என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
வராக நவராத்திரியின் ஒன்பது நாட்களும், இரவு நேரத்தில் விரதமிருந்து வராகி அம்மனை பூஜை செய்துவந்தால், கண்டிப்பாக நல்லவை அனைத்தும் வந்துசேரும் என்பது சித்தர்கள் வாக்கு.
பன்னிரண்டு மாதங்களுக்கும், 12 நவராத்திரிகள் இருப்பதாக ‘சாக்த சாஸ்திரங்கள்’ குறிப்பிடுகின்றன. ஆனால் பெரும்பாலான மக்களால் கொண்டாடப்படும் நவராத்திரிகள், புரட்டாசி மாதத்தில் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ‘சாரதா நவராத்திரி’, பங்குனி மாதத்தில் வட மாநிலங்களில் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ‘வசந்த நவராத்திரி’ ஆகியவைதான். இதுதவிர தை மாத அமாவாசையில் தொடங்கி ஒன்பது நாட்கள் வழிபடப்படும் ‘சியாமளா நவராத்திரி’, ஆனி மாதத்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் அம்பாளை, வராகியாக நினைத்து வழிபடப்படும் ‘வராக நவராத்திரி’ ஆகியவையும் வழிபாட்டில் உள்ளன.
வராக நவராத்திரியை ‘ஆஷாட நவராத்திரி’ என்றும் அழைப்பார்கள். வராகி அம்மன் என்றாலே ராகு கால வழிபாடும், பஞ்சமி வழிபாடும், பின்னிரவு வழிபாடும் பெரும் சிறப்புக்குரியவை. வராக நவராத்திரியின் ஒன்பது நாட்களும், இரவு நேரத்தில் விரதமிருந்து வராகி அம்மனை பூஜை செய்துவந்தால், கண்டிப்பாக நல்லவை அனைத்தும் வந்துசேரும் என்பது சித்தர்கள் வாக்கு.
தமிழகத்தில் தஞ்சாவூர் பெரிய கோவிலில் வராகி அம்மனுக்கு, ஆஷாட நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வெகு விமரிசையாக வழிபாடுகள் நடைபெறும். இதில் பங்கேற்பவா்களுக்கு கல்வி, செல்வம், வீரம் மூன்றும் கைவரப்பெறும். வராகி அம்மன் ஆலயம் அருகில் இல்லை என்றாலோ, வீடுகளில் வராகி அம்மன் வடிவம் இல்லை என்றாலோ, அருகில் உள்ள ஆலயங்களில் உள்ள அம்பாள் சன்னிதிகளில் வழிபாடு செய்தாலே போதுமானது. ஏனெனில் அம்பாளின் வடிவாகத்தான் வராகியைப் பார்க்கிறோம்.
வராகி நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும், வராகி அம்மனுக்கு தேனில் ஊற வைத்த மாதுளை முத்துக்களை நைவேத்தியமாக படைப்பார்கள். மேலும் அந்த அன்னைக்கு சிவப்பு, மஞ்சள், பச்சை நிற வஸ்திரம் அணிவிப்பதும் சிறந்தது. அதிலும் பச்சை நிறமே, வராகி அம்மனுக்கு பெரிதும் உகந்தது. வராகி அம்மனை வழிபடுபவர்களும், இந்த நவராத்திரி காலங்களில் பச்சை நிற ஆடைகளை அணிந்து வழிபாடு செய்வது உடனடி பலன்களைத் தரும். காஞ்சிபுரம் காமாட்சி அன்னையின் இடது புறத்தில் வராகி தேவி அருள் பாலிக்கிறாள். அங்கு வராகி அம்மனின் எதிரில் ‘சந்தான ஸ்தம்பம்’ உள்ளது. இந்த ஸ்தம்பத்தைப் பிரதட்சணம் செய்யும் பக்தர் களுக்குப் புத்திர பாக்கியம் உண்டாகும்.
பிராமி, கவுமாரி, வைஷ்ணவி, இந்திராணி, சாமுண்டி, மகேஸ்வரி, வராகி எனும் சப்த மாதா்களில், வராகி அம்மன் சிறந்த வரப் பிரசாதி ஆவார். இவர் சப்த மாதர்கள் என்னும் எழுவரில், ஐந்தாமானவள். மனித உடலும், வராக (பன்றி) முகமும் கொண்டவள். சப்த மாதர்களில் வராகியை தனி தெய்வமாக வழிபடும் முறை பழங்காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது. மாதுளை முத்துக்களை தேனில் சிறிது ஊறவைத்து, அதனை வராகி அம்மனுக்கு வைவேத்தியம் செய்து பஞ்சமி நாட்களின் பின்னிரவில் (இரவு 11 மணிக்கு மேல்) அல்லது வராகி நவராத்திரி நாட்களின் பத்தாவது நாளான நிறைவு நாள் வரையிலும் நெய் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, வராகி அம்மனுக்கு செம்பருத்தி, சிவப்பு அரளி, மரிக்கொழுந்து மாலை சூட்டி வழிபாடு செய்து வரலாம். இந்த வழிபாட்டின் மூலம் நற்பலன்களை அடையலாம்.
பள்ளூர் அரசாலை அம்மன் என்னும் வராகி அம்மன் பெரும் வரம் தந்தருளுபவள். காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் பள்ளூர் அரசாலை அம்மன் திருக்கோவில் உள்ளது. இங்கு தெற்கு நோக்கி அமர்ந்தநிலையில் வராகி அம்மன் அருள்கிறாள். மிகவும் பழமையான இந்த ஆலயத்தில் செவ்வாய், பஞ்சமி, அஷ்டமி, அமாவாசை, பவுர்ணமி நாட்களில், வராகி அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பானது. அந்த வழிபாட்டின் போது, வாழை இலை போட்டு, அதில் பச்சரிசியை பரப்பி வைத்து, தேங்காய் உடைத்து, அதன் இரு மூடியிலும் பசு நெய் விட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் நம்முடைய கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்.
ராமநாதபுரம் உத்தரகோசமங்கையில் உள்ள மங்களாம்பிகை உடனுறை மங்களநாத சுவாமி திருக் கோவிலின் அருகே மிகவும் பழமைவாய்ந்த சுயம்பு மகா வராகி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ‘சீதளா தீர்த்தம்’ என்ற தீர்த்தம் காணப்படுகிறது. இந்த தீர்த்தத்தைப் பற்றி தன்னுடைய திருவெம்பாவையில் மாணிக்கவாசகர் பாடியிருக்கிறார். மேலும் உத்தரகோசமங்கை ஆலயத்தை அலங்கரிக்கும் இறைவன்- இறைவி இருவருடைய தீர்த்தவாரியும், இந்த சீதளா தீர்த்தத்தில் தான் நடைபெற்று வருகிறது. இத்தலத்தில் உள்ள சுயம்பு வராகி அம்மனை, ‘ஆதி வராகி’ என்று போற்றுகின்றனர். மங்கை மாகாளி அம்மன் என்பதும் இந்த தேவியின் திருநாமத்தில் ஒன்று.
வேலூர் அருகில் உள்ள கீழ்மின்னல் ரத்னகிரி பாலமுருகன் திருக்கோவில் அருகிலும் வராகி அம்மனுக்கு மிகவும் பழமையான கோவில் ஒன்று இருக்கிறது.
மாமல்லபுரம் அருகில் உள்ள சதுரங்கபட்டினம் திருவேட்டீஸ்வரி உடனாய அரசேஸ்வரர் ஆலயம் மிகவும் தொன்மை வாய்ந்தது. இங்கு தெற்கு நோக்கிய திருவேட்டீஸ்வரி அம்பாள் கருவறை கோஷ்டத்தில், கிழக்கு நோக்கிய வண்ணம் பைரவரின் பார்வையில் வராகி அம்மன் அருள்பாலிப்பது சிறப்பு.
வராக நவராத்திரியை ‘ஆஷாட நவராத்திரி’ என்றும் அழைப்பார்கள். வராகி அம்மன் என்றாலே ராகு கால வழிபாடும், பஞ்சமி வழிபாடும், பின்னிரவு வழிபாடும் பெரும் சிறப்புக்குரியவை. வராக நவராத்திரியின் ஒன்பது நாட்களும், இரவு நேரத்தில் விரதமிருந்து வராகி அம்மனை பூஜை செய்துவந்தால், கண்டிப்பாக நல்லவை அனைத்தும் வந்துசேரும் என்பது சித்தர்கள் வாக்கு.
தமிழகத்தில் தஞ்சாவூர் பெரிய கோவிலில் வராகி அம்மனுக்கு, ஆஷாட நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வெகு விமரிசையாக வழிபாடுகள் நடைபெறும். இதில் பங்கேற்பவா்களுக்கு கல்வி, செல்வம், வீரம் மூன்றும் கைவரப்பெறும். வராகி அம்மன் ஆலயம் அருகில் இல்லை என்றாலோ, வீடுகளில் வராகி அம்மன் வடிவம் இல்லை என்றாலோ, அருகில் உள்ள ஆலயங்களில் உள்ள அம்பாள் சன்னிதிகளில் வழிபாடு செய்தாலே போதுமானது. ஏனெனில் அம்பாளின் வடிவாகத்தான் வராகியைப் பார்க்கிறோம்.
வராகி நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும், வராகி அம்மனுக்கு தேனில் ஊற வைத்த மாதுளை முத்துக்களை நைவேத்தியமாக படைப்பார்கள். மேலும் அந்த அன்னைக்கு சிவப்பு, மஞ்சள், பச்சை நிற வஸ்திரம் அணிவிப்பதும் சிறந்தது. அதிலும் பச்சை நிறமே, வராகி அம்மனுக்கு பெரிதும் உகந்தது. வராகி அம்மனை வழிபடுபவர்களும், இந்த நவராத்திரி காலங்களில் பச்சை நிற ஆடைகளை அணிந்து வழிபாடு செய்வது உடனடி பலன்களைத் தரும். காஞ்சிபுரம் காமாட்சி அன்னையின் இடது புறத்தில் வராகி தேவி அருள் பாலிக்கிறாள். அங்கு வராகி அம்மனின் எதிரில் ‘சந்தான ஸ்தம்பம்’ உள்ளது. இந்த ஸ்தம்பத்தைப் பிரதட்சணம் செய்யும் பக்தர் களுக்குப் புத்திர பாக்கியம் உண்டாகும்.
பிராமி, கவுமாரி, வைஷ்ணவி, இந்திராணி, சாமுண்டி, மகேஸ்வரி, வராகி எனும் சப்த மாதா்களில், வராகி அம்மன் சிறந்த வரப் பிரசாதி ஆவார். இவர் சப்த மாதர்கள் என்னும் எழுவரில், ஐந்தாமானவள். மனித உடலும், வராக (பன்றி) முகமும் கொண்டவள். சப்த மாதர்களில் வராகியை தனி தெய்வமாக வழிபடும் முறை பழங்காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது. மாதுளை முத்துக்களை தேனில் சிறிது ஊறவைத்து, அதனை வராகி அம்மனுக்கு வைவேத்தியம் செய்து பஞ்சமி நாட்களின் பின்னிரவில் (இரவு 11 மணிக்கு மேல்) அல்லது வராகி நவராத்திரி நாட்களின் பத்தாவது நாளான நிறைவு நாள் வரையிலும் நெய் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, வராகி அம்மனுக்கு செம்பருத்தி, சிவப்பு அரளி, மரிக்கொழுந்து மாலை சூட்டி வழிபாடு செய்து வரலாம். இந்த வழிபாட்டின் மூலம் நற்பலன்களை அடையலாம்.
பள்ளூர் அரசாலை அம்மன் என்னும் வராகி அம்மன் பெரும் வரம் தந்தருளுபவள். காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் பள்ளூர் அரசாலை அம்மன் திருக்கோவில் உள்ளது. இங்கு தெற்கு நோக்கி அமர்ந்தநிலையில் வராகி அம்மன் அருள்கிறாள். மிகவும் பழமையான இந்த ஆலயத்தில் செவ்வாய், பஞ்சமி, அஷ்டமி, அமாவாசை, பவுர்ணமி நாட்களில், வராகி அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பானது. அந்த வழிபாட்டின் போது, வாழை இலை போட்டு, அதில் பச்சரிசியை பரப்பி வைத்து, தேங்காய் உடைத்து, அதன் இரு மூடியிலும் பசு நெய் விட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் நம்முடைய கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்.
ராமநாதபுரம் உத்தரகோசமங்கையில் உள்ள மங்களாம்பிகை உடனுறை மங்களநாத சுவாமி திருக் கோவிலின் அருகே மிகவும் பழமைவாய்ந்த சுயம்பு மகா வராகி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ‘சீதளா தீர்த்தம்’ என்ற தீர்த்தம் காணப்படுகிறது. இந்த தீர்த்தத்தைப் பற்றி தன்னுடைய திருவெம்பாவையில் மாணிக்கவாசகர் பாடியிருக்கிறார். மேலும் உத்தரகோசமங்கை ஆலயத்தை அலங்கரிக்கும் இறைவன்- இறைவி இருவருடைய தீர்த்தவாரியும், இந்த சீதளா தீர்த்தத்தில் தான் நடைபெற்று வருகிறது. இத்தலத்தில் உள்ள சுயம்பு வராகி அம்மனை, ‘ஆதி வராகி’ என்று போற்றுகின்றனர். மங்கை மாகாளி அம்மன் என்பதும் இந்த தேவியின் திருநாமத்தில் ஒன்று.
வேலூர் அருகில் உள்ள கீழ்மின்னல் ரத்னகிரி பாலமுருகன் திருக்கோவில் அருகிலும் வராகி அம்மனுக்கு மிகவும் பழமையான கோவில் ஒன்று இருக்கிறது.
மாமல்லபுரம் அருகில் உள்ள சதுரங்கபட்டினம் திருவேட்டீஸ்வரி உடனாய அரசேஸ்வரர் ஆலயம் மிகவும் தொன்மை வாய்ந்தது. இங்கு தெற்கு நோக்கிய திருவேட்டீஸ்வரி அம்பாள் கருவறை கோஷ்டத்தில், கிழக்கு நோக்கிய வண்ணம் பைரவரின் பார்வையில் வராகி அம்மன் அருள்பாலிப்பது சிறப்பு.
சிவ வழிபாடு செய்தால் நம் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். முன்ஜென்ம பாவங்கள் அனைத்தும் தீரும். சிவ பூஜைக்கு உகந்த ஜோதிர்லிங்க தலங்கள் எதுவென்று அறிந்து கொள்ளலாம்.
* கேதாரம் - இமயம் (கேதாரேஸ்வரர்)
* சோமநாதம் - குஜராத் (சோமநாதேஸ்வரர்)
* மகாகாளேசம் - உஜ்ஜையினி (மகா காளேஸ்வரர்)
* விஸ்வநாதம் - காசி (விஸ்வநாதேஸ்வரர்)
* வைத்தியநாதம் - மகாராஷ்டிரம் (வைத்தியனாதர்)
* பீமநாதம் - மகாராஷ்டிரம் (பீமநாதேஸ்வர்)
* நாகேஸ்வரம் - மகாராஷ்டிரம் (நாகேஸ்வர்)
* ஓங்காரேஸ்வரம் - மத்தியப்பிரதேசம் (ஓங்காரேஸ்வரர்)
* திரயம்பகம் - மகாராஷ்டிரம் (திரயம்பகேஸ்வரர்)
* குசுமேசம் - மகாராஷ்டிரம் (குஸ்ருணேஸ்வர்)
* மல்லிகார்ஜுனம் - ஸ்ரீசைலம் (மல்லிகார்ஜுனர்)
* ராமநாதம் - ராமேஸ்வரம் (ராமநாதர்)
* சோமநாதம் - குஜராத் (சோமநாதேஸ்வரர்)
* மகாகாளேசம் - உஜ்ஜையினி (மகா காளேஸ்வரர்)
* விஸ்வநாதம் - காசி (விஸ்வநாதேஸ்வரர்)
* வைத்தியநாதம் - மகாராஷ்டிரம் (வைத்தியனாதர்)
* பீமநாதம் - மகாராஷ்டிரம் (பீமநாதேஸ்வர்)
* நாகேஸ்வரம் - மகாராஷ்டிரம் (நாகேஸ்வர்)
* ஓங்காரேஸ்வரம் - மத்தியப்பிரதேசம் (ஓங்காரேஸ்வரர்)
* திரயம்பகம் - மகாராஷ்டிரம் (திரயம்பகேஸ்வரர்)
* குசுமேசம் - மகாராஷ்டிரம் (குஸ்ருணேஸ்வர்)
* மல்லிகார்ஜுனம் - ஸ்ரீசைலம் (மல்லிகார்ஜுனர்)
* ராமநாதம் - ராமேஸ்வரம் (ராமநாதர்)
ஆடி மாதத்தில் (ஜூலை - ஆகஸ்ட்) வரும் முக்கியமான சுபமுகூர்த்த நாட்கள் மற்றும் நல்ல நேரம் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
29.7.2021 வியாழன் சஷ்டி உத்திரட்டாதி சித்த காலை 10.30 -11.30
30.7.2021 வெள்ளி சப்தமி ரேவதி அமிர்த காலை 9 -10.30
4.8.2021 புதன் ஏகாதசி மிருகசீரிஷம் சித்த காலை 9 -10.30
13.8.2021 வெள்ளி பஞ்சமி ஹஸ்தம் அமிர்த காலை 6 -7
30.7.2021 வெள்ளி சப்தமி ரேவதி அமிர்த காலை 9 -10.30
4.8.2021 புதன் ஏகாதசி மிருகசீரிஷம் சித்த காலை 9 -10.30
13.8.2021 வெள்ளி பஞ்சமி ஹஸ்தம் அமிர்த காலை 6 -7
கர்ணன் முகத்தில் சோகப் புன்னகை படர்ந்தது. தாய் தன் மீதான பாசத்தில் வந்திருப்பதாக முதலில் நினைத்திருந்தான். ஆனால் அவள் கேட்ட வரங்களின் மூலம், அவள் பாண்டவர்களின் மீதான பாசத்தையும் தன்னோடு சுமந்து வந்திருப்பதை உணர்ந்தான்.
மகாபாரதத்தில் வரும் கர்ணன், தன் வாழ்நாள் முழுவதும் கொடுத்தே பழக்கப்பட்டவன். அவன் எவரிடமும் எதுவும் கேட்டுப் பெற்றது கிடையாது. போர்க்களத்தில் அம்பால் வீழ்த்தப்பட்டு, உயிர் எஞ்சியிருக்கும் தருணத்தில், அவனுக்கு மகாவிஷ்ணு தன்னுடைய விஸ்வரூப காட்சியைக் காட்டினார்.
அப்போதும் கூட அவன் இறைவனிடம் எதுவும் கேட்டுப்பெறவில்லை. இறைவனே “உனக்கு ஏதாவது வரம் கொடுக்க நினைக்கிறேன், கேள்” என்று சொன்னபிறகுதான், ஒரு கோரிக்கையை வைத்தான். அது, “உன் திருக்காட்சியைக் கண்டபிறகு எனக்கு இனி பிறப்பு இல்லை என்று நான் அறிவேன். ஒருவேளை நான் மீண்டும் பிறக்க நேர்ந்தால், அந்தப் பிறவியிலும் என்னிடம் ‘இது வேண்டும்’ என்று கேட்பவர்களுக்கு, ‘இல்லை’ என்று சொல்லாத மனதை தர வேண்டும்” என்று கேட்டான்.
அப்படிப்பட்ட கர்ணன், ஒரே ஒருவரிடம் மட்டும் ‘எனக்கு இதைத் தாருங்கள்’ என்று கேட்டுப் பெற்றான். அந்த நபர், கர்ணனின் தாய் குந்திதேவி.
கர்ணன் தன்னுடைய மகன் என்று தெரிந்ததும், அவனைப் பார்க்கச் சென்றாள், குந்தி. கர்ணனை ஆரத்தழுவி கண்ணீர் விட்டவள், அதன்பிறகு கண்ணன் சொன்னபடி கர்ணனிடம் இரண்டு வரங்களைப் பெற்றாள். ஒன்று, ‘அர்ச்சுனைத் தவிர பாண்டவர்களில் மற்றவர்களை கொல்லக்கூடாது’, மற்றொன்று, ‘அர்ச்சுனன் மீது விடும் நாகாஸ்திரத்தை ஒருமுறைக்கு மேல் மறுமுறை விடக்கூடாது.’
கர்ணன் முகத்தில் சோகப் புன்னகை படர்ந்தது. தாய் தன் மீதான பாசத்தில் வந்திருப்பதாக முதலில் நினைத்திருந்தான். ஆனால் அவள் கேட்ட வரங்களின் மூலம், அவள் பாண்டவர்களின் மீதான பாசத்தையும் தன்னோடு சுமந்து வந்திருப்பதை உணர்ந்தான்.
தாய் கேட்ட வரங்களைக் கொடுத்துவிட்டான். அதுவரை யாரிடமும் எதுவும் கேட்டிராத கர்ணன், தன் தாயை நோக்கி, “தாயே எனக்கு இரண்டு வரங்களைத் தாருங்கள்” என்று கேட்டான்.
ஒன்று, “நான் உங்கள் மகன் என்பதை, பாண்டவர்களில் மற்றவர்களுக்கு இப்போது நீங்கள் சொல்லக்கூடாது. நான் அவர்களின் சகோதரன் என்று தெரிந்தால், அவர்கள் என்னோடு சண்டையிட தயக்கம் காட்டுவார்கள்.”
அடுத்த வரம், “நான் பிறந்தபோதும், வளர்ந்தபோதும் உன் மடியில் என்னை தாங்கிக்கொள்ள வில்லை. ஒரு வேளை நான் இந்தப் போரில் வீழ்ந்துபோனால், நீ போர்க்களம் வர வேண்டும். அங்கு வந்து, என்னை உன் மடியில் சாயத்துக் கொண்டு, நான் பிறந்த கதையையும், வளர்ந்த கதையையும், என் சிறப்பையும் சொல்லி அழ வேண்டும்.”
இரண்டு வரத்திற்குமே குந்தி சம்மதித்து விட்டாள். குருச்சேத்திரப் போரின் 17-வது நாளில் கர்ணன் இறந்து போனான். அப்போது போர்க்களத்திற்கு வந்த குந்தி, அவனை தன் மடியில் கிடத்தி, அவன் புகழ்பாடி அழுதாள். அப்போதுதான் முதன் முதலாக ‘ஒப்பாரி’ (இறந்தவரின் புகழைப் பாடி அழுவது) பிறந்ததாக புராணங்கள் சொல்கின்றன.
அப்போதும் கூட அவன் இறைவனிடம் எதுவும் கேட்டுப்பெறவில்லை. இறைவனே “உனக்கு ஏதாவது வரம் கொடுக்க நினைக்கிறேன், கேள்” என்று சொன்னபிறகுதான், ஒரு கோரிக்கையை வைத்தான். அது, “உன் திருக்காட்சியைக் கண்டபிறகு எனக்கு இனி பிறப்பு இல்லை என்று நான் அறிவேன். ஒருவேளை நான் மீண்டும் பிறக்க நேர்ந்தால், அந்தப் பிறவியிலும் என்னிடம் ‘இது வேண்டும்’ என்று கேட்பவர்களுக்கு, ‘இல்லை’ என்று சொல்லாத மனதை தர வேண்டும்” என்று கேட்டான்.
அப்படிப்பட்ட கர்ணன், ஒரே ஒருவரிடம் மட்டும் ‘எனக்கு இதைத் தாருங்கள்’ என்று கேட்டுப் பெற்றான். அந்த நபர், கர்ணனின் தாய் குந்திதேவி.
கர்ணன் தன்னுடைய மகன் என்று தெரிந்ததும், அவனைப் பார்க்கச் சென்றாள், குந்தி. கர்ணனை ஆரத்தழுவி கண்ணீர் விட்டவள், அதன்பிறகு கண்ணன் சொன்னபடி கர்ணனிடம் இரண்டு வரங்களைப் பெற்றாள். ஒன்று, ‘அர்ச்சுனைத் தவிர பாண்டவர்களில் மற்றவர்களை கொல்லக்கூடாது’, மற்றொன்று, ‘அர்ச்சுனன் மீது விடும் நாகாஸ்திரத்தை ஒருமுறைக்கு மேல் மறுமுறை விடக்கூடாது.’
கர்ணன் முகத்தில் சோகப் புன்னகை படர்ந்தது. தாய் தன் மீதான பாசத்தில் வந்திருப்பதாக முதலில் நினைத்திருந்தான். ஆனால் அவள் கேட்ட வரங்களின் மூலம், அவள் பாண்டவர்களின் மீதான பாசத்தையும் தன்னோடு சுமந்து வந்திருப்பதை உணர்ந்தான்.
தாய் கேட்ட வரங்களைக் கொடுத்துவிட்டான். அதுவரை யாரிடமும் எதுவும் கேட்டிராத கர்ணன், தன் தாயை நோக்கி, “தாயே எனக்கு இரண்டு வரங்களைத் தாருங்கள்” என்று கேட்டான்.
ஒன்று, “நான் உங்கள் மகன் என்பதை, பாண்டவர்களில் மற்றவர்களுக்கு இப்போது நீங்கள் சொல்லக்கூடாது. நான் அவர்களின் சகோதரன் என்று தெரிந்தால், அவர்கள் என்னோடு சண்டையிட தயக்கம் காட்டுவார்கள்.”
அடுத்த வரம், “நான் பிறந்தபோதும், வளர்ந்தபோதும் உன் மடியில் என்னை தாங்கிக்கொள்ள வில்லை. ஒரு வேளை நான் இந்தப் போரில் வீழ்ந்துபோனால், நீ போர்க்களம் வர வேண்டும். அங்கு வந்து, என்னை உன் மடியில் சாயத்துக் கொண்டு, நான் பிறந்த கதையையும், வளர்ந்த கதையையும், என் சிறப்பையும் சொல்லி அழ வேண்டும்.”
இரண்டு வரத்திற்குமே குந்தி சம்மதித்து விட்டாள். குருச்சேத்திரப் போரின் 17-வது நாளில் கர்ணன் இறந்து போனான். அப்போது போர்க்களத்திற்கு வந்த குந்தி, அவனை தன் மடியில் கிடத்தி, அவன் புகழ்பாடி அழுதாள். அப்போதுதான் முதன் முதலாக ‘ஒப்பாரி’ (இறந்தவரின் புகழைப் பாடி அழுவது) பிறந்ததாக புராணங்கள் சொல்கின்றன.
தும்பைப் பூவை உற்றுப்பார்த்தால் தெரியும். அதன் உள்ளே ஐந்து விரல்களும், பாதமும் போன்ற அமைப்பு இருக்கும். சிவபெருமானுக்கு விருப்பமான மலர்களில், தும்பைக்கும் முக்கிய இடம் உண்டு.
ஒரு விலை மகள், தன்னுடைய தொழிலுக்கு என தர்மம் வைத்திருக்கிறாள். அவள் தினமும் காலையில் எழும்போது, அவளது வீட்டு வாசலில் அன்றைய நாளில் அவளுடன் இருப்பதற்கான அச்சாரம் வைக்கப்பட்டிருக்கும். அதை கையில் எடுப்பவள், “இந்த அச்சாரத்தை வைத்தவர், இன்று என் கணவர். அவர் என் வீட்டிற்கு வரலாம்” என்று சொல்லி விட்டு சென்று விடுவாள். அன்றைய பொழுது அவளுக்கு அந்த அச்சாரம் இட்டவனோடுதான்.
அவள் அந்த தர்மத்தில் இருந்து ஒருபோதும் விலகாமல் இருந்தாள். ஒரு நாள் காலையில் வயோதிகர் ஒருவர், பணத்தோடு வெற்றிலை பாக்கு வைத்து அந்த விலைமாதுவின் வீட்டு வாசலில் அச்சாரம் வைத்தார். வீட்டின் கதவை திறந்து வந்த அந்தப் பெண், அதை எடுத்துக் கொண்டு, “இன்று உங்களை என் கணவராக வரித்துக் கொண்டேன். இரவு வாருங்கள்” என்று அனுப்பிவிட்டாள்.
வயோதிகர் சென்று சிறிது நேரத்தில் அந்த தேசத்தின் மன்னன் அங்கு வந்தான். அவன் அந்தப் பெண்ணிடம், “பெண்ணே.. உன் மீது கொண்ட அளவுகடந்த காதலால் உன்னைத் தேடி வந்தேன்” என்றான்.
அதற்கு அவள், “இன்று இரவு ஒருவரை நான் கணவராக வரித்து விட்டேன். அதனால் நீங்கள் செல்லுங்கள்” என்று மறுத்துவிட்டாள்.
மன்னனோ, “நான் ஒரு மன்னன். என்னை ஏற்க மறுக்கிறாயா? உனக்கு பொன்னும் பொருளும் அள்ளித் தருகிறேன். ஒப்புக்கொள். இல்லையெனில் உனக்கு மரணம்தான் தண்டனை” என்றான்.
“அரசே.. நீங்கள் மன்னன் என்பதால் என்னுடைய தர்மத்தில் இருந்து நான் விலக முடியாது. உங்களுடைய பொன்னும், பொருளும் எனக்குத் தேவையில்லை. நான் ஒருவரை இன்றைய தினம் கணவராக வரித்துவிட்டேன். ஆகையால் நீங்கள் விலகிவிடுங்கள். இல்லை என்னை கொல்ல வேண்டுமானால் கொல்லுங்கள். அதனால் வரும் பாவம் உங்களைத்தான் சேருமே தவிர, எனக்கு ஒன்றும் இல்லை” என்றாள், அந்தப்பெண்.
என்ன செய்வதென்று தெரியாத மன்னன், அங்கிருந்து அகன்றுவிட்டான். அன்று இரவு முதியவர் வந்தார். வந்தவர் உடல் பாதிப்பு காரணமாக இரவு முழுவதும் வாந்தி எடுத்துக் கொண்டே இருந்தார். அந்தப் பெண்ணோ கொஞ்சமும் முகம் சுழிக்காமல், அவரது செயலை சகித்துக் கொண்டு, இடத்தை சுத்தப்படுத்தினாள். இரவு முழுவதும் இப்படியே கழிந்தது.
பொழுது விடியும் நேரத்தில் அந்தப் பெண்ணிடம் முதியவர் கேட்டார், “பெண்ணே.. நீ நினைத்தால் மன்னனோடு இன்றைய பொழுதை கழித்திருக்கலாம். ஆனால் என்னோடு இருந்து இந்த இரவை துன்பத்தோடு கழித்துவிட்டோமே என்ற கவலை உனக்கு இல்லையா?.”
அதற்கு அந்தப் பெண், “கணவனுக்கு பணிவிடை செய்வதில் கஷ்டம் என்ன இருக்கிறது. இன்று உங்களை என் கணவனாக வரித்தேன். அதில் இன்பம் இருந்தாலும், துன்பம் இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்வதே தர்மம்” என்றாள்.
அப்போது அங்கிருந்த முதியவர் மறைந்து அங்கே சிவபெருமான் தோன்றினார். “தர்மம் விலகாத உன்னுடைய நேர்மை என்னை மகிழ்விக்கிறது. உனக்கு வேண்டிய வரம் கேள்” என்றார்.
எல்லாரும் இறைவனின் திருப்பாதத்தில் இருக்கவே ஆசைப்படுவார்கள். அவளுக்கும் அதே ஆசைதான். ஆனால் இறைவனை நேரில் கண்ட பதற்றத்தில் “எப்போதும் என் காலடி உங்கள் தலையில் இருக்க வேண்டும்” என்று மாற்றி கேட்டுவிட்டாள். பின்னர் தான் செய்த தவறை உணர்ந்து, வரத்தை மாற்றித் தரும்படி கேட்டாள். ஆனால் இறைவனோ அவள் கேட்டபடி, அவளது பாதம் தன் தலையில் இருக்கும் வரத்தையே அளித்தார்.
அதன்படி அவள் அடுத்தப் பிறவியில் ‘தும்பை’ என்னும் மலராகப் பிறந்தாள். தும்பைப் பூவை உற்றுப்பார்த்தால் தெரியும். அதன் உள்ளே ஐந்து விரல்களும், பாதமும் போன்ற அமைப்பு இருக்கும். சிவபெருமானுக்கு விருப்பமான மலர்களில், தும்பைக்கும் முக்கிய இடம் உண்டு.
அவள் அந்த தர்மத்தில் இருந்து ஒருபோதும் விலகாமல் இருந்தாள். ஒரு நாள் காலையில் வயோதிகர் ஒருவர், பணத்தோடு வெற்றிலை பாக்கு வைத்து அந்த விலைமாதுவின் வீட்டு வாசலில் அச்சாரம் வைத்தார். வீட்டின் கதவை திறந்து வந்த அந்தப் பெண், அதை எடுத்துக் கொண்டு, “இன்று உங்களை என் கணவராக வரித்துக் கொண்டேன். இரவு வாருங்கள்” என்று அனுப்பிவிட்டாள்.
வயோதிகர் சென்று சிறிது நேரத்தில் அந்த தேசத்தின் மன்னன் அங்கு வந்தான். அவன் அந்தப் பெண்ணிடம், “பெண்ணே.. உன் மீது கொண்ட அளவுகடந்த காதலால் உன்னைத் தேடி வந்தேன்” என்றான்.
அதற்கு அவள், “இன்று இரவு ஒருவரை நான் கணவராக வரித்து விட்டேன். அதனால் நீங்கள் செல்லுங்கள்” என்று மறுத்துவிட்டாள்.
மன்னனோ, “நான் ஒரு மன்னன். என்னை ஏற்க மறுக்கிறாயா? உனக்கு பொன்னும் பொருளும் அள்ளித் தருகிறேன். ஒப்புக்கொள். இல்லையெனில் உனக்கு மரணம்தான் தண்டனை” என்றான்.
“அரசே.. நீங்கள் மன்னன் என்பதால் என்னுடைய தர்மத்தில் இருந்து நான் விலக முடியாது. உங்களுடைய பொன்னும், பொருளும் எனக்குத் தேவையில்லை. நான் ஒருவரை இன்றைய தினம் கணவராக வரித்துவிட்டேன். ஆகையால் நீங்கள் விலகிவிடுங்கள். இல்லை என்னை கொல்ல வேண்டுமானால் கொல்லுங்கள். அதனால் வரும் பாவம் உங்களைத்தான் சேருமே தவிர, எனக்கு ஒன்றும் இல்லை” என்றாள், அந்தப்பெண்.
என்ன செய்வதென்று தெரியாத மன்னன், அங்கிருந்து அகன்றுவிட்டான். அன்று இரவு முதியவர் வந்தார். வந்தவர் உடல் பாதிப்பு காரணமாக இரவு முழுவதும் வாந்தி எடுத்துக் கொண்டே இருந்தார். அந்தப் பெண்ணோ கொஞ்சமும் முகம் சுழிக்காமல், அவரது செயலை சகித்துக் கொண்டு, இடத்தை சுத்தப்படுத்தினாள். இரவு முழுவதும் இப்படியே கழிந்தது.
பொழுது விடியும் நேரத்தில் அந்தப் பெண்ணிடம் முதியவர் கேட்டார், “பெண்ணே.. நீ நினைத்தால் மன்னனோடு இன்றைய பொழுதை கழித்திருக்கலாம். ஆனால் என்னோடு இருந்து இந்த இரவை துன்பத்தோடு கழித்துவிட்டோமே என்ற கவலை உனக்கு இல்லையா?.”
அதற்கு அந்தப் பெண், “கணவனுக்கு பணிவிடை செய்வதில் கஷ்டம் என்ன இருக்கிறது. இன்று உங்களை என் கணவனாக வரித்தேன். அதில் இன்பம் இருந்தாலும், துன்பம் இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்வதே தர்மம்” என்றாள்.
அப்போது அங்கிருந்த முதியவர் மறைந்து அங்கே சிவபெருமான் தோன்றினார். “தர்மம் விலகாத உன்னுடைய நேர்மை என்னை மகிழ்விக்கிறது. உனக்கு வேண்டிய வரம் கேள்” என்றார்.
எல்லாரும் இறைவனின் திருப்பாதத்தில் இருக்கவே ஆசைப்படுவார்கள். அவளுக்கும் அதே ஆசைதான். ஆனால் இறைவனை நேரில் கண்ட பதற்றத்தில் “எப்போதும் என் காலடி உங்கள் தலையில் இருக்க வேண்டும்” என்று மாற்றி கேட்டுவிட்டாள். பின்னர் தான் செய்த தவறை உணர்ந்து, வரத்தை மாற்றித் தரும்படி கேட்டாள். ஆனால் இறைவனோ அவள் கேட்டபடி, அவளது பாதம் தன் தலையில் இருக்கும் வரத்தையே அளித்தார்.
அதன்படி அவள் அடுத்தப் பிறவியில் ‘தும்பை’ என்னும் மலராகப் பிறந்தாள். தும்பைப் பூவை உற்றுப்பார்த்தால் தெரியும். அதன் உள்ளே ஐந்து விரல்களும், பாதமும் போன்ற அமைப்பு இருக்கும். சிவபெருமானுக்கு விருப்பமான மலர்களில், தும்பைக்கும் முக்கிய இடம் உண்டு.
ஆறு படை வீடு என்றாலே, முருகப்பெருமான்தான் நினைவுக்கு வருவார். அவருக்கு ஆறு படை வீடுகள் உண்டு என்பதுதான் பலருக்கும் தெரிந்த விஷயம்.
ஆறு படை வீடு என்றாலே, முருகப்பெருமான்தான் நினைவுக்கு வருவார். அவருக்கு ஆறு படை வீடுகள் உண்டு என்பதுதான் பலருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் விநாயகருக்கும், ஐயப்பனுக்கும் கூட ஆறு படை வீடுகள் இருக்கின்றன. அதுபற்றி தெரிந்துகொள்ளலாம்..
விநாயகர் படைவீடு
1. திருவண்ணாமலை செந்தூர் விநாயகர்
2. விருத்தாச்சலம் ஆழத்து விநாயகர்
3. திருக்கடையூர் கள்ளவாரணப் பிள்ளையார்
4. மதுரை சித்தி விநாயகர்
5. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்
6. கடலூர் பொள்ளாப் பிள்ளையார்
முருகன் படைவீடு
1. திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர்
2. திருச்செந்தூர் செந்திலாண்டவர்
3. பழனி பாலதண்டாயுதபாணி
4. சுவாமிமலை சுவாமிநாதர்
5. திருத்தணி சுப்பிரமணியர்
6. பழமுதிர்சோலை முருகன்
ஐயப்பன் படைவீடு
1. சபரிமலை மணிகண்டன்
2. எரிமேலி ஐயப்பன்
3. பந்தளம் ஐயப்பன்
4. குளத்துப்புழா பால சாஸ்தா
5. அச்சன்கோவில் கல்யாண சாஸ்தா
6. ஆரியங்காவு ஐயப்பன்
விநாயகர் படைவீடு
1. திருவண்ணாமலை செந்தூர் விநாயகர்
2. விருத்தாச்சலம் ஆழத்து விநாயகர்
3. திருக்கடையூர் கள்ளவாரணப் பிள்ளையார்
4. மதுரை சித்தி விநாயகர்
5. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்
6. கடலூர் பொள்ளாப் பிள்ளையார்
முருகன் படைவீடு
1. திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர்
2. திருச்செந்தூர் செந்திலாண்டவர்
3. பழனி பாலதண்டாயுதபாணி
4. சுவாமிமலை சுவாமிநாதர்
5. திருத்தணி சுப்பிரமணியர்
6. பழமுதிர்சோலை முருகன்
ஐயப்பன் படைவீடு
1. சபரிமலை மணிகண்டன்
2. எரிமேலி ஐயப்பன்
3. பந்தளம் ஐயப்பன்
4. குளத்துப்புழா பால சாஸ்தா
5. அச்சன்கோவில் கல்யாண சாஸ்தா
6. ஆரியங்காவு ஐயப்பன்
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் தீர்த்த குளங்கள் ஆண்டு முழுவதும் வற்றாமல் காட்சி அளிப்பது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் உள்ள சுவேதாரண்யேஸ்வரர் கோவில் நவக்கிரகங்களில் புதனுக்குரிய பரிகார தலமாகும். சிவபெருமானின் 5 முகங்களில் ஒன்றான அகோரமுகத்துடன் சிவபெருமான் இங்கு அகோரமூர்த்தியாக தனி சன்னதியில் அருள்பாலித்து வருவது கூடுதல் சிறப்பாகும்.
முன்பு ஒரு காலத்தில் சிவபெருமானின் முக்கண்ணில் இருந்து 3 பொறிகள் தோன்றி இந்த பகுதியில் விழுந்ததாகவும், அதன் காரணமாக 3 தீர்த்த குளங்கள் தோன்றியதாகவும் புராணங்களில் கூறப்பட்டு உள்ளது. பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலில் உள்ள 3 குளங்களில் தண்ணீர் ஆண்டு முழுவதும் நிரம்பி இருக்கும் வகையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கோவிலுக்கு வந்த கோவை சிவனடியார் கூட்டமைப்பை சேர்ந்த பக்தர்கள் கூறுகையில், ‘மிகவும் புனிதமான 3 குளங்களில், வாட்டும் வெயில் காலத்தில் கூட புனித நீர் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக நீராடினோம்’ என்றனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரி முருகன் கூறுகையில், ‘இந்த கோவிலில் உள்ள 3 தீர்த்த குளங்களும் புனிதமானவை. இதை கருத்தில் ெ்காண்டு 3 குளங்களையும் அடிக்கடி சுத்தம் செய்து, பராமரித்து வருகிறோம். குளத்தின் அடிப்பகுதியில் உள்ள ஊற்றுக் கண்களை சுத்தம் செய்வதால் தண்ணீர் ஊறுகிறது. தற்போது கோடை மழை அடிக்கடி பெய்வதால் நீர்மட்டம் குறையாமல் உள்ளது. கோவில் நிலத்தில் ஆழ்குழாய் இறக்கி குழாய்கள் மூலமும் தேவையான நேரத்தில் தண்ணீர் நிரப்பி பராமரித்து வருகிறோம்’ என்றார்.
இந்த கோவிலின் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் துரைராஜன் கூறுகையில், ‘சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 3 குளங்களுக்கு ஆண்டி வாய்க்கால் மூலம் தண்ணீர் வரும். ஆனால் மழைக் காலங்களில் மட்டுமே ஆண்டி வாய்க்காலில் தண்ணீர் வருவதால் குளங்களுக்கு தண்ணீர் பெறுவதில் சிக்கல்கள் உள்ளன. இதனை தவிர்க்க கோவிலின் அருகே ஓடும் கூழை வாய்க்கால் மூலம் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
குளங்களுக்கு தண்ணீர் செல்ல ஏதுவாக பழமை வாய்ந்த சிறு வாய்க்கால் உள்ளது. இதன் மூலம் தண்ணீர் நிரப்பலாம். மேலும் இந்த வாய்க்காலில் அடிக்கடி தண்ணீர் வரத்து உள்ளது’ என்றார். கொளுத்தும் வெயிலிலும் தண்ணீர் வற்றாமல் காட்சி அளிக்கும் 3 தீர்த்த குளங்களும் வரப்பிரசாதமாக இருக்கிறது என பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.
முன்பு ஒரு காலத்தில் சிவபெருமானின் முக்கண்ணில் இருந்து 3 பொறிகள் தோன்றி இந்த பகுதியில் விழுந்ததாகவும், அதன் காரணமாக 3 தீர்த்த குளங்கள் தோன்றியதாகவும் புராணங்களில் கூறப்பட்டு உள்ளது. பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலில் உள்ள 3 குளங்களில் தண்ணீர் ஆண்டு முழுவதும் நிரம்பி இருக்கும் வகையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கோவிலுக்கு வந்த கோவை சிவனடியார் கூட்டமைப்பை சேர்ந்த பக்தர்கள் கூறுகையில், ‘மிகவும் புனிதமான 3 குளங்களில், வாட்டும் வெயில் காலத்தில் கூட புனித நீர் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக நீராடினோம்’ என்றனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரி முருகன் கூறுகையில், ‘இந்த கோவிலில் உள்ள 3 தீர்த்த குளங்களும் புனிதமானவை. இதை கருத்தில் ெ்காண்டு 3 குளங்களையும் அடிக்கடி சுத்தம் செய்து, பராமரித்து வருகிறோம். குளத்தின் அடிப்பகுதியில் உள்ள ஊற்றுக் கண்களை சுத்தம் செய்வதால் தண்ணீர் ஊறுகிறது. தற்போது கோடை மழை அடிக்கடி பெய்வதால் நீர்மட்டம் குறையாமல் உள்ளது. கோவில் நிலத்தில் ஆழ்குழாய் இறக்கி குழாய்கள் மூலமும் தேவையான நேரத்தில் தண்ணீர் நிரப்பி பராமரித்து வருகிறோம்’ என்றார்.
இந்த கோவிலின் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் துரைராஜன் கூறுகையில், ‘சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 3 குளங்களுக்கு ஆண்டி வாய்க்கால் மூலம் தண்ணீர் வரும். ஆனால் மழைக் காலங்களில் மட்டுமே ஆண்டி வாய்க்காலில் தண்ணீர் வருவதால் குளங்களுக்கு தண்ணீர் பெறுவதில் சிக்கல்கள் உள்ளன. இதனை தவிர்க்க கோவிலின் அருகே ஓடும் கூழை வாய்க்கால் மூலம் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
குளங்களுக்கு தண்ணீர் செல்ல ஏதுவாக பழமை வாய்ந்த சிறு வாய்க்கால் உள்ளது. இதன் மூலம் தண்ணீர் நிரப்பலாம். மேலும் இந்த வாய்க்காலில் அடிக்கடி தண்ணீர் வரத்து உள்ளது’ என்றார். கொளுத்தும் வெயிலிலும் தண்ணீர் வற்றாமல் காட்சி அளிக்கும் 3 தீர்த்த குளங்களும் வரப்பிரசாதமாக இருக்கிறது என பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.
குழந்தைச் செல்வம் இல்லாத வீட்டில், வேறு எத்தனைச் செல்வங்கள் இருந்தாலும் பயனில்லாது போகும் என்பார்கள். குழந்தைகளின் பாலாரிஷ்ட நோய் நீங்க இந்த ஸ்லோகம் உதவும்.
உலகின் மிகப்பெரிய செல்வம், பிள்ளைகள்தான்! குழந்தைச் செல்வம் இல்லாத வீட்டில், வேறு எத்தனைச் செல்வங்கள் இருந்தாலும் பயனில்லாது போகும் என்பார்கள். 'எவ்வளவு சொத்துகள் இருந்து என்ன... அள்ளியெடுத்துக் கொஞ்சி விளையாடக் குழந்தை இல்லை’ என்பதே பலரின் ஏக்கம்.
அதைவிட, அந்தக் குழந்தைக்கு சின்னச் சின்ன நோய்கள் வந்து சரியாகச் சாப்பிடாமல் இருந்தாலோ, சாப்பிட்டதையெல்லாம் வாந்தி எடுத்தாலோ, சரிவரத் தூங்காமல் எப்போதும் எதற்காகவோ அழுதுகொண்டே இருந்தாலோ... அதைவிட பெரிய வலியும் வேதனையும் வேறில்லை.
இதனை பாலாரிஷ்ட நோய் என்பார்கள். இதில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்கவும் குழந்தைகள் சத்தாக வளரவும் இந்த ஸ்லோகம் உதவும்.
பால க்ரஹ விநாச்ச தர்மநேதா கிருபாகர:
உக்ரக்ருத்யோக்ரா வேகச்ச உக்ர நேத்ர: சதக்ரது:
அதைவிட, அந்தக் குழந்தைக்கு சின்னச் சின்ன நோய்கள் வந்து சரியாகச் சாப்பிடாமல் இருந்தாலோ, சாப்பிட்டதையெல்லாம் வாந்தி எடுத்தாலோ, சரிவரத் தூங்காமல் எப்போதும் எதற்காகவோ அழுதுகொண்டே இருந்தாலோ... அதைவிட பெரிய வலியும் வேதனையும் வேறில்லை.
இதனை பாலாரிஷ்ட நோய் என்பார்கள். இதில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்கவும் குழந்தைகள் சத்தாக வளரவும் இந்த ஸ்லோகம் உதவும்.
பால க்ரஹ விநாச்ச தர்மநேதா கிருபாகர:
உக்ரக்ருத்யோக்ரா வேகச்ச உக்ர நேத்ர: சதக்ரது:
சபரிமலை ஐயப்பனைப் போன்று, இந்த 18 படிகளுமே சக்தி வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. இந்த 18 படிகளிலும் 18 தெய்வங்கள் வாசம் செய்வதாக தல வரலாறு சொல்கிறது.
சபரிமலை ஐயப்பன் கோவில் மிகவும் பிரசித்திப் பெற்றது. இங்கு அருளும் மூலவரான ஐயப்பனை தரிசிக்க 18 படிகளைக் கடந்து செல்ல வேண்டும். விரதம் இருந்து இருமுடி கட்டி செல்பவர்கள் மட்டுமே இந்த படிகளின் வழியாக மூலவரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் வேறு பாதையில்தான் செல்ல வேண்டும்.
சபரிமலை ஐயப்பனைப் போன்று, இந்த 18 படிகளுமே சக்தி வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. இந்த படிகளுக்கு என்று தனியாக ‘படி பூஜை’யும் நடத்தப்படுவது வழக்கம். இந்த 18 படிகளிலும் 18 தெய்வங்கள் வாசம் செய்வதாக தல வரலாறு சொல்கிறது. மேலும் இந்த படிகள் 18-ம், சபரிமலை மற்றும் அதனைச் சுற்றிலும் உள்ள 18 மலைகளில் வாழும் மலை தேவதைகளை குறிக்கின்றனவாம்.
இங்கு நடத்தப்படும் படி பூஜையானது, இந்த மலை தேவதைகளை நினைத்து வழிபடுவதாகவே செய்யப்படுகிறது என்றும் கூறுகிறார்கள். அந்த 18 மலைகளின் பெயர்களையும் இங்கே பார்ப்போாம்.
* தலைப்பாறை மலை
* காளகெட்டி மலை
* புதுச்சேரி மலை
* கரிமலை
* இஞ்சிப்பாறை மலை
* நிலக்கல்
* தேவர்மலை
* ஸ்ரீபாத மலை
* வட்ட மலை
* சுந்தர மலை
* நாகமலை
* நீலிமலை
* சபரிமலை
* மயிலாடும் மலை
* மதங்க மலை
* சிற்றம்பல மலை
* கவுண்டன் மலை
* பொன்னம்பல மேடு (காந்தமலை)
சபரிமலை ஐயப்பனைப் போன்று, இந்த 18 படிகளுமே சக்தி வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. இந்த படிகளுக்கு என்று தனியாக ‘படி பூஜை’யும் நடத்தப்படுவது வழக்கம். இந்த 18 படிகளிலும் 18 தெய்வங்கள் வாசம் செய்வதாக தல வரலாறு சொல்கிறது. மேலும் இந்த படிகள் 18-ம், சபரிமலை மற்றும் அதனைச் சுற்றிலும் உள்ள 18 மலைகளில் வாழும் மலை தேவதைகளை குறிக்கின்றனவாம்.
இங்கு நடத்தப்படும் படி பூஜையானது, இந்த மலை தேவதைகளை நினைத்து வழிபடுவதாகவே செய்யப்படுகிறது என்றும் கூறுகிறார்கள். அந்த 18 மலைகளின் பெயர்களையும் இங்கே பார்ப்போாம்.
* தலைப்பாறை மலை
* காளகெட்டி மலை
* புதுச்சேரி மலை
* கரிமலை
* இஞ்சிப்பாறை மலை
* நிலக்கல்
* தேவர்மலை
* ஸ்ரீபாத மலை
* வட்ட மலை
* சுந்தர மலை
* நாகமலை
* நீலிமலை
* சபரிமலை
* மயிலாடும் மலை
* மதங்க மலை
* சிற்றம்பல மலை
* கவுண்டன் மலை
* பொன்னம்பல மேடு (காந்தமலை)
கங்கைக்கு நிகரான கருதப்படும் இந்த நூபுரகங்கை தீர்த்தத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி புனித நீராட அனுமதி வழங்க வேண்டும் என பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை அருகே கள்ளழகர் கோவில் மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் அழகர்மலை உச்சியில் நூபுரகங்கை தீர்த்தம் உள்ளது. ஆறாவது படைவீடு முருகப்பெருமானையும், கள்ளழகரையும், பதினெட்டாம்படி கருப்பணசாமியையும் பக்தர்கள் புனித தீர்த்தமாடி வந்து வணங்குவது வழக்கம்.
இந்த நூபுர கங்கை தீர்த்தமானது பல ஆயிரம் ஆண்டுகளாக மூலிகை மரங்களின் வேர்களை தழுவி வெளியில் எப்போதும் வருவதாக தெரிவிக்கின்றனர். புனித தீர்த்தத்தில் இரும்பு சத்தும், தாமிர சத்தும் உள்ளதால் இந்த நீரை பருகும் போது நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக தெரிகிறது. இங்கிருந்து தீர்த்தம் எடுத்து செல்லப்படாமல் இருக்கும் நிலையில் பல திருவிழா நிகழ்வுகள் தடைபட்டுள்ளது.
புதிதாக கட்டப்படும் மனைகள் தொழில் தொடங்குபவர்கள் இந்த புனித தீர்த்தத்தை பிளாஸ்டிக் அல்லாத பாத்திரத்தில் எடுத்து செல்வார்கள். கொரோனா தொற்று பரவல் ஊரடங்கு காரணமாக கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக பக்தர்கள் புனித நீராட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தற்போது கோவில்கள் அனைத்தும் திறக்கப்பட்ட போதிலும் நூபுரகங்கையில் புனித நீராட அனுமதி வழங்கப்படவில்லை. தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வரும் நிலையில் கங்கைக்கு நிகரான கருதப்படும் இந்த நூபுரகங்கை தீர்த்தத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி புனித நீராட அனுமதி வழங்க வேண்டும் என பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நூபுர கங்கை தீர்த்தமானது பல ஆயிரம் ஆண்டுகளாக மூலிகை மரங்களின் வேர்களை தழுவி வெளியில் எப்போதும் வருவதாக தெரிவிக்கின்றனர். புனித தீர்த்தத்தில் இரும்பு சத்தும், தாமிர சத்தும் உள்ளதால் இந்த நீரை பருகும் போது நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக தெரிகிறது. இங்கிருந்து தீர்த்தம் எடுத்து செல்லப்படாமல் இருக்கும் நிலையில் பல திருவிழா நிகழ்வுகள் தடைபட்டுள்ளது.
புதிதாக கட்டப்படும் மனைகள் தொழில் தொடங்குபவர்கள் இந்த புனித தீர்த்தத்தை பிளாஸ்டிக் அல்லாத பாத்திரத்தில் எடுத்து செல்வார்கள். கொரோனா தொற்று பரவல் ஊரடங்கு காரணமாக கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக பக்தர்கள் புனித நீராட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தற்போது கோவில்கள் அனைத்தும் திறக்கப்பட்ட போதிலும் நூபுரகங்கையில் புனித நீராட அனுமதி வழங்கப்படவில்லை. தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வரும் நிலையில் கங்கைக்கு நிகரான கருதப்படும் இந்த நூபுரகங்கை தீர்த்தத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி புனித நீராட அனுமதி வழங்க வேண்டும் என பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறப்பு மிக்க மாதத்தில் வருகின்ற ஒரு அற்புதமான நாள் தான் ஆடி சங்கடஹர சதுர்த்தி தினம். அந்த தினத்தன்று விநாயகப் பெருமானுக்கு கடைபிடிக்க வேண்டிய விரத முறைகளும், அதனால் உண்டாகும் பலன்கள் குறித்தும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதம் என்றாலே கோயில் திருவிழாக்கள், தெய்வங்களுக்கான சிறப்பு வழிபாடுகள், அன்னதானங்கள் போன்றவை நடைபெறும் ஒரு மாதமாக இருக்கிறது. இந்த ஆடி மாதத்தில் பௌர்ணமி தினத்திற்கு நான்காவது தினம் அல்லது திதியாக வரும் நாளாக ஆடி தேய்பிறை சதுர்த்தி அல்லது மாத சங்கடஹர சதுர்த்தி தினம் எனப்படுகிறது. விநாயகர் வழிபாடு மற்றும் விரதத்திற்குரிய மிக சிறந்த தினம் இந்த ஆடி சங்கடஹர சதுர்த்தி. அதிலும் சனிக்கிழமை அன்று இந்த சங்கடஹர சதுர்த்தி தினம் வருவது மிகவும் சிறப்பானதாகும்
ஆடி சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று அதிகாலை நீராடி, காலை முதல் மாலை வரை விநாயகப்பெருமான் நினைவோடு ஏதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். உணவு சாப்பிட வேண்டிய நிலையில் இருப்பவர்கள் உப்பு சேர்க்காத உணவு அல்லது பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் மேற்கொள்ளலாம். மாலையில் அருகிலுள்ள விநாயகர் கோயில், சந்நிதிக்கு சென்று விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகதிற்கு பசும் பால் மற்றும் வாசமிக்க மலர்கள், மஞ்சள், விபூதி போன்ற அபிஷேக பொருட்களை தந்து, அபிஷேக பூஜையில் கலந்து கொண்டு விநாயகரை வழிபட வேண்டும். வழிபாடு முடித்து ஆலயத்தை எட்டு முறை வலம் வந்து வணங்க வேண்டும். கோயிலில் அனைத்து பூஜை வழிபாடுகள் முடிந்ததும் வீட்டிற்கு வந்து விநாயகரை வணங்கி பூஜையறையில் நைவேத்தியம் வைக்கப்பட்ட பழத்தை சாப்பிட்டு விரதத்தை முடித்து கொள்ளலாம்.
ஆடி சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று அதிகாலை நீராடி, காலை முதல் மாலை வரை விநாயகப்பெருமான் நினைவோடு ஏதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். உணவு சாப்பிட வேண்டிய நிலையில் இருப்பவர்கள் உப்பு சேர்க்காத உணவு அல்லது பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் மேற்கொள்ளலாம். மாலையில் அருகிலுள்ள விநாயகர் கோயில், சந்நிதிக்கு சென்று விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகதிற்கு பசும் பால் மற்றும் வாசமிக்க மலர்கள், மஞ்சள், விபூதி போன்ற அபிஷேக பொருட்களை தந்து, அபிஷேக பூஜையில் கலந்து கொண்டு விநாயகரை வழிபட வேண்டும். வழிபாடு முடித்து ஆலயத்தை எட்டு முறை வலம் வந்து வணங்க வேண்டும். கோயிலில் அனைத்து பூஜை வழிபாடுகள் முடிந்ததும் வீட்டிற்கு வந்து விநாயகரை வணங்கி பூஜையறையில் நைவேத்தியம் வைக்கப்பட்ட பழத்தை சாப்பிட்டு விரதத்தை முடித்து கொள்ளலாம்.
ஆடி மாத சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் காரிய தடை, தாமதங்கள் போன்றவை நீங்கும். புதிதாக மேற்கொள்கின்ற முயற்சிகள் அனைத்திலும் வெற்றியும், நீங்கள் விரும்பிய பலன்களும் உண்டாகும். பெண்களுக்கு நல்ல வரன் அமைந்து திருமணம் இனிதே நடைபெறும். குழந்தைகள் கல்வியில் சிறப்பான தேர்ச்சி மற்றும் வெற்றியும் பெறுவார்கள். நீண்டகாலமாக வேலை தேடி அலைந்தவர்கள் சீக்கிரத்தில் நல்ல வேலை கிடைக்கப் பெறுவார்கள்.
பணியில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் எதிர்பார்த்த இடங்களுக்கு பணியிட மாற்றம் கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருமானம் பெருகும். சனிக்கிழமை வருகின்ற ஆடி சங்கடஹர சதுர்த்தி என்பதால் அன்றைய தினத்தில் விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு சனி கிரக தோஷங்களின் கடுமைதன்மை குறைந்து, நற்பலன்கள் அதிகம் ஏற்பட வழிவகை செய்யும்.
இஸ்லாமிய மார்க்கம் எதை ‘ஹலால்’ (இது இறைவனால் அனுமதிக்கப்பட்டது) என்று வரையறுத்திக் கூறியிருக்கிறதோ, அவைகளைத் தான் நாம் உண்ணவும், குடிக்கவும் வேண்டும்.
நாம் இன்றைக்கு கொரோனாவை எதிர்த்து கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிற நேரமிது. சாதாரணமாக கை, கால், முகம் கழுவாமல் இருப்பதிலிருந்தும், நோய் தாக்கிய பிறரிடம் இருந்தும் தான் தொடங்குகிறது இத்தொற்று. இஸ்லாமிய மார்க்கத்தில் ஐந்து வேளை தொழுவது கட்டாயக் கடமை. அந்தத் தொழுகையை நிறைவேற்றும் முன்பு கை, கால், முகங்களை கழுவி விட்டுத் தான் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்பது மார்க்க விதி.
“நம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுகைக்குச் சென்றால் (அதற்கு முன்னர்) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரையில் உங்கள் கைகளையும், கணுக்கால்கள் வரையில் உங்கள் இரு பாதங்களையும் கழுவிக் கொள்ளுங்கள்” என்று திருக்குர்ஆன் (5:6) வலியுறுத்துகிறது.
இன்றைக்கு நாம் சந்திக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் நமது கவனமின்மை தான் முதல் காரணம். இதையும் திருக்குர்ஆன் இவ்வாறு சுட்டிக்காட்டுகிறது:
“மனிதர்களின் கைகள் தேடிக்கொண்டதின் காரணமாக கடலிலும் தரையிலும் அழிவு வேலைகள் (அதிகமாகப்) பரவி விட்டன”. (திருக்குர்ஆன் 30:41)
“எந்த ஒரு தீங்கும் உங்களை வந்தடைவதெல்லாம், உங்கள் கரங்கள் தேடிக்கொண்ட (தீய) செயலின் காரணமாகத் தான்”. (திருக்குர்ஆன் 42:30)
இந்த இரு வசனங்களும் நம்மைச்சுற்றி நிகழ்கிற பிரச்சினைகளுக்கு நாம் தான் முதல் காரணம் என்பதை உறுதிப்படுத்துகின்றன.
இஸ்லாமிய மார்க்கம் எதை ‘ஹலால்’ (இது இறைவனால் அனுமதிக்கப்பட்டது) என்று வரையறுத்திக் கூறியிருக்கிறதோ, அவைகளைத் தான் நாம் உண்ணவும், குடிக்கவும் வேண்டும்.
நாம் நமது உடலுக்குள் செல்லும் உணவில் கவனமாக இருப்பதைப் போல் நமது உடலின் மேல் படிந்திருந்திருக்கும் உடைகள் தூய்மையாக இருப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், அசுத்தங்கள் தங்கும் இடங்களில் ஒன்றாக உடைகளும் இருக்கின்றன.
ஆகவே, உடல், உடை, உணவு, உள்ளம் என இந்த நான்கையும் நாம் நன்கு முழு கவனத்துடன் பராமரித்துக் கொண்டாலே போதும், நிச்சயம் நாம் ஆரோக்கியமான வாழ்க்கையை பெற்றுக்கொள்ள முடியும்.
இறைவனுக்கு அடிபணிந்து வாழ்வதுமட்டுமல்ல, கூடவே சக மனிதர்களுடன் இணைந்து, இசைந்து வாழ்வதும் தான் இஸ்லாம் வலியுறுத்தும் இனிய வாழ்க்கை. அந்த வாழ்க்கையில் நாம் யாருக்கும் அணுவளவும் இடையூறுகள், தொந்தரவுகள் தரக்கூடாது என்பது முக்கியம்.
நபித்தோழர் ஒருவர் தமது ஒட்டகத்தை கட்டிவைக்காமலேயே மசூதிக்குள் வந்தபோது, ‘ஏன் கட்டிவைக்கவில்லை?’ என்று கேட்ட போது ‘நான் இறைவனின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன்’ என்று வந்தவர் சொன்னபோது, “முதலில் ஒட்டகத்தை கட்டிப் போடு, பிறகு நீ இறைவனின் மீது நம்பிக்கை வை” என்று கண்டித்தார்கள் நபிகள் நாயகம் அவர்கள்.
தொற்று நோயை தடுக்க அரசு அறிவித்துள்ள முகக்கவசம், தனிமனித இடைவெளி மற்றும் தடுப்பூசிகளுக்கும் இது பொருந்தும். வெறும் குருட்டு நம்பிக்கை எந்தப் பலனையும் தராது, பலநேரங்களில் அது ஆபத்தாகவும் முடிந்து விடுவதுண்டு. எனவே நாம் எப்போதுமே முன்எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அது தான் ஒரு இறைவிசுவாசிக்கு அழகு.
வாருங்கள்... முன்னெச்சரிக்கையுடன் இருப்போம். முழு மனித நேயத்துடன் செயல் பட்டு நோய் தொற்றில் இருந்து இறையருளால் பாதுகாப்பு பெறுவோம்.
மவுலவி எஸ்.என்.ஆர். ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.
“நம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுகைக்குச் சென்றால் (அதற்கு முன்னர்) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரையில் உங்கள் கைகளையும், கணுக்கால்கள் வரையில் உங்கள் இரு பாதங்களையும் கழுவிக் கொள்ளுங்கள்” என்று திருக்குர்ஆன் (5:6) வலியுறுத்துகிறது.
இன்றைக்கு நாம் சந்திக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் நமது கவனமின்மை தான் முதல் காரணம். இதையும் திருக்குர்ஆன் இவ்வாறு சுட்டிக்காட்டுகிறது:
“மனிதர்களின் கைகள் தேடிக்கொண்டதின் காரணமாக கடலிலும் தரையிலும் அழிவு வேலைகள் (அதிகமாகப்) பரவி விட்டன”. (திருக்குர்ஆன் 30:41)
“எந்த ஒரு தீங்கும் உங்களை வந்தடைவதெல்லாம், உங்கள் கரங்கள் தேடிக்கொண்ட (தீய) செயலின் காரணமாகத் தான்”. (திருக்குர்ஆன் 42:30)
இந்த இரு வசனங்களும் நம்மைச்சுற்றி நிகழ்கிற பிரச்சினைகளுக்கு நாம் தான் முதல் காரணம் என்பதை உறுதிப்படுத்துகின்றன.
இஸ்லாமிய மார்க்கம் எதை ‘ஹலால்’ (இது இறைவனால் அனுமதிக்கப்பட்டது) என்று வரையறுத்திக் கூறியிருக்கிறதோ, அவைகளைத் தான் நாம் உண்ணவும், குடிக்கவும் வேண்டும்.
நாம் நமது உடலுக்குள் செல்லும் உணவில் கவனமாக இருப்பதைப் போல் நமது உடலின் மேல் படிந்திருந்திருக்கும் உடைகள் தூய்மையாக இருப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், அசுத்தங்கள் தங்கும் இடங்களில் ஒன்றாக உடைகளும் இருக்கின்றன.
ஆகவே, உடல், உடை, உணவு, உள்ளம் என இந்த நான்கையும் நாம் நன்கு முழு கவனத்துடன் பராமரித்துக் கொண்டாலே போதும், நிச்சயம் நாம் ஆரோக்கியமான வாழ்க்கையை பெற்றுக்கொள்ள முடியும்.
இறைவனுக்கு அடிபணிந்து வாழ்வதுமட்டுமல்ல, கூடவே சக மனிதர்களுடன் இணைந்து, இசைந்து வாழ்வதும் தான் இஸ்லாம் வலியுறுத்தும் இனிய வாழ்க்கை. அந்த வாழ்க்கையில் நாம் யாருக்கும் அணுவளவும் இடையூறுகள், தொந்தரவுகள் தரக்கூடாது என்பது முக்கியம்.
நபித்தோழர் ஒருவர் தமது ஒட்டகத்தை கட்டிவைக்காமலேயே மசூதிக்குள் வந்தபோது, ‘ஏன் கட்டிவைக்கவில்லை?’ என்று கேட்ட போது ‘நான் இறைவனின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன்’ என்று வந்தவர் சொன்னபோது, “முதலில் ஒட்டகத்தை கட்டிப் போடு, பிறகு நீ இறைவனின் மீது நம்பிக்கை வை” என்று கண்டித்தார்கள் நபிகள் நாயகம் அவர்கள்.
தொற்று நோயை தடுக்க அரசு அறிவித்துள்ள முகக்கவசம், தனிமனித இடைவெளி மற்றும் தடுப்பூசிகளுக்கும் இது பொருந்தும். வெறும் குருட்டு நம்பிக்கை எந்தப் பலனையும் தராது, பலநேரங்களில் அது ஆபத்தாகவும் முடிந்து விடுவதுண்டு. எனவே நாம் எப்போதுமே முன்எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அது தான் ஒரு இறைவிசுவாசிக்கு அழகு.
வாருங்கள்... முன்னெச்சரிக்கையுடன் இருப்போம். முழு மனித நேயத்துடன் செயல் பட்டு நோய் தொற்றில் இருந்து இறையருளால் பாதுகாப்பு பெறுவோம்.
மவுலவி எஸ்.என்.ஆர். ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.






