என் மலர்
குழந்தை பராமரிப்பு
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சரியான வயதில் கழிவறைப் பழக்கங்களை கற்றுக் கொடுப்பது, அவர்களின் பிற்கால ஆளுமை வளர்ச்சியை நிர்ணயிக்கும்.
குழந்தை பிறந்த நாள் முதல் சிறுநீர் கழிப்பதும், மலம் கழிப்பதும் கட்டுப்பாட்டில் இல்லாத அனிச்சை சொல்களாகும். நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் கழிவு நீக்கம் செய்து கட்டுப்பாடு இல்லாமல் வளரும் குழந்தைகளின் அந்நடத்தையை நெறிப்படுத்தி அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
சரியான கழிவறை நடத்தையை குழந்தை கற்றுக்கொள்வது பெற்றோரின் மகிழ்ச்சியை அதிகரிக்கும். சரியான சமயத்தில் கழிவறைப் பழக்கங்களை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது, அவர்களின் பிற்கால ஆளுமை வளர்ச்சியை நிர்ணயிக்கும். 18 மாதங்கள் முடிந்தவுடன் இப்பயிற்சியை பெற்றோர் குழந்தைகளுக்கு அளிக்கத் துவங்குவது பொருத்தமானதாகும்.
குழந்தை தன் உடலியக்கத்தில் நடைபெறும் மாற்றங்களை புரிந்து கொள்ளும் அளவுக்கு அறிவு வளர்ச்சியும், தன் உடல் தசைகளை கட்டுப்படுத்தும் திறனைப் பெற்றிருப்பதும், உட்கார்ந்து எழுவது போன்ற உடல் திறனை பெறுவதும் கழிவறை பழக்க பயிற்சிக்கு அவசியம்.
இம்மூன்றும் 18 மாதங்கள் முடிந்தவுடன்தான் சாத்தியம் என்பது குழந்தை மருத்துவர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களின் கருத்து.
பெற்றோர் மிகுந்த கண்டிப்புடன் கழிவறைக்குத்தான் செல்ல வேண்டும் என திடீரென கட்டாயப்படுத்துவதும், குழந்தைகள் அவ்வாறு செய்யவில்லை எனில் அவர்களை தண்டிப்பதும் உடனடியாக குழந்தைகளிடத்தில் ஆளுமைப் பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும்.
கட்டாயப்படுத்தாமல் படிப்படியாக குழந்தைகளின் கழிவறை நடத்தைகளை நெறிப்படுத்துவது மிகவும் எளிமையானது. குழந்தைகளுக்கு அவர்களே எளிதாக கழட்டிக் கொள்ளும் வகையில் எலாஸ்டிக் வைத்த உடைகளை அணிவிப்பது, உட்கார்ந்து மலம் கழிக்க வசதியாக உபகரணங்களை பயன்படுத்துவது ஆகியவை அவசியம்.

குழந்தைகளின் நடத்தையை மிக உன்னிப்பாக கவனித்துக்கொண்டே வரும் பெற்றோர் சிறுநீர் கழிக்கவோ அல்லது மலம் கழிக்கவோ குழந்தைகள் விரும்புகிறார்கள் என்ற அறிகுறி தென்பட்டால் உடனடியாக அவர்களை கழிவறைக்கு தூக்கிச் செல்ல வேண்டும்.
குழந்தை தானே கழிவறை செல்ல வேண்டும் என்று தெரிவித்தாலோ அல்லது நாம் எதிர்பார்த்த வகையில் தன் உடையை கழற்றினாலோ, கழிவறையை நோக்கிச் சென்றாலோ அந்நடத்தையை பாராட்டி ஊக்குவிக்க வேண்டும்.
தொடர்ந்து இவ்வாறு பழக்கப்படுத்தி வந்தால் விரைவில் குழந்தைகள் தங்கள் கழிவறை நடத்தையை மேம்படுத்திக் கொள்ளும்.
கழிவறைப் பழக்கத்தை கற்றுக் கொடுப்பதிலிருந்தே பெற்றோர்களின் குழந்தை வளர்ப்பு முறையையும், அவர்களின் ஆளுமையையும் அறியலாம். குழந்தைகளின் கழிவறை நடத்தையை நெறிப்படுத்துவதில் மிகுந்த கண்டிப்புடன் நடந்துகொள்ளும் பெற்றோர் பிற எல்லா விஷயத்திலும் அவ்வாறே நடந்து கொள்வர்.
குழந்தையின் கழிவறைப் பழக்கத்தை நெறிப்படுத்துவதில் கரிசனத்துடன் நடந்து கொள்ளும் பெற்றோர் குழந்தைகளின் எல்லா விஷயத்திலும் பாசத்துடனும் அரவணைப்புடனும், அதே சமயத்தில், நல்ல பழக்கங்களை உருவாக்குவதில் உறுதியாகவும் இருப்பர்.
விரைவிலேயே நல்ல கழிவறை நடத்தையை கற்றுக் கொண்ட குழந்தைகள் தானே தன்னை கவனித்துக் கொள்ள முடியும் என்ற உணர்வு பெற்று தனித்தியங்கும் ஆளுமைப்பண்பினை வளர்த்துக்கொள்ளும். பெற்றோர்களையே எல்லாவற்றிற்கும் சார்ந்திராமல் தனிமனிதனாக உருவாக சரியான வயதில் கழிப்பறை நடத்தைகளை கற்றுக் கொடுப்பதை துவங்குங்கள்.
சரியான கழிவறை நடத்தையை குழந்தை கற்றுக்கொள்வது பெற்றோரின் மகிழ்ச்சியை அதிகரிக்கும். சரியான சமயத்தில் கழிவறைப் பழக்கங்களை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது, அவர்களின் பிற்கால ஆளுமை வளர்ச்சியை நிர்ணயிக்கும். 18 மாதங்கள் முடிந்தவுடன் இப்பயிற்சியை பெற்றோர் குழந்தைகளுக்கு அளிக்கத் துவங்குவது பொருத்தமானதாகும்.
குழந்தை தன் உடலியக்கத்தில் நடைபெறும் மாற்றங்களை புரிந்து கொள்ளும் அளவுக்கு அறிவு வளர்ச்சியும், தன் உடல் தசைகளை கட்டுப்படுத்தும் திறனைப் பெற்றிருப்பதும், உட்கார்ந்து எழுவது போன்ற உடல் திறனை பெறுவதும் கழிவறை பழக்க பயிற்சிக்கு அவசியம்.
இம்மூன்றும் 18 மாதங்கள் முடிந்தவுடன்தான் சாத்தியம் என்பது குழந்தை மருத்துவர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களின் கருத்து.
பெற்றோர் மிகுந்த கண்டிப்புடன் கழிவறைக்குத்தான் செல்ல வேண்டும் என திடீரென கட்டாயப்படுத்துவதும், குழந்தைகள் அவ்வாறு செய்யவில்லை எனில் அவர்களை தண்டிப்பதும் உடனடியாக குழந்தைகளிடத்தில் ஆளுமைப் பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும்.
கட்டாயப்படுத்தாமல் படிப்படியாக குழந்தைகளின் கழிவறை நடத்தைகளை நெறிப்படுத்துவது மிகவும் எளிமையானது. குழந்தைகளுக்கு அவர்களே எளிதாக கழட்டிக் கொள்ளும் வகையில் எலாஸ்டிக் வைத்த உடைகளை அணிவிப்பது, உட்கார்ந்து மலம் கழிக்க வசதியாக உபகரணங்களை பயன்படுத்துவது ஆகியவை அவசியம்.

குழந்தைகளின் நடத்தையை மிக உன்னிப்பாக கவனித்துக்கொண்டே வரும் பெற்றோர் சிறுநீர் கழிக்கவோ அல்லது மலம் கழிக்கவோ குழந்தைகள் விரும்புகிறார்கள் என்ற அறிகுறி தென்பட்டால் உடனடியாக அவர்களை கழிவறைக்கு தூக்கிச் செல்ல வேண்டும்.
குழந்தை தானே கழிவறை செல்ல வேண்டும் என்று தெரிவித்தாலோ அல்லது நாம் எதிர்பார்த்த வகையில் தன் உடையை கழற்றினாலோ, கழிவறையை நோக்கிச் சென்றாலோ அந்நடத்தையை பாராட்டி ஊக்குவிக்க வேண்டும்.
தொடர்ந்து இவ்வாறு பழக்கப்படுத்தி வந்தால் விரைவில் குழந்தைகள் தங்கள் கழிவறை நடத்தையை மேம்படுத்திக் கொள்ளும்.
கழிவறைப் பழக்கத்தை கற்றுக் கொடுப்பதிலிருந்தே பெற்றோர்களின் குழந்தை வளர்ப்பு முறையையும், அவர்களின் ஆளுமையையும் அறியலாம். குழந்தைகளின் கழிவறை நடத்தையை நெறிப்படுத்துவதில் மிகுந்த கண்டிப்புடன் நடந்துகொள்ளும் பெற்றோர் பிற எல்லா விஷயத்திலும் அவ்வாறே நடந்து கொள்வர்.
குழந்தையின் கழிவறைப் பழக்கத்தை நெறிப்படுத்துவதில் கரிசனத்துடன் நடந்து கொள்ளும் பெற்றோர் குழந்தைகளின் எல்லா விஷயத்திலும் பாசத்துடனும் அரவணைப்புடனும், அதே சமயத்தில், நல்ல பழக்கங்களை உருவாக்குவதில் உறுதியாகவும் இருப்பர்.
விரைவிலேயே நல்ல கழிவறை நடத்தையை கற்றுக் கொண்ட குழந்தைகள் தானே தன்னை கவனித்துக் கொள்ள முடியும் என்ற உணர்வு பெற்று தனித்தியங்கும் ஆளுமைப்பண்பினை வளர்த்துக்கொள்ளும். பெற்றோர்களையே எல்லாவற்றிற்கும் சார்ந்திராமல் தனிமனிதனாக உருவாக சரியான வயதில் கழிப்பறை நடத்தைகளை கற்றுக் கொடுப்பதை துவங்குங்கள்.
நிஜத்தில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியாக பாடம் நடத்துவது உளவியல் முறைப்படி தவறாகும். மாணவர்களின் திறனை உளவியல் தேர்வுகள் மூலம் அறிந்து அதற்கேற்ப பயிற்சி வழங்க வேண்டும்.
மாணவர்கள் நாட்டின் எதிர்காலத் தூண்கள். அவர்களை நல்வழிப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு அதிகப்படியான பயிற்சிகளை வழங்குவதை ஏராளமான பள்ளிகள் வாடிக்கையாக வைத்துள்ளன. குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்துடன் பெற்றோரும் இதை பொறுத்துக் கொள்வது உண்டு. ஆனால் குழந்தைகளின் மனம் இதை பொறுத்துக் கொள்ளுமா? என்பதே இங்கு யோசிக்கப்பட வேண்டும்.
மாணவர்கள் வெறும் மதிப்பெண்களை வாங்கி பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் எந்திரங்களல்ல. மாணவர் நலன் கருதிய ஆராய்ச்சிகளெல்லாம், ஒவ்வொரு மாணவரின் மனநிலைக்கு ஏற்ப பயிற்சி அளிக்க வேண்டும் என்றே சொல்கிறது. ஆனால் மாணவர்களின் மனநிலையை புரிந்து கொள்ளும் நிலையில் பெற்றோரும், பள்ளி நிர்வாகங்களும் இருக்கிறார்களா? என்பது கேள்விக்குறிதான்.
நிஜத்தில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியாக பாடம் நடத்துவது உளவியல் முறைப்படி தவறாகும். மாணவர்களின் திறனை உளவியல் தேர்வுகள் மூலம் அறிந்து அதற்கேற்ப பயிற்சி வழங்க வேண்டும். பின்தங்கிய மாணவர்களை மனதைக் காயப்படுத்தாமல் அவர்களின் திறன் வளர்ச்சிக்கான பயிற்சிகளை வழங்க வேண்டும். மேலும் அவர்கள் எத்தகைய திறனில் சிறந்து விளங்குகிறார்களோ, அது சார்ந்த பாடங்களையும், பயிற்சிகளையும் வழங்கி அவர்களையும் மேம்பட்டவர்களாக உயர்த்த வேண்டும்.
மாணவர்களின் திறனை மதிப்பீடு செய்ய பள்ளிகள் செய்ய வேண்டிய சில உளவியல் பயிற்சிகளை இங்கு பார்ப்போம்...
பலம் பலவீனம் அறிதல்
பாடங்கள் படிக்கும் திறனை வைத்து மாணவரின் பலம் பலவீனத்தை அளவிடுவதையே பெரும்பாலான பள்ளிகள் வாடிக்கையாக வைத்திருக்கின்றன. நிஜத்தில் அது புத்திசாலித்தனத்தை அறியும் பயிற்சியாக கூட இருப்பதில்லை என்பதே உண்மை. உளவியல் ரீதியாக ஒருவரின் பலம் பலவீனத்தை அறிய வேண்டுமானால் முதல் இரண்டு வாரங்களுக்காவது பாடங்கள் நடத்தாமல் மாணவர்களோடு பழக வேண்டும் அல்லது பாடங்களை விளையாட்டு கலந்த பயிற்சியோடு வழங்க வேண்டும். அப்போதுதான் மாணவர்களின் உடல் ரீதியான பலமும், மனம் ரீதியான பலம்-பலவீனங்களும் தெரியவரும். அதுதான், ஒரு மாணவர் கணிதத் திறனில் சிறந்து விளங்குகிறாரா, அறிவியலில் நாட்டம் கொண்டிருக்கிறாரா?, சமூக பண்பாட்டை கடைப்பிடிக்கிறாரா? என்பதை தெரிந்து கொள்ள உதவும்.
எழுத்து வடிவில் நடத்தப்படும் உளவியல் தேர்வுகளைவிட, செயல்பாட்டின் அடிப்படையில் நடத்தப்படும் உளவியல் தேர்வுகள் மாணவர்களின் திறனை நன்கு மதிப்பிட உதவும். இந்த மதிப்பீடு மாணவர்களை வகைப்படுத்தவோ, புறக்கணிக்கவோ பயன் படக்கூடாது. அவர்களின் திறனை வளர்ப்பதற்காக, ஊக்குவிப்பதற்காக பயன்பட வேண்டும்.
தனிநபர் பாடங்கள்
ஏற்கனவே சொன்னதுபோல, பாடத்திட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும் பொருத்தமானதல்ல. நாம் உருவத்தில்தான் ஒற்றுமை கொண்ட மனிதர்கள். அதிலும்கூட பல வேற்றுமைகள் இருக்கலாம். உள்ளத்தால் ஒவ்வொருவரும் வேறு வேறானவர்கள். கருத்தொற்றுமை கொண்டவர்கள் இருந்தாலும், அவர்கள் அனைவருமே ஒரே மனப்போக்கு கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள். பாடங்கள் எப்படி பல உட்பிரிவுகளாக பிரிந்து கொண்டே செல்கிறதோ, அதுபோலவே மாணவர்களும் விருப்பத்தாலும், திறன்களாலும் வேறுபட்டவர்களே. அவர்களுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டங்கள் ஆகாது.

அடிப்படைப் பாடத்திட்டங்கள் அனைவருக்கும் பொதுவானவை என்றாலும், கணக்கு வராததற்காக ஒரு மாணவனை கடிந்துகொண்டே இருப்பது தேவையற்றது. கணிதம் தெரிந்தவர்கள் கணிதத்தை ஆண்டால், அறிவியல் தெரிந்தவர்கள் அறிவியலை ஆளலாம். அனைத்தையும் அறிந்து கொண்டு அகிலத்தையே ஆட்டிப்படைக்க ஒருவராலும் முடியாது.
எனவே மாணவர் விருப்பத்தின் அடிப்படையில் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் மாணவரின் திறனுக்கேற்ப பாடச்சுமையை கூட்டி, குறைத்து கொடுக்க வேண்டும். விருப்பப்பாடத்தில் திறமைகளை வளர்க்கவும், மற்ற பாடங்களில் அடிப்படையை அறியவும் வித்திட்டாலே அவர் சிறந்த நிலையை எட்டிவிடுவார்.
வகுப்பறை மட்டுமே போதனைக்கூடமல்ல...
தொடர்ந்து வகுப்பறையிலேயே பாடங்கள் நடத்தப்படுவதும், உளவியல் முறையில் தவறானதாகும். எல்லாவற்றையும் எழுத்துகளிலேயே கற்றுக் கொடுத்துவிட முடியாது. போதனையால் மட்டும் புத்திசாலித்தனத்தை வளர்க்க முடியாது. வகுப்பறை மட்டுமே போதுமென்றால் பள்ளிகளில் மைதானங்கள் தேவையிருக்காது. ஒரு மனமாற்றத்துக்காக, புத்துணர்ச்சிக்காக விளையாட்டு வகுப்புகளை வைத்திருக்கும் பள்ளிகள், வகுப்பறையைத் தாண்டிய கற்பித்தலுக்கு வந்தால் மாணவர்களின் திறன் பலமடங்கு உயரும் என்கிறது உளவியல் முறை. வாரத்திற்கு ஒன்றிரண்டு விளையாட்டு நேரம், வருடத்திற்கு ஒரு சுற்றுலா என்பதைக் கடந்து, “பயிற்சி வழி படிப்பு, உலா வந்து உவகையுடன் கல்வி” என்பதே மாணவர் திறனை வளர்க்க உளவியல் சொல்லும் தீர்வு.
முன்னேற்றங்களை அளவிடல்
மதிப்பெண் உயர்வதை வைத்தே பெற்றோரும், ஆசிரியரும் மாணவரின் திறனை, முன்னேற்றத்தை அளவிடுகிறார்கள். ஒரு மாணவனை மீண்டும் தேர்வெழுத வைத்தால் அதே மதிப்பெண் பெறுவார் என்பது சாத்தியமில்லை. ஆனால் திறன் அடிப்படையில் முன்னேற்றத்தை வளர்ப்பது, பயந்த மனிதனுக்கு பயத்தை போக்கியது போன்ற வீரத்தை வளர்ப்பதாகும். அது அவனுக்கு தோல்வி என்ற நினைப்பே வராமல் வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். எந்தச் சூழலிலும் வெற்றியை நோக்கி நடைபோடும் தைரியத்தை வளர்க்கும். அத்தகைய அபார ஊக்கம், மாணவர்களை அவரவர் உளவியல் அடிப்படையில் உற்சாகப்படுத்தும்போதே நிகழ்கிறது. மாற்றுவழியில் மாணவர் திறனை மாற்றியமைப்பதே முன்னேற்றப்படியாகும்.
பள்ளிகளும், பெற்றோரும் மாணவர்களை மதிப்பெண்களுக்காக தயார்படுத்தாமல், இப்படி உளவியல் ரீதியில் தயார் படுத்தினால், ஒவ்வொருவரும் முதன்மை மாணவர்களாக உயர்ந்து இந்த சமூகத்தையே உயர்த்துவார்கள் என்பதில் ஐயமில்லை!
மாணவர்கள் வெறும் மதிப்பெண்களை வாங்கி பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் எந்திரங்களல்ல. மாணவர் நலன் கருதிய ஆராய்ச்சிகளெல்லாம், ஒவ்வொரு மாணவரின் மனநிலைக்கு ஏற்ப பயிற்சி அளிக்க வேண்டும் என்றே சொல்கிறது. ஆனால் மாணவர்களின் மனநிலையை புரிந்து கொள்ளும் நிலையில் பெற்றோரும், பள்ளி நிர்வாகங்களும் இருக்கிறார்களா? என்பது கேள்விக்குறிதான்.
நிஜத்தில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியாக பாடம் நடத்துவது உளவியல் முறைப்படி தவறாகும். மாணவர்களின் திறனை உளவியல் தேர்வுகள் மூலம் அறிந்து அதற்கேற்ப பயிற்சி வழங்க வேண்டும். பின்தங்கிய மாணவர்களை மனதைக் காயப்படுத்தாமல் அவர்களின் திறன் வளர்ச்சிக்கான பயிற்சிகளை வழங்க வேண்டும். மேலும் அவர்கள் எத்தகைய திறனில் சிறந்து விளங்குகிறார்களோ, அது சார்ந்த பாடங்களையும், பயிற்சிகளையும் வழங்கி அவர்களையும் மேம்பட்டவர்களாக உயர்த்த வேண்டும்.
மாணவர்களின் திறனை மதிப்பீடு செய்ய பள்ளிகள் செய்ய வேண்டிய சில உளவியல் பயிற்சிகளை இங்கு பார்ப்போம்...
பலம் பலவீனம் அறிதல்
பாடங்கள் படிக்கும் திறனை வைத்து மாணவரின் பலம் பலவீனத்தை அளவிடுவதையே பெரும்பாலான பள்ளிகள் வாடிக்கையாக வைத்திருக்கின்றன. நிஜத்தில் அது புத்திசாலித்தனத்தை அறியும் பயிற்சியாக கூட இருப்பதில்லை என்பதே உண்மை. உளவியல் ரீதியாக ஒருவரின் பலம் பலவீனத்தை அறிய வேண்டுமானால் முதல் இரண்டு வாரங்களுக்காவது பாடங்கள் நடத்தாமல் மாணவர்களோடு பழக வேண்டும் அல்லது பாடங்களை விளையாட்டு கலந்த பயிற்சியோடு வழங்க வேண்டும். அப்போதுதான் மாணவர்களின் உடல் ரீதியான பலமும், மனம் ரீதியான பலம்-பலவீனங்களும் தெரியவரும். அதுதான், ஒரு மாணவர் கணிதத் திறனில் சிறந்து விளங்குகிறாரா, அறிவியலில் நாட்டம் கொண்டிருக்கிறாரா?, சமூக பண்பாட்டை கடைப்பிடிக்கிறாரா? என்பதை தெரிந்து கொள்ள உதவும்.
எழுத்து வடிவில் நடத்தப்படும் உளவியல் தேர்வுகளைவிட, செயல்பாட்டின் அடிப்படையில் நடத்தப்படும் உளவியல் தேர்வுகள் மாணவர்களின் திறனை நன்கு மதிப்பிட உதவும். இந்த மதிப்பீடு மாணவர்களை வகைப்படுத்தவோ, புறக்கணிக்கவோ பயன் படக்கூடாது. அவர்களின் திறனை வளர்ப்பதற்காக, ஊக்குவிப்பதற்காக பயன்பட வேண்டும்.
தனிநபர் பாடங்கள்
ஏற்கனவே சொன்னதுபோல, பாடத்திட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும் பொருத்தமானதல்ல. நாம் உருவத்தில்தான் ஒற்றுமை கொண்ட மனிதர்கள். அதிலும்கூட பல வேற்றுமைகள் இருக்கலாம். உள்ளத்தால் ஒவ்வொருவரும் வேறு வேறானவர்கள். கருத்தொற்றுமை கொண்டவர்கள் இருந்தாலும், அவர்கள் அனைவருமே ஒரே மனப்போக்கு கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள். பாடங்கள் எப்படி பல உட்பிரிவுகளாக பிரிந்து கொண்டே செல்கிறதோ, அதுபோலவே மாணவர்களும் விருப்பத்தாலும், திறன்களாலும் வேறுபட்டவர்களே. அவர்களுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டங்கள் ஆகாது.

அடிப்படைப் பாடத்திட்டங்கள் அனைவருக்கும் பொதுவானவை என்றாலும், கணக்கு வராததற்காக ஒரு மாணவனை கடிந்துகொண்டே இருப்பது தேவையற்றது. கணிதம் தெரிந்தவர்கள் கணிதத்தை ஆண்டால், அறிவியல் தெரிந்தவர்கள் அறிவியலை ஆளலாம். அனைத்தையும் அறிந்து கொண்டு அகிலத்தையே ஆட்டிப்படைக்க ஒருவராலும் முடியாது.
எனவே மாணவர் விருப்பத்தின் அடிப்படையில் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் மாணவரின் திறனுக்கேற்ப பாடச்சுமையை கூட்டி, குறைத்து கொடுக்க வேண்டும். விருப்பப்பாடத்தில் திறமைகளை வளர்க்கவும், மற்ற பாடங்களில் அடிப்படையை அறியவும் வித்திட்டாலே அவர் சிறந்த நிலையை எட்டிவிடுவார்.
வகுப்பறை மட்டுமே போதனைக்கூடமல்ல...
தொடர்ந்து வகுப்பறையிலேயே பாடங்கள் நடத்தப்படுவதும், உளவியல் முறையில் தவறானதாகும். எல்லாவற்றையும் எழுத்துகளிலேயே கற்றுக் கொடுத்துவிட முடியாது. போதனையால் மட்டும் புத்திசாலித்தனத்தை வளர்க்க முடியாது. வகுப்பறை மட்டுமே போதுமென்றால் பள்ளிகளில் மைதானங்கள் தேவையிருக்காது. ஒரு மனமாற்றத்துக்காக, புத்துணர்ச்சிக்காக விளையாட்டு வகுப்புகளை வைத்திருக்கும் பள்ளிகள், வகுப்பறையைத் தாண்டிய கற்பித்தலுக்கு வந்தால் மாணவர்களின் திறன் பலமடங்கு உயரும் என்கிறது உளவியல் முறை. வாரத்திற்கு ஒன்றிரண்டு விளையாட்டு நேரம், வருடத்திற்கு ஒரு சுற்றுலா என்பதைக் கடந்து, “பயிற்சி வழி படிப்பு, உலா வந்து உவகையுடன் கல்வி” என்பதே மாணவர் திறனை வளர்க்க உளவியல் சொல்லும் தீர்வு.
முன்னேற்றங்களை அளவிடல்
மதிப்பெண் உயர்வதை வைத்தே பெற்றோரும், ஆசிரியரும் மாணவரின் திறனை, முன்னேற்றத்தை அளவிடுகிறார்கள். ஒரு மாணவனை மீண்டும் தேர்வெழுத வைத்தால் அதே மதிப்பெண் பெறுவார் என்பது சாத்தியமில்லை. ஆனால் திறன் அடிப்படையில் முன்னேற்றத்தை வளர்ப்பது, பயந்த மனிதனுக்கு பயத்தை போக்கியது போன்ற வீரத்தை வளர்ப்பதாகும். அது அவனுக்கு தோல்வி என்ற நினைப்பே வராமல் வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். எந்தச் சூழலிலும் வெற்றியை நோக்கி நடைபோடும் தைரியத்தை வளர்க்கும். அத்தகைய அபார ஊக்கம், மாணவர்களை அவரவர் உளவியல் அடிப்படையில் உற்சாகப்படுத்தும்போதே நிகழ்கிறது. மாற்றுவழியில் மாணவர் திறனை மாற்றியமைப்பதே முன்னேற்றப்படியாகும்.
பள்ளிகளும், பெற்றோரும் மாணவர்களை மதிப்பெண்களுக்காக தயார்படுத்தாமல், இப்படி உளவியல் ரீதியில் தயார் படுத்தினால், ஒவ்வொருவரும் முதன்மை மாணவர்களாக உயர்ந்து இந்த சமூகத்தையே உயர்த்துவார்கள் என்பதில் ஐயமில்லை!
குழந்தைகள் வெளியே செல்லும்போது பிறர் தம்மிடம் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பாகுபடுத்தப் பெற்றோர் பிள்ளைகளுக்குக் கற்றுத்தர வேண்டும்.
நாள்தோறும் வெளியாகும் குற்றச்செய்திகள் நம்மைக் கூசச்செய்கின்றன. அவற்றுள் பெரிதும் நம் உள்ளத்தைப் பதறச் செய்பவை சிறு பிள்ளைகள் மீதான பாலியல் வன்முறையும், பள்ளிப் பிள்ளைகள் தற்கொலையுமே. இரண்டு துயர நிகழ்ச்சிகளும் உடனடிக் கவனம் செலுத்திக் களையப்பட வேண்டுமல்லவா?
ஆண், பெண் வேறுபாடு பற்றிய தெளிவுகூட இல்லாத சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பவர்களுள் அறுபது வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மிகுதி எனும் செய்தி ஆணினத்துக்கே ஒரு மாபெருங் களங்கமாகும். குற்றம் செய்தவர்களைச் சட்டம் தண்டிக்கும். ஆனால் குற்றத்துக்குக் காரணமாக விளங்கும் சூழல்களைத் தெரிந்துகொண்டு அவற்றை நீக்குவது பெற்றோர்களின் பொறுப்பாகும்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் கவனத்துடன் பார்த்துக்கொண்டால் இந்தக் கொடுமை நிகழாமல் செய்துவிடலாமே. அதற்காகப் பிள்ளைகளை வீட்டுக்குளேயே பூட்டிவைக்க வேண்டும் என்று பொருளல்ல. அவர்களுக்குத் தெளிவும் புரிந்துணர்வும் ஏற்படுத்த வேண்டியது பெற்றோர் கடமையல்லவா?
வெளியே செல்லும்போது பிறர் தம்மிடம் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பாகுபடுத்தப் பிள்ளைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். குறிப்பாகப் பெண் குழந்தைகளை வெறித்துப் பார்த்தல், முறைத்துப்பார்த்தல், உடலைத் தடவுதல், பிறர் அறியாமல் தீண்டுதல், கேலி செய்வதைப் போல சீண்டுதல் ஆகியவை தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகள் என்பதைக் குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டும்.
சிறுவர்களாக இருந்தாலும், சிறுமிகளாக இருந்தாலும் அவர்களுக்கு ஏற்படக்கூடிய அபாயங்களை உணர்த்த வேண்டும். இவற்றைப் பெற்றோர்களே செய்ய முடியும்; செய்யவேண்டும். அப்படி விரும்பத்தகாத செயல்கள் நடந்தால் உடனே தங்களுக்குத் தெரியப்படுத்துமாறு குழந்தைகளை அன்புடனும், பரிவுடனும் கேட்டுக்கொள்ள வேண்டும்.
வீட்டில் தொலைக்காட்சி பார்ப்பதற்கு நேரத்தைச் செலவழிக்கும் பெற்றோர்கள் மிகுதி. அந்த நேரத்தைக் குறைத்துக்கொண்டு பிள்ளைகளோடு மனம்விட்டுப் பழகுவதற்கும் பேசுவதற்கும் நேரம் ஒதுக்கக்கூடாதா? அவ்வாறு பழகாததால் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும், இடைவெளி ஏற்பட்டுவிடுகிறது.
பல நேரங்களில் தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் வரும் கதைமாந்தர்களிடம் பிள்ளைகளுக்கு ஏற்படும் ஈடுபாடு கூடப் பெற்றோர்களிடம் ஏற்படாமல் போய்விடுகிறதே...! ஏன்?
வீட்டுக்கு வெளியே தங்களுக்கு ஏற்படும் தொல்லைகளைப் பெற்றோரிடம் எடுத்துக் கூறும் தைரியம் குழந்தைகளுக்கு இல்லை. பெற்றோர்களின் நெருக்கமும் அன்பும் பரிவுமே பிள்ளைகளுக்கு இந்தத் துணிவை ஏற்படுத்தும். இந்தத் துணிவைப் பெற்றோர் உருவாக்காததால் பிள்ளைகள் சின்னச்சின்னச் சிக்கல்களுக்குக்கூடப் பயந்து உடனடியாகத் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
“பாதகம் செய்வாரைக் கண்டால்
பயங் கொள்ளலாகாதுபாப்பா
மோதி மித்துவிடு பாப்பா-அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா” எனச் சிறுவர், சிறுமிகளுக்குத் துணிவு ஏற்படுத்தப் பாரதியார் வழிகாட்டுவது இன்றைய சூழலுக்கு மிகப் பொருத்தமாக விளங்குகிறது.

தாயும் தந்தையும் வேலைக்குப் போகும் குடும்பங்களில் போதிய நேரமின்மையால் பிள்ளைகளின் மேல் அதிகக் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகிறது. முக்கியமாக, இத்தகைய குடும்பங்களில் வார விடுமுறை நாட்களில் பெற்றோர் பிற பணிகளில் கவனத்தைச் சிதறவிடாமல் பிள்ளைகளுக்காகவே தங்கள் நேரத்தைச் செலவிட வேண்டும்.
பிள்ளைகளுக்கு உண்மையாகவே ஊட்டமளிப்பது பெற்றோரின் அரவணைப்பும் அன்பும் பரிவுமேயாகும். இவற்றைப் புரிந்துகொள்ளாமல் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுப்பது மட்டுமே பெற்றோரின் பணி என்று பலர் கருதிவிடுகிறார்கள்.
முதலில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தாங்களே நல்ல முன்மாதிரியாக விளங்க வேண்டும். அம்மாவும் அப்பாவும் ஓயாமல் சண்டை போட்டுக்கொள்ளும் வீடுகளில் பிள்ளைகளுக்கு ஏற்படும் மன உளைச்சல், அவர்கள் அறியாமலேயே அவர்களை மனநோயாளிகள் ஆக்கிவிடுகின்றது.
“நீ அம்மா கட்சியா, அப்பா கட்சியா?” என்று வீட்டிலேயே அரசியல் மோதல் உருவாகுவது வீட்டுக்கும் நல்லதல்ல, நாட்டுக்கும் நல்லதல்ல. பிள்ளைகளின் வருங்காலம் கருதியும் நாட்டின் எதிர்காலம் கருதியும் பிள்ளைகளை உருவாக்கும் பொறுப்பு பெற்றோர்க்கு உரியது.
“ஏடு தூக்கிப் பள்ளியில்
இன்று பயிலும் சிறுவரே
நாடு காக்கும் தலைவராய்
நாளை விளங்கப் போகிறார்” என்னும் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் பாடல் பெற்றோர்களுக்கான அறிவுரையாகவும் விளங்குகிறது.
“இன்று குழந்தைகளுக்கு நல்ல வழியைக் காட்டி வளர்த்தால் நாளைக்கு அவர்கள் நாட்டுக்கே வழிகாட்டியாகத் திகழ்வார்கள்” என்னும் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் கருத்து இங்குக் குறிப்பிடத்தக்கது.
மராட்டியச் சிங்கம் சிவாஜி குழந்தையாக இருந்தபோது அவரது தாய் ஜீஜாபாய் கூறிய வீரசாகசக் கதைகளே சிவாஜியைத் தலைசிறந்த வீரனாக உருவாக்கின. தேசத் தந்தை காந்தி சிறுவயதில் தாயாரிடம் கேட்ட அறிவுரைதான் அவரை மகாத்மா எனும் மாண்புநிலைக்கு உயர்த்தியது. ‘நவ இந்தியாவின் சிற்பி’ நேரு ஒரு சிறந்த தலைவராக உருவாக அவரது தந்தை மோதிலால் நேருவே காரணம்.
இவ்வாறு தலைவர்கள், அறிஞர்கள் பலரின் உருவாக்கத்திற்குப் பெற்றோரின் பங்களிப்பு முதன்மையான காரணமாக விளங்கியதனை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.
‘தாயும் தந்தையுமே குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள். அதற்காகப் பிரம்பைக் கையில் தூக்கவேண்டும் என்று எண்ணவேண்டாம். கண்டிப்பாகச் சொல்வதை விடக் கனிவாகச் சொல்வது மனத்தில் பதியும். அவர்களிடம் நண்பர்களாகப் பழகுங்கள். தங்கள் சொந்த புத்தியைக் கொண்டு சிந்திக்கப் பழக்குங்கள். சீர்தூக்கி ஆராயத் தெரிந்துகொண்டால் குழந்தைகள் கல்வியில் மட்டுமல்ல வாழ்விலும் வெற்றி அடைவார்கள்’ என்னும் தந்தை பெரியாரின் அறிவுரையைப் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
மறைமலை இலக்குவனார்
ஆண், பெண் வேறுபாடு பற்றிய தெளிவுகூட இல்லாத சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பவர்களுள் அறுபது வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மிகுதி எனும் செய்தி ஆணினத்துக்கே ஒரு மாபெருங் களங்கமாகும். குற்றம் செய்தவர்களைச் சட்டம் தண்டிக்கும். ஆனால் குற்றத்துக்குக் காரணமாக விளங்கும் சூழல்களைத் தெரிந்துகொண்டு அவற்றை நீக்குவது பெற்றோர்களின் பொறுப்பாகும்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் கவனத்துடன் பார்த்துக்கொண்டால் இந்தக் கொடுமை நிகழாமல் செய்துவிடலாமே. அதற்காகப் பிள்ளைகளை வீட்டுக்குளேயே பூட்டிவைக்க வேண்டும் என்று பொருளல்ல. அவர்களுக்குத் தெளிவும் புரிந்துணர்வும் ஏற்படுத்த வேண்டியது பெற்றோர் கடமையல்லவா?
வெளியே செல்லும்போது பிறர் தம்மிடம் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பாகுபடுத்தப் பிள்ளைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். குறிப்பாகப் பெண் குழந்தைகளை வெறித்துப் பார்த்தல், முறைத்துப்பார்த்தல், உடலைத் தடவுதல், பிறர் அறியாமல் தீண்டுதல், கேலி செய்வதைப் போல சீண்டுதல் ஆகியவை தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகள் என்பதைக் குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டும்.
சிறுவர்களாக இருந்தாலும், சிறுமிகளாக இருந்தாலும் அவர்களுக்கு ஏற்படக்கூடிய அபாயங்களை உணர்த்த வேண்டும். இவற்றைப் பெற்றோர்களே செய்ய முடியும்; செய்யவேண்டும். அப்படி விரும்பத்தகாத செயல்கள் நடந்தால் உடனே தங்களுக்குத் தெரியப்படுத்துமாறு குழந்தைகளை அன்புடனும், பரிவுடனும் கேட்டுக்கொள்ள வேண்டும்.
வீட்டில் தொலைக்காட்சி பார்ப்பதற்கு நேரத்தைச் செலவழிக்கும் பெற்றோர்கள் மிகுதி. அந்த நேரத்தைக் குறைத்துக்கொண்டு பிள்ளைகளோடு மனம்விட்டுப் பழகுவதற்கும் பேசுவதற்கும் நேரம் ஒதுக்கக்கூடாதா? அவ்வாறு பழகாததால் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும், இடைவெளி ஏற்பட்டுவிடுகிறது.
பல நேரங்களில் தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் வரும் கதைமாந்தர்களிடம் பிள்ளைகளுக்கு ஏற்படும் ஈடுபாடு கூடப் பெற்றோர்களிடம் ஏற்படாமல் போய்விடுகிறதே...! ஏன்?
வீட்டுக்கு வெளியே தங்களுக்கு ஏற்படும் தொல்லைகளைப் பெற்றோரிடம் எடுத்துக் கூறும் தைரியம் குழந்தைகளுக்கு இல்லை. பெற்றோர்களின் நெருக்கமும் அன்பும் பரிவுமே பிள்ளைகளுக்கு இந்தத் துணிவை ஏற்படுத்தும். இந்தத் துணிவைப் பெற்றோர் உருவாக்காததால் பிள்ளைகள் சின்னச்சின்னச் சிக்கல்களுக்குக்கூடப் பயந்து உடனடியாகத் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
“பாதகம் செய்வாரைக் கண்டால்
பயங் கொள்ளலாகாதுபாப்பா
மோதி மித்துவிடு பாப்பா-அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா” எனச் சிறுவர், சிறுமிகளுக்குத் துணிவு ஏற்படுத்தப் பாரதியார் வழிகாட்டுவது இன்றைய சூழலுக்கு மிகப் பொருத்தமாக விளங்குகிறது.

தாயும் தந்தையும் வேலைக்குப் போகும் குடும்பங்களில் போதிய நேரமின்மையால் பிள்ளைகளின் மேல் அதிகக் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகிறது. முக்கியமாக, இத்தகைய குடும்பங்களில் வார விடுமுறை நாட்களில் பெற்றோர் பிற பணிகளில் கவனத்தைச் சிதறவிடாமல் பிள்ளைகளுக்காகவே தங்கள் நேரத்தைச் செலவிட வேண்டும்.
பிள்ளைகளுக்கு உண்மையாகவே ஊட்டமளிப்பது பெற்றோரின் அரவணைப்பும் அன்பும் பரிவுமேயாகும். இவற்றைப் புரிந்துகொள்ளாமல் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுப்பது மட்டுமே பெற்றோரின் பணி என்று பலர் கருதிவிடுகிறார்கள்.
முதலில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தாங்களே நல்ல முன்மாதிரியாக விளங்க வேண்டும். அம்மாவும் அப்பாவும் ஓயாமல் சண்டை போட்டுக்கொள்ளும் வீடுகளில் பிள்ளைகளுக்கு ஏற்படும் மன உளைச்சல், அவர்கள் அறியாமலேயே அவர்களை மனநோயாளிகள் ஆக்கிவிடுகின்றது.
“நீ அம்மா கட்சியா, அப்பா கட்சியா?” என்று வீட்டிலேயே அரசியல் மோதல் உருவாகுவது வீட்டுக்கும் நல்லதல்ல, நாட்டுக்கும் நல்லதல்ல. பிள்ளைகளின் வருங்காலம் கருதியும் நாட்டின் எதிர்காலம் கருதியும் பிள்ளைகளை உருவாக்கும் பொறுப்பு பெற்றோர்க்கு உரியது.
“ஏடு தூக்கிப் பள்ளியில்
இன்று பயிலும் சிறுவரே
நாடு காக்கும் தலைவராய்
நாளை விளங்கப் போகிறார்” என்னும் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் பாடல் பெற்றோர்களுக்கான அறிவுரையாகவும் விளங்குகிறது.
“இன்று குழந்தைகளுக்கு நல்ல வழியைக் காட்டி வளர்த்தால் நாளைக்கு அவர்கள் நாட்டுக்கே வழிகாட்டியாகத் திகழ்வார்கள்” என்னும் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் கருத்து இங்குக் குறிப்பிடத்தக்கது.
மராட்டியச் சிங்கம் சிவாஜி குழந்தையாக இருந்தபோது அவரது தாய் ஜீஜாபாய் கூறிய வீரசாகசக் கதைகளே சிவாஜியைத் தலைசிறந்த வீரனாக உருவாக்கின. தேசத் தந்தை காந்தி சிறுவயதில் தாயாரிடம் கேட்ட அறிவுரைதான் அவரை மகாத்மா எனும் மாண்புநிலைக்கு உயர்த்தியது. ‘நவ இந்தியாவின் சிற்பி’ நேரு ஒரு சிறந்த தலைவராக உருவாக அவரது தந்தை மோதிலால் நேருவே காரணம்.
இவ்வாறு தலைவர்கள், அறிஞர்கள் பலரின் உருவாக்கத்திற்குப் பெற்றோரின் பங்களிப்பு முதன்மையான காரணமாக விளங்கியதனை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.
‘தாயும் தந்தையுமே குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள். அதற்காகப் பிரம்பைக் கையில் தூக்கவேண்டும் என்று எண்ணவேண்டாம். கண்டிப்பாகச் சொல்வதை விடக் கனிவாகச் சொல்வது மனத்தில் பதியும். அவர்களிடம் நண்பர்களாகப் பழகுங்கள். தங்கள் சொந்த புத்தியைக் கொண்டு சிந்திக்கப் பழக்குங்கள். சீர்தூக்கி ஆராயத் தெரிந்துகொண்டால் குழந்தைகள் கல்வியில் மட்டுமல்ல வாழ்விலும் வெற்றி அடைவார்கள்’ என்னும் தந்தை பெரியாரின் அறிவுரையைப் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
மறைமலை இலக்குவனார்
தற்போதைய சூழலில் பல குழந்தைகள் சுயநலமாகவே வாழப் பழகி வருகின்றனர். குழந்தைகள் வழி மாறாமல் இருக்க பெற்றோர்கள் செய்ய வேண்டிய விஷயங்களை இங்கு பார்ப்போம்.
தற்போதைய சூழலில் பல குழந்தைகள் சுயநலமாகவே வாழப் பழகி வருகின்றனர். குறிப்பாக பழக்கிவிடப்படுகின்றனர். இதற்கு பெரும்பான்மையான காரணம் பெற்றோர்களின் வளர்ப்பு முறையே. மேலும், பல குழந்தைகள் பிரச்சனைகள் ஏற்பட்டால் அதை எதிர்கொள்வதை விடுத்து, ஒதுங்கி செல்லவே துணிகின்றனர். எதையும் தைரியமாக ஒப்புக்கொள்ளும் அல்லது தைரியமாகப் போராடும் நிலையும் குறைந்து வருகிறது.
இதற்கு காரணம் பெரும்பாலும் ஒரு சில குடும்பங்களில் ஒரு குழந்தையே போதும் என்ற தங்களது சுயநலம்தான் காரணம். இதனால் குழந்தைகள் தனித்து விடப்பட்டு, சுயநலமாகவே வாழப் பழகிவிடுகின்றனர். தனக்கு ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ இருந்தால் அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை மற்றும் விட்டுக்கொடுக்கும் பண்பு தானாகவே வளர்ந்து, அது ஆரோக்கியமான பழக்கமாகிவிடும்.
சின்னச் சின்ன தவறுகளும், புறக்கணிப்புகளும் பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கி தவறான முடிவுகளுக்கு கொண்டு சென்று விடுகின்றனர். எது அவமானம், எது பாராட்டுக்குரியது என்பதை அறியாமலே அந்த உணர்வுகளை தங்களுக்குள் எடுத்துக் கொண்டு சரியான முடிவு எடுக்க முடியாமல் பல குழந்தைகள் திணறி வருகின்றனர்.
குழந்தைகள் வளரும்போது அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை யாரிடமும் நம்பகத்தன்மையாக முன் வந்து அதற்கான தீர்வுகளை தேடுவதில்லை. இணையதளம், சமூக வலைதளங்கள் வாயிலாக அவர்களுக்கான தீர்வுகளை தேடுகின்றனர். அந்தப் பிரச்சனைகளில் இருந்து விடுபட, மற்றொரு பிரச்சனைகளின் வசம் சிக்குகின்றனர்.
இப்படி குழந்தைகள் வழி மாறாமல் இருக்க பெற்றோர்கள் செய்ய வேண்டிய விஷயங்களை இங்கு பார்ப்போம்,
* பிற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசுவதை தவிருங்கள்.
* ஒரு தோல்வி ஏற்பட்டால், அதுதான் வெற்றிக்கான முதல் படி என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.

* ஏமாற்றங்கள் தோல்விகள் அல்ல என்பதை எடுத்து கூறுங்கள்.
* அவர்கள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுக்காதீர்கள். எது அத்தியாவசியம், எது அத்தியாவசியம் இல்லாதது என்பதை சொல்லிக் கொடுங்கள்.
* ஒரே குழந்தை இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு எல்லாமே தனக்கானது என்கிற மனப்பான்மை இருக்கும். இவர்களுக்கு மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கும் பழக்கத்தை சிறு வயதில் இருந்தே கற்றுக் கொடுங்கள்.
* அடிக்கடி உறவினர்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கிருக்கும் குழந்தைகளோடு ஒன்று கலந்து பழகும் சூழலை உருவாக்குங்கள்.
* ஆண், பெண் வித்தியாசம் பற்றி கற்றுக் கொடுங்கள்.
* இரண்டும், மூன்று குழந்தைகள் இருப்பின், ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட்டுப் பார்ப்பது, குறை சொல்லிப் பாராட்டுவது போன்றவற்றை விட்டுவிட்டு, தட்டிக் கொடுத்து சமமாக நடத்துங்கள்.
* உங்கள் வீட்டுக்கு வருபவர்களிடம் கொடுக்கும் பொருட்களை, உங்கள் குழந்தைகளின் கரங்களாலேயே கொடுக்க வையுங்கள்.
* பள்ளிக்கூடங்களில் பகிர்ந்து உண்ண வேண்டும் என்பதை வீட்டிலும் கற்றுக் கொடுங்கள்.
* கணவன், மனைவி இடையே பிரச்சனையோ, உறவினர்களிடம் மனஸ்தாபமோ இருந்தால் அவற்றை உங்கள் குழந்தைகள் முன்பு காட்டிக் கொள்ளாதீர்கள்.
* செய்யும் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கும் பழக்கத்தைக் கற்றுக் கொடுங்கள்.
* போதும் என்கிற மனப்பான்மைக்கு பழக்குங்கள்.
* அவர்களுடன் நட்புடன் பழகுங்கள். எந்த விஷயமாக இருந்தாலும் மறைக்காமல் உங்களிடம் குழந்தைகள் சொல்லும் அளவுக்கு அவர்களிடம் நடந்து கொள்ளுங்கள்.
இதற்கு காரணம் பெரும்பாலும் ஒரு சில குடும்பங்களில் ஒரு குழந்தையே போதும் என்ற தங்களது சுயநலம்தான் காரணம். இதனால் குழந்தைகள் தனித்து விடப்பட்டு, சுயநலமாகவே வாழப் பழகிவிடுகின்றனர். தனக்கு ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ இருந்தால் அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை மற்றும் விட்டுக்கொடுக்கும் பண்பு தானாகவே வளர்ந்து, அது ஆரோக்கியமான பழக்கமாகிவிடும்.
சின்னச் சின்ன தவறுகளும், புறக்கணிப்புகளும் பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கி தவறான முடிவுகளுக்கு கொண்டு சென்று விடுகின்றனர். எது அவமானம், எது பாராட்டுக்குரியது என்பதை அறியாமலே அந்த உணர்வுகளை தங்களுக்குள் எடுத்துக் கொண்டு சரியான முடிவு எடுக்க முடியாமல் பல குழந்தைகள் திணறி வருகின்றனர்.
குழந்தைகள் வளரும்போது அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை யாரிடமும் நம்பகத்தன்மையாக முன் வந்து அதற்கான தீர்வுகளை தேடுவதில்லை. இணையதளம், சமூக வலைதளங்கள் வாயிலாக அவர்களுக்கான தீர்வுகளை தேடுகின்றனர். அந்தப் பிரச்சனைகளில் இருந்து விடுபட, மற்றொரு பிரச்சனைகளின் வசம் சிக்குகின்றனர்.
இப்படி குழந்தைகள் வழி மாறாமல் இருக்க பெற்றோர்கள் செய்ய வேண்டிய விஷயங்களை இங்கு பார்ப்போம்,
* பிற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசுவதை தவிருங்கள்.
* ஒரு தோல்வி ஏற்பட்டால், அதுதான் வெற்றிக்கான முதல் படி என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.

* ஏமாற்றங்கள் தோல்விகள் அல்ல என்பதை எடுத்து கூறுங்கள்.
* அவர்கள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுக்காதீர்கள். எது அத்தியாவசியம், எது அத்தியாவசியம் இல்லாதது என்பதை சொல்லிக் கொடுங்கள்.
* ஒரே குழந்தை இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு எல்லாமே தனக்கானது என்கிற மனப்பான்மை இருக்கும். இவர்களுக்கு மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கும் பழக்கத்தை சிறு வயதில் இருந்தே கற்றுக் கொடுங்கள்.
* அடிக்கடி உறவினர்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கிருக்கும் குழந்தைகளோடு ஒன்று கலந்து பழகும் சூழலை உருவாக்குங்கள்.
* ஆண், பெண் வித்தியாசம் பற்றி கற்றுக் கொடுங்கள்.
* இரண்டும், மூன்று குழந்தைகள் இருப்பின், ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட்டுப் பார்ப்பது, குறை சொல்லிப் பாராட்டுவது போன்றவற்றை விட்டுவிட்டு, தட்டிக் கொடுத்து சமமாக நடத்துங்கள்.
* உங்கள் வீட்டுக்கு வருபவர்களிடம் கொடுக்கும் பொருட்களை, உங்கள் குழந்தைகளின் கரங்களாலேயே கொடுக்க வையுங்கள்.
* பள்ளிக்கூடங்களில் பகிர்ந்து உண்ண வேண்டும் என்பதை வீட்டிலும் கற்றுக் கொடுங்கள்.
* கணவன், மனைவி இடையே பிரச்சனையோ, உறவினர்களிடம் மனஸ்தாபமோ இருந்தால் அவற்றை உங்கள் குழந்தைகள் முன்பு காட்டிக் கொள்ளாதீர்கள்.
* செய்யும் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கும் பழக்கத்தைக் கற்றுக் கொடுங்கள்.
* போதும் என்கிற மனப்பான்மைக்கு பழக்குங்கள்.
* அவர்களுடன் நட்புடன் பழகுங்கள். எந்த விஷயமாக இருந்தாலும் மறைக்காமல் உங்களிடம் குழந்தைகள் சொல்லும் அளவுக்கு அவர்களிடம் நடந்து கொள்ளுங்கள்.
ஒத்த வயதுடைய குழந்தைகளின் சராசரி கற்கும் திறனைவிட, அளவில் குறைவான கற்றல் திறனுள்ள குழந்தையை கற்றல் குறைபாடுள்ள குழந்தையாகக் கருதுகிறோம்.
பிறப்பதற்கரிய பிறவியான மானிடப்பிறவி எடுத்தாலும், வெளிப்புற அங்க குறைபாடுகள் இல்லாமல் பிறப்பது அரிது. அதைவிட அரிது முறைப்படி கல்வி கற்று ஞானத்தைப் பெறுவது என்பது அவ்வையின் வாக்கு. பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும் முறைப்படி கல்வி கற்கும் திறன் ஒரே அளவாக அமைவதில்லை. ஒத்த வயதுடைய குழந்தைகளின் சராசரி கற்கும் திறனைவிட, அளவில் குறைவான கற்றல் திறனுள்ள குழந்தையை கற்றல் குறைபாடுள்ள குழந்தையாகக் கருதுகிறோம்.
முறைசார்ந்த கல்விமுறையில் எழுத்துகளையும், சொற்களையும், எண்களையும் வாசிப்பதிலும், புரிந்து கொள்வதிலும், புரிந்து கொண்டதை கோர்வையாக சொல்வதிலும், மனனம் செய்வதிலும், நினைவூட்டுவதிலும், எழுதுவதிலும் அந்த வயதிற்குரிய சராசரி குழந்தையைவிட சிரமப்படுவதை கற்றல் குறைபாடு என்கிறோம்.
கற்றல் குறைபாடு என்பது பத்து குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு என்ற விகிதத்தில் காணப்படுகிறது. பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு நான்கு மடங்கு எண்ணிக்கையில் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் புத்தி கூர்மையில் இந்த குழந்தைகள் பெரும்பாலும் சராசரி அளவு அல்லது இதைவிட சற்று அதிக அளவு கூர்மை பெற்றவர்களாக உள்ளனர்.
குழந்தைகளிடம் பின்வரும் அறிகுறிகள் தென்படுவதை வைத்து அவர்களை உரிய மருத்துவரிடம் அழைத்துச்சென்று பரிசோதித்து கற்றல் குறைபாடு உள்ளதா? என்பதை தெளிவுப் படுத்திக் கொள்ள வேண்டும். அந்த அறிகுறிகள் சரளமாக வாசிக்க சிரமப்படுவது, ஒரே மாதிரி உச்சரிப்புள்ள சொற்களை மாற்றி வாசிப்பது, வலது, இடது புறங்களில் மாறிவரும் எழுத்துக்களில் தடுமாற்றம் கொள்வது, சொற்களில் எழுத்துகளை மாற்றி எழுதுவது, படிப்பதில், எழுதுவதில் ஆர்வம் காட்டாமல் இருப்பது, சொல்ல வருவதை கோர்வையாக சொல்ல முடியாமல் தவிப்பது, கவனத்தை அதிகமாக சிதறவிடுவது, கையெழுத்து மோசமாக இருப்பது போன்றவையாகும்.
குறைப்பிரசவம், பிரசவத்தில் ஏற்படும் சிக்கல்கள், பிறந்த குழந்தையின் எடை குறைந்திருப்பது, கருவுற்ற காலத்தில் தாய் உட்கொள்ளும் சில மருந்துகள் மற்றும் மதுவகைகள், பெற்றோர்களின் புகைபிடிக்கும் பழக்கம், குழந்தை வந்த பரம்பரையில் அந்த குறைபாடுள்ளோர் இருப்பது, குழந்தை வளரும் சுற்றுச்சூழல் போன்றவைகள் குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடு ஏற்பட காரணிகள் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளில் பலர் மற்ற துறைகளில் ஈடுபாடும், சிறந்த அறிவும், ஆற்றலும் பெற்றிருப்பதை காணமுடிகிறது. குழந்தைகள் வெளிப்படுத்தும் ஆர்வத்தை கவனித்து பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவர்களிடம் ஒளிந்திருக்கும் திறனை கண்டறிந்து அந்த திறன்களை வளர்க்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதனை மேன்மேலும் வளர்க்கும் வண்ணம் அவர்களை ஊக்கப்படுத்துவதையும், உற்சாகப்படுத்துவதையும் செய்ய வேண்டும்.
அப்போது தான் அவர்கள் விரும்பும் துறைகளில் உச்சத்திற்கு கொண்டு செல்ல முடியும். இத்தகைய குழந்தைகள் விளையாட்டு, ஓவியம், நாடகம், ஆடை, அணிகலன்கள் வடிவமைப்பு, அறிவியல், கட்டிடக்கலை, தோட்டக்கலை, சமையல் கலை, இசை, வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்புக்கலை போன்ற பல்வேறு துறைகளில் நாட்டம் உடையவர்களாக உள்ளனர்.
கற்றல் குறைபாடு உள்ளதை முறைப்படி பெற்றோர்கள் உறுதிசெய்து கொண்டபின் அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை மருத்துவர் ஆலோசனைப்படியோ, அல்லது இதற்கென பயிற்சிபெற்ற உளவியலாளர் ஆலோசனைப்படியோ அளிக்க வேண்டும்.
கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு உரிய மருத்துவ சான்றிதழ் இருந்தால் அரசாங்கம் பொதுத்தேர்வில் சில சலுகைகள் வழங்குகின்றது.
பெற்றோர் கற்பதில் மிகவும் சிரமப்படும் குழந்தைகளை இதற்கென இயங்கும் சிறப்புப் பள்ளியில் அனுமதிக்க வேண்டும். சாதாரணப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளை நிவர்த்தி வகுப்புகளுக்கு அனுப்ப வேண்டும். பெற்றோர் குழந்தைகளை குற்றம், குறை சொல்லாமல், மற்ற குழந்தைகளோடு ஒப்பிடாமல் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
இக்குறைகளை நீக்க மருந்துகள் இல்லை. தொடர் பயிற்சிகளின் மூலமே இதனை சரிசெய்ய முடியும். குழந்தையின் குறைகளின் அளவைப் பொறுத்தே பயிற்சியின் காலமும், தன்மையும் அமையும். பெற்றோரின் புரிதலும், அனுசரனையும், ஆதரவும் குழந்தைகளை இக்குறையிலிருந்து விரைவில் மேன்மையடைய உதவும்.
கலையரசி, சிறப்பு கல்வி பயிற்சியாளர்
முறைசார்ந்த கல்விமுறையில் எழுத்துகளையும், சொற்களையும், எண்களையும் வாசிப்பதிலும், புரிந்து கொள்வதிலும், புரிந்து கொண்டதை கோர்வையாக சொல்வதிலும், மனனம் செய்வதிலும், நினைவூட்டுவதிலும், எழுதுவதிலும் அந்த வயதிற்குரிய சராசரி குழந்தையைவிட சிரமப்படுவதை கற்றல் குறைபாடு என்கிறோம்.
கற்றல் குறைபாடு என்பது பத்து குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு என்ற விகிதத்தில் காணப்படுகிறது. பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு நான்கு மடங்கு எண்ணிக்கையில் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் புத்தி கூர்மையில் இந்த குழந்தைகள் பெரும்பாலும் சராசரி அளவு அல்லது இதைவிட சற்று அதிக அளவு கூர்மை பெற்றவர்களாக உள்ளனர்.
குழந்தைகளிடம் பின்வரும் அறிகுறிகள் தென்படுவதை வைத்து அவர்களை உரிய மருத்துவரிடம் அழைத்துச்சென்று பரிசோதித்து கற்றல் குறைபாடு உள்ளதா? என்பதை தெளிவுப் படுத்திக் கொள்ள வேண்டும். அந்த அறிகுறிகள் சரளமாக வாசிக்க சிரமப்படுவது, ஒரே மாதிரி உச்சரிப்புள்ள சொற்களை மாற்றி வாசிப்பது, வலது, இடது புறங்களில் மாறிவரும் எழுத்துக்களில் தடுமாற்றம் கொள்வது, சொற்களில் எழுத்துகளை மாற்றி எழுதுவது, படிப்பதில், எழுதுவதில் ஆர்வம் காட்டாமல் இருப்பது, சொல்ல வருவதை கோர்வையாக சொல்ல முடியாமல் தவிப்பது, கவனத்தை அதிகமாக சிதறவிடுவது, கையெழுத்து மோசமாக இருப்பது போன்றவையாகும்.
குறைப்பிரசவம், பிரசவத்தில் ஏற்படும் சிக்கல்கள், பிறந்த குழந்தையின் எடை குறைந்திருப்பது, கருவுற்ற காலத்தில் தாய் உட்கொள்ளும் சில மருந்துகள் மற்றும் மதுவகைகள், பெற்றோர்களின் புகைபிடிக்கும் பழக்கம், குழந்தை வந்த பரம்பரையில் அந்த குறைபாடுள்ளோர் இருப்பது, குழந்தை வளரும் சுற்றுச்சூழல் போன்றவைகள் குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடு ஏற்பட காரணிகள் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளில் பலர் மற்ற துறைகளில் ஈடுபாடும், சிறந்த அறிவும், ஆற்றலும் பெற்றிருப்பதை காணமுடிகிறது. குழந்தைகள் வெளிப்படுத்தும் ஆர்வத்தை கவனித்து பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவர்களிடம் ஒளிந்திருக்கும் திறனை கண்டறிந்து அந்த திறன்களை வளர்க்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதனை மேன்மேலும் வளர்க்கும் வண்ணம் அவர்களை ஊக்கப்படுத்துவதையும், உற்சாகப்படுத்துவதையும் செய்ய வேண்டும்.
அப்போது தான் அவர்கள் விரும்பும் துறைகளில் உச்சத்திற்கு கொண்டு செல்ல முடியும். இத்தகைய குழந்தைகள் விளையாட்டு, ஓவியம், நாடகம், ஆடை, அணிகலன்கள் வடிவமைப்பு, அறிவியல், கட்டிடக்கலை, தோட்டக்கலை, சமையல் கலை, இசை, வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்புக்கலை போன்ற பல்வேறு துறைகளில் நாட்டம் உடையவர்களாக உள்ளனர்.
கற்றல் குறைபாடு உள்ளதை முறைப்படி பெற்றோர்கள் உறுதிசெய்து கொண்டபின் அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை மருத்துவர் ஆலோசனைப்படியோ, அல்லது இதற்கென பயிற்சிபெற்ற உளவியலாளர் ஆலோசனைப்படியோ அளிக்க வேண்டும்.
கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு உரிய மருத்துவ சான்றிதழ் இருந்தால் அரசாங்கம் பொதுத்தேர்வில் சில சலுகைகள் வழங்குகின்றது.
பெற்றோர் கற்பதில் மிகவும் சிரமப்படும் குழந்தைகளை இதற்கென இயங்கும் சிறப்புப் பள்ளியில் அனுமதிக்க வேண்டும். சாதாரணப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளை நிவர்த்தி வகுப்புகளுக்கு அனுப்ப வேண்டும். பெற்றோர் குழந்தைகளை குற்றம், குறை சொல்லாமல், மற்ற குழந்தைகளோடு ஒப்பிடாமல் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
இக்குறைகளை நீக்க மருந்துகள் இல்லை. தொடர் பயிற்சிகளின் மூலமே இதனை சரிசெய்ய முடியும். குழந்தையின் குறைகளின் அளவைப் பொறுத்தே பயிற்சியின் காலமும், தன்மையும் அமையும். பெற்றோரின் புரிதலும், அனுசரனையும், ஆதரவும் குழந்தைகளை இக்குறையிலிருந்து விரைவில் மேன்மையடைய உதவும்.
கலையரசி, சிறப்பு கல்வி பயிற்சியாளர்
குழந்தைக்கு ஆறு மாதத்திற்கு மேல் இருந்தால் பாலைத் தவிர மற்ற ஏதேனும் சில உணவுகளையும் கொடுக்கப் பழகலாம். அசைவத்தை எந்த வயதில் இருந்து கொடுக்கலாம் என்று பார்க்கலாம்.
உங்கள் வீட்டில் உங்கள் குழந்தையோ அல்லது அண்ணன், அக்கா ஆகியோருடைய குழந்தையோ நிச்சயம் இருக்கும். அப்படி இந்த குழந்தைகள் கைக்குழந்தையாக இருக்கும் பட்சத்தில் பால் மட்டும் தான் உணவாக வழங்கப்படும்.
ஆனால் ஆறு மாதக் குழந்தைக்கு மேல் இருந்தால் பாலைத் தவிர மற்ற ஏதேனும் சில உணவுகளையும் கொடுக்கப் பழக்குவோம். அதிலும் அசைவ உணவுகள் குழந்தைகளுக்கு எப்போது கொடுக்க வேண்டும். எப்படி படிப்படியாக அதைத் தொடங்க வேண்டுமென சில வழிமுறைகள் உண்டு. அதைப் பினபற்றினாலே போதும். அசைவம் சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு எந்த பிரச்சனையும் உண்டாகாது.
அசைவ உணவுகளில் முதன்மையான ஊட்டச்சத்தாக ஏராளமான புரதம் நிறைந்திருக்கிறது. இது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.
அசைவத்தில் முதலில் குழந்தைககு முட்டையிலிருந்து ஆரம்பியுங்கள்.

குழந்தைக்கு ஒரு வயது ஆனபின்பே நான்வெஜ் உணவுகளைக் கொடுக்க வேண்டும்.
முட்டை கொடுத்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீன் உணவுகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.
அடுத்ததாக சிக்கன் உணவுகளைக் கொடுக்கலாம். அதிலும் சூப் வகைகளைக் கொடுப்பது நல்லது. சில சமயம் திடீரென குழந்தைகள் நான் - வெஜ் சாப்பிடும் போது வயிற்றுப் பொருமல், வலி உண்டாகும்.
சில குழந்தைகள் புதிய வித்தியாசமான சுவையாக இருப்பதால் சாப்பிட மறுக்கும். அதனால் சூப் வகைகள் கொடுத்துப் பழகிய பின், சிக்கன் போன்ற திட உணவுகளைக் கொடுக்கப் பழகலாம்.
ஆட்டிறைச்சி இரண்டு வயது ஆன பிறகு கொடுப்பது நல்லது. ஜீரணமாக அதிக நேரம் எடுக்கும்.
ஆனால் ஆறு மாதக் குழந்தைக்கு மேல் இருந்தால் பாலைத் தவிர மற்ற ஏதேனும் சில உணவுகளையும் கொடுக்கப் பழக்குவோம். அதிலும் அசைவ உணவுகள் குழந்தைகளுக்கு எப்போது கொடுக்க வேண்டும். எப்படி படிப்படியாக அதைத் தொடங்க வேண்டுமென சில வழிமுறைகள் உண்டு. அதைப் பினபற்றினாலே போதும். அசைவம் சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு எந்த பிரச்சனையும் உண்டாகாது.
அசைவ உணவுகளில் முதன்மையான ஊட்டச்சத்தாக ஏராளமான புரதம் நிறைந்திருக்கிறது. இது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.
அசைவத்தில் முதலில் குழந்தைககு முட்டையிலிருந்து ஆரம்பியுங்கள்.

குழந்தைக்கு ஒரு வயது ஆனபின்பே நான்வெஜ் உணவுகளைக் கொடுக்க வேண்டும்.
முட்டை கொடுத்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீன் உணவுகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.
அடுத்ததாக சிக்கன் உணவுகளைக் கொடுக்கலாம். அதிலும் சூப் வகைகளைக் கொடுப்பது நல்லது. சில சமயம் திடீரென குழந்தைகள் நான் - வெஜ் சாப்பிடும் போது வயிற்றுப் பொருமல், வலி உண்டாகும்.
சில குழந்தைகள் புதிய வித்தியாசமான சுவையாக இருப்பதால் சாப்பிட மறுக்கும். அதனால் சூப் வகைகள் கொடுத்துப் பழகிய பின், சிக்கன் போன்ற திட உணவுகளைக் கொடுக்கப் பழகலாம்.
ஆட்டிறைச்சி இரண்டு வயது ஆன பிறகு கொடுப்பது நல்லது. ஜீரணமாக அதிக நேரம் எடுக்கும்.
சில குழந்தைகளிடம் காணப்படும் முரட்டுத்தனத்தைப் பிஞ்சுப் பருவத்திலேயே சரிசெய்யாவிட்டால் அவர்கள் பெரியவர்கள் ஆன பின்னரும் அது தொடரும்.
சில குழந்தைகளிடம் காணப்படும் முரட்டுத்தனத்தைப் பிஞ்சுப் பருவத்திலேயே சரிசெய்யாவிட்டால் அவர்கள் பெரியவர்கள் ஆன பின்னரும் அது தொடரும்.
தங்கள் பெற்றோரிடம் முரட்டுத் தனத்தை வெளிப்படுத்துவதில் ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற பேதமில்லை. முதலில் கடும் வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள். சின்ன விஷயங்களுக்கும் கூச்சல் போடுவார்கள். கெட்ட வார்த்தைகள்கூடப் பேசுவார்கள்.
குழந்தைகள் ஆசைப்படும் ஒன்றை மறுக்கும்போதோ, ஏமாற்றத்திற்கு உள்ளாகும்போதோ இப்படித் தங்கள் கோபத்தை அவர்கள் வெளிப்படுத்துவார்கள். பொதுவாகத் தங்கள் தவறுகளுக்கான தண்டனை யிலிருந்து தப்பிப்பதற்காகவும் இதுபோன்ற செயல்களில் குழந்தைகள் ஈடுபடுகின்றனர்.
கடும் வார்த்தைகளைப் பயன்படுத்தியும் தங்கள் எண்ணம் நிறைவேறாத நிலையில் அவர்கள் உடல்ரீதியான வன்முறையிலும் இறங்குவதைப் பார்க்கலாம்.
பொருட்களை எறிதல், தங்களையே வதைப்பது, பொருட்களை உடைப்பது, பெற்றோரை அடிப்பது போன்றவை அடுத்த கட்டம். பொதுவாக சகிப்புத்தன்மை கொண்டவர்களாக இருப்பதால் குழந்தையின் வன்முறையால் அதிகம் பாதிக்கப்படுவது அம்மாக்கள்தான்.
இந்த அனுபவம் அந்த அம்மாக்களை மிகவும் சங்கடத்துக்கும் உள்ளாக்கும். ஆனால் குழந்தைகளின் முரட்டுத்தனத்தைப் பெற்றோர்கள் சரியான சமயத்தில் பொருட்படுத்தாமல் போனால் பெரியவர்களான பின்னரும் அப்பிரச்சினை தொடரும்.

ஒரு குழந்தை முதல் முறை முரட்டுத்தனமான செய்கையை வெளிப்படுத்தும்போதே அதைப் பெற்றோர்கள் கவனித்து, கண்டிப்பது அவசியம். குழந்தையின் முரட்டுத்தனமான நடவடிக்கைகளை அப்பாவோ, அம்மாவோ யாரோ ஒருவர், மென்மையாக ஆதரித்தாலும், குழந்தை தனது போக்கைக் கைவிடாது.
ஒரு குழந்தையின் உணர்வு ரீதியான ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் இந்த முரட்டுக் கோபத்திலிருந்து விடுபடுவது அவசியம். சுற்றியுள்ளவர்களைப் பாதிக்காமல் குழந்தைகள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குக் கற்றுக்கொடுப்பது அவசியமானது.
விளையாட்டுகள் மற்றும் கேரம் போர்டு, ரூபிக் சதுரம் ஆகியவை மூலம் தேவையற்ற கோபத்தைக் குழந்தைகளிடம் படிப்படியாகக் குறைக்க முடியும். வெற்றியைக் கொண்டாடுவது போன்றே தோல்வியையும் ஏற்றுக்கொள்ள குழந்தைகளுக்கு விளையாட்டுகள் உதவும்.
கணிப்பொறியில் வீடியோ கேம் ஆடும் பெரும்பாலான குழந்தைகள், தாங்கள் தோற்கும் நிலை வரும்போது சுவிட்ச் ஆஃப் செய்துவிடுகின்றனர். எதிரில் மனிதர்கள் விளையாடாத நிலையில் அந்த அனுபவம் யதார்த்த வாழ்க்கையைக் கற்றுக்கொள்வதற்கு எந்த உதவியும் புரிவது இல்லை. மனிதர்களுடன் ஏற்படும் உணர்வு ரீதியான உறவுகளின் மூலமே குழந்தைகளால் கற்றுக்கொள்ள முடியும்.
குழந்தைப் பருவத்தில் வெளிப்படும் முரட்டுத்தனம் அவர்கள் பெரியவர்களாகும்போது அந்த ஆளுமையின் ஒரு பகுதியாகவே மாறிவிட வாய்ப்புண்டு. அலுவலக சகாக்கள், மனைவி மற்றும் குழந்தைகளிடமும் அது வன்முறையாக நீட்சி அடையும்.
குடும்ப வன்முறை என்பது ஆண்களால் மட்டுமே பிரயோகிக்கப்படுவது என்பது பொதுவாக இருக்கும் நம்பிக்கை. ஆனால் அது உண்மை அல்ல. பெண்களும் உடல் ரீதியான வன்முறைகளை வெளிப்படுத்துபவர்களாக இருக்க முடியும். அதனால் குழந்தைப் பருவத்திலேயே இதுபோன்ற சிக்கல்களை சரிசெய்வது அவசியம்.
தங்கள் பெற்றோரிடம் முரட்டுத் தனத்தை வெளிப்படுத்துவதில் ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற பேதமில்லை. முதலில் கடும் வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள். சின்ன விஷயங்களுக்கும் கூச்சல் போடுவார்கள். கெட்ட வார்த்தைகள்கூடப் பேசுவார்கள்.
குழந்தைகள் ஆசைப்படும் ஒன்றை மறுக்கும்போதோ, ஏமாற்றத்திற்கு உள்ளாகும்போதோ இப்படித் தங்கள் கோபத்தை அவர்கள் வெளிப்படுத்துவார்கள். பொதுவாகத் தங்கள் தவறுகளுக்கான தண்டனை யிலிருந்து தப்பிப்பதற்காகவும் இதுபோன்ற செயல்களில் குழந்தைகள் ஈடுபடுகின்றனர்.
கடும் வார்த்தைகளைப் பயன்படுத்தியும் தங்கள் எண்ணம் நிறைவேறாத நிலையில் அவர்கள் உடல்ரீதியான வன்முறையிலும் இறங்குவதைப் பார்க்கலாம்.
பொருட்களை எறிதல், தங்களையே வதைப்பது, பொருட்களை உடைப்பது, பெற்றோரை அடிப்பது போன்றவை அடுத்த கட்டம். பொதுவாக சகிப்புத்தன்மை கொண்டவர்களாக இருப்பதால் குழந்தையின் வன்முறையால் அதிகம் பாதிக்கப்படுவது அம்மாக்கள்தான்.
இந்த அனுபவம் அந்த அம்மாக்களை மிகவும் சங்கடத்துக்கும் உள்ளாக்கும். ஆனால் குழந்தைகளின் முரட்டுத்தனத்தைப் பெற்றோர்கள் சரியான சமயத்தில் பொருட்படுத்தாமல் போனால் பெரியவர்களான பின்னரும் அப்பிரச்சினை தொடரும்.

ஒரு குழந்தை முதல் முறை முரட்டுத்தனமான செய்கையை வெளிப்படுத்தும்போதே அதைப் பெற்றோர்கள் கவனித்து, கண்டிப்பது அவசியம். குழந்தையின் முரட்டுத்தனமான நடவடிக்கைகளை அப்பாவோ, அம்மாவோ யாரோ ஒருவர், மென்மையாக ஆதரித்தாலும், குழந்தை தனது போக்கைக் கைவிடாது.
ஒரு குழந்தையின் உணர்வு ரீதியான ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் இந்த முரட்டுக் கோபத்திலிருந்து விடுபடுவது அவசியம். சுற்றியுள்ளவர்களைப் பாதிக்காமல் குழந்தைகள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குக் கற்றுக்கொடுப்பது அவசியமானது.
விளையாட்டுகள் மற்றும் கேரம் போர்டு, ரூபிக் சதுரம் ஆகியவை மூலம் தேவையற்ற கோபத்தைக் குழந்தைகளிடம் படிப்படியாகக் குறைக்க முடியும். வெற்றியைக் கொண்டாடுவது போன்றே தோல்வியையும் ஏற்றுக்கொள்ள குழந்தைகளுக்கு விளையாட்டுகள் உதவும்.
கணிப்பொறியில் வீடியோ கேம் ஆடும் பெரும்பாலான குழந்தைகள், தாங்கள் தோற்கும் நிலை வரும்போது சுவிட்ச் ஆஃப் செய்துவிடுகின்றனர். எதிரில் மனிதர்கள் விளையாடாத நிலையில் அந்த அனுபவம் யதார்த்த வாழ்க்கையைக் கற்றுக்கொள்வதற்கு எந்த உதவியும் புரிவது இல்லை. மனிதர்களுடன் ஏற்படும் உணர்வு ரீதியான உறவுகளின் மூலமே குழந்தைகளால் கற்றுக்கொள்ள முடியும்.
குழந்தைப் பருவத்தில் வெளிப்படும் முரட்டுத்தனம் அவர்கள் பெரியவர்களாகும்போது அந்த ஆளுமையின் ஒரு பகுதியாகவே மாறிவிட வாய்ப்புண்டு. அலுவலக சகாக்கள், மனைவி மற்றும் குழந்தைகளிடமும் அது வன்முறையாக நீட்சி அடையும்.
குடும்ப வன்முறை என்பது ஆண்களால் மட்டுமே பிரயோகிக்கப்படுவது என்பது பொதுவாக இருக்கும் நம்பிக்கை. ஆனால் அது உண்மை அல்ல. பெண்களும் உடல் ரீதியான வன்முறைகளை வெளிப்படுத்துபவர்களாக இருக்க முடியும். அதனால் குழந்தைப் பருவத்திலேயே இதுபோன்ற சிக்கல்களை சரிசெய்வது அவசியம்.
குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய் பரம்பரை நோயல்ல. அதிகபட்சமாக குழந்தை பருவ ஆஸ்துமா நோய் அலர்ஜியால் ஏற்படக்கூடியது.
மழையும் குளிரும் மாறி மாறிக் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்க, மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம்! லேசான தூறலோ, சில டிகிரி அதிகமான குளிரோ கூட ஒப்புக்கொள்ளாது பலருக்கு. சாதாரண சளி, இருமலில் ஆரம்பிக்கும். அப்படியே தொண்டையில் ‘கீச்... கீச்’ சத்தமும் சேர்ந்து கொள்ளும். அடுத்த கட்டமாக சுவாசிப்பதில் சிக்கல் உண்டாகி, மூச்சுத்திணறல் உண்டாகும்.
விசிலை விழுங்கியது போல, மூச்சு விடும் போதெல்லாம் விசில் சத்தம் சேர்ந்து ஒலிக்கும். தூக்கம் தொலையும். பசி மறக்கும். ‘எப்போ சரியாகும்’ என உடலும் மனதும் அழும். சுருக்கமாக சொல்லப் போனால், அந்த அனுபவம் நரக வேதனை... அதுதான் ஆஸ்துமா!
குழந்தைகளுக்கு ஆஸ்துமா இருப்பதைப் பல பெற்றோரும் தாமதமாகவே கண்டு பிடிக்கிறார்கள். நோயின் தீவிரம் அதிகரிக்கும் போது, குழந்தையின் பேச்சுத் திறமை பாதிக்கலாம். அதாவது வாக்கியங்களாகப் பேசிக் கொண்டிருந்த குழந்தைகளின் பேச்சு, நோயின் பாதிப்பால், வார்த்தைகளாகக் குறையும். கோபமும் பதற்றமும் அதிகரித்து, ஒருவித எரிச்சல் மனநிலையிலேயே இருப்பார்கள்.

இன்றைய சூழ்நிலையில் குழந்தைகள் பலருக்கு ஆஸ்துமா நோய் தாக்கம் ஏற்படுகின்றது.மாசடைந்த சூழழும் தூசி அலர்ஜி போன்றவைகளினாலும் எண்ணற்ற குழந்தைகள் ஆஸ்துமா நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். அவர்கள் உபயோகிக்கும், படுக்கையறை, பொருட்கள் போன்றவற்றை சுத்தமாக வைத்துக்கொண்டால் ஆஸ்துமா நோய் தாக்காமல் பாதுகாக்கலாம் என்கின்றனர் குழந்தை மருத்துவர்கள்.
குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய் பரம்பரை நோயல்ல. அதிகபட்சமாக குழந்தை பருவ ஆஸ்துமா நோய் அலர்ஜியால் ஏற்படக்கூடியது. பூக்களின் மகரந்த தூள்கள், வீட்டுத்தூசு, மிருகக்கழிவு, போன்றவற்றால் இது ஏற்படுகிறது.
நோயெதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகளை இந்த ஆஸ்துமா தாக்குகிறது. குளிர்காற்று, வீரியம் மிக்க வாசனை, புகை போன்றவற்றாலும் வைரஸ் நுண்கிருமிகள் மூலம் ஏற்படும் தொற்று நோயாலும் ஏற்படக்கூடும்.
ஆஸ்துமா ஏற்படாமல் இருக்க சுத்தமாக வீடுகளை வைத்துக்கொள்ள வேண்டும்.புகை பிடிப்பவரின் அருகில் தூசி படியும் இடங்களில் குழந்தைகளை விளையாட அனுமதிக்க வேண்டாம்..நாய்,பூனை போன்றவைகளின் முடிகளால் அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது. சில குழந்தைகளுக்கு சத்து குறைவினாலும் ஆஸ்துமா ஏற்பட வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
விசிலை விழுங்கியது போல, மூச்சு விடும் போதெல்லாம் விசில் சத்தம் சேர்ந்து ஒலிக்கும். தூக்கம் தொலையும். பசி மறக்கும். ‘எப்போ சரியாகும்’ என உடலும் மனதும் அழும். சுருக்கமாக சொல்லப் போனால், அந்த அனுபவம் நரக வேதனை... அதுதான் ஆஸ்துமா!
குழந்தைகளுக்கு ஆஸ்துமா இருப்பதைப் பல பெற்றோரும் தாமதமாகவே கண்டு பிடிக்கிறார்கள். நோயின் தீவிரம் அதிகரிக்கும் போது, குழந்தையின் பேச்சுத் திறமை பாதிக்கலாம். அதாவது வாக்கியங்களாகப் பேசிக் கொண்டிருந்த குழந்தைகளின் பேச்சு, நோயின் பாதிப்பால், வார்த்தைகளாகக் குறையும். கோபமும் பதற்றமும் அதிகரித்து, ஒருவித எரிச்சல் மனநிலையிலேயே இருப்பார்கள்.

இன்றைய சூழ்நிலையில் குழந்தைகள் பலருக்கு ஆஸ்துமா நோய் தாக்கம் ஏற்படுகின்றது.மாசடைந்த சூழழும் தூசி அலர்ஜி போன்றவைகளினாலும் எண்ணற்ற குழந்தைகள் ஆஸ்துமா நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். அவர்கள் உபயோகிக்கும், படுக்கையறை, பொருட்கள் போன்றவற்றை சுத்தமாக வைத்துக்கொண்டால் ஆஸ்துமா நோய் தாக்காமல் பாதுகாக்கலாம் என்கின்றனர் குழந்தை மருத்துவர்கள்.
குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய் பரம்பரை நோயல்ல. அதிகபட்சமாக குழந்தை பருவ ஆஸ்துமா நோய் அலர்ஜியால் ஏற்படக்கூடியது. பூக்களின் மகரந்த தூள்கள், வீட்டுத்தூசு, மிருகக்கழிவு, போன்றவற்றால் இது ஏற்படுகிறது.
நோயெதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகளை இந்த ஆஸ்துமா தாக்குகிறது. குளிர்காற்று, வீரியம் மிக்க வாசனை, புகை போன்றவற்றாலும் வைரஸ் நுண்கிருமிகள் மூலம் ஏற்படும் தொற்று நோயாலும் ஏற்படக்கூடும்.
ஆஸ்துமா ஏற்படாமல் இருக்க சுத்தமாக வீடுகளை வைத்துக்கொள்ள வேண்டும்.புகை பிடிப்பவரின் அருகில் தூசி படியும் இடங்களில் குழந்தைகளை விளையாட அனுமதிக்க வேண்டாம்..நாய்,பூனை போன்றவைகளின் முடிகளால் அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது. சில குழந்தைகளுக்கு சத்து குறைவினாலும் ஆஸ்துமா ஏற்பட வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஒரு குழந்தையை தத்து எடுப்பதற்கான திட்டமிடலை முன் கூட்டியே தொடங்கி சட்ட வழிமுறைகள், வாழ்வியல் மாற்றங்களுக்கு இடையே, நிறைய விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
ஒரு குழந்தையை தத்து எடுப்பதற்கான திட்டமிடலை முன் கூட்டியே துவங்க வேண்டும். சட்ட வழிமுறைகள் மற்றும் வாழ்வியல் மாற்றங்களுக்கு இடையே, நிறைய விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
வழக்கறிஞர்கள் மூலம் சரியான உதவி இருந்தால் தத்து எடுப்பது சிக்கல் இல்லாமல் இருக்கும். தத்து எடுப்பது தொடர்பான பேச்சை முன்கூட்டியே துவக்கி தேவையான சான்றிதழ்களை எடுத்து வைக்கவும். சிந்தனையை செயலில் காட்டுவது நல்லது. தத்து எடுப்பதில் உதவும் வழக்கறிஞர்கள் அல்லது என்.ஜி.ஒ அமைப்புடன் பேசவும். உங்களை நன்றாக பரிந்துரைக்க கூடியவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதும் நல்லது.
தத்து எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள்:
* அடையாள அட்டை
* இருப்பிட சான்றிதழ்
* திருமண சான்றிதழ்
* தத்து எடுக்கும் குழந்தையை வளர்க்க முடியாத அளவுக்கு, தத்து எடுக்க உள்ள பெற்றோர்கள் குணமாக்க முடியாத அல்லது தொற்றக்கூடிய நோயால் பாதிக்கப்படவில்லை அல்லது உடல் நல அல்லது மனநில குறைபாட்டால் பாதிக்கப்படவில்லை எனும் சான்றிதழை பதிவு பெற்ற மருத்துவரிடம் இருந்து பெற வேண்டும்.
* குடும்ப புகைப்படம். தத்து எடுக்கும் குடும்பத்தின் சமீபத்திய புகைப்படம். ( மூன்று போஸ்ட்கார்டு சைஸ்).
* சுய தொழில் செய்யும் தத்து எடுக்க உள்ள பெற்றோர்கள் மூன்று ஆண்டுகளுக்கான வருமான வரி தாக்கல் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். நிறுவனத்தில் வேலை பார்க்கும் பட்சத்தில், அந்த நிறுவனத்தில் பணியாற்றுவதற்கான சான்றிதழ் மற்றும் ஓய்வு பெறும் ஆண்டையும் குறிக்க வேண்டும்.

* தத்து எடுக்கும் பெற்றோரால் இரண்டு பரிந்துரை கடிதங்கள் அளிக்கப்பட வேண்டும். பரிந்துரை செய்பவர்கள் தத்து எடுக்கும் குடும்பத்தை நன்கு அறிந்திருக்க வேண்டும். ஆனால் அவர்களின் நெருங்கிய உறவினர்களாக இருக்க கூடாது.
* தத்து எடுக்க உள்ள பெற்றோர்கள், ஆறு மாத வங்கி கணக்கு அறிக்கை, கடன் விவரங்கள் மற்றும் அசையும், அசையா சொத்து விவரங்களை அறிக்கையாக அளிக்க வேண்டும்.
* இதற்கு முன்னர் தத்து எடுத்துக்கொண்டிருந்தால் அதற்கான ஆணையை அளிக்க வேண்டும்.
* தத்து எடுக்கும் பெற்றோர்களுக்கு ஏற்கனவே 7 வயதுக்கு மேற்பட்ட சொந்த குழந்தை(கள்) அல்லது தத்து - குழந்தைகள் இருந்தால் அவர்களது எழுத்துப்பூர்வமான சம்மதம் தேவை.
* தனியாக உள்ள தத்து எடுக்கும் பெற்றோர், நெருங்கிய உறவினரிடம் இருந்து, ஏதாவது எதிர்பாராத சூழலில் அவர் குழந்தையை பார்த்துக்கொள்வார் எனும் உறுதிமொழி தேவை.
* விவாகரத்து பெற்றவர் எனில், விவாகரத்து அல்லது சட்டப்பூர்வமான பிரிவு சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும்.
வழக்கறிஞர்கள் மூலம் சரியான உதவி இருந்தால் தத்து எடுப்பது சிக்கல் இல்லாமல் இருக்கும். தத்து எடுப்பது தொடர்பான பேச்சை முன்கூட்டியே துவக்கி தேவையான சான்றிதழ்களை எடுத்து வைக்கவும். சிந்தனையை செயலில் காட்டுவது நல்லது. தத்து எடுப்பதில் உதவும் வழக்கறிஞர்கள் அல்லது என்.ஜி.ஒ அமைப்புடன் பேசவும். உங்களை நன்றாக பரிந்துரைக்க கூடியவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதும் நல்லது.
தத்து எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள்:
* அடையாள அட்டை
* இருப்பிட சான்றிதழ்
* திருமண சான்றிதழ்
* தத்து எடுக்கும் குழந்தையை வளர்க்க முடியாத அளவுக்கு, தத்து எடுக்க உள்ள பெற்றோர்கள் குணமாக்க முடியாத அல்லது தொற்றக்கூடிய நோயால் பாதிக்கப்படவில்லை அல்லது உடல் நல அல்லது மனநில குறைபாட்டால் பாதிக்கப்படவில்லை எனும் சான்றிதழை பதிவு பெற்ற மருத்துவரிடம் இருந்து பெற வேண்டும்.
* குடும்ப புகைப்படம். தத்து எடுக்கும் குடும்பத்தின் சமீபத்திய புகைப்படம். ( மூன்று போஸ்ட்கார்டு சைஸ்).
* சுய தொழில் செய்யும் தத்து எடுக்க உள்ள பெற்றோர்கள் மூன்று ஆண்டுகளுக்கான வருமான வரி தாக்கல் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். நிறுவனத்தில் வேலை பார்க்கும் பட்சத்தில், அந்த நிறுவனத்தில் பணியாற்றுவதற்கான சான்றிதழ் மற்றும் ஓய்வு பெறும் ஆண்டையும் குறிக்க வேண்டும்.

* தத்து எடுக்கும் பெற்றோரால் இரண்டு பரிந்துரை கடிதங்கள் அளிக்கப்பட வேண்டும். பரிந்துரை செய்பவர்கள் தத்து எடுக்கும் குடும்பத்தை நன்கு அறிந்திருக்க வேண்டும். ஆனால் அவர்களின் நெருங்கிய உறவினர்களாக இருக்க கூடாது.
* தத்து எடுக்க உள்ள பெற்றோர்கள், ஆறு மாத வங்கி கணக்கு அறிக்கை, கடன் விவரங்கள் மற்றும் அசையும், அசையா சொத்து விவரங்களை அறிக்கையாக அளிக்க வேண்டும்.
* இதற்கு முன்னர் தத்து எடுத்துக்கொண்டிருந்தால் அதற்கான ஆணையை அளிக்க வேண்டும்.
* தத்து எடுக்கும் பெற்றோர்களுக்கு ஏற்கனவே 7 வயதுக்கு மேற்பட்ட சொந்த குழந்தை(கள்) அல்லது தத்து - குழந்தைகள் இருந்தால் அவர்களது எழுத்துப்பூர்வமான சம்மதம் தேவை.
* தனியாக உள்ள தத்து எடுக்கும் பெற்றோர், நெருங்கிய உறவினரிடம் இருந்து, ஏதாவது எதிர்பாராத சூழலில் அவர் குழந்தையை பார்த்துக்கொள்வார் எனும் உறுதிமொழி தேவை.
* விவாகரத்து பெற்றவர் எனில், விவாகரத்து அல்லது சட்டப்பூர்வமான பிரிவு சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும்.
நாம் தொலைக்காட்சி பார்க்க வேண்டும் என்ற காரணத்தினால் குழந்தைகளையும் கூட அமர்த்திக் கொண்டு, அவர்கள் மனங்களை பாதிக்கும் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை தவிர்க்கவும்.
பெற்றோர்களின் பொறுமையின்மையும், நேரம் செலவழிக்க முடியாத போக்குமே குழந்தைகள் தொலைக்காட்சிக்கு அடிமையாவதற்கு பிரதான காரணங்கள். டி.வி.யை போட்டுவிட்டு நம் வேலையை செய்யலாம் என்ற விஷயத்தில் ஆரம்பிக்கின்றது விபரீதம். தொலைக்காட்சி கார்ட்டூன்களுக்குள் நுழைந்துவிட்டால் அது அவர்களை இழுத்து சாப்பிட்டுவிடும். அவ்வளவு திறமையான வஸ்துகள் உள்ளே இருக்கின்றன.
இதனால் நாள் ஒன்றிற்கு இத்தனை மணி என்ற கட்டுப்பாடு ஆரம்பத்தில் இருந்தே அமலுக்கு வர வேண்டும். இது மிக அவசியம். என்ன நிகழ்ச்சி, எந்த சேனலைக் குழந்தைகள் பார்க்கலாம் என்ற தேர்வு பெற்றோர் கையில் உள்ளது. அதனை பார்க்க மட்டும் அனுமதிக்க வேண்டும். அந்த சேனலை டி.வி. பெட்டியில் ட்யூன் செய்து வராமல் செய்துவிடலாம். சில நிகழ்ச்சிகளில் மொழி மிக மோசமாக உள்ளது. சில நிகழ்ச்சிகள் இன்னும் வளர்ந்துவிட்ட பின்னரே பார்க்கலாம் என்றும் இருக்கும்.
தொலைக்காட்சியை பார்த்து என்ன உள்வாங்கி இருக்கிறார்கள் என்பதை அடிக்கடி பரிசோதனை செய்ய வேண்டும். அது பரிசோதனை என்று அவர்களுக்குத் தெரியக்கூடாது. நிகழ்ச்சியின் பெயரைக்கூறி அதில் வரும் கதையினை கூறச் சொல்ல வேண்டும். குழந்தைகள் அவர்கள் பார்த்ததை கூறுவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். உள்வாங்கியதில் கதை, வார்த்தைகள், கருத்துகள், புதிய மிருகங்கள், பெயர்கள் ஆகியவை பெற்றோருக்கு விளங்கும்.

அவற்றை பற்றிய புரிதலும் பெற்றோருக்கு அவசியம். கார்ட்டூன் கேரக்டர்கள் மீது மோகம் வராமல் பார்த்துக்கொள்வதும் முக்கியம். நமக்குத் தெரியாமல் அது ஒரு வியாபார பொருளாகி வருகின்றது. டோரா, சோட்டா பீம், வேர்டுகேர்ள் போன்றவை பொதிந்த பொருட்கள் குழந்தைகளை குறிவைத்து தினமும் சந்தையில் வந்து கொண்டிருக்கின்றன.
நாம் தொலைக்காட்சி பார்க்க வேண்டும் என்ற காரணத்தினால் குழந்தைகளையும் கூட அமர்த்திக் கொண்டு, அவர்கள் மனங்களை பாதிக்கும் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை சுயநினைவுடன் தவிர்க்கவும். முடிந்தமட்டில் குழந்தைகள் டி.வி. பார்க்கும்போது பெற்றோர் யாரேனும் ஒருவர் உடன் அமர்வது சிறந்தது. உங்கள் இருப்பு அங்கே முக்கியம். டி.வி.யில் காட்சி ஓடும்போதே கண்களை மூடிக்கொண்டு, குழந்தையை விவரிக்கச் சொல்லுங்கள். ஆரம்பத்தில் கடும் தடுமாற்றம் இருக்கும். கொஞ்ச நேரத்திற்கு பிறகு குழந்தை கண்ணை மூடிவிட்டு, பெற்றோர் விவரிக்க வேண்டும். அந்த விவரிப்புகள் குழந்தைகள் என்னென்ன கவனிக்கலாம் என்பதை விளக்க வேண்டும்.
தொலைக்காட்சியை கொண்டு நிச்சயம் இந்த உலகின் விஸ்தாரத்தை, பிரமாண்டத்தை, அழகினை, தெரிந்துகொள்ள வேண்டியவற்றை, வாழ்க்கையில் வேண்டிய நம்பிக்கையை குழந்தைகளுக்கு காட்டலாம். கற்பனை வளத்தை கூட்டலாம். உடனடியாக நேரில் காண முடியாததை காட்சிகளைக் காட்டலாம்.
இதனால் நாள் ஒன்றிற்கு இத்தனை மணி என்ற கட்டுப்பாடு ஆரம்பத்தில் இருந்தே அமலுக்கு வர வேண்டும். இது மிக அவசியம். என்ன நிகழ்ச்சி, எந்த சேனலைக் குழந்தைகள் பார்க்கலாம் என்ற தேர்வு பெற்றோர் கையில் உள்ளது. அதனை பார்க்க மட்டும் அனுமதிக்க வேண்டும். அந்த சேனலை டி.வி. பெட்டியில் ட்யூன் செய்து வராமல் செய்துவிடலாம். சில நிகழ்ச்சிகளில் மொழி மிக மோசமாக உள்ளது. சில நிகழ்ச்சிகள் இன்னும் வளர்ந்துவிட்ட பின்னரே பார்க்கலாம் என்றும் இருக்கும்.
தொலைக்காட்சியை பார்த்து என்ன உள்வாங்கி இருக்கிறார்கள் என்பதை அடிக்கடி பரிசோதனை செய்ய வேண்டும். அது பரிசோதனை என்று அவர்களுக்குத் தெரியக்கூடாது. நிகழ்ச்சியின் பெயரைக்கூறி அதில் வரும் கதையினை கூறச் சொல்ல வேண்டும். குழந்தைகள் அவர்கள் பார்த்ததை கூறுவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். உள்வாங்கியதில் கதை, வார்த்தைகள், கருத்துகள், புதிய மிருகங்கள், பெயர்கள் ஆகியவை பெற்றோருக்கு விளங்கும்.

அவற்றை பற்றிய புரிதலும் பெற்றோருக்கு அவசியம். கார்ட்டூன் கேரக்டர்கள் மீது மோகம் வராமல் பார்த்துக்கொள்வதும் முக்கியம். நமக்குத் தெரியாமல் அது ஒரு வியாபார பொருளாகி வருகின்றது. டோரா, சோட்டா பீம், வேர்டுகேர்ள் போன்றவை பொதிந்த பொருட்கள் குழந்தைகளை குறிவைத்து தினமும் சந்தையில் வந்து கொண்டிருக்கின்றன.
நாம் தொலைக்காட்சி பார்க்க வேண்டும் என்ற காரணத்தினால் குழந்தைகளையும் கூட அமர்த்திக் கொண்டு, அவர்கள் மனங்களை பாதிக்கும் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை சுயநினைவுடன் தவிர்க்கவும். முடிந்தமட்டில் குழந்தைகள் டி.வி. பார்க்கும்போது பெற்றோர் யாரேனும் ஒருவர் உடன் அமர்வது சிறந்தது. உங்கள் இருப்பு அங்கே முக்கியம். டி.வி.யில் காட்சி ஓடும்போதே கண்களை மூடிக்கொண்டு, குழந்தையை விவரிக்கச் சொல்லுங்கள். ஆரம்பத்தில் கடும் தடுமாற்றம் இருக்கும். கொஞ்ச நேரத்திற்கு பிறகு குழந்தை கண்ணை மூடிவிட்டு, பெற்றோர் விவரிக்க வேண்டும். அந்த விவரிப்புகள் குழந்தைகள் என்னென்ன கவனிக்கலாம் என்பதை விளக்க வேண்டும்.
தொலைக்காட்சியை கொண்டு நிச்சயம் இந்த உலகின் விஸ்தாரத்தை, பிரமாண்டத்தை, அழகினை, தெரிந்துகொள்ள வேண்டியவற்றை, வாழ்க்கையில் வேண்டிய நம்பிக்கையை குழந்தைகளுக்கு காட்டலாம். கற்பனை வளத்தை கூட்டலாம். உடனடியாக நேரில் காண முடியாததை காட்சிகளைக் காட்டலாம்.
சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் இளம் மாணவர்கள் வரை பலரும் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்றே கூறிவிடலாம். அதனால் அவர்களை அறியாமலே படிப்பில் ஈடுபாடு குறைகிறது.
முன்பு தொலைக்காட்சிகள் மாணவர்கள் மற்றும் இல்லத்தரசிகளின் நேரத்தை விரயமாக்கும் சாதனமாக இருந்தது. அதனால் தொலைக்காட்சிப் பெட்டிக்கு “முட்டாள் பெட்டி” என்ற பெயருண்டு. அந்த அளவுக்கு நம்மை சிந்திக்கவிடாமல் கட்டிப்போடக் கூடியதாக இருந்தது தொலைக்காட்சிகள்.
இன்று தொலைக்காட்சிகளின் இடத்தை ஸ்மார்ட்போன்கள் பிடித்துக் கொண்டன. சொல்லப்போனால் தொலைக்காட்சிகளைவிட நவீனமாக நம்மை கட்டிப் போட்டிருக்கின்றன ஸ்மார்ட்போன்கள். குறிப்பாக சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் இளம் மாணவர்கள் வரை பலரும் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்றே கூறிவிடலாம்.
அதனால் அவர்களை அறியாமலே படிப்பில் ஈடுபாடு குறைகிறது. இதை கண்டித்தால் பெற்றோரின் மீது வெறுப்பு காட்டுகிறார்கள் மாணவர்கள். கட்டுப்பாட்டை மீறி ரகசியமாக செல்போன் பயன்படுத்தத் தொடங்கிவிடுகிறார்கள் பலர்.
ஸ்மார்ட்போன்களை கல்விக்கு உகந்த வகையில் பயன்படுத்த முடியும். ஆனால் சமூக வலைத்தளங்களில் உலவுதல், விளையாட்டு அப்ளிகேசன்களில் மூழ்குதல், இசை கேட்டல் என பலவிதங்களிலும் நேரத்தை வீணாக்கிவிடுகிறார்கள். மனம் அதற்கு அடிமையாகிவிடுவதால் வகுப்பில் ஒருமுகத்துடன் பாடங்களை கவனிக்க முடிவதில்லை. எப்போது வகுப்பு முடியும் என்ற ஏக்கமும், மன உளைச்சலும் தொற்றிக் கொள்கிறது. சமூக வலைத்தளங்களில் யார், என்ன பதிவிட்டார்களோ? என ஏங்கத் தொடங்கிவிடுகிறது மனம்.

ஏறத்தாழ போன் அடிமையாகிவிட்ட இந்த மனநிலை வாழ்க்கையில் பலவிதங்களில் எதிரொலிக்கும். பெற்றோர் மீதும், ஆசிரியர் மீதும் வெறுப்பு வரும். வலைத்தளங்களில் தம்மை ஆதரிக்காதவர்கள் மீதும் வெறுப்பு ஏற்படும். இன்னும் நிறைய ஆதரவை பெற வேண்டும் என்ற ஏக்கமும் அதிகரிக்கும். இது தீவிர மனஅழுத்த பாதிப்பில் தள்ளிவிடும். இரவில் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவதால் தூக்கமும் கெடுகிறது. மொத்தத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடு கல்வியையும், சுமுகமான வாழ்க்கை முறையையும் முற்றிலும் பாதிக்கிறது.
இதில் இருந்து மீண்டு வருவது மிக கடினமான ஒன்றாகும். அதிக மன உறுதி கொண்ட வெகுசிலரே ஸ்மார்ட்போன் பயன்பாட்டை குறைத்து நல்வழிக்குத் திரும்புகிறார்கள். பலர் சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்திற்கு சிகிச்சை பெறும் இளையதலைமுறையினரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பெற்றோர் ஸ்மார்ட்போன்களை படிக்கும் குழந்தைகளிடமும், இளைஞர்களிடமும் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் அளவுடன் ஸ்மார்ட்போனை பயன்படுத்த வேண்டும். சிறிது நேர பயன்பாட்டிற்குப் பிறகு போனை அணைத்துவிட்டு, படிப்பு மற்றும் இதர பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.
புத்தகம் வாசிப்பது, இசையை ரசிப்பது, வெளியில் விளையாடச் செல்வது, தியானம் செய்வது, கலைப் பணியில் ஈடுபடுவது, செய்முறை பயிற்சிகளில் தங்களை ஈடுபடுத்துவது போன்ற பயிற்சிகளால் மனதை ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்கலாம். இளமைப் பருவம் கல்விக்கானது என்பதை உணர்ந்தால் மற்றவற்றின் மீதான மோகத்தை குறைத்து வெற்றிபெற உங்களால் முடியும்!
இன்று தொலைக்காட்சிகளின் இடத்தை ஸ்மார்ட்போன்கள் பிடித்துக் கொண்டன. சொல்லப்போனால் தொலைக்காட்சிகளைவிட நவீனமாக நம்மை கட்டிப் போட்டிருக்கின்றன ஸ்மார்ட்போன்கள். குறிப்பாக சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் இளம் மாணவர்கள் வரை பலரும் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்றே கூறிவிடலாம்.
அதனால் அவர்களை அறியாமலே படிப்பில் ஈடுபாடு குறைகிறது. இதை கண்டித்தால் பெற்றோரின் மீது வெறுப்பு காட்டுகிறார்கள் மாணவர்கள். கட்டுப்பாட்டை மீறி ரகசியமாக செல்போன் பயன்படுத்தத் தொடங்கிவிடுகிறார்கள் பலர்.
ஸ்மார்ட்போன்களை கல்விக்கு உகந்த வகையில் பயன்படுத்த முடியும். ஆனால் சமூக வலைத்தளங்களில் உலவுதல், விளையாட்டு அப்ளிகேசன்களில் மூழ்குதல், இசை கேட்டல் என பலவிதங்களிலும் நேரத்தை வீணாக்கிவிடுகிறார்கள். மனம் அதற்கு அடிமையாகிவிடுவதால் வகுப்பில் ஒருமுகத்துடன் பாடங்களை கவனிக்க முடிவதில்லை. எப்போது வகுப்பு முடியும் என்ற ஏக்கமும், மன உளைச்சலும் தொற்றிக் கொள்கிறது. சமூக வலைத்தளங்களில் யார், என்ன பதிவிட்டார்களோ? என ஏங்கத் தொடங்கிவிடுகிறது மனம்.

ஏறத்தாழ போன் அடிமையாகிவிட்ட இந்த மனநிலை வாழ்க்கையில் பலவிதங்களில் எதிரொலிக்கும். பெற்றோர் மீதும், ஆசிரியர் மீதும் வெறுப்பு வரும். வலைத்தளங்களில் தம்மை ஆதரிக்காதவர்கள் மீதும் வெறுப்பு ஏற்படும். இன்னும் நிறைய ஆதரவை பெற வேண்டும் என்ற ஏக்கமும் அதிகரிக்கும். இது தீவிர மனஅழுத்த பாதிப்பில் தள்ளிவிடும். இரவில் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவதால் தூக்கமும் கெடுகிறது. மொத்தத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடு கல்வியையும், சுமுகமான வாழ்க்கை முறையையும் முற்றிலும் பாதிக்கிறது.
இதில் இருந்து மீண்டு வருவது மிக கடினமான ஒன்றாகும். அதிக மன உறுதி கொண்ட வெகுசிலரே ஸ்மார்ட்போன் பயன்பாட்டை குறைத்து நல்வழிக்குத் திரும்புகிறார்கள். பலர் சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்திற்கு சிகிச்சை பெறும் இளையதலைமுறையினரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பெற்றோர் ஸ்மார்ட்போன்களை படிக்கும் குழந்தைகளிடமும், இளைஞர்களிடமும் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் அளவுடன் ஸ்மார்ட்போனை பயன்படுத்த வேண்டும். சிறிது நேர பயன்பாட்டிற்குப் பிறகு போனை அணைத்துவிட்டு, படிப்பு மற்றும் இதர பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.
புத்தகம் வாசிப்பது, இசையை ரசிப்பது, வெளியில் விளையாடச் செல்வது, தியானம் செய்வது, கலைப் பணியில் ஈடுபடுவது, செய்முறை பயிற்சிகளில் தங்களை ஈடுபடுத்துவது போன்ற பயிற்சிகளால் மனதை ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்கலாம். இளமைப் பருவம் கல்விக்கானது என்பதை உணர்ந்தால் மற்றவற்றின் மீதான மோகத்தை குறைத்து வெற்றிபெற உங்களால் முடியும்!
பெற்றோர் குழந்தைகளுக்கு கொடுக்கும் பாக்கெட் மணியை சேமிப்பு பழக்கமாக மாற்றுவது எப்படி என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு பாக்கெட் மணி குடுக்கும் வழக்கம் என்பது இயல்பாகிவிட்டது. ஸ்நாக்ஸ் வகைகளுக்கு, வேண்டியவற்றை வாங்குவதற்கு என்று பல காரணங்கள் சொல்லப்படும் பாக்கெட் மணியை குழந்தைகளுக்கு சேமிப்பு பழக்கமாக மாற்றுவது எப்படி என்று பார்க்கலாம்.
* பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு பாக்கெட் மணி கொடுத்தனுப்பும் பெற்றோர்கள், ஒருநாளைக்கு 10 ரூபாய் என்று தீர்மானித்தால் தினமும் பத்து ரூபாய் மட்டுமே கொடுக்கவேண்டும். அதுக்கு மேல் ஒரு பைசாக்கூடா தரக்கூடாது என்பதில் பெற்றோர்கள் கண்டிப்பாக இருக்கவேண்டும்.
* குழந்தைகள் அடம்பிடிக்கிறார்களே.. கேட்ட பணத்தை கொடுத்துவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடும் என்று ஒரு போதும் எண்ணாதீர்கள். ஒரு தடவை அதிக பணம் கொடுத்துவிட்டால், கேட்டதும் தந்துவிடுவார்கள் என்ற எண்ணம் குழந்தைகளுக்கு வந்துவிடும். வரம்புக்கு மீறி செலவு செய்யக்கூடாது என்பதை அவர்களுக்கு புரிய வைக்கும் தருணமே இதுதான் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

* விலை உயர்ந்த பொருளை கேட்கிறார்கள் எனும் நேரத்தில் 'நீ சமத்தா நடந்துகிட்டா நான் பாக்கெட் மணி தருவேன். அதை சேர்த்து வைத்து உனக்கான பொருளை நீ வாங்கிக்கோ' என்று சொல்லுங்கள். இதனால் சேமிப்பு பழக்கமும் கைகூடும்.
* பாக்கெட் மணியைச் சேமிக்க பெரியது, சிறியது என இரண்டு உண்டியல்களை குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுங்கள், சிறிய உண்டியலில் சேமிக்கும் பணத்தை அன்றாட தேவைக்காக பயண்படுத்திக்கொள்ளவும்... பெரிய உண்டியலில் சேமிக்கும் பணத்தைக் கொண்டு (ஒன்று அல்லது இரன்டு மாதங்கள் கழித்து) பிடித்த விளையாட்டுப் பொருட்களை வாங்கவும் பழக்கப்படுத்துங்கள்.
இதனால் செலவு செய்வதைக் குறைத்துக்கொண்டு விரும்பிய பொருளுக்காக சேமிக்கத் துவங்குவார்கள். பணத்தின் அருமையை புரிந்துகொள்வதோடு, திட்டமிட்டு பொருட்களை வாங்கும் திறமையும் வளர காரணமாகிவிடும். சேமித்து வைத்த பணத்தைக் கொண்டு ஒரு பொருள் வாங்கும்போது குழந்தைகளுக்கு தாங்களே சம்பாதித்து வாங்கியதுபோல ஃபீல் கிடைக்கும்.
* சிறு வயதில் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினால் பெரியவர்களாகும் போது பணத்தின் அருமை புரியும். அதை புரிய வைக்க வேண்டியது நம் கடமை.
* பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு பாக்கெட் மணி கொடுத்தனுப்பும் பெற்றோர்கள், ஒருநாளைக்கு 10 ரூபாய் என்று தீர்மானித்தால் தினமும் பத்து ரூபாய் மட்டுமே கொடுக்கவேண்டும். அதுக்கு மேல் ஒரு பைசாக்கூடா தரக்கூடாது என்பதில் பெற்றோர்கள் கண்டிப்பாக இருக்கவேண்டும்.
* குழந்தைகள் அடம்பிடிக்கிறார்களே.. கேட்ட பணத்தை கொடுத்துவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடும் என்று ஒரு போதும் எண்ணாதீர்கள். ஒரு தடவை அதிக பணம் கொடுத்துவிட்டால், கேட்டதும் தந்துவிடுவார்கள் என்ற எண்ணம் குழந்தைகளுக்கு வந்துவிடும். வரம்புக்கு மீறி செலவு செய்யக்கூடாது என்பதை அவர்களுக்கு புரிய வைக்கும் தருணமே இதுதான் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

* விலை உயர்ந்த பொருளை கேட்கிறார்கள் எனும் நேரத்தில் 'நீ சமத்தா நடந்துகிட்டா நான் பாக்கெட் மணி தருவேன். அதை சேர்த்து வைத்து உனக்கான பொருளை நீ வாங்கிக்கோ' என்று சொல்லுங்கள். இதனால் சேமிப்பு பழக்கமும் கைகூடும்.
* பாக்கெட் மணியைச் சேமிக்க பெரியது, சிறியது என இரண்டு உண்டியல்களை குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுங்கள், சிறிய உண்டியலில் சேமிக்கும் பணத்தை அன்றாட தேவைக்காக பயண்படுத்திக்கொள்ளவும்... பெரிய உண்டியலில் சேமிக்கும் பணத்தைக் கொண்டு (ஒன்று அல்லது இரன்டு மாதங்கள் கழித்து) பிடித்த விளையாட்டுப் பொருட்களை வாங்கவும் பழக்கப்படுத்துங்கள்.
இதனால் செலவு செய்வதைக் குறைத்துக்கொண்டு விரும்பிய பொருளுக்காக சேமிக்கத் துவங்குவார்கள். பணத்தின் அருமையை புரிந்துகொள்வதோடு, திட்டமிட்டு பொருட்களை வாங்கும் திறமையும் வளர காரணமாகிவிடும். சேமித்து வைத்த பணத்தைக் கொண்டு ஒரு பொருள் வாங்கும்போது குழந்தைகளுக்கு தாங்களே சம்பாதித்து வாங்கியதுபோல ஃபீல் கிடைக்கும்.
* சிறு வயதில் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினால் பெரியவர்களாகும் போது பணத்தின் அருமை புரியும். அதை புரிய வைக்க வேண்டியது நம் கடமை.






