங்களே கெடுத்துக் கொள்வீர்கள். குழந்தைகளின் மகிழ்ச்சியை பறிக்கும் எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம்.
நேரம் கிடைக்கும் போது, சுற்றுலா அழைத்து செல்வதும், இயல்பாக விளையாட விடுவதும், அவர்களுக்கு பிடித்துப் போகும். குழந்தைகளை, அவர்களின் சொந்த எண்ணத்தின் படி வாழ விடுவது நல்லது;
தவறான வழியில் செல்லாமல் இருக்க, கொஞ்சம் கடிவாளமும் இருக்க வேண்டும். அவசரப்பட்டு சொல்லுகின்ற ஒரு வார்த்தை, மனம் நோகச் செய்யும். வார்த்தைகளை எப்போதும் சரியாக கையாள வேண்டும். நல்ல நண்பர்களை எப்படி தேர்வு செய்வது என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும். முக்கியமாக, குழந்தைகளிடம் கூடுதல் நேரம் செலவழித்தால், தங்கள் மனதில் உள்ளதை மறைக்காமல் சொல்லி விடுவர். இது, எதிர்கால வாழ்க்கைக்கும் பயனுள்ளதாக இருக்கும்
குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போதே, சற்று திட உணவுகளையும் கொடுக்க ஆரம்பிக்கும் போது தாய்மார்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போதே, சற்று திட உணவுகளையும் கொடுக்க ஆரம்பிக்கும் போது தாய்மார்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் திடமான உணவுகள் பல உள்ளன. அவை அனைத்தையுமே குழந்தைகளால் சாப்பிட முடியாது. ஆகவே குழந்தைகளுக்கு முதல் முதலில் உணவுகளைக் கொடுக்க நினைக்கும் போது, எந்த உணவுகளையெல்லாம் முதலில் கொடுக்கலாம் என்பதைப் பற்றி தாய்மார்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
உங்கள் குழந்தை நன்கு உட்காரவோ அல்லது தவள ஆரம்பிக்கும் போது திட உணவுகளைக் கொடுக்கலாம்.
உருளைக்கிழங்கு பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ஆகவே குழந்தைக்கு உருளைக்கிழங்கை கொடுக்கும் போது, அதனை நன்கு மென்மையாக மசித்து, உங்கள் விரலால் ஊட்டி விட வேண்டும்.
பூசணிக்காயைக் கூட குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அதிலும் இனிப்பு பூசணிக்காயை குழந்தைக்கு கொடுத்தால், பற்கள் வளரும் போது ஏற்படும் வலியில் இருந்து சற்று நிவாரணம் கிடைக்கும்.

நன்கு கனிந்த வாழைப்பழத்தையும் கொடுக்கலாம். இதனால் அந்த வாழைப்பழத்தில் உள்ள இனிப்பு சுவையினால் குழந்தை விரும்பி சாப்பிட ஆரம்பிக்கும்.
குழந்தைகளுக்கு முதன் முதலில் கொடுக்க வேண்டிய உணவுப் பொருட்களில் ஒன்று தான் ஆப்பிள். இப்படி ஆப்பிளை குழந்தைக்கு கொடுத்தால், அவர்களது நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும்.
மீனை கூட குழந்தைக்கு கொடுக்கலாம். அதிலும் சால்மன் மீன் கொடுப்பது தான் மிகவும் சிறந்தது. குறிப்பாக பாதி துண்டு சால்மன் மீனில் ஒரு சிட்டிகை உப்பு தூவி, வாரத்திற்கு ஒரு முறை கொடுத்தால், மீனில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் கிடைத்து, குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.
நன்கு வேக வைத்த முட்டையை குழந்தைகளுக்கு வாரம் இரண்டு முறை கொடுத்தால், குழந்தை நன்கு வலுவுடன் வளரும்.
அவகேடோவை பாதியாக வெட்டி, அதில் உள்ள கூழ் போன்ற பகுதியை மசித்து, குழந்தைக்கு கொடுத்தால், குழந்தையின் செரிமானம் தடையின்றி நடைபெறும்.
உங்கள் குழந்தை நன்கு உட்காரவோ அல்லது தவள ஆரம்பிக்கும் போது திட உணவுகளைக் கொடுக்கலாம்.
உருளைக்கிழங்கு பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ஆகவே குழந்தைக்கு உருளைக்கிழங்கை கொடுக்கும் போது, அதனை நன்கு மென்மையாக மசித்து, உங்கள் விரலால் ஊட்டி விட வேண்டும்.
பூசணிக்காயைக் கூட குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அதிலும் இனிப்பு பூசணிக்காயை குழந்தைக்கு கொடுத்தால், பற்கள் வளரும் போது ஏற்படும் வலியில் இருந்து சற்று நிவாரணம் கிடைக்கும்.

நன்கு கனிந்த வாழைப்பழத்தையும் கொடுக்கலாம். இதனால் அந்த வாழைப்பழத்தில் உள்ள இனிப்பு சுவையினால் குழந்தை விரும்பி சாப்பிட ஆரம்பிக்கும்.
குழந்தைகளுக்கு முதன் முதலில் கொடுக்க வேண்டிய உணவுப் பொருட்களில் ஒன்று தான் ஆப்பிள். இப்படி ஆப்பிளை குழந்தைக்கு கொடுத்தால், அவர்களது நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும்.
மீனை கூட குழந்தைக்கு கொடுக்கலாம். அதிலும் சால்மன் மீன் கொடுப்பது தான் மிகவும் சிறந்தது. குறிப்பாக பாதி துண்டு சால்மன் மீனில் ஒரு சிட்டிகை உப்பு தூவி, வாரத்திற்கு ஒரு முறை கொடுத்தால், மீனில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் கிடைத்து, குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.
நன்கு வேக வைத்த முட்டையை குழந்தைகளுக்கு வாரம் இரண்டு முறை கொடுத்தால், குழந்தை நன்கு வலுவுடன் வளரும்.
அவகேடோவை பாதியாக வெட்டி, அதில் உள்ள கூழ் போன்ற பகுதியை மசித்து, குழந்தைக்கு கொடுத்தால், குழந்தையின் செரிமானம் தடையின்றி நடைபெறும்.
குழந்தைகளுக்கு தினமும் மசாஜ் செய்துவிடுவது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு குழந்தையின் மீது நீங்கள் வைத்துள்ள அன்பையும் அக்கறையையும் அந்த தொடுதல் அவர்களுக்குப் புரிய வைக்கும்.
குழந்தைகளுக்கு தினமும் மசாஜ் செய்துவிடுவது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு குழந்தையின் மீது நீங்கள் வைத்துள்ள அன்பையும் அக்கறையையும் அந்த தொடுதல் அவர்களுக்குப் புரிய வைக்கும்.
தினமும் குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்துவிடுவது குழந்தைக்கு நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். அதுமட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு ஆயில் மசாஜ் செய்துவிடுவால் வேறு சில நன்மைகளும் உண்டு.
உடல் எடை அதிகரித்தல், செரிமானத்தில் உதவுதல், இரத்த ஓட்டத்தை மேம்படுத்துதல் மற்றும் பற்கள் வளரும்போது வலி அதிகமாகாமல் இருத்தல் என பல நன்மைகள் உண்டு. குழந்தைக்கு ஆரம்ப காலத்திலேயே மசாஜ் செய்து வந்தால், மஞ்சள் காமாலை வராமல் தடுக்க முடியும்.
தூங்கி எழுந்தவுடன் குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்வது கூடாது. குழந்தை விழித்திருக்கும் போது, நன்கு விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது தான் ஆயில் மசாஜ் செய்ய வேண்டும்.
மசாஜ் செய்வதை குழந்தைகள் அனுபவிக்க ஆரம்பித்துவிடும். ஒருவேளை மசாஜ் செய்து கொண்டிருக்கும் பொழுது குழந்தை அழ ஆரம்பித்தால் அதற்கு மசாஜ் செய்தது போதும், நிறுத்த வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
தினமும் குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்துவிடுவது குழந்தைக்கு நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். அதுமட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு ஆயில் மசாஜ் செய்துவிடுவால் வேறு சில நன்மைகளும் உண்டு.
உடல் எடை அதிகரித்தல், செரிமானத்தில் உதவுதல், இரத்த ஓட்டத்தை மேம்படுத்துதல் மற்றும் பற்கள் வளரும்போது வலி அதிகமாகாமல் இருத்தல் என பல நன்மைகள் உண்டு. குழந்தைக்கு ஆரம்ப காலத்திலேயே மசாஜ் செய்து வந்தால், மஞ்சள் காமாலை வராமல் தடுக்க முடியும்.
தூங்கி எழுந்தவுடன் குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்வது கூடாது. குழந்தை விழித்திருக்கும் போது, நன்கு விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது தான் ஆயில் மசாஜ் செய்ய வேண்டும்.
மசாஜ் செய்வதை குழந்தைகள் அனுபவிக்க ஆரம்பித்துவிடும். ஒருவேளை மசாஜ் செய்து கொண்டிருக்கும் பொழுது குழந்தை அழ ஆரம்பித்தால் அதற்கு மசாஜ் செய்தது போதும், நிறுத்த வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
தனிமனித ரீதியாகவும், அரசியல், பொருளாதார ரீதியாகவும் மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற உதவக் கூடியதாக புதிது புதிதாக வரும் பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும்.
கல்வி தான் மனிதனின் வாழ்க்கையை மேம்படுத்தும் கருவி. கல்வி கற்பதில் சிறந்து விளங்கினால் தான் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய முடியும். எனவே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்க பல்வேறு முயற்சிகளை எடுக்கின்றனர். அதற்காக எவ்வளவும் செலவு செய்யவும் தயாராக இருக்கிறார்கள். ஆனால் மாணவர்களுக்கு பள்ளிப்படிப்பு என்பது அத்தனை இனிமையாக இல்லாத நிலையே உள்ளது.
எனவே மாணவர்கள் பள்ளிக் கூடங்களுக்கு மகிழ்ச்சியாகவும், பாடங்களை விரும்பி படிக்க கூடிய வகையில் தயாரிக்க வேண்டியது அவசியம். அதோடு மாறி வரும் சூழலில் மாணவர்கள் படிக்கும் பாடங்கள் உயர்ந்த தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். எத்தகைய போட்டி தேர்வுகளையும் எதிர்கொள்ள பலம் அளிப்பதாக இருக்க வேண்டும் என்று கருத்து பலமாக எழுந்து உள்ளது. அப்படி செய்வதன் மூலம் தான் தமிழக மாணவர்களை தரம் உயர்த்த முடியும். கல்வியின் பயனும் மாணவர்களுக்கு முழுமையாக கிடைக்கும். அதைபூர்த்தி செய்யக் கூடிய வகையில் அரசும், கல்வித் துறையும் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம்.
அந்த வழிமுறையின்படி தான் பாடத்திட்டம், வினாத்தாள், தேர்ச்சி முறை போன்றவற்றில் புதிய நுட்பங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன. இது மாணவர்களுக்கு படிப்பின் மீதானஆர்வத்தை ஏற்படுத்துவதாகவும், தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணத்தை அளிப்பதாக இருக்க வேண்டும். அப்போது தான் தரம் உயர்த்தப்பட்ட கல்வி அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கும். அதை நோக்கமாக கொண்டு பாடத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

வலுவான பாடத்திட்டத்தில் படித்து தேர்ச்சி பெறும் மாணவர்கள்தான் போட்டித்தேர்வுகளை எளிதாக எதிர் கொள்ள முடியும். போட்டித்தேர்வுகள் அனைத்தும் தேசிய மயமாக்கப்படும் சூழல் உருவாகி வருகிறது. அதுபோன்ற நிலையில் தமிழக மாணவர்கள் தங்களின் இடங்களையும், வாய்ப்புகளையும் காத்துக் கொள்ள வேண்டும். அதோடு புதிய பாடத்திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்படும் பாடங்களின் உட்பொருளையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நாட்டில் மாறி வரும் கல்விச் சூழல், தேர்வு முறைக்கு ஏற்ப தமிழகத்தில் பாடத்திட்டங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். அது ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீடு செய்து மாற்றி அமைப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். அப்படி பாடத்திட்டங் களை மாற்றுகிற போது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் தொடர்ந்தும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு கல்வித்துறைக்கு உள்ளது.
மாணவர்கள் எப்போதும் கற்றுக்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும். கல்வித்துறையில் ஏற்படுத்துகிற மாற்றம் தான் சமூகத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நல்லவிதமான மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே தனிமனித ரீதியாகவும், அரசியல், பொருளாதார ரீதியாகவும் மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற உதவக் கூடியதாக புதிது புதிதாக வரும் பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும்.
எனவே மாணவர்கள் பள்ளிக் கூடங்களுக்கு மகிழ்ச்சியாகவும், பாடங்களை விரும்பி படிக்க கூடிய வகையில் தயாரிக்க வேண்டியது அவசியம். அதோடு மாறி வரும் சூழலில் மாணவர்கள் படிக்கும் பாடங்கள் உயர்ந்த தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். எத்தகைய போட்டி தேர்வுகளையும் எதிர்கொள்ள பலம் அளிப்பதாக இருக்க வேண்டும் என்று கருத்து பலமாக எழுந்து உள்ளது. அப்படி செய்வதன் மூலம் தான் தமிழக மாணவர்களை தரம் உயர்த்த முடியும். கல்வியின் பயனும் மாணவர்களுக்கு முழுமையாக கிடைக்கும். அதைபூர்த்தி செய்யக் கூடிய வகையில் அரசும், கல்வித் துறையும் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம்.
அந்த வழிமுறையின்படி தான் பாடத்திட்டம், வினாத்தாள், தேர்ச்சி முறை போன்றவற்றில் புதிய நுட்பங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன. இது மாணவர்களுக்கு படிப்பின் மீதானஆர்வத்தை ஏற்படுத்துவதாகவும், தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணத்தை அளிப்பதாக இருக்க வேண்டும். அப்போது தான் தரம் உயர்த்தப்பட்ட கல்வி அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கும். அதை நோக்கமாக கொண்டு பாடத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

வலுவான பாடத்திட்டத்தில் படித்து தேர்ச்சி பெறும் மாணவர்கள்தான் போட்டித்தேர்வுகளை எளிதாக எதிர் கொள்ள முடியும். போட்டித்தேர்வுகள் அனைத்தும் தேசிய மயமாக்கப்படும் சூழல் உருவாகி வருகிறது. அதுபோன்ற நிலையில் தமிழக மாணவர்கள் தங்களின் இடங்களையும், வாய்ப்புகளையும் காத்துக் கொள்ள வேண்டும். அதோடு புதிய பாடத்திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்படும் பாடங்களின் உட்பொருளையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நாட்டில் மாறி வரும் கல்விச் சூழல், தேர்வு முறைக்கு ஏற்ப தமிழகத்தில் பாடத்திட்டங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். அது ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீடு செய்து மாற்றி அமைப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். அப்படி பாடத்திட்டங் களை மாற்றுகிற போது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் தொடர்ந்தும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு கல்வித்துறைக்கு உள்ளது.
மாணவர்கள் எப்போதும் கற்றுக்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும். கல்வித்துறையில் ஏற்படுத்துகிற மாற்றம் தான் சமூகத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நல்லவிதமான மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே தனிமனித ரீதியாகவும், அரசியல், பொருளாதார ரீதியாகவும் மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற உதவக் கூடியதாக புதிது புதிதாக வரும் பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும்.
வீடு அல்லது மனைகளுக்காக வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் மூலம் வீட்டு கடன் பெற விரும்புபவர்கள் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகளை பார்க்கலாம்.
வீடு அல்லது மனைகளுக்கான வங்கி கடன் விண்ணப்பத்துடன், சுய விபரங்கள் அடங்கிய பல சான்றுகளை தர வேண்டியதாக இருக்கும். வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் மூலம் வீட்டு கடன் பெற விரும்புபவர்கள் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள்:
பொதுவான சான்றுகள் :
* வயதை குறிப்பிடும் சான்று
* இருப்பிடத்திற்கான சான்று
* விண்ணப்பிப்பவர் பெறும் வருமானத்திற்கான அத்தாட்சி
* கடந்த 6 மாத காலத்திற்கான வங்கி ‘ஸ்டேட்மெண்ட்’
* விண்ணப்பிப்பவர்களது ‘பாஸ்போர்ட் சைஸ்’ புகைப்படங்கள்
மாத சம்பளம் பெறுபவர்கள் :
* ‘சாலரி ஸ்லிப்’ மற்றும் பார்ம்-16ஏ
* ‘ரேஷன் கார்டு’, ‘பான் கார்டு’, தொலைபேசி கட்டண ரசீதுகள் அல்லது மின்கட்டண ரசீதுகளின் ‘ஜெராக்ஸ்’ நகல்கள்
* மற்ற அசையா சொத்துக்கள் பற்றிய சான்றுகள்
* ஆயுள் காப்பீட்டு செய்திருந்தால் அதற்கான ‘பிரிமியம்’ செலுத்தியதற்கான ரசீதுகள்
* ஆறு மாதங்களுக்கான ‘பேங்க் ஸ்டேட்மெண்ட்’ மற்றும் தேவையான அளவு புகைப்படங்கள்

தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் :
* எவ்வகை தொழில் அல்லது வியாபாரம் என்பது பற்றிய தகவல்கள்
* வியாபாரம் அல்லது தொழில் நிறுவனத்தின் பதிவு சான்றிதழ்கள்
* அங்கீகரிக்கப்பட்ட கணக்கு தணிக்கையாளர் மூலம் சான்றளிக்கப்பட்ட 3 வருட வருமான வரி கணக்கு அறிக்கைகள்
* ‘அட்வான்ஸ் டாக்ஸ் பேமெண்ட்’ செலுத்தி இருந்தால் அதற்கான ஜெராக்ஸ் நகல்கள்
* தொழில் வரி செலுத்தி வருவது பற்றிய சான்றுகள்
* பிற வங்கிகளில் கடன் பெற்றிருந்தால் அதன் விபரங்கள்
* மேற்கண்டவற்றோடு ‘பேங்க் ஸ்டேட்மெண்ட்’, குடும்ப அட்டை, தொலைபேசி கட்டண ரசீது, ‘இன்சூரன்ஸ்’ போன்ற இதர தகவல்களும் கேட்கப்படும்.
பொதுவான சான்றுகள் :
* வயதை குறிப்பிடும் சான்று
* இருப்பிடத்திற்கான சான்று
* விண்ணப்பிப்பவர் பெறும் வருமானத்திற்கான அத்தாட்சி
* கடந்த 6 மாத காலத்திற்கான வங்கி ‘ஸ்டேட்மெண்ட்’
* விண்ணப்பிப்பவர்களது ‘பாஸ்போர்ட் சைஸ்’ புகைப்படங்கள்
மாத சம்பளம் பெறுபவர்கள் :
* ‘சாலரி ஸ்லிப்’ மற்றும் பார்ம்-16ஏ
* ‘ரேஷன் கார்டு’, ‘பான் கார்டு’, தொலைபேசி கட்டண ரசீதுகள் அல்லது மின்கட்டண ரசீதுகளின் ‘ஜெராக்ஸ்’ நகல்கள்
* மற்ற அசையா சொத்துக்கள் பற்றிய சான்றுகள்
* ஆயுள் காப்பீட்டு செய்திருந்தால் அதற்கான ‘பிரிமியம்’ செலுத்தியதற்கான ரசீதுகள்
* ஆறு மாதங்களுக்கான ‘பேங்க் ஸ்டேட்மெண்ட்’ மற்றும் தேவையான அளவு புகைப்படங்கள்

தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் :
* எவ்வகை தொழில் அல்லது வியாபாரம் என்பது பற்றிய தகவல்கள்
* வியாபாரம் அல்லது தொழில் நிறுவனத்தின் பதிவு சான்றிதழ்கள்
* அங்கீகரிக்கப்பட்ட கணக்கு தணிக்கையாளர் மூலம் சான்றளிக்கப்பட்ட 3 வருட வருமான வரி கணக்கு அறிக்கைகள்
* ‘அட்வான்ஸ் டாக்ஸ் பேமெண்ட்’ செலுத்தி இருந்தால் அதற்கான ஜெராக்ஸ் நகல்கள்
* தொழில் வரி செலுத்தி வருவது பற்றிய சான்றுகள்
* பிற வங்கிகளில் கடன் பெற்றிருந்தால் அதன் விபரங்கள்
* மேற்கண்டவற்றோடு ‘பேங்க் ஸ்டேட்மெண்ட்’, குடும்ப அட்டை, தொலைபேசி கட்டண ரசீது, ‘இன்சூரன்ஸ்’ போன்ற இதர தகவல்களும் கேட்கப்படும்.
ஸ்மார்ட்போன் விளையாட்டுகள், எந்த வகையிலும் குழந்தைகளின் அறிவுத்திறனை (ஐக்யூ) வளர்க்க உதவுவது இல்லை. குழந்தையின் சிந்திக்கும், செயலாற்றும் திறனை மழுங்கடிக்கின்றன.
முன்பெல்லாம் வெளியே விளையாடும் நேரம் போக வீட்டுக்குள்ளே விளையாட, தாயக்கட்டை, பரமபதம், சொட்டாங்கல், பல்லாங்குழி அதன்பிறகு செஸ், கேரம் என பல விளையாட்டுகள் இருந்தன. 2000-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த பல குழந்தைகள், ஸ்மார்ட்போன் கேம் பிரியர்களாகத்தான் இருக்கிறார்கள்.
ஸ்மார்ட்போன் விளையாட்டுகள், எந்த வகையிலும் குழந்தைகளின் அறிவுத்திறனை (ஐக்யூ) வளர்க்க உதவுவது இல்லை. குழந்தையின் சிந்திக்கும், செயலாற்றும் திறனை மழுங்கடிக்கின்றன.
இருட்டில் அமர்ந்து, ஒளிர் திரை கேம் விளையாடுவதால், விழித்திரை நரம்புகள் பாதிப்பு, பார்வைத்திறன் குறைவு, திரையில் உண்டாகும் அதீத ஒளி, மூளை நியூரான்களைத் தூண்டி தூக்கமின்மையை ஏற்படுத்தும். அடுத்த நாள் காலையில் தாமதமாக எழ நேரிடும். அன்றைய நாள் சோம்பல் நிறைந்ததாக ஆகிவிடும். இதன் காரணமாக படிப்பில் கவனக் குறைவு, ஞாபகமறதி ஏற்பட்டு கற்றல்திறனும் பாதிக்கப்படும். ரத்தம், வன்முறை அதிகமாக இருக்கும் கேம் விளையாடுவதால் ‘டெம்பர் டான்ட்ரம்‘ எனப்படும் அதீத கோபம் மற்றும் முரட்டுத்தனத்துக்கு ஆளாகிறார்கள்.

வீடியோ கேம் விளையாடிவிட்டு, நொறுக்குத் தீனிகள் சாப்பிடும்போது உடல்பருமன் ஏற்படுகிறது. பெற்றோர் பேசுவதைப் பார்த்துத்தான், குழந்தைகள் பேச ஆரம்பிக்கின்றனர். குழந்தைகளுடன் பெற்றோரும் சேர்ந்து விளையாடும்போது குழந்தைகள்-பெரியவர்கள் ஒருங்கிணைப்பு அதிகரிக்கும். குழந்தைகள் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வார்கள். பெற்றோர் கண்காணிப்பிலும் இருப்பார்கள்.
அதே நேரம் ஒரேயடியாக அவர்களை ஸ்மார்ட் போனில் விளையாட அனுமதிக்காமல் இருப்பதும் தவறு. அன்றைக்குப் படிக்க வேண்டியவற்றைப் படித்து முடித்த பிறகு குறிப்பிட்ட சிறிது நேரத்துக்கு மட்டும் விளையாட அனுமதிக்கலாம். முக்கியமாக, அறிவுத்திறனை மேம்படுத்தும் செஸ், ரூபிக் கியூப், கணித பசில் போன்ற விளையாட்டுகளை விளையாடச் சொல்லி ஊக்கப்படுத்தலாம். குழந்தைகளுக்கு பிடித்த மியூசிக், நடனம், ஓவியம், நீச்சல் போன்ற பயிற்சிகளில் விடலாம். இதனால் வீடியோ கேம்களில் உள்ள மோகம் குறையத் தொடங்கும்.
புத்தகம் வாசித்தல் மற்றும் அறிவுத்திறனை வளர்க்கும் விளையாட்டுகளில் ஆர்வமுள்ள குழந்தைகளை அவர்கள் போக்கில் விட்டுவிடுவதே நல்லது. தினமும் உடற்பயிற்சி செய்யச் சொல்லலாம். பெரியவர்கள் நடைப்பயிற்சி செய்யும்போது குழந்தைகளையும் பார்க்கில் விளையாட விடலாம். இதனால் ஓடிவிளையாடும் விளையாட்டுகளால் கிடைக்கும் நன்மைகள் குழந்தைகளுக்கு கிடைக்கும்.
ஸ்மார்ட்போன் விளையாட்டுகள், எந்த வகையிலும் குழந்தைகளின் அறிவுத்திறனை (ஐக்யூ) வளர்க்க உதவுவது இல்லை. குழந்தையின் சிந்திக்கும், செயலாற்றும் திறனை மழுங்கடிக்கின்றன.
இருட்டில் அமர்ந்து, ஒளிர் திரை கேம் விளையாடுவதால், விழித்திரை நரம்புகள் பாதிப்பு, பார்வைத்திறன் குறைவு, திரையில் உண்டாகும் அதீத ஒளி, மூளை நியூரான்களைத் தூண்டி தூக்கமின்மையை ஏற்படுத்தும். அடுத்த நாள் காலையில் தாமதமாக எழ நேரிடும். அன்றைய நாள் சோம்பல் நிறைந்ததாக ஆகிவிடும். இதன் காரணமாக படிப்பில் கவனக் குறைவு, ஞாபகமறதி ஏற்பட்டு கற்றல்திறனும் பாதிக்கப்படும். ரத்தம், வன்முறை அதிகமாக இருக்கும் கேம் விளையாடுவதால் ‘டெம்பர் டான்ட்ரம்‘ எனப்படும் அதீத கோபம் மற்றும் முரட்டுத்தனத்துக்கு ஆளாகிறார்கள்.

வீடியோ கேம் விளையாடிவிட்டு, நொறுக்குத் தீனிகள் சாப்பிடும்போது உடல்பருமன் ஏற்படுகிறது. பெற்றோர் பேசுவதைப் பார்த்துத்தான், குழந்தைகள் பேச ஆரம்பிக்கின்றனர். குழந்தைகளுடன் பெற்றோரும் சேர்ந்து விளையாடும்போது குழந்தைகள்-பெரியவர்கள் ஒருங்கிணைப்பு அதிகரிக்கும். குழந்தைகள் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வார்கள். பெற்றோர் கண்காணிப்பிலும் இருப்பார்கள்.
அதே நேரம் ஒரேயடியாக அவர்களை ஸ்மார்ட் போனில் விளையாட அனுமதிக்காமல் இருப்பதும் தவறு. அன்றைக்குப் படிக்க வேண்டியவற்றைப் படித்து முடித்த பிறகு குறிப்பிட்ட சிறிது நேரத்துக்கு மட்டும் விளையாட அனுமதிக்கலாம். முக்கியமாக, அறிவுத்திறனை மேம்படுத்தும் செஸ், ரூபிக் கியூப், கணித பசில் போன்ற விளையாட்டுகளை விளையாடச் சொல்லி ஊக்கப்படுத்தலாம். குழந்தைகளுக்கு பிடித்த மியூசிக், நடனம், ஓவியம், நீச்சல் போன்ற பயிற்சிகளில் விடலாம். இதனால் வீடியோ கேம்களில் உள்ள மோகம் குறையத் தொடங்கும்.
புத்தகம் வாசித்தல் மற்றும் அறிவுத்திறனை வளர்க்கும் விளையாட்டுகளில் ஆர்வமுள்ள குழந்தைகளை அவர்கள் போக்கில் விட்டுவிடுவதே நல்லது. தினமும் உடற்பயிற்சி செய்யச் சொல்லலாம். பெரியவர்கள் நடைப்பயிற்சி செய்யும்போது குழந்தைகளையும் பார்க்கில் விளையாட விடலாம். இதனால் ஓடிவிளையாடும் விளையாட்டுகளால் கிடைக்கும் நன்மைகள் குழந்தைகளுக்கு கிடைக்கும்.
பெற்றோர் நம் வாழ்வின் மாபெரும் கொடை. அவர்கள் இல்லை எனில் இம்மண்ணிலே நாம் ஒரு மனிதன் இல்லை என அறிவோம். பெற்றோரே நம் முதல் இறைவன் என உணர்வோம்.
அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம் என்பது உண்மையே. தாயும், தந்தையும் தான் நம்மை இந்த தரணி காண செய்தவர்கள். அவர்களே நம் முதல் தெய்வம். பெற்றோர் தம் குழந்தைகளை சிறுவயது முதல் பெரியவனாகும் வரை தங்களின் அரவணைப்பில் வளர்த்து ஆளாக்குகின்றனர். பேச கற்றுத் தருகின்றனர். நடக்கக்கற்று தருகின்றனர். மொத்தத்தில் நமக்கு முதல் ஆசான் அன்னை, தந்தையே என்பதில் ஐயமில்லை.
அனைத்துக்கும் மேலான கேடில் விழுச்செல்வமான கல்வியை கற்பதற்கு பள்ளியில் சேர்த்து விடுகின்றனர். அறிவே ஆற்றல் என்பதை உணர்த்துகின்றனர். பள்ளிப்படிப்போடு நிறுத்திவிடாமல் மேற்படிப்பையும் தருகின்றனர். ஒழுக்கம் விழுப்பம் தரும். ஆம், பெற்றோர்கள் உயிரினும் மேலான ஒழுக்கத்தை நமக்கு போதிக்கின்றனர். பின்னர் வேலைவாய்ப்பு, நல்ல வாழ்க்கைத்துணை ஆகியவற்றை அமைத்து நம்மை ஒய்யாரமாய் வாழ வைத்து நம் வாழ்வில் ஓடமாய் இருக்கின்றனர்.
இதற்கான நன்றி கடனை பெற்றோருக்கு செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவர் கடமை. ஆனால் இன்றைய இளைஞர்களோ வாழ்வில் நல்ல நிலையை எய்தியவுடன் ஏற்றிவிட்ட ஏணியை எட்டி மிதிக்கின்றனர். அதாவது பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்து விடுகின்றனர். இது மிகப்பெரிய மூடத்தனம். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை மறந்து தனிக்குடும்பமாக வாழ நினைத்து அவ்வாறே வாழ்கின்றனர்.
அது மட்டுமின்றி பெற்றோர்களின் உணர்ச்சிகளை புரிந்துகொள்ளாத பிள்ளைகளாக வாழ்ந்து வருபவர்களும் உண்டு. நாகரிகம் எனும் பெயரில் பெற்றோரை உதாசீனப்படுத்துகின்றனர். நாளை தன் குழந்தைகளால் தனக்கும் இந்நிலை தான் என்பதை உணரவில்லையா? குழந்தைகள் செய்யும் எந்த தவறையும் பெற்றோர் மன்னித்து மறந்துவிடுகின்றனர்.
இப்பண்பில் அவர்கள் ஆண்டவனுக்கு நிகரான பெற்றோருக்கு அன்பையே காணிக்கையாய் செலுத்தவேண்டும். பெற்றோரே நம் கண்கள். நம் கண்களை நாம் தான் பாதுகாக்கவேண்டும். இறைவனிடம் தன் குறையை முறையிடும் அனாதை சிறுவனின் நிலையை உணர்ந்தால் நம் பெற்றோர் நமக்கு பேரின்பமாய் தெரிவர். பெற்றோர் நம் வாழ்வின் மாபெரும் கொடை. அவர்கள் இல்லை எனில் இம்மண்ணிலே நாம் ஒரு மனிதன் இல்லை என அறிவோம். பெற்றோரே நம் முதல் இறைவன் என உணர்வோம்.
வெயிலை எண்ணிப்பார் மரத்தின் அருமை தெரியும்
அனாதைகளை எண்ணிப்பார் பெற்றோரின் அருமை தெரியும்.
பெற்றோரை பேணுவோம். பேறுகள் பல பெறுவோம்.
அனைத்துக்கும் மேலான கேடில் விழுச்செல்வமான கல்வியை கற்பதற்கு பள்ளியில் சேர்த்து விடுகின்றனர். அறிவே ஆற்றல் என்பதை உணர்த்துகின்றனர். பள்ளிப்படிப்போடு நிறுத்திவிடாமல் மேற்படிப்பையும் தருகின்றனர். ஒழுக்கம் விழுப்பம் தரும். ஆம், பெற்றோர்கள் உயிரினும் மேலான ஒழுக்கத்தை நமக்கு போதிக்கின்றனர். பின்னர் வேலைவாய்ப்பு, நல்ல வாழ்க்கைத்துணை ஆகியவற்றை அமைத்து நம்மை ஒய்யாரமாய் வாழ வைத்து நம் வாழ்வில் ஓடமாய் இருக்கின்றனர்.
இதற்கான நன்றி கடனை பெற்றோருக்கு செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவர் கடமை. ஆனால் இன்றைய இளைஞர்களோ வாழ்வில் நல்ல நிலையை எய்தியவுடன் ஏற்றிவிட்ட ஏணியை எட்டி மிதிக்கின்றனர். அதாவது பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்து விடுகின்றனர். இது மிகப்பெரிய மூடத்தனம். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை மறந்து தனிக்குடும்பமாக வாழ நினைத்து அவ்வாறே வாழ்கின்றனர்.
அது மட்டுமின்றி பெற்றோர்களின் உணர்ச்சிகளை புரிந்துகொள்ளாத பிள்ளைகளாக வாழ்ந்து வருபவர்களும் உண்டு. நாகரிகம் எனும் பெயரில் பெற்றோரை உதாசீனப்படுத்துகின்றனர். நாளை தன் குழந்தைகளால் தனக்கும் இந்நிலை தான் என்பதை உணரவில்லையா? குழந்தைகள் செய்யும் எந்த தவறையும் பெற்றோர் மன்னித்து மறந்துவிடுகின்றனர்.
இப்பண்பில் அவர்கள் ஆண்டவனுக்கு நிகரான பெற்றோருக்கு அன்பையே காணிக்கையாய் செலுத்தவேண்டும். பெற்றோரே நம் கண்கள். நம் கண்களை நாம் தான் பாதுகாக்கவேண்டும். இறைவனிடம் தன் குறையை முறையிடும் அனாதை சிறுவனின் நிலையை உணர்ந்தால் நம் பெற்றோர் நமக்கு பேரின்பமாய் தெரிவர். பெற்றோர் நம் வாழ்வின் மாபெரும் கொடை. அவர்கள் இல்லை எனில் இம்மண்ணிலே நாம் ஒரு மனிதன் இல்லை என அறிவோம். பெற்றோரே நம் முதல் இறைவன் என உணர்வோம்.
வெயிலை எண்ணிப்பார் மரத்தின் அருமை தெரியும்
அனாதைகளை எண்ணிப்பார் பெற்றோரின் அருமை தெரியும்.
பெற்றோரை பேணுவோம். பேறுகள் பல பெறுவோம்.
குழந்தைகள் அடம்பிடித்துக் கேட்கிறார்கள் என துரித உணவுகளை வாங்கிக்கொடுத்துவிட்டு, பிறகு நோய் வந்துவிட்டால் மருந்து கொடுத்து விடலாம் என நினைப்பது தவறானது.
கொழுகொழு குழந்தைகள்தான் மிகவும் ஆரோக்கியமான குழந்தைகள் என்று பொதுப்புத்தியிலேயே விதைக்கப்பட்டு விட்டது. இன்றும் ‘என் குழந்தைக்கு நான் நிறைய சாப்பிடக் கொடுக்கிறேன். ஆனாலும், மெலிந்து இருக்கிறான்/இருக்கிறாள்’ என்று ஒருபுறம் புலம்புகிறார்கள். மறுபுறம், எது நல்ல உணவு என்று புரியாமல், `எல்லாத்தையும் சாப்பிட்டா தான் குழந்தை கொழுகொழுன்னு நோய் எதிர்ப்புச்சக்தியோட வளர்வாங்க’ என்று பானிபூரியும் பர்கரும் வாங்கிக் கொடுக்கிறார்கள்.
“காலங்காலமாக நமக்குக் கற்பிக்கப்பட்டவைதான் என்றாலும், அவை சரியா என்பதை தெரிந்துகொள்ளாமல் அப்படியே பின்தொடர்கிறோம். கீரை நல்லது. அதற்காக, மூன்று வேளைகளும் குழந்தைகளுக்குக் கீரையே கொடுத்தால், செரிமானக் கோளாறுதானே ஏற்படும்? அந்தந்த உணவை அதற்குரிய நேரத்தில்தான் சாப்பிட வேண்டும் என்பதும் உணவுப்பழக்கம்தான்!
இது புரியா விட்டால், சிறுவயதிலேயே பருமன் போன்ற பிரச்னைகள் நம் குழந்தைகளுக்கு வரக்கூடும். குழந்தைகளின் பருமனைத் தடுக்கவும், ஆரோக்கியமாக வாழவும், மனம், மூளை மற்றும் உடல் ஆகியவற்றை சீராக வைத்திருக்கக்கூடிய `ஹோலிஸ்டிக் ஹீலிங்’ என்கிற முழுமையான ஆரோக்கிய முறை தேவை”.

“பருமன் என்பது வாழ்வியல் சம்பந்தப்பட்ட நோய். வெளிநாட்டுக் குழந்தைகளுடன் ஒப்பிடுகையில், இந்தியக் குழந்தைகள் இடையே பருமன் பிரச்னை அவ்வளவாக இல்லை. உண்மையில், பீட்சா, பர்கர், சாட் மற்றும் கோலா போன்ற குளிர்பானங்கள் மட்டுமே பிள்ளைகளின் பருமனுக்குக் காரணம் அல்ல. நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சர்க்கரை, பச்சரிசி, மைதா, சுத்திக்கரிக்கப்பட்ட எண்ணெய் ஆகியவையும் பருமனுக்கு முக்கிய காரணிகளாக உள்ளன.
அதிக கலோரி உள்ள உணவுகளைக் குறைவாகவும், பச்சைக் காய்கறிகள், பழங்கள், பசும்பால் ஆகியவற்றை சற்று அதிகமாகவும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். சிலர், `என் மகள் சரியாகச் சாப்பிட மாட்டாள். அதனால், அவளுக்கு தினமும் ஜூஸ் கொடுக்கிறேன்’ என்று கூறுவார்கள். இது முற்றிலும் தவறு. எந்தப் பழமாக இருந்தாலும், அப்படியே சாப்பிடுவதுதான் ஆரோக்கியத்துக்கு நன்மை தரும்.
பழரசங்களாக (சர்க்கரை கலக்காவிட்டாலும்கூட) குடித்தால், கெட்ட கொழுப்புகள் தான் உடலில் சேரும். அதுபோல, சில காய்கறிகளை சமைக்காமல் பச்சையாகவே உண்ணலாம். குழந்தைகளுக்கான சமையலில் எண்ணெய், மசாலாப் பொருள்களைக் குறைவாகச் சேர்ப்பதே நல்லது.
குழந்தைகள் அடம்பிடித்துக் கேட்கிறார்கள் என துரித உணவுகளை வாங்கிக்கொடுத்துவிட்டு, பிறகு நோய் வந்துவிட்டால் மருந்து கொடுத்து விடலாம் என நினைப்பது தவறானது. நம் உடலை ஆரோக்கியமாகக் காக்கும் வகையிலான நோய் எதிர்ப்புத்திறன் இயல்பாகவே நம் உடலுக்கு உள்ளது. ஆகவே, ஆரோக்கிய உணவின் மூலமே நோய்கள் வராமல் தற்காத்துக் கொண்டு கூடுமானவரை மருந்துகளை, தவிர்ப்பது நல்லது. மனஅழுத்ததால்கூட பருமன் உண்டாகலாம். ஆகவே, குழந்தைகளின் சிந்தனையில் சீரான நேர்மறை எண்ணங்களையே ஊக்குவியுங்கள்!
“காலங்காலமாக நமக்குக் கற்பிக்கப்பட்டவைதான் என்றாலும், அவை சரியா என்பதை தெரிந்துகொள்ளாமல் அப்படியே பின்தொடர்கிறோம். கீரை நல்லது. அதற்காக, மூன்று வேளைகளும் குழந்தைகளுக்குக் கீரையே கொடுத்தால், செரிமானக் கோளாறுதானே ஏற்படும்? அந்தந்த உணவை அதற்குரிய நேரத்தில்தான் சாப்பிட வேண்டும் என்பதும் உணவுப்பழக்கம்தான்!
இது புரியா விட்டால், சிறுவயதிலேயே பருமன் போன்ற பிரச்னைகள் நம் குழந்தைகளுக்கு வரக்கூடும். குழந்தைகளின் பருமனைத் தடுக்கவும், ஆரோக்கியமாக வாழவும், மனம், மூளை மற்றும் உடல் ஆகியவற்றை சீராக வைத்திருக்கக்கூடிய `ஹோலிஸ்டிக் ஹீலிங்’ என்கிற முழுமையான ஆரோக்கிய முறை தேவை”.

“பருமன் என்பது வாழ்வியல் சம்பந்தப்பட்ட நோய். வெளிநாட்டுக் குழந்தைகளுடன் ஒப்பிடுகையில், இந்தியக் குழந்தைகள் இடையே பருமன் பிரச்னை அவ்வளவாக இல்லை. உண்மையில், பீட்சா, பர்கர், சாட் மற்றும் கோலா போன்ற குளிர்பானங்கள் மட்டுமே பிள்ளைகளின் பருமனுக்குக் காரணம் அல்ல. நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சர்க்கரை, பச்சரிசி, மைதா, சுத்திக்கரிக்கப்பட்ட எண்ணெய் ஆகியவையும் பருமனுக்கு முக்கிய காரணிகளாக உள்ளன.
அதிக கலோரி உள்ள உணவுகளைக் குறைவாகவும், பச்சைக் காய்கறிகள், பழங்கள், பசும்பால் ஆகியவற்றை சற்று அதிகமாகவும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். சிலர், `என் மகள் சரியாகச் சாப்பிட மாட்டாள். அதனால், அவளுக்கு தினமும் ஜூஸ் கொடுக்கிறேன்’ என்று கூறுவார்கள். இது முற்றிலும் தவறு. எந்தப் பழமாக இருந்தாலும், அப்படியே சாப்பிடுவதுதான் ஆரோக்கியத்துக்கு நன்மை தரும்.
பழரசங்களாக (சர்க்கரை கலக்காவிட்டாலும்கூட) குடித்தால், கெட்ட கொழுப்புகள் தான் உடலில் சேரும். அதுபோல, சில காய்கறிகளை சமைக்காமல் பச்சையாகவே உண்ணலாம். குழந்தைகளுக்கான சமையலில் எண்ணெய், மசாலாப் பொருள்களைக் குறைவாகச் சேர்ப்பதே நல்லது.
குழந்தைகள் அடம்பிடித்துக் கேட்கிறார்கள் என துரித உணவுகளை வாங்கிக்கொடுத்துவிட்டு, பிறகு நோய் வந்துவிட்டால் மருந்து கொடுத்து விடலாம் என நினைப்பது தவறானது. நம் உடலை ஆரோக்கியமாகக் காக்கும் வகையிலான நோய் எதிர்ப்புத்திறன் இயல்பாகவே நம் உடலுக்கு உள்ளது. ஆகவே, ஆரோக்கிய உணவின் மூலமே நோய்கள் வராமல் தற்காத்துக் கொண்டு கூடுமானவரை மருந்துகளை, தவிர்ப்பது நல்லது. மனஅழுத்ததால்கூட பருமன் உண்டாகலாம். ஆகவே, குழந்தைகளின் சிந்தனையில் சீரான நேர்மறை எண்ணங்களையே ஊக்குவியுங்கள்!
குழந்தைகளுக்கு பல் முளைத்த உடனேயே பல்துலக்க கற்றுக் கொடுப்பது மிகவும் நல்லது. 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர் பல்துலக்கிவிடுவது சிறந்தது.
நாம் உண்ணும் உணவு நம் பற்களின் இடையில் தங்கும்போது கழிவாக மாறி அங்கு நுண்கிருமிகள் வளர்கின்றன. இதில் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் ஈகோலி பாக்டீரியாவும், சருமத் தொற்றுநோயை ஏற்படுத்தும் ஸ்டாபில்கோலி பாக்டீரியாவும் அடக்கம். இந்த நுண்கிருமிகள் தொடர்ந்து பற்களிலேயே இருந்தால் அநேக நோய்கள் தோன்றுகின்றன. அதனால் பல் துலக்குவது அவசியமாகிறது.
பொதுவாக 2 வயதுக்குப்பிறகே பல்துலக்கத் துவங்குகிறார்கள். ஆனால், குழந்தைகளுக்கு பல் முளைத்த உடனேயே பல்துலக்க கற்றுக் கொடுப்பது மிகவும் நல்லது. இதற்குக் காரணம், குழந்தைகளுக்கு பாட்டில் மூலம் புட்டிப்பால் கொடுக்கும்போது பல் நோய்கள் உருவாக வாய்ப்புகள் உண்டு. குழந்தைகளுக்கு பல்துலக்கும் முறை தெரிய வாய்ப்பில்லை என்பதால் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர் பல்துலக்கிவிடுவது சிறந்தது.
கடைவாய்ப் பற்களில் இருந்து பல்துலக்க ஆரம்பிக்க வேண்டும். இப்படி செய்வதால் மொத்தப் பற்களையும் துலக்கிய திருப்தி கிடைக்கும். கீழ் வரிசை மற்றும் மேல் வரிசைப் பற்களை ஒட்டியபடி துலக்கும்போது நுண்கிருமிகள் வெளியேறாமல் மீண்டும் பல் ஈறுகளின் அடியிலேயே மறைந்திருக்கும். எனவே, மேல்வரிசைக்கும் கீழ்வரிசைக்கும் இடைவெளிவிட்டு துலக்கும்போது கழிவுகள் வாய்க்குள் சென்று விடும், அவை பின்னர் வாய்கொப்பளிக்கும்போது வெறியேறிவிடும்.
அதேபோல இரவு தூங்கும் முன்னர் பல்துலக்குவதும் அவசியம். தூங்கும்போது நமது உதடுகள் மற்றும் நாக்கின் அசைவுகள் முற்றிலும் நிறுத்தப்படுவதால் பல் இடுக்கில் ஒட்டியுள்ள நுண்ணுயிரிகள் பலமடங்கு பெருகுவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே, இரவு பல்துலக்குதல் நல்லது.

மிருதுவான பல்துலக்கியே பற்களின் இடையில் உருவாகி உள்ள நுண்ணுயிரிகளை அகற்ற உகந்ததாகும். 2 வயதுக்கும் குறைவான குழந்தைகள் பிங்கர் பிரஷ் கொண்டு பல் துலக்கலாம். இத்தகைய பல் துலக்கிகளை பெற்றோர் தனது விரலுக்குள் செலுத்தி குழந்தைகளுக்கு பல்துலக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மிருதுவான பல் துலக்கிகளை உபயோகிக்கலாம்.
இவர்களும் பெற்றோரின் கண்காணிப்பில் பல்துலக்கப் பழக்கிட வேண்டும். 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தானாகவே பல் துலக்கலாம். பல் வரிசையை சீராக்குவதற்கு பொருத்தப்படும் கிளிப் பொருத்தி உள்ளவர்கள், அதற்கென உள்ள ஸ்பெஷல் பிரஷ்சைப் பயன்படுத்த வேண்டும். பற்களுக்கு இடையே பின்புறத்தில்தான் அதிக அளவு கிருமிகள் இருக்கும். இவைகளை நீக்க இண்டர்டென்டல் பிரஸ் எனப்படும் பல்லிடுக்கு பல் துலக்கிகளைப் பயன்படுத்தலாம்.
கழிப்பிடத்துக்குப் பக்கத்திலேயே வீடுகளில் குளியலறையும் உள்ளது. இதனால், அங்குதான் பல்துலக்கிகளை வைக்கிறோம். இப்படி வைக்கும்போது கழிப்பறைக் கிருமிகள் காற்றின் மூலம் பல்துலக்கியில் வந்து தங்கிவிடுகின்றன. எனவே, கழிப்பறையில் இருந்து எவ்வளவு தூரம் தள்ளிவைக்க முடியுமோ அவ்வளவு தூரத்தில் தள்ளிவைப்பது நல்லது. இதேபோல், ஒரே பெட்டியில் குடும்பத்தில் உள்ள அனைவரது பல்துலக்கிகளையும் வைக்கும்போது ஒருவருக்கு உள்ள நோய்க்கிருமி இன்னொருவருக்கு பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, பல்துலக்கியதும் நன்றாக கழுவி வெயிலில் உலரவைத்து தனித்தனியாக வைப்பதே நல்லது.
பொதுவாக 2 வயதுக்குப்பிறகே பல்துலக்கத் துவங்குகிறார்கள். ஆனால், குழந்தைகளுக்கு பல் முளைத்த உடனேயே பல்துலக்க கற்றுக் கொடுப்பது மிகவும் நல்லது. இதற்குக் காரணம், குழந்தைகளுக்கு பாட்டில் மூலம் புட்டிப்பால் கொடுக்கும்போது பல் நோய்கள் உருவாக வாய்ப்புகள் உண்டு. குழந்தைகளுக்கு பல்துலக்கும் முறை தெரிய வாய்ப்பில்லை என்பதால் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர் பல்துலக்கிவிடுவது சிறந்தது.
கடைவாய்ப் பற்களில் இருந்து பல்துலக்க ஆரம்பிக்க வேண்டும். இப்படி செய்வதால் மொத்தப் பற்களையும் துலக்கிய திருப்தி கிடைக்கும். கீழ் வரிசை மற்றும் மேல் வரிசைப் பற்களை ஒட்டியபடி துலக்கும்போது நுண்கிருமிகள் வெளியேறாமல் மீண்டும் பல் ஈறுகளின் அடியிலேயே மறைந்திருக்கும். எனவே, மேல்வரிசைக்கும் கீழ்வரிசைக்கும் இடைவெளிவிட்டு துலக்கும்போது கழிவுகள் வாய்க்குள் சென்று விடும், அவை பின்னர் வாய்கொப்பளிக்கும்போது வெறியேறிவிடும்.
அதேபோல இரவு தூங்கும் முன்னர் பல்துலக்குவதும் அவசியம். தூங்கும்போது நமது உதடுகள் மற்றும் நாக்கின் அசைவுகள் முற்றிலும் நிறுத்தப்படுவதால் பல் இடுக்கில் ஒட்டியுள்ள நுண்ணுயிரிகள் பலமடங்கு பெருகுவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே, இரவு பல்துலக்குதல் நல்லது.

மிருதுவான பல்துலக்கியே பற்களின் இடையில் உருவாகி உள்ள நுண்ணுயிரிகளை அகற்ற உகந்ததாகும். 2 வயதுக்கும் குறைவான குழந்தைகள் பிங்கர் பிரஷ் கொண்டு பல் துலக்கலாம். இத்தகைய பல் துலக்கிகளை பெற்றோர் தனது விரலுக்குள் செலுத்தி குழந்தைகளுக்கு பல்துலக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மிருதுவான பல் துலக்கிகளை உபயோகிக்கலாம்.
இவர்களும் பெற்றோரின் கண்காணிப்பில் பல்துலக்கப் பழக்கிட வேண்டும். 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தானாகவே பல் துலக்கலாம். பல் வரிசையை சீராக்குவதற்கு பொருத்தப்படும் கிளிப் பொருத்தி உள்ளவர்கள், அதற்கென உள்ள ஸ்பெஷல் பிரஷ்சைப் பயன்படுத்த வேண்டும். பற்களுக்கு இடையே பின்புறத்தில்தான் அதிக அளவு கிருமிகள் இருக்கும். இவைகளை நீக்க இண்டர்டென்டல் பிரஸ் எனப்படும் பல்லிடுக்கு பல் துலக்கிகளைப் பயன்படுத்தலாம்.
கழிப்பிடத்துக்குப் பக்கத்திலேயே வீடுகளில் குளியலறையும் உள்ளது. இதனால், அங்குதான் பல்துலக்கிகளை வைக்கிறோம். இப்படி வைக்கும்போது கழிப்பறைக் கிருமிகள் காற்றின் மூலம் பல்துலக்கியில் வந்து தங்கிவிடுகின்றன. எனவே, கழிப்பறையில் இருந்து எவ்வளவு தூரம் தள்ளிவைக்க முடியுமோ அவ்வளவு தூரத்தில் தள்ளிவைப்பது நல்லது. இதேபோல், ஒரே பெட்டியில் குடும்பத்தில் உள்ள அனைவரது பல்துலக்கிகளையும் வைக்கும்போது ஒருவருக்கு உள்ள நோய்க்கிருமி இன்னொருவருக்கு பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, பல்துலக்கியதும் நன்றாக கழுவி வெயிலில் உலரவைத்து தனித்தனியாக வைப்பதே நல்லது.
பெற்றோர்கள் எந்த அளவிற்கு உறவுகளுடன் தொடர்பில் இருக்கிறார்களோ அதை பார்த்தே குழந்தைகளும் பின்பற்றும் என்பதை மனதில் கொள்ள வேண்டியது அவசியம்.
குழந்தைகள் அந்தந்த வயதிற்கேற்ப வாழ்வியல் நடைமுறை சார்ந்த விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதற்கேற்ப பெற்றோர் குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோரின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் குழந்தைகள் கூர்ந்து கவனிக்கும். அவர்களை பின்பற்றியே தங்களுடைய பழக்க வழக்கங்களை அமைத்துக்கொள்ளத் தொடங்கும். ஆதலால் குழந்தைகள் முன்பாக பேசும்போது கவனமாக வார்த்தைகளை உச்சரிக்க வேண்டும்.
ஒருசில தம்பதியர் குழந்தைகள் முன்னிலையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள். கோபத்தில் கடுஞ்சொற்களை உச்சரித்துவிடுவார்கள். ஒருசிலர் குழந்தைகளை வைத்துக்கொண்டே மற்றவர்களை ஏளனமாக பேசிக்கொண்டிருப்பார்கள். இதுபோன்ற செயல்பாடுகள் குழந்தைகள் மனதில் மற்றவர்களை பற்றி தவறான எண்ணங்கள் உருவாக வழிவகுத்துவிடும். குழந்தைகள் எப்படி படிக்கிறார்கள், எவ்வளவு மதிப்பெண்கள் வாங்குகிறார்கள் என்பதில் மட்டும் அக்கறை கொள்ளக்கூடாது. அவர்களுக்கு பள்ளிக் கல்வியுடன் வாழ்வியல் கல்வியையும் கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம். நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ள ஊக்குவிக்கவும் வேண்டும்.
பல குழந்தைகள் படிப்பில் படுசுட்டியாக இருப்பார்கள். அவர்களிடம் நாட்டின் முக்கிய பிரபலங்கள், பிரசித்தி பெற்ற இடங்களை பற்றி கேட்டால் சொல்வதற்கு தடுமாறுவார்கள். ஒருசிலர் ‘எங்களுக்கு அதெல்லாம் சொல்லிக்கொடுக்கவில்லை’ என்பார்கள். குழந்தைகள் படிப்புக்கு இணையாக பொது விஷயங்களையும் தெரிந்து கொள்வது பெற்றோரின் கையில்தான் இருக்கிறது.
குடும்ப நிலவரமும் குழந்தைகளுக்கு தெரிந்திருக்க வேண்டும். டீன் ஏஜ் வயதை கடக்கும் குழந்தைகள் முன்னிலையில் குடும்ப செலவுகளை பற்றி பட்டியலிடுவதில் தவறில்லை. அவர்கள் விலைவாசி உயர்வு பற்றி அறிந்திருக்க வேண்டியதும் அவசியம். பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும்? சேமிக்க வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுக்க வேண்டும்.
டீன் ஏஜ் வயதில் பாலியல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவசியம். சமூக வலைத்தளங்கள் எந்த அளவிற்கு நன்மை சேர்க்கிறதோ அதற்கு இணையாக தீமைகளையும் உள்ளடக்கியிருக்கின்றன. அவர் களாக தேடிச்சென்று தீமைகளையும் சேர்த்து கற்றுக் கொள்ள பெற்றோர் இடம் கொடுத்து விடக்கூடாது.
பாலியல் சார்ந்த விஷயங்களை விஞ்ஞான பூர்வமாக கற்றுக்கொடுப்பது தேவையற்ற சிந்தனைகள், எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவதை கட்டுப்படுத்தும். டீன் ஏஜ் பிள்ளைகளிடம் எதிர்கால வாழ்க்கைக்கு கல்வியின் பங்களிப்பு எந்த அளவிற்கு முக்கியமானதாக இருக்கிறது என்பதை புரிய வைக்க வேண்டும். அதேவேளையில் உயர்கல்வியில் அவர்களின் விருப்பங்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
இன்றைய தலைமுறை குழந்தைகளிடம் உறவுகளை பற்றிய புரிதல் குறைந்து கொண்டே இருக்கிறது. அதற்கு பெற்றோர்களும் ஒருவகையில் காரணமாக இருக்கின்றனர்.
தங்கள் நட்பு வட்டத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உறவுகளுக்கும் கொடுக்க வேண்டும் என்பதை குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும். பெற்றோர்கள் எந்த அளவிற்கு உறவுகளுடன் தொடர்பில் இருக்கிறார்களோ அதை பார்த்தே குழந்தைகளும் பின்பற்றும் என்பதை மனதில் கொள்ள வேண்டியது அவசியம். பணத்தை விட நல்ல மனிதர்களை, உறவுகளை சம்பாதித்தால்தான் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும் என்பதை புரிய வைக்க வேண்டும்.
ஒருசில தம்பதியர் குழந்தைகள் முன்னிலையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள். கோபத்தில் கடுஞ்சொற்களை உச்சரித்துவிடுவார்கள். ஒருசிலர் குழந்தைகளை வைத்துக்கொண்டே மற்றவர்களை ஏளனமாக பேசிக்கொண்டிருப்பார்கள். இதுபோன்ற செயல்பாடுகள் குழந்தைகள் மனதில் மற்றவர்களை பற்றி தவறான எண்ணங்கள் உருவாக வழிவகுத்துவிடும். குழந்தைகள் எப்படி படிக்கிறார்கள், எவ்வளவு மதிப்பெண்கள் வாங்குகிறார்கள் என்பதில் மட்டும் அக்கறை கொள்ளக்கூடாது. அவர்களுக்கு பள்ளிக் கல்வியுடன் வாழ்வியல் கல்வியையும் கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம். நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ள ஊக்குவிக்கவும் வேண்டும்.
பல குழந்தைகள் படிப்பில் படுசுட்டியாக இருப்பார்கள். அவர்களிடம் நாட்டின் முக்கிய பிரபலங்கள், பிரசித்தி பெற்ற இடங்களை பற்றி கேட்டால் சொல்வதற்கு தடுமாறுவார்கள். ஒருசிலர் ‘எங்களுக்கு அதெல்லாம் சொல்லிக்கொடுக்கவில்லை’ என்பார்கள். குழந்தைகள் படிப்புக்கு இணையாக பொது விஷயங்களையும் தெரிந்து கொள்வது பெற்றோரின் கையில்தான் இருக்கிறது.
குடும்ப நிலவரமும் குழந்தைகளுக்கு தெரிந்திருக்க வேண்டும். டீன் ஏஜ் வயதை கடக்கும் குழந்தைகள் முன்னிலையில் குடும்ப செலவுகளை பற்றி பட்டியலிடுவதில் தவறில்லை. அவர்கள் விலைவாசி உயர்வு பற்றி அறிந்திருக்க வேண்டியதும் அவசியம். பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும்? சேமிக்க வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுக்க வேண்டும்.
டீன் ஏஜ் வயதில் பாலியல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவசியம். சமூக வலைத்தளங்கள் எந்த அளவிற்கு நன்மை சேர்க்கிறதோ அதற்கு இணையாக தீமைகளையும் உள்ளடக்கியிருக்கின்றன. அவர் களாக தேடிச்சென்று தீமைகளையும் சேர்த்து கற்றுக் கொள்ள பெற்றோர் இடம் கொடுத்து விடக்கூடாது.
பாலியல் சார்ந்த விஷயங்களை விஞ்ஞான பூர்வமாக கற்றுக்கொடுப்பது தேவையற்ற சிந்தனைகள், எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவதை கட்டுப்படுத்தும். டீன் ஏஜ் பிள்ளைகளிடம் எதிர்கால வாழ்க்கைக்கு கல்வியின் பங்களிப்பு எந்த அளவிற்கு முக்கியமானதாக இருக்கிறது என்பதை புரிய வைக்க வேண்டும். அதேவேளையில் உயர்கல்வியில் அவர்களின் விருப்பங்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
இன்றைய தலைமுறை குழந்தைகளிடம் உறவுகளை பற்றிய புரிதல் குறைந்து கொண்டே இருக்கிறது. அதற்கு பெற்றோர்களும் ஒருவகையில் காரணமாக இருக்கின்றனர்.
தங்கள் நட்பு வட்டத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உறவுகளுக்கும் கொடுக்க வேண்டும் என்பதை குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும். பெற்றோர்கள் எந்த அளவிற்கு உறவுகளுடன் தொடர்பில் இருக்கிறார்களோ அதை பார்த்தே குழந்தைகளும் பின்பற்றும் என்பதை மனதில் கொள்ள வேண்டியது அவசியம். பணத்தை விட நல்ல மனிதர்களை, உறவுகளை சம்பாதித்தால்தான் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும் என்பதை புரிய வைக்க வேண்டும்.






