என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    தீபாவளி அன்று மகாலட்சுமி பூஜை செய்யும் போது மகாலட்சுமிக்கு உகந்த இந்த 108 போற்றியை சொல்லி வழிபாடு செய்து வந்தால் வீட்டில் செல்வம் பெருகும்.
    ஓம் அன்புலட்சுமியே போற்றி
    ஓம் அன்னலட்சுமியே போற்றி
    ஓம் அமிர்தலட்சுமியே போற்றி
    ஓம் அம்சலட்சுமியே போற்றி
    ஓம் அருள்லட்சுமியே போற்றி
    ஓம் அஷ்டலட்சுமியே போற்றி
    ஓம் அழகு லட்சுமியே போற்றி
    ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி
    ஓம் ஆகமலட்சுமியே போற்றி
    ஓம் அதிலட்சுமியே போற்றி
    ஓம் ஆத்மலட்சுமியே போற்றி
    ஓம் ஆளும் லட்சுமியே போற்றி
    ஓம் இஷ்டலட்சுமியே போற்றி
    ஓம் இதயலட்சுமியே போற்றி
    ஓம் இன்பலட்சுமியே போற்றி
    ஓம் ஈகைலட்சுமியே போற்றி
    ஓம் உலகலட்சுமியே போற்றி
    ஓம் உத்தம லட்சுமியே போற்றி
    ஓம் எளியலட்சுமியே போற்றி
    ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி
    ஓம் ஒளிலட்சுமியே போற்றி
    ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி
    ஓம் கஜலட்சுமியே போற்றி
    ஓம் கனகலட்சுமியே போற்றி
    ஓம் கம்பீர லட்சுமியே போற்றி
    ஓம் கனலட்சுமியே போற்றி
    ஓம் கிரகலட்சுமியே போற்றி
    ஓம் குண லட்சுமியே போற்றி
    ஓம் குங்குமலட்சுமியே போற்றி
    ஓம் குடும்பலட்சுமியே போற்றி
    ஓம் குலலட்சுமியே போற்றி
    ஓம் கேசவலட்சுமியே போற்றி
    ஓம் கோவிந்தலட்சுமியே போற்றி
    ஓம் கோமாதாலட்சுமியே போற்றி
    ஓம் சர்வலட்சுமியே போற்றி
    ஓம் சக்திலட்சுமியே போற்றி
    ஓம் சங்குலட்சுமியே போற்றி
    ஓம் சந்தான லட்சுமியே போற்றி
    ஓம் சாந்தலட்சுமியே போற்றி
    ஓம் சிங்கார லட்சுமியே போற்றி
    ஓம் சீலலட்சுமியே போற்றி
    ஓம் சீதாலட்சுமியே போற்றி
    ஓம் சுப்புலட்சுமி போற்றி
    ஓம் சுந்தரலட்சுமியே போற்றி
    ஓம் சூரியலட்சுமியே போற்றி
    ஓம் செல்வலட்சுமியே போற்றி
    ஓம் செந்தாமரை லட்சுமியே போற்றி
    ஓம் சொரூபலட்சுமியே போற்றி
    ஓம் சொர்ணலட்சுமியே போற்றி
    ஓம் சொரூபலட்சுமியே போற்றி
    ஓம் சவுந்தர்யலட்சுமியே போற்றி
    ஓம் ஞானலட்சுமியே போற்றி
    ஓம் தங்கலட்சுமியே போற்றி
    ஓம் தனலட்சுமியே போற்றி
    ஓம் தான்யலட்சுமியே போற்றி
    ஓம் திரிபுரலட்சுமியே போற்றி
    ஓம் திங்கள்முக லட்சுமியே போற்றி
    ஓம் திலகலட்சுமியே போற்றி
    ஓம் தீபலட்சுமியே போற்றி
    ஓம் துளசிலட்சுமியே போற்றி
    ஓம் துர்காலட்சுமியே போற்றி
    ஓம் தூயலட்சுமியே போற்றி
    ஓம் தெய்வலட்சுமியே போற்றி
    ஓம் தேவலட்சுமியே போற்றி
    ஓம் தைரியலட்சுமியே போற்றி
    ஓம் பங்கயலட்சுமியே போற்றி
    ஓம் பாக்கியலட்சுமியே போற்றி
    ஓம் பாற்கடல் லட்சுமியே போற்றி
    ஓம் பார்கவி லட்சுமியே போற்றி
    ஓம் புண்ணியலட்சுமியே போற்றி
    ஓம் பொருள்லட்சுமியே போற்றி
    ஓம் பொன்னிறலட்சுமியே போற்றி
    ஓம் போகலட்சுமியே போற்றி
    ஓம் மங்களலட்சுமியே போற்றி
    ஓம் மகாலட்சுமியே போற்றி
    ஓம் மாதவலட்சுமியே போற்றி
    ஓம் மாதாலட்சுமியே போற்றி
    ஓம் மாங்கல்ய லட்சுமியே போற்றி
    ஓம் மாசிலா லட்சுமியே போற்றி
    ஓம் முக்திலட்சுமியே போற்றி
    ஓம் மோனலட்சுமியே போற்றி
    ஓம் வரம்தரும் லட்சுமியே போற்றி
    ஓம் வரலட்சுமியே போற்றி
    ஒம் வாழும் லட்சுமியே போற்றி
    ஓம் விளக்குலட்சுமியே போற்றி
    ஓம் விஜயலட்சுமியே போற்றி
    ஓம் விஷ்ணுலட்சுமியே போற்றி
    ஓம் விண்புகழ் லட்சுமியே போற்றி
    ஓம் வீரலட்சுமியே போற்றி
    ஓம் வெற்றிலட்சுமியே போற்றி
    ஓம் வேங்கடலட்சுமியே போற்றி
    ஓம் வைரலட்சுமியே போற்றி
    ஓம் வைகுண்ட லட்சுமியே போற்றி
    ஓம் நரசிம்ம லட்சுமியே போற்றி
    ஓம் நலம் தரும் லட்சுமியே போற்றி
    ஓம் நாராயண லட்சுமியே போற்றி
    ஓம்  நாகலட்சுமியே போற்றி
    ஓம் நாத லட்சுமியே போற்றி
    ஓம் நித்திய லட்சுமியே போற்றி
    ஓம் நீங்காலட்சுமியே போற்றி
    ஓம் ரங்கலட்சுமியே போற்றி
    ஓம் ராமலட்சுமியே போற்றி
    ஓம் ராஜலெட்சுமியே போற்றி
    ஓம் ஜெயலட்சுமியே போற்றி
    ஓம் ஜீவலட்சுமியே போற்றி
    ஓம் ஜெகலட்சுமியே போற்றி
    ஓம் ஜோதிலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீலட்சுமியே போற்றி! போற்றி!!
    சரிந்த தொழில் மற்றும் வியாபாரம் மீண்டும் வளர்ச்சி பாதையில் செல்ல, இதுவரை இல்லாத லாபம் காண இந்த எளிய பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்யலாம்.
    இன்று உலகமே பெருந்தொற்றுக்கு உள்ளாகி தள்ளாடிக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக தொழில்துறையின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. கொரோனா பொது முடக்கங்கள் மெல்ல மெல்ல முடிவுக்கு வந்து, தொழில்நிறுவனங்களின் கதவுகள் மெல்ல திறக்கப்பட்டு வருகிறது. அரசும் இவர்களுக்கு அனைத்து வகையிலும் கை கொடுத்து வருகிறது.

    இது ஒருபுறம் இருந்தாலும், தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் தங்கள் தொழிலில் லாபம் காண போராடி கொண்டிருக்கின்றனர். கொடிக்கட்டி பறந்து கொண்டிருந்த வியாபாரம் கூட தற்போது கொரோனாவுக்கு பின்னர் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எந்த தொழிலும் லாபம் காண்பது அரிதாகி போனது. எந்த தொழில் செய்தாலும் முதலுக்கே மோசம் என்ற நிலை தான் உள்ளது.

    அன்றாட கூலிக்கே திண்டாட்டம் என்ற புலம்பல் ஆங்காங்கே ஒலித்த வண்ணம் இருக்கிறது. எப்போதும் மனிதன் தனக்கான பிரச்சினை எழும் போது தான் இறைவனின் திசை, அவனது கண்களுக்கு புலப்படும்.

    சரிந்த தொழில் மற்றும் வியாபாரம் மீண்டும் வளர்ச்சி பாதையில் செல்ல, இதுவரை இல்லாத லாபம் காண இந்த எளிய பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்யலாம். அதீத சக்தி வாய்ந்த ஸ்ரீ ஆஞ்சநேய பரிகாரம் இது. ஒரு நம்பிக்கை மற்றும் முயற்சியின் கீழ் இதை செய்து பயன்பெற முயற்சிக்கலாம்.

    விளக்கேற்றி வழிபாடு

    தொழில், வியாபார ஸ்தாபனங்களில் தினமும் விளக்கேற்றி வந்தால் தொழில் மற்றும் வியாபாரம் விருத்தி ஏற்படும். மேலும் பணத்தைப் பெருக்கும் புத்திசாலித்தனம் உண்டாகும்.

    வெள்ளிக்கிழமை மற்றும் பவுர்ணமி அன்று பச்சைக்கற்பூரம் ஏலக்காய் கலந்து காய்ச்சிய பால், வெற்றிலை, பாக்கு, பாயசம், கற்கண்டு, பழங்கள் வைத்து வழிபட விரைவான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

    விளக்கேற்றி "ஓம் ஸ்ரீம் மஹாலட்சுமி தாயே உன் முழு உருவோடும் சர்வ ஆபரணங்கள்பூண்ட கோலத்தோடும் இத்தீபத்தில் எழுந்தருளி எனக்கு வறுமை கடன் அற்ற வளமான வாழ்வு தந்தருள வேண்டும் என்று வேண்டி தீபத்தை வணங்கி தலை மற்றும் கண்களில் ஒற்றிக்கொள்ளவும். தீபம் அணைந்ததும் தீபத்திரியில் உள்ள கருக்கை நெற்றியில் இட்டுக் கொள்ளவும்.இது உயர்வான பலன்களைத் தரும். மற்ற நாட்களில் முடிந்ததை நைவேத்யம் செய்து வழிபட்டு வாருங்கள். அல்லது கல்கண்டு மட்டும் படைக்கலாம்.

    ‘ஸ்ரீ சுக்ல மகாசுக்லே நவாங்கே ஸ்ரீ மஹாலக்ஷ்மி நமோ நமஹ’ இம்மந்திரம் கடை மற்றும் வியாபார தலத்திற்கு நாலா திசைகளில் இருந்தும் அதிகமான ஜனங்களை ஈர்த்து வரச்செய்யும். தன வசீகரமும் ஜன வசீகரமும் பெருகும் என்பது ஐதீகமாக உள்ளது. எனவே இதையும் ஒரு முயற்சியாக மேற்கொண்டு தொழிலில் வெற்றிபெறலாம்.
    இந்து தர்மம் தழைக்கச் செய்த மாபெரும் ஞானி ஜகத்குரு ஆதிசங்கரர். எப்போதும் நன்மையே செய்பவர்; எப்போதும் இன்பத்தையே தருபவர். ஆதிசங்கர மானஸ பூஜா ஸ்லோகத்தை பார்க்கலாம்.
    ஸ்ரீ குருப்ரஹ்மா குருர் விஷ்ணு குருர் தேவோ மஹேச்வர:
    குரு ஸாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம:||

    அஜ்ஞான திமிராந்ந்தஸ்ய ஜ்ஞானாஞ்ஜன சலாகயா|
    சக்ஷுர் உன்மீலிதம் யேன தஸ்மை ஸ்ரீ குரவே நம:||

    ஆதிசங்கர மானஸ பூஜா ஸ்லோகம்.:—

    ஸத்யானந்த ஸ்வரூபாய போதைக ஸுக காரிணே|
    நமோ வேதாந்த வேத்யாய குரவே புத்தி ஸாக்ஷிணே ||

    நம: சாந்தாத்மனே துப்யம் நமோ குஹ்யதமாய ச |
    அசிந்த்யாயாப்ரமேயாய அனாதினிதனாய ச ||

    அமானினே மானதாய புண்ய ச்லோகாய மானினே |
    சிஷ்ய சிக்ஷண தக்ஷாய லோக ஸம்ஸ்திதி ஹேதவே||

    ஸ்வனுஷ்டித ஸ்வதர்மாய தர்ம மார்க ப்ரதர்சினே|
    சமாதி ஷட்காச்ரயாய ஸ்திதப்ரஜ்ஞாய தீமதே ||

    பக்த ஹார்த்த தமோபேத திவ்ய தேஜஸ்ஸ்வரூபிணே||

    - இதனைப் பாராயணம் செய்து தூப தீப, நேவேத்யம் செய்து, ஆரத்தி எடுத்து சுலபமாகப் பூஜை செய்யலாம். அவர் இயற்றிய தக்ஷிணாமூர்த்தி ஸ்லோகம் பாராயணம் செய்யலாம்.

    மௌனவ்யாக்யா
    பரப்ரஹ்ம தத்வம்
    யுவானாம் வர்ஷிஷ்டாந்தே

    - என ஆரம்பிக்கும் குரு ஸ்லோகம் ஒவ்வொரு ஸ்லோகம் முடிவிலும் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே என்று முடிவதால் மிக விசேஷமாகக் கருதப்படுகிறது. அதனைப் பாராயணம் செய்தும் குருவருள் பெறலாம். அகண்டமண்டலாகாரம் எனத் துவங்கும் குரு ஸ்லோகமும் சாலச் சிறந்தது. அவரவர் கால அவகாசத்திற்கு ஏற்ப ஏதெனும் ஒரு குருஸ்லோகம் தினமும் பாராயணம்  செய்வது அவசியம்.

    த்யானமூலம் குரோர் மூர்த்தி: பூஜாமூலம் குரோர் பதம்
    மந்த்ர மூலம் குரோர் வாக்யம் மோக்ஷ மூலம் குரோ: க்ருபா

    என்று சாஸ்த்ரங்களில் கூறியிருக்கபடியால் குருதான்
    அனைத்திற்கும் மூல காரணமாயிருப்பவர்.

    ஆதிசங்கரர் நம் ஷண்மத, ஸனாதன தர்மத்தின்
    காரண கர்த்தா! அவரை மனதில் இருத்தி பூஜை செய்து குருவருளைப் பெறுவோமாக.

    ஸ்ரீ குருப்யோ நமஹ !

    ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர ஜய குரு சங்கர
    சிவ குரு சங்கர சம்போ சங்கர சதாசிவ சங்கர…

    திவ்யதேசங்கள் அனைத்தையும், ஆழ்வார்கள் தங்கள் பாடல்களால் மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள். பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் என்பவர் பாடிய ஒரு பாடல், 108 திவ்ய தேசங்களும் எங்கிருக்கிறது என்ற கணக்கைச் சொல்வதாக இருக்கிறது.
    திருமால் வீற்றிருக்கும் 108 திருத்தலங்கள், ‘திவ்ய தேசங்கள்’ என்று பெருமைப்படுத்தப்படுகின்றன. ஒரு முறை வைகுண்டத்தில் இருந்த பெருமாளிடம், பிரம்மதேவன் ஒரு கேள்வியை முன்வைத்தார்.

    “பெருமாளே.. தற்போது தாங்கள் வீற்றிருக்கும் இந்த வைகுண்டம் தவிர, வேறு எங்கெல்லாம் நீர் இருக்கிறீர்?” என்றார், பிரம்மன்.

    அதற்கு “ஸதம்வோ அம்ப தாமானி ஸப்தச்ச” என்று பதிலளித்தார், திருமால். ‘ஸதம்’ என்றால் ‘நூறு’ என்றும், ‘ஸப்த’ என்றால் ‘ஏழு’ என்றும் பொருள். அதன்படி வைகுண்டம் தவிர மேலும் 107 இடங்களில் பெருமாள் வாசம் செய்கிறார். அவையே 108 திவ்ய தேசங்கள். இந்த திவ்யதேசங்கள் அனைத்தையும், ஆழ்வார்கள் தங்கள் பாடல்களால் மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள்.

    பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் என்பவர் பாடிய ஒரு பாடல், 108 திவ்ய தேசங்களும் எங்கிருக்கிறது என்ற கணக்கைச் சொல்வதாக இருக்கிறது.

    அந்தப் பாடல்:-

    ஈரிருபதாஞ்சோழம் ஈரொன்பதாம் பாண்டி

    ஓர் பதின்மூன்றாம் மலைநாடு; ஓரிரண்டாம் - சீர்நாடு

    ஆரோடீரெட்டுத் தொண்டை; அவ்வட நாடாறிரண்டு

    கூறு திருநாடொன்றாக் கொள்”

    பொருள்:- சோழ நாட்டில் 40 ஆலயங்கள், பாண்டிய நாட்டில் 18, மலைநாட்டில் 13, நடுநாட்டில் 2, தொண்டை நாட்டில் 22, வட நாட்டில் 12, திருநாடு என்னும் வைகுண்டம் ஒன்று. ஆக மொத்தம் 108.

    108 திவ்ய தேசங்களிலும், திருமால் நின்ற, கிடந்த, இருந்த என்ற மூன்று கோலங்களில் காட்சி தருகிறார். அதன்படி 60 திவ்ய தேசங்களில் நின்ற கோலத்திலும், அதற்கு அடுத்த படியாக 27 திருத்தலங்களில் கிடந்த (சயனம்) கோலத்திலும், 21 திருக்கோவில்களில் இருந்த (அமர்ந்தபடி) கோலத்திலும் அருள்பாலிக்கிறார்.

    மேற்கண்ட 108 திவ்ய தேசங்களில், 79 திவ்ய தேசங்கள் கிழக்கு திசை நோக்கியும், 19 திவ்ய தேசங்கள் மேற்கு திசை நோக்கியும், 7 திவ்யதேசங்கள் தெற்கு திசை நோக்கியும், 3 திவ்ய தேசங்கள் வடக்கு திசை நோக்கியும் அமைந்துள்ளது.
    தம்முடைய மகா சமாதிக்குப் பிறகும், தாம் அளவற்ற ஆற்றலுடன் தம் பக்தர்களுக்கு அருள்புரிவேன் என்று தாம் கொடுத்த உறுதிமொழியின்படி இன்றும் தம்மைச் சரணடைந்தவர்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.
    1.ஓம் ஸ்ரீ சாயி நாதாய நம:
    2.ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணாய நம:
    3.ஓம் ஸ்ரீ கிருஷ்ண ராம சிவ மாருத்யாதி ரூபாய நம:
    4.ஓம் சேஷ சாயினே நம:
    5.ஓம் கோதாவரீ தட ஷீரடி வாஸினே நம:
    6.ஓம் பக்த ஹ்ருதாலயாய நம:
    7.ஓம் ஸர்வ ஹ்ருத்வாஸினே நம:
    8.ஓம் பூதாவாஸாய நம:
    9.ஓம் பூத பவிஷ்யத் பாவ வர்ஜிதாய நம:
    10.ஓம் காலாதீதாய நம:
    11.ஓம் காலாய நம:
    12.ஓம் காலகாலாய நம:
    13.ஓம் காலதர்பதமனாய நம:
    14.ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:
    15.ஓம் அமர்த்யாய நம:
    16.ஓம் மர்த்யாபயப்ரதாய நம:
    17.ஓம் ஜீவாதாராய நம:
    18.ஓம் ஸர்வாதாராய நம:
    19.ஓம் பக்தாவன ஸமர்த்தாய நம:
    20.ஓம் பக்தாவன ப்ரதிக்ஞாய நம:
    21.ஓம் அன்னவஸ்த்ரதாய நம:
    22.ஓம் ஆரோக்யஷேமதாய நம:
    23.ஓம் தனமாங்கல்யப்ரதாய நம:
    24.ஓம் ருத்திஸித்திதாய நம:
    25.ஓம் புத்ர மித்ர களத்ர பந்துதாய நம:
    26.ஓம் யோகஷேமவஹாய நம:
    27.ஓம் ஆபத்பாந்தவாய நம:
    28.ஓம் மார்க்கபந்தவே நம:
    29.ஓம் புக்திமுக்திஸ்வர்காபவர்கதாய நம
    30.ஓம் ப்ரியாய நம:
    31.ஓம் ப்ரீதிவர்தனாய நம:
    32.ஓம் அந்தர்யாமினே நம:
    33.ஓம் ஸச்சிதாத்மனே நம:
    34.ஓம் ஆனந்தாய நம:
    35.ஓம் ஆனந்ததாய நம:
    36.ஓம் பரமேச்வராய நம:
    37.ஓம் பரப்ரம்ஹணே நம:
    38.ஓம் பரமாத்மனே நம:
    39.ஓம் ஞானஸ்வரூபிணே நம:
    40.ஓம் ஜகத பித்ரே நம:
    41.ஓம் பக்தனாம் மாத்ரு தாத்ரு பிதாமஹாய நம:
    42.ஓம் பக்தாபயப்ரதாய நம:
    43.ஓம் பக்த பாராதீனாய நம:
    44.ஓம் பக்தானுக்ரஹ காதராய நம:
    45.ஓம் சரணாகதவத்ஸலாய நம:
    46.ஓம் பக்தி சக்தி ப்ரதாய நம:
    47.ஓம் ஞான வைராக்யதாய நம:
    48.ஓம் ப்ரேமப்ரதாய நம:
    49.ஓம் ஸம்சய ஹ்ருதய தெளர்பல்ய பாபகர்ம வாஸனா க்ஷயகராய நம:
    50.ஓம் ஹ்ருதய க்ரந்திபேதகாய நம:
    51.ஓம் கர்மத்வம்சினே நம:
    52.ஓம் சுத்த ஸத்வஸ்திதாய நம:
    53.ஓம் குணாதீத குணாத்மனே நம:
    54.ஓம் அனந்த கல்யாண குணாய நம:
    55.ஓம் அமித பராக்ரமாய நம:
    56.ஓம் ஜயினே நம:
    57.ஓம் துர்தர்ஷாஷோப்யாய நம:
    58.ஓம் அபராஜிதாய நம:
    59.ஓம் த்ருலோகேக்ஷு அஸ்கந்திதகதயே நம:
    60.ஓம் அசக்யராஹிதாய நம:
    61.ஓம் ஸர்வசக்தி மூர்த்தயே நம:
    62.ஓம் ஸுரூபஸுந்தராய நம:
    63.ஓம் ஸுலோசனாய நம:
    64.ஓம் பஹுரூப விஸ்வ மூர்த்தயே நம:
    65.ஓம் அரூபாவ்யக்தாய நம:
    66.ஓம் அசிந்த்யாய நம:
    67.ஓம் ஸுக்ஷ்மாய நம:
    68.ஓம் ஸர்வாந்தர்யாமினே நம:
    69.ஓம் மனோவாக தீதாய நம:
    70.ஓம் ப்ரேமமூர்த்தயே நம:
    71.ஓம் ஸுலபதுர்லபாய நம:
    72.ஓம் அஸஹாய ஸஹாயாய நம:
    73.ஓம் அநாதநாத தீனபந்தவே நம:
    74.ஓம் ஸர்வபாரப்ருதே நம:
    75.ஓம் அகர்மானேக கர்மஸுகர்மினே நம:
    76.ஓம் புண்யச்ரவண கீர்த்தனாய நம:
    77.ஓம் தீர்த்தாய நம:
    78.ஓம் வாஸுதேவாய நம:
    79.ஓம் ஸதாம் கதயே நம:
    80.ஓம் ஸத்பராயணாய நம:
    81.ஓம் லோகநாதாய நம:
    82.ஓம் பாவனானகாய நம:
    83.ஓம் அம்ருதாம்சவே நம:
    84.ஓம் பாஸ்கரப்ரபாய நம:
    85.ஓம் ப்ரஹ்மசர்யதப: சர்யாதிஸுவ்ரதாய நம:
    86.ஓம் சத்ய தர்ம பராயணாய நம:
    87.ஓம் ஸித்தேச்வராய நம:
    88.ஓம் ஸித்த ஸங்கல்பாய நம:
    89.ஓம் யோகேச்வராய நம:
    90.ஓம் பகவதே நம:
    91.ஓம் பக்தவத்ஸலாய நம:
    92.ஓம் ஸத்புருஷாய நம:
    93.ஓம் புருஷோத்தமாய நம:
    94.ஓம் ஸத்ய தத்வபோதகாய நம:
    95.ஓம் காமாதி ஸர்வ அக்ஞானத்வம்ஸினே நம:
    96.ஓம் அபேதா நந்தானுபவப்ரதாய நம:
    97.ஓம் ஸமஸர்வமதஸம்மதாய நம:
    98.ஓம் தஷிணாமூர்த்தயே நம:
    99.ஓம் வேங்கடேசரமணாய நம:
    100.ஓம் அத்புதானந்தசர்யாய நம:
    101.ஓம் ப்ரபன்னார்த்திஹராய நம:
    102.ஓம் ஸம்ஸாரஸர்வதுக்கக்ஷயகராய நம:
    103.ஓம் ஸர்வவித்ஸர்வதோமுகாய நம:
    104.ஓம் ஸர்வாந்தர்பஹிஸ்திதாய நம:
    105.ஓம் ஸர்வ மங்களகராய நம:
    106.ஓம் ஸர்வாபீஷ்டப்ரதாய நம:
    107.ஓம் ஸமரஸஸன்மார்கஸ்தாபனாய நம:
    108.ஓம் ஸ்ரீ ஸமர்த்தஸத்குரு ஸாயிநாதாய நம:
    மங்களம் ****** மங்களம் ****** மங்களம்
    கலியுகத்தில் கேட்டவருக்கு கேட்ட வரத்தை உடனே அளிக்கும் வள்ளலாகத் திகழும் சீரடி பாபாவை ஒரு முறை நினைத்தாலே போதும், ஒன்பது தலைமுறையில் செய்த பாவங்கள் தீரும்.
    ஷீர்டியே உலகின் அழகிய புனிதத்தலம்
    ஸ்ரீ சாயிபாபா அவதரித்து அருளிய தலம்
    கல்பதருவினும் பேறு பெற்ற வேப்ப மரம்
    அதன் மடியில் அமர்ந்தாரே இறைவனின் வரம்
    பதினாறு வயதே நிரம்பிய பாலகனாம்
    பல சூரிய சந்திரர் சேர்ந்த ஒளிப்பிழம்பாம்
    ஞானம் அழகு நிறைந்த ஆண்டவர் மகனாம்
    நீர் அமர்ந்ததும் கசப்பு வேம்பும் இனிப்பானதாம்
    திருவே அமர்ந்தாள் உன் நெற்றியில் திலகமாய்
    தேஜஸ், ஸௌம்யம் நிறைந்த உருவமாய்
    வெய்யில்,மழை பாராமல் தவமும் செய்தாய்
    பாலகன் ரூபத்திலே உலகில் தோன்றினாய்
    உன் தாய் தந்தை குலம் யாரும் அறியாரே
    உலகம் என் வீடு,இறை என் தாய் என்றாயே
    சிலர் மொழிந்தனர் நீ சிவனின் ரூபம்
    சிலர் அறிந்தனர் நீ விஷ்னுவின் ரூபம்
    தத்தாத்ரேய ரூபமோ? ஸ்ரீ ராமனே நீ தானா?
    பீர் அவுலியாவோ? பரப்ரஹ்மமே நீ தானோ?
    எந்த ரூபமானாலும் நீயே எங்கள் தெய்வமானாய்
    பக்தனின் இஷ்ட ரூபத்திலே தரிசனமும் அளிப்பாய்
    எத்தனை எத்தனை லீலைகள் புரிந்தாய்
    எண்ணற்ற ஏழைகளின் துன்பங்கள் துடைத்தாய்
    தெவிட்டாத இன்பமன்றோ உந்தன் திருக்கதை தான்
    கேட்பவரும் திளைப்பரே கானில் தேனருவி தான்
    மத, ஜாதி பேதங்களால் அழியும் மானிடம்
    உய்வுற உறவுப்பாலம் அமைத்த மஹாஅவதாரம்
    சாந்த் படீலின் குதிரையை தேடித் தந்தாய்
    திருமண வீட்டாரோடு ஷீர்டியை அடைந்தாய்
    ஆன்மீகத் தேடலில் அனைவரையும் அழைத்தாய்
    அருளோடு சேர்த்து அற்புத அனுபவங்களும் தந்தாய்
    மசூதித்தாயாம் துவாரகாமாயி!அதில் வசித்து,
    பக்தர்களை ரட்சிக்கும் நீஅன்னையன்றோ? சாயி
    திருகரமளித்த உதி அருமருந்தாகும் - உன்
    திருஅருட்பார்வை என் துயரினை போக்கும்
    அருள் துனியில் எங்கள் பாபங்கள் தூசாகும்-உன்
    திருப்பாதங்கள் தொட்ட ஷீர்டி சொர்க்கமாகும்
    அடைக்கலம் புகுந்தோரை அன்புடன் ரட்சித்தாயே-உன்
    அற்புத லீலைகள் அமுதே!அமுதினும் இனிய பேரமுதே
    நீருற்றி அகல் தீபங்கள் எரியச் செய்தாய்
    ஒளிஜோதியிலே அஞ்ஞான இருள் களைந்தாய்
    பக்தனின் கண்கள் நீர் சொறிந்தாலே அக்கணமே,
    துயர் துடைக்க அவன் அருகில் நிற்பாயே
    தாமு அண்ணா ஜாதகத்தில் ஒரு கோளாறு
    வருந்தி அழுதார் இல்லையே புத்திரப்பேறு
    உன் திருவடி அடைந்தார்க்கு இல்லை ஜாதகமே
    அளித்தாய் மாங்கனிகள்அடைந்தார் தாமு சந்தானமே
    விதியையும் மீறுமே உன் அற்புத அருளுமே
    நம்பிக்கையுடன் பக்தன் உன்னை பணிந்திட்டாலே
    சிவபக்தன் மேகாவையும் நீ சினந்தாயே,
    உன்னை முஸ்லிம் என்று பேதம் கொண்டதாலே
    பக்தருக்குள்ளே இல்லை ஏற்றத்தாழ்வே
    மேகாவுக்கும் நீ இரக்கம் காட்டினாயே
    உள்ளேயே அவனை நீ உருமாற்றினாயே
    உன்னில் சிவம் கண்டு அவன் இறை அடைந்தானே
    கங்கை, யமுனை நீர் உன் பாதத்தில் சொறிந்தாயே
    தாஸ்கனுவின் ப்ரயாகை தாகம் தணித்தாயே
    மசூதியில் அமர்ந்து நீ அளித்தாய் ஞானோபதேசம்
    பசியுற்றோருக்கு செய்வீர் அன்னதானம்
    ஏழைகள் மேல் இரக்கம் கொள் என்றாயே
    ஷீர்டியின் கல்,புல் கூட பேறு பெற்றதே
    உன் திருவடி முத்தமிட்டு இறைவனை அடைந்ததே
    அப்புல்லும், கல்லுமாய் நானிருந்தாலே-உன்
    திருவடியை என் சிரஸேந்தி களித்திறுப்பேனே
    எத்தனை தவம் செய்தேன் நான் அறியேனே
    இக்கணம் உனைத்தொழும் பேறு பெற்றேனே
    இறையருள் பெற்ற மனிதரால் மட்டுமே
    உன்னை பூஜிக்கும் பாக்கியம் கிட்டிடுமே
    உன் அருட்பார்வை என்மேல் பட்டாலே
    என் தீவினை போய் ஆனந்தம் நிறைந்திடுமே
    உன் மென்கரங்கள் என் சிரஸின் மேல் வைப்பாயே
    உத்தமன் நினைத் தொழுகின்றோம் செவிமடுப்பாயே
    உன் பாதாரவிந்தம் தொட்ட தூசு ஒன்று போதுமே,
    என் கண்களிலே ஒற்றிக் கொண்டாடிடுவேனே
    உன் பதகமலத் தீர்த்தம் என் நாவில் பட்டாலே
    நான் பெற்ற இன்பத்தை பாடிக் களித்திடுவேனே
    என் கனவினில் என்னை ஆட்கொள்வாயே
    நிஜந்தனிலே நிதமும் என் துனை நிற்பாயே
    அணுவிலும் அணுவானாய்,அகில அண்டமும் நீயானாய்
    எங்கெங்கு நோக்கிலும் நீயே நிற்கின்றாய்
    என் அன்னை நீ! தந்தை நீ! இவ்வுலகையே!
    மூவடியாய் அளந்திட்ட திருமாலும் நீ
    அகிலம் உன் இல்லம்,அண்ட சராசரம் உன் ரூபம்
    அடியார்க்கு அருள அல்லவா நீ எடுத்தாய் அவதாரம்
    குசேலனையும் குபேரனாக்கும் சக்தி இருந்துமே.
    உன் உணவை பிச்சை எடுத்து உண்டாய்
    சாயி நாமமே போக்கிடும் பல துக்கங்கள்
    சாயி நாமமே அளித்திடும் பரம சுகங்கள்
    சாயி நாமத்தினால் வியாழன் விரதம் பூண்டாலே
    சாயி நாமம் நல்கும் பல நன்மைகளுமே
    நோயுற்றோர் பிணி வேதனை நீங்கிடுமே
    துயருற்றோர் துன்பங்கள் தொலைந்திடுமே
    சாயி கிருபையால் தரித்திரம் மறைந்திடுமே
    சாயி விரதத்தால் சுகம் , சாந்தி வீட்டில் நிலவிடுமே
    சாயி நாமம் தினமும் ஜபித்தாலுமே,
    ஒன்பது வியாழன் சாயி விரதம் பூண்டாலுமே,
    சாயி வருவார்,இரங்குவார் நம்மிடமே,
    துன்பம் களைவார்,தருவார் ஆனந்தமே,
    சாயியே சாச்வதம்!சாயியே சத்தியம்!
    இதை நம்புபவன் வாழ்விலில்லை பெருந்துன்பம்
    சாயியே பரமேஸ்வரன்,சாயியே பரமாத்மன்
    சாயியே பராசக்திரூபன்,சாயியே பரந்தாமன்
    நம்பிக்கை பக்தி ,பொறுமையுடன் சரணடைவோம்
    சாயி அருளால் பரப்ரஹ்மானந்தம் அடைவோம்
    ஸ்ரீ சாயிநாதருக்கே அர்ப்பணம்.
    தத்தாத்ரேயர், பிரம்மன், திருமால், சிவன் மூவரையும் உள்ளடக்கிய இந்துக் கடவுள் ஆவார். இவரை திரிமூர்த்தி எனவும் அழைப்பர். இவருக்கு உகந்த ஸ்லோகத்தை பார்க்கலாம்.
    ஜய யோகீஸ்வர தத்த தயாளா,
    ஜகத்தினை ஆக்கிய மூலாதாரா
    அத்ரி அநுசூயா கருவியாய் கொண்டாய்,
    ஜக நன்மைக்காகவே அவதரித்தாய்
    பிரம்மா, ஹரிஹரரின் அவதாரம்,
    சரணாகதர்களின் பிரணாதாரம்
    அந்தர்யாமி,சத்சித் ஆனந்தன்,
    பிரசன்ன சத்குரு இருதோளுடையன்
    அன்னபூரணி யை தோளில் வைத்தாய்,
    சாந்தி கமண்டலம் கரமேந்தினாய்
    நாலு,ஆறு பல தோளுடையான்,
    அளவிலா ஆற்றலுடைய புஜமுடையான்
    நின்சரண் புகுந்தேன் அறியாமூடன்,
    வாரும் திகம்பரா ! போகுதே பிராணன்
    அர்ஜுனனின் தவக்குரல் கேட்டு கிருதயுகத்திலே,
    அக்கணமே பிரசன்னம் ஆனாயே
    அளவிலா ஆனந்தம்.சித்தி அளித்தாய்,
    முடிவில் பரம பத முக்தியும் அளித்தாய்
    இன்று எனக்கருள ஏன் இத்தனை தாமதம்?
    உனையன்றி எனக்கில்லை புகலிடம்
    விஷ்ணுசர்மா பக்திக்கிரங்கினாய்,
    அவனளித்த சிரார்த்த உணவு அருந்தி ரட்சித்தாய்
    ஜம்ப அசுரனால் தொல்லை தேவருக்கே,
    தயை புரிந்தாய் நீ அமரருக்கே
    மாயை பரப்பி திதிசுதனை,
    இந்திரன் கரத்தால் வதம் செய்வித்தாய்
    அளவிலா லீலைகள் புரிந்தாயே,
    அவற்றை வர்ணிக்க இயலுமோ சிவரூபனே
    நொடியில் ஆயுவின் புத்திர சோகம் போக்கினாய்,
    மகனை உயிர்ப்பித்து பற்றற்றவனாக்கினாய்
    சாத்யதேவ,யது,பிரஹ்லாத,பரசுராமருக்கே,
    போதித்தாய் நீ ஞானோபதேசமே
    அளவிலா ஆருள் ஆற்றல் உடையோனே,
    என் குரல் கேட்க ஏன் மறுத்தாயே
    உன் தரிசனம் காணாமல் நானுமே,
    இறுதி காணேன்,வாரீர் இக்கணமே
    த்விஜஸ்திரீயின் அன்பை மெச்சினாயே,
    பிறந்தாய் நீ அவளின் மகனாகவே
    ஸ்மர்த்துகாமி, கலியுக கிருபாளனே,
    படிப்பறியா வண்ணானை உய்வித்தாயே
    வயிற்று வலியில் துடித்த அந்தணனை காத்தாயே
    வல்லபேசனை கயவ காலனிடமிருந்து காத்தாயே
    என்னைப்பற்றிய அக்கறை உனக்கில்லையே,
    என்னை நினைப்பாய் ஒரு முறையேனுமே
    தழைக்கச் செய்தாயே உலர்ந்த பட்டமரம்,
    என்னிடம் ஏன் இத்தனை உதாசீனம்
    முதிய மலட்டு பெண்ணின் கனவினையே,
    சேய் அளித்து பூர்த்தி செய்தாயே
    அந்தனின் வெண்குஷ்டம் நீக்கினாயே,
    அவன் ஆசைகளை நிறைவு செய்தாயே
    மலட்டெருமையை பால் சொறிய வைத்தாய்,
    அந்தணனின் தரித்திரம் போக்கினாய்
    அவரைக்காய் பிச்சையாய் ஏற்றாய்,
    அந்தணனுக்கு தங்கக்குடம் அளித்தாய்
    பதி இறந்த பத்தினியின் துயர் துடைத்தாய்,
    தத்தன் உன்னருளால் உயிர்த்தெழுந்தான்
    கொடூர முன்வினையைப் போக்கினாய்,
    கங்காதரனின் மகனை உயிர்ப்பித்தாய்
    மதோன்மத் புலையனிடம் தோற்றனரே,
    பக்த திரிவிக்ரமரை ரட்சித்தாயே
    பக்த தந்துக் தன்னிஷ்டப்படியே,
    ஸ்ரீ சைலம் அடைந்தான் இமைப்பொழுதிலே
    ஒரே நேரத்தில் எடுத்தாய் எட்டு ரூபங்களே,
    உருவமற்றும் பலரூபமுடையவனே
    தரிசனம் பெற்று தன்யமானரே,
    ஆனந்தம் அடைந்த உன் பக்தருமே
    யவனராஜன் வேதனை நீக்கினாயே,
    ஜாதிமத பேதம் உனக்கில்லையே
    ராம கிருஷ்ண அவதாரங்களிலே,
    நீ செய்த லீலைகள் கணக்கில்லையே
    கல்,கணிகை,வேடம்,பசு,பட்சியுமே.
    உன்னருளால் முக்தி அடைந்தனரே
    நாமம் நவிலும் வேஷதாரியும் உய்வானே,
    உன் நாமம் நல்காத நன்மையில்லையே
    தீவினை,பிணி துன்பம் தொலையுமே,
    சிவன் உன் நாமம் ஸ்மரித்தாலே
    பில்லி, வசிய தந்திரம் இம்சிக்காதே,
    ஸ்மரணையே மோட்சம் தந்திடுமே
    பூத,சூனிய,ஜந்து அசுரர்,ஓடிடுமே,
    தத்தர் குண மஹிமை கேட்டதுமே
    தத்தர் புகழ் பாடும் தத்த பவானியையே,
    தூபமேற்றி தினம் பாடுபவனுமே
    இரு லோகத்திலும் நன்மை பெறுவானே,
    சோகம் என்பதை அறியானே
    யோக சித்தி அவன் அடிமையாகுமே,
    துக்க தரித்திரம் தொலைந்திடுமே
    ஐம்பத்திரு வியாழக்கிழமை நியமமுடனே,
    தத்த பவானி அன்புடன் படித்தாலே
    நிதமும் பக்தியுடன் படித்தாலுமே,
    நெருங்கான் அருகில் காலனுமே
    அநேக ரூபமிருந்தும் இறை ஒன்றே,
    தத்துவமறிந்தவனை மாயை அண்டாதே
    ஆயிரம் பெயரிருந்தும் நீ ஒருவனே,
    தத்த திகம்பரா நீ தான் இறைவனே
    வந்தனம் உனை செய்வேன் பலமுறை நானுமே,
    வேதம் பிறந்தது உன் மூச்சினிலே
    சேஷனும் வர்ணித்து களைப்பானே,
    பல ஜன்மமெடுத்த பாமரன் எப்படி வர்ணிப்பேனே
    நாமம் பாடிய அனுபவம் திருப்தி தந்திடுமே,
    உனை அறியாமூடன் வீழ்ந்திடுவானே
    தவசி தத்வமசிஅவன் இறைவனே,
    பாடு மனமே ஜயஜயஸ்ரீ குருதேவனே
    பாவனி - ஐம்பத்திரு பாட்டு வரிகள்
    ஸ்மர்த்துகாமி - ஸ்மரித்தவுடன் ஓடி வருபவர்
    திதிசுதன் ராக்ஷஸன்
    அர்ஜுனன் - ஸஹஸ்ரார்ஜுனன்
    த்விஜ - இருமுறை பிறவி எடுத்த அந்தண வைசிய
    க்ஷத்திரிய குலத்தோர்
    திருமந்திரம் நூல், சிவனைப் பற்றியும், அவரை அடையும் வழிமுறை பற்றியும், அவரின் குணங்கள் பற்றியும் மட்டுமல்லாது, உடலில் இயக்கங்கள், விஞ்ஞானம், பகுத்தறிவு உள்ளிட்ட பல பாகங்களையும் அலசி ஆராய்கிறது
    பன்னிரு திருமுறைகளில், 10-ம் திருமுறையாக தொகுக்கப்பட்ட நூல், ‘திருமந்திரம்.’ திருமூலர் என்னும் மிகப்பெரிய ஞானியால் எழுதப்பட்ட மூவாயிரம் பாடல்கள் இந்த திருமந்திரத்தில் அடங்கியிருக்கிறது. இந்த நூல், சிவனைப் பற்றியும், அவரை அடையும் வழிமுறை பற்றியும், அவரின் குணங்கள் பற்றியும் மட்டுமல்லாது, உடலில் இயக்கங்கள், விஞ்ஞானம், பகுத்தறிவு உள்ளிட்ட பல பாகங்களையும் அலசி ஆராய்கிறது. இந்த நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரத்திற்கான பாடலும், விளக்கமும் இங்கே..

    பாடல்:-

    உயர்ந்தும் பணிந்தும் முகந்தும் தழுவி

    வியந்தும் அரன்அடிக்கே முறை செய்மின்

    பயந்தும் பிறவிப் பயனது ஆகும்

    பயந்து பரிக்கில் அன்பான்மையன் ஆமே.

    விளக்கம்:-

    இறைவனை வணங்கும் நெறிமுறையால் மேம்பட்டும், இறைவனைப் பணிந்தும், அந்தப் பணிவில் மனம் மகிழ்ந்தும், ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாய என்ற சொல்லை அகத்தில் நிலைநிறுத்தி சிவபெருமானுக்கு தொண்டு செய்யுங்கள். அதோடு இந்தப் பிறவிக்கு அஞ்சி, இறைவனை தொழுது வந்தால், அது பெரும் பயனைத் தரும். உள்ளத்தில் பயபக்தியோடு இறைவனை வழிபட்டு, சைவ நெறியை பின்பற்றும்போது, சிவத்தோடு ஒன்றலாம்.
    பஞ்சமி திதியில் வராஹியின் மூலமந்திரம் சொல்வது, தீயசக்திகளை நம் பக்கம் நெருங்கவிடாமல் தடுக்கும். பஞ்சமி திதியில், மூல மந்திரம் சொல்லி வாராஹியை வழிபடுங்கள்.
    பஞ்சமி திதியில் வராஹியின் மூலமந்திரம் சொல்வது, தீயசக்திகளை நம் பக்கம் நெருங்கவிடாமல் தடுக்கும். எதிரிகள் பலமிழப்பார்கள். பஞ்சமி திதியில், மூல மந்திரம் சொல்லி வராஹியை வழிபடுங்கள்.

    வராஹி மூல மந்திரம் :
    ஓம் க்லீம் உன்மத்தபைரவி வராஹி
    ஸ்வ்ப்பணம் ட: ட: ஹும்பட் ஸ்வாஹா.

    என்று சொல்லி வாருங்கள்.

    மேலும்...

    ஓம் ஐம் க்லெளம் ஐம்நமோ பகவதீ வார்த் தாளி , வார்த்தளி
    வராஹி வராஹமுகி வராஹமுகி அந்தே அந்தினி நம :
    ருத்தே ருந்தினி நம :
    ஜம்பே ஜம்பினி நம :
    மோஹே மோஹினி நம :
    ஸதம்பே ஸ்தம்பினி நம:
    ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்
    ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி
    ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு
    சீக்ரம் வச்யம் ஐம் க்லெளம்
    ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்
    ஓம் வாம் வாராஹி நம:
    ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:

    என்று சொல்லி வழிபடுங்கள்.

    அதேபோல்,

    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வாராஹி தேவ்யை நம:
    க்லீம் வராஹிமுகி ஹ்ரீம்
    ஸித்திஸ்வரூபிணி ஸ்ரீம்
    தனவ சங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா.

    என்று வராஹி தேவியை தினமும் காலையும் மாலையும் ஜபித்து பிரார்த்தனை செய்யுங்கள்.

    வராஹி காயத்ரி மந்திரம்:

    ஓம் ச்யாமளாயை வித்மஹே
    ஹல ஹஸ்தாயை தீமஹி
    தந்நோ வராஹி ப்ரசோதயாத்

    என்று காயத்ரியைச் சொல்லி வராஹி தேவியை தினமும் 11முறை சொல்லி ஜபித்து பிரார்த்தியுங்கள். தடைகள் அகலும். வளர்பிறை பஞ்சமி விசேஷம் என்றாலும் ஒவ்வொரு பஞ்சமியிலும் வழிபடுங்கள்.

    மொச்சை, சுண்டல் நைவேத்தியம் செய்வதும் விசேஷம். சுக்கு அதிகம் சேர்த்து பானகம் செய்தால், அந்த வெல்லக் கரைசல் போல், நம் வாழ்வில் இன்பத்தையும் நிம்மதியையும் சேர்த்துக் கலந்திடுவாள் வராஹி.
    துர்கையின் ஸ்லோகம் சொல்லி அனுதினமும் அவளை வழிபட்டு வந்தாலே, நம்மை எதிர்ப்பவர்கள் பலமிழப்பார்கள். எதிரிகளே இல்லாத நிலையை உருவாக்கித் தந்திடுவாள் துர்காதேவி.
    ஓம் ஹ்ரீம் தும் துர்கே துர்கே
    ரட்சிணி ஸ்வாஹ;

    என்கிற ஸ்லோகத்தை தினமும் சொல்லி வருவோம். காலையும் மாலையும் சொல்லிவருவோம். காலையிலும் மாலையிலும் வீட்டில் விளக்கேற்றி துர்கையின் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி தொடர்ந்து வழிபட்டு வந்தால், நம் கடன் முதலான பிரச்சினையில் இருந்தும் சிக்கல்களில் இருந்தும் நமக்கு நிவர்த்தியைத் தந்திடுவாள் தேவி. கணவருக்கு நீண்ட ஆயுளைக் கொடுப்பாள். தாலியை நிலைக்கச் செய்வாள். குடும்பத்தில் நிம்மதியும் ஒற்றுமையும் மேலோங்கச் செய்வாள் துர்காதேவி.


    இந்த மந்திரங்களை தொடர்ந்து உச்சரிப்பதால் வெற்றியும் காரிய சித்தியும் வாய்க்கும். உடல், மனம் ஆன்மா என்று சகலத்தையும் சுத்தம் செய்யும் தன்மை இந்த மந்திரங்களுக்கு உண்டு.
    பிறந்த ஜாதகத்தில் உள்ள எதிர்மறை ஆற்றலைப் போக்கும் சக்தி சிவ மந்திர ஜெபத்திற்கு உண்டு. சிவபெருமானுக்கு பல மந்திரங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

    பஞ்சாக்ஷர சிவந்திரம்:

    ஓம் நமசிவாய

    சிவபெருமானை போற்றிவதில் இந்த மந்திரம் அனைவராலும் அறியப்பட்டது. "நான் சிவபெருமை வழிபடுகிறேன்" என்பது இதன் பொருளாகும். இந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிப்பதால் உங்கள் உடல் புனிதமடைகிறது. உங்களுக்கு சிவபெருமானின் ஆசிர்வாதம் கிடைக்கிறது.

    ருத்ர மந்திரம் :

    ஓம் நமோ பகவதே ருத்ரே

    இது ருத்ர மந்திரமாகும். இறைவன் சிவபெருமானின் ஆசிகளைப் பெற இந்த மத்திரத்தை உச்சரிக்க வேண்டும். இது ஒரு விருப்பத்தின் நிறைவேற்றத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.

    சிவ காயத்ரி மந்திரம் :

    ஓம் தத்புருஷாய வித்மஹே
    மஹாதேவாய தீமஹி
    தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்

    இந்து மதத்தில், காயத்திரி மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு மந்திரமாகும். சிவகாயத்திரி மந்திரமும் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. மன அமைதிக்காகவும் இறைவன் அருளைப் பெறவும் தினமும் இந்த மந்திரத்தை உச்சரியுங்கள்.

    சிவா தியான மந்திரம்:

    கர சரண க்ருதம் வாக் காயஜம் கர்மஜம் வா
    ஸ்ரவண நயனஜம் வா மானஸம் வ அபராதம்
    விஹிதம் அவிஹிதம் வா ஸ்ர்வமேதத்
    க்ஷமஸ்வ ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஷம்போ

    நாம் செய்த எல்லா பாவத்தில் இருந்தும் நம்மை விடுவிக்க கோரி இறைவனிடம் கேட்பது இந்த மந்திரத்தின் பொருளாகும்.

    மஹா ம்ருத்யுஞ்சய மந்திரம்:

    ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
    உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய

    அழிக்கும் கடவுளாக சிவபெருமான் இருப்பதால் மனிதனின் இறப்பு குறித்த பயத்தைப் போக்கவும் அவரே உரியவர். ஆகவே மகா மிருத்யுஞ்சய் மந்திரம் இந்த பலனை நமக்கு அளிக்கும்.
    இம்மந்திரத்தை பௌர்ணமி தினத்தன்று விநாயகர் கோவிலுக்கோ அல்லது அவரது சந்நிதிக்கோ சென்று இம்மந்திரத்தை 27 முறை கூறி வழிபட வேண்டும்.
    ஓம் செல்வம் அருள்க தேவா போற்றி
    ஓம் நல்லன எமக்கருள் நாயக போற்றி
    ஓம் ஆக்கமும் ஊக்கமும் அருள்வாய் போற்றி
    ஓம் காக்க எங்களை உன்கழிலிணை போற்றி

    இம்மந்திரத்தை பௌர்ணமி தினத்தன்று காலை 6.00 மணியிலிருந்து ஒன்பது மணிக்குள்ளாக, அருகிலுள்ள விநாயகர் கோவிலுக்கோ அல்லது அவரது சந்நிதிக்கோ சென்று விநாயகருக்கு அருகம்புல் சமர்ப்பித்து எருக்கம் பூக்களை வைத்து, நல்லெண்ணெய் அல்லது நெய் தீபம் ஏற்றி, பத்திகள் கொளுத்தி உங்கள் மனதின் கவனத்தை முழுவதும் விநாயகர் மீது வைத்து இம்மந்திரத்தை 27 முறை கூறிவழிபட வேண்டும்.

    அப்படி காலையில் இந்த வழிபாட்டை செய்ய முடியாதவர்கள், மாலை 6.30 மணியிலிருந்து 7.30 மணிக்குள்ளாக மேற்கூறிய விநாயகர் வழிபாட்டை செய்யலாம். இதனால் நீங்கள் ஈடுபடும் எந்த ஒரு புதிய முயற்சியிலும் வெற்றி கிட்டும்.

    உங்கள் வியாபாரம் தொழில் அல்லது வேலையில் கிடைத்து வந்த செல்வம் அல்லது ஊதியம் பெருகும் வாய்ப்பு ஏற்படும். மேலும் உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினரின் வாழ்க்கையில் அவர்கள் விரும்பிய அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி தருவார் அந்த விநாயகப் பெருமான்.
    ×