என் மலர்
குழந்தை பராமரிப்பு
புளூவேலை விட அதிக பயப்படுத்துகிறது மோமோ. மோமோ விளையாட்டின் விபரீதத்தை சொல்லி குழந்தைகள் பாதுகாப்பது எப்படி என்று பார்க்கலாம்.
“வெளுத்ததெல்லாம் பால்” என நினைக்கும் வயது சிறுவர்களுக்கு உரியது. “எனக்கு எல்லாம் தெரியும்“ என நினைக்கும் வயது பதின்வயதுகளுக்கு உரியது. இவர்களைக் குறிவைத்து களமிறங்கியிருக்கும் ஒரு உயிர்க்கொல்லி விளையாட்டு தான் மோமோ! உயிர்க்கொல்லி விளையாட்டு என்றவுடன் சட்டென உங்கள் நினைவுக்கு புளூவேல் விளையாட்டு வந்திருக்கும். கடந்த 2016, 2017களில் சுமார் 130 உயிர்களைப் பலிவாங்கிய விளையாட்டு அது. ஐம்பது நாட்கள், ஐம்பது சவால்கள். ஐம்பதாவது சவால் தற்கொலை செய்து கொள்வது என்பது தான் புளூவேல் விளையாட்டின் அடிப்படை.அந்த வலையில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் தான்.
இப்போது அந்த வரிசையில் வந்து பயத்தை விதைத்துக் கொண்டிருக்கிறது மோமோ. சொல்லப் போனால் புளூவேலை விட அதிக பயப்படுத்துகிறது மோமோ. காரணம் இதற்கு தனியாக எந்த ஆப்ஸையும் டவுன்லோட் பண்ண தேவையில்லை, வாட்ஸ்அப்மூலம் வந்து உயிரை விலைபேசுகிறது என்பது தான். இப்போது தகவல் தொழில்நுட்பம் எல்லோரது கையிலும் ஸ்மார்ட்போனைக் கொடுத்திருக்கிறது. ஸ்மார்ட் போன் இருக்கும் எல்லோரது கையிலும்வாட்ஸ் அப் இருக்கிறது. அது இல்லாமல் இருக்க முடிவதில்லை.
“ஹாய்“ என வெகு சாதாரணமாக ஏதோ ஒரு எண்ணிலிருந்து வருகின்ற வாட்ஸ்அப் மெசேஜ் தான் மோமோவின் தொடக்கப் புள்ளி. பதிலுக்கு ஒரு ஹாய் அனுப்பினால், ‘என் பெயரை மோமோ என பதிவு செய்து கொள். நாம் நண்பர்களாக இருப்போம்“ என அடுத்த மெசேஜ் வரும். பதிவு செய்தால் ஒரு பயமுறுத்தும் பெண்ணின் படம் டிஸ்ப்ளே பிக்சராக தெரியும்.
அந்த படத்தை வடிவமைத்தவர் ஜப்பானைச் சேர்ந்த மெடோரி ஹாயான்ஷி எனும் கலைஞர். ஆனால் அவருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. சரி, விஷயத்துக்கு வருவோம். கள்ளம் கபடமில்லாத பிள்ளைகள் அந்த எண்ணைச் சேமித்து வைத்தால் அடுத்தடுத்த மெசேஜ்கள் வரும். முதலில் வெகு சாதாரணமாக ‘உனக்குப் பிடித்த நிறம் என்ன?‘ என்பது போல உரையாடல்கள் ஆரம்பித்து வளரும். ஒரு சின்னப் பெண் பூசணிக்காய் ஒன்றை வைத்திருப்பது போலவோ அல்லது மக்கள் கூட்டம் போலவோ வெகு சாதாரணமான சில புகைப்படங்களும் வரும்.
அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பேச்சு திசை மாறும். செல்பி எடுத்து அனுப்பு, அந்தரங்க புகைப்படங்கள் அனுப்பு என்பது போல உரையாடல் நீளும். சில நாட்களுக்குப் பின் விபரீதமான செயல்களைச் செய்யச் சொல்லி மெசேஜ் வரும். அதை மறுக்கும் போது அந்தரங்கத்தை வெளியிடுவேன் என்றோ, நெருக்கமானவர்களை ஏதாவது செய்து விடுவேன் என்றோ மிரட்டல் வரும். தலையில்லாத மனிதர்கள், கோரமான அச்சுறுத்தும் புகைப்படங்கள் போன்றவை அனுப்பி வைக்கப்படும்.
“இதோ செத்துப் போனவர்களுடைய புகைப்படங்கள்“ இதே போல நீயும் செத்துப் போ என்பது போல புகைப்படங்கள் மன உளைச்சலை அதிகரிக்கும். நான் எல்லாவற்றையும் கண்காணித்துக் கொண்டே தான் இருக்கிறேன், உன் தோழி இன்னும் வீடு போய் சேரவில்லை என தற்போதைய தகவலைச் சொல்லி வெலவெலக்க வைக்கும். கடைசியில் மன அழுத்தத்தின் உச்சத்தில் போய் தற்கொலை செய்ய வைக்கும். அதை வீடியோவாகவும் பதிவு செய்யவும் வைக்கும். மெக்சிகோ, கொலம்பியா, ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து இத்தகைய வாட்ஸ் அப் எண்கள் வலை வீசுகின்றன. இவை ஒரு சில எண்கள் அல்ல. ஒரு சில எண்களுக்குள் ஒளிந்து கொண்டிருக்கின்ற ஒரு மிகப்பெரிய குழு என்பதை தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.

பார்ப்பதற்கு எளிதான விஷயம் போல தோற்றமளிக்கும் மோமோவில் கண்ணுக்குத் தெரியாத பல பகீர் ஆபத்துகள் ஒளிந்திருக்கின்றன.
முதலாவதாக, மோமோ அனுப்புகின்ற படங்கள் சாதாரண படங்கள் அல்ல. அவை மால்வேர் எனப்படும் வைரஸ்களைத் தாங்கி வருகின்ற படங்கள். இணையத் தாக்குதல் வெறுமனே நடக்காது. நாம் உள்ளிருந்து கதவைத் திறக்காமல் யாரும் வீட்டுக்குள் நுழைய முடியாது இல்லையா ? அதே போல, நாம் அனுமதி கொடுக்காமல் யாரும் நமது நெட்வர்க்கை உடைக்க முடியாது.
மோமோ அனுப்புகிற படங்களை நாம் டவுன்லோட் செய்யும் போது அந்த மால்வேர் நமது மொபைலுக்குள் புகுந்து சமர்த்தாய் அமர்ந்து கொள்கிறது. முதலில் நமது முன்பக்க கேமராவை அது கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது. அது இங்கே நடக்கின்ற நிகழ்ச்சிகளையெல்லாம் நம்மையறியாமலேயே மோமோவுக்கு வீடியோவாகக் காண்பித்துக் கொண்டே இருக்கிறது. நமது முக பாவனைகள், நாம் யாரிடம் பேசுகிறோம், நமது மனநிலை எப்படி இருக்கிறது, பயப்படுகிறோமா என்பதையெல்லாம் அது கண்காணிக்கிறது.
இரண்டாவதாக நமது மொபைலுக்குள் இருக்கின்ற தகவல்களையெல்லாம் அப்படியே அபேஸ் செய்கிறது. தனிநபர் ரகசியங்கள் வெளியே செல்லும் போது அது எத்தகைய அச்சுறுத்தலுக்கும் விதையாகி விடுகிறது. மூன்றாவதாக, அடுத்தவரை துன்புறுத்தி அதில் இன்பம் காணும் சைக்கோ மனநிலை கொண்டவர்களுக்கு மோமோ விளையாட்டு ஒரு திரில்லான அனுபவமாக இருக்கிறது. தாங்கள் கவனிக்கப்படுகிறோம், தங்களைப் பற்றி உலகமே பேசுகிறது, தாங்கள் நினைத்தால் ஒருவரை சாகடிக்க முடியும் என்பதெல்லாம் அவர்களைப் புளகாங்கிதம் அடையச் செய்கிறது.
சரி, இந்த மோமோவிலிருந்து பாதுகாப்பாய் இருப்பது எப்படி ?
குழந்தைகளுக்கு மோமோ பற்றி சொல்லுங்கள். தனிப்பட்ட தகவல்கள், படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை யாருக்கும் அனுப்பக் கூடாது என்பதை புரிய வையுங்கள்.புதிய எண்ணிலிருந்து என்ன மெசேஜ் வந்தாலும் பதிலளிக்காதீர்கள். உடனடியாக பிளாக் செய்யுங்கள். என்ன தான் நடக்கிறது பார்ப்போமே எனும் அசட்டுத் துணிச்சல் உயிரைப் பலிவாங்கலாம்.
எந்த படம் வந்தாலும் அனுப்பினவரைப் பற்றித் தெரியாவிட்டால் திறக்கவோ, தரவிறக்கம் செய்யவோ வேண்டாம். அட்மின் யார் என்று தெரியாத குழுக்களில் தங்காதீர்கள், வெளியேறிவிடுங்கள். வாட்ஸப்பில் ஆட்டோ டவுன்லோட் ஆப்ஷனை ஆஃப் செய்தே வையுங்கள். பாதுகாப்பு பகுதிக்குச் சென்று, நமது காண்டாக்ட் லிஸ்டில் இல்லாத நபர்களுக்கு நமது புரஃபைல் தெரியாதபடி மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளோடு அதிக நேரம் செலவிடுங்கள்.
குழந்தைகள் எல்லாவற்றையும் உங்களிடம் சொல்ல உற்சாகப்படுத்துங்கள். குழந்தை சோர்வாகவோ, கலக்கமாகவோ, பதட்டமாகவோ, சரியாகச் சாப்பிடாமலோ, இரவில் தூங்காமலோ இருந்தால் உடனே உஷாராகி விடுங்கள். அவர்களிடம் உடனடியாகப் பேசுங்கள். குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் கொடுப்பதை குறையுங்கள். அவர்களுடைய செயல்பாட்டைக் கவனியுங்கள். உங்களுக்குத் தெரியாதபடி அவர்கள் இரவில் பேசுவதை தடை செய்யுங்கள். எந்தத் தவறை குழந்தை செய்திருந்தாலும் நீங்கள் மன்னிப்பீர்கள் எனும் உண்மையை அவர்களுக்குப் புரியவையுங்கள்.
தெரிந்த பிள்ளைகள் இந்த விபரீதத்தில் இருந்தால் உடனே வெளியே கொண்டு வர முயலுங்கள். முடியாவிடில் காவல்துறைக்கு தெரியப்படுத்துங்கள்.
சேவியர்
இப்போது அந்த வரிசையில் வந்து பயத்தை விதைத்துக் கொண்டிருக்கிறது மோமோ. சொல்லப் போனால் புளூவேலை விட அதிக பயப்படுத்துகிறது மோமோ. காரணம் இதற்கு தனியாக எந்த ஆப்ஸையும் டவுன்லோட் பண்ண தேவையில்லை, வாட்ஸ்அப்மூலம் வந்து உயிரை விலைபேசுகிறது என்பது தான். இப்போது தகவல் தொழில்நுட்பம் எல்லோரது கையிலும் ஸ்மார்ட்போனைக் கொடுத்திருக்கிறது. ஸ்மார்ட் போன் இருக்கும் எல்லோரது கையிலும்வாட்ஸ் அப் இருக்கிறது. அது இல்லாமல் இருக்க முடிவதில்லை.
“ஹாய்“ என வெகு சாதாரணமாக ஏதோ ஒரு எண்ணிலிருந்து வருகின்ற வாட்ஸ்அப் மெசேஜ் தான் மோமோவின் தொடக்கப் புள்ளி. பதிலுக்கு ஒரு ஹாய் அனுப்பினால், ‘என் பெயரை மோமோ என பதிவு செய்து கொள். நாம் நண்பர்களாக இருப்போம்“ என அடுத்த மெசேஜ் வரும். பதிவு செய்தால் ஒரு பயமுறுத்தும் பெண்ணின் படம் டிஸ்ப்ளே பிக்சராக தெரியும்.
அந்த படத்தை வடிவமைத்தவர் ஜப்பானைச் சேர்ந்த மெடோரி ஹாயான்ஷி எனும் கலைஞர். ஆனால் அவருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. சரி, விஷயத்துக்கு வருவோம். கள்ளம் கபடமில்லாத பிள்ளைகள் அந்த எண்ணைச் சேமித்து வைத்தால் அடுத்தடுத்த மெசேஜ்கள் வரும். முதலில் வெகு சாதாரணமாக ‘உனக்குப் பிடித்த நிறம் என்ன?‘ என்பது போல உரையாடல்கள் ஆரம்பித்து வளரும். ஒரு சின்னப் பெண் பூசணிக்காய் ஒன்றை வைத்திருப்பது போலவோ அல்லது மக்கள் கூட்டம் போலவோ வெகு சாதாரணமான சில புகைப்படங்களும் வரும்.
அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பேச்சு திசை மாறும். செல்பி எடுத்து அனுப்பு, அந்தரங்க புகைப்படங்கள் அனுப்பு என்பது போல உரையாடல் நீளும். சில நாட்களுக்குப் பின் விபரீதமான செயல்களைச் செய்யச் சொல்லி மெசேஜ் வரும். அதை மறுக்கும் போது அந்தரங்கத்தை வெளியிடுவேன் என்றோ, நெருக்கமானவர்களை ஏதாவது செய்து விடுவேன் என்றோ மிரட்டல் வரும். தலையில்லாத மனிதர்கள், கோரமான அச்சுறுத்தும் புகைப்படங்கள் போன்றவை அனுப்பி வைக்கப்படும்.
“இதோ செத்துப் போனவர்களுடைய புகைப்படங்கள்“ இதே போல நீயும் செத்துப் போ என்பது போல புகைப்படங்கள் மன உளைச்சலை அதிகரிக்கும். நான் எல்லாவற்றையும் கண்காணித்துக் கொண்டே தான் இருக்கிறேன், உன் தோழி இன்னும் வீடு போய் சேரவில்லை என தற்போதைய தகவலைச் சொல்லி வெலவெலக்க வைக்கும். கடைசியில் மன அழுத்தத்தின் உச்சத்தில் போய் தற்கொலை செய்ய வைக்கும். அதை வீடியோவாகவும் பதிவு செய்யவும் வைக்கும். மெக்சிகோ, கொலம்பியா, ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து இத்தகைய வாட்ஸ் அப் எண்கள் வலை வீசுகின்றன. இவை ஒரு சில எண்கள் அல்ல. ஒரு சில எண்களுக்குள் ஒளிந்து கொண்டிருக்கின்ற ஒரு மிகப்பெரிய குழு என்பதை தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.

பார்ப்பதற்கு எளிதான விஷயம் போல தோற்றமளிக்கும் மோமோவில் கண்ணுக்குத் தெரியாத பல பகீர் ஆபத்துகள் ஒளிந்திருக்கின்றன.
முதலாவதாக, மோமோ அனுப்புகின்ற படங்கள் சாதாரண படங்கள் அல்ல. அவை மால்வேர் எனப்படும் வைரஸ்களைத் தாங்கி வருகின்ற படங்கள். இணையத் தாக்குதல் வெறுமனே நடக்காது. நாம் உள்ளிருந்து கதவைத் திறக்காமல் யாரும் வீட்டுக்குள் நுழைய முடியாது இல்லையா ? அதே போல, நாம் அனுமதி கொடுக்காமல் யாரும் நமது நெட்வர்க்கை உடைக்க முடியாது.
மோமோ அனுப்புகிற படங்களை நாம் டவுன்லோட் செய்யும் போது அந்த மால்வேர் நமது மொபைலுக்குள் புகுந்து சமர்த்தாய் அமர்ந்து கொள்கிறது. முதலில் நமது முன்பக்க கேமராவை அது கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது. அது இங்கே நடக்கின்ற நிகழ்ச்சிகளையெல்லாம் நம்மையறியாமலேயே மோமோவுக்கு வீடியோவாகக் காண்பித்துக் கொண்டே இருக்கிறது. நமது முக பாவனைகள், நாம் யாரிடம் பேசுகிறோம், நமது மனநிலை எப்படி இருக்கிறது, பயப்படுகிறோமா என்பதையெல்லாம் அது கண்காணிக்கிறது.
இரண்டாவதாக நமது மொபைலுக்குள் இருக்கின்ற தகவல்களையெல்லாம் அப்படியே அபேஸ் செய்கிறது. தனிநபர் ரகசியங்கள் வெளியே செல்லும் போது அது எத்தகைய அச்சுறுத்தலுக்கும் விதையாகி விடுகிறது. மூன்றாவதாக, அடுத்தவரை துன்புறுத்தி அதில் இன்பம் காணும் சைக்கோ மனநிலை கொண்டவர்களுக்கு மோமோ விளையாட்டு ஒரு திரில்லான அனுபவமாக இருக்கிறது. தாங்கள் கவனிக்கப்படுகிறோம், தங்களைப் பற்றி உலகமே பேசுகிறது, தாங்கள் நினைத்தால் ஒருவரை சாகடிக்க முடியும் என்பதெல்லாம் அவர்களைப் புளகாங்கிதம் அடையச் செய்கிறது.
சரி, இந்த மோமோவிலிருந்து பாதுகாப்பாய் இருப்பது எப்படி ?
குழந்தைகளுக்கு மோமோ பற்றி சொல்லுங்கள். தனிப்பட்ட தகவல்கள், படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை யாருக்கும் அனுப்பக் கூடாது என்பதை புரிய வையுங்கள்.புதிய எண்ணிலிருந்து என்ன மெசேஜ் வந்தாலும் பதிலளிக்காதீர்கள். உடனடியாக பிளாக் செய்யுங்கள். என்ன தான் நடக்கிறது பார்ப்போமே எனும் அசட்டுத் துணிச்சல் உயிரைப் பலிவாங்கலாம்.
எந்த படம் வந்தாலும் அனுப்பினவரைப் பற்றித் தெரியாவிட்டால் திறக்கவோ, தரவிறக்கம் செய்யவோ வேண்டாம். அட்மின் யார் என்று தெரியாத குழுக்களில் தங்காதீர்கள், வெளியேறிவிடுங்கள். வாட்ஸப்பில் ஆட்டோ டவுன்லோட் ஆப்ஷனை ஆஃப் செய்தே வையுங்கள். பாதுகாப்பு பகுதிக்குச் சென்று, நமது காண்டாக்ட் லிஸ்டில் இல்லாத நபர்களுக்கு நமது புரஃபைல் தெரியாதபடி மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளோடு அதிக நேரம் செலவிடுங்கள்.
குழந்தைகள் எல்லாவற்றையும் உங்களிடம் சொல்ல உற்சாகப்படுத்துங்கள். குழந்தை சோர்வாகவோ, கலக்கமாகவோ, பதட்டமாகவோ, சரியாகச் சாப்பிடாமலோ, இரவில் தூங்காமலோ இருந்தால் உடனே உஷாராகி விடுங்கள். அவர்களிடம் உடனடியாகப் பேசுங்கள். குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் கொடுப்பதை குறையுங்கள். அவர்களுடைய செயல்பாட்டைக் கவனியுங்கள். உங்களுக்குத் தெரியாதபடி அவர்கள் இரவில் பேசுவதை தடை செய்யுங்கள். எந்தத் தவறை குழந்தை செய்திருந்தாலும் நீங்கள் மன்னிப்பீர்கள் எனும் உண்மையை அவர்களுக்குப் புரியவையுங்கள்.
தெரிந்த பிள்ளைகள் இந்த விபரீதத்தில் இருந்தால் உடனே வெளியே கொண்டு வர முயலுங்கள். முடியாவிடில் காவல்துறைக்கு தெரியப்படுத்துங்கள்.
சேவியர்
தங்கள் குழந்தை இடது கை பயன்படுத்துபவர் என்று அறிந்தவுடன் அதிர்ச்சியடையும் சில பெற்றோர் வலது கையை பயன்படுத்தும்படி கட்டாயப்படுத்துவார்கள்.
உலகில் 85 சதவீதம் பேர் வலது கை பழக்கம் உடையவர்கள். மீதம் இருப்பவர்கள் இடக்கை பழக்கம் கொண்டவர்கள்.
நமது மூளை வலது, இடது என இரு பகுதிகளைக் கொண்டது. நமது உடலின் வலது பாகம், உதாரணமாக வலது கை, வலது கால் போன்றவைகளின் இயக்கம் மூளையின் இடது பகுதியிலிருந்து இயக்கப்படுகிறது. அதே போல நமது உடலின் இடது பாகம் மூளையின் வலது பகுதியிலிருந்து இயக்கப்படுகிறது.
ஆனால், முன்பு குறிப்பிட்டபடி சுமார் பதினைந்து சதவீதத்தினருக்கு இது மாறுபட்டிருக்கும்.
இப்படி மூளையில் வலம், இடம் மாறுபாட்டிற்கு முக்கியக் காரணம் நமது மரபணுக்களில் உள்ள மாற்றமே. பெற்றோரில் ஒருவருக்கு இடதுகை பழக்கம் இருந்தால் குழந்தைகளில் அந்த மரபணு ஒருவேளை கடத்தப்பட்டால், அவர்களும் இடது கை பழக்கமுடையவர்களாக வருவார்கள்.
இது எந்த வகையிலும் குறைபாடு ஆகாது. மிக இயல்பானது.
நமது மூளையின் இடது பகுதியில் தர்க்க ரீதியான முடிவுகள், கணிதம், அறிவியல் போன்றவைகள் இயங்கும் வகையில் அமைந்துள்ளன. வலது பகுதியில் கலை, படைப்பு, கற்பனை, இசை, உள்ளுணர்வு இவைகள் உருவாகின்றன.
பெரும்பான்மையான 85 சதவீதத்தினருக்கு மொழியாற்றல், பேச்சு இவை மூளையின் இடது பகுதியிலிருந்து கட்டுப்படுத்தப்படுகின்றது. அதுமட்டுமின்றி நமது வலது கையின் செயல்பாடுகளை மூளையின் இடது பகுதி இயக்குகிறது. நாம் அறிந்த மொழியையும், சொல் வளங்களும், எழுத்துகளும் இப்பகுதியில் தான் பதிந்து உள்ளது.
நமது வலது கையின் செயல்பாடுகளுக்கான பகுதியும் இங்கு உள்ளதால், வலது கையில் எழுதுவது இயல்பாகவும் இலகுவாகவும் உண்டாகிறது. இடதுகை பழக்கம் உடையவர்களுக்கு இது மூளையில் அப்படியே நேர் எதிராக வலது பக்கமிருக்கும். ஆகவே அவர்கள் இடது கையை பயன்படுத்துவதுதான் சரியாக இருக்கும்.
தங்கள் குழந்தை இடது கை பயன்படுத்துபவர் என்று அறிந்தவுடன் அதிர்ச்சியடையும் சில பெற்றோர் வலது கையை பயன்படுத்தும்படி கட்டாயப்படுத்துவார்கள். ஏதாவது பொருளை எடுக்க வேண்டும் என்றால், குழந்தையின் இடது கைதான் முதலில் வரும். அதைப் பார்த்தவுடன் பதறி, வலது கையை பயன்படுத்த சொல்லிக் கொடுப்பார்கள்.
முதன் முதலாக எழுத கற்றுக் கொள்ளும்போது, குழந்தையை வலது கையால் எழுதுகோலை பயன்படுத்த வைப்பார்கள். இயற்கையாக இடது கையால் இலகுவாக செய்ய வேண்டிய ஒன்றை கடினத்துடன், குழப்பத்துடனும் பழக வேண்டி இருக்கும். சிரமப்பட்டாலும், கொஞ்ச நாளில் குழந்தை வலது கைக்கு பழகிவிடும். பெற்றோர் மகிழ்ச்சி அடைவர்.
நாம் இங்கு புரிந்துக் கொள்ளவேண்டியது, இதற்கு அந்த குழந்தை கொடுக்க வேண்டிய விலை அதிகம்.

அதாவது, இடது கையாளர்களை வலது கைக்கு மாற்றும்போது இன்னொரு சிக்கலும் உருவாகிறது. அவர்களின் இடது பகுதி மூளைக்கு அதிக அளவில் பாரம் ஏற்படுகிறது. மேலும், அவர்களது வலது பக்கத்து மூளையின் வேலை பளு கணிசமாக குறைகிறது. இதனால் மூளையின் வலது, இடது பகுதிகளின் செயல்பாடுகளில் சமநிலை பாதிக்கப்படுகிறது.
வலது பகுதி குறைவாக வேலைசெய்து பழகிக் கொள்வதால், அப்பகுதியிலுள்ள படைப்பு, கற்பனை போன்றவற்றுக்கு ஊற்றாக விளங்க வேண்டியவைகளும் மட்டுப்பட வாய்ப்பு உள்ளது.
பல ஆய்வுகள் கூறுவதுயாதெனில், இடது கை பழக்கம் உள்ளவர்கள், அதிக அளவில் வலது பக்க மூளையை பயன்படுத்துவதால், அவர்களிடம் படைப்பாற்றல் அதிகமாக காணப்படும் என்று கூறுகின்றனர். உலக புகழ்ப்பெற்ற அறிஞர்கள், அறிவியலாளர்கள், விளையாட்டு வீரர்கள், தலைவர்கள் என பல்லாயிரக் கணக்கானோர் இடதுகை பழக்கம் கொண்டவர்களுக்கு உதாரணமாக உள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதிகள் ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன், பராக் ஒபாமா தத்துவ அறிஞர் அரிஸ்டாட்டில், நமது நாட்டில் உலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், அன்னை தெரசா, அமிதாப் பச்சன் போன்றவர்கள் இடது கை பழக்கமுடையவர்களே.
அதே நேரத்தில், இவ்வுலகில் மனிதனின் கண்டுபிடிப்புகள், உருவாக்கப்படும் பொருட்கள் எல்லாம் பெரும்பான்மை மக்களான வலது கை பழக்கமுள்ளவர்களுக்கு மட்டுமே உள்ளன. இடக்கையாளர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதே இல்லை.
அன்றாடம் பயன்படுத்தும் பாட்டில், பெட்டி, கதவு கைப்பிடி, கத்தரிக்கோல் என வலது கைப்பழக்கம் உடையவர்களுக்கு வசதியாக உருவாக்கப்படுகிறது. இவற்றை இடது கைப்பழக்கம் உடையவர்கள் சிரமப்பட்டு பயன்படுத்த வேண்டியுள்ளது. அல்லது பயன்படுத்த முடியாமலே போய்விடுகிறது.
அதுமட்டுமின்றி நமது சமூகத்தில் உலவி வரும் எண்ணற்ற மூட நம்பிக்கைகளில் ஒன்று, ஒரு பொருளை இடது கையால் அளிப்பது தவறானது மற்றும் மரியாதை குறைவானது என்று கருதுவது. இடது கையாளர்களை இது எந்தெந்த வகையில் பாதிக்கும் என்று உணர வேண்டும்.
பல வீடுகளில் குழந்தை வளரும்போது இடது கையை பயன்படுத்தும்போது, தப்பு என்று சொல்லி வலது கைக்கு பழக்குவர். சில மேதாவிகள் இதனை மூளை குறைபாடு என்று கருதி அதை சரி செய்ய முயற்சிப்பது மோசமான ஒன்று.
ஏற்கனவே சொன்னது போல், இடது கைப் பழக்கம் என்பது குறைபாடு அல்ல. மனிதர்கள் எப்படி தோற்றம், அமைப்பு, நிறத்தில் வெவ்வேறு வகையினர் உள்ளனரோ அதுபோன்று இவர்களும் இன்னொரு வகையினர். அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்வது தான் சிறந்த பண்பாக இருக்க முடியும்.
மாறாக எங்களைப் போன்று நீயும் வலதுகைக்கு மாறவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது சமூக நீதிக்கு எதிரானது. மேலும் அது பெரும்பான்மையினரின் ஆதிக்க மனப்பான்மைக்கு வழிவகுப்பது போல் ஆகிவிடும்.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 13-ந்தேதி உலக இடக்கை பழக்கமுடையவர்கள் நாளாக நினைவு கூறப்படுகிறது. அதை வாய்ப்பாக கருதி, மக்களிடையே விழிப்புணர்வு உண்டாக்கவும், அவர்களும் நம்மை போன்றவர்கள் என்கிற மனப்பான்மையை வளர்க்கவும், இவ்வுலகத்தில் உருவாக்கப்படும் பொருட்களை அவர்களும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கவும் வழிக்கோலுவோம்.
நல்லினி, வழக்கறிஞர்
நமது மூளை வலது, இடது என இரு பகுதிகளைக் கொண்டது. நமது உடலின் வலது பாகம், உதாரணமாக வலது கை, வலது கால் போன்றவைகளின் இயக்கம் மூளையின் இடது பகுதியிலிருந்து இயக்கப்படுகிறது. அதே போல நமது உடலின் இடது பாகம் மூளையின் வலது பகுதியிலிருந்து இயக்கப்படுகிறது.
ஆனால், முன்பு குறிப்பிட்டபடி சுமார் பதினைந்து சதவீதத்தினருக்கு இது மாறுபட்டிருக்கும்.
இப்படி மூளையில் வலம், இடம் மாறுபாட்டிற்கு முக்கியக் காரணம் நமது மரபணுக்களில் உள்ள மாற்றமே. பெற்றோரில் ஒருவருக்கு இடதுகை பழக்கம் இருந்தால் குழந்தைகளில் அந்த மரபணு ஒருவேளை கடத்தப்பட்டால், அவர்களும் இடது கை பழக்கமுடையவர்களாக வருவார்கள்.
இது எந்த வகையிலும் குறைபாடு ஆகாது. மிக இயல்பானது.
நமது மூளையின் இடது பகுதியில் தர்க்க ரீதியான முடிவுகள், கணிதம், அறிவியல் போன்றவைகள் இயங்கும் வகையில் அமைந்துள்ளன. வலது பகுதியில் கலை, படைப்பு, கற்பனை, இசை, உள்ளுணர்வு இவைகள் உருவாகின்றன.
பெரும்பான்மையான 85 சதவீதத்தினருக்கு மொழியாற்றல், பேச்சு இவை மூளையின் இடது பகுதியிலிருந்து கட்டுப்படுத்தப்படுகின்றது. அதுமட்டுமின்றி நமது வலது கையின் செயல்பாடுகளை மூளையின் இடது பகுதி இயக்குகிறது. நாம் அறிந்த மொழியையும், சொல் வளங்களும், எழுத்துகளும் இப்பகுதியில் தான் பதிந்து உள்ளது.
நமது வலது கையின் செயல்பாடுகளுக்கான பகுதியும் இங்கு உள்ளதால், வலது கையில் எழுதுவது இயல்பாகவும் இலகுவாகவும் உண்டாகிறது. இடதுகை பழக்கம் உடையவர்களுக்கு இது மூளையில் அப்படியே நேர் எதிராக வலது பக்கமிருக்கும். ஆகவே அவர்கள் இடது கையை பயன்படுத்துவதுதான் சரியாக இருக்கும்.
தங்கள் குழந்தை இடது கை பயன்படுத்துபவர் என்று அறிந்தவுடன் அதிர்ச்சியடையும் சில பெற்றோர் வலது கையை பயன்படுத்தும்படி கட்டாயப்படுத்துவார்கள். ஏதாவது பொருளை எடுக்க வேண்டும் என்றால், குழந்தையின் இடது கைதான் முதலில் வரும். அதைப் பார்த்தவுடன் பதறி, வலது கையை பயன்படுத்த சொல்லிக் கொடுப்பார்கள்.
முதன் முதலாக எழுத கற்றுக் கொள்ளும்போது, குழந்தையை வலது கையால் எழுதுகோலை பயன்படுத்த வைப்பார்கள். இயற்கையாக இடது கையால் இலகுவாக செய்ய வேண்டிய ஒன்றை கடினத்துடன், குழப்பத்துடனும் பழக வேண்டி இருக்கும். சிரமப்பட்டாலும், கொஞ்ச நாளில் குழந்தை வலது கைக்கு பழகிவிடும். பெற்றோர் மகிழ்ச்சி அடைவர்.
நாம் இங்கு புரிந்துக் கொள்ளவேண்டியது, இதற்கு அந்த குழந்தை கொடுக்க வேண்டிய விலை அதிகம்.

அதாவது, இடது கையாளர்களை வலது கைக்கு மாற்றும்போது இன்னொரு சிக்கலும் உருவாகிறது. அவர்களின் இடது பகுதி மூளைக்கு அதிக அளவில் பாரம் ஏற்படுகிறது. மேலும், அவர்களது வலது பக்கத்து மூளையின் வேலை பளு கணிசமாக குறைகிறது. இதனால் மூளையின் வலது, இடது பகுதிகளின் செயல்பாடுகளில் சமநிலை பாதிக்கப்படுகிறது.
வலது பகுதி குறைவாக வேலைசெய்து பழகிக் கொள்வதால், அப்பகுதியிலுள்ள படைப்பு, கற்பனை போன்றவற்றுக்கு ஊற்றாக விளங்க வேண்டியவைகளும் மட்டுப்பட வாய்ப்பு உள்ளது.
பல ஆய்வுகள் கூறுவதுயாதெனில், இடது கை பழக்கம் உள்ளவர்கள், அதிக அளவில் வலது பக்க மூளையை பயன்படுத்துவதால், அவர்களிடம் படைப்பாற்றல் அதிகமாக காணப்படும் என்று கூறுகின்றனர். உலக புகழ்ப்பெற்ற அறிஞர்கள், அறிவியலாளர்கள், விளையாட்டு வீரர்கள், தலைவர்கள் என பல்லாயிரக் கணக்கானோர் இடதுகை பழக்கம் கொண்டவர்களுக்கு உதாரணமாக உள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதிகள் ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன், பராக் ஒபாமா தத்துவ அறிஞர் அரிஸ்டாட்டில், நமது நாட்டில் உலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், அன்னை தெரசா, அமிதாப் பச்சன் போன்றவர்கள் இடது கை பழக்கமுடையவர்களே.
அதே நேரத்தில், இவ்வுலகில் மனிதனின் கண்டுபிடிப்புகள், உருவாக்கப்படும் பொருட்கள் எல்லாம் பெரும்பான்மை மக்களான வலது கை பழக்கமுள்ளவர்களுக்கு மட்டுமே உள்ளன. இடக்கையாளர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதே இல்லை.
அன்றாடம் பயன்படுத்தும் பாட்டில், பெட்டி, கதவு கைப்பிடி, கத்தரிக்கோல் என வலது கைப்பழக்கம் உடையவர்களுக்கு வசதியாக உருவாக்கப்படுகிறது. இவற்றை இடது கைப்பழக்கம் உடையவர்கள் சிரமப்பட்டு பயன்படுத்த வேண்டியுள்ளது. அல்லது பயன்படுத்த முடியாமலே போய்விடுகிறது.
அதுமட்டுமின்றி நமது சமூகத்தில் உலவி வரும் எண்ணற்ற மூட நம்பிக்கைகளில் ஒன்று, ஒரு பொருளை இடது கையால் அளிப்பது தவறானது மற்றும் மரியாதை குறைவானது என்று கருதுவது. இடது கையாளர்களை இது எந்தெந்த வகையில் பாதிக்கும் என்று உணர வேண்டும்.
பல வீடுகளில் குழந்தை வளரும்போது இடது கையை பயன்படுத்தும்போது, தப்பு என்று சொல்லி வலது கைக்கு பழக்குவர். சில மேதாவிகள் இதனை மூளை குறைபாடு என்று கருதி அதை சரி செய்ய முயற்சிப்பது மோசமான ஒன்று.
ஏற்கனவே சொன்னது போல், இடது கைப் பழக்கம் என்பது குறைபாடு அல்ல. மனிதர்கள் எப்படி தோற்றம், அமைப்பு, நிறத்தில் வெவ்வேறு வகையினர் உள்ளனரோ அதுபோன்று இவர்களும் இன்னொரு வகையினர். அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்வது தான் சிறந்த பண்பாக இருக்க முடியும்.
மாறாக எங்களைப் போன்று நீயும் வலதுகைக்கு மாறவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது சமூக நீதிக்கு எதிரானது. மேலும் அது பெரும்பான்மையினரின் ஆதிக்க மனப்பான்மைக்கு வழிவகுப்பது போல் ஆகிவிடும்.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 13-ந்தேதி உலக இடக்கை பழக்கமுடையவர்கள் நாளாக நினைவு கூறப்படுகிறது. அதை வாய்ப்பாக கருதி, மக்களிடையே விழிப்புணர்வு உண்டாக்கவும், அவர்களும் நம்மை போன்றவர்கள் என்கிற மனப்பான்மையை வளர்க்கவும், இவ்வுலகத்தில் உருவாக்கப்படும் பொருட்களை அவர்களும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கவும் வழிக்கோலுவோம்.
நல்லினி, வழக்கறிஞர்
குழந்தையை அதன் வயதுக்கேற்ற இயல்பு நிலையுடன் இருக்க அனுமதியுங்கள். காரணம் இன்று நாம் அனுபவிப்பதை விட, அதிக மனநல சிக்கல்களை அவன் எதிர்காலத்தில் சந்திக்க வேண்டியுள்ளது.
கல்வியிலோ, உடல்திறனிலோ, வேறு ஏதாவது ஒரு காரணத்தாலோ பின் தங்கியிருக்கும் போது நண்பர்களால் புறக்கணிக்கப்படும்போதும் ஆசிரியர் அல்லது பெற்றோரால் அடிக்கடி அவமானப்படுத்தப்படும் போதும் ஒரு குழந்தை தன்னைத் தானே குறைத்து மதிப்பிடத் துவங்குகிறது. இங்குதான் குழந்தையின் மனவெழுச்சி நிலை மாறுபடுகிறது.
இதை நாம் எப்படி கண்டுபிடிப்பது?
* உங்கள் குழந்தை அதீத தனிமையை விரும்புகிறதா?
* ஏதாவது ஒரு உடல் வலியைச் சொல்லி, பள்ளி செல்வதை படிப்பதைத் தவிர்க்கிறதா?
* தேர்வு நேரங்களில் அல்லது குறிப்பிட்ட சில நிகழ்வுகளின்போது வாந்தியெடுப்பதோ அல்லது வயிறு சரியில்லை எனச் சொல்வதோ
நடக்கிறதா?
* உங்களின் சாதாரண கோபத்துக்கும், தனது அசாதாரண கோபத்தை வெளிப்படுத்துகிறதா?
* பொது நிகழ்ச்சிகளுக்கு வர மறுக்கிறதா?
* சில நேரங்களில் ஒருவித எரிச்சல், அழுகை அல்லது மனபதற்றத்துடன் காணப்படுகிறதா?,
* உங்களால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோபப்படுவதும் அடம்பிடிப்பதுமாக இருக்கிறதா?
மேற்கண்டவை மனப்பதற்றத்துக்கான அறிகுறிகள். இது ஓர் ஆலோசனைதான். மற்றபடி, உங்கள் குழந்தை மனப்பதற்ற நிலையில் உள்ளதா என்பதை அறிய ஒரு மனநல மருத்துவரிடம் காண்பித்து இது எந்த வகையிலான மனப்பதற்றம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். பெற்றோர் செய்ய வேண்டியவை கல்வியின் அவசியம், நல்ல மதிப்பெண் பெறுதலின் முக்கியத்துவம், லட்சியம் குறித்தான தூண்டுதல், உணர்வுப்பூர்வமான வழிகாட்டல் இவற்றை பற்றிய புரிதலே நம் குழந்தைகளை பொறுப்புடன் செயல்பட வைக்கும்.
அச்சுறுத்தும் மிரட்டல்கள், தண்டனை தரப்போவதான வார்த்தைகள் குழந்தையை உங்களிடமிருந்து பிரித்துவிடும் என்பதை மறவாதீர்கள். குழந்தையை அதன் வயதுக்கேற்ற இயல்பு நிலையுடன் இருக்க அனுமதியுங்கள். காரணம்... இன்று நாம் அனுபவிப்பதை விட, அதிக மனநல சிக்கல்களை அவன் எதிர்காலத்தில் சந்திக்க வேண்டியுள்ளது.
இதை நாம் எப்படி கண்டுபிடிப்பது?
* உங்கள் குழந்தை அதீத தனிமையை விரும்புகிறதா?
* ஏதாவது ஒரு உடல் வலியைச் சொல்லி, பள்ளி செல்வதை படிப்பதைத் தவிர்க்கிறதா?
* தேர்வு நேரங்களில் அல்லது குறிப்பிட்ட சில நிகழ்வுகளின்போது வாந்தியெடுப்பதோ அல்லது வயிறு சரியில்லை எனச் சொல்வதோ
நடக்கிறதா?
* உங்களின் சாதாரண கோபத்துக்கும், தனது அசாதாரண கோபத்தை வெளிப்படுத்துகிறதா?
* பொது நிகழ்ச்சிகளுக்கு வர மறுக்கிறதா?
* சில நேரங்களில் ஒருவித எரிச்சல், அழுகை அல்லது மனபதற்றத்துடன் காணப்படுகிறதா?,
* உங்களால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோபப்படுவதும் அடம்பிடிப்பதுமாக இருக்கிறதா?
மேற்கண்டவை மனப்பதற்றத்துக்கான அறிகுறிகள். இது ஓர் ஆலோசனைதான். மற்றபடி, உங்கள் குழந்தை மனப்பதற்ற நிலையில் உள்ளதா என்பதை அறிய ஒரு மனநல மருத்துவரிடம் காண்பித்து இது எந்த வகையிலான மனப்பதற்றம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். பெற்றோர் செய்ய வேண்டியவை கல்வியின் அவசியம், நல்ல மதிப்பெண் பெறுதலின் முக்கியத்துவம், லட்சியம் குறித்தான தூண்டுதல், உணர்வுப்பூர்வமான வழிகாட்டல் இவற்றை பற்றிய புரிதலே நம் குழந்தைகளை பொறுப்புடன் செயல்பட வைக்கும்.
அச்சுறுத்தும் மிரட்டல்கள், தண்டனை தரப்போவதான வார்த்தைகள் குழந்தையை உங்களிடமிருந்து பிரித்துவிடும் என்பதை மறவாதீர்கள். குழந்தையை அதன் வயதுக்கேற்ற இயல்பு நிலையுடன் இருக்க அனுமதியுங்கள். காரணம்... இன்று நாம் அனுபவிப்பதை விட, அதிக மனநல சிக்கல்களை அவன் எதிர்காலத்தில் சந்திக்க வேண்டியுள்ளது.
குழந்தைகளுக்கு அவர்களின் வயதிற்கு ஏற்ற பிரத்யேகமான நாற்காலிகளையும், மேசைகளையும், ஊஞ்சல்களையும் வாங்குவது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
குழந்தைகளுக்கான துணி மணிகள், பொம்மைகள், நகைகள் என்று பிரத்யேகமாக வாங்குவது போல் அவர்களுக்கான, ஃபர்னிச்சர்களை வாங்க பெரும்பாலோர் நினைப்பதில்லை. குழந்தைகள் வளர்ந்து விட்டால் அது வீண்தானே என்ற எண்ணமும் காரணமாக இருக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு அவர்களின் வயதிற்கு ஏற்ற பிரத்யேகமான நாற்காலிகளையும், மேசைகளையும், ஊஞ்சல்களையும் வாங்குவது என்பது மிகவும் அவசியமான ஒன்று. அப்படி வாங்க வேண்டிய சிலவற்றைப் பற்றி கீழ்வருமாறு பார்க்கலாம்.
கூடை சேர்: ஹாலில் பெரிய சோபா, ஈசிசேர், பீன்பேக், டீபாய் என்று பல ஃபர்னிச்சர்களை நாம் வைத்திருப்போம். அங்கு நாம் உட்கார்ந்து டிவி பார்க்கும் போதோ, புத்தகம் படிக்கும் போதோ குழந்தைகள் இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருப்பார்கள். அல்லது அவர்களுக்கே பிடித்த நிகழ்ச்சிகளை டி.வி.யில் பார்ப்பதாக இருந்தாலும் சோபாவில் படுத்துக் கொண்டோ, முதுகை வளைத்து தாறுமாறாக தொங்கிக் கொண்டோ பார்ப்பார்கள். இதற்கு காரணம் இந்த ஃபர்னிச்சர்கள் அவர்களின் உடல் அளவிற்கு பொருத்தமானவை அல்ல என்பதேயாகும் எனவே பிரம்பினாலோ, மரத்தினாலோ ஆன சிறு கூடை சேர்கள் குழந்தைகள் கச்சிதமாக அமர்ந்துக் கொள்ள வசதியாக இருக்கும்.
டைனிங் சேர்: பல வீடுகளில் பெரியவர்கள் ஒன்றாக டைனிங் டேபிளில் அமர்ந்துசாப்பிடும் போது குழந்தைகள் தங்களுடன் சேர்ந்து சாப்பிடுவதில்லை என்று புலம்புவார்கள். ஆனால் பல வீடுகளில் டைனிங் டேபிள் மற்றும் சேர்கள் அகலமாக பெரியவர்களுக்கு ஏற்றதாகவே இருக்கும். ஆனால் குழந்தைகளுக்கான பிரத்யேக டைனிங் சேர்கள் உயரம் கூடுதலாகவும், பகுதி குறுகலாகவும் குழந்தைகளுக்கு ஏற்றதாக இருக்கும். அதில் உட்கார்ந்து சாப்பிடும்போது குழந்தைகள் கீழே இரங்காமலும், கைகளை சரியாக டேபிளில் ஊன்றி வசதியாக சாப்பிடவும் செய்வார்கள்.
படிக்கும் மேஜை: நிறைய வீடுகளில் குழந்தைகள் தரையிலோ, சோபாவிலோ அமர்ந்து படிப்பார்கள். அப்போது அவர்களின் கவனம் டிவி மேலேயோ, மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பதிலேயோ இருக்கும். ஆனால் அவர்களுக்கென்று பிரத்யேகமான படிக்கும் மேஜை இருந்தால் அவர்களின் கவனம் சிதறாது. உட்காரும் சேரிலேயே இணைந்த மேஜை மாதிரியோ, சேரிலேயே ஒரு பலகை இணைத்து அதன் மேல் புத்தகம் வைத்துக் கொள்வது போன்று எளிய மாடலோ, உயரமான புத்தக அலமாரியுடன் கூடிய படிக்கும் மேஜை, கம்ப்யூட்டர் வைக்கும் வசதி, அதற்கு தோதான சேர் என்பது போன்ற வடிவிலோ இந்த படிக்கும் மேஜை இருக்கலாம்.
மேல் குறிப்பிடப்பட்டவை தவிர, சிறு ஊஞ்சல் அல்லது ஜீலா, சாய்ந்து ஆடக்கூடிய ராக்கிங் சேர், குட்டி அளவிலான பீன் பேக், அவர்களின் பொம்மை, துணிகள் போன்றவற்றை சுலபமாக வைத்து எடுப்பதற்கு வசதியான அலமாரிகள், ஒன்றிற்கு மேற்பட்ட குழந்தைகள் படுத்துறங்க வசதியான பங்கர் கட்டில்கள் என்று குழந்தைகளுக்கான ஃபர்னிச்சர்கள் பல இருக்கின்றன.
கூடை சேர்: ஹாலில் பெரிய சோபா, ஈசிசேர், பீன்பேக், டீபாய் என்று பல ஃபர்னிச்சர்களை நாம் வைத்திருப்போம். அங்கு நாம் உட்கார்ந்து டிவி பார்க்கும் போதோ, புத்தகம் படிக்கும் போதோ குழந்தைகள் இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருப்பார்கள். அல்லது அவர்களுக்கே பிடித்த நிகழ்ச்சிகளை டி.வி.யில் பார்ப்பதாக இருந்தாலும் சோபாவில் படுத்துக் கொண்டோ, முதுகை வளைத்து தாறுமாறாக தொங்கிக் கொண்டோ பார்ப்பார்கள். இதற்கு காரணம் இந்த ஃபர்னிச்சர்கள் அவர்களின் உடல் அளவிற்கு பொருத்தமானவை அல்ல என்பதேயாகும் எனவே பிரம்பினாலோ, மரத்தினாலோ ஆன சிறு கூடை சேர்கள் குழந்தைகள் கச்சிதமாக அமர்ந்துக் கொள்ள வசதியாக இருக்கும்.
டைனிங் சேர்: பல வீடுகளில் பெரியவர்கள் ஒன்றாக டைனிங் டேபிளில் அமர்ந்துசாப்பிடும் போது குழந்தைகள் தங்களுடன் சேர்ந்து சாப்பிடுவதில்லை என்று புலம்புவார்கள். ஆனால் பல வீடுகளில் டைனிங் டேபிள் மற்றும் சேர்கள் அகலமாக பெரியவர்களுக்கு ஏற்றதாகவே இருக்கும். ஆனால் குழந்தைகளுக்கான பிரத்யேக டைனிங் சேர்கள் உயரம் கூடுதலாகவும், பகுதி குறுகலாகவும் குழந்தைகளுக்கு ஏற்றதாக இருக்கும். அதில் உட்கார்ந்து சாப்பிடும்போது குழந்தைகள் கீழே இரங்காமலும், கைகளை சரியாக டேபிளில் ஊன்றி வசதியாக சாப்பிடவும் செய்வார்கள்.
படிக்கும் மேஜை: நிறைய வீடுகளில் குழந்தைகள் தரையிலோ, சோபாவிலோ அமர்ந்து படிப்பார்கள். அப்போது அவர்களின் கவனம் டிவி மேலேயோ, மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பதிலேயோ இருக்கும். ஆனால் அவர்களுக்கென்று பிரத்யேகமான படிக்கும் மேஜை இருந்தால் அவர்களின் கவனம் சிதறாது. உட்காரும் சேரிலேயே இணைந்த மேஜை மாதிரியோ, சேரிலேயே ஒரு பலகை இணைத்து அதன் மேல் புத்தகம் வைத்துக் கொள்வது போன்று எளிய மாடலோ, உயரமான புத்தக அலமாரியுடன் கூடிய படிக்கும் மேஜை, கம்ப்யூட்டர் வைக்கும் வசதி, அதற்கு தோதான சேர் என்பது போன்ற வடிவிலோ இந்த படிக்கும் மேஜை இருக்கலாம்.
மேல் குறிப்பிடப்பட்டவை தவிர, சிறு ஊஞ்சல் அல்லது ஜீலா, சாய்ந்து ஆடக்கூடிய ராக்கிங் சேர், குட்டி அளவிலான பீன் பேக், அவர்களின் பொம்மை, துணிகள் போன்றவற்றை சுலபமாக வைத்து எடுப்பதற்கு வசதியான அலமாரிகள், ஒன்றிற்கு மேற்பட்ட குழந்தைகள் படுத்துறங்க வசதியான பங்கர் கட்டில்கள் என்று குழந்தைகளுக்கான ஃபர்னிச்சர்கள் பல இருக்கின்றன.
கோபமாக இருக்கும் குழந்தையை சரியாகக் கையாண்டால் ஒரு நல்ல பெற்றோருக்கு எடுத்துக்காட்டாகத் திகழலாம். இதோ குழந்தைகள் கோபம் கொள்ளும்போது அவர்களை எப்படி கையாள்வது என்பதை பார்ப்போம்.
குழந்தைகளை கையாளுவது அவ்வளவு சுலபமான விடயமல்ல. கோபத்தில் அவர்களை சரியாகக் கையாண்டால் ஒரு நல்ல பெற்றோருக்கு எடுத்துக்காட்டாகத் திகழலாம். இதோ குழந்தைகள் கோபம் கொள்ளும்போது அவர்களை எப்படி கையாள்வது என்பதை பார்ப்போம்.
குழந்தைகள் கோபம் கொண்டு அழும்போதோ அல்லது ஏதாவது பொருட்களை தூக்கி உடைக்கும்போதோ, பதிலுக்கு நாம் அவர்கள் மேல் கோபம் கொள்ள கூடாது. அந்த நேரங்களில் அமைதி காப்பது வேண்டாத விளைவுகளைத் தடுப்பதுடன், குழப்பங்களையும் குறைக்கும். உங்கள் அமைதியான நிலை, கோபத்தில் இருக்கும் உங்கள் குழந்தையை அமைதிப்படுத்தும். குழந்தைகள் அமைதியடைந்தவுடன் அவர்களுடன் நேரத்தைச் செலவிடுங்கள்.

உடல் ரீதியான உணர்வு வெளிப்பாடுகள் உங்கள் குழந்தையின் உணர்வுகளைத் தூண்டும் விதமாக அமைந்து, உங்கள் எதிர்ப்பார்ப்பிற்கு நேர்மாறாக அவர்கள் செயல்பட வழிவகுக்கும். அவ்வாறு கோபம் கொள்வது எந்த விதத்திலும் நிலைமையை சரிசெய்யவோ அல்லது அமைதியை ஏற்படுத்தவோ உதவாது என்பதால், இந்த வழிமுறை பயனற்றுவிடுகிறது.
கோபத்திற்குப் பிறகு அமைதி திரும்பியவுடன், நடந்தவற்றைக் குறித்துப் பேசுவது மிகவும் முக்கியம். குழந்தையை அரவணைத்துப் பேசுவதன் மூலம் அந்தக் குழந்தை தான் கவனிக்கப்படுவதை உணர்கிறது. கோபத்தின் போது உணர்வுகளை வெளிக்காட்ட உள்ள பல்வேறு வழிமுறைகள் குறித்து குழந்தைக்கு அறிவுறுத்துவது ஒரு சிறப்பான தொடக்கமாக அமையும். நீங்கள் கோபத்தை எப்படி சமாளிப்பீர்கள் என்று காண்பியுங்கள்.
மற்றவர்களை பார்த்து தெரிந்து கொள்வதில் குழந்தைகள் கில்லாடிகள். இதனால் தான் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு கோபத்தை சமாளிப்பது எப்படி என்பதைக் காண்பிப்பது அவசியமாகிறது. உங்களை வெறுப்படையச் செய்யும் விஷயங்களைக் குறித்துப் பேசுங்கள். நீங்கள் அதை எப்படிச் சமாளிப்பீர்கள் என்பதை எந்த வித ஆர்ப்பாட்டமும் இன்றி அவர்களுக்குக் காட்டுங்கள். குழந்தை தேவையான போது உங்களை அரவணைக்க ஊக்கப்படுத்துங்கள்.
குழந்தைகள் கோபம் கொண்டு அழும்போதோ அல்லது ஏதாவது பொருட்களை தூக்கி உடைக்கும்போதோ, பதிலுக்கு நாம் அவர்கள் மேல் கோபம் கொள்ள கூடாது. அந்த நேரங்களில் அமைதி காப்பது வேண்டாத விளைவுகளைத் தடுப்பதுடன், குழப்பங்களையும் குறைக்கும். உங்கள் அமைதியான நிலை, கோபத்தில் இருக்கும் உங்கள் குழந்தையை அமைதிப்படுத்தும். குழந்தைகள் அமைதியடைந்தவுடன் அவர்களுடன் நேரத்தைச் செலவிடுங்கள்.
குழந்தைகள் கோபத்தின் உச்சிக்கு செல்லும்போது பதிலுக்கு நீங்களும் கோபத்தின் உச்சிக்கு சென்று அவர்களை அடிக்க கூடாது. அவ்வாறு உடல் ரீதியான துன்புறுத்தல்களை மேற்கொண்டால், பின்னர் குழந்தைகளை அமைதிப்படுத்தும் உங்கள் முயற்சியில் நீங்கள் நம்பிக்கையிழக்க வேண்டியிருக்கும். கலவரம் புகுந்து கொண்டு அமைதி என்பது பெற முடியாத ஒன்றாக ஆகிவிடும்.

உடல் ரீதியான உணர்வு வெளிப்பாடுகள் உங்கள் குழந்தையின் உணர்வுகளைத் தூண்டும் விதமாக அமைந்து, உங்கள் எதிர்ப்பார்ப்பிற்கு நேர்மாறாக அவர்கள் செயல்பட வழிவகுக்கும். அவ்வாறு கோபம் கொள்வது எந்த விதத்திலும் நிலைமையை சரிசெய்யவோ அல்லது அமைதியை ஏற்படுத்தவோ உதவாது என்பதால், இந்த வழிமுறை பயனற்றுவிடுகிறது.
கோபத்திற்குப் பிறகு அமைதி திரும்பியவுடன், நடந்தவற்றைக் குறித்துப் பேசுவது மிகவும் முக்கியம். குழந்தையை அரவணைத்துப் பேசுவதன் மூலம் அந்தக் குழந்தை தான் கவனிக்கப்படுவதை உணர்கிறது. கோபத்தின் போது உணர்வுகளை வெளிக்காட்ட உள்ள பல்வேறு வழிமுறைகள் குறித்து குழந்தைக்கு அறிவுறுத்துவது ஒரு சிறப்பான தொடக்கமாக அமையும். நீங்கள் கோபத்தை எப்படி சமாளிப்பீர்கள் என்று காண்பியுங்கள்.
மற்றவர்களை பார்த்து தெரிந்து கொள்வதில் குழந்தைகள் கில்லாடிகள். இதனால் தான் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு கோபத்தை சமாளிப்பது எப்படி என்பதைக் காண்பிப்பது அவசியமாகிறது. உங்களை வெறுப்படையச் செய்யும் விஷயங்களைக் குறித்துப் பேசுங்கள். நீங்கள் அதை எப்படிச் சமாளிப்பீர்கள் என்பதை எந்த வித ஆர்ப்பாட்டமும் இன்றி அவர்களுக்குக் காட்டுங்கள். குழந்தை தேவையான போது உங்களை அரவணைக்க ஊக்கப்படுத்துங்கள்.
பெண்குழந்தைகளிடம் கட்டுப்பாடுகளை மட்டுமின்றி தைரியத்தோடும் தன்னம்பிக்கையோடும் வளர்க்க வேண்டும். ஆண் பிள்ளைகளுக்கு பெண்களை தோழியாகவும் சகோதரியாகவும் பாவிக்கும் எண்ணத்தை சிறுவயது முதலே சொல்லி கொடுக்க வேண்டும்.
தொழில்நுட்ப முன்னேற்றம் அசுர வளர்ச்சி அடைந்து வரும் இந்த காலத்தில் அதற்கு இணையாக அதிகரித்து வரும் சமூகக் குற்றங்களை பார்க்கும்போது நம் நெஞ்சம் பதைபதைக்கிறது.
எதிர்காலம் எப்படி இருக்குமோ? என்ற கேள்வி நம்மை அச்சுறுத்துகிறது. குறிப்பாக, பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் கொலைகளும் பல பெற்றோர்களை நிம்மதியிழக்க செய்திருக்கிறது.
எங்கே இருக்கிறது இந்த தவறுகளின் தொடக்கப்புள்ளி? என்று யோசித்துப் பார்த்தால் விடை ஒன்று தான். அது குழந்தை வளர்ப்பு முறை. பிறக்கும் போதே யாரும் குற்றவாளிகளாக பிறப்பதில்லை. சிறு வயது அனுபவங்களே ஒரு மனிதனை செதுக்குகின்றன. நற்பண்புகளுடன் வளர்க்கப்படும் பிள்ளைகள் சமூகத்தில் உயர்நிலையை அடைவதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்.
குழந்தை வளர்ப்பு என்றவுடன் உணவு, உடை, இருப்பிடம் போன்ற அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமில்லை. நமது பாசத்தை காட்டுவதற்காக வாங்கிக் குவிக்கப்படும் பொம்மைகளும் பரிசுப்பொருட்களும் இல்லை. அறமும், ஒழுக்கமும் கற்பிக்கும் உயரிய பொறுப்பு அது.
நமது சமுதாயத்தில் பெண் பிள்ளைகளை வளர்ப்பதிலும் ஆண் பிள்ளைகளை வளர்ப்பதிலும் காலம் காலமாக ஒரு வேறுபாடு இருந்து வருகிறது. குறிப்பாக பருவ வயதில், அவர்களுக்கு உடல் ரீதியாக மாற்றம் ஏற்படும் போது பெண் பிள்ளைகளை நாம் பேணுவதை போல ஆண் பிள்ளைகளை பேணத் தவறுகிறோம்.
ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை வயது வந்த பெண் பிள்ளைகளுக்கு தருகிறோம். சமுதாயத்தில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும், எப்படி உடையணிய வேண்டும் என்பது போன்ற அறிவுரைகளை அவர்களுக்கு அவ்வப்போது சொல்லிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் ஆண் பிள்ளைகள் அதே வயதில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு தடுமாறுகிற மனநிலையில் இருக்கும்போது நாம் அவர்களை கண்டுகொள்வதே இல்லை.
தனிமையில் தள்ளப்படும் இந்த பிள்ளைகள் முறைப்பதும், கோபப்படுவதும் என்று தந்தைக்கு எதிராக திரும்புவதும் இந்த காலக்கட்டத்தில் தான். நண்பர்களுடன் சேர்ந்து சிகரெட் மற்றும் மது பழக்கங்களை இன்றைய சிறுவர்கள் வெகுவிரைவாகவே கற்றுக் கொள்கின்றனர்.
பிள்ளைகளிடம் தென்படும் இந்த திடீர் மாற்றத்தை அலட்சியம் செய்தல் கூடாது. ‘அடித்து வளர்க்காத பிள்ளையும் ஒடித்து வளர்க்காத முருங்கையும் எதற்கும் உதவாது’ என்ற பழமொழியெல்லாம் இந்தக் கால பிள்ளைகளிடத்தில் எடுபடாது. அவர்கள் செய்யும் தவறுகளுக்காக அடிக்க ஆரம்பித்தால் இன்னமும் மூர்க்கமாகவும் முரட்டுத்தனமாகவும் மாறுவார்கள்.
இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வு பிள்ளைகளிடத்தில் நட்போடு பழக வேண்டும். முகம் சற்று வாடியிருந்தால் கூட ‘என்னப்பா பிரச்சினை என்கிட்ட சொல்லு’ என்று ஆரம்பம் முதலே பெற்றோர் பிள்ளைகளிடம் அக்கறை காட்ட வேண்டும். சிறுவர்களாய் இருக்கும் போதே நீதிக் கதைகளை சொல்லி வளர்க்க வேண்டும்.
ஆன்மீகம், யோகா போன்ற பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை வளர்க்கும் விஷயங்களில் அவர்களை ஈடுபடச் செய்ய வேண்டும். பருவ வயது பிள்ளைகள் அடிக்கடி போனை எடுத்துக்கொண்டு தனியறைக்கு செல்லும்போது, அதன் தீமைகளை புரியும்படி சொல்லித் தடுக்க வேண்டும். அவர்களுக்கு விருப்பமான விளையாட்டு அல்லது தனித்திறனை வளர்க்கும் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் சிதையும் கவனத்தை நல்வழியில் மடைமாற்றம் செய்ய வேண்டும்.
பிள்ளைகளுக்காக அதிகமாக பணம் செலவழிப்பதை விட அவர்களுடன் அதிகமான நேரம் செலவிட வேண்டும். கேட்பதை எல்லாம் உடனே வாங்கிக் கொடுப்பதும் சரியான வளர்ப்பு முறை அல்ல. உண்மையிலேயே அந்த பொருள் அவசியம் தானா? நமது பொருளாதார நிலைக்கு அது அவசியமானது தானா? என்பதை பிள்ளைகளுக்குப் புரிய வைக்கவேண்டியது நமது கடமை.

பிரச்சினை என்று வரும்போது, ‘நீ சரியாக பிள்ளையை வளர்க்கவில்லை’ என்று தாய்மார்களை ஆண்கள் சாடுவது நமது சமுதாயத்தில் மாறவேண்டிய விஷயங்களில் ஒன்று. வளர்ப்பு என்பது இருவருக்கும் சமமான பொறுப்பு என்பதை ஆண்களும் உணர வேண்டும்.
அமெரிக்காவில் பள்ளி சிறுவர்கள் அடிக்கடி துப்பாக்கி சூடுகளில் ஈடுபடுவதற்கு காரணம் அங்கே குடும்ப அமைப்பு சிதைந்து வருவது தான். இங்கேயும் இது போன்ற தவறுகள் நடக்கும் முன்னர் நாம் விழித்துக்கொள்ள வேண்டும்.
பிள்ளைகளுடன் உட்கார்ந்து அன்றைய நிகழ்வுகளைப் பற்றி பேசுவது, எதிர்கால திட்டங்கள் பற்றி கலந்துரையாடுவது என தோழமையோடு வளர்க்கப்படும் பிள்ளைகள் தவறு செய்வதற்கு வாய்ப்பே இல்லை. மனதில் உள்ளவற்றை வெளியில் சொல்ல முடியாமல் அழுத்தம் ஏற்பட்டு தான் அவர்கள் தவறு செய்யும் மனநிலைக்கு ஆளாகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் பொழுதை போக்கிக்கொண்டு, குழந்தைக்கு தொலைக்காட்சியை போட்டுவிட்டோ, டேப்லெட்டை கொடுத்துவிட்டோ மணிக்கணக்காக கார்ட்டூன் பார்க்கச்செய்யும் பழக்கம் இன்றைய இளம் தாய்மார்களிடம் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக குழந்தை அழும் சமயங்களில் அவர்களின் கையில் செல்போனை திணித்துவிட்டு, தங்களை நிம்மதி படுத்திக்கொள்கிறார்கள். இதனால் ஏற்படும் விபரீதத்தை அறிந்தும் அறியாதோராய் இருக்கிறார்கள். பாசத்தோடு தாலாட்டு பாடி பிள்ளைகளை தூங்க வைக்கும் தாய்மார்கள் அரிதாகிவிட்டார்கள்.
நவீன தாய்மார்களின் செயல்பாடுகளால் குழந்தைகளின் ஆரோக்கியமும் குறைந்து அறிவும் மட்டுப்படும். ஆரம்ப காலத்தில் கற்பிக்க வேண்டிய அடிப்படை ஒழுக்கங்களை அப்போது விட்டுவிட்டு காலம்கடந்து அவர்கள் தவறு செய்யும் போது கண்டித்துப் பயனில்லை.
பள்ளியில் முதல் மார்க் தான் வாங்க வேண்டும். கல்லூரியில் நான் சொல்கிற படிப்பு தான் படிக்கவேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் பிள்ளைகளை மனஅழுத்தத்தில் கொண்டு போய்விடும். அவர்களுடைய ஆர்வத்தையும் விருப்பத்தையும் மனதில் கொண்டே இவ்விஷயத்தில் செயல்பட வேண்டும்.
காதல் அல்லது தேர்வில் தோல்வி என்று தற்கொலையில் மாணவர்கள் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது. தோல்விகளை எப்படி எதிர்கொள்வது என்று கற்றுக்கொடுக்கப்பட்ட பிள்ளைகள் அவற்றை சுலபமாக கடந்துவிடுகிறார்கள்.பிள்ளை வளர்ப்பு என்பது சிறு வயதோடு முடிந்து விடுவதன்று. கல்லூரி முடித்து திருமணமாகும் வரை அவர்களின் மேல் பெற்றோர் கண்வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். ‘எது வந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம், நாங்கள் உனக்கு எப்போதும் பக்கபலமாக இருப்போம்’ என்ற நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை பிள்ளைகளிடம் சொல்லி வந்தால் எவ்வளவு பெரிய தடையையும் அவர்கள் அழகாக சமாளித்து வெற்றி பெறுவார்கள்.
பெண்குழந்தைகளிடம் கட்டுப்பாடுகளை மட்டுமே விதிக்காமல், அவர்களை தைரியத்தோடும் தன்னம்பிக்கையோடும் வளர்க்க வேண்டும். ஆண் பிள்ளைகளுக்கு பெண்களை தோழியாகவும் சகோதரியாகவும் பாவிக்கும் எண்ணத்தை சிறுவயது முதலே சொல்லி கொடுக்க வேண்டும்.
எதிர்கால சமுதாயத்துக்கு நம் வீட்டிலிருந்து ஒரு குற்றவாளியை தந்துவிடக் கூடாது என்பதை ஒவ்வொரு பெற்றோரும் நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும்.
ஆசானாய், தோழனாய் அன்பு காட்டும் பெற்றோர் அமைந்துவிட்டால் அருமையான பிள்ளைகளும் வளமையான எதிர்காலமும் உருவாகும்.
எழுத்தாளர் விஷ்வசாந்தி சரவணகுமார்
எதிர்காலம் எப்படி இருக்குமோ? என்ற கேள்வி நம்மை அச்சுறுத்துகிறது. குறிப்பாக, பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் கொலைகளும் பல பெற்றோர்களை நிம்மதியிழக்க செய்திருக்கிறது.
எங்கே இருக்கிறது இந்த தவறுகளின் தொடக்கப்புள்ளி? என்று யோசித்துப் பார்த்தால் விடை ஒன்று தான். அது குழந்தை வளர்ப்பு முறை. பிறக்கும் போதே யாரும் குற்றவாளிகளாக பிறப்பதில்லை. சிறு வயது அனுபவங்களே ஒரு மனிதனை செதுக்குகின்றன. நற்பண்புகளுடன் வளர்க்கப்படும் பிள்ளைகள் சமூகத்தில் உயர்நிலையை அடைவதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்.
குழந்தை வளர்ப்பு என்றவுடன் உணவு, உடை, இருப்பிடம் போன்ற அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமில்லை. நமது பாசத்தை காட்டுவதற்காக வாங்கிக் குவிக்கப்படும் பொம்மைகளும் பரிசுப்பொருட்களும் இல்லை. அறமும், ஒழுக்கமும் கற்பிக்கும் உயரிய பொறுப்பு அது.
நமது சமுதாயத்தில் பெண் பிள்ளைகளை வளர்ப்பதிலும் ஆண் பிள்ளைகளை வளர்ப்பதிலும் காலம் காலமாக ஒரு வேறுபாடு இருந்து வருகிறது. குறிப்பாக பருவ வயதில், அவர்களுக்கு உடல் ரீதியாக மாற்றம் ஏற்படும் போது பெண் பிள்ளைகளை நாம் பேணுவதை போல ஆண் பிள்ளைகளை பேணத் தவறுகிறோம்.
ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை வயது வந்த பெண் பிள்ளைகளுக்கு தருகிறோம். சமுதாயத்தில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும், எப்படி உடையணிய வேண்டும் என்பது போன்ற அறிவுரைகளை அவர்களுக்கு அவ்வப்போது சொல்லிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் ஆண் பிள்ளைகள் அதே வயதில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு தடுமாறுகிற மனநிலையில் இருக்கும்போது நாம் அவர்களை கண்டுகொள்வதே இல்லை.
தனிமையில் தள்ளப்படும் இந்த பிள்ளைகள் முறைப்பதும், கோபப்படுவதும் என்று தந்தைக்கு எதிராக திரும்புவதும் இந்த காலக்கட்டத்தில் தான். நண்பர்களுடன் சேர்ந்து சிகரெட் மற்றும் மது பழக்கங்களை இன்றைய சிறுவர்கள் வெகுவிரைவாகவே கற்றுக் கொள்கின்றனர்.
பிள்ளைகளிடம் தென்படும் இந்த திடீர் மாற்றத்தை அலட்சியம் செய்தல் கூடாது. ‘அடித்து வளர்க்காத பிள்ளையும் ஒடித்து வளர்க்காத முருங்கையும் எதற்கும் உதவாது’ என்ற பழமொழியெல்லாம் இந்தக் கால பிள்ளைகளிடத்தில் எடுபடாது. அவர்கள் செய்யும் தவறுகளுக்காக அடிக்க ஆரம்பித்தால் இன்னமும் மூர்க்கமாகவும் முரட்டுத்தனமாகவும் மாறுவார்கள்.
இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வு பிள்ளைகளிடத்தில் நட்போடு பழக வேண்டும். முகம் சற்று வாடியிருந்தால் கூட ‘என்னப்பா பிரச்சினை என்கிட்ட சொல்லு’ என்று ஆரம்பம் முதலே பெற்றோர் பிள்ளைகளிடம் அக்கறை காட்ட வேண்டும். சிறுவர்களாய் இருக்கும் போதே நீதிக் கதைகளை சொல்லி வளர்க்க வேண்டும்.
ஆன்மீகம், யோகா போன்ற பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை வளர்க்கும் விஷயங்களில் அவர்களை ஈடுபடச் செய்ய வேண்டும். பருவ வயது பிள்ளைகள் அடிக்கடி போனை எடுத்துக்கொண்டு தனியறைக்கு செல்லும்போது, அதன் தீமைகளை புரியும்படி சொல்லித் தடுக்க வேண்டும். அவர்களுக்கு விருப்பமான விளையாட்டு அல்லது தனித்திறனை வளர்க்கும் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் சிதையும் கவனத்தை நல்வழியில் மடைமாற்றம் செய்ய வேண்டும்.
பிள்ளைகளுக்காக அதிகமாக பணம் செலவழிப்பதை விட அவர்களுடன் அதிகமான நேரம் செலவிட வேண்டும். கேட்பதை எல்லாம் உடனே வாங்கிக் கொடுப்பதும் சரியான வளர்ப்பு முறை அல்ல. உண்மையிலேயே அந்த பொருள் அவசியம் தானா? நமது பொருளாதார நிலைக்கு அது அவசியமானது தானா? என்பதை பிள்ளைகளுக்குப் புரிய வைக்கவேண்டியது நமது கடமை.
அடம்பிடிக்கும் போதும் பெரியவர்களை மதிக்காமல் நடக்கும் போதும் கண்டிக்காமல் செல்லம் கொடுப்பதும் பல பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய தவறாகும். அதிகமான கண்டிப்பு எவ்வளவு ஆபத்தானதோ அதே அளவு அதீதமான செல்லமும் பிள்ளைகளை கெடுத்து விடும்.

பிரச்சினை என்று வரும்போது, ‘நீ சரியாக பிள்ளையை வளர்க்கவில்லை’ என்று தாய்மார்களை ஆண்கள் சாடுவது நமது சமுதாயத்தில் மாறவேண்டிய விஷயங்களில் ஒன்று. வளர்ப்பு என்பது இருவருக்கும் சமமான பொறுப்பு என்பதை ஆண்களும் உணர வேண்டும்.
அமெரிக்காவில் பள்ளி சிறுவர்கள் அடிக்கடி துப்பாக்கி சூடுகளில் ஈடுபடுவதற்கு காரணம் அங்கே குடும்ப அமைப்பு சிதைந்து வருவது தான். இங்கேயும் இது போன்ற தவறுகள் நடக்கும் முன்னர் நாம் விழித்துக்கொள்ள வேண்டும்.
பிள்ளைகளுடன் உட்கார்ந்து அன்றைய நிகழ்வுகளைப் பற்றி பேசுவது, எதிர்கால திட்டங்கள் பற்றி கலந்துரையாடுவது என தோழமையோடு வளர்க்கப்படும் பிள்ளைகள் தவறு செய்வதற்கு வாய்ப்பே இல்லை. மனதில் உள்ளவற்றை வெளியில் சொல்ல முடியாமல் அழுத்தம் ஏற்பட்டு தான் அவர்கள் தவறு செய்யும் மனநிலைக்கு ஆளாகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் பொழுதை போக்கிக்கொண்டு, குழந்தைக்கு தொலைக்காட்சியை போட்டுவிட்டோ, டேப்லெட்டை கொடுத்துவிட்டோ மணிக்கணக்காக கார்ட்டூன் பார்க்கச்செய்யும் பழக்கம் இன்றைய இளம் தாய்மார்களிடம் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக குழந்தை அழும் சமயங்களில் அவர்களின் கையில் செல்போனை திணித்துவிட்டு, தங்களை நிம்மதி படுத்திக்கொள்கிறார்கள். இதனால் ஏற்படும் விபரீதத்தை அறிந்தும் அறியாதோராய் இருக்கிறார்கள். பாசத்தோடு தாலாட்டு பாடி பிள்ளைகளை தூங்க வைக்கும் தாய்மார்கள் அரிதாகிவிட்டார்கள்.
நவீன தாய்மார்களின் செயல்பாடுகளால் குழந்தைகளின் ஆரோக்கியமும் குறைந்து அறிவும் மட்டுப்படும். ஆரம்ப காலத்தில் கற்பிக்க வேண்டிய அடிப்படை ஒழுக்கங்களை அப்போது விட்டுவிட்டு காலம்கடந்து அவர்கள் தவறு செய்யும் போது கண்டித்துப் பயனில்லை.
பள்ளியில் முதல் மார்க் தான் வாங்க வேண்டும். கல்லூரியில் நான் சொல்கிற படிப்பு தான் படிக்கவேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் பிள்ளைகளை மனஅழுத்தத்தில் கொண்டு போய்விடும். அவர்களுடைய ஆர்வத்தையும் விருப்பத்தையும் மனதில் கொண்டே இவ்விஷயத்தில் செயல்பட வேண்டும்.
காதல் அல்லது தேர்வில் தோல்வி என்று தற்கொலையில் மாணவர்கள் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது. தோல்விகளை எப்படி எதிர்கொள்வது என்று கற்றுக்கொடுக்கப்பட்ட பிள்ளைகள் அவற்றை சுலபமாக கடந்துவிடுகிறார்கள்.பிள்ளை வளர்ப்பு என்பது சிறு வயதோடு முடிந்து விடுவதன்று. கல்லூரி முடித்து திருமணமாகும் வரை அவர்களின் மேல் பெற்றோர் கண்வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். ‘எது வந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம், நாங்கள் உனக்கு எப்போதும் பக்கபலமாக இருப்போம்’ என்ற நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை பிள்ளைகளிடம் சொல்லி வந்தால் எவ்வளவு பெரிய தடையையும் அவர்கள் அழகாக சமாளித்து வெற்றி பெறுவார்கள்.
பெண்குழந்தைகளிடம் கட்டுப்பாடுகளை மட்டுமே விதிக்காமல், அவர்களை தைரியத்தோடும் தன்னம்பிக்கையோடும் வளர்க்க வேண்டும். ஆண் பிள்ளைகளுக்கு பெண்களை தோழியாகவும் சகோதரியாகவும் பாவிக்கும் எண்ணத்தை சிறுவயது முதலே சொல்லி கொடுக்க வேண்டும்.
எதிர்கால சமுதாயத்துக்கு நம் வீட்டிலிருந்து ஒரு குற்றவாளியை தந்துவிடக் கூடாது என்பதை ஒவ்வொரு பெற்றோரும் நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும்.
ஆசானாய், தோழனாய் அன்பு காட்டும் பெற்றோர் அமைந்துவிட்டால் அருமையான பிள்ளைகளும் வளமையான எதிர்காலமும் உருவாகும்.
எழுத்தாளர் விஷ்வசாந்தி சரவணகுமார்
எத்தகைய உணவில் எவ்வளவு சத்துகள் இருக்கிறது? குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் என்ன? என்பது பற்றி காண்போம்.
ஒவ்வொருவருக்கும் குழந்தை பருவம் என்பது மிக முக்கியமானது. குழந்தை பிறந்தவுடன் போதிய அளவு தாய்ப்பால் குடிப்பதில் இருந்து, சரிவிகித உணவு உண்பது வரையிலான பல முக்கிய செயல்கள் குழந்தைகளின் ஆரோக்கியம், அவர்களின் எதிர்காலம் குறித்த செயல்களை தீர்மானிக்கின்றன.
அவ்வாறின்றி உணவு முறைகள் தவறிப்போன குழந்தைகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள்? எத்தகைய உணவில் எவ்வளவு சத்துகள் இருக்கிறது? குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் என்ன? என்பது பற்றி காண்போம். இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பாலசுப்பிரமணி கூறியதாவது:-
நம் நாட்டில் குழந்தைகள் பிறப்பு முதல் 14 வயது வரை வளர்இளம் பருவம் என கணக்கிடப்படுகிறது. அதற்கேற்றவாறு குழந்தைகளின் பெற்றோருக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
குழந்தைகள் பிறந்தது முதல் ஒரு வருடம் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். தாய்ப்பாலில் தான் குழந்தைகளுக்கு தேவையான முழுமையான சக்தி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. அவ்வாறு ஒரு வருடம் வரை தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடனும், நோய் எதிர்ப்பு சக்தியுடனும் இருப்பார்கள்.
இணை உணவு
குழந்தைகளின் பிறப்பில் இருந்து 6 அல்லது 7-வது மாதத்தில் தாய்ப்பாலுடன் இணை உணவாக கஞ்சி கொடுக்க வேண்டும். அந்த சமயத்தில் தான் ருசியானது, குழந்தைகளின் மூளையில் பதிவாகும். எனவே அத்தகைய தருணத்தில் பருப்பு, கீரை, சாதம் இவற்றை கஞ்சியாக கடைந்து கொடுப்பது நல்லது.
அவ்வாறு கொடுத்து பழக்குவதால் குழந்தைகள் 5 வயது வரை இத்தகைய உணவை மறுக்காமல் உண்பார்கள். இத்தகைய கஞ்சி உணவை கொடுத்து பழக்கவில்லை என்றால் இதன் ருசியை அறியாமல் அவற்றை சாப்பிடாமல் ஒதுக்குவார்கள். அதனால் அவர்களை வலுக்கட்டாயமாக உண்ண வைக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
4 மடங்கு எடை
பொதுவாக குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து என்ற 3 வகையான சத்துக்கள் தேவைப்படுகிறது. அதில் மாவுச்சத்து, உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கிறது. புரதச்சத்து, தசை, எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. கொழுப்பு சத்து, மூளை, நரம்பு மண்டல வளர்ச்சி, நாளமில்லா சுரப்பிகள் சுரப்பதற்கும் உதவுகிறது. இந்த சத்துகள் அனைத்தும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமாக தேவைப்படுகிறது.குழந்தைகள் பிறந்தபோது இருந்த எடையை விட 2 வருடத்தில் 4 மடங்கு அதிகரிக்கும். எனவேதான் அவர்களுக்கு தாய்ப்பால், ஊட்டச்சத்து ஆகியவற்றை தவறாமல் வழங்க வேண்டும்.
அதிவேக வளர்ச்சி
அதன்பிறகு, அதாவது 2 வயதுக்குப்பின் ஒவ்வொரு வருடத்துக்கும் 2 கிலோ எடை அதிகரிக்கும். 6 சென்டிமீட்டர் உயரம் வளர்வார்கள். அந்த காலகட்டத்தில் சரிவிகித உணவு கண்டிப்பாக கொடுக்க வேண்டும். பொதுவாக இந்த காலகட்டத்தை உடல் அதிவேக வளர்ச்சியுறும் காலம் என்பார்கள். இதனை வளர்இளம் பருவம் என்றும் கூறுவதுண்டு.இந்த வளர்ச்சி காலம் என்பது அவர்களின் 14 முதல் 16 வயது வரை இருக்கும். அதனால் சரிவிகித உணவு வழங்க வேண்டும் என்பதை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உணவில் கலோரி
பொதுவாக குழந்தையின் எடையில் சராசரியாக 1 கிலோவுக்கு 110 கலோரி அளவுக்கு சரிவிகித உணவு கொடுக்க வேண்டும். ஒரு இட்லியில் 50 கலோரி அளவுக்கு சத்து இருக்கிறது. தோசையில் 100-ம், உப்புமாவில் 250-ம், ஒரு பிஸ்கட்டில் 15-ம், ஒரு டீஸ்பூன் எண்ணெயில் 20 கலோரி அளவுக்கு சத்து இருக்கிறது.

100 மில்லி லிட்டர் தாய்ப்பாலில் 70 கலோரி சத்தும், 3 கிராம் புரதமும் இருக்கிறது. ஒரு முட்டையில் 70 கலோரி அளவுக்கு சத்தும், 7 கிராம் புரதமும் இருக்கிறது. அதனால் தான் குழந்தைகளுக்கு அவசியம் முட்டையும், சரிவிகித உணவும் கொடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.
வைட்டமின்கள்
பொதுவாக பால், முட்டை, காய்கறி, பழங்கள் இவற்றில் சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. கால்சியம் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. இரும்புச்சத்து ஆரோக்கியத்துக்கு அவசியம் தேவைப்படுகிறது. அதனால் குழந்தைகளுக்கு இவற்றை சிறு வயதிலேயே உண்ண கொடுத்து வளர்க்க வேண்டும்.அதேபோல் அசைவ உணவில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது. அதனால் முடிந்தவரை அசைவ உணவிலான சூப் வகைகளை குடிப்பதும், இறைச்சி உண்பதும் அவர்களின் உடல் வளர்ச்சிக்கு அவசியம் தேவை.
துரித உணவுகள்
இதுபோன்ற அத்தியாவசிய உணவு முறைகளை தவிர்த்து பீட்சா, பர்கர் போன்ற துரித மற்றும் பாக்கெட் உணவுகளை உண்பதால் குறைந்த வயதில் குழந்தைகளின் எடை அதிகரித்து விடுகிறது. பொதுவாக பாக்கெட் உணவுகளால் அதிக கலோரிகள் உடலுக்கு கிடைக்கிறது என்பதை அறியாமலேயே குழந்தைகளும் அதை உண்கிறார்கள்.
துரித, பாக்கெட் உணவுகளில் புரதச்சத்து இருக்காது. ஆனால் கொழுப்புசத்து அதிகம் இருக்கும். அதனால் எளிதில் உடல் பருமன் ஆகிவிடும். இதுபோன்று உடல் பருமன் உள்ள குழந்தைகள் விளையாட்டில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். சோம்பல் அதிகமிருக்கும். அதனால் மற்ற குழந்தைகளை விட அவர்களுக்கு புரிதல் சக்தி குறைந்து விடும். இதுபோன்ற காரணங்களால் அவர்கள் படிப்பில் பின்தங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
பிரச்சினைகளை தவிர்க்க...
அதுமட்டுமின்றி உடல் பருமன் உள்ள குழந்தைகள் தங்களது வாழ்நாளில் 30 முதல் 35 வயதில் ரத்தக்கொதிப்பு, சர்க்கரை, மூட்டுவலி, நாளமில்லா சுரப்பிகள் சரிவர செயல்படாதநிலை போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மேலும் சுறுசுறுப்பு இன்மை, அறிவில் பின்தங்கியநிலையும் உண்டாகும்.
இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க, சிறுவயதில் சரிவிகித உணவு, சரியான நேரத்துக்கு சாப்பிடும் வழக் கத்தை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும். அதனால் அவர்களின் உடல் மற்றும் மனவளர்ச்சி பெருகும். அதனுடன் உடல் ஆரோக்கியம், நீண்ட ஆயுள் கிடைக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவ்வாறின்றி உணவு முறைகள் தவறிப்போன குழந்தைகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள்? எத்தகைய உணவில் எவ்வளவு சத்துகள் இருக்கிறது? குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் என்ன? என்பது பற்றி காண்போம். இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பாலசுப்பிரமணி கூறியதாவது:-
நம் நாட்டில் குழந்தைகள் பிறப்பு முதல் 14 வயது வரை வளர்இளம் பருவம் என கணக்கிடப்படுகிறது. அதற்கேற்றவாறு குழந்தைகளின் பெற்றோருக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
குழந்தைகள் பிறந்தது முதல் ஒரு வருடம் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். தாய்ப்பாலில் தான் குழந்தைகளுக்கு தேவையான முழுமையான சக்தி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. அவ்வாறு ஒரு வருடம் வரை தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடனும், நோய் எதிர்ப்பு சக்தியுடனும் இருப்பார்கள்.
இணை உணவு
குழந்தைகளின் பிறப்பில் இருந்து 6 அல்லது 7-வது மாதத்தில் தாய்ப்பாலுடன் இணை உணவாக கஞ்சி கொடுக்க வேண்டும். அந்த சமயத்தில் தான் ருசியானது, குழந்தைகளின் மூளையில் பதிவாகும். எனவே அத்தகைய தருணத்தில் பருப்பு, கீரை, சாதம் இவற்றை கஞ்சியாக கடைந்து கொடுப்பது நல்லது.
அவ்வாறு கொடுத்து பழக்குவதால் குழந்தைகள் 5 வயது வரை இத்தகைய உணவை மறுக்காமல் உண்பார்கள். இத்தகைய கஞ்சி உணவை கொடுத்து பழக்கவில்லை என்றால் இதன் ருசியை அறியாமல் அவற்றை சாப்பிடாமல் ஒதுக்குவார்கள். அதனால் அவர்களை வலுக்கட்டாயமாக உண்ண வைக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
4 மடங்கு எடை
பொதுவாக குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து என்ற 3 வகையான சத்துக்கள் தேவைப்படுகிறது. அதில் மாவுச்சத்து, உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கிறது. புரதச்சத்து, தசை, எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. கொழுப்பு சத்து, மூளை, நரம்பு மண்டல வளர்ச்சி, நாளமில்லா சுரப்பிகள் சுரப்பதற்கும் உதவுகிறது. இந்த சத்துகள் அனைத்தும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமாக தேவைப்படுகிறது.குழந்தைகள் பிறந்தபோது இருந்த எடையை விட 2 வருடத்தில் 4 மடங்கு அதிகரிக்கும். எனவேதான் அவர்களுக்கு தாய்ப்பால், ஊட்டச்சத்து ஆகியவற்றை தவறாமல் வழங்க வேண்டும்.
அதிவேக வளர்ச்சி
அதன்பிறகு, அதாவது 2 வயதுக்குப்பின் ஒவ்வொரு வருடத்துக்கும் 2 கிலோ எடை அதிகரிக்கும். 6 சென்டிமீட்டர் உயரம் வளர்வார்கள். அந்த காலகட்டத்தில் சரிவிகித உணவு கண்டிப்பாக கொடுக்க வேண்டும். பொதுவாக இந்த காலகட்டத்தை உடல் அதிவேக வளர்ச்சியுறும் காலம் என்பார்கள். இதனை வளர்இளம் பருவம் என்றும் கூறுவதுண்டு.இந்த வளர்ச்சி காலம் என்பது அவர்களின் 14 முதல் 16 வயது வரை இருக்கும். அதனால் சரிவிகித உணவு வழங்க வேண்டும் என்பதை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உணவில் கலோரி
பொதுவாக குழந்தையின் எடையில் சராசரியாக 1 கிலோவுக்கு 110 கலோரி அளவுக்கு சரிவிகித உணவு கொடுக்க வேண்டும். ஒரு இட்லியில் 50 கலோரி அளவுக்கு சத்து இருக்கிறது. தோசையில் 100-ம், உப்புமாவில் 250-ம், ஒரு பிஸ்கட்டில் 15-ம், ஒரு டீஸ்பூன் எண்ணெயில் 20 கலோரி அளவுக்கு சத்து இருக்கிறது.

100 மில்லி லிட்டர் தாய்ப்பாலில் 70 கலோரி சத்தும், 3 கிராம் புரதமும் இருக்கிறது. ஒரு முட்டையில் 70 கலோரி அளவுக்கு சத்தும், 7 கிராம் புரதமும் இருக்கிறது. அதனால் தான் குழந்தைகளுக்கு அவசியம் முட்டையும், சரிவிகித உணவும் கொடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.
வைட்டமின்கள்
பொதுவாக பால், முட்டை, காய்கறி, பழங்கள் இவற்றில் சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. கால்சியம் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. இரும்புச்சத்து ஆரோக்கியத்துக்கு அவசியம் தேவைப்படுகிறது. அதனால் குழந்தைகளுக்கு இவற்றை சிறு வயதிலேயே உண்ண கொடுத்து வளர்க்க வேண்டும்.அதேபோல் அசைவ உணவில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது. அதனால் முடிந்தவரை அசைவ உணவிலான சூப் வகைகளை குடிப்பதும், இறைச்சி உண்பதும் அவர்களின் உடல் வளர்ச்சிக்கு அவசியம் தேவை.
துரித உணவுகள்
இதுபோன்ற அத்தியாவசிய உணவு முறைகளை தவிர்த்து பீட்சா, பர்கர் போன்ற துரித மற்றும் பாக்கெட் உணவுகளை உண்பதால் குறைந்த வயதில் குழந்தைகளின் எடை அதிகரித்து விடுகிறது. பொதுவாக பாக்கெட் உணவுகளால் அதிக கலோரிகள் உடலுக்கு கிடைக்கிறது என்பதை அறியாமலேயே குழந்தைகளும் அதை உண்கிறார்கள்.
துரித, பாக்கெட் உணவுகளில் புரதச்சத்து இருக்காது. ஆனால் கொழுப்புசத்து அதிகம் இருக்கும். அதனால் எளிதில் உடல் பருமன் ஆகிவிடும். இதுபோன்று உடல் பருமன் உள்ள குழந்தைகள் விளையாட்டில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். சோம்பல் அதிகமிருக்கும். அதனால் மற்ற குழந்தைகளை விட அவர்களுக்கு புரிதல் சக்தி குறைந்து விடும். இதுபோன்ற காரணங்களால் அவர்கள் படிப்பில் பின்தங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
பிரச்சினைகளை தவிர்க்க...
அதுமட்டுமின்றி உடல் பருமன் உள்ள குழந்தைகள் தங்களது வாழ்நாளில் 30 முதல் 35 வயதில் ரத்தக்கொதிப்பு, சர்க்கரை, மூட்டுவலி, நாளமில்லா சுரப்பிகள் சரிவர செயல்படாதநிலை போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மேலும் சுறுசுறுப்பு இன்மை, அறிவில் பின்தங்கியநிலையும் உண்டாகும்.
இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க, சிறுவயதில் சரிவிகித உணவு, சரியான நேரத்துக்கு சாப்பிடும் வழக் கத்தை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும். அதனால் அவர்களின் உடல் மற்றும் மனவளர்ச்சி பெருகும். அதனுடன் உடல் ஆரோக்கியம், நீண்ட ஆயுள் கிடைக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
குழந்தைகள் 1 வயதை தொடும்வரை, ஒவ்வொரு மாதங்களுக்கும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவுகளை கொடுப்பது குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
குழந்தைகள் வளர ஆரம்பிக்கும்போதே அவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை கொடுக்க வேண்டும். அதுவும், 1 வயதை தொடும்வரை, குறிப்பிட்ட மாதங்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவுகளை கொடுப்பது குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
0-4 மாதம் வரை
தாய்ப்பாலில் அளவுக்கு அதிகமான நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்துள்ளது. மேலும் அந்த தாய்ப்பால், அவர்களின் உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றுவதோடு, பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் பிலிரூபின் என்னும் நிறமியை வெளியேற்றிவிடும். அதிலும் அந்த தாய்ப்பாலை குறைந்தது நான்கு மாதங்களுக்கு கொடுக்க வேண்டும். இதனால் அவர்களது உறுப்புகள் அனைத்தும் வலுவடைவதோடு, செரிமான மண்டலமும் நன்கு செயல்பட ஆரம்பிக்கும்.
4-6 மாதம் வரை
நான்கு மாதங்களுக்குப் பின்னர் குழந்தைகள் வேறு உணவை சாப்பிடுவதில் கவனத்தை செலுத்துவது போன்று தெரிந்தால், அப்போது ஒரு டேபிள்
ஸ்பூன் வேக வைத்த இனிப்பு உருளைக்கிழங்கு, கேரட், ஆப்பிள், வாழைப்பழம், பீச் பழம் போன்றவற்றை நன்கு மசித்து கொடுக்க வேண்டும். அதிலும் இவர்களது ஆர்வத்தை எவ்வாறு தெரிந்து கொள்வதென்றால், ஒரு நாளைக்கு 8-10 முறை தாய்ப்பால் கொடுத்தும் அவர்கள் பசிக்கு அழுதால், அப்போது இந்த உணவுகளையும், தாய்ப்பால் கொடுத்து சிறிது நேரத்திற்குப் பின் கொடுக்கலாம். அதுவும் ஒரு டேபிள் ஸ்பூன் தான் கொடுக்க வேண்டும்.

6-8 மாதம் வரை
இந்த மாதங்களில் தாய்ப்பால், பழங்களை கொடுக்கும் போதோ, மெதுவாக வேக வைத்து மசித்த சாதம், காய்கறிகள், பருப்பு வகைகள், சிக்கன் போன்ற அனைத்தையும் கொடுக்கலாம். அதிலும் அவ்வாறு கொடுக்கும் போது, அவர்களுக்கு 3-9 டேபிள் ஸ்பூன் செர்லாக், 2-3 முறை தாய்ப்பால் மற்றும் 1/4 அல்லது 1/2 கப் வேக வைத்து மசித்த காய்கறிகள் என்று கொடுக்க ஆரம்பிக்கலாம்.
மேலும் அவ்வாறு இவற்றையெல்லாம் கொடுக்கும் போது, குழந்தைகளுக்கு அந்த உணவுகளால் ஏதாவது அலர்ஜி போன்று வருகிறதா என்று அவ்வப்போது கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு வந்தால், உடனே அந்த உணவுகளில் எவற்றால் ஆகிறது என்று மருத்துவரிடம் சென்று ஆலோசித்து, அவற்றை தவிர மற்றவற்றை கொடுக்கலாம்.
8-10 மாதம் வரை
இந்த வயதில், சீஸ், தயிர் மற்றும் இரும்புச்சத்துள்ள தானியங்களான அரிசி, பார்லி, கோதுமை மற்றும் ஓட்ஸ் போன்றவற்றை மெதுவாக கொடுக்க ஆரம்பிக்கலாம். மேலும் அத்துடன் 1/4 கப் புரோட்டீன் உணவுகளான முட்டை, மீன் போன்றவற்றையும் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
10-12 மாதம்
இந்த வயதில் அனைத்து உணவுகளையும் கொடுக்கலாம். ஆனால் அது அளவாக இருக்க வேண்டும். மேலும் இந்த வயதில் உணவுகள் கொடுக்கும் போது மிகவும் கவனமாகவும், அளவாகவும் கொடுக்க வேண்டும். அதாவது 1/3 கப் பால் பொருட்கள் அல்லது 1/2 கப் சீஸ் உடன் 1/4 அல்லது 1/2 கப் சாதத்துடன், காய்கறிகள் மற்றும் புரோட்டீன் உணவுகளை நிச்சயம் கொடுக்க வேண்டும்.
0-4 மாதம் வரை
தாய்ப்பாலில் அளவுக்கு அதிகமான நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்துள்ளது. மேலும் அந்த தாய்ப்பால், அவர்களின் உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றுவதோடு, பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் பிலிரூபின் என்னும் நிறமியை வெளியேற்றிவிடும். அதிலும் அந்த தாய்ப்பாலை குறைந்தது நான்கு மாதங்களுக்கு கொடுக்க வேண்டும். இதனால் அவர்களது உறுப்புகள் அனைத்தும் வலுவடைவதோடு, செரிமான மண்டலமும் நன்கு செயல்பட ஆரம்பிக்கும்.
4-6 மாதம் வரை
நான்கு மாதங்களுக்குப் பின்னர் குழந்தைகள் வேறு உணவை சாப்பிடுவதில் கவனத்தை செலுத்துவது போன்று தெரிந்தால், அப்போது ஒரு டேபிள்
ஸ்பூன் வேக வைத்த இனிப்பு உருளைக்கிழங்கு, கேரட், ஆப்பிள், வாழைப்பழம், பீச் பழம் போன்றவற்றை நன்கு மசித்து கொடுக்க வேண்டும். அதிலும் இவர்களது ஆர்வத்தை எவ்வாறு தெரிந்து கொள்வதென்றால், ஒரு நாளைக்கு 8-10 முறை தாய்ப்பால் கொடுத்தும் அவர்கள் பசிக்கு அழுதால், அப்போது இந்த உணவுகளையும், தாய்ப்பால் கொடுத்து சிறிது நேரத்திற்குப் பின் கொடுக்கலாம். அதுவும் ஒரு டேபிள் ஸ்பூன் தான் கொடுக்க வேண்டும்.

6-8 மாதம் வரை
இந்த மாதங்களில் தாய்ப்பால், பழங்களை கொடுக்கும் போதோ, மெதுவாக வேக வைத்து மசித்த சாதம், காய்கறிகள், பருப்பு வகைகள், சிக்கன் போன்ற அனைத்தையும் கொடுக்கலாம். அதிலும் அவ்வாறு கொடுக்கும் போது, அவர்களுக்கு 3-9 டேபிள் ஸ்பூன் செர்லாக், 2-3 முறை தாய்ப்பால் மற்றும் 1/4 அல்லது 1/2 கப் வேக வைத்து மசித்த காய்கறிகள் என்று கொடுக்க ஆரம்பிக்கலாம்.
மேலும் அவ்வாறு இவற்றையெல்லாம் கொடுக்கும் போது, குழந்தைகளுக்கு அந்த உணவுகளால் ஏதாவது அலர்ஜி போன்று வருகிறதா என்று அவ்வப்போது கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு வந்தால், உடனே அந்த உணவுகளில் எவற்றால் ஆகிறது என்று மருத்துவரிடம் சென்று ஆலோசித்து, அவற்றை தவிர மற்றவற்றை கொடுக்கலாம்.
8-10 மாதம் வரை
இந்த வயதில், சீஸ், தயிர் மற்றும் இரும்புச்சத்துள்ள தானியங்களான அரிசி, பார்லி, கோதுமை மற்றும் ஓட்ஸ் போன்றவற்றை மெதுவாக கொடுக்க ஆரம்பிக்கலாம். மேலும் அத்துடன் 1/4 கப் புரோட்டீன் உணவுகளான முட்டை, மீன் போன்றவற்றையும் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
10-12 மாதம்
இந்த வயதில் அனைத்து உணவுகளையும் கொடுக்கலாம். ஆனால் அது அளவாக இருக்க வேண்டும். மேலும் இந்த வயதில் உணவுகள் கொடுக்கும் போது மிகவும் கவனமாகவும், அளவாகவும் கொடுக்க வேண்டும். அதாவது 1/3 கப் பால் பொருட்கள் அல்லது 1/2 கப் சீஸ் உடன் 1/4 அல்லது 1/2 கப் சாதத்துடன், காய்கறிகள் மற்றும் புரோட்டீன் உணவுகளை நிச்சயம் கொடுக்க வேண்டும்.
குழந்தைகளின் அறையை அலங்கரிப்பதற்கு பல வகையான முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவற்றில் சிலவற்றைப் இப்போது பார்ப்போம்.
குழந்தைகளின் அறை என்பது அவர்கள் உறங்குவதற்கான இடம் மட்டுமல்ல, அவர்கள் வளர்வதற்கான இடம். எனவே அதை கவனத்தில் கொண்டு அறையை அலங்கரிக்க வேண்டும். குழந்தைகளின் அறையை அலங்கரிப்பதற்கு பல வகையான முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவற்றில் சிலவற்றைப் பற்றி பார்ப்போம்.
* பெண் குழந்தையின் அறை என்றால் சுவரில் இளஞ்சிவப்பு நிறத்தில் வர்ணம் பூசலாம். அதுவே ஆண் குழந்தையின் அறை என்றால் நீல நிறத்தில் வர்ணம் பூச வேண்டும். சுவர்களில் அடர்த்தியான நிறங்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அப்போதுதான் அறையை அலங்கரிக்கும் பொம்மைகள் உள்ளிட்ட பொருட்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

* குழந்தைகளிடம் இசை, ஓவியம் உள்ளிட்ட கலைத்துறைகளில் ஈடுபாடு இருந்தால் அதை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பையும் அறையில் அமைத்துக்கொடுக்க வேண்டும். குழந்தைகள் விரும்பும் இசைக்கருவி, அல்லது ஓவியம் வரைவதற்கான பலகை ஆகியவையும் அறையில் இடம்பெறுவது நல்லது.
* குழந்தைகளின் அறையில் நல்ல காற்றோட்டமும் இயற்கையான வெளிச்சமும் இருக்க வேண்டும். பெரிய அளவில் ஜன்னல்கள் அமைந்திருக்க வேண்டும். இரவில் பயன்படுத்துவதற்கான மின்விளக்குகளை, நிழல் விழாதபடி அமைக்க வேண்டும்.
* குழந்தைகளின் அறையில் மின் இணைப்புகள் பாதுகாப்பான வகையில் இருக்க வேண்டும். பால்கனியுடன் இணைந்த அறையாக இருந்தால், கண்டிப்பாக பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும்.
* குழந்தைகளின் அறையை அலங்கரிக்கும்போது குழந்தைகளின் விருப்பங்களையும் கேட்டறிய வேண்டும். பெற்றோரின் விருப்பத்தை குழந்தைகளின்மீது திணிக்கக் கூடாது. மேலும், அறையின் ஏதாவது ஒரு பகுதியை குழந்தைகளே அலங்கரித்துக்கொள்ளவும் வாய்ப்பு வழங்க வேண்டும்.
* பெண் குழந்தையின் அறை என்றால் சுவரில் இளஞ்சிவப்பு நிறத்தில் வர்ணம் பூசலாம். அதுவே ஆண் குழந்தையின் அறை என்றால் நீல நிறத்தில் வர்ணம் பூச வேண்டும். சுவர்களில் அடர்த்தியான நிறங்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அப்போதுதான் அறையை அலங்கரிக்கும் பொம்மைகள் உள்ளிட்ட பொருட்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
* அறையை அலங்கரிக்கும்போது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட அடிப்படையைப் பின்பற்ற வேண்டும். உதாரணத்திற்கு, குழந்தைகளுக்கு விருப்பமான விளையாட்டின் அடிப்படையில் அறையை அலங்கரிக்கலாம். குழந்தைக்கு கால்பந்தாட்டம் பிடித்தமான விளையாட்டு என்றால் கால்பந்து, புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களின் புகைப்படங்கள், முக்கிய விளையாட்டுப் போட்டிகள் பற்றிய பத்திரிகை செய்திகள் ஆகியவற்றைக் கொண்டு அறையை அலங்கரிக்கலாம். விளையாட்டுத் துறையில் சாதிக்க நினைக்கும் குழந்தைகளை அது உற்சாகப்படுத்துவதாக அமையும்.

* குழந்தைகளிடம் இசை, ஓவியம் உள்ளிட்ட கலைத்துறைகளில் ஈடுபாடு இருந்தால் அதை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பையும் அறையில் அமைத்துக்கொடுக்க வேண்டும். குழந்தைகள் விரும்பும் இசைக்கருவி, அல்லது ஓவியம் வரைவதற்கான பலகை ஆகியவையும் அறையில் இடம்பெறுவது நல்லது.
* குழந்தைகளின் அறையில் நல்ல காற்றோட்டமும் இயற்கையான வெளிச்சமும் இருக்க வேண்டும். பெரிய அளவில் ஜன்னல்கள் அமைந்திருக்க வேண்டும். இரவில் பயன்படுத்துவதற்கான மின்விளக்குகளை, நிழல் விழாதபடி அமைக்க வேண்டும்.
* குழந்தைகளின் அறையில் மின் இணைப்புகள் பாதுகாப்பான வகையில் இருக்க வேண்டும். பால்கனியுடன் இணைந்த அறையாக இருந்தால், கண்டிப்பாக பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும்.
* குழந்தைகளின் அறையை அலங்கரிக்கும்போது குழந்தைகளின் விருப்பங்களையும் கேட்டறிய வேண்டும். பெற்றோரின் விருப்பத்தை குழந்தைகளின்மீது திணிக்கக் கூடாது. மேலும், அறையின் ஏதாவது ஒரு பகுதியை குழந்தைகளே அலங்கரித்துக்கொள்ளவும் வாய்ப்பு வழங்க வேண்டும்.
ஆண் குழந்தைகள் ஆடைகள் எனும்போது சார்ட்ஸ், ஜீன்ஸ், டீ-ஷர்ட், செட் டிரஸ்ஸஸ், சூட்ஸ், பைஜாமா, ஷெர்வாணி என்பதுடன் பிரத்யேகமான பண்டிகை ஆடைகள் போன்றவை வருகின்றன.
ஆண் குழந்தைகளின் அழகே அவர்கள் அணியும் ஆடையை வைத்தே மேம்படுகிறது. பெரிய ஆண் மகன்கள் அணிகின்ற அதே வகை ஆடைகளை அணிந்தாலும் லிட்டில் சார்ம்ஸ், குட்டி இளவரசன் என்றவாறு உருவாக்க ஆடைகளின் வடிவமைப்பு கூடுதல் அழகுடன் மேம்படுத்தப்படுகிறது. இதற்கென ஆடை வடிவமைப்பாளர்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிக மெனகெட்டு புதிய ஆடைகளை வடிவமைத்து தருகின்றனர்.
ஆண் குழந்தைகள் ஆடைகள் எனும்போது சார்ட்ஸ், ஜீன்ஸ், டீ-ஷர்ட், செட் டிரஸ்ஸஸ், சூட்ஸ், பைஜாமா, ஷெர்வாணி என்பதுடன் பிரத்யேகமான பண்டிகை ஆடைகள் போன்றவை வருகின்றன. இதில் பிரகாசமான வண்ணம் மற்றும் அழுத்தமான உருவங்கள் பிரிண்ட் செய்யப்பட்ட ஆடைகள் அதிகளவு ஆண் குழந்தைகளை கவர்கின்றன. தற்போது ஆண் குழந்தைகள் ஆடைகளில் கார்ட்டூன் உருவங்கள் பதித்த டீ-ஷர்ட்ஸ், ஸ்மார்ட் ஷர்ட்ஸ், அசத்தலான சூட்ஸ், தீம் ஆடைகள், நேரு கோட் ஆடைகள் போன்றவை அதிக பிரபலமானவையாக திகழ்கின்றன.
கம்பீரமான தோற்றமளிக்கும் கோட் சூட்ஸ்

கார்ட்டூன் உருவ டீ-ஷர்ட்கள்
சூப்பரான ஸ்மார்ட் சட்டைகள்
ஆண் குழந்தைகளுக்கு என வித்தியாசமான பேட்டர்ன் மற்றும் தையல் அமைப்புகளுடன் சட்டைகள் வருகின்றன. பிரிண்ட் மற்றும் கட்டம் போட்ட சட்டைகளின் பாக்கெட் மற்றும் கை பகுதிகள் அதிக வித்தியாசத்துடன் தெரிவதற்கு என பிரத்யேகமான பட்டன் மற்றும் பிற இணைப்புகளுடன் சட்டை வருகின்றன. இந்த சட்டைகள் ஒற்றை நிறம் மற்றும் பல வண்ண கலப்புடன் பூக்கள், நேர்கோடு, குறுக்கு கோடு உள்ளவை போன்று உருவாக்கப்படுகின்றன. ஒரு வண்ண துணியமைப்பு மீது வேறு வண்ண துணியில் பூக்கள் மற்றும் இலைகள் செய்யப்பட்டு அதன் மீது இணைப்பு செய்யப்பட்ட சட்டை அதி அற்புதமான வடிவமைப்பு. மெல்லிய லேஸ் அமைப்பு உருவங்கள் சட்டை மீது பிரியாதவாறு தைக்கப்பட்டுள்ளன.
ராஜகம்பீர ஷெர்வாணிகள்
பிறந்த நாள், பண்டிகை மற்றும் பொது விழாக்களுக்கு அணிய ஏற்றவாறு இளவரசன் போல் தோற்றமளிக்கும் ராஜகம்பீர ஷெர்வாணிகள் கூடுதல் பொலிவுடன் உருவாக்கம் பெறுகின்றன. கண்ணை கவரும் பளபளப்பு, மெத்தென்ற மேற்புற நீளமான சட்டை அதன் மீது அழகிய எம்பிராய்டரி மற்றும் சரிகை வேலைப்பாடுகள் வியப்பில் ஆழ்த்துகின்றன. பிட்டு, ஜார்ஜெட், ஷிப்பான் துணிகளின் பளபளப்புக்கு ஏற்றவாறு வடிவமைப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. ஆண் குழந்தைகளின் அட்டகாச தோற்றத்தை பொலிவு செய்யும் வண்ணம் ஆடை மேல் அணிய சில புது உபகரணங்கள், பதக்கங்கள், செயின்கள் போன்றவை தரப்படுகிறது. எனவே ஆண் குழந்தைகளின் ஆடை அணிவகுப்பு என்பது பலவிதமான வடிவங்கள், வண்ணம், தனிப்பட்ட கூடுதல் தையல்கள் கொண்டவாறு அழகுடன் உருவாகின்றன.
ஆண் குழந்தைகள் ஆடைகள் எனும்போது சார்ட்ஸ், ஜீன்ஸ், டீ-ஷர்ட், செட் டிரஸ்ஸஸ், சூட்ஸ், பைஜாமா, ஷெர்வாணி என்பதுடன் பிரத்யேகமான பண்டிகை ஆடைகள் போன்றவை வருகின்றன. இதில் பிரகாசமான வண்ணம் மற்றும் அழுத்தமான உருவங்கள் பிரிண்ட் செய்யப்பட்ட ஆடைகள் அதிகளவு ஆண் குழந்தைகளை கவர்கின்றன. தற்போது ஆண் குழந்தைகள் ஆடைகளில் கார்ட்டூன் உருவங்கள் பதித்த டீ-ஷர்ட்ஸ், ஸ்மார்ட் ஷர்ட்ஸ், அசத்தலான சூட்ஸ், தீம் ஆடைகள், நேரு கோட் ஆடைகள் போன்றவை அதிக பிரபலமானவையாக திகழ்கின்றன.
கம்பீரமான தோற்றமளிக்கும் கோட் சூட்ஸ்
பெரியவர்களுக்கு உருவாவது போன்றே அதிக பொலிவு மற்றும் அதிக வனப்புடன் கூடிய கோட் சூட்ஸ் ஆண் குழந்தைகளுக்கு தைக்கப்படுகின்றன. முக்கை அமைப்புடன் கூடிய புல் சூட் பிளேசர் மற்றும் அதற்கேற்ற பேண்ட் போன்றவாறு கிடைக்கின்றன அதுபோல் அழகிய வண்ணச்சட்டை, டை மற்றும் மார்பு பக்கத்தில் மட்டும் அணியகூடிய கோட் போன்றவையும் கிடைக்கின்றன. பார்ட்டிகளுக்கு அணிந்து செல்ல ஏற்ற கோடுகள் போட்ட வித்தியாசமான அமைப்புடன் கம்பீரமாக தோற்றமளிக்க செய்யும் கூடிய கோட் சூட்களும் கிடைக்கின்றன. இதில் உட்புற சட்டைக்கு பதிலாக டீ-ஷர்ட் இணைப்பு வழங்கப்படுகிறது.

கார்ட்டூன் உருவ டீ-ஷர்ட்கள்
குழந்தைகள் என்றாலே கார்ட்டூன் உருவங்களைதான் அதிகம் பிடிக்கும். எனவே ஆண் குழந்தைகள் அணிய ஏற்ற விதவிதமான கார்ட்டூன் உருவம் பிரிண்ட் செய்த டீ-ஷர்ட் உருவாக்கப்படுகின்றன. சில விலங்குகளின் வித்தியாசமான வடிவம், டிஸ்னி கார்ட்டூன் உருவங்கள், ஓகி, டோரா, பேட்மேன், சோட்டாபீம், ஹனுமன் போன்றவை அழகிய வண்ண சேர்ப்புடன் பிரிண்ட் செய்யப்பட்ட டீ-ஷர்ட்கள் வருகின்றன. இத்துடன் கார்ட்டூன் உருவங்கள் டீ-ஷர்ட் மீது எம்போஸ் மற்றும் உருவ அமைப்புடன் தொங்கும் வகையிலும் டீ-ஷர்ட் வருகின்றன.
ஆண் குழந்தைகளுக்கு என வித்தியாசமான பேட்டர்ன் மற்றும் தையல் அமைப்புகளுடன் சட்டைகள் வருகின்றன. பிரிண்ட் மற்றும் கட்டம் போட்ட சட்டைகளின் பாக்கெட் மற்றும் கை பகுதிகள் அதிக வித்தியாசத்துடன் தெரிவதற்கு என பிரத்யேகமான பட்டன் மற்றும் பிற இணைப்புகளுடன் சட்டை வருகின்றன. இந்த சட்டைகள் ஒற்றை நிறம் மற்றும் பல வண்ண கலப்புடன் பூக்கள், நேர்கோடு, குறுக்கு கோடு உள்ளவை போன்று உருவாக்கப்படுகின்றன. ஒரு வண்ண துணியமைப்பு மீது வேறு வண்ண துணியில் பூக்கள் மற்றும் இலைகள் செய்யப்பட்டு அதன் மீது இணைப்பு செய்யப்பட்ட சட்டை அதி அற்புதமான வடிவமைப்பு. மெல்லிய லேஸ் அமைப்பு உருவங்கள் சட்டை மீது பிரியாதவாறு தைக்கப்பட்டுள்ளன.
ராஜகம்பீர ஷெர்வாணிகள்
பிறந்த நாள், பண்டிகை மற்றும் பொது விழாக்களுக்கு அணிய ஏற்றவாறு இளவரசன் போல் தோற்றமளிக்கும் ராஜகம்பீர ஷெர்வாணிகள் கூடுதல் பொலிவுடன் உருவாக்கம் பெறுகின்றன. கண்ணை கவரும் பளபளப்பு, மெத்தென்ற மேற்புற நீளமான சட்டை அதன் மீது அழகிய எம்பிராய்டரி மற்றும் சரிகை வேலைப்பாடுகள் வியப்பில் ஆழ்த்துகின்றன. பிட்டு, ஜார்ஜெட், ஷிப்பான் துணிகளின் பளபளப்புக்கு ஏற்றவாறு வடிவமைப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. ஆண் குழந்தைகளின் அட்டகாச தோற்றத்தை பொலிவு செய்யும் வண்ணம் ஆடை மேல் அணிய சில புது உபகரணங்கள், பதக்கங்கள், செயின்கள் போன்றவை தரப்படுகிறது. எனவே ஆண் குழந்தைகளின் ஆடை அணிவகுப்பு என்பது பலவிதமான வடிவங்கள், வண்ணம், தனிப்பட்ட கூடுதல் தையல்கள் கொண்டவாறு அழகுடன் உருவாகின்றன.
குழந்தைக்கு இரண்டு வயதாகும் வரை தலையனை போட வேண்டிய அவசியமில்லை. அதற்கு மேல் உயரமான தலையணை போட வேண்டாம்.
குழந்தைகள் பிறந்தது முதல் ஒரு வயது வரையில் அதிகமாக தூங்குவார்கள். அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. அந்தநேரத்தில் இடைஞ்சல் இல்லாமல் தூங்குவதற்கான முன்னேற்பாடுகளை செய்யும் போது பெரும்பாலானோர் செய்யும் தவறுகளில் ஒன்று குழந்தைக்கு தலையணை வைப்பது. குழந்தைக்கு இரண்டு வயதாகும் வரை தலையனை போட வேண்டிய அவசியமில்லை. அதற்கு மேல் உயரமான தலையணை போட வேண்டாம்.
தலையணை வைத்தால் குழந்தை நன்றாக தூங்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதுவே குழந்தைக்கு மூச்சுத்திணறலை உண்டாக்கும் என்று தெரியுமா? தலையணை வைப்பதால் குழந்தைக்கு இருக்கும் மெல்லிய நாஸ்ட்ரில்கள் அழுத்தம் பெற்று மூச்சுக்காற்று சென்று வெளிவருவதில் சிரமத்தை ஏற்படுத்தும். இதனால் குழந்தை திரும்பி படுக்கும் போது மூச்சுத்திணறலை உண்டாகும்.
மூச்சுத்திணறல் மட்டுமல்ல SIDS எனப்படுகின்ற Sudden Infant Death Syndrome ஏற்படக்கூட வாய்ப்புகள் உண்டு. சில நேரங்களில் தலையணையில் இருக்கும் பஞ்சு, பீட்ஸ் போன்றவை குழந்தைகள் முழுங்கிவிடக்கூடிய அபாயங்களும் இருக்கின்றன.

பெரும்பாலான தலையணைகள் பாலிஸ்டர் அல்லது பேப்ரிக் கொண்டு தயார் செய்யப்பட்டவையாகவே இருக்கின்றன. இது குழந்தைகளுக்கு சூட்டை ஏற்படுத்திடும். கைக்குழந்தைகள் பெரும்பாலும் தூங்கிய நிலையிலேயே இருப்பதால் இது உடலுக்கும் பல கோளாறுகளை ஏற்படுத்திடும். இதனால் வரும் அதிக வியர்வை குழந்தைக்கு பாதிப்பை உண்டாக்கும். சில நேரங்களில் தலையில் அதிக சூடு, உடலில் குளிர் என வேறுபட்ட டெம்பரேச்சர் இருப்பதாலும் பாதிப்பு உண்டாகும்.
குழந்தைகளுக்கான தலையனை மிகவும் மென்மையாக இருக்க வேண்டும் என்று தேடி வாங்கியிருப்போம். குழந்தைகளுக்கு மென்மையான தலையணை தேவையில்லை மாறாக தலையணை உயரமில்லாமல் தட்டையாக இருந்தாலே போதும். நீண்ட நேரம் தூங்கும் குழந்தை உயரமான தலையனையால் குழந்தையின் கழுத்து எலும்பு பாதிக்கப்படும். இதனை தவிர்க்க தலையணை போடாமல் இருப்பதே நல்லது. இரண்டு வயது வரை தலையணை வைப்பதை தவிர்க்கவும்.
தலையணை வைத்தால் குழந்தை நன்றாக தூங்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதுவே குழந்தைக்கு மூச்சுத்திணறலை உண்டாக்கும் என்று தெரியுமா? தலையணை வைப்பதால் குழந்தைக்கு இருக்கும் மெல்லிய நாஸ்ட்ரில்கள் அழுத்தம் பெற்று மூச்சுக்காற்று சென்று வெளிவருவதில் சிரமத்தை ஏற்படுத்தும். இதனால் குழந்தை திரும்பி படுக்கும் போது மூச்சுத்திணறலை உண்டாகும்.
மூச்சுத்திணறல் மட்டுமல்ல SIDS எனப்படுகின்ற Sudden Infant Death Syndrome ஏற்படக்கூட வாய்ப்புகள் உண்டு. சில நேரங்களில் தலையணையில் இருக்கும் பஞ்சு, பீட்ஸ் போன்றவை குழந்தைகள் முழுங்கிவிடக்கூடிய அபாயங்களும் இருக்கின்றன.

பெரும்பாலான தலையணைகள் பாலிஸ்டர் அல்லது பேப்ரிக் கொண்டு தயார் செய்யப்பட்டவையாகவே இருக்கின்றன. இது குழந்தைகளுக்கு சூட்டை ஏற்படுத்திடும். கைக்குழந்தைகள் பெரும்பாலும் தூங்கிய நிலையிலேயே இருப்பதால் இது உடலுக்கும் பல கோளாறுகளை ஏற்படுத்திடும். இதனால் வரும் அதிக வியர்வை குழந்தைக்கு பாதிப்பை உண்டாக்கும். சில நேரங்களில் தலையில் அதிக சூடு, உடலில் குளிர் என வேறுபட்ட டெம்பரேச்சர் இருப்பதாலும் பாதிப்பு உண்டாகும்.
குழந்தைகளுக்கான தலையனை மிகவும் மென்மையாக இருக்க வேண்டும் என்று தேடி வாங்கியிருப்போம். குழந்தைகளுக்கு மென்மையான தலையணை தேவையில்லை மாறாக தலையணை உயரமில்லாமல் தட்டையாக இருந்தாலே போதும். நீண்ட நேரம் தூங்கும் குழந்தை உயரமான தலையனையால் குழந்தையின் கழுத்து எலும்பு பாதிக்கப்படும். இதனை தவிர்க்க தலையணை போடாமல் இருப்பதே நல்லது. இரண்டு வயது வரை தலையணை வைப்பதை தவிர்க்கவும்.
பெற்றோர் குழந்தைகள் தவறைத் திருத்திக் கொள்ள மட்டும் தண்டிக்க வேண்டும். பெற்றோர் தம் கோபத்தை தீர்க்கும் விதமாகத் தண்டனை அமையக் கூடாது.
* குழந்தை தவறைத் திருத்திக் கொள்ள மட்டும் தண்டிக்க வேண்டும். பெற்றோர் தம் கோபத்தை தீர்க்கும் விதமாகத் தண்டனை அமையக் கூடாது.
* தண்டனையின் அளவு குற்றத்தைப் பொறுத்ததாக இருக்க வேண்டும். மாறாக பெற்றோரின் மன நிலையைப் பொறுத்ததாக இருக்கக் கூடாது.
* தண்டனை குழந்தை செய்த தவறைப் புரிய வைப்பதாக இருக்க வேண்டும். உடலைக் காயப்படுத்துவதாக அமையக் கூடாது.
* தண்டித்த உடனே பாசத்தைக் காட்டாது, குழந்தை தன தவறைப் புரிந்து கொண்டவுடன் அதிகப் பாசத்தைக்காட்டலாம்.
* தண்டனை கொடுத்தது குழந்தை செய்த தவறுக்குத்தான், அதன் மீதுள்ள வெறுப்பினால் அல்ல என்பதைக் குழந்தைக்குப் புரிய வைக்க வேண்டும்.
* குழந்தை தவறு செய்தால் உடனே தண்டிக்க வேண்டும். நீண்ட நேரம் கழித்துத் தண்டிப்பது முறையல்ல.
* குழந்தை தவறு செய்தால், தொடர்ந்து தண்டிக்க வேண்டும். ஒரு முறை தண்டிப்பதும், மறுமுறை ஊக்குவிப்பதாகவும் இருந்தால் குழந்தையின் தவறுகள் தொடரும்.
* குழந்தை மீது பாசம் உள்ளவர்கள் தண்டித்தால் உடனடி பலன் கிடைக்கும். தொடர்ந்து வெறுப்புக் காட்டி வருபவர் தண்டித்தால் எதிர் விளைவுகள் தான் உருவாகும்.
* குழந்தையைத் தண்டிக்கும் முன் செய்த தவறு பற்றியும் கொடுக்கப் போகும் தண்டனை பற்றியும் குழந்தையிடம் சொல்லி விட வேண்டும்.
* தண்டனைக்கு உடல் ரீதியான அணுகு முறையை விட மனரீதியான அணுகு முறையே சிறந்தது.
* தண்டனையின் அளவு குற்றத்தைப் பொறுத்ததாக இருக்க வேண்டும். மாறாக பெற்றோரின் மன நிலையைப் பொறுத்ததாக இருக்கக் கூடாது.
* தண்டனை குழந்தை செய்த தவறைப் புரிய வைப்பதாக இருக்க வேண்டும். உடலைக் காயப்படுத்துவதாக அமையக் கூடாது.
* தண்டித்த உடனே பாசத்தைக் காட்டாது, குழந்தை தன தவறைப் புரிந்து கொண்டவுடன் அதிகப் பாசத்தைக்காட்டலாம்.
* தண்டனை கொடுத்தது குழந்தை செய்த தவறுக்குத்தான், அதன் மீதுள்ள வெறுப்பினால் அல்ல என்பதைக் குழந்தைக்குப் புரிய வைக்க வேண்டும்.
* குழந்தை தவறு செய்தால் உடனே தண்டிக்க வேண்டும். நீண்ட நேரம் கழித்துத் தண்டிப்பது முறையல்ல.
* குழந்தை தவறு செய்தால், தொடர்ந்து தண்டிக்க வேண்டும். ஒரு முறை தண்டிப்பதும், மறுமுறை ஊக்குவிப்பதாகவும் இருந்தால் குழந்தையின் தவறுகள் தொடரும்.
* குழந்தை மீது பாசம் உள்ளவர்கள் தண்டித்தால் உடனடி பலன் கிடைக்கும். தொடர்ந்து வெறுப்புக் காட்டி வருபவர் தண்டித்தால் எதிர் விளைவுகள் தான் உருவாகும்.
* குழந்தையைத் தண்டிக்கும் முன் செய்த தவறு பற்றியும் கொடுக்கப் போகும் தண்டனை பற்றியும் குழந்தையிடம் சொல்லி விட வேண்டும்.
* தண்டனைக்கு உடல் ரீதியான அணுகு முறையை விட மனரீதியான அணுகு முறையே சிறந்தது.






