என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    இந்த அஷ்டகத்தை பவுர்ணமி அன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக் கொண்டு 18 முறை பாராயணம் செய்ய வேண்டும். இவ்விதம் ஒன்பது பவுர்ணமிகளில் பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன வரத்தை அடையலாம்.
    சொர்ண ஆகர்ஷண பைரவ அஷ்டகம் தனச்செழிப்பைத் தரும் வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும் சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடைவார்கள்.

    பவுர்ணமி அன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக் கொண்டு 18 முறை பாராயணம் செய்ய வேண்டும். இவ்விதம் ஒன்பது பவுர்ணமிகளில் பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன வரத்தை அடையலாம். நீண்ட நாட்களாக உள்ள வறுமையிலிருந்து விடுபடலாம். 9-வது பவுர்ணமியன்று அவலில் பாயசம் நைவேத்தியம் செய்யலாம்.

    கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகத்தை இதைத் தினமும் படித்து வந்தால் தீராத கடன்கள் தீரும். கையில் பணம் இல்லையே என நினைத்து வருந்தும்போது குறைந்த அளவுக்கான தேவைக்காவது பணம் கிடைக்க்ம் என ஆத்தீகர்களின் நம்பிக்கை.

    தனந்தரும் வயிரவன் தளிரடிபணிந்திடின்
    தளர்வுகள் தீர்ந்து விடும்
    மனந் திறந் தவன்பதம் மலரிட்டு வாழ்த்திடின்
    மகிழ்வுகள்வந்து விடும் சினந்தவிர்த் தன்னையின்
    சின்மயப்புன்னகை சிந்தையில் ஏற்றவனே
    தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (1)

    வாழ்வினில் வளந்தர வையகம்
    நடந்தான் வாரியே வழங்கிடுவான்
    தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட
    தானெனவந்திடுவான் காழ்ப்புகள் தீர்த்தான்
    கானகம் நின்றான் காவலாய் வந்திடுவான்
    தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (2)

    முழுநில வதனில் முறையொடு
    பூஜைகள் முடித்திட அருளிடுவான்
    உழுதவன்விதைப்பான் உடைமைகள் காப்பான்
    உயர்வுறச்செய்திடுவான் முழுமலர்த்
    தாமரை மாலையை ஜெபித்து முடியினில் சூடிடுவான்
    தனக்கிலை யீடு யாருமேஎன்பான் தனமழை பெய்திடுவான் (3)

    நான்மறை ஓதுவார் நடுவினில்இருப்பான்
    நான்முகன் நானென்பான் தேனினில் பழத்தைச்
    சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள்
    நிறைத்திடுவான் வான்மழை எனவே
    வளங்களைப்பொழிவான் வாழ்த்திட வாழ்த்திடுவான்
    தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (4)

    பூதங்கள் யாவும் தனக்குள்ளே
    வைப்பான் பூரணன் நான் என்பான் நாதங்கள்
    ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில்
    பூட்டிடுவான் காதங்கள் கடந்து கட்டிடும்
    மாயம் யாவையும் போக்கிடுவான்
    தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (5)

    பொழில்களில் மணப்பான் பூசைகள்ஏற்பான்
    பொன்குடம் ஏந்திடுவான் கழல்களில்
    தண்டை கைகளில் மணியணி கனகனாய் இருந்திடுவான்
    நிழல்தரும் கற்பகம் நினைத்திட
    பொழிந்திடும் நின்மலன் நானென்பான்
    தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (6)

    சதுர்முகன் ஆணவத் தலையினைக்
    கொய்தான் சத்தொடு சித்தானான் புதரினில்
    பாம்பைத் தலையினில் வைத்தான் புண்ணியம்
    செய்யென்றான் பதரினைக் குவித்து
    செம்பினை எரித்தான் பசும்பொன் இதுவென்றான்
    தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (7)

    ஜெய ஜெய வடுக நாதனே சரணம் வந்தருள்
    செய்திடுவாய் ஜெய ஜெய ஷேத்திர பாலனே சரணம்
    ஜெயங்களைத் தந்திடுவாய்
    ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா
    செல்வங்கள் தந்திடுவாய்
    தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (8) 
    பிரதோஷ நாளில் சிவன் கோவிலுக்கு சென்று நந்திதேவருக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையைக் கண்ணார தரிசித்துப் பிரார்த்தனை செய்தால் இல்லத்தில் சுபிட்சம் உண்டாகும்.
    ஓம் அன்பின் வடிவே போற்றி
    ஓம் அறத்தின் உருவே போற்றி
    ஓம் அகிலத்தைக் காப்பாய் போற்றி
    ஓம் அரனுக்குக் காவலனே போற்றி
    ஓம் அரியாய்வந்து அமர்ந்தவனே போற்றி
    ஓம் அம்பலக் கூத்தனே போற்றி
    ஓம் ஆலயத்தின் முன் இருப்பாய் போற்றி
    ஓம் இருளை ஒழிப்பவனே போற்றி
    ஓம் இடபமே போற்றி
    ஓம் இடர்களைத் தடுப்பவனே போற்றி

    ஓம் இகாபரசுகம் அளிப்பவனே போற்றி
    ஓம் ஈகை உடையவனே போற்றி
    ஓம் உலக ரட்சகனே போற்றி
    ஓம் உபதேச காரணனே போற்றி
    ஓம் ஊக்க முடையவனே போற்றி
    ஓம் எருது உருவம் கொண்டவனே போற்றி
    ஓம் எங்களுக்கு வரம் தருபவனே போற்றி
    ஓம் ஏவல்களை ஒழித்தவனே போற்றி
    ஓம் ஐயன் பால் அமர்ந்த வனே போற்றி
    ஓம் ஒப்பில்லாதவனே போற்றி

    ஓம் ஓங்கார வடிவானவனே போற்றி
    ஓம் ஒளடதமாய் இருப்பவனே போற்றி
    ஓம் கணநாயகனே போற்றி
    ஓம் கஷ்டங்களைப் போக்குவாய் போற்றி
    ஓம் கல்யாண மங்களமே போற்றி
    ஓம் கலைகள் பலதெரிந்தோய் போற்றி
    ஓம் கற்பகத் தருநிழல் அமர்ந்தாய் போற்றி
    ஓம் கஸ்தூரி நிறம் ஒளி அணிந்தாய் போற்றி
    ஓம் கவலைகளை ஒழிக்கும் வல்லவனே போற்றி
    ஓம் காலனுக்கும் காவலனே போற்றி

    ஓம் கிரிவல்லயன் துணையே போற்றி
    ஓம் கீர்த்திகள் பல பெற்றாய் போற்றி
    ஓம் குணநிதியே போற்றி
    ஓம் குற்றம் களைவாய் போற்றி
    ஓம் கூத்தனுக்கு மத்தளம் அடித்தாய் போற்றி
    ஓம் கோலங்கள் பல செய்வாய் போற்றி
    ஓம் கைலாச வாகனனே போற்றி
    ஓம் கந்தனைக் கையால் அமர்த்தினாய் போற்றி
    ஓம் காலமெல்லாம் ஈசன் சிந்தனையே போற்றி
    ஓம் பஞ்சாக்ஷர ஜெபம் செய்பவனே போற்றி

    ஓம் பஞ்சலிங்கத்தில் ஒருவன் ஆனாய் போற்றி
    ஓம் பரமசிவன் தன்மை தெரிந்தோய் போற்றி
    ஓம் பார்வதிக்கும் வாகனமாய் நின்றாய் போற்றி
    ஓம் பிரதோஷ காலம் உடையவனே போற்றி
    ஓம் பிறவிப் பிணி தீர்ப்பாய் போற்றி
    ஓம் பிஞ்ஞகன் ஏவல் செய்வாய் போற்றி
    ஓம் புகழ்கள் பல பெற்றோய் போற்றி
    ஓம் பூத கணங்களுக்குத் தலைவனே போற்றி
    ஓம் பூத பிசாசுகளை அடக்குவாய் போற்றி
    ஓம் மகாதேவனே போற்றி

    ஓம் மகிமை பல செய்வாய் போற்றி
    ஓம் மஹேஸ்வரன் தூதனே போற்றி
    ஓம் மங்கள நாயகனே போற்றி
    ஓம் மதோன் மத்தம் தடுப்பாய் போற்றி
    ஓம் மஞ்சள் மகிமை கொடுப்பாய் போற்றி
    ஓம் மணங்கள் செய்காரணனே போற்றி
    ஓம் மந்திர மகிமை உனக்கே போற்றி
    ஓம் அகிலமெல்லாம் உன் அருள் போற்றி
    ஓம் தட்சனுக்கு உபதேசம் செய்தாய் போற்றி
    ஓம் தண்டங்களின் மேல் அமர்ந்தாய் போற்றி

    ஓம் தன்மை களெல்லாம் அறிந்தோய் போற்றி
    ஓம் தயாபரன் அருள் பெற்றவனே போற்றி
    ஓம் தஞ்ச மென்றவர்க்கருள் செய்வாய் போற்றி
    ஓம் நஞ்சுண்டவனை நாயகனாய் அடைந்தாய் போற்றி
    ஓம் நாக நந்தனின் நயனம் தெறிந்தவனே போற்றி
    ஓம் நாதமும் பிந்துவும் ஆனாய் போற்றி
    ஓம் பழமும் சுவையும் நீயே போற்றி
    ஓம் பண்புகள் பல செய்வாய் போற்றி
    ஓம் பாரெல்லாம் உன்புகழ் போற்றி
    ஓம் பிறவிப் பிணி அறுப்பாய் போற்றி

    ஓம் அடியவர்க்கெல்லாம் அன்பே போற்றி
    ஓம் ஆண்டவனிடம் அன்பு கொண்டாய் போற்றி
    ஓம் ஆதாரசக்தி மயம் பெற்றாய் போற்றி
    ஓம் சிவனின் வாகனம் ஆனாய் போற்றி
    ஓம் இன்னல் தீர்க்கும் இறைவனே போற்றி
    ஓம் நீண்ட கொம்புடையவனே போற்றி
    ஓம் நீலாயதாட்சி அருள் பெற்றாய் போற்றி
    ஓம் நீலகண்டன் முன் நின்றாய் போற்றி
    ஓம் வேதங்களை காலாய் உடையவனே போற்றி
    ஓம் வேள்விக்குத் தலைவனே போற்றி

    ஓம் வித்யா காரணனே போற்றி
    ஓம் விவேகம் எனக்குத் தருவாய் போற்றி
    ஓம் விண்ணுலகம் செல்லும் வழியே போற்றி
    ஓம் வில்வத்தின் மகிமையே போற்றி
    ஓம் விஸ்வே உன் வல்லமையே போற்றி
    ஓம் வேல்உடையவனே போற்றி
    ஓம் மகா காளனே போற்றி
    ஓம் மக்கள் பேறு தருவாய் போற்றி
    ஓம் மாயைகளை அகற்றுவாய் போற்றி
    ஓம் வெள்ளை நிறம் உடையாய் போற்றி

    ஓம் உலகம் அறிந்த உத்தமனே போற்றி
    ஓம் உன்மகிமை உலகமெல்லாம் போற்றி
    ஓம் ஊஞ்சல் ஆட்டுபவனே போற்றி
    ஓம் ஊடலுக்குதவியனே போற்றி
    ஓம் உபதேசம் பெற்றவனே போற்றி
    ஓம் உலகுக்கு அருள்வாய் போற்றி
    ஓம் பிழைகள் பொறுப்பாய் போற்றி
    ஓம் பிள்ளையார் சோதரனே போற்றி
    ஓம் மாயை ஏடுக்கும் மாடாய் நின்றாய் போற்றி
    ஓம் மாமன்னநம் உன்பனி செய்வார் போற்றி

    ஓம் மகாதேவன் கருணையே போற்றி
    ஓம் பரப்பிரம்மமே போற்றி
    ஓம் விண்ணோர்க்கு அரிய மருந்தே போற்றி
    ஓம் கண்டனின் வாகனமானாய் போற்றி
    ஓம் சிவனின் பாதியை சுமந்தாய் போற்றி
    ஓம் கையிலையின் காவலனே போற்றி
    ஓம் மக்கள் குறைதீர்ப்பாய் போற்றி
    ஓம் பிரதோஷ நாயகனே போற்றி போற்றி…
    புரட்டாசி ஏகாதசியான இன்று பெருமாளை நினைத்து விரதம் இருந்து அவருக்கு உகந்த இந்த மந்திரத்தை சொல்லி பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும்.

    பெருமாள் தமிழ் மந்திரம் 1:

    “அரியே, அரியே, அனைத்தும் அரியே!

    அறியேன் அறியே அரிதிருமாலை

    அறிதல் வேண்டி அடியேன் சரணம்

    திருமால் நெறிவாழி! திருத்தொண்டர் செயல் வாழி! ”

    மந்திரம் 2

    “ஓம் நமோ நாராயணாயா”

    ஏகாதசி அன்று பெருமாளை நினைத்து விரதம் இருந்து அவருக்கான மந்திரத்தை ஜெபிப்பவர்கள் பிறப்பில்லா பெருநிலையை அடைவார்கள் என்பது ஆன்றோர் வாக்கு.
    பாலா பக்தர்களின் அன்புச் சிறையிலிருந்து நீங்கா வண்ணம், அனைவரும் அவளுக்குப் போட்ட பூட்டு பாட்டு. ஆம்! பாடல்கள்தான் அவளுக்குப் பிடித்த ஒன்று. அவளைப்பற்றி பாடப்பாட பாடல் பிறக்கும். நல்ல பாதை திறக்கும்.
    காஞ்சிக்கு காமாட்சி, மதுரைக்கு மீனாட்சி, காசிக்கு விசாலாட்சி, அதே போன்று நெமிலிக்கு பாலா! ஆம், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே நெமிலி என்ற அழகான ஊரிலே கடந்த 150 ஆண்டுகளாக அருள் மழை பொழிந்து வருகிறாள் அன்னை பாலா! அன்னை பாலா நெமிலிக்கு வந்த வரலாறு சுவாரஸ்யமானது. சிவம் பெருக்கும் சிலர் நெமிலி டி.கே.சுப்பிரமணிய ஐயர் கனவிலே பத்து வயதுப் பெண் ஒருவள் பச்சைப் பாவாடை உடுத்திக் கொண்டு நான் தான் பாலா! உன் வீட்டுக்கு விக்கிரமாக வருவேன்.

    உன் இல்லத்துக்கு அருகே உள்ள குஸஸ்தலை ஆற்றில் என்னைத்தேடுக! என்று அருள்வாக்கு தந்தாள் இரண்டு நாள் ஆற்றிலே தேடிய போது கிடைக்காமல் அடம்பிடித்த பாலா மூன்றாவது நாள் தேடிய போதுதான் தனது விளையாட்டை நிறுத்திக்கொண்டு விக்கிரமாக சுண்டு விரல் உயரத்திலே அந்த சுந்தரி அவருக்குக் கிடைத்தாள். கடந்த நான்கு தலைமுறைகளாக ஐயரவர்கள் வீட்டுக் கூடத்தையே தனது மண்டபமாக்கி அருளாட்சி புரிந்து வருகிறாள்.

    திருமணம் - திருமகவு - திருமணை - திருக்கல்லி என வந்தவருக் கெல்லாம் அருளை வாரி வழங்கி வருகிறாள். தற்போது பீடத்தை நான்காவது தலைமுறையை சார்ந்த ஸ்ரீபாலா பீடாதிபதி, கவிஞர் நெமிலி எழில்மணி மற்றும் அவரது பிள்ளைகள் பாபாஜி. மோகன்ஜி பராமரித்து வருகின்றனர். கவிஞர் நெமிலி எழில்மணி அவர்கள் தமிழக அரசால் கலைமுதுமணி என்ற விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டவர்.

    ஸ்ரீபாலாவின் மூல மந்திரம்

    ஐம் - க்லீம் - செள்

    ஸ்ரீ பாலாவின் தியான ஸ்லோகம்

    அருண கிரண ஜாலா- ரஞ்சிதா சாவகாசா

    வித்ருத் ஜப படீகர் - புஸ்தகா பீதி ஹஸ்தா

    இதர கர வராட்யா - புஹ்ல கஹலார சமஸ்தர்

    நிவசது ஹ்ருதி பாலா - நித்ய கல்யாண சீலா

    நெமிலி பாலாவின் - உற்சவ விக்கிரகம் கொள்ளை அழகு - கைகளில் ஜப மாலையும், புத்தகமும் ஏந்திக்கொண்டு அபய வரத முத்திரைகளைக் காட்டி கொண்டிருக்கும் ஸ்ரீபாலாவே சகல வித்யை கட்டும் பிறப்பிடம்.

    நெமிலி பாலா. அந்த இசையினில் வசிப்பவள் பாலா. கடந்த பல வருடங்களாக முதல் நாள் இன்னிசை வழங்கி வந்த டாக்டர் சீர்காழி கோவிந்த ராஜனை தொடர்ந்து அவரது மகன் டாக்டர் சீர்காழி சிவ சிதம்பரம் முதல் நாள் நவராத்திரி இசை வழங்கி வருகிறார். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து இசை வழங்கி சேவை செய்து வந்தார். பின்னணிப் பாடகிகள் பி.சுசிலா, வாணி ஜெயராம், சித்ரா, எஸ்.ஜானகி, நித்யஸ்ரீ மகாதேவன், சுதா ஆகியோரும் பின்னணிப் பாடகர்கள் எஸ்.பி.பாலசுப் பிரமணியம், கே.வீரமணி, மலேசியா வாசுதேவன், பி.பீ.ஸ்ரீனிவாஸ், மதுதேவா போன்ற பலரும் அன்னையிடம் பாடி அருளைப் பெற்றவர்கள்.

    அன்னை பாலாவின் நவராத்திரியை தவிர ஆடி வெள்ளிப் பெருவிழா, சித்திரைத் திருவிழா, ஐப்பசி பூரத்தன்று பிறந்த நாள் விழா, புத்தாண்டு விழா என பாலாபீடம் எப்போதும் கலகலப்பாகவே இருக்கும்.

    பாலா பீடம் ஒரு சித்தர் பீடம், ஆம் கருவூர் சித்தருக்கு காட்சி தந்த அருட்பீடம். கருவூர் சித்தரின் பூசை விதிமுறை கண்ணிகள், அதாவது செய்யுட்களில் முதல் செய்யுள் என்ன தெரியுமா?

    ஆதியந்தம் வாலையவள் இருந்த வீடே

    ஆச்சரியம் மெத்தமெத்த அது தான் பாரு

    சோதியந்த நடுவீடு பீடமாகி

    சொகுசு பெற வீற்றிருந்தாள் துரைப்பெண்ணாத்தாள்

    வீதியது ஆறுதெரு அமர்ந்த வீதி

    விளையாடி நின்றதிரு மாளி கண்டாய்

    பாதி மதி சூடியே இருந்த சாமி

    பத்து வயதாகுமிந்த வாமிதானே

    ஓ! இது என்ன ஆச்சர்யம் நெமிலியிலே ஆற்றுக்குப் போகும் சத்திரத் தெருவிலே ஐயரவர்கள் நடுவீடான கூடத்திலே பாலாபீடம் அமைந்துள்ளதே! என்னே கருவூர் சித்தரின் தீர்க்க தரிசனம் என்று வாரியார் ஸ்வாமிகள் வியந்தார். பண்டபுத்ரவதம் செய்தவள் பாலா! பாலா லீலா வினோதனி என லலிதா சகஸ்ரநாமம் கூறுகிறது.

    ஸ்ரீ பாலா பீடக்குறிப்புகள்

    அரக்கோணம் தாலுகா, நெமிலியில் ஸ்ரீ பாலா பீடம் அமைந்துள்ளது. அரக்கோணத்திலி ருந்து 16 கி.மீ தொலைவிலும், சோளிங் கரிலிருந்து 30 கி.மீ தொலைவிலும், காஞ்சீபுரத்திலிருந்து 24 கி.மீ தொலைவிலும், காவேரிப் பாக்கத்திலிருந்து 20 கி.மீ தொலை விலும், நெமிலி உள்ளது. பிரதி மாதம் முதல் ஞாயிறு, புத்தாண்டு மற்றும் நவராத்திரி காலங்களில் சிறப்பு வழிபாடு உண்டு.

    அன்னை பாலா

    திருமணம் முடிக்கும் திரிபுர சுந்தரியாகவும்,

    திருமகவு அளிக்கும் திரிபுர சுந்தரியாகவும்,

    திருமனை வழங்கும் திரிபுர சுந்தரியாகவும்,

    திருக்கல்வி தரும் திரிபுர சுந்தரியாகவும்

    அருள் பாலிக்கிறாள்.

    அருள் மிகும் தேவி அன்னை பாலா திரிபுரசுந்தரி சரணம்

    இருள்தனை நீக்கும் தாயே பாலா திரிபுரசுந்தரி சரணம்.

    பாலா பக்தர்களின் அன்புச் சிறையிலிருந்து நீங்கா வண்ணம், அனைவரும் அவளுக்குப் போட்ட பூட்டு பாட்டு. ஆம்! பாடல்கள்தான் அவளுக்குப் பிடித்த ஒன்று. அவளைப்பற்றி பாடப்பாட பாடல் பிறக்கும். நல்ல பாதை திறக்கும்.

    அருள்மிகு தேவி அன்னை பாலா திரிபுரசுந்தரி சரணம்!

    இருள்தனை நீக்கும் தாயே

    பாலா திரிபுரசுந்தரி சரணம்!

    இந்தப் பாடல் பாடாமல் எந்த பூஜையும் நிறைவு பெறாது. பூஜை என்ன, பாலா பீடத்து விழாக்கள் எதுவானாலும் இந்தப்பாடல் பாடாமல் விழா நிறைவுறாது. இந்தப்பாடல் பாலா பக்தர்களுக்குத் தெவிட்டாத தேசிய கீதம்.

    எளிமையான வார்த்தைகள், பாடப்பாட சந்தோஷம் பிறக்கும் எளிமையானப் பாடல்.

    எந்தப் பேனாவும் தானாக எழுதாது. வெளியே இருந்து ஒரு சக்தி இயக்க வேண்டும். அந்தப் பேனாவை பாலா இயக்குகிறாள் என்பதே நிதர்சனமான உண்மை.

    பாலாவை மயக்கப் பாடல் ஒன்றுதான் சரியான வழி என்று பலரும் பரீட்சித்துப் பார்த்து கொண்டனர்.

    அன்னை பாலாவை, அழகு கொஞ்சும் அன்பு பாலாவை தன் பாடல்கள் மூலம், தன்னுடைய எழுத்துக்கள் மூலம், வெளிஉலகிற்கு தெரியச் செய்த பெருமை கவிஞர் நெமிலி எழில்மணியைச் சாரும்.

    மெலிந்த எளிமையான தோற்றம், இயல்பான பேச்சு, சிரித்த முகம் மற்றும் சாதாரண வேட்டி சட்டையுடன் பாலா பீடத்தை வலம் வரும் கவிஞர் நெமிலி எழில்மணி நம்மில் நடமாடும் ஒரு உன்னதமான சித்தர்போல உள்ளார்.

    பாலா அவருக்களித்த உபதேசத்தை இதுவரை அவர் மறுத்ததில்லை. ஏன் எப்படி என்று காரணம் கேட்டதில்லை. அடுத்தவர்களுக்கு அதை நிரூபித்துக் காட்ட வேண்டிய அவசியமும் அவருக்கு இல்லை. பாலா சொல்வதைத் திருப்பிச்சொல்லும் ஒரு கிளிப் பிள்ளையாக அவர் உள்ளார். அவரை பாலா தனக்கு ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டு பல உன்னதமான பாடல்களை எழுத வைத்துள்ளார். அவர் பாலா வித்யா மந்திரைத் துவக்க வைத்தது. பாலாவின் பவுர்ணமி பிரசாதங்களைப் பாலா விஜயம் எனும் பெயரில் எல்லோருக்கும் அனுப்பி வைத்தது. தெய்வ வழிப்பாட்டை மனிதநேய வழிபாடாக மாற்றியவர்.

    பாலா பீடத்தின் அதிபதியாக தனி ஆசனம் தந்தும், தன்னிகரில்லாப் பதவி தந்தும், இன்றளவும் மிகமிக எளிமையாக கர்வம் தரிக்காமல் சாதாரண உடை அணிந்து வருபவர்கள் எல்லாம் பாமரத் தமிழில் பாலாவின் பெருமைகளை எடுத்துச்சொல்லி பாலா பீடத்தில் தினந்தோறும் சேவை செய்துவருகிறார். ஆந்திராவில் இருந்து வரும் பக்தர்கள் பயன்பெற தெலுங்கிலும் பேசி விளக்குகிறார். பாலாவை தரிசிக்க வருபவரை உபசரிக்கும் உயர்ந்த பண்புகளை பாலா அவருக்கு உபரியாக கொடுத் திருக்கிறாள். மிகமிக விசேஷமான மனிதர்கள் மிகமிக எளிமையோடு காட்சி தருவார்கள். அவர்கள்தான் உண்மையான ஞானிகள்.

    எழில்மணி அவர்கள் எழுதிய பாலா சுப்ரபாதம், கவசம் மற்றும் அருள்மிகு தேவி பாடல்களைப் பாட முன்னேற்றம் வரும்.

    கவிஞர் நெமிலிஎழில்மணி, நெமிலி ஸ்ரீ பாலா பீடாதிபதி
    புரட்டாசி மாதத்தில் இந்த எட்டெழுத்து மந்திரத்தை தவறாமல் சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை எந்த அளவுக்கு உளப்பூர்வமாக உச்சரிக்கிறோமோ அந்த அளவுக்கு மனம் பக்குவப்படும்.
    புரட்டாசி சனியன்று நாராயணாய நமக என்ற எட்டெழுத்து மந்திரத்தை தவறாமல் சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை எந்த அளவுக்கு உளப்பூர்வமாக உச்சரிக்கிறோமோ அந்த அளவுக்கு மனம் பக்குவப்படும்.

    இதிலுள்ள நம என்ற சொல்லுக்கு உனக்கே நான் உரியவன் என்பது அர்த்தம். ஓம் காரமாக விளங்கும் நாராயணனே உனக்கே நான் உரியவன் என்பது மந்திரத்தின் முழுப்பொருள். அதாவதுஉலகத்தில் வந்து விட்ட பிறகு, என்றோ ஒருநாள் செல்லப்போகிறோம்.

    அவ்வாறு செல்லும் நாளில் நாராயணா! உன்னால் வந்த நாங்கள் உன் இடத்திற்கே திரும்பி வந்து விடுகிறோம் என்று சரணாகதி அடைவதாக அர்த்தம். கலியுகக் கொடுமைகளில் இருந்து தப்பித்து, பூலோகத்தில் சுகமாகவும், நிம்மதியாகவும் வாழ ஓம் நமோ நாராயணாய என்று சொல்வது பொருத்தமானது.
    திருமந்திரத்தில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வார பாடலும், விளக்கமும்..
    அஷ்டமா சித்திகளும் கைவரப்பெற்ற, திருமூலர் என்னும் சித்தர் பெருமான் எழுதிய பாடல்களின் தொகுப்பே ‘திருமந்திரம்.’ சிவபெருமானைப் பற்றியும், அன்பு நிறைந்த அவரது குணத்தைப் பற்றியும் பல பாடல்களில் தெளிவுபடுத்தியுள்ளார், திருமூலர். திருமந்திரத்தில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வார பாடலும், விளக்கமும்..

    பாடல்:-

    ஆனைந்தும் ஆட்டி அமரர் கணம்தொழத்

    தான் அந்தமில்லாத் தலைவன் அருளது

    தேன் உந்து மாமலர் உள்ளே தெளிந்த தோர்

    பார் ஐங்குணமும் படைத்து நின்றானே.

    விளக்கம்:-

    தேவர்கள் கூட்டம் சிவபெருமானை பசுவில் இருந்து கிடைக்கும் பால், தயிர், வெண்ணெய், நெய், மோர் ஆகியவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்வர். இப்படி அவர்களை வழிபாட்டில் இணைந்தது, எல்லையில்லாத இறைவனின் அருளே ஆகும். தேன் நிறைந்த மலர்போல, சிவபெருமானின் அருள் செறிந்ததால், தெளிந்த மனதில் சிவபெருமான் ஐம்பூதத்தின் குணங்களோடு வந்து பொருந்துவார்.
    நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் கீழ்குறிப்பிட்டுள்ள மந்திரங்களை உச்சரித்து பூஜை செய்தால் அம்பிகையின் பரிபூரண அருளை பெறலாம் என்பது காஞ்சி மகா பெரியவரின் அருள் வாக்காகும்.
    ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ!
    ஓம் ஸ்ரீ அன்னதாயை நமஹ!
    ஓம் ஸ்ரீ வசுதாயை நமஹ!
    ஓம் ஸ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவி தாயை நமஹ!
    ஓம் ஸ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவி தாயை நமஹ!
    ஓம் ஸ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ!
    ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ!

    இந்த 7 நாமங்களை தினசரி 11 முறை உச்சரித்தால் ஆயிரம் நாமங்களை உச்சரித்ததற்கு சமம். ஈஸ்வர ஸ்வரூபமாக விளங்கும் காஞ்சி மகா பெரியவர் அன்னை லலிதையின் ஆயிரம் திருநாமங்களில், தனது உள்ளுணர்வால் தேர்ந்தெடுத்து கொடுத்துள்ளார். இந்த ஏழு நாமாக்கள் அதிசயங்கள் பல நிகழ்த்தும் என்பது முன்னோர் வாக்கு.
    நவராத்திரியின் ஒன்பது நாட்களும், விரதம் இருந்து அவரவர் சக்திகேற்றவாறு மகாசக்தியை ஆவாகனம் செய்து, தினமும் நிவேதனம் படைத்து வழிபட வேண்டும்.
    நவராத்திரியின் முதல் நாளான இன்று அம்பாளுக்கு மகேஸ்வரி பாலா என்று திருநாமம் சூட்டி வணங்க வேண்டும். மது, கைடபர் ஆகிய அசுரர்களின் அழிவுக்கு காரணமானவள் இவள். சாமுண்டியாக அலங்காரம் செய்ய வேண்டும்.

    அண்டசராசரத்துக்கும் அவள் தலைவி. இதை அண்டம்+ சரம்+அசரம் என்று பிரிக்க வேண்டும். அண்டம் என்றால் உலகம். சரம் என்றால் அசைகின்ற பொருட்கள். அசரம் என்றால் அசையாத பொருட்கள். ஆம்...அன்னை ராஜ ராஜேஸ்வரி, இந்த உலகிலுள்ள அசைகின்ற, அசையாப் பொருட்களுக்கெல்லாம் அனைத்துக்கும் அதிபதியாக இருந்து அருளாட்சி நடத்துவதைக் குறிக்கும் வகையில் இந்த அலங்காரம் செய்யப்படுகிறது.

    சொல்ல வேண்டிய ஸ்லோகம்:

    அம்பா சாம்பவி சந்திரமவுலிரமலா அபர்ணா உமா பார்வதீ
    காளீ ஹமவதீ சிவா த்ரிநயனீ காத்யாயினீ பைரவீ!
    ஸாவித்ரீ நயௌவனா சுபகரீ ஸாம்ராஜ்ய லக்ஷ்மீப்ரதா
    சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ!

    ஸ்ரீ கணபதி சஹஸ்ரநாமம் விநாயகரின் 1000 திருநாமங்களைக் கொண்டது. அதைத் தினமும் கூற முடியாதவர்கள், சஹஸ்ரநாமத்தில் உள்ள சில ஸ்லோகங்களைத் தினமும் ஜெபித்து வருவதால் பல பலன்களை அடையலாம்.
    வஜ்ராத்யஸ்த்ர பரீவார:கனசண்ட ஸமாஸ்ரய
    ஜயோஜய பரீவார :விஜயோ விஜயாவஹ :||

    இதைத் தினமும் 27 தடவை தெற்கு நோக்கி அமர்ந்து சங்கல்பம் செய்து ஜெபித்து வர எதிர்ப்புகள், எதிரிகளால் உண்டாகும் தொல்லைகள் நீங்கும்.
    திருமந்திரம் என்ற சிறப்புமிகு காவியத்தைப் படைக்க திருமூலருக்கு மூவாயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. அதன் காரணமாகத்தான் அந்த பாடல்கள் ஒவ்வொன்றும் காலத்தைக் கடந்து, இன்றும் நமக்கு அறிவுரையை வழங்கும் விதத்தில் இருக்கிறது.
    திருமந்திரம் என்ற சிறப்புமிகு காவியத்தைப் படைக்க திருமூலருக்கு மூவாயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. ஓராண்டுக்கு ஒரு பாடல் என்ற ரீதியில்தான் அவர் பாடல்களை எழுதியதாக புராணங்கள் சொல்கின்றன. அதன் காரணமாகத்தான் அந்த பாடல்கள் ஒவ்வொன்றும் காலத்தைக் கடந்து, இன்றும் நமக்கு அறிவுரையை வழங்கும் விதத்தில் இருக்கிறது. அத்தகைய சிறப்புமிக்க திருமந்திரப் பாடல்களை வாரம் தோறும் பார்த்து வருகிறோம். இன்றும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்..

    பாடல்:-

    தருவழி ஆகிய தத்துவ ஞானம்

    குருவழி யாகும் குணங்களுள் நின்று

    கருவழி யாகும் கணக்கை அறுத்துப்

    பெருவழி யாக்கும் பேரொளி தானே.

    விளக்கம்:- இந்த உலகத்தில் இருந்தும், உலக மாயையில் இருந்தும் விடுதலை பெற்று, வீடுபேறு என்னும் முக்தியை அடைவதற்கான சிவஞானம் கிடைப்பதற்கு, நாம் ஒவ்வொருவருக்கும் குருவின் அருள் தேவை. அந்த குருவருள் கிடைத்ததும், அந்த உயிர்களிடத்தில் சிவபெருமானின் எட்டு குணங்களும் தோன்றும். அதன் பயனாக, நம்மை தொடர்ந்து வரும் பிறவிக் கணக்கு முடியும். ஈசனின் பெருநெறியில் செல்வதற்குரிய அருள்பேரொளி கிடைக்கும்.
    சிவனின் மூல மந்திரத்தை உச்சரித்து வழிபடுபவர்களுக்கு தீவினைகள் அனைத்தும் நீங்கி நன்மைகள் ஏற்படும். தினமும் இந்த மந்திரத்தை ஜபிக்க இயலாதவர்கள் திங்கட்கிழமையில் ஜபிப்பது அவசியம்.
    சிவ சிவ என்கிலர் தீவினை யாளர்
    சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
    சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்
    சிவ சிவ என்னச் சிவகதி தானே!

    திருமூலர் அருளிய இந்த மந்திரமானது சிவன் மூலமந்திரமாக போற்றப்படுகிறது. நீண்டகால துன்பம் உடையவர்கள், கட்டுக்கடங்காத பண பிரச்சனை உடையவர்கள், தீராத நோய் உடையவர்கள், மன நிம்மதி இன்றி தவிப்பவர்கள் இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்து வர தீராத பிரச்சனைகள் யாவும் விரைவில் தீரும். தினமும் மந்திரத்தை ஜபிக்க இயலாதவர்கள் திங்கட்கிழமையில் ஜபிப்பது அவசியம்.

    சிவன் மூல மந்திரம் பலன்கள்

    * சிவனின் மூல மந்திரத்தை உச்சரித்து வழிபடுபவர்களுக்கு தீவினைகள் அனைத்தும் நீங்கி நன்மைகள் ஏற்படும்.
    * பித்ரு தோஷங்கள் நீங்கும்.
    * குல சாபங்கள், பூர்வ ஜென்ம பாவ வினைகள் நீங்கப் பெறுவார்கள்.
    * வீட்டில் பணமுடைகள் நீங்கி செல்வம் பெருகும்.
    * நோய்கள் அனைத்தும் விரைவில் தீரும்.
    * உடல் நலமும் சிந்தனைத் தெளிவும் உண்டாகும்.
    * எதிரிகளால் எவ்வித ஆபத்தும் ஏற்படாமல் காக்கும்.
    * திருமணம் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிப்பவர்களுக்கு குழந்தைப்பேறு கிட்டும்.
    நல்லவை செய்வதற்கு எவையெல்லாம் தேவையோ அவையெல்லாம் அனுமனை நினைப்பதால் கிடைக்கும் என்று இந்த ஸ்லோகம் கூறுகிறது.
    புத்திர் பலம் யசோ தைரியம் நிர்பயத்வம் அரோகதா அஜாட்யம்
    வாக்படுத்வம் ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத்
     
    இந்த ஸ்லோகத்தைப் பொருளுணர்ந்து சொன்னாலே போதும் ஒரு வித மனவலிமை பெருகுவதை உணர முடியும்.
     
    புத்திர் பலம் - அறிவில் வலிமை, யசோ - புகழ், தைர்யம் - துணிவு, நிர்பயத்வம் - பயமின்மை, அரோகதா - நோயின்மை, அஜாட்யம் - ஊக்கம், வாக் படுத்வம் - பேச்சு வலிமை, ச - இவையெல்லாம், ஹனூமத் ஸ்மரணாத் - அனுமனை நினைப்பதால், பவேத் - பிறக்கின்றன.
     
    நல்லவை செய்வதற்கு எவையெல்லாம் தேவையோ அவையெல்லாம் அனுமனை நினைப்பதால் கிடைக்கும் என்று இந்த சுலோகம் கூறுகிறது.
    ×