என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    அஷ்டமி போய்விட்டால் அடுத்தநாள் நவமி. இந்த நவமிக்கு ஆவிதவா நவமி என்று பெயர். மகாளயத்தில் சுமங்கலிகளுக்கான தர்ப்பண நாளாக நவமியை கொடுத்திருக்கிறார்கள்.
    அம்பலத்தாடுகின்ற இறைவனே... புனிதனே... என்னை இதுவரை அடி அடி என்று அடித்தாய் அல்லவா? அடித்தது போதும். இனி அணைத்திடல் வேண்டும். அம்மையப்பா... என்னால் தாங்கமுடிய வில்லை என்று இறைவனின் திருவடியை பிடித்து கதறுகின்ற பாடலை இன்று பைரவர் கோவிலுக்கு சென்று சொன்னாலும் சரி, வீட்டில் விளக்கு வைத்து சொன்னாலும் சரி அற்புதமான பாடல். இந்த பாடலை வள்ளலார் அவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்.

    தடித்த ஓர் மகனை தந்தை ஈண்றடித்தால்
    தாயுடன் அணைப்பள்
    தாய் அடித்தால் பிடித்தொரு தந்தை அணைப்பன்
    இங்கு எனக்கு பேசிய தந்தையும்
    தாயும் பொடித்திருமேனி அம்பலத்தாடும்
    புனித நீ ஆதலால் என்னை
    அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும்
    அம்மை அப்பா இனி ஆற்றேன்
    இந்த பாட்டை மட்டும் சொன்னால் இறைவன் அப்படியே வந்து கட்டிப்பிடித்துக் கொள்வாராம். எல்லா பிறவிகளுக்கும் பற்றித் தொடருகின்ற தாயும் தந்தையுமாக இருக்கக் கூடிய தயாபரம்.

    கோவிலுக்கு சென்று இந்த பாடலை படித்து வேண்டுவதன் மூலமாக இன்றைய தினம் ஒரு அற்புதமான பொழுதாக அமையும். அஷ்டமி போய்விட்டால் அடுத்தநாள் நவமி. இந்த நவமிக்கு ஆவிதவா நவமி என்று பெயர். விதவா என்றால் கணவன் போன பிறகு மனைவி இருந்தால் கணவன் இல்லாதவள் என்பதற்காக அவளுக்கு விதவா, அதாவது விதவை என்று பொருள். ஆவிதவா என்று சொன்னால் சுமங்கலிகள் என்று அர்த்தம். முன்னோர்களில் கணவருக்கு முன்பே மனைவி காலமாகும் போது சுமங்கலி பிரார்த்தனை நடத்துவார்கள். அப்படி நடத்தினாலும்கூட மகாளயத்தில் சுமங்கலிகளுக்கான தர்ப்பண நாளாக நவமியை கொடுத்திருக்கிறார்கள். அவர்களை நினைத்து அந்த மகாளயத்தை செய்யலாம். குறைந்தபட்சம் சுமங்கலிகளை நினைத்து வணங்கலாம். அவர்களுடைய அருளாசியை பெறலாம்.
    சிவபெருமானைநோக்கி கடுமையான தவம் இருந்த சூரியன், ‘கிரகபதம்’ என்னும் பேறும் ஆயிரம் கிரகணங்களோடு ஒளி மண்டலத்தில் உலா வரும் உயர்வையும் பெற்றான்.
    ஒவ்வொரு ஸ்லோகம் முடிந்த பிறகும் நமஸ்காரம் செய்ய வேண்டும்.

    1. ஆதி தேவ நமஸ்துப்யம் ப்ரசீத மம
    பாஸ்கரா|
    திவாகர நமஸ்துப்யம் ப்ரபாகர
    நமோஸ்துதே|| (நமஸ்காரம்)

    2. ஸப்த ஸ்வரத மாரூடம் ப்ரசண்டம்
    கஸ்ய பாத்மஜம்|
    ஸ்வேத பத்ம தரம் தேவம் தம் ஸூர்யம்
    ப்ரணமாம்யஹம் || (நமஸ்காரம்)

    3. லோகிதம் ரதமாரூடம் ஸர்வலோக பிதாமஹம்|
    மஹாபாப ஹரம் தேவம் தம்
    ஸூர்யம் ப்ரணமாம்யஹம்(நமஸ்காரம்)

    4. ப்ரும்ஹிதம் தேஜஸாம் புஞ்ச
    வாயுர் ஆகாச மேவச|
    ப்ரபுஸ்த்வம் ஸர்வ லோகானாம்
    தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்|| (நமஸ்)

    5. த்ரைகுண்யஞ்ச மஹாஸூரம் ப்ரஹ்ம
    விஷ்ணு மஹேஸ்வரம்|
    மஹாபாப ஹரம் தேவம் தம் ஸூர்யம்
    ப்ரணமாம்யஹம்|| (நமஸ்காரம்)

    6. பந்தூக புஷ்ப ஸங்காஸம் ஹார
    குண்டல பூஷிதம்|
    ஏக சக்ர தரம் தேவம் தம் ஸூர்யம்
    ப்ரணமாம்யஹம் || (நமஸ்காரம்)

    7. விஸ்வேஸம் விஸ்வ கர்த்தாரம்
    மஹா தேஜ ப்ரதீபனம்|
    மஹாபாப ஹரம் தேவம் தம் ஸூர்யம்
    ப்ரணமாம்யஹம்|| ( நமஸ்காரம்)

    8. ஸ்ரீவிஷ்ணும் ஜகதாம் நாதம் ஞான
    விக்ஞான மோக்ஷதம்|
    மஹா பாப ஹரம் தேவம் தம் ஸூர்யம்
    ப்ரணமாம்யஹம்|| (நமஸ்காரம்)

    9. ஸூர்யாஷ்டகம் படே:நித்யம் க்ரஹ
    பீடாம் ப்ரணாசனம்|
    அபுத்ரோ லபதே புத்ரம் தரித்ராே
    தனவான் பவேத் || (நமஸ்காரம்)

    10.ஆமிஷம் மது பானயஞ்சயக கரோதி
    கரவோதினே|
    ஸப்த ஜன்ம பவேத் ரோகி ஜன்ம
    ஜன்ம தரித்ரஹ|| (நமஸ்காரம்)

    11. ஸ்த்ரீ தைல மது மாம்ஸானி நஸத்ய
    நோதுர வோதிேனே|
    நவ்யாதி ஸ்லோக தாரித்ரயம் ஸூர்ய
    லோகாஞ்ச கச்சதி|| (நமஸ்காரம்)

    ஓம் சாயா ஸமிக்ஞா சமேத ஸ்ரீ ஸூர்ய நாராயண ஸ்வாமினே நமஹ:
    சிவபெருமானுக்கு உகந்த இந்த போற்றியை தினமும் அல்லது பிரதோஷ நாட்களில் சொல்லி வழிபாடு செய்வது வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.
    சிவபெருமானுக்கு உகந்த இந்த போற்றியை தினமும் அல்லது பிரதோஷ நாட்களில் சொல்லி வழிபாடு செய்வது வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.

    ஓம் அப்பா போற்றி!
    ஓம் அரனே போற்றி!
    ஓம் அரசே போற்றி!
    ஓம் அமுதே போற்றி!
    ஓம் அழகே போற்றி!
    ஓம் அத்தா போற்றி!
    ஓம் அற்புதா போற்றி!
    ஓம் அறிவா போற்றி!
    ஓம் அம்பலா போற்றி!
    ஓம் அரியோய் போற்றி!
    ஓம் அருந்தவா போற்றி!
    ஓம் அனுவே போற்றி!
    ஓம் அன்பா போற்றி!
    ஓம் ஆதியே போற்றி!
    ஓம் ஆத்மா போற்றி!
    ஓம் ஆரமுதே போற்றி!
    ஓம் ஆரணனே போற்றி!
    ஓம் ஆண்டவா போற்றி!
    ஓம் ஆலவாயா போற்றி!
    ஓம் ஆரூரா போற்றி!
    ஓம் இறைவா போற்றி!
    ஓம் இடபா போற்றி!
    ஓம் இன்பா போற்றி!
    ஓம் ஈசா போற்றி!
    ஓம் உடையாய் போற்றி!
    ஓம் உணர்வே போற்றி!
    ஓம் உயிரே போற்றி!
    ஓம் ஊழியே போற்றி!
    ஓம் எண்ணே போற்றி!
    ஓம் எழுத்தே போற்றி!
    ஓம் எண் குணா போற்றி!
    ஓம் எழிலா போற்றி!
    ஓம் எளியா போற்றி!
    ஓம் ஏகா போற்றி!
    ஓம் ஏழிசையே போற்றி!
    ஓம் ஏறுர்ந்தாய் போற்றி!
    ஓம் ஐயா போற்றி!
    ஓம் ஒருவா போற்றி!
    ஓம் ஒப்பிலானே போற்றி!
    ஓம் ஒளியே போற்றி!
    ஓம் ஓங்காரா போற்றி!
    ஓம் கடம்பா போற்றி!
    ஓம் கதிரே போற்றி!
    ஓம் கதியே போற்றி!
    ஓம் கனியே போற்றி!
    ஓம் கலையே போற்றி!
    ஓம் காருண்யா போற்றி!
    ஓம் குறியே போற்றி!
    ஓம் குணமே போற்றி!
    ஓம் கூத்தா போற்றி!
    ஓம் கூன்பிறையாய் போற்றி!
    ஓம் சங்கரா போற்றி!
    ஓம் சதுரா போற்றி!
    ஓம் சதாசிவா போற்றி!
    ஓம் சிவையே போற்றி!
    ஓம் சிவமே போற்றி!
    ஓம் சித்தமே போற்றி!
    ஓம் சீரா போற்றி!
    ஓம் சுடரே போற்றி!
    ஓம் சுந்தரா போற்றி!
    ஓம் செல்வா போற்றி!
    ஓம் செங்கணா போற்றி!
    ஓம் சொல்லே போற்றி!
    ஓம் ஞாயிறே போற்றி!
    ஓம் ஞானமே போற்றி!
    ஓம் தமிழே போற்றி!
    ஓம் தத்துவா போற்றி!
    ஓம் தலைவா போற்றி!
    ஓம் தந்தையே போற்றி!
    ஓம் தாயே போற்றி!
    ஓம் தாண்டவா போற்றி!
    ஓம் திங்களே போற்றி!
    ஓம் திசையே போற்றி!
    ஓம் திரிசூலா போற்றி!
    ஓம் துணையே போற்றி!
    ஓம் தெளிவே போற்றி!
    ஓம் தேவதேவா போற்றி!
    ஓம் தோழா போற்றி!
    ஓம் நமசிவாயா போற்றி!
    ஓம் நண்பா போற்றி!
    ஓம் நஞ்சுண்டாய் போற்றி!
    ஓம் நான்மறையாய் போற்றி!
    ஓம் நிறைவா போற்றி!
    ஓம் நினைவே போற்றி!
    ஓம் நீலகண்டா போற்றி!
    ஓம் நெறியே போற்றி!
    ஓம் பண்ணே போற்றி!
    ஓம் பித்தா போற்றி!
    ஓம் புனிதா போற்றி!
    ஓம் புராணா போற்றி!
    ஓம் பெரியோய் போற்றி!
    ஓம் பொருளே போற்றி!
    ஓம் பொங்கரவா போற்றி!
    ஓம் மதிசூடியே போற்றி!
    ஓம் மருந்தே போற்றி!
    ஓம் மலையே போற்றி!
    ஓம் மனமே போற்றி!
    ஓம் மணாளா போற்றி!
    ஓம் மணியே போற்றி!
    ஓம் மெய்யே போற்றி!
    ஓம் முகிலே போற்றி!
    ஓம் முக்தா போற்றி!
    ஓம் முதல்வா போற்றி!
    ஓம் வானமே போற்றி!
    ஓம் வாழ்வே போற்றி!
    ஓம் வையமே போற்றி!
    ஓம் விநயனே போற்றி!
    ஓம் விநாயகனே போற்றி! போற்றி!
    ஸ்ரீரெங்கநாத அஷ்டோத்திரத்தை புரட்டாசி மாதம் முழுவதும் சொல்லி பெருமாளை வழிபாடு செய்து வந்தால் வறுமை நீங்கி ஐஸ்வர்யம் பெருகும்.
    1) ஓம் ஸ்ரீ ரங்கநாதாய நம:
    2) ஓம் தேவேசாய நம:
    3) ஓம் ஸ்ரீரங்க ப்ரம்ம ஸம்ஜ்ஞிதாய நம:
    4) ஓம் சேஷ பர்யங்க சயநாய நம:
    5) ஓம் ஸ்ரீநிவாஸ புஜாந்தராய நம:
    6) ஓம் இந்த்ர நீலோத்பல ச்யாமாய நம:
    7) ஓம் புண்டரீக நிபே க்ஷணாய நம:
    8) ஓம் ஸ்ரீவத்ஸலா ஞ்சிதாய நம:
    9) ஓம் ஹாரிணே நம:
    10) ஓம் வநமாலிநே நம:
    11) ஓம் ஹலாயுதாய நம:
    12) ஓம் பீதாம்பர தராய நம:
    13) ஓம் தேவாய நம:
    14) ஓம் வராய நம:
    15) ஓம் நாராயணாய நம:
    16) ஓம் ஹரயே நம:
    17) ஓம் ஸ்ரீ பூமி ஸஹிதாய நம:
    18) ஓம் புருஷாய நம:
    19) ஓம் மஹாவிஷ்ணவே நம:
    20) ஓம் ஸநாதநாய நம:
    21) ஓம் ஸிம்ஹாஸ நஸ்தாய நம:
    22) ஓம் பகவதே நம:
    23) ஓம் வாஸு தேவாய நம:
    24) ஓம் ப்ரபா வ்ருதாய நம:
    25) ஓம் கந்தர்ப்ப கோடி லாவண்யாய நம:
    26) ஓம் கஸ்தூரி திலகோ ஜ்லாய நம:
    27) ஓம் அச்யுதாய நம:
    28) ஓம் சங்க சக்ர கதா பத்ம ஸுரக்ஷித சதுர்ப்புஜாய நம:
    29) ஓம் ஸ்ரீமத் ஸுந்தர ஜாமாத்ரே நம:
    30) ஓம் ஸ்ரீநாதாய நம:
    31) ஓம் தேவசிகா மணயே நம:
    32) ஓம் ஸ்ரீரங்க நாயகாய நம:
    33) ஓம் லக்ஷ்மீ வல்லபாய நம:
    34) ஓம் தேஜஸாம் நிதயே நம:
    35) ஓம் ஸர்வ சர்ம ப்ரதாய நம:
    36) ஓம் அஹீசாய நம:
    37) ஓம் ஸாமகாந ப்ரியோத் ஸவாய நம:
    38) ஓம் அம்ருதத் வப்ரதாய நம:
    39) ஓம் நித்யாய நம:
    40) ஓம் ஸர்வ ப்ரபவே நம:
    41) ஓம் அரிந்தமாய நம:
    42) ஓம் ஸ்ரீபத்ர குங்குமா லிப்தாய நம:
    43) ஓம் ஸ்ரீமூர்த்தயே நம:
    44) ஓம் சித்தரஞ்ஜிதாய நம:
    45) ஓம் ஸர்வ லக்ஷண ஸம்பந்னாய நம:
    46) ஓம் சாந்தாத்மனே நம:
    47) ஓம் தீர்த்த நாயகாய நம:
    48) ஓம் ஸ்ரீரங்கநாயிகீ கேசாய நம:
    49) ஓம் யக்ஞ மூர்த்தயே நம:
    50) ஓம் ஹிரண் மயாய நம:
    51) ஓம் ப்ரணவாகார ஸதநாய நம:
    52) ஓம் ப்ரணார்த்த ப்ரதாயகாய நம:
    53) ஓம் கோதா ப்ராணேச்வராய நம:
    54) ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நம:
    55) ஓம் ஜகந் நாதாய நம:
    56) ஓம் ஜயப்ரதாய நம:
    57) ஓம் நிசுளா புரவல்லீசாய நம:
    58) ஓம் நித்ய மங்களதாயகாய நம:
    59) ஓம் கந்தஸ் தம்பத்வ யோல்லாஸி காயத்ரீ ரூப மண்டபாய நம:
    60) ஓம் ப்ருத்ய வர்க்க சரண்யாய நம:
    61) ஓம் பலபத்ர ப்ரஸாதகாய நம:
    62) ஓம் வேதச்ருங்க விமானஸ்தாய நம:
    63) ஓம் வ்யாக் ராஸுர நிஷூதநாய நம:
    64) ஓம் கருடா நந்த ஸேநேச கஜவக்த்ராதி ஸேவிதாய நம:
    65) ஓம் சங்கர ப்ரிய மாஹாத்மநே நம:
    66) ஓம் ச்யாமாய நம:
    67) ஓம் சந்தநு வந்திதாய நம:
    68) ஓம் பாஞ்சராத் ரார்ச்சிதாய நம:
    69) ஓம் அநேக பக்த நேத்ரோத்ஸவ ப்ரதாய நம:
    70) ஓம் கலசாம் போதிநிலயாய நம:
    71) ஓம் க்ஷீராம்போதி நிலயாய நம:
    72) ஓம் கமலாஸந பூஜிதாய நம:
    73) ஓம் ஸநந்த நந்த ஸ்நக ஸுத்ராமா மரஸேவிதாய நம:
    74) ஓம் ஸத்ய லோகபராவாஸாய நம:
    75) ஓம் சக்ஷஷே நம:
    76) ஓம் அஷ்டாக்ஷராய நம:
    77) ஓம் அவ்யாய நம:
    78) ஓம் இக்ஷ்வாகு பூஜித பதாய நம:
    79) ஓம் வஸிஷ்டாதி ஸ்துதாய நம:
    80) ஓம் அநகாய நம:
    81) ஓம் ராகவா ராதிதாய நம:
    82) ஓம் ஸ்வாமிநே நம:
    83) ஓம் ராமாய நம:
    84) ஓம் ராஜேந்த்ர வந்திதாய நம:
    85) ஓம் விபீஷணார்ச்சித பதாய நம:
    86) ஓம் லங்காராஜ்ய வரப்ரதாய நம:
    87) ஓம் காவேரி மத்ய நிலயாய நம:
    88) ஓம் கல்யாணபுர வாஸ்து காய நம:
    89) ஓம் தர்மவர்மாதி சோளேந்த்ர பூஜிதாய நம:
    90) ஓம் புண்ய கீர்த்தநாய நம:
    91) ஓம் புருஷாத்தம க்ருதஸ்தாநாய நம:
    92) ஓம் பூலோக ஜன பாக்யதாய நம:
    93) ஓம் அக்ஞானத மனர் ஜ்யோதிஷே நம:
    94) ஓம் அர்ஜூன பரிய ஸாரதயே நம:
    95) ஓம் சந்த்ர புஷ்கரிணீ நாதாய நம:
    96) ஓம் சண்டாதி தவார பாலகாய நம:
    97) ஓம் குமுதாதி பரீவாராய நம:
    98) ஓம் பாண்ட்யஸா ரூப்ய தாயகாய நம:
    99) ஓம் ஸப்தாவரண ஸம்வீத ஸதநாய நம:
    100) ஓம் ஸுர போஷகாய நம:
    101) ஓம் நவநீத சுபாஹாராய நம:
    102) ஓம் விஹாரிணே நம:
    103) ஓம் நாரத ஸ்துதாய நம:
    104) ஓம் ரோஹிணீ ஜன்ம தாரகாய நம:
    105) ஓம் கார்த்திகேய வரப்ரதாய நம:
    106) ஓம் ஸ்ரீரங்காதிபதயே நம:
    107) ஓம் ஸ்ரீமதே நம:
    108) ஓம் ஸ்ரீமத்ரங்க மஹாநிதயே நம:

    ஓம் ஸ்ரீரங்கபரப்ரஹ்மணே நம:
    புரட்டாசி மாதத்தில் தினமும் காலையில் இந்த துதியை ஜபம் செய்து வந்தால் திருமலையப்பனின் திருவருளால் கடன்கள் தீரும். சகல தோஷங்களும் விலகும்.
    ஸ்வாமின் ஜகத்தரண வாரிதிமத்ய மக்னம்
    மாமுத்தராத்ய க்ருபயா கருணாபயோதே
    லக்ஷ்மீஞ்சதேஹி விபுலாம் ருணவாரணாய

    ஸ்ரீவெங்கடேச மம தேஹி கராவலம்பம்.
    வெங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரம்.

    பொதுப் பொருள்:

    அகில உலகத்திற்கும் இறைவனே, வெங்கடாஜலபதியே! தங்களுக்கு நமஸ்காரம். அனைத்து உலகங்களையும் காப்பவரே, உம்மை வணங்குகிறேன். கருணைக் கடலே, உலகியல் மாயையில் மூழ்கித் தவிக்கும் என்னைக் கரை சேர்க்கக் கைகொடுத்து அருள்வாய். நான்பட்ட கடன்களைத் தீர்க்க என் மீது இரக்கம் காட்டுவாய். மகாலட்சுமியின் நாயகனே! எனக்கு எல்லா செல்வ வளங்களையும் அருளி, என் சகல தோஷங்களையும் போக்கி, என்னைக் காக்கும் இறைவனான வெங்கடாஜலபதியே, தங்களை மீண்டும் வணங்குகிறேன்.

    காலையில் இந்த துதியை ஜபம் செய்து வந்தால் திருமலையப்பனின் திருவருளால் கடன்கள் தீரும். சகல தோஷங்களும் விலகும்.
    ஐந்தெழுத்து மந்திரமான ஓம் நமசிவாய எனும் நாமங்களில் உள்ள எழுத்துக்களில் தொடங்கும் இத்துதியால் பரமேஸ்வரனை துதித்தால் எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.
    நாகேந்த்ர ஹாராய த்ரிலோசனாய
    பஸ்மாங்க ராகாய மகேஸ்வராய
    நித்யாய சுத்தாய திகம்பராய

    தஸ்மை நகாராய நம:சிவாய
    மந்தாகினி ஸலில சந்தன சர்ச்சிதாய
    நந்தீச்வர ப்ரமத நாத மகேஸ்வராய
    மந்தார முக்ய பஹுபுஷ்ப ஸுபூஜிதாய
    தஸ்மை மகாராய நம:சிவாய

    சிவாய கௌரீ வதனாப்ஜ வ்ருந்த
    ஸூர்யாய தக்ஷாத்வர நாசகாய
    ஸ்ரீநீலகண்டாய வ்ருஷத்வஜாய
    தஸ்மை சிகாராய நம:சிவாய

    வசிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய
    முனீந்த்ர தேவார்ச்சித சேகராய
    சந்த்ரார்க்க வைச்வாநர லோச்சனாய
    தஸ்மை வகாராய நம:சிவாய

    யக்ஷ ஸ்வரூபாய ஜடாதராய
    பினாக ஹஸ்தாய சனாதனாய
    திவ்யாய தேவாய திகம்பராய
    தஸ்மை யகாராய நம:சிவாய

    பஞ்சாஷரமிதம் புண்யம்ய: படேச் சிவசன்னிதௌ
    சிவலோக மவாப்னோதி சிவனே ஸஹமோமதே

    பொதுப்பொருள்: ஐந்தெழுத்து மந்திரமான ஓம் நமசிவாய எனும் நாமங்களில் உள்ள எழுத்துக்களில் தொடங்கும் இத்துதியால், பிரதோஷ காலத்தில்  பரமேஸ்வரனை துதித்தால் எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.

    அம்பிகைக்கு உரிய இந்த ஸ்ரீ காமாக்ஷி சூர்ணிகாவை நாமும் அவ்வப்போது வாசித்து அவள் பெருமைகளை மனதார சொல்லி வாயார வாழ்த்தி நலம் பெறுவோம்..
    பிரம்மோற்சவம் நிறைவடைந்து தினசரி விடையாற்றி உற்சவத்திற்கு அம்பாள் எழுந்தருளி ஊஞ்சல் கண்டு தனது ஆஸ்தானத்திற்கு எழுந்தருளும் போதும், பிரம்மோற்சவத்தின் 6 ஆம் திருநாள் அன்று காலை நடைபெறும் கந்தப்பொடி இடிக்கும் நிகழ்விலும் மட்டுமே சொல்ல படுகிறது.. இதோ அந்த சுலோகம் ஸ்ரீ காமாக்ஷி சூர்ணிகா

    ஸ்ரீ ஜய ஜய ஸ்ரீ காமகிரீந்திர நிலயே!
    ஜய ஜய ஸ்ரீ காமகோடி பீடஸ்திதே!
    ஜய ஜய ஸ்ரீ த்ரிஸத் வாரிம் சத்கோண ஸ்ரீ சக்ராந்தரால பிந்து பீடோ பாரிலஸத் பஞ்ச ப்ரஹ்மமய மஞ்சமத்யஸ்த ஸ்ரீ சிவகாமேச வாமாங்க நிலயே!
    ஜய ஜய ஸ்ரீ விதி ஹரிஹர ஸுரகண வந்தித சரணார விந்தயுக லே!
    ஜய ஜய ஸ்ரீமத் ரமாவாணிந்த்ராணி ப்ரமுக ரமணீ கரகமல ஸமர்பித சரண கமலே!
    ஜய ஜய ஸ்ரீ நிகில நிகமாகம ஸகல சம்வேத்யமான விவித வஸ்திராலங்கிருத ஹேம நிர்மித அனர்கபூஷண பூஷித திவ்ய மூர்த்தே!
    ஜய ஜய ஸ்ரீ அனவ்ரதாபிஷேக தூபதீப நைவேத்யாதி நானாவிதோபாசாரை: பரிஷோபிதே!
    ஜய ஜய ஸ்ரீ ஸ்ரீ காஞ்சி நகர் யாம் தவாத்ரிம்சத் தர்மப்ரதிபாதனார்தம் ஸ்தாபித ஹேமத்வஜாலங்கருதே!
    9.ஜய ஜய ஸ்ரீ ஸகல மந்த்ர தந்த்ர யந்த்ரமய பராபிலாகாச ஸ்வரூபே!
    ஜய ஜய ஸ்ரீ காஞ்சி நகர் யாம் காமாக்ஷி இதி ப்ரக்யாத நாமாங்கிதே !
    ஜய ஜய ஸ்ரீ மஹா த்ரிபுர சுந்தரீ பஹு பராக்!
    சுபம் !

    அம்பிகைக்கு உரிய இந்த ஸ்ரீ காமாக்ஷி சூர்ணிகாவை நாமும் அவ்வப்போது வாசித்து அவள் பெருமைகளை மனதார சொல்லி வாயார வாழ்த்தி நலம் பெறுவோம்.. ஜெய ஜெய காமாக்ஷி

    வழிபாட்டின் உபசாரங்கள் எட்டோ, பதினாறோ எனக்குத்தேவையில்லை. எங்கு முழுமையான பக்தி இருக்கிறதோ அங்கு நான் அமர்கிறேன் என்று பாபாவே சொல்லி இருக்கிறார்.
    யார் ஒருவர் இந்த மூல மந்திரத்தை தினமும் 108 தடவை மனதுக்குள் உச்சரிக்கிறார்களோ அவர்களுக்கு பாபாவின் அருள் கடாட்சம் நிரம்பக் கிடைக்கும். இதை சாய்பாபாவே பல தடவை தனது பக்தர்களிடம் சொல்லி இருக்கிறார்.

    பாபாவை குருவாக ஏற்று நம்பிக்கை வைத்து அவரை தியானிப்பவர்கள் தினமும் இந்த மந்திரத்தை தவறாமல் சொல்ல வேண்டும். அப்படி மூல மந்திரத்தை சொல்ல சொல்ல அது பாபா காட்டும் பாதைக்கு நம்மையும் அறியாமல் நம்மை அழைத்துச் செல்லும்.

    “சாய்.... சாய்... என்று எப்போதும் கூறிக் கொண்டிருப்பீர்களானால் நான் உங்களை ஏழு கடலுக்கு அப்பால் எடுத்துச் செல்வேன். இம்மொழிகளை நம்புங்கள். நீங்கள் நிச்சயம் நன்மை அடைவீர்கள். வழிபாட்டின் உபசாரங்கள் எட்டோ, பதினாறோ எனக்குத்தேவையில்லை. எங்கு முழுமையான பக்தி இருக்கிறதோ அங்கு நான் அமர்கிறேன்” என்று பாபாவே சொல்லி இருக்கிறார்.

    தினமும் காலையில் இறைவழிபாடு செய்யும் போது ஒரு 10 நிமிடம் ஒதுக்கி “ஓம் சாய் ஸ்ரீசாய் ஜெய ஜெய சாய்” மூல மந்திரத்தை மனதார சொல்லுங்கள். உங்களது அன்பையும், பக்தியையும் பாபா ஏற்றுக் கொண்டு ஆசீர்வதிப்பார். உங்கள் குடும்பத்துக்கு பாதுகாப்பு கவசமாக இந்த மூல மந்திரம் இருக்கும். இதை பல்வேறு வகைகளில் பாபா தன் பக்தர்களுக்கு உணர்த்தி இருக்கிறார்.
    அன்போடு சென்று சேரும் உறவும், நேயமும் கலந்து நம்பெருமானை நான் தேடுவேன். அப்படித் தேடி, சிவபெருமானை கண்டு அவருடைய திருபாதத்தை பற்றிக்கொள்வேன்.
    திருமூலர் எழுதிய திருமந்திரம் பக்தியையும், ஆன்மிகத்தின் வழியையும், இன்னும் பலவற்றையும் கற்பிக்கும் நூலாக இருக்கிறது. அந்த திருமந்திரத்தில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் இங்கே பார்ப்போம்.

    பாடல்:- நாடும் உறவும் கலந்து எங்கள் நந்தியைத்

    தேடுவன் தேடிச் சிவபெருமான் என்று

    கூடுவன் கூடிக் குரைகழற்கே செல்ல

    வீடும் அளவும் விடுகின்றிலேனே.

    பொருள்:- அன்போடு சென்று சேரும் உறவும், நேயமும் கலந்து நம்பெருமானை நான் தேடுவேன். அப்படித் தேடி, சிவபெருமானை கண்டு அவருடைய திருபாதத்தை பற்றிக்கொள்வேன். என்னுடைய கர்மவினைகள் அகன்று, என்னுடை பிறப்பு நீங்கும் வரை, அந்த திருவடிகளை நான் விடமாட்டேன்.
    சித்தர்களின் மந்திரத்தை எவர் ஒருவர் ஜெபிக்கிறாரோ அவருக்கு சித்தர்களின் பரிபூரணம் அருள் கிடைக்கும். இன்று சித்தர்களின் பரிபூரணம் அருள் கிடைக்கும் மந்திரத்தை பார்க்கலாம்.
    அகத்தியர் மூல மந்திரம்

    ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி

    போகர் மூல மந்திரம்

    ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி

    திருமூலர் மூல மந்திரம்

    ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி

    இடைக்காடர் மூல மந்திரம்

    ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி

    கருவூரார் மூல மந்திரம்

    ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி

    கோரக்கர் மூல மந்திரம்

    ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி

    குதம்பை சித்தர் மூல மந்திரம்

    ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி

    பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்

    ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி

    சட்டைமுனி மூல மந்திரம்

    ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி

    சிவவாக்கியர் மூல மந்திரம்

    ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி

    சுந்தரானந்தர் மூல மந்திரம்

    ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி

    கொங்கணர் மூல மந்திரம்

    ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி

    வான்மீகர் மந்திரம்

    ஓம் வான்மீகர் திருவடிகள் போற்றி

    கமலமுனி மந்திரம்

    ஓம் கமலமுனி திருவடிகள் போற்றி

    மச்சமுனி மந்திரம்

    ஓம் மச்சமுனி திருவடிகள் போற்றி

    பதஞ்சலி மந்திரம்

    ஓம் பதஞ்சலி முனிவர் திருவடிகள் போற்றி

    இராமத்தேவர் மந்திரம்

    ஓம் இராமத்தேவர் திருவடிகள் போற்றி

    தன்வந்த்ரி மந்திரம்

    ஓம் தன்வந்த்ரி திருவடிகள் போற்றி
    ஓம் குருவே போற்றி போற்றி
    மகா விஷ்ணு எடுத்த அவதாரங்களில் மூன்றாவதாக அமைந்த அவதாரம் வராக அவதாரம். கொடிய நோய்கள் தீர, பகை அழிய, தோஷங்கள் தொலைய அனுதினமும் இந்த வராக மூர்த்தி மந்திரத்தை படிக்கலாம்.

    ஸுத்தஸ்படிக ஸங்காஸம் பூர்ண சந்த்ர நிபானநம்
    கடிந்யஸ்த கரத்வந்த்வம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம்
    தயாநிதிம் தயாஹீநம் ஜீவாநாமார்த்திஹம் விபும்
    தைத்யாந்தகம் கதாபாணிம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம்

    பொருள்: சுத்த ஸ்படிகம் போல் நிர்மலமானவரே, பூர்ண சந்திரனை போல ஒளிபடைத்தவரே, வராக மூர்த்தியே நமஸ்காரம். திருக்கரங்களில் சக்கரம், கதையேந்தி அருள்பவரே, கருணையே வடிவானவரே, ஜீவன்களைக் காப்பவரே, ஸ்ரீமுஷ்ணத்தில் திருவருட்பாலிப்பவரே, வராக மூர்த்தியே நமஸ்காரம்.

    கொடிய நோய்கள் தீர, பகை அழிய, தோஷங்கள் தொலைய அனுதினமும் இந்த வராக மந்திரத்தை படிக்கலாம்.

    இந்த மந்திரத்தை திருவோண நட்சத்திர தினத்தன்று காலை, மாலை இரு நேரமும் உச்சரித்து வந்தால் பெருமாளின் பரிபூரண அருட்கடாட்சத்தை பெற முடியும்.
    திருவோண நட்சத்திர தினத்தன்று பெருமாளின் மூல மந்திரத்தை 108 தடவை சொல்ல வேண்டும். இதுதான் அந்த மந்திரம்

    “ஓம் ஹ்ராம் ஹ்ரீம் க்லீம்
     ஓம் நமோ ஸ்ரீவேங்கடேசாய நமக”

    இந்த மந்திரத்தை திருவோண நட்சத்திர தினத்தன்று காலை, மாலை இரு நேரமும் உச்சரித்து வந்தால் பெருமாளின் பரிபூரண அருட்கடாட்சத்தை பெற முடியும்.
    இப்படி ஏகாதசி சிறப்புகளும், திருவோண நட்சத்திரத்தின் மகிமைகளும் கொண்ட தினமாக நாளைய தினம் அமைந்துள்ளது. இந்த புண்ணிய நாளில் புரட்டாசி முதல் நாள் தொடங்குவது மிக மிக விஷேசமாகும். எனவே நாளை காலையில் அருகில் உள்ள பெருமாள் ஆலயங்களுக்கு சென்று அவரை மனப்பூர்வமாக வழிபடுங்கள்.

    ஆலயங்களுக்கு செல்ல இயலாத சூழ்நிலை இருந்தால், வீட்டிலேயே பெருமாள் படத்தை வைத்து மலர் மாலைகள் சூடி, சர்க்கரை பொங்கல் உள்ளிட்ட நைவேத்தியங்கள் படைத்து அவரை மனப்பூர்வமாக வழிபடுங்கள். இன்று காலை திருவோண நட்சத்திரம், ஏகாதசி, புரட்டாசி முதல் நாள் தொடக்கம் ஆகிய மூன்றும் சங்கமித்து இருக்கின்றன. எனவே இன்று காலையில் இந்த சிறப்பு வழிபாடுகளை வைத்துக்கொள்வது மிக மிக நல்லது.
    ×