என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    காலையில் குளிர்ந்த நீரில் குளிப்பது தொடங்கி, விரதம், சுவாமியின் நாமத்தை ஜபிக்கறது, மாலையில் குளிர்ந்த நீரில் குளிப்பது ஐயப்பசாமிகளின் வீடுகளுக்கோ கோயில்களுக்கோ சென்று பூஜையில் கலந்துகொள்வதென ஐயப்பனின் சிந்தனையே 41 நாள்களும் மிகுந்திருக்கும்.
    1. ஸ்ரீ ஹரிஹர ஸுப்ரஜா சாஸ்தா பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்தே
    உத்திஷ்ட நரசார்தூல தாதவ்யம் தவ தர்சனம்
    உத்திஷ்டோத்திஷ்ட சபரி கிரீச உத்திஷ்ட சாந்திதாயக
    உத்திஷ்ட ஹரிஹர புத்ர த்ரைலோக்யம் மங்களம் குரு

    2. குரோ ஸமஸ்த ஜகதாம் மனக்லேச ஹாரே
    பக்தோ விஹாரினே மனோஹர திவ்ய மூர்த்தே
    ஹேஸ்வாமி பக்தஜனப்ரிய தான சீல
    ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

    3. தவஸுப்ரபாதம் அமித்ர ரக்ஷக
    பவது ப்ரஸன்ன மனன சுந்தர
    ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மைக்ய ஸ்வரூப
    ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

    4. அகஸ்த்யாதி மஹா ரிஷிய ஸமுபாஸ்ய ஸந்த்யாம்
    காந்தகிரி குஸுமானி மனோஹரானி
    ஆதாய பாதயுகம் அர்ச்சயிதும் ப்ரபன்னா
    ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

    5. வாஸவாதி தேவகணா ஸ்வர்காத் இஹைவ ஆக தா
    தர்சிதும் பவந்தம் மகர ஸங்கிரம காலே
    உச்சை சரண கோஷை பஹுதா ஸ்துவந்தி
    ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

    6. ச்ரத்தா பக்தி ஸமன்வித ஆதீத பூஜாத்ரவ் யானி
    த்வ்ய கந்தாதி ஆஜ்ய பூரித நாளிகே ரானி
    க்லிஷ்டமானவ வர்க்கேன நிஜவ்ரதம் கல்பயன்தவ பார்ச்வம் ஆகதம்
    ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

    7. திவ்ய பஸ்மாலங்க்ருத லலாட காத்ர நீலவஸ்த்ரதர
    ஸம்ஸார பேஷஜ துளஸீஹார ஸமாவ்ருத மார்க்க ரக்ஷக
    சிஷ்டாணாம் ரக்ஷகஸ் சைவ சரணகோஷஸந்துஷ்ட
    ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

    8. ஸோம சுந்தரேஸ்ய ப்ரேம்னா சக்த்யாம் சஹரிணாஸஹே
    நிக்ர ஹார்த்தம் தைத்யானாம் பாலரூபேண ஸமன்வித
    அவதார யாமாஸ பம்பாதீரே பந்தளாதிப ப்ரபூஜித
    ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

    9. ஸந்யாஸரூப சபரி யாத்ரா ஸர்வாப குணவர்ஜித
    ஸஸ்நேஹம் ஸோத் ஸாஹஞ்ச ஸாந்த்வனானி பணந்த
    ஸமஸ்த மங்கள ஸன்மார்க்கம் ஸதா அஸ்மா ஸுப்ரதர்சிதம்
    ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

    10. பவத்ஸகா சாத் ஈப்ஸித பலம் ஆப்னு வந்தி இஹ லோக மானவா
    தத் காரணா தேவ அர்தினா தவ பார்ஸ்வ மா க தா
    மாது பரிபாலனாதிவ பவிஷ்யேம ஸுகினோத்ருவம்
    ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவ ஸுப்ரபாதம்

    11. நிர்மானுஷ்யா ரண்யே த்வயி ஸ்தி தேஸதி
    திவாம் ஸமீப யிஷ்யும் அசக் தோ பூதோபீ
    தவநாமம் உக் சரன்னேவ இஹ ஆயாதே புனர்புன
    ஸ்ரீ சபரி பீடாச் ரம ஸ்தானி னே தவ ஸுப்ரபாதம்

    12. நிஷ்டாயாம் ஸ்திதோபி அஸ்மத் ஸ காச ஹ்ருதி ஸனனி வேஷ்ட
    நசாஸ்த்ரு பக்தானாம் அசுபம் வித்ய தே க்வ்சித்
    தீயந்தாம் யச கீர்த்திம் வித்யாம் புத்திம் ச்ரியம்பலம்
    ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவ ஸுப்ரபாதம்

    13. அப்ர மேய ப்ரபாபவ அணிமாதி ஸித்தித
    அக்ஞான நாசன ஸுவிக் ஞான தாயக
    ஆனந்த பூத அனாத நர்த
    ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவ ஸுப்ரபாதம்

    14. மானவாவதாரே மனு ஜாக் ருதிம் மணிகண்டா பிரதானம் ரமணிய தேஹீனம்
    தனுர் தரம் தைர்ய கீர்த்திம் பஜாமி நித்யம் புவனைக நாதம்
    தேவா வதாரே திசாந்த ரூபம் காந்த ச்ருங்க வாஸினம் கமனீய லோசனம்
    வாஸர வார்ச்சிதம் புராண புருஷம் பஜாமி நித்யம் பூதாதி நாதம்.

    15. பாண்ட் யேச ரத்னம் புவி பாலகம் பந்தனா திபம் பரமபுருஷம்
    சுசிஸ்மிதம் சுத்த தே ஹினம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்
    அத்புத காத்ரம் கிராதவ புஷம் ஆத்யந்த ரஹிதம் ஆபத் ஸகாயம்
    ஆனந்த ஸிந்தும் அரவிந்த லோசனம் பஜாமி நித்யம் த்ரிபுராரி புத்ரம்.

    16. ஏனதர் நாம பனதர் திவ்யை புஷ்பவனேன விரசிதை
    பக்தி பூர்வக் குதை ப்ரபாதச் லோகை
    தோஷாணி த்யக் தவா குணான் ஸ்வீகுருஷ்வன்
    பரீணாது பகவான் ஸ்ரீ ஹரிஹர புத்ர
    ஓம் நமோ கிரிசாய சிபி விஷ்டாய
    ஸ்ரீ ஹரிஹர புத்ராய ச ஓம் தத் ஸத்
    கார்த்திகை தீபத்திருநாளான இன்று மாலையில் விளக்கேற்றிய பிறகு, பூஜையறையில் சுவாமி படங்களுக்கு எதிரே அமர்ந்து கொண்டு, இந்த ஸ்லோகத்தைச் சொல்லவேண்டும்.
    கார்த்திகை தீபத்திருநாளான இன்று சிவ வழிபாடு செய்வோம். இன்று இல்லத்தையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி, வீடு முழுக்க தீபங்கள் ஏற்றி வைப்பது வழக்கம். தீபத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். அப்போது விளக்கேற்றிய பிறகு, பூஜையறையில் சுவாமி படங்களுக்கு எதிரே அமர்ந்து கொண்டு, இந்த ஸ்லோகத்தைச் சொல்லவேண்டும்.

    தீபம் ஜோதி பரப்பிரம்மம்
    தீபம் சர்வ தமோபஹம்
    தீபனே சாத்யத சர்வம்
    சந்த்யா தீப நமோஸ்துதே!

    இந்த ஸ்லோகத்தை 108 முறை ஜபிப்பது விசேஷம். இயலாதவர்கள் 11 முறை அல்லது 9 முறை அல்லது மூன்று முறை எனச் சொல்லலாம். கார்த்திகை தீபத் திருநாளைக் கொண்டாடுங்கள். சிவபார்வதியை தம்பதி சமேதராக வணங்குங்கள். வாழ்வில் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும். வீடு மனை யோகம் கிடைக்கும். இழந்ததையெல்லாம் கிடைக்கப் பெறுவீர்கள். இன்னல்களில் இருந்து விடுபடுவீர்கள் என்பது உறுதி.
    ஓம் சத்தியமான பொன்னு பதினெட்டாம்படி மேல் வாழும் வில்லாளி வீரன் வீர மணிகண்டன் காசி இராமேஸ்வரம், பாண்டி மலையாளம் அடக்கி ஆளும் ஓம்ஸ்ரீ ஹரி ஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சாமியே சரணம் ஐயப்பா!
    ஓம் கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா

    ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா

    ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா

    ஓம் அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா

    ஓம் ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா

    ஓம் ஆபத்தில் காப்பவனே சரணம் ஐயப்பா

    ஓம் இன்தமிழ்ச்சுவையே சரணம் ஐயப்பா

    ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா

    ஓம் ஈசனின் திருமகனே சரணம் ஐயப்பா

    ஓம் ஈடில்லாத் தெய்வமே சரணம் ஐயப்பா

    ஓம் உண்மைப்பரம் பொருளே சரணம் ஐயப்பா

    ஓம் உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா

    ஓம் ஊமைக்கருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா

    ஓம் ஊழ்வினைகள் அழிப்பவனே சரணம் ஐயப்பா

    ஓம் எளியோர்க்கு அருள்பவனே சரணம் ஐயப்பா

    ஓம் எங்கள் குலதெய்வமே சரணம் ஐயப்பா

    ஓம் ஏழைப்பங்காளனே சரணம் ஐயப்பா

    ஓம் ஏகாந்த முர்த்தியே சரணம் ஐயப்பா

    ஓம் ஐங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா

    ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா

    ஓம் ஒப்பில்லாத் திருமணியே சரணம் ஐயப்பா

    ஓம் ஒளிரும் திருவிளக்கே சரணம் ஐயப்பா

    ஓம் ஓங்காரப் பரம்பொருளே சரணம் ஐயப்பா

    ஓம் ஓதும் மறைபொருளே சரணம் ஐயப்பா

    ஓம் ஒளடதங்கள் அருள்பவனே சரணம் ஐயப்பா

    ஓம் சௌபாக்கியம் அளிப்பவனே சரணம் ஐயப்பா

    ஓம் கலியுகவரதனே சரணம் ஐயப்பா

    ஓம் சபரிமலை சாஸ்தாவே சரணம் ஐயப்பா

    ஓம் சிவன்மால் திருமகனே சரணம் ஐயப்பா

    ஓம் சைவ வைணவ ஐக்கியமே சரணம் ஐயப்பா

    ஓம் அச்சங்கோவில் அரசே சரணம் ஐயப்பா

    ஓம் ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா

    ஓம் குளத்துப்புழைப் பாலனே சரணம் ஐயப்பா

    ஓம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா

    ஓம் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா

    ஓம் வீரமணிகண்டனே சரணம் ஐயப்பா

    ஓம் உத்திரத்தில் உதித்தவனே சரணம் ஐயப்பா

    ஓம் உத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா

    ஓம் பம்பையிலே பிறந்தவனே சரணம் ஐயப்பா

    ஓம் பந்தள மாமணியே சரணம் ஐயப்பா

    ஓம் சகலகலை வல்லோனே சரணம் ஐயப்பா

    ஓம் சாந்தம்நிறை மெய்ப்பொருளே சரணம் ஐயப்பா

    ஓம் குருமகனின் குறைதீர்த்தவனே சரணம் ஐயப்பா

    ஓம் குருதட்சணை அளித்தவனே சரணம் ஐயப்பா

    ஓம் புலிப்பாலை கொணர்ந்தவனே சரணம்ஐயப்பா

    ஓம் வன்புலியின் வாகனனே சரணம்ஐயப்பா

    ஓம் தாயின் நோய் தீர்த்தவனே சரணம் ஐயப்பா

    ஓம் குருவின் குருவே சரணம் ஐயப்பா

    ஓம் வாபரின் தோழனே சரணம் ஐயப்பா

    ஓம் துளசிமணி மார்பனே சரணம் ஐயப்பா

    ஓம் தூயவுள்ளம் அளிப்பவனே சரணம் ஐயப்பா

    ஓம் இருமுடிப்பிரியனே சரணம் ஐயப்பா

    ஓம் எருமேலி தர்மசாஸ்தாவே சரணம்ஐயப்பா

    ஓம் நித்திய பிரம்மச்சாரியே சரணம் ஐயப்பா

    ஓம் நீலவஸ்திர தாரியே சரணம் ஐயப்பா

    ஓம் பேட்டை துள்ளும் பேரருளே சரணம் ஐயப்பா

    ஓம் பெரும் ஆணவத்தை அழிப்பவனே சரணம்ஐயப்பா

    ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம்ஐயப்பா

    ஓம் சாந்திதரும் பேரழகே சரணம் ஐயப்பா

    ஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா

    ஓம் பேதமையை ஒழிப்பவனே சரணம்ஐயப்பா

    ஓம் காளைகட்டி நிலையமே சரணம்ஐயப்பா

    ஓம் அதிர்வேட்டுப்பிரியனே சரணம்ஐயப்பா

    ஓம் அழுதமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

    ஓம் ஆனந்தமிகு பஜனைப்பிரியனே சரணம்ஐயப்பா

    ஓம் கல்லிடும் குன்றே சரணம் ஐயப்பா

    ஓம் உடும்பாறைக் கோட்டையே சரணம்ஐயப்பா

    ஓம் இஞ்சிப்பாறைக்கோட்டையே சரணம்ஐயப்பா

    ஓம் கரியிலந்தோடே சரணம் ஐயப்பா

    ஓம் கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

    ஓம் கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா

    ஓம் பெரியானை வட்டமே சரணம் ஐயப்பா

    ஓம் சிறியானை வட்டமே சரணம் ஐயப்பா

    ஓம் பம்பா நதி தீர்த்தமே சரணம் ஐயப்பா

    ஓம் பாவமெல்லாம் அழிப்பவனே சரணம் ஐயப்பா

    ஓம் திருவேணி சங்கமமே சரணம் ஐயப்பா

    ஓம் ஸ்ரீராமர் பாதமே சரணம் ஐயப்பா

    ஓம் சக்திபூஜைக் கொண்டவனே சரணம் ஐயப்பா

    ஓம் சபரிக்கு அருள் செய்தவனே சரணம் ஐயப்பா

    ஓம் தீபஜோதித் திருஒளியே சரணம் ஐயப்பா

    ஓம் தீராத நோய் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா

    ஓம் பம்பா விளக்கே சரணம் ஐயப்பா

    ஓம் பலவினைகள் ஒழிப்பவனே சரணம் ஐயப்பா

    ஓம் தென்புலத்தார் வழிபாடே சரணம் ஐயப்பா

    ஓம் திருபம்பையின் புண்ணியமே சரணம் ஐயப்பா

    ஓம் நீலிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

    ஓம் நிறைவுள்ளம் தருபவனே சரணம் ஐயப்பா

    ஓம் அப்பாச்சிமேடே சரணம் ஐயப்பா

    ஓம் இப்பாச்சிக்குழியே சரணம் ஐயப்பா

    ஓம் சபரி பீடமே சரணம் ஐயப்பா

    ஓம் சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா

    ஓம் உரல்குழி தீர்த்தமே சரணம் ஐயப்பா

    ஓம் கருப்பண்ண சாமியே சரணம் ஐயப்பா

    ஓம் கடுத்தசாமியே சரணம் ஐயப்பா

    ஓம் பதினெட்டாம் படியே சரணம் ஐயப்பா

    ஓம் பகவானின் சந்நிதியே சரணம் ஐயப்பா

    ஓம் பரவசப் பேருணர்வே சரணம் ஐயப்பா

    ஓம் பசுவின் நெய் அபிஷேகமே சரணம் ஐயப்பா

    ஓம் கற்பூரப்பிரியனே சரணம் ஐயப்பா

    ஓம் நாகராஜாப் பிரபுவே சரணம் ஐயப்பா

    ஓம் மாளிகைப் புறத்தம்மனே சரணம் ஐயப்பா

    ஓம் மஞ்சமாதா திருவருளே சரணம் ஐயப்பா

    ஓம் அக்கினிக் குண்டமே சரணம் ஐயப்பா

    ஓம் அலங்காரப்பிரியனே சரணம் ஐயப்பா

    ஓம் பஸ்மக் குளமே சரணம் ஐயப்பா

    ஓம் சற்குருநாதனே சரணம் ஐயப்பா

    ஓம் மகரஜோதியே சரணம் ஐயப்பா

    ஓம் மங்களமூர்த்தியே சரணம் ஐயப்பா

    ஓம் ஐயப்பா! நாங்கள் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்து காத்து ரட்சிக்க வேண்டும்.

    ஓம் சத்தியமான பொன்னு பதினெட்டாம்படி மேல் வாழும் வில்லாளி வீரன் வீர மணிகண்டன் காசி இராமேஸ்வரம், பாண்டி மலையாளம் அடக்கி ஆளும் ஓம்ஸ்ரீ ஹரி ஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சாமியே சரணம் ஐயப்பா!

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா

    ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி ஐயப்பனை வழிபாடு செய்து வரலாம்.
    இதம் ஆஜ்யம், கமமண்டல
    கால மகரகால பரஹமசியவ்ர
    தேன ஹரிஹர புத்ர தர்ம
    சாஸ்த்ர பிமஷதர்த்தம் பூரயாகி

    பொருள்:

    ஐயப்ப சுவாமியே! மாலை அணிந்து சபரிமலைக்கு செல்லும் சுவாமிமார்களான நாங்கள் அறிந்தும் அறியாமலும் ஏதாவது தவறு செய்திருந்தால், அதை மன்னித்து, பதினெட்டுப் படிகளையும் ஏறச்செய்து, நல்ல தரிசனத்தை அளிக்க வேண்டும்.
    இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமைகளில் பாராயணம் செய்தால் ராகு, கேது தோஷங்கள் நீங்கும். எல்லா செயல்களிலும் வெற்றி கிட்டும்.
    ஸிந்தூராருணமிந்துகாந்திவதனம் கேயூரஹாராதிபி:
    திவ்யைராபரணைர் விபூஷிததனும் ஸ்வர்காதி ஸௌக்யப்ரதம்
    அம்போஜாபயசக்திகுக்குடதரம் ரக்தாங்கராகோஜ்வலம்
    ஸுப்ரஹ்மண்யமுபாஸ்மஹே ப்ரணமதாம் பீதிப்ரணாசோத்யதம்
    சுப்ரமண்ய த்யானம்.

    பொதுப்பொருள்:

    சிந்தூரம் போல் சிவந்த வண்ணம் கொண்டவரே, சந்திரன் போன்ற பேரழகு முகத்தவரே, தோள்வளை, முக்தாஹாரம் முதலான திவ்யமான ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவரே, ஸ்வர்க்க போகம் முதலான சுகத்தை அளிப்பவரே, தாமரைப்பூ, அபயஹஸ்தம், சக்திவேல், சேவல் ஆகியவற்றைக் கரங்களில் தரித்தவரே, சிவந்த வாசனைப் பொடிகளால் நறுமணம் கமழ்பவரே, பக்தி செலுத்துவோரின் பயத்தைப் போக்குபவரே, சுப்ரமண்யரே நமஸ்காரம்.
    முழு முதற்கடவுளான விநாயகரை வழிபாடு செய்த பின்னர் எந்த காரியத்தை தொடங்கினாலும் அது நிச்சயமாக வெற்றி அடையும். இன்று சித்தி விநாயகருக்கு உகந்த ஸ்லோகத்தை அறிந்து கொள்ளலாம்.
    ஓம் நம: ஸித்திவிநாயகாய ஸர்வகார்ய கர்த்ரே
    ஸர்வ விக்ன ப்ரசமனாய ஸர்வராஜ்ய
    வச்யகரணாய, ஸர்வஜன ஸர்வ ஸ்த்ரீ புருஷ
    ஆகர்ஷணாய ஸ்ரீம் ஓம் ஸ்வாஹா

    பக்வசூத-பலபுஷ்ப-மஞ்ஜரீ: இக்ஷúதண்ட
    திலமோதகை: ஸஹ
    உத்வஹந் பரசுமஸ்து தேநம
    ஸ்ரீஸம்ருத்தியுத ஹேமபிங்களா

    குழந்தை வரம் மற்றும் கருவில் இருக்கும் குழந்தையை காக்கும் கடவுளாக விளங்கும் கர்ப்பரட்சாம்பிகை அன்னையின் 108 போற்றிகள் இந்த பதிவில் உள்ளது.
    1. ஓம் கருகாக்கும் நாயகியே போற்றி
    2. ஓம் கர்ப்ப ரக்ஷாம்பிகையே போற்றி
    3. ஓம் கருகாவூர் தேவியே போற்றி
    4. ஓம் கஷ்டங்கள் தீர்ப்பாய் போற்றி
    5. ஓம் ஈஸ்வரனின் இதயக்கனியே போற்றி
    6. ஓம் கருகாவூர் எந்தையின் கண்மணியே போற்றி
    7. ஓம் முல்லைவனநாதரின் சுந்தரியே போற்றி
    8. ஓம் மூவுலகும் காக்கும் அன்னையே போற்றி
    9. ஓம் மைந்தன் வேண்ட வரம் தருவாய் போற்றி
    10. ஓம் மாதர் மனம் மகிழ்ச் செய்வாய் போற்றி
    11. ஓம் எங்கும் தீராத குறை தீர்ப்பவளே போற்றி
    12. ஓம் எங்களை என்றும் காப்பவளே போற்றி
    13. ஓம் பிள்ளைக் கலி தீர்க்கும்பேரொளியே போற்றி
    14. ஓம் பிறவிப் பயன் தந்து அருள்வாய் போற்றி
    15. ஓம் பிண்டமாய் இருக்கும் கருவளர்ப்பாய் போற்றி

    16. ஓம் பிரம்மனின் படைப்புக்கு உயிர் தருவாய் போற்றி
    17. ஓம் முல்லைவனத்தில் அரசாள்வாய் போற்றி
    18. ஓம் நித்திருவர் தொழுத நித்திலமே போற்றி
    19. ஓம் நற்றவத்திற்கு அருளும் நாயகியே போற்றி
    20. ஓம் நாடிவரும் பக்தர் துயர்களைவாய் போற்றி
    21. ஓம் சர்வ வல்லமை பெற்ற ஈஸ்வரியே போற்றி
    22. ஓம் சர்வேஸ்வரனின் சரிபாதியே போற்றி
    23. ஓம் சங்கடங்கள் தீர்க்கும் சங்கரியே போற்றி
    24. ஓம் சார்ந்து நிற்போரை ரஷிப்பாய் போற்றி
    25. ஓம் பெண்கள் கருவறையை காப்பவளே போற்றி
    26. ஓம் பிரியமுடன் எங்களை வாழ்த்துவாய் போற்றி
    27. ஓம் பாதியில் கலையாத கரு தந்தாய் போற்றி
    28. ஓம் பாரினில் மகிழ்வான் வாழ்வளிப்பாய் போற்றி
    29. ஓம் நெய்யாலே படிமெழுக நீ மகிழ்வாய் போற்றி
    30. ஓம் மெய்யான பக்திக்கு உருகிடுவாய் போற்றி

    31. ஓம் தூய்மையுடன் வணங்குவோர் துயர்துடைப்பாய் போற்றி
    32. ஓம் வாய்மையுடன் வரம் தந்து வளம் தருவாய் போற்றி
    33. ஓம் வேதிகைக்கு அருள் சுரந்த அன்னையே போற்றி
    34. ஓம் வேண்டுபவர் அருகினில் வந்திடுவாய் போற்றி
    35. ஓம் வனிதையரின் வாழ்விற்கு வரமாளாய் போற்றி
    36. ஓம் வாழ்நாளில் வழிகாட்டும் வடிவழகே போற்றி
    37. ஓம் கலைந்த கர்ப்பம் உருவாக்கி உயிர் கொடுத்தாய் போற்றி
    38. ஓம் காமதேனு அழைத்து தாய்ப்பால் தந்தாய் போற்றி
    39. ஓம் தம்பதியாய் வருவோர்க்கு தஞ்சமளிப்பாய் போற்றி
    40. ஓம் தாயே உன் அருள் என்றும் தர வேண்டும் போற்றி
    41. ஓம் வலக்கரத்தால் அபயமளிக்கும் வனிதாமணியே போற்றி
    42. ஓம் இடக்கரத்தால் கர்ப்பத்தைக் காத்து நிற்ப்பாய் போற்றி
    43. ஓம் பத்ம பீடத்தில் அமர்ந்திருக்கும் பார்வதியே போற்றி
    44. ஓம் பிரசவத்தில் துணையிருக்கும் பெரிய நாயகியே போற்றி
    45. ஓம் கருகாமல் கருகாக்கும் கண்மணியே போற்றி

    46. ஓம் கர்ப்புரியில் வசிக்கும் கற்பகமே போற்றி
    47. ஓம் அகில உலகம் காக்கும் லோகநாயகியே போற்றி
    48. ஓம் அன்னை என்ற அருள் தந்து துயர்தீர்ப்பாய் போற்றி
    49. ஓம் மாதவிவநேச்வரரின் மாதரசியே போற்றி
    50. ஓம் முல்லைக் கொடி இடையே வந்த மெல்லியனே போற்றி
    51. ஓம் ஈஸ்வரனின் இதயத்தில் வீற்றிருப்பாய் போற்றி
    52. ஓம் ஈரேழு லோகத்தையும் என்றும் காப்பாய் போற்றி
    53. ஓம் கடம்பவன சுந்தரியே கற்புக்கரசியே போற்றி
    54. ஓம் காலம் பூராவும் கர்ப்பை காப்பவளே போற்றி
    55. ஓம் கல்லாக நின்று கருணைபொழிவாய் போற்றி
    56. ஓம் கதிரொளியே கனகமே கண்மணியே போற்றி
    57. ஓம் மலடி என்ற பெயர் நீக்கும் மங்களமே போற்றி
    58. ஓம் மங்கையர்க்கு அருகிலிருக்கும் மந்திரமே போற்றி
    59. ஓம் மருத்துவர்க்கும் சக்தி தரும் மாதவியே போற்றி
    60. ஓம் மறுமையிலும் உடனிருந்தும் மகிழ்விப்பாய் போற்றி

    61. ஓம் அசையும் கருவை அலுங்காமல் காப்பாய் போற்றி
    62. ஓம் அகிலத்தின் இயக்கத்தில் ஆனந்திப்பாய் போற்றி
    63. ஓம் அம்மா என்றுன்னை ஆராதிப்பேன் போற்றி
    64. ஓம் அம்மாவாய் என்னை ஆக்கினாய் போற்றி
    65. ஓம் மகேஸ்வரி உலகையே ஆள்கிறாய் போற்றி
    66. ஓம் மங்கலங்கள் பல தரும் மாதாவே போற்றி
    67. ஓம் ஸ்ரீ சக்ர வாசினி ஸ்திரீ தனமே போற்றி
    68. ஓம் சத்ரு பயம் நீங்க சரண்டைந்தேன் போற்றி
    69. ஓம் பிள்ளையில்லா தவிப்புக்கு பிரசாதமளிப்பாய் போற்றி
    70. ஓம் பிரபஞ்சத்தில் பெண்களை காப்பவளே போற்றி
    71. ஓம் பகவானின் ப்ரீதியே பரதேவதையே போற்றி
    72. ஓம் லிரத்யனாமாய் என்னுடன் இருப்பவளே போற்றி
    73. ஓம் உற்சாகமாய் தோன்றும் கர்ப்பம் காப்பாய் போற்றி
    74. ஓம் ஓழுங்காய் என் பிள்ளை பிறக்கச் செய்வாய் போற்றி
    75. ஓம் உன்னையன்றி யாருமில்லை சரணடைந்தேன் போற்றி

    76. ஓம் ஊரார் மெச்ச நான் வாழ வாழ்த்துவாய் போற்றி
    77. ஓம் காந்த கண்ணழகி முத்துப்போல் பல்லழகியே போற்றி
    78. ஓம் மின்னும் மூக்கழகி புன் முறுவற் சிரிப்பழகி போற்றி
    79. ஓம் சொர்ணமும், வைரமும் மின்ன ஜொலிக்கும் அழகியே போற்றி
    80. ஓம் ஒய்யார வடிவழகி அருள் மணக்கும் பேரழகியே போற்றி
    81. ஓம் துக்கங்கள் தீர்க்கும் துணையே போற்றி
    82. ஓம் துன்பமில்லாத வாழ்வருளும் தேவியே போற்றி
    83. ஓம் சங்கடம் தீர்க்கும் சங்கரியே போற்றி
    84. ஓம் சலனமில்லா வாழ்வருளும் சாம்பவியே போற்றி
    85. ஓம் மழலைச் செல்வம் தர மனமிரங்குவாய் போற்றி
    86. ஓம் மாதர்க்கு நீ என்றும் அரணாவாய் போற்றி
    87. ஓம் கதியென்று நம்பினவருக்கு கருணைசெய்வாய் போற்றி
    88. ஓம் கண்டவுடன் கஷ்டம் தீர்க்கும் கெளரியே போற்றி
    89. ஓம் நெஞ்சிற் கவலைகள் நீக்குவாய் போற்றி
    90. ஓம் செஞ்சுடர் குங்குமம் தரித்தாய் போற்றி

    91. ஓம் அஞ்சுமென் மனத்துக்கு ஆறுதலே போற்றி
    92. ஓம் தஞ்சம் நீயே தாமரையே போற்றி
    93. ஓம் சக்தியின் வடிவமே போற்றி
    94. ஓம் பக்தியுடன் தொழுவோரின் பரதேவி போற்றி
    95. ஓம் நித்தமுன் அருள்வேண்டி நமஸ்கரித்தேன் போற்றி
    96. ஓம் நீயிருக்க பூவுலகில் பயமில்லை போற்றி
    97. ஓம் மனமெல்லாம் நீ நிறைந்தாய் மகேஸ்வரி போற்றி
    98. ஓம் மங்கள வாழ்வுதந்து மகிழ்விப்பாய் போற்றி
    99. ஓம் மங்கையரின் கர்ப்பை காக்கின்றாய் போற்றி
    100. ஓம் கருகாவூர் அரசியே கருணாரசமே போற்றி
    101. ஓம் தலைமுறை தழைக்கச் செய்யும் தாயே போற்றி
    102. ஓம் குலம் வாழ மகருளும் மாதே போற்றி
    103. ஓம் சகலரும் உன் சக்தி சார்ந்தோம் போற்றி
    104. ஓம் சோர்வு நீங்க உன் பாதம் சரணடைந்தோம் போற்றி
    105. ஓம் ஜயம் வேண்டும் ஜயம் வேண்டும் போற்றி
    106. ஓம் ஜகத்தினில் எங்கள் சக்தி ஓங்க வேண்டும் போற்றி
    107. ஓம் ஜீவனை ஜனிக்க வைக்கும் ஜகன்மாதா போற்றி
    108. ஓம் ஜயமங்களம் ஜயமங்களம் ஜனனியே போற்றி…
    நமக்கு பதினாறு செல்வங்களையும் எளிதாக கொடுக்கக் கூடிய இந்த ஸ்ரீ கிருஷ்ணருடைய 108 போற்றியை தினமும் சொல்லி கிருஷ்ணரை வழிபாடு செய்யவும்.
    ஓம் அனந்த கிருஷ்ணா போற்றி
    ஓம் அரங்கமா நகருளானே போற்றி
    ஓம் அற்புத லீலா போற்றி
    ஓம் அச்சுதனே போற்றி
    ஓம் அமரேறே போற்றி
    ஓம் அரவிந்த லோசனா போற்றி
    ஓம் அர்ஜுனன் தோழா போற்றி
    ஓம் ஆதி மூலமே போற்றி
    ஓம் ஆயர் கொழுந்தே போற்றி
    ஓம் ஆபத்சகாயனே போற்றி
    ஓம் ஆலிலை பாலகா போற்றி
    ஓம் ஆழ்வார் நாயகா போற்றி
    ஓம் ஆண்டாள் பிரியனே போற்றி
    ஓம் ஆனையைக் காத்தாய் போற்றி
    ஓம் ஆனந்த மூர்த்தியே போற்றி
    ஓம் ஆனிரை காத்தவனே போற்றி
    ஓம் இமையோர் தலைவா போற்றி
    ஓம் உம்பர்க்கு அருள்வாய் போற்றி
    ஓம் உடுப்பி உறைபவனே போற்றி
    ஓம் உள்ளம் கவர் கள்வனே போற்றி
    ஓம் உலகம் உண்ட வாயா போற்றி
    ஓம் ஊழி முதல்வனே போற்றி
    ஓம் எங்கும் நிறைந்தாய் போற்றி
    ஓம் எட்டெழுத்து இறைவா போற்றி
    ஓம் எண் குணத்தானே போற்றி
    ஓம் எழில் ஞானச் சுடரே போற்றி
    ஓம் எழில் மிகுதேவா போற்றி
    ஓம் ஏழைப் பங்காளா போற்றி
    ஓம் ஒளிமணிவண்ணா போற்றி
    ஓம் ஒருத்தி மகனாய் பிறந்தாய் போற்றி
    ஓம் ஒருத்தி மகனாய் வளர்ந்தாய் போற்றி
    ஓம் கலியுக தெய்வமே போற்றி
    ஓம் கண்கண்ட தேவா போற்றி
    ஓம் கம்சனை அழித்தாய் போற்றி
    ஓம் கருட வாகனனே போற்றி
    ஓம் கல்யாண மூர்த்தி போற்றி
    ஓம் கல்மாரி காத்தாய் போற்றி
    ஓம் கமலக் கண்ணனே போற்றி
    ஓம் கஸ்துாரி திலகனே போற்றி
    ஓம் காளிங்க நர்த்தனா போற்றி
    ஓம் காயாம்பூ வண்ணனே போற்றி
    ஓம் கிரிதர கோபாலனே போற்றி
    ஓம் கீதையின் நாயகனே போற்றி
    ஓம் குசேலர் நண்பனே போற்றி
    ஓம் குருவாயூர் அப்பனே போற்றி
    ஓம் கோபியர் தலைவனே போற்றி
    ஓம் கோபி கிருஷ்ணனே போற்றி
    ஓம் கோவர்த்தனகிரி தாங்கியவனே போற்றி
    ஓம் கோபால கிருஷ்ணனே போற்றி
    ஓம் கோகுல பாலகனே போற்றி
    ஓம் கோவிந்த ராஜனே போற்றி
    ஓம் சகஸ்ர நாம பிரியனே போற்றி
    ஓம் சங்கு சக்கரத்தானே போற்றி
    ஓம் சந்தான கிருஷ்ணனே போற்றி
    ஓம் சகடாசுரனை அழித்தவனே போற்றி
    ஓம் சர்வ லோக ரட்சகனே போற்றி
    ஓம் சாந்த குணசீலனே போற்றி
    ஓம் சிந்தனைக்கினியவனே போற்றி
    ஓம் சீனிவாச மூர்த்தியே போற்றி
    ஓம் சுந்தரத் தோளுடையானே போற்றி
    ஓம் தாமரைக் கண்ணனே போற்றி
    ஓம் திருமகள் மணாளனே போற்றி
    ஓம் திருத்துழாய் மார்பனே போற்றி
    ஓம் துவாரகை மன்னனே போற்றி
    ஓம் தேவகி செல்வனே போற்றி
    ஓம் நந்த கோபாலனே போற்றி
    ஓம் நந்தகோபன் குமரனே போற்றி
    ஓம் நப்பின்னை மணாளனே போற்றி
    ஓம் நவநீத சோரனே போற்றி
    ஓம் நான்மறை பிரியனே போற்றி
    ஓம் நாராயண மூர்த்தியே போற்றி
    ஓம் பரந்தாமனே போற்றி
    ஓம் பக்த வத்சலனே போற்றி
    ஓம் பலராமர் சோதரனே போற்றி
    ஓம் பவள வாயனே போற்றி
    ஓம் பத்ம நாபனே போற்றி
    ஓம் பார்த்த சாரதியே போற்றி
    ஓம் பாற்கடல் கிடந்தாய் போற்றி
    ஓம் பாண்டவர் துாதனே போற்றி
    ஓம் பாண்டு ரங்கனே போற்றி
    ஓம் பாரதம் நிகழ்த்தினாய் போற்றி
    ஓம் பாஞ்சாலி சகோதரனே போற்றி
    ஓம் பாஞ்சஜன்ய சங்கினாய் போற்றி
    ஓம் பிருந்தாவன பிரியனே போற்றி
    ஓம் புண்ணிய மூர்த்தியே போற்றி
    ஓம் புருஷோத்தமனே போற்றி
    ஓம் பூபாரம் தீர்த்தவனே போற்றி
    ஓம் பூதனையை கொன்றவனே போற்றி
    ஓம் மதுசூதனனே போற்றி
    ஓம் மண்ணை உண்டவனே போற்றி
    ஓம் மயிற்பீலி அழகனே போற்றி
    ஓம் மாய கிருஷ்ணனே போற்றி
    ஓம் மாயா வினோதனே போற்றி
    ஓம் மீராவின் வாழ்வே போற்றி
    ஓம் முத்து கிருஷ்ணனே போற்றி
    ஓம் முழுமதி வதனா போற்றி
    ஓம் யமுனைத் துறைவனே போற்றி
    ஓம் யசோதை செய்தவமே போற்றி
    ஓம் யதுகுலத் திலகமே போற்றி
    ஓம் ராதையின் நாயகனே போற்றி
    ஓம் வசுதேவர் புதல்வா போற்றி
    ஓம் வெண்ணெய் திருடியவனே போற்றி
    ஓம் வெள்ளை மனத்தானே போற்றி
    ஓம் வேங்கட கிருஷ்ணனே போற்றி
    ஓம் வேதியர் வாழ்வே போற்றி
    ஓம் வேணு கோபாலனே போற்றி
    ஓம் வைகுண்ட வாசனே போற்றி
    ஓம் வையம் காப்பவனே போற்றி போற்றி!
    சூரசம்ஹாரம் மற்றும் செவ்வாய் கிழமைகளில் முருகனுக்கு உகந்த அருணகிரி நாதர் வழங்கிய இந்த ஸ்லோகத்தை சொல்லி முருகப்பெருமானை வழிபாடு செய்தால் துன்பங்கள் பறந்தோடும்.
    ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
    ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
    கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
    குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
    மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
    வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
    ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
    ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!

    - அருணகிரி நாதர்
    செவ்வாய்க்கு அதிபதி முருகக்கடவுள். அதனால்தான், முருகப்பெருமானை மனதார வணங்கி வழிபட்டால், செவ்வாய் உள்ளிட்ட தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.
    கந்தக்கடவுளை, மந்திரம் சொல்லியும் ஜபித்து வழிபடலாம். ஸ்கந்த குரு கவசத்தில் இந்த மந்திரம் குறித்து சிலாகித்து விவரிக்கப்பட்டுள்ளது.

    ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம்
    க்லெளம் ஸெளம் நமஹ

    எனும் மூலமந்திரத்தைச் சொல்லி, முருகப்பெருமானை வழிபடுவது மிகவும் சக்தி வாய்ந்த வழிபாடாக பெருமிதத்துடன் விவரிக்கிறார்கள் முருக பக்தர்கள்.
    தினமும் இந்த மந்திரத்தைச் சொல்லி வேலவனை வணங்குங்கள். தினமும் 54 முறை சொல்லி ஜபிக்கலாம். 108 முறை சொல்லி வணங்கலாம். இந்த மந்திரத்துடன் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து வழிபடுங்கள்.

    தினமும் கந்தசஷ்டிகவசம் சொல்லி, இந்த மந்திரத்தைச் சொல்லி, செந்நிற மலர்களால் அர்ச்சித்து வந்தால், சந்தான பாக்கியம் கிடைக்கப் பெறலாம். எதிர்ப்புகள் இல்லாமல் போகும். நல்ல உத்தியோகமும் தள்ளிப் போன பதவி உயர்வும் கிடைக்கப்பெறலாம்.
    குழந்தை வரம் வேண்டுபவர்கள், திருமணம் தடைப்படுபவர்கள் கந்த சஷ்டி விரதத்தை அனுஷ்டிக்கும் போது சொல்ல வேண்டிய திருப்புகழை பார்க்கலாம்.
    செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
    திருமாது கெர்ப்ப... முடலூறித்

    தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
    திரமாய ளித்த ... பொருளாகி

    மகவாவி னுச்சி விழியாந நத்தில்

    மலைநேர்பு யத்தி... லுறவாடி

    மடிமீத டுத்து விளையாடி நித்த
    மணிவாயின் முத்தி... தரவேணும்

    முகமாய மிட்ட குறமாதி னுக்கு
    முலைமேல ணைக்க... வருநீதா

    முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
    மொழியேயு ரைத்த... குருநாதா

    தகையாதெ னக்கு னடிகாண வைத்த
    தனியேர கத்தின்... முருகோனே

    தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
    சமர்வேலெ டுத்த... பெருமாளே.

    இந்த திருப்புகழ் பாடல் உண்டு. இந்த சுவாமி மலை பாராயணம் செய்யலாம்.
    ‘கந்த சஷ்டி கவசம்’ என்பது நம்மை தீமைகளில் இருந்து, துன்பங்களில் இருந்தும் காப்பாற்றுவதாகும். நாம் முருகப்பெருமானின் திருவடியை பற்றிக் கொண்டால், இல்லத்தில் கடன், வியாதி, எதிரிகள் பயம் விலகும்.
    காப்பு

    துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
    பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் – கதித்தோங்கும்
    நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
    சஷ்டி கவசம் தனை.

    அமர ரிடர்தீர அமரம் புரிந்த
    குமரனடி நெஞ்சே குறி.

    நூல்

    சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
    சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
    பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
    கீதம் பாடக் கிண்கிணி யாட

    மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்
    கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
    வரவர வேலா யுதனார் வருக
    வருக வருக மயிலோன் வருக

    இந்திரன் முதலா எண்டிசை போற்ற
    மந்திர வடிவேல் வருக வருக!
    வாசவன் மருகா வருக வருக
    நேசக் குறமகள் நினைவோன் வருக

    ஆறுமுகம் படைத்த ஐயா வருக
    நீறிடும் வேலவன் நித்தம் வருக
    சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
    சரவண பவனார் சடுதியில் வருக

    ரவண பவச ர ர ர ர ர ர ர
    ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி
    விநபவ சரவண வீரா நமோநம
    நிபவ சரவண நிறநிற நிறென

    வசுர வணப வருக வருக
    அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
    என்னை ஆளும் இளையோன் கையில்
    பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்

    பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க
    விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
    ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்
    உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும்

    கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்
    நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்
    சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
    குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக!

    ஆறு முகமும் அணிமுடி ஆறும்
    நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்
    பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்
    நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

    ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
    ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
    பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
    நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்

    முப்புரி நூலும் முத்தணி மார்பும்
    செப்பழ குடைய திருவயி றுந்தியும்
    துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
    நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்

    இருதொடை யழகும் இணைமுழந் தாளும்
    திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
    செககண செககண செககண செகண
    மொகமொக மொகமொக மொகமொக மொகென

    நகநக நகநக நகநக நகென
    டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
    ரரரர ரரரர ரரரர ரரர
    ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

    டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
    டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
    விந்து விந்து மயிலோன் விந்து
    முந்து முந்து முருகவேள் முந்து

    என்றனை யாளும் ஏரகச் செல்வ
    மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
    லாலா லாலா லாலா வேசமும்
    லீலா லீலா லீலா வினோ தனென்று

    உன் திருவடியை உறுதியென் றெண்ணும்
    எந்தலை வைத்துன் இணையடி காக்க
    என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
    பன்னிரு விழியால் பாலனைக் காக்க

    அடியேன் வதனம் அழகுவேல் காக்க
    பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
    கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
    விதிசெவி இரண்டும் வேலவர் காக்க

    நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க
    பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
    முப்பத் திருபல் முனைவேல் காக்க
    செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

    கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க
    என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
    மார்பை ரத்ன வடிவேல் காக்க
    சேரிள முலைமார் திருவேல் காக்க

    வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
    பிடரிக ளிடண்டும் பெருவேல் காக்க
    அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
    பழுபதி னாறும் பருவேல் காக்க

    வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
    சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
    நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
    ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க
    பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
    பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க

    கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
    வட்டக் குதத்தை வல்வேல் காக்க
    ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
    கைகளி ரண்டும் கருணைவேல் காக்க

    முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க
    பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க
    நாவில் சரஸ்வதி நற்றுணை யாக
    நாபிக் கமலம் நல்வேல் காக்க
    முப்பால் நாடியை முனைவேல் காக்க

    எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க
    அடியேன் வதனம் அசைவுள நேரம்
    கடுகவே வந்து கனகவேல் காக்க
    வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
    அரையிருள் தன்னில் அனையவேல் காக்க

    ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
    தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
    காக்க காக்க கனகவேல் காக்க
    நோக்க நோக்க நொடியில் நோக்க
    தாக்க தாக்க தடையறக் தாக்க

    பார்க்க பார்க்க பாவம் பொடிபட
    பில்லி சூனியம் பெரும்பகை அகல
    வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
    அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
    பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

    கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
    பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
    அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
    இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
    எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

    கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
    விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
    தண்டியக் காரரும் சண்டாளர் களும்
    என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட

    ஆனை யடியினில் அரும்பா வைகளும்
    பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
    நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
    பாவைக ளுடனே பலகல சத்துடன்

    மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
    ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
    காசும் பணமும் காவுடன் சோறும்
    ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

    அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
    மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
    காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
    அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

    வாய்விட் டலறி மதிகெட் டோட
    படியினில் முட்ட பாசக் கயிற்றால்
    கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
    கட்டி உருட்டு கைகால் முறிய

    கட்டு கட்டு கதறிடக் கட்டு
    முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
    செக்கு செக்கு செதில் செதிலாக
    சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு

    குத்து குத்து கூர்வடி வேலால்
    பற்று பற்று பகலவன் தணலெரி
    தணலெரி தணலெரி தணலது வாக
    விடு விடு வேலை வெகுண்டது வோடப்

    புலியும் நரியும் புன்னரி நாயும்
    எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட
    தேளும் பாம்பும் செய்யான் பூரான்
    கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்

    ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
    ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
    வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
    குலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு

    குடைச்சல் சிலந்தி குடல்விப் புருதி
    பக்கப் பிளவை படர்தொடை வாழை
    கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
    பற்குத் தரணை பருஅரை யாப்பும்

    எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
    நில்லா தோட நீஎனக் கருள்வாய்
    ஈரேழு உலகமும் எனக் குறவாக
    ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா

    மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்
    உன்னைத் துதிக்க உன் திரு நாமம்
    சரவண பவனே சைலொளி பவனே
    திரிபுர பவனே திகழொளி பவனே

    பரிபுர பவனே பவமொளி பவனே
    அரிதிரு மருகா அமரா வதியைக்
    காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்
    கந்தா குகனே கதிர்வே லவனே

    கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
    இடும்பனை யழித்த இனியவேல் முருகா
    தனிகா சலனே சங்கரன் புதல்வா
    கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
    பழநிப் பதிவாழ் பாலகு மாரா
    ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
    செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
    சமரா புரிவாழ் சண்முகத் தரசே

    காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
    என்நா இருக்க யானுனைப் பாட
    எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
    பாடினேன் ஆடினேன் பரவச மாக

    ஆடினேன் ஆடினேன் ஆவினன் பூதியை
    நேச முடன்யான் நெற்றியில் அணிய
    பாச வினைகள் பற்றது நீங்கி
    உன்பதம் பெறவே உன்னரு ளாக

    அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமும்
    மெத்தமெத் தாக வேலா யுதனார்
    சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
    வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க

    வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
    வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
    வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
    வாழ்க வாழ்க வாரணத் துவசம்

    வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க
    எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
    எத்தனை அடியேன் எத்தனை செயினும்
    பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்

    பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
    பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து
    மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
    தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்

    கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
    பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
    காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
    ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி

    நேசமுடன் ஒரு நினைவது வாகிக்
    கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்
    சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
    ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
    ஓதியே செபித்து உகந்துநீ றணிய
    அஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த்
    திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங்கு அருளுவர்
    மற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்

    நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
    நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்
    எந்த நாளுமீ ரட்டாய் வாழ்வார்
    கந்தர்கை வேலாம் கவசத் தடியை

    வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
    விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
    பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்
    நல்லோர் நினைவில் நடனம் புரியும்

    சர்வ சத்ரு சங்கா ரத்தடி
    அறிந்தென துள்ளம் அஷ்ட லட்சுமிகளில்
    வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
    சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
    இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த

    குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
    சின்னக் குழந்தை சேவடி போற்றி!
    எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
    மேவிய வடிவுறும் வேலவா போற்றி!

    தேவர்கள் சேனா பதியே போற்றி!
    குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
    திறமிகு திவ்விய தேகா போற்றி!
    இடும்பா யுதனே இடும்பா போற்றி!

    கடம்பா போற்றி கந்தா போற்றி!
    வெட்சி புனையும் வேளே போற்றி!
    உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!
    மயில்நட மிடுவோய் மலரடி சரணம்!

    சரணம் சரணம் சரவண பவஓம்
    சரணம் சரணம் சண்முகா சரணம்!

    (கந்த சஷ்டி கவசம் நிறைவுற்றது)
    ×