என் மலர்
சினிமா செய்திகள்
நடிகர் மன்சூரலிகான் மேடை நடன கலைஞர்களின் பசியை போக்குங்கள் என்று முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காக்க அரசு மேற்கொண்டிருக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கையால், தமிழகம் பெரிய பாதிப்பில் இருந்து தப்பித்தாலும், முன் எச்சரிக்கை நடவடிக்கையால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், கூலித்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக மக்களுக்கும், கூலித்தொழிலாளர்களுக்கும் நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்களை தமிழக அரசு வழங்கி வரும் நிலையில், மேடை நடன கலைஞர்களுக்கும் நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்களை தமிழக அரசு வழங்க வேண்டும், என்று நடிகரும் தயாரிப்பாளரும் இயக்குநருமான மன்சூரலிகான், கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழக மக்களுக்கும், கூலித்தொழிலாளர்களுக்கும் நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்களை தமிழக அரசு வழங்கி வரும் நிலையில், மேடை நடன கலைஞர்களுக்கும் நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்களை தமிழக அரசு வழங்க வேண்டும், என்று நடிகரும் தயாரிப்பாளரும் இயக்குநருமான மன்சூரலிகான், கோரிக்கை வைத்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு உத்தரவில் தீவிரமாக வேலை செய்துவரும் போலீசாருக்கு நடிகர் யோகிபாபு உதவி செய்திருக்கிறார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. அதனால் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகாக போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோன தடுப்பு நடவடிக்கைகளில் அரசுக்கு உதவ பல்வேறு நடிகர்களும் நிதி உதவி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் யோகி பாபு 24 மணி நேரமும் தங்கள் பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் உழைத்துக் கொண்டிருக்கும் போலீசாருக்கு உதவும் வகையில் அவர்களுக்கு என்95 மாஸ்க் மற்றும் எனெர்ஜி பானங்களை வாங்கி கொடுத்துள்ளார்.
யோகி பாபு இதற்கு முன்பு வேலை இன்றி தவித்து வரும் சினிமா தொழிலாளர்களுக்கு 1250 கிலோ அரிசி வாங்கி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு நடவடிக்கைகாக போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோன தடுப்பு நடவடிக்கைகளில் அரசுக்கு உதவ பல்வேறு நடிகர்களும் நிதி உதவி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் யோகி பாபு 24 மணி நேரமும் தங்கள் பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் உழைத்துக் கொண்டிருக்கும் போலீசாருக்கு உதவும் வகையில் அவர்களுக்கு என்95 மாஸ்க் மற்றும் எனெர்ஜி பானங்களை வாங்கி கொடுத்துள்ளார்.
யோகி பாபு இதற்கு முன்பு வேலை இன்றி தவித்து வரும் சினிமா தொழிலாளர்களுக்கு 1250 கிலோ அரிசி வாங்கி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படி நான் சொல்லவே இல்லை... அது போலி என்று தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி கூறியுள்ளார்
நடிகர் விஜய் சேதுபதி மதம் மாறிவிட்டார் என சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் பரவியது. அப்போது "போய் வேலை இருந்தா பாருங்கடா" என ட்விட் செய்து பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக நடிகை ஜோதிகா ஒரு விருது விழாவில் கோவில்கள் பற்றி பேசிய வீடியோ சர்ச்சையில் சிக்கி வருகிறது. கோவிலுக்கு உண்டியலில் பணம் போடுவது போல மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளுக்கும் செலவு செய்யுங்கள் என கேட்டிருந்தார் ஜோதிகா.
ஜோதிகாவின் இந்த கருத்துக்கு எதிராகவும் ஆதரவாகவும் பலரும் சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர். ஜோதிகாவுக்கு ஆதரவாக விஜய் சேதுபதி கருத்து தெரிவித்ததாக கூறி நேற்று முதல் ஒரு போலியான ட்விட் உலா வருகிறது.
"ஜோதிகா அவர்களின் துணிவான பேச்சுக்கு வாழ்த்துக்கள். அவர்களுக்கு எதாவது பிரச்சனை என்றால் சக நடிகனாக முதல் ஆளாக இருப்பேன். கோவில்கள் மருத்துவமனையாக மாறும் காலம் நெருங்கிவிட்டது" என அதில் விஜய் சேதுபதி கூறியது போல குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த ட்விட் முற்றிலும் போலியானது, அதை போட்டோஷாப் செய்து பரப்பியது யார் என்பது தெரியவில்லை என பிரபலங்கள் சிலர் விளக்கம் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், அது Fake என விஜய் சேதுபதி ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக நடிகை ஜோதிகா ஒரு விருது விழாவில் கோவில்கள் பற்றி பேசிய வீடியோ சர்ச்சையில் சிக்கி வருகிறது. கோவிலுக்கு உண்டியலில் பணம் போடுவது போல மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளுக்கும் செலவு செய்யுங்கள் என கேட்டிருந்தார் ஜோதிகா.
ஜோதிகாவின் இந்த கருத்துக்கு எதிராகவும் ஆதரவாகவும் பலரும் சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர். ஜோதிகாவுக்கு ஆதரவாக விஜய் சேதுபதி கருத்து தெரிவித்ததாக கூறி நேற்று முதல் ஒரு போலியான ட்விட் உலா வருகிறது.
"ஜோதிகா அவர்களின் துணிவான பேச்சுக்கு வாழ்த்துக்கள். அவர்களுக்கு எதாவது பிரச்சனை என்றால் சக நடிகனாக முதல் ஆளாக இருப்பேன். கோவில்கள் மருத்துவமனையாக மாறும் காலம் நெருங்கிவிட்டது" என அதில் விஜய் சேதுபதி கூறியது போல குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த ட்விட் முற்றிலும் போலியானது, அதை போட்டோஷாப் செய்து பரப்பியது யார் என்பது தெரியவில்லை என பிரபலங்கள் சிலர் விளக்கம் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், அது Fake என விஜய் சேதுபதி ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
ரஜினியுடன் நடித்தவரும் பாலிவுட் நடிகையுமான அனிதா ராஜ் ஊரடங்கை மீறியதால், போலீஸ் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. அனைவரும் சமூக விலகலை கடைபிடிக்கவும் வற்புறுத்தப்படுகிறது. விருந்து கொண்டாட்டங்களுக்கும் தடை விதித்துள்ளனர். கொரோனா தாக்கிய இந்தி பாடகி கனிகா கபூர், விருந்தில் பங்கேற்றதால் அதில் கலந்து கொண்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடந்தது. கொரோனா ஊரடங்கில் நடந்த கன்னட நடிகர் நிகில் திருமணமும் சர்ச்சையானது. இந்த நிலையில் நடிகை ஒருவர் வீட்டில் விருந்து கொடுப்பதாக வந்த புகாரின் பேரில் போலீசார் அவரது வீட்டில் அதிரடியாக புகுந்து விசாரணை நடத்திய சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.

அந்த நடிகையின் பெயர் அனிதா ராஜ். இவர் தமிழில் ரஜினிகாந்த் நடித்த தாய்வீடு படத்தில் கதாநாயகியாக நடித்து 1980-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். பிரேம் கீத், ஸமீன், ஆஸ்மன், மாஸ்டர்ஜி, ஸாரா சி ஜிந்தகி உள்பட பல இந்தி படங்களில் நடித்து இருக்கிறார்.
சினில் ஹிங்கோரானி என்பவரை காதலித்து திருமணம் செய்து மும்பை பாந்த்ரா பகுதியில் வசிக்கிறார். கொரோனா ஊரடங்கை மீறி அனிதா ராஜ் தனது வீட்டில் பெரிய கூட்டத்தை கூட்டி விருந்து கொடுப்பதாக அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து அவரது வீட்டில் புகுந்து விசாரணை நடத்தினார்கள்.
அனிதா ராஜ் கூறும்போது, “நாங்கள் விருந்து நடத்தவில்லை எனது கணவர் மருத்துவர் என்பதால் பலர் சிகிச்சைக்கு வந்தனர்” என்றார். ஆனால் அவரது குடியிருப்பில் வசித்தவர்கள் விருந்துதான் கொடுத்தார் என்றனர்.
80களில் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனராக களமிறங்க இருக்கிறார்.
ராமராஜன் மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர். சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து டைரக்டர் ராமநாராயணனிடம் உதவி டைரக்டராக வேலை செய்தார். ‘மண்ணுக்கேத்த பொண்ணு’ படத்தின் மூலம் டைரக்டர் ஆனார். அந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ‘மருதாணி,’ ‘மறக்கமாட்டேன்,’ ‘ஹலோ யார் பேசுறது’ உள்பட பல படங்களை டைரக்டு செய்தார்.

‘நம்ம ஊரு நல்ல ஊரு’ என்ற படத்தின் மூலம் ராமராஜன் கதாநாயகன் ஆனார். முதல் படமே 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. அதன்பின் ‘கரகாட்டக்காரன்’ மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. திரையிட்ட தியேட்டர்களில் எல்லாம் வெற்றிகரமாக ஓடி, படம் வெள்ளி விழா கண்டது. இதுவரை 44 படங்களில் கதாநாயகனாக நடித்தார். அவர் நடித்த படங்கள் அனைத்தும் பூஜை போட்ட அன்றே வியாபாரம் ஆனது.
இந்த நிலையில் பல வருட இடைவெளிக்குப்பின், ராமராஜன் மீண்டும் டைரக்டு செய்ய இருக்கிறார். இதற்காக இன்றைய முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான விஜய்சேதுபதியிடம் ஒரு கதை சொல்லி இருக்கிறார். ராமராஜன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்க சம்மதித்து இருக்கிறார். இந்த படத்தில் ராமராஜன் நடிக்கவில்லை. டைரக்டு செய்வதோடு சரி. தொடர்ந்து அவர் இயக்குவதில் கவனம் செலுத்த முடிவு செய்து இருக்கிறார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் மீது போலீஸில் புகார் அளிக்கபட்டுள்ளது.
நடிகை கங்கனா ரணாவத்தின் சகோதரி ரங்கோலி, சில தினங்களுக்கு முன்பு மொராதாபாத்தில் கொரோனா வைரஸ் சோதனைக்காக சென்ற சுகாதார பணியாளர்கள் மீது கல்வீசி தாக்கிய சம்பவத்தை கண்டித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டார். இதனால் அவருக்கு கண்டனங்கள் எழுந்தன. ரீமா காக்கி என்ற பெண் இயக்குனர் ரங்கோலியை கைது செய்ய வேண்டும் என்றார். இந்த சர்ச்சையை தொடர்ந்து டுவிட்டர் நிர்வாகம் ரங்கோலியின் கணக்கை முடக்கியது.
இதனால் ஆத்திரமடைந்த கங்கனா ரணாவத் சகோதரிக்கு ஆதரவாக இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “எனது சகோதரி மருத்துவர்களையும், காவல் துறையினரையும் தாக்கியவர்களை சுட்டுக்கொல்ல வேண்டும் என்றுதான் கூறினார். எந்த சமூகத்துக்கும் எதிராக அவர் கருத்து சொல்லவில்லை” என்றார்.
சகோதரிக்கு ஆதரவாக பேசிய கங்கனா ரணாவத் மீது மும்பையை சேர்ந்த அலி காசிப்கான் தேஷ்முக் என்ற வழக்கறிஞர் மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், “இனப்படுகொலை குறித்து சர்ச்சையாக பேசிய தனது சகோதரிக்கு கங்கனா ரணாவத் ஆதரவு தெரிவித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட மதத்தினரை பற்றியும் அவதூறாக பேசி இருக்கிறார். தனது புகழ், ரசிகர்கள், பணம் ஆகியற்றை நாட்டில் வெறுப்பை தூண்டவும், நாட்டில் பிளவை ஏற்படுத்தவும், சொந்த ஆதாயத்துக்காகவும் பயன்படுத்தும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”. இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.
அதில், “எனது சகோதரி மருத்துவர்களையும், காவல் துறையினரையும் தாக்கியவர்களை சுட்டுக்கொல்ல வேண்டும் என்றுதான் கூறினார். எந்த சமூகத்துக்கும் எதிராக அவர் கருத்து சொல்லவில்லை” என்றார்.
சகோதரிக்கு ஆதரவாக பேசிய கங்கனா ரணாவத் மீது மும்பையை சேர்ந்த அலி காசிப்கான் தேஷ்முக் என்ற வழக்கறிஞர் மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், “இனப்படுகொலை குறித்து சர்ச்சையாக பேசிய தனது சகோதரிக்கு கங்கனா ரணாவத் ஆதரவு தெரிவித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட மதத்தினரை பற்றியும் அவதூறாக பேசி இருக்கிறார். தனது புகழ், ரசிகர்கள், பணம் ஆகியற்றை நாட்டில் வெறுப்பை தூண்டவும், நாட்டில் பிளவை ஏற்படுத்தவும், சொந்த ஆதாயத்துக்காகவும் பயன்படுத்தும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”. இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.
முன்னணி நடிகையான தமன்னா, ஊரடங்கு காலத்தில் புதிய உறுதியை எடுத்து இருப்பதாக கூறியிருக்கிறார்.
நடிகை தமன்னா கொரோனாவால் வருமானம் இன்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார். அவர் கூறியதாவது:-
தற்போதைய சூழ்நிலையில் விலங்குகளைப்போல் மனிதர்கள் கூண்டுக்குள் அடைபட்டு உள்ளனர். இந்த நேரத்தில் பிரபஞ்சம் சில உண்மைகளையும் வெளிப்படுத்தி இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு முக்கியம். இதை கடைப்பிடிக்க தவறினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமாவதை தடுக்க முடியாது. சமூக விலகல் அவசியம். வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.
கொரோனாவுக்கு நிறைய உயிர்களை இழந்துள்ளோம். நாட்டின் பொருளாதாரம் அடிவாங்கி இருக்கிறது. சிறுதொழில்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. இயற்கைக்கும், விலங்குகளுக்கும் எதிராக செயல்பட்டதற்காக இந்த பிரபஞ்சம் நமக்கு பெரிய பாடத்தை கற்றுக் கொடுத்து இருக்கிறது.
ஊரடங்கு காலத்தில் பசியால் யாரும் தூங்க செல்லக்கூடாது என்ற உறுதியை எடுத்து இருக்கிறேன். அதற்காக தொண்டு அமைப்புடன் இணைந்து தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறேன்.
இந்த நேரத்தில் கஷ்டப்படுவோருக்கு உதவ நன்கொடை அளியுங்கள். உங்களை பற்றி மட்டும் நினைக்காமல் எல்லோருடைய நலனை பற்றியும் சிந்தியுங்கள்.
இவ்வாறு தமன்னா கூறினார்.
தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் விஜய் தேவரகொண்டா தற்போது நடைபெற்று வரும் சவாலை ஏற்க முடியாமல் தவித்து வருவதாக கூறியிருக்கிறார்.
தெலுங்கில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார் விஜய் தேவரகொண்டா. தமிழ்நாட்டிலும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் இவருக்கு தமிழில் நல்ல படங்கள் இன்னும் அமையவில்லை.
தற்போது டோலிவுட்டில் பிரபலமாகிவரும் #BeTheREALMAN சேலஞ்சில் பங்கேற்கும்படி அவரை பிரபல இயக்குனர் கொரட்டல சிவா நாமினேட் செய்திருந்தார்.
அதற்கு பதில் அளித்துள்ள விஜய் தேவரகொண்டா. "சிவா சார்.. என் அம்மா என்னை எந்த வேலையும் செய்ய விடமாட்டேன் என்கிறார். நான் எதாவது செய்தால் அவரது வேலை இரண்டு மடங்காக ஆகிவிடுகிறது என்கிறார். என்னை இங்கு real men ஆக பார்க்கவில்லை, சின்ன பையனை போல்தான் நடத்துகிறார். அதனால் நான் லாக்டவுனில் செய்யும் வேறு சில விஷயங்கள் பற்றி வீடியோ போடுகிறேன்" என கூறியுள்ளார்.
தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை அமலாபால், திருமணம் பற்றி பதிவு செய்துள்ளார்.
நடிகை அமலா பாலுக்கு ஏ.எல்.விஜய் உடனான முதல் திருமணம் தோல்வியில் முடிந்ததை அடுத்து, வேறு ஒருவரை காதலித்து வருவதாக ஆடை பட ரிலீஸ் சமயத்தில் அமலா பால் தெரிவித்திருந்தார். மும்பையை சேர்ந்த பாடகர் பவனிந்தர் சிங்கை தான் அமலா காதலிப்பதாக பேசப்பட்டது.
இந்நிலையில், அமலா பால் தனது டுவிட்டர் பக்கத்தில், “நீங்கள் தான் உங்களுடைய இரட்டைச் சுடர், பாதுகாவலர், ஆத்ம துணை, அன்பானவர், நம்பிக்கையின் புதிய சக்தி, சுதந்திர மத்திரம், நபிகள், புத்தர், ஆன்மிக வழிகாட்டி, தெய்வீக இணை, ஹீரோ மற்றும் ஹீலர் என்பதை அறியும்போது எவ்வளவு மயக்கம் அளிக்கிறது” எனும் சிறுகதை எழுத்தாளர் ரூன் லஸுலியின் வரிகளை பதிவிட்டுள்ளார்.
அமலாபாலின் இந்த வரிகள், அவர் எந்த காதலிலும் இல்லை, நமக்கு நாமே தான் எல்லாமும் என்பதை மறைமுகமாக கூறுவதாக ரசிகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் வடிவேலு வீட்டைத் தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வர மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் வடிவேலு. தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, தொடர்ந்து வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வடிவேலு பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் நடிகர் வடிவேலு தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்து கொள்ள, இந்த வீட்டை தாண்டி நீயும் வர கூடாது, நானும் வர மாட்டேன், அது கோடு, இது ரோடு என வழக்கம் போல தனது ஸ்டைலில் செம காமெடியாக பேசியுள்ளார்.
மேலும் இந்த நேரத்தில் மருத்துவர்கள்தான் கடவுள், அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும், மனிதநேயங்கள் ஒன்று சேரனும். மருத்துவ உலகம் தலையோங்கி நிக்கணும்'' என அவர் தெரிவித்துள்ளார்.மனிதநேயங்கள் ஒன்று சேரனும்
— Actor Vadivelu (@VadiveluOffl) April 23, 2020
மருத்துவ உலகம் தலையோங்கி நிக்கணும் 🙏 pic.twitter.com/nmlFqoyltr
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா நடிக்காமல் இருப்பதே வருத்தமளிக்கிறது என்று கூறியிருக்கிறார்.
தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இவர் படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் வெளிநாடுகளுக்கு சுற்றுபயணம் சென்று விடுவார். தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கி இருப்பது போர் அடிப்பதாக சொல்கிறார் திரிஷா.
இது குறித்து அவர் கூறுகையில், நான் சுதந்திர பறவை. எப்போதும் வீட்டில் நான் இருந்தது கிடையாது. தோழிகளுடன் அரட்டை அடிப்பதில் பிசியாக இருப்பேன். அவர்களுடன் ஊர் சுற்றுவேன். இது எல்லாம் படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் நான் நேரம் போக்கும் முறை.
இப்போது வீட்டிலே இருப்பது தர்மசங்கடமாக இருக்கிறது. தோழிகளுடன் கூட வீடியோ காலில் பேசி விடுகிறேன். ஆனால் படப்பிடிப்புக்கு சென்று கேமரா முன்னால் நடிக்காமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது என்றார் திரிஷா.
தமிழில் உச்ச நடிகராக இருக்கும் ரஜினியின் கட்டளையை மீறிவிட்டோம் என்று பிரபல இயக்குனர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. இதனால் சினிமா துறையும் முற்றிலும் முடங்கிவிட்டது. சினிமாவை நம்பி இருக்கும் தொழிலாளர்கள் வேலை இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே பெப்சி சங்கத்திற்கு 50 லட்சம் ரூபாய் வழங்கியிருந்தார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள சினிமா துறையினருக்கு உதவும் விதமாக 1500 குடும்பங்களுக்கு சுமார் 24 டன் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை ரஜினி வழங்கியுள்ளார். இதை இயக்குனர் சங்கம், நடிகர் சங்கம், சின்னத்திரை நடிகர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்களுக்கு அவர் கொடுத்துள்ளார்.
ரஜினி இந்த உதவி பொருட்களை வழங்கும் போது மீடியாவுக்கு எந்த செய்தியும் கொடுக்க வேண்டாம் என்று தான் கூறினாராம். ஆனால் அதையும் மீறி இயக்குனர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது பற்றி இயக்குனர் பேரரசு ட்விட்டரில், "ரஜினி சாரின் கட்டளையை மீறிவிட்டோம்! இயக்குனர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசிமூட்டை, மளிகைப் பொருட்கள் வழங்கும் போது 'பத்திரிகைகளை அழைக்கவோ, செய்தி கொடுக்கவோ வேண்டாம்' என்ற நிபந்தனையோடுதான் கொடுத்தார். அது அவரின் பெருந்தன்மையாக இருக்கலாம். பெற்ற உதவியை நாங்கள் எப்படி சொல்லாதிருப்பது!" என அவர் தெரிவித்துள்ளார்.






